பிரதிலிபி - Pratilipi Tamil

பிரதிலிபி - Pratilipi Tamil தமிழ் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் ஒரு இணைய சுய பதிப்பகம்.
(346)

     நினைவுகள் பின்னோக்கிச் செல்ல கண்ணீர் கரை புரண்டு கன்னத்தில் கடகடவென்று வழிந்தது. சுண்டுவிரலால் கண்ணீரைத்துடைத்தவள் ...
19/06/2024


நினைவுகள் பின்னோக்கிச் செல்ல கண்ணீர் கரை புரண்டு கன்னத்தில் கடகடவென்று வழிந்தது. சுண்டுவிரலால் கண்ணீரைத்துடைத்தவள் அக்கண்ணீரை தரையில் சேரவிடக்கூடாதென்ற வைராக்கியம் கொழுந்து விட்டு நெஞ்செங்கும் தீயாய் பற்றி எரிய முகத்தினை கையில் இருந்த கர்ச்சீப்பால் அழுந்த துடைத்து தன்னை நிதானப்படுத்தி கடந்தகால நினைவுகள் ஏதும் தன்னை பாதிக்கவிடாமல் நிகழ்காலத்திற்குள் புகுந்தாள்.

இனியா தன் பக்கத்து சீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் வயதான அம்மாவை கண்டவள் சற்றே நிம்மதியாய் பாதுகாப்பாய் உணர்ந்தாள் ..அந்த வயதான அம்மாதான் தேனியில் பஸ் கிளம்பியதிலிருந்து கோவை அருகில் பஸ் வரும்வரை தொணதொணவென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு அரைமணிநேரம் முன்னர்தான் தூங்கினார். தூக்கம் வரவில்லை போலும். அவர் இனியாவுடன் பேசிக்கொண்டே பொழுது புலரும் வேளையில் தூங்கிப்போனார். ஆனால் அதற்குள் கோவையே வந்துவிட்டது.

இவர்கள் இருவரும் அப்படி என்னதான் தேனியிலிருந்து கோவை வரை பேசி இருப்பார்கள் ?? இனியாவிற்கு இந்த சின்ன வயதிலேயே வந்த மனக்காயம் தான் என்ன ??
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

இரவின் ஒளியில் மிதக்கும் நிலவை தான் பயணிக்கும் பேருந்தின் கம்பிகளின் வழியே பார்த்து இரசித்துக்கொண்டே வந்தாள....

     நாளைக்கு ஹாஸ்பிடல் போகனும்.காலேஜ்ல லீவ் சொல்லிட்டேன்.நீ பஸ்ல போய்ட்டு வா என்றான்.நானும் வரட்டுமா?இல்ல நீ காலேஜ்க்கு...
19/06/2024


நாளைக்கு ஹாஸ்பிடல் போகனும்.காலேஜ்ல லீவ் சொல்லிட்டேன்.நீ பஸ்ல போய்ட்டு வா என்றான்.

நானும் வரட்டுமா?

இல்ல நீ காலேஜ்க்கு போ நான் பாத்துக்குறேன் என்றான்.

அமுதாவிற்கு பிரபாவும் மதியும் மட்டும் தான் உலகம்.அவர்களுக்காகத்தான் சொந்த ஊரில் உள்ள நிலத்தை விட்டு சென்னைக்கு வந்து வேலைக்கு சேர்ந்தாள்.

இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கிறாள்.தன் பிள்ளைக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வமில்லை.

அவள் கணவனைப் பிரியும் போது பிரபாவிற்கு 9 வயது இருக்கும்.இதுநாள் வரை தந்தை பற்றி ஒரு வார்த்தை கூட பிரபாவும் மதியும் கேட்டதில்லை.

பொழுது விடிந்தது.அம்மா உனக்கு பால் காய்ச்சி பிளாஸ்க்ல ஊத்தி வச்சிருக்கேன் பாரு என்று சொல்லிவிட்டு டேய் அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போடான்னு சொல்லிட்டு காலேஜ்க்கு போனாள்.

மதி வகுப்பிற்கு சென்றதும் இரண்டாவது பென்ச்சில் பார்த்தாள்.புதிதாக ஒருத்தி வந்திருந்தாள்.எதுவும் பேசாமல் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவளும் எதுவும் பேசவில்லை.பிரேக் நேரத்தில் உங்க பேர் என்ன என்றாள் மதி.

அஞ்சனா என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள்.

ரொம்ப திமிர் ...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

இந்த தொடர்கதை கொஞ்சம் விசித்திரமானது தான்.காதல் மட்டும் கலந்தது அல்ல.பல்வேறு ஊடல்களும் உணர்ச்சி கலந்த நிகழ்வ.....

     அழகிய கிராமம், கிராமத்தில் வசிக்கும் கண்ணன் எனும் மாபெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தான்.அவன் வாழ்க்கையில் சேர்த்து வ...
19/06/2024


அழகிய கிராமம், கிராமத்தில் வசிக்கும் கண்ணன் எனும் மாபெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தான்.

அவன் வாழ்க்கையில் சேர்த்து வைத்தது செல்வங்கள் என்றால், பொண்ணோ,பொருள் அல்ல. அன்பான மனைவி, மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இதுதான் அவனுடைய மிகப்பெரிய சொத்துக்கள்.

அழகிய வியாபாரம் செய்யும் தொழில் அது!!!! ஆமாங்க, பிறரின் வயிற்றுப் பசியை ஆற்றும் உணவுக்கடை. ஒரு ரூபாய்க்கு இரண்டு இட்லி ஒரு வடை. மாபெரும் செல்வந்தன் தான் அவன்.

இருந்தும் கண்ணனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு, அது என்னன்னா மது அருந்தும் பழக்கம்.

இதுதாங்க அவர் வாழ்க்கையை தடுமாற வைக்க போகுது.

எவ்வளவு காசு பணம் வந்தாலும் செலவழிக்கும் அந்தப் பழக்கத்தால் அவன் குடும்பத்தின், நிலைதான் என்ன.??
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

தொடர் கதை: அழகிய கிராமம், கிராமத்தில் வசிக்கும் கண்ணன் மேலும் மாபெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தான்..... அவன் வாழ்....

     “ஏன் பெரியப்பா உங்கள  இந்த வேலையெல்லாம் பண்ண சொல்லி யார் சொன்னது.. சின்ன சின்ன வேலைகளை செஞ்சுட்டு கூலி வாங்கிட்டு ப...
19/06/2024


“ஏன் பெரியப்பா உங்கள இந்த வேலையெல்லாம் பண்ண சொல்லி யார் சொன்னது.. சின்ன சின்ன வேலைகளை செஞ்சுட்டு கூலி வாங்கிட்டு போகாம. எதுக்கு இவ்வளவு கஷ்டமா பண்ணிட்டு இருக்கீங்க? “, என்று செங்கல்வராயனை கடிந்து கொள்ளவும் அவன் தவரவில்லை.

“வேலை செஞ்சே பழகிட்ட உடம்புப்பா சும்மா இருக்க முடியல”, அவரும் தன் பங்கிற்கு கூற,

அதற்குள் “அட சேகரு. அங்க என்ன பண்ணிட்டு இருக்க. மேற்பார்வை பாத்துட்டு வரேன்னு வயலுக்குள்ள இறங்கிட்டியா?. சாப்பிட்டு போக சொல்லி எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்கேன்”, என்ற குரலுக்கு சொந்தக்காரி ராஜலட்சுமி. குணசேகரனின் ஒரே தமக்கை. தாய் தந்தையின் மறைவிற்குப் பிறகு அவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவள் தான். தாயுமானவள்.

“இதோ வரேன் அக்கா செத்த நேரம் நீ அங்கேயே உட்காரு”, என்று கூறியவன். தன் வேலையை முடித்துக் கொண்டே வயலில் இருந்து மேலே ஏறினான். அங்கே வயலுக்கு தண்ணிர் பாய்ச்சுவதற்காக இருந்த பம்பு செட்டின் அருகில் சென்றவன். கை கால்களை அலம்பி விட்டு சட்டையை எடுத்து தன் உடம்புக்கு பொருத்திக் கொள்ள ராஜலட்சுமி அங்கு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த பெண்களிடம் கத்திக் கொண்டிருந்தார்.

“வயலுக்கு வந்தோமா வேலையை பார்த்தோமான்னு இருங்கடி. இந்த பக்கம் அந்த பக்கம் கண்ணை வச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா. கண்ணை நோண்டி விடுவேன். ஞாபகம் வச்சுக்கோங்க”, என்று கூறியபடியே தன் தம்பியிடம் வந்தவள்...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

உன் கயல்விழியாள் என்னை மீட்டாதே கயல்விழி 1 உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. கலப்பையை பிடித்து வயலை உ...

     இங்க பாருங்க மிஸ் நிஹாரிக்கா, பணமில்லாம எங்களால ஒன்னுமே பண்ண முடியாது. எங்களால உங்க தம்பியை பணமில்லாம காப்பாத்த முட...
19/06/2024


இங்க பாருங்க மிஸ் நிஹாரிக்கா, பணமில்லாம எங்களால ஒன்னுமே பண்ண முடியாது. எங்களால உங்க தம்பியை பணமில்லாம காப்பாத்த முடியாது அத முதலில் புரிஞ்சிக்கோங்க.

ப்ளீஸ் டாக்டர், அப்படியெல்லாம் சொல்லாதிங்க. டாக்டர் ப்ளீஸ் எப்படியாவது அவன காப்பாத்துங்க ப்ளீஸ். நிஹாரிக்கா கெஞ்சுவதை சிறிதும் கண்டு கொள்ளாமல் போனை வைத்துவிட்டார் டாக்டர்.

அவளுடைய செந்நிற உதடுகள் பயத்தில் துடித்தது. அவளது கால்களானது அசைய மறுத்தது. அவள் என்ன செய்கிறோம் என்பதைக் கூட அறியாமல் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தாள். அவள் அசையாமல் நின்று கொண்டிருந்தாலும் அவள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது.

அவளிடம் இருந்த சிறு நம்பிக்கை கூட இப்போது வெறும் இருளால் சூழப்பட்டு மறைக்கப்பட்டது. அவளுடைய அந்த விலை மதிக்க முடியாத வைரத்தைப் போன்ற ஒளி கொண்ட கண்களில் வாழ்விற்கான நம்பிக்கை என்பது இல்லாமல் போனது.

அவளுக்கு அழகினை வாரி கொடுத்த கடவுள் அவளது வாழ்வையும் சிறிது அழகாக மாற்றி இருக்கலாம். அவளுடைய வாழ்க்கையும் எப்போதும் போல இப்பொழுதும் தன்னுடைய கடுமையான முகத்தை மட்டுமே அவளுக்கு காட்டியது. அவளுடைய தம்பி வெறும் 11 வயது நிரம்பிய சிறுவன். இப்போது ஹாஸ்பிட்டலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

அவனுக்கு உடனடியாக...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

ஹாய் ப்ரெண்ட்ஸ்👋.. இது ஒரு அழகான லவ் ஸ்டோரி, காசில் ஆரம்பித்து காதலில் முடிந்த கதை🥰..படித்துவிட்டு கதை பிடித்தி....

     நேரம் ஆக ஆகப் பதறிய மனதை , முடிந்தளவிற்குத் திடமாக வைத்துக் கொண்டு , கடிகார முள்ளின் இயக்கங்கள் இவனது இதயத்தின் துட...
19/06/2024


நேரம் ஆக ஆகப் பதறிய மனதை , முடிந்தளவிற்குத் திடமாக வைத்துக் கொண்டு , கடிகார முள்ளின் இயக்கங்கள் இவனது இதயத்தின் துடிப்பின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

"வீட்டுக்குச் சீக்கிரமா வா - ன்னு சொன்னா கேக்குறதே கிடையாது. டெய்லி லேட்டாக வர்றதும் வேலையா வச்சுருக்கா ? இப்போ மொபைலும் எடுக்க மாட்டேங்கிறா ? "

இத்தனை புலம்பல்கள் இவனிடம் இருந்து , வந்த வண்ணமே இருக்க , அந்த புலம்பல்களுக்கு மத்தியிலும் அவளுக்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதை மட்டும் அவனது கரங்கள் நிறுத்தவே இல்லை.

" கால் அட்டெண்ட் செய்யக் கூட தோனலயா ? இப்படி இருக்காதடி ! "

தொடர்ந்து முயன்று கொண்டிருந்தவன் , அப்படியே தளர்ந்து சோஃபாவில் அமர்ந்து விட , அவனவளோ இன்னும் கால் அட்டெண்ட் செய்யவில்லை.

" ப்ச்... இவ ஏன் இவ்ளோ பொறுப்பே இல்லாமல் இருக்கா ? "

அவளைக் கடிந்து கொள்ளவும் தவறவில்லை அவன்.

மணமாகி சில நாட்கள் தான் ஆனாலும் , இவர்களுக்குள் தன்னால் வராத புரிதலை , வம்படியாக திணிக்கவா முடியும் ? ஆனாலும் மனைவியின் மேல் அக்கறை கொண்டவனாதலால் , அவளுக்கு எப்போதும் தன்னாலான பாதுகாப்பு உணர்வை வரவைத்துக் கொண்டு தான் இருப்பான்....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

கதைப் பற்றிய அறிமுகம் : குடும்ப நாவல். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல்கள். மனைவியின் கடந்த காலத்தை அறி....

     மாலை ஆறு மணி பொழுது, தன் தோளில் மாட்டி இருந்த கைப்பையை கெட்டியாக பிடித்தபடி பதற்றத்துடன் அந்த சாலையில் நின்று இருந்...
19/06/2024


மாலை ஆறு மணி பொழுது, தன் தோளில் மாட்டி இருந்த கைப்பையை கெட்டியாக பிடித்தபடி பதற்றத்துடன் அந்த சாலையில் நின்று இருந்தவளுக்கு மனதில் பயம் அதிகமாகவே இருக்க தான் செய்தது.

திடீரென கையில் இருந்த அலைப்பேசி சிணுங்க, அடுத்த கணம் எடுத்து தன் காதில் பொருத்தியவள் "அண்ணே எங்கண்ணே இருக்கீங்க? உங்களை வர சொல்லி அரைமணி நேரத்துக்கு மேலே ஆகுது ண்ணா. இப்போவே மணி ஆறு அண்ணா. கொஞ்சம் சீக்கிரம் வாங்க" என்று கெஞ்சும் குரலில் பேசினாள் பனிமலர்.

எதிர்முனையில் இருந்த சண்முகமோ "இதோ வந்துடுறேன்ம்மா. என்னனு தெரியல திடீர்னு இங்கே ஒரே டிராபிக். அதான் லேட்டாகிடுச்சு பாப்பா. நீங்க அங்கேயே நில்லுங்க. வேற எங்கையும் தள்ளி கூட போகாதீங்க. இதோ ஒரு பத்து நிமிசத்துல வந்திடுவேன்" என்று கூறிவிட்டு அழைப்பை வைத்தவர் அடுத்த அரைமணி நேரமாகியும் அவளை தேடி வந்தபாடில்லை.

காத்திருந்தவளுக்கு பயத்தில் வேர்க்க வேறு ஆரம்பித்து விட, தன் பையிலிருந்த கைக்குட்டையை தேடி எடுத்து வியர்வையை ஒற்றி எடுத்தாள்.

அப்பொழுது அவள் அருகில் வந்த இருவரில் ஒருவரோ "ஹலோ மேடம் இந்த அட்ரஸ் எங்கே இருக்கு?" என்று தன் கரத்திலிருந்த காகிதத்தை நீட்டினான்.

பனிமலரோ அதை வாங்கி கூட பார்க்காமல் தலையை திருப்பிக் கொண்டு "எனக்கு தெரியாதுங்க. வேற யார் கிட்டையாவது கேளுங்க" என்றாள்.....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

அத்தியாயம்- 1 மாலை ஆறு மணி பொழுது, தன் தோளில் மாட்டி இருந்த கைப்பையை கெட்டியாக பிடித்தபடி பதற்றத்துடன் அந்த சாலை...

     "அனாமிகா குளிச்சிட்டிருக்கா. நீங்க வருவீங்கன்னு சொன்னா. டீ, காஃபி , ஜூஸ் ? ""இல்ல அம்மா ஒன்னும் வேண்டாம்.நான் வெளில...
19/06/2024


"அனாமிகா குளிச்சிட்டிருக்கா. நீங்க வருவீங்கன்னு சொன்னா. டீ, காஃபி , ஜூஸ் ? "

"இல்ல அம்மா ஒன்னும் வேண்டாம்.நான் வெளில நிக்குறன். ஒரு போன் பேசனும்".

தொடுதிரையை வலிக்காமல் தடவி இரண்டு நாட்களுக்கு முன் வந்த மிஸ்டு காலில் இருந்து ஒரு நம்பரை டையல் செய்தான்.

" நம்பர் ஸ்விட்ச்சிட் ஆஃப். போச்சுடா."

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் அந்த நம்பரில் இருந்து ராஜேஷுக்கு 'I Love You ' என்று மெசேஜ் வந்தது. அதை அனாமிகா பார்த்துவிட்டாள். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரிரு வாரங்கள் தான் ஆகிறது.

14 வருட வனவாச காதல் அது.பட்டாபிஷேகம் செய்வதற்குள், இந்த மெசேஜ். அதை அனாமிகா ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மெலிதாக புன்னகைத்து,

"யாரோ உன் ஃபிரண்ட் விளையாட்றாங்க டா"

என மொபைலை அவனிடமே கொடுத்து விட்டாள்.

ராஜேஷுக்கு மனம் கேட்கவில்லை. அவன் நெஞ்சு குற்றமற்றது. நொடிக்கொரு முறையேனும் அவளை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பான்...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

"அனாமிகா குளிச்சிட்டிருக்கா. நீங்க வருவீங்கன்னு சொன்னா. டீ, காஃபி , ஜூஸ் ? " "இல்ல அம்மா ஒன்னும் வேண்டாம்.நான் வெளில...

     வான் மகளிடம் தன் வழக்கமான உரையை தொடங்குகிறாள் நம் நாயகி.இந்த உலகத்துல இருக்குற ஒவ்வொருவரும் உன்ன ஒவ்வொரு வகையில பயன...
19/06/2024


வான் மகளிடம் தன் வழக்கமான உரையை தொடங்குகிறாள் நம் நாயகி.

இந்த உலகத்துல இருக்குற ஒவ்வொருவரும் உன்ன ஒவ்வொரு வகையில பயன்படுத்திக்குறாங்க இல்ல.

அம்மா குழந்தைக்கு சோறுட்ட உன்னக் காட்சிப் பொருளாவும் காதலர்களுக்கு காதலியின் மறு உருவமாகவும் இயற்கை பிரியர்களுக்கு எழில் ஓவியமாகவும் உன்ன அவங்க இஷ்டத்திற்கு மாத்திகுறாங்க.

அனா உன்னோட உண்மை முகம் என்னனு உனக்காவது ஞாபகம் இருக்கா இல்ல நீயும் மனுசங்க மாதிரி உன்னோட உண்மை முகத்த மறந்து உலா வருகிறாயா?

இங்க பலப் பேர் தன்னோட முகத்த மறைச்சி முக மூடியோட திரியுறாங்க நீயும் அப்பிடிதானா.

சிறிய முறுவல் ஐ உதட்டில் கொண்டு, உன்ன கேக்குற எனக்கே என்னோட உண்மை முகம் தெரியலையே டி (நிலா).

மலர் : ருத்ரா இன்னும் ...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

அதிகாலை 4 மணி அச்சங்கள் உன்னைக் கண்டு அச்சப்பட என்ற பாடல் வரிகளை கைபேசி (மொபைல் போன்) அலற விட அதை அணைத்து விட்டு, .....

     "என்ன மம்மி பார்ட்டிக்கு டைம் ஆகல கிளம்பலையா நீங்க"?"அதுக்கு தான் பேபி, இவங்க என்ன ரெடி பண்ணிட்டு இருக்காங்க நான் ப...
19/06/2024


"என்ன மம்மி பார்ட்டிக்கு டைம் ஆகல கிளம்பலையா நீங்க"?

"அதுக்கு தான் பேபி, இவங்க என்ன ரெடி பண்ணிட்டு இருக்காங்க நான் பார்ட்டி முடிச்சு நைட்டு டின்னரும் முடிச்சிட்டு மிட் நைட் தான் வருவேன் சோ நீயும் பார்ட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடனும் வந்துட்டு மறக்காமல் அம்மாவுக்கு டெக்ஸ்ட் போடணும் ஓகேவா".

கசந்த முருவல் அவள் முகத்தில், காணொம்னா மட்டும் தேடவா போறீங்க என்ற ஆதங்கம் அவள் முருவலில் புதைந்திருந்ததை அந்த ஆடம்பர மம்மி உணரவில்லை.

"ஓகே மம்மி கண்டிப்பாக டெக்ஸ்ட் பண்றேன். அப்பா எங்கம்மா"..

"அவரா எங்க போயிருப்பாரு பிசினஸ் பிசினஸ்னு ஏதாவது பிசினஸ் டீலிங் பார்க்க தான் கிளம்பி இருப்பாரு".

"ஓ அப்பாவ பார்த்தே டூ டேஸ் ஆச்சுமா அதான் கேட்டேன்.."

"கமான் பேபி என்ன அப்பாவ பாக்கணும் ஆட்டுக்குட்டி பாக்கணும்னு. நீ இன்னும் கிட் இல்ல. உனக்கு வேணும்னா வீடியோ கால் பண்ணு அதுல ஃப்ரீயா இருந்தா உனக்கு ரெஸ்பான்ஸ் பண்ண போறாரு. நான் அவர பார்த்து ஒன் வீக் மேல் ஆச்சு வாட் வில் வீ டூ??? பிஸி செடியூல்".

மகளிடம் பேசுகிறோம் என்ற பாசமும் இல்லை பறிவும் இல்லை அவர் நுனி நாக்கில் ஆங்கிலம் தான் சரமாரியாக விளையாடிக் கொண்டிருந்தது.

"பேபி என்ன டிரஸ் இது?
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

கோபிக்கும் போதெல்லாம் முத்தம் கொடுப்பவன் அவன். நோயென்றே ஊர் நினைக்க. எல்லாமும் நீயென்றே அவள் நினைக்க. அவன் வில.....

     நாயகி தீடிரென்று நாயகனை எதிர்பாரத விதமாக திருமணம் செய்து கொள்கிறாள்.நாயகன் தந்தையின் கட்டாயத்தால் நாயகியை மணமுடிக்க...
19/06/2024


நாயகி தீடிரென்று நாயகனை எதிர்பாரத விதமாக திருமணம் செய்து கொள்கிறாள்.நாயகன் தந்தையின் கட்டாயத்தால் நாயகியை மணமுடிக்கிறான். இருவருக்குமே விருப்பம் இல்லாத இந்த பந்தத்தில் ஒப்பந்தம் போட்டு அதன்படி பிரிந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதன்படி நடந்ததா இல்லையா என்பதே கதை....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

வாழ்க்கை பயணம் காலையில் மிகுந்த ப ...

     நாலு பேரும் நாலு கேரக்டர்ன்றத விட நாலு உலகம்னு சொல்லலாம் அந்த அளவுக்கு வேற வேற வித்தியாசமான குணங்கள் இருக்கிற பெண்க...
18/06/2024


நாலு பேரும் நாலு கேரக்டர்ன்றத விட நாலு உலகம்னு சொல்லலாம் அந்த அளவுக்கு வேற வேற வித்தியாசமான குணங்கள் இருக்கிற பெண்கள்.

இதுல ஹரிணி யாழினி மட்டும் சொந்தக்கார பொண்ணுங்க பெரியப்பா பொண்ணு சித்தப்பா பொண்ணு அந்த மாதிரி.யாழினி பெரியவ ஹரிணி சின்னவ அப்புறம் நம்ம தன்விகா கிழக்கு திசை நம்ம பிரணவி மேற்கு திசை என்ன திசையை சொல்றேன்னு பாக்குறீங்களா அவங்க இருக்கிற இடமும் அவங்களோட குணமும் அப்படித்தான்.

வேற வேற திசையில் இருக்கிறவங்கள ஒண்ணா சேர்த்தது அந்த காலேஜ் படிப்பு தான்.அது மட்டும் இல்ல அவங்க ஹாஸ்டல்லையும் பக்கத்து பக்கத்து ரூம்தான். ஒரே ஹாஸ்டல் பட் இருந்தாலும் பேச்சுவார்த்தை அவ்வளவா இல்ல.....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க???? நான் ரொம்ப நல்லா இருக்கேன்... இது என்னோட அடுத்த முயற்சி இந்த கதைக்க...

     ஒரு கிராமம் அந்த கிராமத்தில், ருக்குமணி ரவி தம்பதியருக்கு மகளாக பிறந்தவள் தான் தாரணி.தாரணி பெயருக்கு ஏற்ற , தாராள ம...
18/06/2024


ஒரு கிராமம் அந்த கிராமத்தில், ருக்குமணி ரவி தம்பதியருக்கு மகளாக பிறந்தவள் தான் தாரணி.

தாரணி பெயருக்கு ஏற்ற , தாராள மனதுடையவள் தான் அவள் அப்படி ஒரு பேரழகி.

அவளை பார்த்து அந்த கிராமத்தில் மயங்காத ஆட்களே கிடையாது என்று பாருங்களேன்.

அவளின் பின்னால் சிறுசில் இருந்து பெரியவங்க வரைக்கும் அவள் பின்னால் அவள் அழகில் மயங்கி, மகுனிக்கு மயங்கிய பாம்பு போல் மயங்கி அழைவார்கள்.

அவள் இந்திரலோகத்து தேவதை தான், ஆனால் அவள் தேவதையாக பிறந்து தேவதையாகவே வாழ்கிறாளா தாசியாக வாழ்கிறாளா என்பதை தான் இந்த கதையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

ஒரு கிராமம் அந்த கிராமத்தில், ருக்குமணி ரவி தம்பதியருக்கு மகளாக பிறந்தவள் தான் தாரணி ; தாரணி பெயருக்கு ஏற்ற , தா.....

     "இப்ப வே உன்ன பாக்கணும் டி" என்ன பொய் சொல்வியோ நேக்கு தெரியாது உடனே புறப்பட்டு "மாந்தோப்புக்கு வா. ரவி அழைக்க."காதல...
18/06/2024


"இப்ப வே உன்ன பாக்கணும் டி" என்ன பொய் சொல்வியோ நேக்கு தெரியாது உடனே புறப்பட்டு "மாந்தோப்புக்கு வா. ரவி அழைக்க.

"காதலில் மட்டும் விழவே கூடாதுப்பா. சே... நினைச்சப்ப பாக்கணும் , கால் பண்ணா எடுக்கணும். மெசேஜ் பண்ணா ரிப்ளே பண்ணணும். காலையில் குட்மானிங் இரவு குட்நைட். ஒரே டார்ச்சர். முடியல. இப்ப என்ன பொய் சொல்றது. மனதில் ரவியை திட்டியபடியே தீபா அம்மாவிடம் வந்தாள்.

"யம்மா. நான் நம்ம நந்தினி வீடுவரைக்கும் போயிட்டு வரேன் மா. என்று பின்புறமாய் அம்மாவை கட்டி பிடிக்க,

"அடியேய்... அப்படி அப்படியே துன்னுட்டு போட்ட பாத்திரம் ஒன்னு கூட விளக்கி வக்கலை, வீடு வாசல் . பெருக்கலை, துணி எடுத்து மடிச்சு வக்கல. ஒரு வேலை செய்யல. இப்ப ஊரை மேய போவணுமா....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

காதல் காதல் காதல்... இது எப்பவும் சலிக்க வே சலிக்காது... மென்மையான, ரொம்மன்ஸ் கொண்ட அழகான காதல் கதை.. 💃🕺💃🕺💃🕺💃🕺💃🕺...

     ஹரியும் பிரியாவும் ஒரே கார்பொரேட் கம்பெனியில் ஒன்றாக பணி புரியும் காதலர்கள் .அவர்களின் காதல் யாருக்கும் தெரியாத நில...
18/06/2024


ஹரியும் பிரியாவும் ஒரே கார்பொரேட் கம்பெனியில் ஒன்றாக பணி புரியும் காதலர்கள் .

அவர்களின் காதல் யாருக்கும் தெரியாத நிலையில், அந்த கார்பொரேட் கம்பெனி முதலாளி அவள் மேல் ஒரு தலையாக காதல் பார்வை வீச, அவரை தன் வலையில் சிக்க வைக்க திட்டம் தீட்டுக்கிறார்கள்.

இதிட்டத்தில் ஜெயிப்பவர் பிரியா ஹரியா??. இவர்கள் வலையில் சிக்க போவது முதலாளியா??.

இல்லை மண்ணை கவ்வப்போவது காதல் ஜோடியா???. இந்த ceo love part முக்கோண காதலில் என்ன நடக்க போகிறது...??
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

என்ன ஹரி? நீயே என்ன வர சொன்னது நல்லதா போச்சு. நானும் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னுதான் நினைச்சேன். நம்ம love❤️ யா....

     மெய்நிகர் நின் காதலே..!நாயகன் : யுவனிதன், மதியன்,நாயகி : பல்லவி, ஜோஷனா.கரு : மனம் கொய்த கள்வன் தனக்கு கொடுத்த பரிசர...
18/06/2024


மெய்நிகர் நின் காதலே..!

நாயகன் : யுவனிதன், மதியன்,

நாயகி : பல்லவி, ஜோஷனா.

கரு : மனம் கொய்த கள்வன் தனக்கு கொடுத்த பரிசரிளிப்பினை மனதிற்க்குள்ளே மருக வைத்து படும் இன்பம் துன்பம் நிறைந்த காதல். குழப்பத்தால் மொட்டவிழிந்து முளைக்கும் காதல். செய்த குற்றவுணர்வினை தாங்க முடியாது தவிக்கும் காதல். உறவின் மீது இருக்கும் மதிப்பினால் விளையும் காதல். இப்படி இவர்களின் மெய்நிகாரான நின் காதலே இக்கதை..!

அத்தியாயம் : 1

மாநகரமோ, நகரமோ ஏதாவது இருந்தாலும் என்ன இன்றைய காலகட்டத்தில் எப்போது பரபரப்பு மட்டுமே நிறைத்திருக்கும் இந்த உலகத்தில். மனிதர்களுக்கு இடையில் மட்டுமா பரபரப்பு ஆர்பரிக்கும் கடல்களின் அலைகளில் ஏன் பறக்கும் பறைவகளில் கூட ஒரு வேகம் தான்.

விழிகளை திறந்தால் போதும் எங்கும் வாகனம் மட்டுமே..! உயர்ந்தவர்கள் என்ன நடுத்தர குடும்பத்தில் கூட ஒரு சிறிய பைக்காவது இருக்கும். அப்படி அங்குமிங்கும் சென்று செவியை பிளக்கும் ஒலியைக் கேட்டே அனைவரும் வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கின்றனர். எப்போது தான் அமைதி என்ற ஒரு உணர்வினை செவிகள் கேட்கும்..?

அரை மணி நேரமாக கீ...கீ..கீ... என்று ஒலிக்கும் வாகனங்களின் ஓசையை கேட்டுக் கொண்டு, இதில் வெயிலில் தாக்கம் வேறு வியர்வை துளி பூக்க வைக்க ஒரு வழியாக மருத்துவமனை ஒன்றின் முன் தன் பைக்கினை நிறுத்தினான் மதியன்.

“பல்லவி..! பல்லவி..! ஹாஸ்பிட்டல் வந்திருச்சிம்மா....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

மெய்நிகர் நின் காதலே..! நாயகன் : யுவனிதன், மதியன், நாயகி : பல்லவி, ஜோஷனா. கரு : மனம் கொய்த கள்வன் தனக்கு கொடுத்த பரிசர.....

     ஒரு வெற்றிகரமான எம் என் சி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் கோடீஸ்வரனான விக்ரமதேவன் காதல், கல்யாணம், அன்பு, பாசம்,  பெண்கள...
18/06/2024


ஒரு வெற்றிகரமான எம் என் சி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் கோடீஸ்வரனான விக்ரமதேவன் காதல், கல்யாணம், அன்பு, பாசம், பெண்கள் மீது நம்பிக்கை இல்லாத 28 வயது இளைஞன். பணத்தினாலே அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நம்புபவன்.

அன்பு, பாசம், காதல், கல்யாணம் நம்பிக்கை அடிப்படையில் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நம்பிக்கையோடு அவனைத் தேடி வரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 21 வயது உடைய பூவிதழி.

பூவிதழியின் காதலை விக்ரமதேவன் ஏற்பானா ? அல்லது விக்ரமதேவனின் பண திமிரில் பூவிதழியின் நம்பிக்கை உடைபடுமா?
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

ஒரு வெற்றிகரமான எம் என் சி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் கோடீஸ்வரனான விக்ரமதேவன் காதல், கல்யாணம், அன்பு, பாசம், பெண்...

     "இது தான் உன்னோட முடிவா?" அழுத்தமாக குரல் உயர்த்தி கேட்டார் அன்பு செல்வியின் அம்மா சங்கரி."ஆமாம். இதில் எந்த மாற்றம...
18/06/2024


"இது தான் உன்னோட முடிவா?" அழுத்தமாக குரல் உயர்த்தி கேட்டார் அன்பு செல்வியின் அம்மா சங்கரி.

"ஆமாம். இதில் எந்த மாற்றமும் இல்லை" செல்வியும் சற்று கோபமாகவே பதில் அளித்தாள்.

சட்டென்று அவளின் பின்னலை பற்றி இழுத்து "பளாரென்று " அவளின் கன்னத்தில் அறைந்தார் சங்கரி.

"என் கிட்டயே இவ்வளவு திமிரா பேச எங்கடி கத்துகிட்ட?" கோபம் குறையாமல் செல்வியை மீண்டும். அறைந்தார்.

கண்ணீரோடு கன்னத்தை அழுந்த துடைத்துக் கொண்டே செல்வி தன் அம்மாவை பார்த்து சொன்னாள்.

"நான் உன்னோட பொண்ணு. உன் திமிருல பாதியாவது எனக்கு இருக்க வேணாமா?"

நெருப்பின் மேல் நீர் தெளித்தது போல் சங்கரியின் கோபம் உடனே அணைந்தது.....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

பிரதி லிபி படைப்பாளிகள் திட்டம் "இது தான் உன்னோட முடிவா?" அழுத்தமாக குரல் உயர்த்தி கேட்டார் அன்பு செல்வியின் அம....

     அதிகாலை நேரம் பொழுது புலரும் முன் வீட்டின் வாசலில் கோலம் இட்டு மூன்று பர்னர் கேஸ் ஸ்டவ் ல் ஒன்றில் காபி போட பால் வை...
18/06/2024


அதிகாலை நேரம் பொழுது புலரும் முன் வீட்டின் வாசலில் கோலம் இட்டு மூன்று பர்னர் கேஸ் ஸ்டவ் ல் ஒன்றில் காபி போட பால் வைத்து, மன்றொன்றில் உலை வைத்து, மீதம் இருக்கும், ஒன்றில் குழம்பு வைக்க தயார் செய்து கூடவே, வாஷிங் மெஷினில் துணியை போட்டு பம்பரமாக சுற்றி கொண்டிருந்தாள் அவள்.

அவ்வீட்டில் மூன்று பெண்கள் இருப்பினும் அனைத்து வேலைகளையும் ஒற்றை ஆளாக செய்ய வேண்டிய கட்டாயம்.

காரணம் அங்கு உள்ள ஒரு பெண்மணியை பொறுத்த வரை இவள் ஒரு சம்பளம் இல்லா வேலைக்காரி. மற்றவளுக்கு அந்த எண்ணம் இருப்பினும் தனது வேலைகளை தானே செய்ய இயலாமல் மற்றவர்களை துணைக்கு அழைக்கும் மாம்ஸ் லிட்டில் குயின் என்று பெருமை பீத்திக்கொள்ளும் ஒரு ஜீவன்.

இப்படி பட்டவர்களிடம் சென்று எவ்வாறு அவளும் தனக்கு வேலைகளில் சிறிது உதவுங்கள் என்று கேட்பாள். அதனாலேயே எவரின் துணையும் இன்றி தன் கையை தனக்கு உதவி என்ற பழமொழிக்கு ஏற்ப வேலைகளை செய்ய பழகி விட்டாள்.

அம்மாடி நியூஸ் பேப்பர் வந்துருச்சாம்மா ?. என கேட்டு கொண்டே அவள் மாமனார் குளித்து முடித்து நெற்றியில் பட்டையோடு மஞ்சள் நிற சட்டையும் வெள்ளை வேஷ்டி அணிந்து கொண்டு வந்தார் ஈஸ்வரன்....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

ஏங்குகின்றேன் உன் முகம் காண அதிகாலை நேரம் பொழுது புலரும் முன் வீட்டின் வாசலில் கோலம் இட்டு மூன்று பர்னர் கேஸ் .....

     " இதுதான் உங்க முடிவா வாசு? என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வான் தவறு முழுக்க அவன் மேல் அல்லவா." நான் பன்னது ...
18/06/2024


" இதுதான் உங்க முடிவா வாசு? என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வான் தவறு முழுக்க அவன் மேல் அல்லவா.

" நான் பன்னது தப்புன்னு எனக்கு தோனல ரோஸ்.

" இது என் வாழ்க்கை அத என் ஆசைப்படி வாழணும்னு நினைக்கிறேன் இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்கு புரியல " என்று கொஞ்சமும் தான் செய்ய இருக்கும் பாவச்செயலை உணராதவன் பேச,

இருள் சூழ்ந்த அந்த இரவு நேரத்து வானத்தை வெறுமையாய் பார்த்தவள் ஓரே ஒரு கேள்விதான் கேட்டாள்.

" அப்போ பாப்பாவ... என்று முழுதாய் கூறும் முன்னே அவனே ஓர் காகிதத்தை அவள் முன் நீட்டி....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

" இதுதான் உங்க முடிவா வாசு? என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வான் தவறு முழுக்க அவன் மேல் அல்லவா. " நான் பன்னத.....

     குணாவும் அவனுடைய மனைவியும் தனபாலை நன்றாக கவனித்துக் கொண்டனர். ஆனால் அடுத்த வருடத்தில் அமெரிக்காவில் அவர்களுக்கு மேற...
18/06/2024


குணாவும் அவனுடைய மனைவியும் தனபாலை நன்றாக கவனித்துக் கொண்டனர். ஆனால் அடுத்த வருடத்தில் அமெரிக்காவில் அவர்களுக்கு மேற்படிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் அங்கே செல்ல விரும்பினர்.

குணா வந்து தங்களுடைய விருப்பத்தை தனபாலிடம் சொன்ன போது அவர் மறுப்பாக எதுவும் சொல்ல வில்லை.

அவருக்கு தெரியும். இது தனது மகனுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. தன் பொருட்டு அந்த வாய்ப்பை மகன் நழுவ விட்டு விடக்கூடாது என்று நினைத்தார். அதனால் எந்த ஒரு தயக்கமும் இன்றி மகனை வெளிநாட்டுக்கு செல்ல சம்மதித்தார்.

மகன் கிளம்பி செல்லும் வரை தனபாலுக்கு மனதில் எந்தவித கிலேசமும் இல்லை. மகனை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்து விட்டு திரும்பிய பிறகுதான் தான் தனிமரமாகி விட்டோம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

அந்த சென்னை விமான நிலையத்தில் அதிகாலை நேரத்தில் மகனை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பி வீட்டிற்கு வரும் போது அவரது எண்ணங்கள் அலைபாய தொடங்கியது.

இதுவரை அவர் தனிமையாக வீட்டில் இருந்தது இல்லை என்றே சொல்லலாம். அப்படியே இருந்தாலும் கூட அது தன்னுடைய மனைவியின் இறப்புக்கு பிறகுதான் இருந்திருக்க வேண்டும்.

அப்படி தனிமையில் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டால் கூட அவருக்கு வேண்டிய உணவு வகைகளை தயாரித்து வைத்து விட்டுத்தான் செல்வார்கள். அதனால் அவருக்கு எந்த வித சிரமமும் இருந்தது இல்லை.

ஆனால் இனி அப்படி இல்லையே. அவருக்கு வேண்டியவற்றை அவர் தானே செய்து கொள்ள வேண்டும்.
அதை நினைக்கும் போதே அவருக்கு கலக்கமாகி விட்டது. அவர் அதிகமாக தன்னுடைய வேலைகளை செய்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

விடுமுறை ...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

பகுதி 01 இனி இதுதான் தனபால் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருடைய மனைவி மல்லிகா அரசு பள்ளியில் ஆசிரியையாக இருந்த.....

     “நிறுத்து... நிறுத்து மியா பேபி! ஏன் உனக்கு இந்த கொலைவெறி? நம்ம ரூலர் எப்படின்னு உனக்கே நல்லா தெரியும். நான் நிம்மத...
18/06/2024


“நிறுத்து... நிறுத்து மியா பேபி! ஏன் உனக்கு இந்த கொலைவெறி? நம்ம ரூலர் எப்படின்னு உனக்கே நல்லா தெரியும். நான் நிம்மதியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நான் போகமாட்டேன் நீயும் போகாதே!” என்று அவளின் வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

இவர்கள் இருவரும் இப்படி பயந்து பின்னடைந்து அலறும் நபர் அதிபயங்கர ராட்சசனோ என்று நினைத்தால் அதுதான் தவறு!

மகாகணம் பொருந்திய... ராஜாதிராஜ, ராஜ மார்த்தாண்ட... இன்னும் சிலபல பராக்கிரம பட்டங்களை அவனுக்கு சூட்டி விடலாம். அத்தனைக்கும் ஏகமாய் பொருந்திப் போவான்... அப்படியொரு கறார், ஆளுமையான பேர்வழி... அவன் தான் அசிஸ்டென்ட் கமிஷனர் திருமாறன்.

தற்போது குற்றவாளியை துரத்திப் பிடிக்க போய், பயங்கரமாய் அடிபட்டு கையில் கட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். “என் சர்வீஸ்ல பார்க்காத கேஸா?” என்று மார்தட்டிக் கொண்டு உடலெங்கும் வீரத்தழும்புகளை விருதுகளாக வாங்கிக் கொள்பவன்.

இவன் பிடிக்கப் போன குற்றவாளியை பற்றிய கவலைகளை என்றைக்கும் பிறருக்கு விட்டு வைப்பதில்லை. அவன் முழுதாய் ஓய்ந்து போகும்வரை நன்றாகவே கவனித்து நையப்புடைத்து அனுப்பி விடுவான். இவனால் பிடிபட்ட குற்றவாளி இப்போது எமனுடன் டீல் பேசிக்கொண்டு இருப்பான். ‘எனக்கு ...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

நான் உன் அன்பே...1 தோட்டத்தில் பனிமூடிய ரோஜாக்கள் இளங்காலைப் பொழுதில் உடல் சிலிர்த்து தங்கள் மீது இருந்த பனித்த....

     தேனு என்று செல்லமாக அழைக்கப் படும்  தேன் மொழிக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டி கீரனூர் என்றகிராமத்து  வேதவிநாயகம் வ...
18/06/2024


தேனு என்று செல்லமாக அழைக்கப் படும் தேன் மொழிக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டி கீரனூர் என்ற
கிராமத்து வேதவிநாயகம் வீட்டிலே தட புடலாக எல்லா ஏற்பாடுகளும் மிக பிரமாதமாக நடந்து கொண்டு இருந்தது .

ஐந்து நாட்கள் மட்டுமே கல்யாணத் திற்கு இருக்க , அன்று அதிகாலை , மேள தாளத்தோடு ஐயர் மந்திரங்கள் ஓத சொந்த பந்தங்கள் புடை சூழ ஐந்தாங்கால் பந்தக்கால் நடப்பட்டது .

அந்த தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் கூட அடுப்பு மூட்டி சமையல் செய்யாத அளவிற்கு கல்யாண வீட்டிலேயே குழந்தை குட்டி, முதல் பெரியவர்கள் வரை காலை, மாலை சிற்றுண்டியும் காஃபி முதற்கொண்டு மூன்று வேளை உணவுகளும் தேனு வீட்டிலே வேலை ஆட்களோடு டைனிங் டேபிளில் பரிமாறப்பட்டது .

சுற்றம் சூழ , கலகலப்பாக சந்தோஷம் பொங்க ஆர்பாட்டம், அமர்க்களமான முறையில் விருந்தும்,அதே போல் காலை ,மாலை கல்யாண பெண்ணுக்கு நலங்கும் வைத்து விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்று ,பெண்கள் தங்க ளுக்குள் ரகசியமாக தேனுவை பற்றி கதை பேசி கொண்டு இருந்தார்கள்....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

தேனு என்று செல்லமாக அழைக்கப் படும் தேன் மொழிக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டி கீரனூர் என்ற கிராமத்து வேத விநாய...

     காரின் டிரைவர் சீட்டிலிருந்து கண்ணில் கூலருடன் சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறத்தில் பாலிவுட் ஹீரோக்களை போல  சிவந்...
17/06/2024


காரின் டிரைவர் சீட்டிலிருந்து கண்ணில் கூலருடன் சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறத்தில் பாலிவுட் ஹீரோக்களை போல சிவந்த நிறத்தில் ஒருவன் இறங்கி வர அவளைப் பார்த்து அதிர்ந்து விழி விரித்துப் பார்த்தாள் மது.

அவனோ இயல்பாக அவளின் அருகில் வந்து ஹாய் மதுரா உன்னோட பாப்பாவா என்று கேட்டான்.

மது‌ ஆம் என்று தலையசைக்க

சோ கியூட் என்றான் அவன்.

இங்க?

தம்பிக்கு வேக்சின் போட வந்தோம். இனி வீட்டுக்கு போகணும் என்று வார்த்தைகளை எண்ணி எண்ணி பதில் கூறிக் கொண்டிருந்தாள் மது.

நான் டிராப் பண்ணவா மதுரா?

நோ தேங்க்ஸ் நான் ஆட்டோல போய்க்கிறேன் மித் என்று ஆரம்பித்து விட்டு ஹர்ஷா என்று முடித்தாள்.

அதில் அவன் இதழ்களில் லேசாக புன்னகை அரும்ப தன்னையே திட்டிக் கொண்டாள் மது.

அவனும் மது உடனே நின்று கொண்டிருந்தான்.

நீங்க கிளம்புங்க ஹர்ஷா நான் பாத்துக்குறேன் என்று மது அவனை அனுப்பி வைக்க முயல

பரவால்ல இருக்கட்டும் நீ கிளம்புனதுக்கு அப்புறம் நான் போறேன் என்று அவளுடனே நின்று கொண்டான் ஹர்ஷா.

அரை மணி நேரம் ஆகியும் ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை குழந்தையும் மேலும் சிணுங்க ஆரம்பிக்க

ஏன் பிடிவாதம் பிடிக்கிற மதுரா நான் தான் வீட்ல டிராப் பண்றேன்னு சொல்றேன்ல பாரு குட்டிபையன் ...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

பார்வை -1 பெங்களூர். பெங்களூருவின் பிரதான சாலையில் இருந்த மணிக்கூண்டில் நேரம் காலை ஒன்பது மணி என்று காட்டியது . .....

17/06/2024


# #

அதே சிரிப்பினூடே அவள் தெளிவாக சொன்னாள். ”உன்னோடு இப்படி இயல்பாக பேசி சிரிப்பது நன்றாக இருக்கிறது ஜெகன். ஆனால் இந்த கல்யாணம் அது இது என்று நீ வம்பு பண்ணும் போது தான் எரிச்சலாக இருக்கிறது”

“இதெல்லாம் இல்லாமல் கூட இருக்க முடியும். ஆனால் கல்யாணம் இல்லாமல் இருவரும் சேர்ந்து இருக்க முடியாதே. நான் எப்போதுமே காரியத்தில் கண்ணாக இருப்பவன் மை டியர்”

# # # # #

“உனக்குத் தெரியுமா கைவிரல்களுக்கிடையே இடைவெளி எதற்கு இருக்கிறது என்று? அந்த இடைவெளியில் என் விரல்கள் பற்றிக் கொண்டு உன் உடன் நடந்து வருவதற்காகத் தான். இப்போது மட்டுமல்ல. காலம் முழுதும்.....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

If you are the developer of this app, ensure that your Dynamic Links domain is correctly configured and that the path component of this URL is valid.

     அது ஒரு காலைப் பொழுது ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு வீட்டின் முன்பு கூடி நடப்பதை பார்த்து தங்களுக்குள் கிசு கிசுத்...
17/06/2024


அது ஒரு காலைப் பொழுது ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு வீட்டின் முன்பு கூடி நடப்பதை பார்த்து தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு நடுத்தர ஆணும், பெண்ணும் வீட்டிற்கு வெளியே அழுது கொண்டிருக்க தன் பெற்றோர்கள் அழுவதைப் பார்த்து அவர்களின் சிறு குழந்தைகளும் அழுதனர். அவர்களின் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து சில அடி ஆட்கள் எடுத்து வெளியே போட்டுக் கொண்டிருந்தனர். " டேய் தல வர போறாரு டா சீக்கிரம் எல்லா பொருளையும் தூக்கி வெளிய போட்டு வீட்ட பூட்டுங்க டா "என்று அந்த அடியாட்களில் ஒருவன் கத்தினான்.

" ஏங்க இப்படி பண்றீங்க? நான் பணத்தை கண்டிப்பா சீக்கிரமே திருப்பிக் கொடுத்துறேன். பொருளை எல்லாம் வெளியே எடுத்து போடாதீங்க " என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் அடியாளிடம் அழுகையோடு கேட்க " ஏய் இங்க பாரு, என் கிட்ட ஏன் இதுலாம் சொல்லீட்டு இருக்க. எங்க தல செய்ய சொன்ன வேலையை நாங்க செய்றோம். நீ எதுவா இருந்தாலும் எங்க தலை கிட்ட பேசிக்கோ போ " என்ற அடியாளை அழுது கெஞ்சினார்கள் அந்த தம்பதியர்....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

இது ஒரு 18 + கதை... கதையில் சில முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள், வார்த்தைகள் நிறைய வரும்... கதைக்கு தேவை அதனால எழுதிய...

     ராமச்சந்திரனின் தம்பி தேவச்சந்திரன். தமையன் சொல்லலை தட்டாத தம்பி. தமையன் என்ன சொன்னாலும் அதை செய்து விட்டே மறு பேச்...
17/06/2024


ராமச்சந்திரனின் தம்பி தேவச்சந்திரன். தமையன் சொல்லலை தட்டாத தம்பி. தமையன் என்ன சொன்னாலும் அதை செய்து விட்டே மறு பேச்சு பேசுவார். இவருக்கு குணவதியின் தங்கையான நேசமதியை திருமணம் செய்து வைத்தனர். இவரும் குணவதியை போன்றே அனைவருடனும் அன்பாக இருப்பார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன். பெயர் காளையன். இவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, செய்யாத தவறுக்காக வாத்தியார் அடித்தார். அன்றுடன் பள்ளிக்கூடத்திற்கு ஒரே முழுக்கு போட்டு விட்டான்.

யார் சொல்லியும் கேட்கவில்லை. கல்வி அறிவை விட அனுபவ அறிவு அவனுக்கு அதிகம். சிலம்பாட்டம், குத்துச் சண்டை என அத்தனையும் அத்துப்படி. மிகவும் பாசமானவன். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது மிகவும் பாசமானவன். அதே நேரத்தில் மிகவும் கோபக்காரன். குடும்பத்திற்கு ஒன்று என்றால் துடித்து விடுவான். அவனது கோபத்தை இதுவரை வீட்டில் உள்ளோர் பார்த்தது இல்லை.

வீட்டிலுள்ளோர் என்ன சொன்னாலும் கேட்பான். செய்வான். அவன் இதுவரை அவர்கள் கேட்டு செய்யாதது படிக்காதது மட்டுமே. ரைஸ் மில், தோட்டம், வயல், சக்கரை மில் என அனைத்திலும் பெரியப்பாவிற்கும், அப்பாவிற்கும் உதவியாக இருப்பான்.

பெருந்தேவனார், ...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

கிராமத்திலே வாழ்ந்த ஹீரோ.. பிறந்தது முதல் நகர வாழ்க்கையை வாழும் ஹீரோயின்.. இறுக்கமான ஹீரோயின் மென்மையான ஹீரோ.. எ.....

     பேருந்தை விட்டு இறங்கியதுமே சில்லென்ற காற்று மேனியை தழுவ  நிம்மதியை உணர்ந்தாள்  நகுலா. கையிலிருந்த பெட்டியை கீழே வை...
17/06/2024


பேருந்தை விட்டு இறங்கியதுமே சில்லென்ற காற்று மேனியை தழுவ நிம்மதியை உணர்ந்தாள் நகுலா. கையிலிருந்த பெட்டியை கீழே வைத்து விட்டு. அங்கிருந்த. அரசமரத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.

இது நாலு வழி கூடும் இடம். இந்த இடத்தில் ஒரு அரச மரமும் அதனடியில் ஒரு பிள்ளையாரும் எப்பொழுதும் அதன் மேடையில் பேருந்திற்க்காக காத்திருக்கும் ஆட்களும் மாறாத காட்சிகள்.

தோள் பையை மாற்றி மாட்டியவள் தன் தம்பியின் வருகைக்காக அந்த மேடையில் போய் அமர்ந்தாள்.

நான்கு திசையில் தெற்கே இவள் ஊராகிய முல்லையூருக்கு போகும் வழி. கிழக்கே காவலூர் செல்லும் முக்கிய வழி.

வடக்கே அவள் இறங்கி நிற்கும் ஊராகிய தேவ புரத்தை ஒட்டிய மலைக்காட்டிற்கு போகும் வழி. அந்த மலையில் ஒரு சிறு முருகர் கோயில் உள்ளது.

திருட்டுத்தனமாக காதல் கல்யாணம் செய்பவர்களுக்காகவே அந்த முருகன் காத்து நிற்பது போல அந்த மலை. ஆடிக்கிருத்திகைக்கு மட்டுமே மற்றவர்களுக்கு முருகனின் நினைவு வரும்...
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்

பேருந்தை விட்டு இறங்கியதுமே சில்லென்ற காற்று மேனியை தழுவ நிம்மதியை உணர்ந்தாள் நகுலா. கையிலிருந்த பெட்டியை கீ.....

Address

Nasadiya Technologies Private Limited, Sona Towers, 4th Floor, No. 2, 26, 27 And 3, Krishna Nagar Industrial Area, Hosur Main Road
Bangalore
560029

Alerts

Be the first to know and let us send you an email when பிரதிலிபி - Pratilipi Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பிரதிலிபி - Pratilipi Tamil:

Videos

Share

பிரதிலிபி தமிழ் குழுவிற்கு வரவேற்கிறோம்.

வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வணக்கம்,

பிரதிலிபி தமிழ் குழுவிற்கு வரவேற்கிறோம்.

பிரதிலிபி இந்தியாவின் மிகப்பெரிய கதைசொல்லும் தளம். பிரதிலிபி செயலி அல்லது தளம் உபயோகித்து உங்களது படைப்புகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் இங்கே இலவசமாக பதிப்பிக்க இயலும். அதேபோல் 12 இந்திய மொழிகளில் இலவசமாக படைப்புகள் வாசிக்க இயலும்.

மொத்தம்12 மொழிகளில், 300,000+ எழுத்தாளர்கள் மற்றும் 25,000,000+ மாதாந்திர வாசகர்கள் பிரதிலிபி இலக்கிய செயலியை உபயோகிக்கிறார்கள். இங்கே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, உருது, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் இயலும். மற்ற இந்திய மொழிகளிலும் கூடிய விரைவில் பிரதிலிபி கால்பதிக்கும்.

Nearby media companies


Other Bangalore media companies

Show All