social news
24/09/2023
06/07/2023
03/07/2023
https://slickshares.com/0Bg0pN0000000000
16 Quick Stress Management Tips - Get Rid of Stress Now
31/03/2023
லொத்தர் சீட்டிழுப்பு பற்றிய உண்மையான விடையத்தை தெரிந்து கொள்வோம்
எனதருமை நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு
லொத்தர் சீட்டிழுப்பு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு சூது
சரி இப்போ இதனுடைய உண்மை என்ன என்பதை பார்ப்போம்
இந்த லொத்தர் சீட்டிழுப்புக்குறிய பந்துகள் குழுக்கிய பிறகு லொத்தர் சீட்டில் இலக்கங்கள் அச்சிடப்படுகிறதா ???
லொத்தர் சீட்டில் இலக்கங்கள் அச்சிடப்பட்ட பிறகு பந்துகள் குழுக்கப்படுகிறதா ???
நிறைய நண்பர்கள் நினைத்திருப்பார்கள் இலக்கங்கள் அச்சிடப்பட்ட பிறகுதான் குழுக்கப்படுகிறது என்று அதுதான் இல்லை
பந்துகள் குழுக்கிய பிறகுதான் லொத்தர் சீட்டில் இலக்கம்கள் அச்சிடப்படுகிறது என்பதுதான் உண்மை
உங்களுக்கு நான் இதற்கான ஆதாரம் நிறையவே தருவேன்
முதாலாவது ஆதாரம் லொத்தர் சீட்டிழுப்பு குழுக்குவதை கான்பிக்கும்போது தொலைக்காட்சியில் நேரலை என்று காட்டுவதில்லை காரணம் அது குழுக்கியது ஒரு வாரத்திற்கு முதல் அதனால் நேரலை என்று வராது இது முதலாவது ஆதாரம்
இரண்டாவது ஆதாரம் சீட்டிழுப்பு குழுக்கி பத்து நிமிடத்திற்குள் சுப்பர் பரிசு வெல்லப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சொல்வார்கள் சுப்பர் பரிசு மாத்திரம் இல்லை இருபது ரூபாய் தொடக்கம் பத்து இலட்சம் வரை விற்பனை செய்த டிக்கட்டுகள் வெற்றி கொள்ளப்பட்ட முழு பணத்தின் தொகையும் விற்பனை செய்த முகவர் வரைக்கும் சொல்வார்கள்
இப்படி இவர்கள் சொல்கிறார்கள் என்றால் இவர்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் தெரியும்
மூன்றாவது ஆதாரம் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் லொத்தர் சீட்டிழுப்புக்கான பந்துகளை முன்கூட்டியே குழுக்குகிறார்கள்
அதன் பிறகு லொத்தர் சீட்டில் குழுக்கப்பட்ட இலக்கங்களை விட்டுட்டு வேறு இலக்கங்களை அச்சிட்டு விற்பனைக்காக தயார் செய்கிறார்கள்
நான்காவது ஆதாரம் குழுக்கப்பட்ட இலக்கங்களில் மொத்த இலக்கத்தையும் ஒரு லொத்தர் சீட்டில் அச்சிட்டு சுப்பர் பரிசாகவும்
பத்து இலட்சம் பெருமதியான இலக்கங்களை ஒன்று அல்லது இரண்டு டிக்கட்டுக்களிலும்
ஒரு இலட்சம் பெருமதியான இலக்கங்களை நான்கு அல்லது ஐந்து டிக்கட்டுக்களிலும்
இருபது ரூபாய் தொடக்கம் நூறு ரூபாய் வரையான இலக்கங்களை இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் டிக்கட்டுக்களிலும் அச்சிட்டு முன்கூட்டியே குடுத்ததால்தான் விற்பனை செய்த முகவரின் பெயரை உடனே சொல்கிறார்கள்
ஐந்தாவது ஆதாரம் அவர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு அவர்கள் விரும்பி ஊருக்கு அவர்கள் விரும்பிய விற்பனை முகவர்களுக்கு அதிலும் சிங்கள சகோதரர்கள் சரிந்து வாழும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள் அதாவது கண்டி காலி மாத்தறை குருனாகல கொழும்பு களுத்துறை பொலநறுவை கேகாலை அனுராதபுறம் இப்படியாப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு பெரும் தொகையான வெற்றிப் பரிசிக்குறிய டிக்கட்டுக்களை அனுப்பி வைக்கிறார்கள் அப்படி அவர்கள் தெரிந்து கொண்டே அனுப்பி வைத்ததால்த்தான் உதாரனத்திற்கு ஒரு விற்பனை முகவருடைய பெயரை சொல்லி சுப்பர் பரிசோ அல்லது பத்து இலட்சம் பரிசோ அல்லது ஒரு இலட்சம் பரிசோ
விற்பனை செய்துள்ளார் என்று சொல்கிறார்கள்
தமிழர்களும் முஸ்லிம்களும் சரிந்து வாழும் மாவட்டம்களான யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை முல்லைதீவு இன்னும் எத்தனையோ மாவட்டங்களுக்கு இருபது ரூபாய் தொடக்கம் நூறு ரூபாய் பரிசுகள் வரையான டிக்கட்டுக்களை அனுப்பி வைக்கிறார்கள் என்பதுதான் உண்மை
ஆக இந்த லொத்தர் சீட்டுக்கு அடிமையான சகோதரர்களே தயவு செய்து உங்கள் பணத்தை வீன் விரையம் செய்யாதீர்கள்
உங்கள் பணத்தை வேறு தேவைகளுக்கு பயண்படுத்துங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உணவு வகைகளை வாங்கிக் கொடுங்கள் பாடசாலை உபகாரணம்களை வாங்கி கொடுங்கள் இல்லை என்றால் அந்தப் பணத்தை சேமித்து வாருங்கள் நீங்கள் தொடர்சியாக ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு டிக்கட்டிலும் ஒன்று அல்லது இரண்டு என்று குறைந்தது நாளொன்றுக்கு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு டிக்கட்டுக்கள் வாங்குகிறீர்கள் மாதாந்தம் நான்காயிரத்து ஐந்நூறு றூபாய் வீன் விரையமாக சிலவு செய்கிறீர்கள் அதில் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை எனதருமை சகோதரர்களே நான் சொல்வது பொய் என்றால் நீங்கள் ஒரு தரம் சீட்டிழுப்பு குழுக்கும் நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்
இருந்து சீட்டிழுப்பு குழுக்கும் ரேம் முடியும் வரை பாருங்கள் உங்களுக்கே அதன் உண்மை தெரிய வரும்
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் எனக்கு தெரிந்த விடையத்தை உங்களுக்கு சொல்லியுள்ளேன்
புத்தியுடன் வாழ்வதும் வாழாததும் உங்கள் விருப்பம் இதை முழுமையாக படித்த நண்பர்கள் பகிர்ந்து விடுங்கள் தெரியாதோருக்கு தெரியட்டும் உங்களுடைய உறவுக்காரவங்க யாராவது இந்த டிக்கட்டுக்கு அடிமையாக இருந்தால் இதை சொல்லி விளங்கப்படுத்துங்கள்
நன்றி
27/03/2023
பாஸ்போட் பெற ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்தல்.
பாஸ்போட் பெறுவதற்கு ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்வது எப்படி எனத் தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். ஆங்கில மொழி தெரிந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தற்போதுகொழும்பு,வவுனியா,மாத்தறை,
குருணாகல்,கண்டி ஆகிய அலுவலகங்கள் ஊடாக ஒரே நாளில் கடவுச் சீட்டுப் பெறலாம். அதே போலச் சாதாரண முறையிலும் கடவுச் சீட்டைப் பெறலாம்.
அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோ மூலமாக புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அப் புகைப்படத்தை பாஸ்போட் பெறுவதற்காக ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்த பிரிண்டை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
இப் புகைப்படம் எடுக்கப்பட்டு 90 நாள்களுக்குள் பதிவு செய்து பாஸ்போட் பெற்று விடல் வேண்டும்.இல்லாவிடில் திகதி காலாவதியாகி விடும்.
மீண்டும் புதிதாகவே புகைப்படம் எடுத்தல் வேண்டும்.
ஒன்லைன் மூலமான பதிவு ஒரு நாளில் எந்த நேரத்தில் செய்யலாம் என்பது தொடர்பாகத் தெளிவான நடைமுறை இல்லை.
திணைக்களத்தின் சேவர் எப்போது பதிய விடும் என்பது தெளிவற்ற நிலை.
பதிவு செய்ய https://www.immigration.gov.lk/pages_e.php?id=38 எனும் இணைப்பிற்குள் முதலில் பிரவேசியுங்கள்.
பின்னர் அங்கு Appointment for online Passport service என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
;.https://eservices.immigration.gov.lk:8443/appointment/pages/reservationApplication.xhtml எனும் புதிய இணைப்பு வரும்.
01.அதில் Application type எனும் தெரிவு இருக்கும்.
One day service , Normal service என இரு தெரிவு வரும். ஒரே நாள் சேவைக்கு 20 000 ரூபா கட்டணம்.
சாதாரண சேவைக்கு 5000 ரூபா கட்டணம். இச் சேவையின் மூலமாக விண்ணப்பித்தால் நான்கு மாதங்களில் தான் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே உங்கள் வசதிக்கேற்ற தெரிவைச் செய்யுங்கள்.தெரிவு செய்து விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்பாக மாற்ற முடியாது.
02. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் எந்த அலுவலகம் ஊடாகக் கடவுச்சீட்டைப் பெற
விரும்புகிறீர்கள் என்ற தெரிவு இரண்டாவதாக வரும்.
அதில் Preferred location எனும் தெரிவின் கீழ்
Head office Bataramulla
Matara branch, Kandy branch, Vavuniya branch, Kurunagala branch ஆகியவை வரும் அதில் உங்களுக்கு போக்குவரத்துச் செய்ய வசதியான அலுவலகத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
03.Photo acknowledge number எனும் விடயம் வரும். அதில் 000 எனத் தொடங்கி 10 இலக்கங்களுள்ள இலக்கத்தைப் பதிவு செய்ய வேண்டும். இந்த இலக்கம் நீங்கள் புகைப்படம் எடுத்த அங்கீகரிக்கப்பட்ட ஸ்ருடியோ பாஸ்போட்டுக்காக உங்கள் படத்தை ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்து தந்த துண்டில் உங்கள் புகைப்படத்தின் தலைக்கு மேலே Reference No. என்பதற்குப் பக்கத்தில் உள்ள இலக்கமாகும்.
ஸ்ரூடியோ போட்டோ பிரிண்ட் இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும்.
அந்தப் பிரிண்டில் வலது பக்கமாக மேலே உள்ள 000 எனத் தொடங்கி வரும் இலக்கங்களைப் பதிவு செய்தல் வேண்டும்.
04. Applicant Name அடுத்ததாக உங்கள் பெயரை ஆங்கில கப்பிற்றல் எழுத்துகளில் முதல் எழுத்தை இட்டு அதன்படி பதிவு செய்ய வேண்டும். வழமையாக நீங்கள் ஆங்கில மொழியில் எழுதும் எழுத்துகளையே போட்டோ எடுத்த ஸ்ரூடியோவுக்குக் கொடுத்தல் வேண்டும்.
ஸ்ரூடியோ பதிவுத் துண்டிலுள்ளவாறு பெயரைப் பதிவு செய்யுங்கள்.
05. Date of birth உங்கள் பிறந்த தேதியை அடுத்த கூட்டில் பதிவு செய்யுங்கள். திகதி முதலாவதாகவும், மாதம் அடுத்ததாகவும் இறுதியில் ஆண்டும் இருக்கும்.
06. உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்யுங்கள். பழைய இலக்கமாயின் 09 இலக்கங்களின் இறுதியில் ஆங்கில எழுத்து வி அல்லது எக்ஸ் என்பதையும் பதிவிடல் வேண்டும். புதிய இலக்கமாயின் 12 இலக்கங்கள் பதிவு செய்தல் வேண்டும்.
07. Mobile No. பத்து இலக்கமுள்ள .உங்கள் கைத்தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்தல் வேண்டும்.
08. Appointment date எனும் இடம் அடுத்தது. தற்போதுள்ள மாதம் இருக்கும். அதன் வலது பக்க மேல்
மூலையில் கிளிக் செய்யும் போது பதிவு செய்வதற்கான வெற்றிடமுள்ள மாதத்தை நோக்கி நகரும். பதிவு செய்வதற்கான மாதம் அடுத்து இருக்கும்.
மாதத்தின் நிறைவு நாள் மட்டும் திகதிகள் முழுமையாக வட்டமாக இருந்தால் திகதி முழுவதும் பதிவு செய்யப்பட்டு விட்டது என்ற கருத்து.
மாதம் காட்டும் அந்தப் பக்கத்தின் மேல் மூலையில் கிளிக் செய்தால் அடுத்த மாதம் இருக்கும்.அதனையும் கிளிக் செய்தால் அடுத்த மாதம் வரும்.
நான் மார்ச் 17 ஆம் திகதி வவுனியா அலுவலகம் ஊடாக ஒரே நாள் பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்த போது மே 10 ஆம் திகதி மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.
சாதாரண பாஸ்போட் விநியோகத்திற்கு யூன் 08 ஆம் திகதி வரையும் இருந்தது.
ஒரே குடும்பத்தில் 04 அல்லது 05 பேருக்குப் பாஸ்போட் எடுக்க விண்ணப்பம் செய்வதாயின் தரவுகளைத் தட்டச்சு செய்து முன்னாயத்தம் செய்து கொள்ளுங்கள். லப்ரொப் அல்லது பிசி ஆயின் வேறு வேறு ரூல்பார் திறந்து வைத்திருந்து தரவுகளைத் தட்டச்சு செய்து ஆயத்தம் செய்து வையுங்கள். சேவர் பதிய விடும் போது தான் பதிவு செய்யலாம்.
24 மணித்தியாலம் உள்ள ஒரு நாளில் எப்போது செய்யலாம் என்பதற்கு நிச்சயமில்லை. ஆனால் ஒரு நாளில் ஒரேயொரு திகதியை மட்டும் அனுமதிப்பார்கள்.
09. சரியான திகதியைத் தெரிவு செய்த பின்பாக கீழே பதிவு நேரவலயமாக 04 நேரங்கள் சிவப்புப் பெட்டிகளில் காட்டும்.
அதில் காலை 8.00 மணி நேரவலயத்தைத் தெரிவு செய்யுங்கள். அது இல்லையேல் அடுத்த 09 மணி நேரவலயத்தைத் தெரிவு செய்யுங்கள். இல்லாவிட்டால் அடுத்து வரும்
நேரவலயங்களைத் தெரிவு செய்யுங்கள்.
ஆனால் பாஸ்போட்டை நீங்கள் நேரடியாகப் பெறச் செல்லும் போது முதலில் வருபவருக்கே முதலில் வழங்குவார்கள்.
10. I had read and agree to this instruction எனும் சொற்றகள் வரும்.
பதிவுகள் எல்லாம் சரியாயின் இப் பதிவுக்கு நான் உடன்படுகிறேன் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு முன்பாக உள்ள பெட்டியில் சரி அடையாளத்தை இடுங்கள்.
அதன் பின்பாக Convert என்ற தெரிவை கிளிக் செய்யுங்கள்.Reset எனும் தெரிவைச் செய்ய வேண்டாம். செய்தால் உங்கள் பதிவுகள் யாவும் அழிந்து திரும்பவும் பதிவு செய்ய வேண்டும்.
11. அதன் பின்னர் உங்களது பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்ட தகவல் டவுண்லோட் செய்யுமாறு வரும். அதனை டவுண் லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஈமெயிலில் சேமித்துக் கொள்ளுங்கள
12. உங்களது கைத்தொலைபேசி இலக்கத்திற்கும் பதிவு இலக்கம் குறுந்தகவலாக வரும். அதனையும் ஒரு துண்டில் எழுதிப் பாதுகாப்பாக வையுங்கள். ;.இத்துடன் யாவும் நிறைவு பெற்று விடும்.
13. ஒருமுறை விண்ணப்பம் செய்து பதிவு அங்கீகரிக்கப்பட்டால் அதில் எந்த வித மாற்றங்களையும் செய்ய முடியாது.
உங்களுக்கென ஒதுக்கப்பட்ட நாள் முடிவடைந்த பின்பே புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். உங்கள் வசதிக்கேற்ற தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.
14. ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்து விட்டு நேரடியாக நீங்கள் சென்று பாஸ்போட்டைப் பெறலாம். எந்தத் தரகரது உதவியும் தேவையில்லை. பாஸ்போட் பெறுவதற்குரிய ஆவணங்களையும் கட்டணத்தையும் கொடுத்து நேரடியாகப் பெற முடியும்.
27/03/2023
இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹாகன பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்துள்ளார்.
மூளை புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் தொடங்கிய புற்று நோயால் அவரது மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹகனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
22/03/2023
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் அமையப்பெற்ற கருங்கற்கோயில் முகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு திருக்குடமுழுக்கும் அதனோடு இணைந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களும் கருங்கற்களில் பொறிக்கப்பெற்ற சிவபூமி திருமந்திர அரண்மனை திறப்பு விழாவும் எதிர்வரும் 24.03.2023 வெள்ளிக்கிழமை பக்தி பூர்வமாக நிகழவுள்ளது.
22/03/2023
21/03/2023 இன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் சோகம் அவர் தன்னுடைய எருமை மாடுகளை காலைக்குள் கட்டி விட்டு அவரது வீட்டுக்கு சென்றபோது காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது இனம் தெரியாத நபரால் இறைச்சிக்கு அதனுடைய காலைக்குள் கட்டப்பட்டிருந்த அந்த முதியான் கன்றுகளை அறுத்து துடிதுடிக்க கொன்று வெறுமனே இறைச்சிக்காக ஒருவரின் வாழ்வாதாரத்தையும் விலங்கின் உயிரையும் இவ்வாறு செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது இவ்வாரானவர்களை இனம் கண்டு இல்லையெனில் இவர்களை யாராவது ஒருவர் கண்டிருந்தால் கட்டாயம் சட்ட நடவடிக்கைகளுக்கு சாட்சி அளிக்க வேண்டும் அந்த மாட்டினை வளர்த்த உரிமையாளருக்கும் அதனை பராமரித்த பண்ணையாளருக்கும் எவ்வளவு வேதனையாக இருக்கும் விலங்குகளை விட மோசமானவன் மனிதநேயமற்ற மனிதன்.
22/03/2023
மழையில்லா பாலைவனத்தில் விவசாயம்!
முற்றத்தில் வீசும் விதைகளும், வேலிக்கு நடும் கம்பமும் முளைத்து மரமாகும் செழிப்பான பூமியில் இருந்துகொண்டு விவசாயத்தின் அருமை புரியாமல் வேலை தேடி அங்கே செல்கிறோம்.
அவர்களோ விவசாயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து, பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு செயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்கள்.
22/03/2023
ஜனாதிபதியின் உரை..
22/03/2023
❤️❤️
22/03/2023
மனிதம் வாழ்கிறது.
22/03/2023
நாட்டு மக்களின் நிலையறியாத அரசியல்..
21/03/2023
கடன் பெற்றதை பட்டாசுவெடியுடன் கொண்டாடும் ஒரே நாடு நம்ம இலங்கை
21/03/2023
பெருமையான ஓர் செயல்...
21/03/2023
Srilanka situation
21/03/2023
Zee super Jodi பிரம்மாண்ட ஒளிப்பதிவு நிகழ்வொன்று இன்று இரவு வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்
21/03/2023
மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்.
குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்.
சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள். அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று உணர்வீர்கள்.
அரசியல்வாதி முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்.
ஆயுள் காப்பீட்டு முகவர் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - இறப்பது நல்லது என உணர்வீர்கள்.
வணிகர்களுக்கு முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.
விஞ்ஞானிகளுக்கு முன்பாக 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள்.
நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள்.
ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.
ஒரு சிப்பாயின் முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால், முடியும் போதெல்லாம் நல்ல நண்பனின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக உணர்வீர்கள்!
சேரும் இடமறிந்து சேர்!! 😊
நல்லதை நினையுங்கள்
நல்லதே நடக்கும்....
21/03/2023
மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.
👉வேப்பமரம். 15' × 15'
👉பனைமரம். 10' × 10'
👉தேக்கு மரம். 10' × 10'
👉மலைவேம்பு மரம். 10' × 10'
👉சந்தன மரம். 15' × 15'
👉வாழை மரம். 8' × 8'
👉தென்னை மரம். 24' × 24'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉பலா மரம். 22' × 22'
👉கொய்யா மரம். 14' × 14'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முந்திரிகை மரம். 14' × 14'
👉முருங்கை மரம். 12' × 12'
👉நாவல் மரம். 30' × 30'
இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!
என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.
#இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்!
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
21/03/2023
என்னவொரு புது டிசைனா இருக்கு 🤣🤣🤣
21/03/2023
சர்வதேச நாணய நிதியம் முதல் 2.9 பில்லியன் டொலர் வழங்குவதாக இருந்த போதும் அதனை 3 பில்லியன் டொலராக அதிகரித்து வழங்கியுள்ளது. இதனை தவணையாக 6 மாதத்திற்கு ஒரு தடவை அல்லது 4 மாதத்துக்கு ஒரு தடவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் புதிய கடனையும், நிலுவைத் தொகையையும் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 4 முதல் 10 வருடங்கள் உள்ளன - சர்வதேச நாணய நிதியம்.
Address
Jaffna
40000
Website
Alerts
Be the first to know and let us send you an email when Cric Ulagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Cric Ulagam:
Videos
Shortcuts
Category
Other Jaffna media companies
-
4000
-
627004
-
jaffna
-
40000
-
Nallur
-
Velanai
-
400000
-
Main Street
-
north