Deiveega Jothidam

Deiveega Jothidam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deiveega Jothidam, Media/News Company, Tuticorin.

07/05/2023
ஜோதிடம் கேள்வி பதில் : கேள்வி ;சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?இயற்கையாகவே இ...
06/05/2023

ஜோதிடம் கேள்வி பதில் :

கேள்வி ;சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்
குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?

இயற்கையாகவே இந்தியா வெப்பம் மிகுந்த நாடு, தமிழகத்தின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை, மேலும் கோடை காலமான பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையானதாக இருக்கும், குறிப்பாக சித்திரை மாதத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிகிக்கும், இந்த காலங்களில் குழந்தை பிறப்பு அமைந்தால், தாயுக்கும் சேயுக்கும் சிறு சிறு உடல் நல குறைவு ஏற்பட கூடும் என்ற காரணத்தினால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பை நமது முன்னோர்கள் தவிர்த்தனர், இதுவே உண்மையான காரணமாக இருக்ககூடும் அன்பர்களே !

மாறாக சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளால், குடும்பத்திற்கு ஆகாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆகாது என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி, சிறிதும் உண்மையில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, இந்த நவீன உலகில் இயற்க்கை வெப்பத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, பல கருவிகள் வந்துவிட்டது, குளிர்ஊட்டி, மின் விசிறி என அதிநவீன கருவிகள் உள்ளது, எனவே சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் மற்றும் தாயின் உடல் நலம் காக்க வழியுண்டு, சித்திரை ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தில் உண்மை இல்லை என்பதை "தெய்வீக ஜோதிடம் " மேலும் கண்ணில் தெரியும் கடவுளான சூரியபகவான் உச்ச நிலையை பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும், இந்த சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே ஆதிக்க சக்தி மிகுந்ததாகவும், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டதாகவும், தேசஸ் மிகுந்து உடல் வலிமை பெற்றதாகவும் திகழும், சந்திரன் ஆட்சி பெரும் மாதம் ஆடி மாதமாகும், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்தையும் அடையும் என்பதால, மற்ற குழந்தைகளில் இருந்து சிறு வயது முதல் வித்தியாசமான நடவடிக்கைகளை சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் கொண்டிருக்கும் என்பதே உண்மை, இதை அறிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர், அறியாதோர் மேற்கண்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கி முத்து எடுத்துகொண்டு இருக்கின்றனர் .

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று இருப்பதும், சந்திரன் வலிமை பெற்று இருப்பதும் சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் பிறப்பில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஜாதகர் வளர வளர, வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்கும் நிலையை தரும், ( சித்திரை மாதத்திலும், ஆடி மாதத்திலும் பிறந்த பல அன்பர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது ) ஜாதகருக்கு சிறப்பான உடல் மற்றும் மன நிலையை தரும், எண்ணமும் அறிவு திறனும் சிறப்பாக செயல்படும், ஜாதகரின் லட்சியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தரும், மிகப்பெரிய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் மக்கள் செல்வாக்கினை பெற்ற மனிதர்கள் அனைவரின் சுய ஜாதகத்திலும், வலிமை பெற்ற சூரியன் அல்லது சந்திரன் 12 பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது, பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை, ஜாதகரின் பிறந்த நேரமும் அதன் அடிப்படையில் அமைந்த லக்கினமும், 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற 12 பாவகங்களின் பலன்களை, நவகிரகங்கள் தமது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் அடிப்படையிலேயே ஒருவரது வாழ்க்கை யோக பலன்களையும், அவயோக பலன்களையும் தருகிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஓரிரு வினாடிகள் கூட மிகப்பெரிய பாவக வலிமை வித்தியாசங்களை தரக்கூடும், எனவே பிறந்த நேரம் என்பதே சுய ஜாதகத்தை நிர்ணயம் செய்யும் என்பதால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது தீமையை தரும் என்ற மூட நம்பிக்கையை களைவதே சால சிறந்தது.

கேள்வி :

சுய ஜாதகத்தில் புத்திர பாவகமும், பாக்கிய ஸ்தானமும் வழங்கும் யோக நிலைகள் பற்றி கூறுங்கள் அண்ணா?
பதில் :

அன்பு தம்பி

கிராமங்களில் செலவடையாக பெரியோர்கள் ஒரு பழமொழியை சொல்வதுண்டு அதாவது " சக்தியுள்ள சாமியை கும்பிடனும், புத்தியுள்ள புள்ளைய பெற்று எடுக்கணும் " என்று, மேற்கண்ட ஒரு பழமொழியின் வழியாகவே ஒருவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் வலிமையை பற்றியும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமையை பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், பொதுவாக கோண ஸ்தானங்கள் என்று அலைக்கபெரும், 5,9ம் பாவகங்கள் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, இன்றைய சூழ்நிலையில் மிக முக்கிய கடமைகளான குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாட்டின் அருமையை நாம் உணராத காரணத்தினால், வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தன்மையை தவிர்க்க இயலாமல் அதிக அளவில் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையில் நெருப்பில் இட்டால் புழு போல் தவிக்கும் நிலை ஏற்ப்படுகிறது, அப்படி பட்ட இன்னல்களை அனுபவித்த போதிலும், நமது அறிவுக்கு 5,9ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாடு, பித்ரு கடமையின் அருமை நமக்கு உறைப்பதில்லை.

ஒரு ஜாதகருக்கு தனது பாரம்பரிய நிலையில் இருந்து கிடைக்க வேண்டிய கீர்த்தி,புகழ்,செல்வம்,கௌரவம்,அந்தஸ்து,பொருளாதார ரீதியான முன்னேற்றம், சிறந்த யோகமுள்ள வாரிசு அமைப்பு, தான் கற்ற கல்வியின் வழியில் இருந்து ஜாதகர் தனக்கும், தன்னை சார்ந்த சமூகத்திற்கும் சிறப்பான நன்மைகளை பெரும் தன்மை, செல்லும் இடங்களில் இருந்து வரும் வரவேற்ப்பு, தமக்கு வரும் இனல்களை கண்டு திகைக்காமல் மிக எளிதாக கையாளும் புத்திசாலித்தனம், கலைஞயம் மிக்க செயல்திறன்கள், புத்திகூர்மை மூலம் சகல வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் தனது சுய அறிவாற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம், கலை துறையில் பெரும் வெற்றிகள், புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மற்றவர்களில் இருந்து தனித்து தோன்றும் சிறப்பு இயல்புகள், ஜாதகருக்கு சிறு பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவி செய்யும் உறவுகள்,நண்பர்கள்,பொதுமக்கள், தான் ஏற்று கொண்ட லட்சியத்தை செவ்வனே முடிக்கும் சரியான திட்டமிடுதல் என ஜாதகரின் சுய புத்திசாலிதனத்தை பிரகாசிக்க செய்வது பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

மேலும் ஒரு ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல சாதனைகளை படைப்பதற்கும், ஆன்மீக வழியில் இருந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கும், பொதுமக்கள் போற்றும் புகழ் மிக்க பொறுப்புகளை நேர்மையாக அலங்கரிப்பதற்க்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் மூலம் தனது சந்ததிகளும், சமுதாயமும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து பெற்ற வண்ணமே திகழ்வதற்கும் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமை சிறப்பாக அமைவது நல்லது, தனது பெயருக்கும் புகழுக்கும் சிறிய களங்கமும் வாராமல் வாழ்க்கையில், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெறுவதற்கு பாக்கிய ஸ்தானம் வழிவகுக்கும், எந்த ஒரு விபத்தோ, இழப்புகளோ ஜாதகரை பாதிக்கா வண்ணம் காப்பாற்றும் வல்லமை பெற்றது ஜாதகரின் பாக்கிய ஸ்தானமே, குறிப்பாக ஜாதகரை தவறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பதும், தற்கொலை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி, புது தெம்புடனும், புத்துணர்ச்சியுடனும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு நிச்சயம் உண்டு, ஜாதகரே தன்னிலை மறந்து செயல்பட்டாலும், ஜாதகரை சார்ந்தவர்களும் அவர்களது நண்பர்கள்,உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக வந்து நின்று ஜாதகரை நல்வழிபடுத்தும் யோகம் உண்டாகும், எந்த ஒரு சூழ்நிலையையும் மிக எளிதாக கையாளும் மிதமிஞ்சிய அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், 5ம் பாவகம் ஜாதகரை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், 9ம் பாவகம் அறிவு திறனில் சிறந்து விளங்கும் வல்லமையை தந்து, செயற்கரிய பல சாதனைகளை படைக்க வைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பில் 5ம் வீடாக வரும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவமாக நின்று சுய ஞான யோகத்தை தரும், 9ம் வீடாக வரும் தனசு உபய நெருப்பாக நின்று அனைவருக்கும் வெளிச்சத்தை தரும் ( அக இருள் நீக்கி ஞான ஒளியை வழங்கும் ) எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகம் வலிமை பெறுவது சிறப்பு, வலிமை அற்ற நிலையில் இருப்பின் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டின் மூலமும், பித்ரு கடமை மூலமும் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையை அதிகரித்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் யோகம் தரும், சக்தியுள்ள சாமியை வணங்கும் பொழுது சிறந்த புத்திரபேறு ( வாரிசு ) கிட்டும், நாம் பிறப்பில் யோகம் அற்ற ஜாதக நிலையை பெற்று இருந்தாலும் கூட, நமது வாரிசு அமைப்பை நாம் யோமுள்ள ஜாதகமாக மாற்றும் வல்லமை, குல தெய்வ வழிபாட்டிலும், பித்ரு கடமையை செய்வதின் மூலம் நிச்சயம் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் ஸ்ரீதர்
திருச்செந்தூர் 9360972178

ஜோதிட தகவல்கள் :பெற்றோர்கள் செய்த பாவ ,புண்ணியங்கள் ஜாதக ரீதியாக ஒரு குழந்தைக்கு  எப்படி   செயல்படுகிறது ?பதில் : நல்ல  ...
05/05/2023

ஜோதிட தகவல்கள் :
பெற்றோர்கள் செய்த பாவ ,புண்ணியங்கள் ஜாதக ரீதியாக ஒரு குழந்தைக்கு எப்படி செயல்படுகிறது ?
பதில் :
நல்ல கேள்வி தம்பி ,பெற்றோர்கள் செய்த பாவபுண்ணியங்கள் மட்டும்மல்ல ,தயார் வழியில் உள்ள தாத்தா பாட்டி மற்றும் அவர்களின் முன்னோர்கள் வழியிலும் மேலும் தந்தை வழியில் உள்ள தாத்தா பாட்டி மற்றும் அவர்களின் முன்னோர்கள் வழியிலும் செய்த பாவ புண்ணியங்கள் கர்மவினையாக ஒரு குழந்தையின் மூலாதார சக்கரத்தில் பதிவாகி இறைநிலை சுயஜாதக வழியாக செயல் பட வைக்கிறது '
இதனை ஒருவரின் பிறந்த தேதி ,நேரம் மற்றும் பிறந்த இடத்தினை வைத்து சுய ஜாததகத்தை தெளிவாக கணித்து விடலாம் .
மேலும் ஜாதகர் எதிர்காலத்தில் சந்திக்க போகும் இன்ப துன்பங்களை கண்டறியலாம் ,தனது சுய ஜாதகத்தின் படி வலிமை பெற்ற வீடுகளின் திசை புத்தியை எவ்வாறு நல்ல வழியில் பயன்படுத்துவது என்றும் ,வலிமை அற்ற வீடுகளில் இருந்து வரும் தீமையனான பலன்களை எவ்வாறு கையாளுவது என்று கணித்துவிடலாம் ,
கர்மவினையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் ,வாலிபர்கள் மற்றும் முதியவர்கள் என்று யாரும் தப்பிவிட முடியாது மாறாக விழிப்புணர்வோடு இருந்து தமக்கு வரும் இன்னல்களை விழிப்புணர்வோடு எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைநிலை ஒருவருக்கு நிச்சயம் கருணை புரியவும் செய்யும் .
உதாரண பெண் ஜாதகம் :
ராசி:கும்பம்
நட்சத்திரம் :சதயம் -4
லக்கினம் : கும்பம்
கீழ்காணும் ஜாதகியின் சுய ஜாதகத்தில் பெற்றோர்கள் ஸ்தானமான 4,10 வீடுகள் வீண் விரைஸ்தானமான 12ம் பாவத்துடன் தொடர்பு பெற்று கடுமையாக பாதிப்பு அடைந்து இருப்பது வேதனை தரும் விஷயம் ஆகும் ,பெற்றோர்கள் நல்ல வசதி பெற்றவர்களாக இருந்தும் தனது மகளுக்கு எடுக்கும் திருமண முயற்சிகள் யாவும் படுதோல்வியில் முடிந்து வருவது ஜாதகியின் சுயஜாதகப்படியே ஆகும் (மேலும் ஜாதகியின் பெற்றோரிடம் சில ஜோதிடர்கள் ஜாதகியின் ஜாதகத்தை பார்த்து புத்திர தோஷம் , 12ல் சனி) என்று தவறான பலன்களை சொல்லி ஜாதகியின் பெற்றோரே ஜாதகிக்கு வந்த நல்ல வரங்களை எல்லாம் உதறிதள்ள செய்து இருப்பது வேதனையான விஷயம் ஆகும் ,ஒருவேளை ஜாதகியின் பெற்றோர்கள் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் அந்த வாழ்க்கைத் துணையால் ஜாதகியின் மன நிம்மதியை கெடுத்துவிடும் என்பது ஜாதகியின் கர்மவினையின் பதிவு ஆகும் .அதே வேலையில் ஜாதகியின் சுய ஜாதகத்தில் முத்த சகோதரன் சகோதரி ஸ்தானனமான 11ம் வீடு லாபஸ்தானம் எனப்படும் 11ம் வீடுடன் தொடர்பு பெற்று இருப்பது இறைநிலையின் கருணை ஜாதகிக்கு தனது சகோதர ,சகோதரி மூலம் அதிகமாக உள்ளதை நாம் தெளிவாக காணலாம் , ஆகவே ஜாதகி தனது சுய ஜாதகத்தில் உள்ள கர்மவினையின் தீமைகளில் இருந்து தப்பித்து கொள்ள தனது சகோதர ,சகோதிரிகள் முயற்சிகள் மூலமும் வாழ்க்கை தேர்வு செய்வது சிறந்த வாழ்க்கை துணியை அமைத்து கொடுக்கும் என்பது 100% சதவீத உண்மையாகும்
அன்பர்களே திருமணம் மட்டும் அல்ல ஒருவரின் சுயஜாதகப்படி தொழில், பொருளாதார வீழ்ச்சி ,உடல் நலக்கோளாறுகள் மூலம் ஒருவர் கர்மவினையின் தாக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் , இறைவன் ஓவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் மாற்று வழி ஒன்றை நிச்சயம் வைத்து இருப்பது நிதர்சன உண்மையாகும் .
ஜோதிட பார்க்க விரும்பும் அன்பர்கள் தங்களது பிறந்த தேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய குறிப்புகளை எனது whatsappல் தொடர்பு கொண்டால் போதும் .
whatsapp number 9360972178
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஜோதிடன் ஸ்ரீதர்

வாசகர் கேள்விகளும் , ஜோதிடர் பதில்களும் !கேள்வி:ஒருவர்  செய்யும்  தொழிலில் பொருளாதாரம் முன்னேற்றம் பெற அ வரது சுய ஜாதக அ...
08/04/2023

வாசகர் கேள்விகளும் , ஜோதிடர் பதில்களும் !

கேள்வி:
ஒருவர் செய்யும் தொழிலில் பொருளாதாரம் முன்னேற்றம் பெற அ வரது சுய ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் ?

பதில் :

சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் ( 10 ம் வீடு ) வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும், பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம், தாம் தொடர்பு பெரும் பாவக வலிமைக்கேற்ப யோகபலன்களை ஜாதகருக்கு வழங்குவதில் எவ்வித குறையும் வைப்பதில்லை, உதாரணமாக சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரியான வயதில், அவருக்கு பொருத்தமான தொழில் தொடர்புகளையும், அந்த தொழிலில் நிகரற்ற அனுபவங்களையும் சரியான நேரத்தில் வழங்கிவிடுகிறது.

சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமையற்று காணப்படும் பொழுதே சம்பந்தபட்ட ஜாதகருக்கு ஜீவனத்தை தாராமல், அதிக அளவில் அவதிகொள்ள வைக்கிறது, மேலும் நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறந்த நன்மைகளை தரும், மாறாக ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை ஜாதகருக்கு, முழுமையான யோக பலன்களை தருவதில்லை, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றும் பலனில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு.

தொழில் ரீதியான வெற்றிகளை மிக பெரிய அளவில் பெரும் அன்பர்களின் சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெற்றும், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், கேட்சார கிரகங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் பொழுது ஜாதகரின் தொழில் ரீதியான வெற்றிகள் 100% விகிதம் உறுதி செய்யப்படும், ஜாதகர் தாம் மேற்கொள்ளும் தொழில் மூலம் அபரிவிதமான லாபங்களையும், பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுகின்றார், இருப்பினும் தொழில் வெற்றிகளை ஜீவன ஸ்தானம் மற்றும் நடைமுறையில் உள்ள திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மட்டுமே நிர்ணயம் செய்வதில்லை என்பதை கவனிக்கதக்க விஷயமாக " தெய்வீக ஜோதிடம் "கருதுகிறது .
லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தன் முனைப்பையும், சுய முயற்ச்சி மாற்றும் தொழில் ஆர்வத்தையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் எடுக்கும் முயற்ச்சி, வணிக விருத்திகளையும், தொழில் முறை தொடர்புகள் மூலம் வரும் வெற்றிகளை நிர்ணயம் செய்கிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்யும் தொழிலில் புதிய யுக்திகளையும், வியாபர தந்திரங்களையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் பரிபூரண ஆதரவையும், 9ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு வரும் தொழில் இடர்பாடுகளை மிக எளிதாக கையாளும் தன்மையையும், நிர்வாக திறமையையும், எவ்வித சூழ்நிலையையும் மிக எளிதாக கையாளும் தன்மையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் முற்போக்கு சிந்தனையையும், தொழில் ரீதியாக பெரும் யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையும், தன்னம்பிக்கை குறையாத மன ஆற்றலையும், பன்முக தொழில் திறன் மூலம் தாம் செய்யும் தொழில் வெற்றிகளை பெரும் யோகத்தை தரும்.

கேள்வி :
தசவித பொருத்தங்கள் கண்டு, உறவுகள் பேசி முடிவு செய்து, நல்ல நேரம் பார்த்து திருமணம் செய்தும், இல்லறவாழ்க்கையில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை வர காரணம் என்ன? ஆணோ பெண்ணோ தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அளவில்லா இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலை ஏன் வருகிறது? "திருமணம் ஆயிரம் காலத்து பயிர்" என்று சொல்லும் வார்த்தையை பொய்யாக்கும் தாம்பத்திய நிலை வர காரணம் யாது? திருமணத்திற்கு பிறகு பிரிவு வரும் என்பதை ஜோதிட கணிதம் ஜோதிடர்களுக்கு உணர்த்தவில்லை, உணர்த்தியதை ஜோதிடர்கள் சொல்லவில்லையா ? சில அன்பர்களின் இல்லற வாழ்க்கை இன்னல்களுக்கு காரணம் அறிய விளைகிறேன் ?

பதில் :
பொதுவாக திருமண பொருத்தங்களில் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் ( வீடுகளின் ) வலிமைக்கு முக்கியதுவம் தாராமல், 1) நட்சத்திர பொருத்தம் பத்து 2) ராகு கேது 3) செவ்வாய் தோஷம் 4) 7ல் பாவக கிரகம் 5) 2ல் பாவக கிரகம் 6) 5ல் ராகு 7) கால சர்ப்ப தோஷம் 8) களத்திர தோஷம் 9) ஏக திசை பொருத்தம் 10) திசாசந்திப்பு 11) புத்திர தோஷம் என வகைக்கு 10 தோஷங்களை வாயில் வந்ததை சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமில்லை எனவும், பொருத்தமற்ற ஜாதகங்களை சிறப்பான பொருத்தம் உண்டு என்று அறிவித்தும், திருமண வாழ்க்கையில் ஆண்மகனையும் பெண் மகளையும் இணைப்பதாலே, இல்லற வாழ்க்கையில் இன்னல்களும் துன்பங்களும் ஏற்ப்படுகிறது .

திருமண பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் ( வீட்டு அதிபதியை விட வீடுகளின் ) வலிமையை நன்கு உணர்ந்து வதுவையும், வரனையும் இணைத்தால் அவர்களின் வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், மாறாக மேற்கூறிய ( மூடநம்பிக்கையான காரணங்களை முன்வைத்து இல்லற வாழ்க்கையில் வதுவையும் வரனையும் இணைத்தால், தங்களின் கேள்வியில் உள்ள சூழ்நிலையே "தம்பதியரை" வெகுவாக பாதிக்கும் , திருமண வாழ்க்கையில் துன்பம் எனும் சூழ்நிலைக்கும், பிரிவு எனும் மிகப்பெரிய இன்னலுக்கு ஆட்படுத்தும்,

சிலரது யோக ஜாதகங்கள் கூட இதுபோன்ற ( மூடநம்பிக்கையான ) பொருத்தமில்லா சேர்க்கையின் காரணமாக "குடத்தில் இட்ட விளக்குபோல" எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் தவிப்பது கண்கூடான உண்மை, இந்த உண்மையை யார் சொல்லி புரிய வைப்பது,
"இறை அருளுக்கே வெளிச்சம்"

ஓவொரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகு , தனது ஜாதக வலிமை உணர்ந்து தனது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை தேர்ந்தேடுக்கவிட்டால், கால நேரம் காத்திருக்காமல் தனது கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்று விடும் என்பதை, தம்பதியர் அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் ஸ்ரீதர்
தொடர்புக்கு : 9360972178

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும...
06/04/2023

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?

நிச்சயமாக சொல்ல இயலும் அன்பரே !

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான வருமானம் பெற களத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது அவசியம், அதாவது களத்திர ஸ்தானம் வெளிவட்டார தொடர்புகளையும், பொதுமக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தையும், வேற்று இன மக்கள் மூலம் வரும் லாபத்தையும் குறிக்கும் எனவே சுய ஜாதகத்தில், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது சிறப்பு .

களத்திர ஸ்தானம் சர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தன சேர்க்கையை வாரி வழங்கிவிடும், மேலும் ஜாதகர் செய்யும் தொழிலானது விரைவில் மிக பிரபலாமாக மக்கள் மத்தில் சென்றடையும் , ஜாதகர் விளம்பரம் எதுவும் செய்யாமலேயே தனது வியாபரத்தை பன்மடங்கு வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் திறமை கொண்டவராக இருப்பார், இவருடன் தொழில் தொழில் செய்யும் அன்பர்கள் யாவரும் நேர்மை மிகுந்தவர்களாகவும் உண்மையாக இவர்களுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

களத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில், படிப்படியான நிலையான வளர்ச்சியை தரும், தனது தொழிலை ஜாதகர் பல தலைமுறைக்கு நடத்தும் தன்மையுடன், சரியான திட்டமிடுதலுடன் செம்மையாக தொழில் நிர்வாகம் செய்வார் , இவர்களின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, தான் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாழையடி வாழையாக செழித்தோங்கும் தன்மையுடன், சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறுவார்கள், இவர்களின் சிந்தனையெல்லாம் பல தலைமுறைக்கு தனது தொழில் சீரும் சிறப்புமாக நடைபெறும் அளவிற்கும் சரியான திட்டமிடுதலுடன், தொலை நோக்கு பாரவையுடன் இருக்கும்.

களத்திர ஸ்தானம் உபய ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் தொய்வில்லாத சீரான வருமானத்தை பெரும் அமைப்பிலான வியாபாரங்களை செய்வார், அதிக ரிஸ்க் இல்லாத தொழில்களாகவும், நிர்ணயக்கபட்ட வருமானம் உள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் தன்மை கொண்டவர்கள், இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் இழப்பு மற்றும் நஷ்டம் என்பதே இருக்காது, சீரான நிலையான வருமானத்தை ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பெற்றுகொண்டே இருக்கும் விதத்தில் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.

மேற்கண்ட அமைப்பில் களத்திர ஸ்தானம் அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் சுய ஜாதக அமைப்பின் படி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று விட்டல் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது , மேற்கண்ட பலன்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கிவிடும், தீய பலன்கள் 200 மடங்கு நடை பெரும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகமும், சுக ஸ்தானமான 4ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகுந்த வற்றி வாய்ப்பை வாரி வழங்கும் .

பங்கு வர்த்தக தொழில்களில் ஜாதகர் நிறைவான வருமானத்த பெற , சுய ஜாதகத்தில் மற்றவர் பணத்தை குறிக்கும் 6ம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வர்த்தகத்தால் வரும் வருமானத்தை தரும் 8ம் பாவகமும், முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும் 12ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் மேற்கண்ட அமைப்பில் 6,8,12ம் பாவகங்கள் ஒருவர் ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால், பங்குவர்த்தக தொழில்களில் கொடிகட்டி பறக்கலாம், அபரிவிதமான வருமானத்தை பெறலாம்.

மாறாக மேற்கண்ட 6,8,12ம் பாவகங்கள் வலிமை இழந்தோ, தனது பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோ, விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலோ , பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலோ, ஜாதகர் பங்கு வர்த்தக தொழில் பக்கம் தலை வைத்து படுப்பது கூட ஆகாது, மீறி செய்தால் ஜாதகரின் "கெளனபீடம்"
(கோவணம்) வரை உருவி விடும் .

எனவே எந்த ஒரு ஜாதகரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு ஏற்ற ஜீவனம் எதுவென்பதை நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு, அதிலும் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நல்ல யோக பலன்களை வழங்குவது நல்லது, சுய ஜாதகம் மட்டும் வலிமை பெற்று தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி சிறப்பாக இல்லையெனில் ஜாதகர் செய்யும் தொழில் மிகப்பெரிய வெற்றியை தர வாய்ப்பில்லை என்பது மட்டும் உண்மை .

வாழ்க வளமுடன்

ஜோதிடன் ஸ்ரீதர்
whatsapp : 9360972178

நிரந்தர வேலை   வாசகர் கேட்ட கேள்விகள் : வேலை செய்யும் இடத்தில் திருப்தி  இல்லை கரணம் என்ன ?14.1.1993 நேரம் ; 3.45 am  இட...
05/04/2023

நிரந்தர வேலை

வாசகர் கேட்ட கேள்விகள் : வேலை செய்யும் இடத்தில் திருப்தி இல்லை கரணம் என்ன ?

14.1.1993 நேரம் ; 3.45 am இடம் ;திண்டுக்கல்

வாசகரின் சுய ஜாதகம் :

பதில்கள் ;

ராசி ;;கன்னி

நட்சத்திரம் ;ஹஸ்தம்

லக்கினம்; விருச்சிகம்

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசையானது ( 18.5.2007 முதல் 17.5.2025 வரை ) 2,5,7,10 ஆகிய வீடுகள் திடீர் இழப்புகளை கொடுக்க கூடிய 8ம் வீட்டுடன் தொடபு பெற்று அவயோக பலன்களை செய்து கொண்டு இருப்பது வருந்த கூடிய விஷயம் ஆகும் . மேலும் தற்பொழுது நடை பெரும் ராகு திசையில் சந்திர புத்தியானது 11,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் வீடுட்டுடன் தொடர்பு பெற்று அதிக வீண் விரயங்களையும் , மனதில் திருப்தி அற்ற நிலையும் உருவாக்க காரணம் ஆகிறது , ஜாதகர் வீண் குழப்பங்களையும் , கவலைகளையும் தவிர்த்து தெளிவான முடிவுகள் எடுப்பது நலம் ஆகும் .

அடுத்து வரும் குரு ,மாற்று சனி திசையானது ஜாதகருக்கு பல யோகங்களை செய்ய காத்து கொண்டுருப்பது 100% உறுதியாகும் .

பரிகாரம் ; நாமக்கல் ஆஞ்சிநேயர் வழிபாடும் , மனவளக்கலை பயிற்சியும் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும் .

சந்தோஷம்

ஜோதிடன் ஸ்ரீதர்

9360972178

சர்ப்ப தோஷம் ( ராகு கேது ) கூட்டு திசை ( ஏகதிசை நடப்பு ) திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ? திருமணம் பொருத்தம் காண்பத...
25/03/2023

சர்ப்ப தோஷம் ( ராகு கேது ) கூட்டு திசை ( ஏகதிசை நடப்பு ) திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?

திருமணம் பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம், 10 பொருத்த நிர்ணயம் போன்றவை கடந்த தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும், தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இது சிறிதும் பொருந்தாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது நல்லது, ஏனெனில் கடந்த தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு பெரும்பாலும் 20 முதல் 30 சதவிகித அன்பர்களுக்கே சுய ஜாதகமும் , பிறந்த குறிப்பும் இருந்தது ( பிறந்த தேதி , நேரம் , இடம் ) கடந்த தலைமுறையில் ஜாதகம் இல்லாத அன்பர்களுக்கு அவர்களின் பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாக கொண்டு நாம நட்ஷத்திரம் மற்றும் ராசி அறியப்பட்டது , திருமண பொருத்தமும் நாம நட்ஷத்திரம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது, இது அவர்களது வாழ்க்கையில் சகல செல்வங்களையும் தந்ததா என்றால் கேள்விக்குறியே, ஒருவேளை நாம நட்ஷத்திரம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட திருமணம் வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருப்பின் " காகம் அமர பனம்பழம் விழுந்த கதை " சிறப்பாக அமையவில்லை எனில் விதி விட்ட வழி என கடந்த தலைமுறையை சார்ந்த ஆணும் பெண்ணும் சகிப்பு தன்மையுடன் இல்லற வாழ்க்கையை நடத்தினர், அதற்க்கு கூட்டு குடும்பமும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

ஆனால் தற்பொழுது உள்ள தலைமுறையினர் அப்படிப்பட்ட சகிப்பு தன்மையுடனானா வாழ்க்கையை வாழ தயாராக இல்லை என்பதை கடந்த 15 வருடங்களில் நீதிமன்றத்தில் குவிந்துகொண்டு இருக்கும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை வைத்து நாம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும், மேலும் விவாகரத்து கோரும் அன்பர்களின் ஜாதக பொறுத்த நிலையை பார்க்காமலா ? அவர்களின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து இருப்பார்கள் ? நிச்ச்யம் இல்லை, அப்படி இருக்க ஏன் இந்த பிரிவு நிலை ஏற்படுகிறது ? ஜோதிடம் தவறா ? ஜோதிடர்கள் கண்ட பொருத்தம் தவறா ? என்ற கேள்விகள் பல ஏற்படுவது இயற்க்கை.

jothidan sridhar
93660972178

22/03/2023
22/03/2023
சுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் !பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்...
27/02/2023

சுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் !
பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நிறைந்த எதிர்கால வாழ்விற்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், இது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், நன்மையான பலாபலன்களை வாரி வழங்கும். கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமான கடகம் சுய ஜாதகத்திலும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தொடர்பு பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்க தவறுவது இல்லை, அதே சமயம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை வழங்குவதிலும் தவறுவது இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்
இந்த தனுசு லக்கின ஜாதகருக்கு கடக ராசியில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 14 பாகைகளையும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு 16 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்க தக்கது, இதில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும், அதே சமயம் 16 பாகைகளை கொண்டுள்ள ஆயுள் பாவகம் ஜாதகருக்கு கடுமையான திடீர் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் கடக ராசியில் பெரும் பகுதி 7ம் பாவக வழியில் இருந்து பெருவாரியான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது இது ஜாதகருக்கு, வியாபாரம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் நன்மைகளை அதிக அளவில் தரும், எதிர்பாலின சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவார், திருமணத்திற்கு பிறகான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை சிறப்பாக அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த வியாபர யுக்தி, பல தொழில் செய்யும் வல்லமை, மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் ஆசைகள் யாவும் நிறைவேறும் தன்மையை தரும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்த்தை நல்கும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.
குறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
jothidan sridhar
9360972178

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்கு ஏற்படும் இன்னல்கள் ! " எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு...
15/02/2023

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்கு ஏற்படும் இன்னல்கள் !
" எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் லக்கினமே பிரதானம் ஆகும், சுய ஜாதக பலன்கான சம்பந்தப்பட்ட நபரின் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது, இது சம்பந்தப்பட்ட நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் என்ற குறிப்பை கொண்டு கணிதம் செய்யப்படும், அதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மை நிர்ணயம் செய்யபடுகிறது, ஒருவரது சுய ஜாதக பலாபலன்கள் பற்றி தெளிவு பெற நிச்சயம் அவரது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், சுய ஜாதக பலன் காண்பது அவசியமாகிறது.
அதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் முதல் பாவகமான லக்கினம் வலிமை பெறுவது மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக பெற்று இருக்கும், மாறாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை அற்று காணப்படுவது ஜாதகர் மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மை தீமைகளை ஏற்றுக்கொள்ளும் வல்லமையை இழந்து காணப்படும், லக்கினம் பாதிப்படைவது என்பது சுய ஜாதகத்தில் முதல் வீடு மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது ( லக்கினாதிபதி 6,8,12ல் மறைவது என்பதல்ல ) ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கணிக்க இயலாத கடுமையான பாதிப்பை தரும் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்க்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்க்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாகும் ) ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெரும் லக்கினம் மிகவும் பாதிப்பிற்க்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.
லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
ஜாதகரின் உடல் நிலை மற்றும் மனநிலை வெகுவாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஜாதகருக்கே எதிராக திரும்பும், வளரும் காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையில் ஜாதகர் போராடி முன்னுக்குவரும் நிலையை தரும் அல்லது முன்னேற்றம் அற்ற நிலையில் தோல்வியை தரும், ஜாதகருக்கு அதிக அளவிலான எதிரிகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் இதை சமாளிக்கும் வல்லமையும் ஜாதகருக்கு மிக குறைவாகவே அமைந்து இருக்கும், அடிக்கடி உடல் நலம் பாதிப்படையும், குறுகிய காலத்தில் மருத்துவ செலவினங்களை சந்திக்கும் நிலையை தரும், எதிரியின் பலமே உயர்ந்து நிற்கும், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகரின் உடல் மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், இதுவே ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், சில நேரங்களில் எதிரியின் மிரட்டலுக்கு பயந்து போகும் நிலையை தரும், அதிக பொறுப்புகளை சுமக்கும் வல்லமையற்றவராக திகழ்வார்கள், சிறு உடல் தொந்தரவுக்கே அதிக மனபயம் கொண்டு தானும் பாதித்து தன்னை சார்ந்தவர்களையும் படுத்தி எடுக்கும் தன்மையை பெற்றவர்கள் என்பதால் இவர்களை மற்றவர்கள் கையாள அதிகம் சிரமப்படுவார்கள், மேற்கண்ட அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை பெற்ற அன்பர்களின் பாடுதான் ரொம்ப சிரமம்.
லக்கினம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
ஜாதகருக்கு வரும் எதிர்பாராத இழப்புகள் தாங்க இயலாவண்ணம் இருக்கும், தான் செய்யும் செய்கைகள் தனக்கு இன்னல்களை தரும் என்று நன்கு தெரிந்து இருந்தும் அசட்டு தைரியத்துடன் அதில் ஈடுபட்டு இழப்புகளை சந்திப்பார்கள், விபத்து, வீண் விரையம் போன்றவற்றை ஜாதகர் தவிர்க்க இயலாது, சில நேரங்களில் இவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரது வாழ்க்கையையும் பாழ்படுத்திவிடும், குறிப்பாக வாழ்க்கை துணைக்கு தாங்க இயலாத இன்னல்களை தருவார்கள், நண்பர்கள் அனைவரும் இவர்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள், சுய சிந்தனை என்பது ஜாதகருக்கு இழப்புகளையே ஏற்படுத்தும், மனம் குறுக்கியவட்டத்தில் இருந்து வெளிவர மறுக்கும், தவறான திட்டமிடுதல்கள் மூலம் கடுமையான இழப்புகளை ஜாதகரும் சந்தித்து, ஜாதகரால் மற்றவர்களும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், பெரும்பாலும் ஜாதகரின் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகர் பலமுறை முயற்சித்தே சிறு வெற்றிகளை பெறவேண்டியிருக்கும், தீவிரமான எண்ணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு வித்திடும், கிணற்றுத்தவளையாய் வாழ்க்கையில் விழிப்புணர்வு அற்று தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை தரும்.
லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
ஜாதகரின் மனநிம்மதி கெடும், நல்ல உறக்கம் இன்றி பரிதவிக்கும் நிலையை தரும், ஜாதகர் தீட்டும் பெரிய அளவிலான திட்டங்கள் இறுதியில் முழு தோல்வியை தரும், ஆண் பெண் உறவுகள் வழியிலான பேரிழப்புக்களை அதிக அளவில் சந்திக்கும் நிலையை தரும், தனக்கு உகந்த துணையை சரியாக தேர்வு செய்யாமல் அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்தித்து நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும், ஆன்மீகத்தில் நாட்டம் இன்றி நாத்திக செயல்பாட்டினை தரும், தெளிவில்லாத சிந்தனை ஜாதகரின் மனநிம்மதியை பறிக்கும், முதலீடு செய்வதால் பேரிழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், அதிக அளவில் மனநோய் சார்ந்த தொந்தரவுகளால் பாதிப்படையும் நிலையை தரும், மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவர்களும் நிம்மதியற்று மனோ ரீதியாக போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கற்பனையே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டு இன்னலுறும் தன்மையை தரும், திரை துறை சார்ந்த விஷயங்களில் வீண் கற்பனை செய்துகொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொள்பவர்கள் அதிக அளவில் மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களே, சுய அறிவு சொல்வதை கருத்தில் கொள்ளாமல் தனது மனம்போன போக்கில் தனது வாழ்க்கையை வாழ்ந்து, யாதொரு பிரயோசனம் இன்றி ஜீவிக்கும் தன்மையை தரும், சில நபர்கள் தாங்க இயலாத மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு, 12ம் பாவகம் நீர் தத்துவ ராசி எனில் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும்.
லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( சரலக்கினம் )
அடிப்படையில் தன்னம்பிக்கையே ஜாதகருக்கு இருக்காது, செய்யும் காரியங்கள் யாவும் பிற்போக்கு தனமாகவும், மூட பழக்க வழக்கங்களை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும், மிக மிக பழமைவாதிகளாக தனது வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு போராட்டத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு வாழ்க்கையில் இன்னலுறுவார்கள், இவர்களால் மற்றவர்களுக்கு சிறிதும் நன்மை உண்டாகாது என்பதுடன், தனது வாழ்க்கையையும் தானே கெடுத்துக்கொள்வார்கள், அனைத்திற்கும் எதிர்ப்புவாதமே சரியானது என்று பிடிவாதம் செய்ப்பவர்கள், தேக ஆரோக்கியம் மற்றும் அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடு காட்டாமல், மற்றவர்கள் செய்வதை தானும் செய்து மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், பொறுப்பற்ற தன்மை அதிகம் காணப்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் சிறிதும் இருக்காது, பகுத்தறிந்து செயல்படும் தன்மை இன்றி வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார்கள், மற்றவர்களால் செய்யமுடியும் காரியத்தையும் தனது செய்கையின் மூலம் பாதிப்படைய செய்வார்கள், மற்றவர்களை முன்னிறுத்தி அதன் பின்னால் தனது ஜீவனத்தை மேற்கொள்வார்கள், எதிர்ப்புகள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தெய்வீக அனுக்கிரகம் சிறிதும் இருக்காது, இவருடன் சார்ந்தவர்கள் சுய ஜாதகம் வலிமை பெறவில்லை எனில், அவர்களின் கதி அதோ கதிதான், சர லக்கினத்திற்க்கு அடிப்படையே வேகம்தான் ஆனால் இவர்களின் செயல்திறன் சிறிதும் அதற்க்கு பொருந்தவண்ணம் இருக்கும், சுய கட்டுப்பாடு, மனவலிமை, உடல் வலிமை, அறிவின் திறன் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையை விட்டே விலகி சென்றுவிடும்.
லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( ஸ்திர லக்கினம் )
ஜாதகருக்கு சமூகத்தில் நற்பெயர் கிடைப்பது அரிது, பலரது கண்டிப்புக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், அறிவுத்திறன் என்பது ஜாதகருக்கு எதிர்மறையாக வேலை செய்யும், தொடர்ந்து பாதிப்புகளை தரும் விஷயங்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார்கள், குறிப்பாக தனது உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மையை தரும், முதியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், யாதொரு அறிவுரையும் ஜாதகருக்கு பலன்தராது, தானே அறிவாளி என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தி நல்லோர்களின் சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலன்தராது, மிக உயர்ந்த இடத்தில் இருந்த போதிலும் செயல்பாடுகள் அதற்க்கு ஈடானதாக இருக்காது, எந்த காரியத்திலும் வெற்றி பெற ஜாதகர் கடுமையாக போராடவேண்டிவரும், தீயபழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிக எளிதில் சுவீகரிக்கபடும், அதில் இருந்து விடுபட ஜாதகர் மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், செய்யக்கூடாத காரியங்களை செய்துவிட்டு அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள இயலாமல் தவிப்பர், இறையருள் ஆசிர்வாதமும் பித்ரு ஆசிர்வாதமும் ஜாதகருக்கு சிறிதும் இன்றி வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைய தரும், உண்மையான ஆன்மீகத்தை நாடாமல் போலி வேசதாரிகளை நம்பி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துகொல்வர்கள், அறிவில் விழிப்பு நிலை ஏற்ப்படாது , அறிவார்ந்த பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் ஜாதகருக்கு பலன் தாராது, சில நேரங்களில் இவர்களின் செய்கைகள் என்பது விட்டில் பூச்சிகளுக்கு நிகராக அமைந்திருக்கும், தான் செய்யும் செயல்கள் யாவும் சரியென்று வீண் வாதம் செய்து, தவறான சேர்க்கையின் மூலம் தனது வாழ்க்கை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி இன்னலுருவார்கள்.
லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( உபய லக்கினம் )
ஜாதகரின் சேர்க்கையும், வெளிவட்டார பழக்க வழக்கமும், எதிர்ப்பால் இன சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையை முழு அளவில் பாதிப்பிற்கு ஆளாக்கும் , மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு சுய சிந்தனை இன்றி செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், சுய ஆளுமை இன்றி வாழ்க்கையில் தொடர்ந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், பெரும்பாலும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றி அவதியுறும் தன்மையை தரும், மேலும் மேற்கண்ட நபர்களால் சிறிதும் நன்மையை பெற இயலாத அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, தனிப்பட்ட முறையில் சுய முன்னேற்றம் பெரும் யோகம் அற்றவர்கள், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை சரியாக தேர்வு செய்யும் வல்லமை அற்றவர்கள் என்பதுடன், பிரபல்ய யோகம் பெற தகுதியற்றவர்கள், பாதக ஸ்தானம் நீர் ராசிஎனில் சம்பந்தப்பட்ட ஜாதகர் எதிர்ப்பால் இன அமைப்பினரால் ஏமாற்றப்பட்டு, மன நோயாளியாக அவதியுற நேரும், குறிப்பாக அதிக அளவிலான குடி நோயாளிகள் அனைவரும் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசி பதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கவனிக்க முடிகிறது.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தான தொடர்பை பெற கூடாது, அப்படியே பெற்று இருந்தாலும் நடைபெறும் எதிவரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற இலக்கின பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பதே ஜாதகருக்கு நன்மையை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற இலக்கின பாவக பலனை தற்பொழுது எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அனலில் இட்ட மெழுகு போல் உருக வேண்டியிருக்கும், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புகளை தருவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் தொடர்பு பெரும் பாவக நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே ஒவ்வொருவருக்கும் சுபயோகங்களை வாரி வழங்கும்.
வாழ்க வளமுடன்
jothidan sridhar
93660972178

Address

Tuticorin

Telephone

+919360972178

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deiveega Jothidam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Media/News Companies in Tuticorin

Show All

You may also like