ARaM News

ARaM News உறுதிபடுத்தப்பட்ட செய்திகளின் முதல?

கிழக்கிழங்கை பெண்களுக்காக விஷேட செய்தியுடன்  இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர், மற்றும் சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நம்...
22/02/2023

கிழக்கிழங்கை பெண்களுக்காக விஷேட செய்தியுடன் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர்,
மற்றும் சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நம் நாட்டு, வெளி நாட்டு பெண் ஆளுமைகள் இணைய இருக்கும்,
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் . . இணைய வழி ஊடாக . . இன்ஷா அல்லாஹ்! 💕

16/02/2023
மறைந்து போன கடவுச்சொல்லாய் சில உறவுகள்.... மீண்டும் வரப்போவதில்லை சிந்தையில்.... ஆழ்ந்த கவலை கொண்டு உள்வாங்கிய கடல் அலைக...
26/12/2022

மறைந்து போன கடவுச்சொல்லாய் சில உறவுகள்....
மீண்டும் வரப்போவதில்லை சிந்தையில்....

ஆழ்ந்த கவலை கொண்டு உள்வாங்கிய கடல் அலைகள்....

மீண்டும் உயிர்த்தெழுந்து சுனாமி எனும் உருவெடுத்து...

பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் உடமைகளையும்
ஆழிப்பேரலை காவு கொண்ட நாள் இன்று......

உயிரிழந்த உயிர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள்

உறவுகள் காவு கொள்ளப்பட்டு இன்றுடன் ( 2022. 12. 26 ) 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. உறவுகளை இழந்து தவிக்கும் சொந்தங்களுக்கு ARAM TV NEWS சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

*Whatsapp Group :-
https://chat.whatsapp.com/JkK6B3Cp0t3ALdDMfSbDKH

*page:-*
https://www.facebook.com/ARaMNews.official/

அறிவுச்சுடர் போட்டியினுடைய தகுதிகான் சுற்றில் வெற்றி பெற்று தற்போது  அறையிருதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் அணைத்து ப...
03/12/2022

அறிவுச்சுடர் போட்டியினுடைய தகுதிகான் சுற்றில் வெற்றி பெற்று தற்போது அறையிருதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் அணைத்து பாடசாலைகளுக்கும் A.R. Mansoor Foundation சார்பாகவும் ARaM ஊடக வலையமைப்பு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களயும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

மிக விரைவில் எமது ARaM TV முகநூல் பக்கத்தில் அறையிருதி சுற்று போட்டிகளை எதிர்பார்த்து காத்திருங்கள்........

தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்.....
ARaM TV A.R. Munsoor Foundation

உலகில் அதிக அபாயமான நாணயங்களில் இலங்கையும் ஒன்று_____________________ARaM TV NEWS📃24 நவம்பர் 2022,வியாழன்_______________...
24/11/2022

உலகில் அதிக அபாயமான நாணயங்களில் இலங்கையும் ஒன்று

_____________________

ARaM TV NEWS📃
24 நவம்பர் 2022,
வியாழன்
_____________________

உலகில் அதிக அபாயம் உள்ள ஏழு நாணயங்களில் இலங்கை ரூபாயும் ஒன்று என ஜப்பானிய நிதி நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டின் முன்னணி தரகு மற்றும் முதலீட்டு வங்கியான நொமுரா நிதி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைத் தவிர, எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நாணயங்களும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாணயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

மட்டக்களப்பில் சக்திவாய்ந்த கைக்குண்டுடன் இருவர் கைது. - காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணை_____________________ARaM T...
24/11/2022

மட்டக்களப்பில் சக்திவாய்ந்த கைக்குண்டுடன் இருவர் கைது. - காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணை

_____________________

ARaM TV NEWS📃
24 நவம்பர் 2022,
வியாழன்
_____________________

சக்திவாய்ந்த கைக்குண்டுடன் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.

காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் கைக்குண்டைக் காண்பித்து மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் நீண்ட நாட்களாய் ஈடுபட்டுவந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை!_____________________ARaM TV NEWS📃23 நவம்பர் 2022,புதன...
23/11/2022

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை!

_____________________

ARaM TV NEWS📃
23 நவம்பர் 2022,
புதன்
_____________________

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இதற்கமைய, 49 தனியார் துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய 07 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுமதி வழங்கப்பட்டிருந்தும் பணம் செலுத்தாத காரணத்தால் நேற்று (22) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று (23) மண்ணெண்ணெய் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் இதற்கு தேவையான நிதி வசதிகள் கூட்டுறவு கிராமிய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவ மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு நேற்று (22) முதல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வத்தளை ஹெந்தல, பேருவளை (மீனவத் துறைமுகம்), ஹெந்தல விஜேசிங்க, காலி, அஹுங்கல்ல, தங்காலை, நுரைச்சோலை, புத்தளம், சிலாபம் வெல்ல, சிலாபம் அலுத்வத்த, வல்வெட்டித்துறை, புதுக்குடியிருப்பு, ஊர்காவற்றுறை, மைலிட்டி, தலையடி, குருநகர், களுவாஞ்சிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 28 எண்ணெய் பவுசர்கள் நேற்றைய தினம் (22) விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 14 துறைமுகங்களில் உள்ள மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படும்.

நவம்பர் 22 ஆம் திகதி முதல் தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே மீனவர்களுக்கு அவசியமான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களின் எரிபொருள் தேவை தொடர்பில் தற்போது காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களும் கடற்றொழில் திணைக்களமும் ஆராய்ந்து வருகின்றன.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருளைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அல்லது மாகாண பிரதம செயலாளர்கள், கூட்டுறவுச் செயலாளர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியின் சமூக விவகாரப் பிரிவு, மீனவ சங்கங்களையும், வர்த்தகர்களையும் அறிவுறுத்தியுள்ளது.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

யாழில் காணாமல் போன 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு!_____________________ARaM TV NEWS📃23 நவம்பர் 2022,புதன்_________________...
23/11/2022

யாழில் காணாமல் போன 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

_____________________

ARaM TV NEWS📃
23 நவம்பர் 2022,
புதன்
_____________________

யாழ்ப்பாணம், வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் இன்று (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தூர், கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.

இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞனை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞன் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!_____________________ARaM TV NEWS📃23 நவம்பர் 2022,புதன்____________________...
23/11/2022

சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!

_____________________

ARaM TV NEWS📃
23 நவம்பர் 2022,
புதன்
_____________________

சுற்றிவளைப்புக்கு சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த குழு ஒன்றின் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இரவு பனாமுர - எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பனாமுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் சென்ற நாய் ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இரு அதிகாரிகளின் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக பாய்ந்துள்ளது.

அங்கு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிகாரி ஒருவர் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.

பனாமுர பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளான இவர் பன்கன்விலயாய கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவராவார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றைய அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

வனிந்து மீண்டும் முதலிடத்தில் _____________________ARaM TV NEWS📃09 நவம்பர் 2022புதன்_____________________சர்வதேச ரி20 பந...
09/11/2022

வனிந்து மீண்டும் முதலிடத்தில்
_____________________

ARaM TV NEWS📃
09 நவம்பர் 2022
புதன்
_____________________

சர்வதேச ரி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ரி20 பந்துவீச்சாளர்களில் அவர் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.

இதுவரை 52 சர்வதேச டிரி20 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

நாளை  காலை 10.00மணிக்கு "வணக்கம் நேத்ரா " நிகழ்ச்சியில்...... ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷன் மற்றும் அவுஸ்திரேலிய முஸ்லிம் க...
07/11/2022

நாளை காலை 10.00மணிக்கு "வணக்கம் நேத்ரா " நிகழ்ச்சியில்......

ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷன் மற்றும் அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவியும் சட்டத்தரணிமான #மர்யம்_நளீமுதீன் (Solicitor- Australia, Attorney at law -Sri Lanka) அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

காணத்தவறாதீர்கள்!!

அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை._____________________ARaM TV NEWS📃03 நவம்பர் 2022,வியாழன்_____________________180...
03/11/2022

அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை.
_____________________

ARaM TV NEWS📃
03 நவம்பர் 2022,
வியாழன்
_____________________

180 முதல் 210 ரூபாவாக இருந்த உள்ளூர் வெங்காயத்தின் விலை இன்று 240 முதல் 260 ரூபா வரையில் பதிவாகியுள்ளது.

மேலும், 160 முதல் 170 ரூபா வரையில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று 225 மற்றும் 240 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

ரயில் போக்குவரத்து பாதிப்பு!_____________________ARaM TV NEWS📃03 நவம்பர் 2022,வியாழன்_____________________கந்தானை, கப்பு...
03/11/2022

ரயில் போக்குவரத்து பாதிப்பு!
_____________________

ARaM TV NEWS📃
03 நவம்பர் 2022,
வியாழன்
_____________________

கந்தானை, கப்புவத்தையில் பகுதியில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக கொழும்பு- சிலாபம் ரயில் வீதியில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.
•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

•━━•━•━ ◎ ━•━•━━•ARaM ɴᴇᴡꜱ🖇️🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள் Whatsapp Group :-https://chat.what...
31/10/2022

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

உங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களை எங்கள் குழுவில் பதிவிட :

𝙰𝙳𝙼𝙸𝙽 : https://wa.me/+94764713183

🏷️Whatsapp Only : +94764713183

1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் சுவிஸ்!_____________________ARaM TV NEWS📃31 ஒக்டோபர் 2022...
31/10/2022

1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் சுவிஸ்!

_____________________

ARaM TV NEWS📃
31 ஒக்டோபர் 2022,
திங்கள்
_____________________

ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பிரிடா முதல் பெர்குயன் பகுதி வரை ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அல்புலா/பெர்னினா ரயில் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 2008இல் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடம் ஆகும்.

இந்த சிறப்பு ரயிலில் பயணிப்பதன் மூலம் உலகின் மிக அழகான ரயில் பாதையையும் கண்டு மகிழலாம்.

உலகின் மிக நீளமான ரயில் என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. இந்த ரயிலில் 4550 இருக்கைகள் உள்ளன, ஒரே நேரத்தில் 7 ஓட்டுநர்களால் மிகுந்த ஒருங்கிணைப்புடன் இயக்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், சுவிட்சர்லாந்து தற்போது உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் நாடாக மாறியுள்ளது.

சுவிஸ் ரயில்வேயுடன் இணைந்த ரேடியன் ரயில்வே நிறுவனம், 100 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலை சுமார் 2 கிலோமீட்டர் நீளம் இயக்கியது. Ratian Railway மூலம் இந்த உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது

The Rhaetian Railway RhB நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், 22 சுரங்கங்கள் மற்றும் 48 பாலங்கள் வழியாக செல்கிறது. இந்த ரயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய ஆல்புலா / பெர்னினா பாதையில் செல்கிறது.

இந்த ரயில் பாதையில் இயங்கும் அனைத்து சேவைகளின் செயல்பாடும் கொரோனா தொற்றுநோய் காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் வருவாயிலும் மோசமான விளைவை ஏற்படுத்தியது.

இந்த ரயிலின் மூலம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இந்தப் பாதையில் ரயில் பயணத்தை ரசிக்கத் திரும்புவார்கள் என்று ரயில்வே நிறுவன அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த வழித்தடத்தில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

உங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களை எங்கள் குழுவில் பதிவிட :

𝙰𝙳𝙼𝙸𝙽 : https://wa.me/+94764713183

🏷️Whatsapp Only : +94764713183

அதிர்ச்சி தகவல் - 09 மாதங்களுக்குள் 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவு_____________________ARaM TV NEWS📃29 ஒக்டோபர் 2022,சனி...
29/10/2022

அதிர்ச்சி தகவல் - 09 மாதங்களுக்குள் 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவு

_____________________

ARaM TV NEWS📃
29 ஒக்டோபர் 2022,
சனி
_____________________
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் உட்பட சுமார் 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும்போது பாரிய அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை, ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற பலாத்கார நிலையில் இந்த பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 273 வன்புணர்வுகள் இளம் வயதினருடன் தொடர்புடையவையாகும். எனினும் கடந்த வருடத்தில் 1382 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகின.இதில்,சிறுவர்கள் தொடர்புடைய முறைப்பாடுகள் 250 ஆகும் .

இதேவேளை ஒப்புதலுடன் இடம்பெற்ற பாலியல் செயற்பாடுகள் பெரும்பாலானவை காதல் விவகாரங்களுடன் தொடர்புடையவை.

எனினும் பாதிக்கப்பட்ட பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் இது பாலியல் வன்புணர்வுகளாகவே கருதப்படுகின்றன.

இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 363வது பிரிவின்படி, 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் (அவளுடைய ஒப்புதலுடன் அல்லது இல்லாமல்) உடலுறவு கொள்வது சட்டப்பூர்வ பாலியல் வன்புணர்வுக்கு சமமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு._____________________ARaM TV NEWS📃29 ஒக்டோபர் 2022,சனி____...
29/10/2022

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு.

_____________________

ARaM TV NEWS📃
29 ஒக்டோபர் 2022,
சனி
_____________________

இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இன்றைய தினம் (29.10.2022) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்துள்ள கப்பல்
அவர் மேலும் கூறுகையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நாளைய தினம் (30.10.2022) ஆரம்பமாகும்.

எரிவாயு விலை குறைப்பு
இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது.

இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

பேராதனை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு- மரண தண்டனையை உறுதிசெய்ய நீதிமன்றம் _____________________ARaM TV NEWS📃29 ஒக்டோபர் ...
29/10/2022

பேராதனை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு- மரண தண்டனையை உறுதிசெய்ய நீதிமன்றம்
_____________________

ARaM TV NEWS📃
29 ஒக்டோபர் 2022,
சனி
_____________________

1997ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் என்பவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், அப்போது இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த வழக்கில் பிரதானமாவராக குற்றஞ்சாட்டப்பட்ட பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாத நிலையில் அவர் ஆரம்பம் முதலே மன்றில் முன்னிலையாகாத நிலையிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

செல்வநாயகம் வரபிரகாஷ், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவராக இருந்தபோது, அவர் மீது மனிதாபிமானமற்ற வகையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டது.

1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மரணமானார்.

சாட்சியங்களின்படி, பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களும், பகிடிவதையில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களும் பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களாவர்.

இறந்தவரின் தந்தை தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். பிரேதப் பரிசோதனையின் போது, தசைக் காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு மரணத்திற்குக் காரணம் என சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

அவர் அதிக உடல் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே இறந்தவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் இந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக இருந்தபோதும், வழக்கின் ஆரம்பம் முதல் நீதிமன்றத்தில் அவர்,முன்னிலையாகாதநிலையில், இந்தக் குற்றத்தைச் செய்ததாக எட்டு மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணை முடிவடைந்ததையடுத்து, கண்டி நீதவான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவரை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பாரப்படுத்தினார்.

பின்னர், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், அவர்களில் ஒருவர் சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டார்,

அத்துடன் பிரதான குற்றவாளியான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் உட்பட்ட இரண்டாவது குற்றவாளிகள் கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதில் இரண்டாவது குற்றவாளி விசாரணையின் பின்னர் 2014இல் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து முக்கிய குற்றவாளி, நீதிமன்றில் முன்னிலையாகாதநிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அதனை ஆட்சேபித்து அவர், சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீது விசாரணையை மேற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றமே, முக்கிய குற்றவாளிக்கான கண்டி நீதிமன்றின் முன்னைய தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

•━━•━•━ ◎ ━•━•━━•ARaM ɴᴇᴡꜱ🖇️🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்Whatsapp Group :-https://chat.whats...
28/10/2022

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

உங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களை எங்கள் குழுவில் பதிவிட :
𝙰𝙳𝙼𝙸𝙽 : https://wa.me/+94764713183

🏷️Whatsapp Only : +94764713183

மசூதி துப்பாக்கிச்சூடு_____________________ARaM TV NEWS📃28 ஒக்டோபர் 2022,வெள்ளி_____________________ஈரானிலுள்ள மசூதியொன்...
28/10/2022

மசூதி துப்பாக்கிச்சூடு

_____________________

ARaM TV NEWS📃
28 ஒக்டோபர் 2022,
வெள்ளி
_____________________

ஈரானிலுள்ள மசூதியொன்றில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலுக்கு, அங்கு நடைபெற்று வரும் அரசு எதிா்ப்புப் போராட்டங்கள் தான் காரணம் என்று தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியும் அதிபா் இப்ராஹிம் ரய்சியும் குற்றம் சாட்டியுள்ளனா்.
15 பேரது உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்குதல், தொடா்ந்து நடைபெற்று வரும் ‘கலவரத்தை’ பயன்படுத்தியே நடத்தப்பட்டதாக அவா்கள் கூறினா்.
ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக குா்து இனத்தைச் சோ்ந்த மாஷா அமீனி கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டாா்.
காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், பின்னா் உயிரிழந்தாா். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை அடக்க போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுமாா் 200 போ் பலியாகினா்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

யாழில் கரையொதுங்கிய சடலம்..! நீடிக்கும் மர்மம்_____________________ARaM TV NEWS📃28 ஒக்டோபர் 2022,வெள்ளி_________________...
28/10/2022

யாழில் கரையொதுங்கிய சடலம்..! நீடிக்கும் மர்மம்

_____________________

ARaM TV NEWS📃
28 ஒக்டோபர் 2022,
வெள்ளி
_____________________

இளவாலை சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) காலை கரையொதுங்கியது.

மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டு இளவாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சடலம் யாரென அடையாளம் காணப்படாத நிலையில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை பறித்த தேனீர்_____________________ARaM TV NEWS📃28 ஒக்டோபர் 2022,வெள்ளி___________...
28/10/2022

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை பறித்த தேனீர்

_____________________

ARaM TV NEWS📃
28 ஒக்டோபர் 2022,
வெள்ளி
_____________________

உத்தரபிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தில் வசித்தவர் சிவானந்தம் (வயது 35). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சிவானந்தம், அவரது மகன்கள் மற்றும் மாமனார், உறவினர் அருந்தி உள்ளனர்.

மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிவானந்தம் உட்பட 5 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் சிவானந்தத்தின் மனைவி, டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

காய்கறிகள், பழங்கள் விலையில் வீழ்ச்சி_____________________ARaM TV NEWS📃26ஒக்டோபர் 2022,புதன்_____________________இந்த நா...
26/10/2022

காய்கறிகள், பழங்கள் விலையில் வீழ்ச்சி
_____________________

ARaM TV NEWS📃
26ஒக்டோபர் 2022,
புதன்
_____________________

இந்த நாட்களில் கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மானிங் வர்த்தக சங்க தலைவர் எச்.உபசேன தெரிவித்துள்ளார்.

ஆனால் வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் விலையில் பெரிய அளவில் குறைவு ஏற்படாது எனவும், கொழும்பில் ஒரு கிலோ போஞ்சி மற்றும் கரட்டின் மொத்த விலை ரூ.300 ஆகவும், தம்புள்ளை மொத்த வர்த்தக நிலையத்தில் ரூ.275 ஆகவும், அங்கு சில்லறை விலை ரூ. 305 மற்றும் 360 ஆக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு கிலோ கோவா மொத்த விலை ரூ.250 ஆகவும், தம்புள்ளையில் ரூ.138 ஆகவும், ஒரு கிலோ கோவா சில்லறை விலை ரூ.360 ஆக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தக்காளி மற்றும் கத்தரிக்காயின் மொத்த விலை கிலோ ஒன்று ரூ.155 முதல் 200 ஆகவும், சில்லறை விலை ரூ.205 முதல் 300 ஆகவும் இருந்ததாகவும், கொழும்பில் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை ரூ.180க்கும், தம்புள்ளையில் ரூ.125, சில்லறை விலை ரூ.135 முதல் 230 வரை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

வெளிநாட்டு பணியாளர்களுக்கான நற்செய்தி!_____________________ARaM TV NEWS📃26 ஒக்டோபர் 2022,புதன்_____________________வெளிந...
26/10/2022

வெளிநாட்டு பணியாளர்களுக்கான நற்செய்தி!
_____________________

ARaM TV NEWS📃
26 ஒக்டோபர் 2022,
புதன்
_____________________

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான முறையில் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தகைமை பெறுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25,000 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றும், உயர்ந்தபட்சம் 65,000 அமெரிக்க டொலர்கள் உட்பட்டு நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, புலம்பெயர் தொழிலாளர்களால் வெளிநாட்டில் வருமானமாக ஈட்டும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் ஊக்குவிப்பதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது :

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது_____________________ARaM TV NEWS📃26ஒக்டோபர் 2022,புதன்_____________________சீ...
26/10/2022

500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது

_____________________

ARaM TV NEWS📃
26ஒக்டோபர் 2022,
புதன்
_____________________

சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அரிசித் தொகை இலங்கையின் ஆதரவற்ற பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், எதிர்வரும் வாரம் மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

அருவருக்கதக்க வகையில் பொதியிடப்பட்ட பழப்புளித் தொகை மீட்பு!_____________________ARaM TV NEWS📃26 ஒக்டோபர் 2022,புதன்_____...
26/10/2022

அருவருக்கதக்க வகையில் பொதியிடப்பட்ட பழப்புளித் தொகை மீட்பு!
_____________________

ARaM TV NEWS📃
26 ஒக்டோபர் 2022,
புதன்
_____________________

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

யாழ் நகர பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்க வகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவினரால் குறித்த களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.

மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6,000 கிலோ கிராம் வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

•━━•━•━ ◎ ━•━•━━•
ARaM ɴᴇᴡꜱ🖇️

🥏 செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்

Whatsapp Group :-
https://chat.whatsapp.com/DryRft2IfMB4UvTydDA91F

page:-
https://www.facebook.com/ARaMNews.official/

Address

116, Matharasa Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when ARaM News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share