Jaffna Vikatan

Jaffna Vikatan தமிழே ❤️

28/03/2024

ஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம் 2024.

வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்.
26/03/2024

வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்.

👉 அதிகம் பகிருங்கள் 🔴மூளைச்சாவு அடைந்த இரண்டு நோயாளிகளிடமிருந்து இரண்டு பி பாசிட்டிவ் மற்றும் ஓ பாசிட்டிவ் சிறுநீரக ஜோடி...
23/03/2024

👉 அதிகம் பகிருங்கள் 🔴

மூளைச்சாவு அடைந்த இரண்டு நோயாளிகளிடமிருந்து இரண்டு பி பாசிட்டிவ் மற்றும் ஓ பாசிட்டிவ் சிறுநீரக ஜோடிகள் தானம் செய்ய தயாராக உள்ளனர். எனவே, இவ்வகை சிறுநீரகம் தேவைப்படுபவர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு உதவவும். முடிந்தவரை பலருக்கு செய்தியை அனுப்பவும். 077 5480062 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
நன்றி.

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி  பரிதாபமாக உயிரிழந்த சோகம் !யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவ...
23/03/2024

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சோகம் !

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தலையாழி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் தினேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளனர்.

இதன்போதே, நேற்றைய தினம் (22-03-2024) மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்ட நிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

22/03/2024

மிருசுவில் ஏ-9 வீதியில் விபத்து!!🔴

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.

இதன் காரணமாக வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது .விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

12/03/2024

கீரிமலை சிவன் ஆலயத்தில் எல்லோரும் சேர்ந்து பஞ்சபுராணம் பாடும் அருமையான காட்சி. ❤️🙏❤️

பெரும்பாலான ஆலயங்களில் ஒருவரே பஞ்சபுராணம் பாடும் நிலையில் குருக்களின் வழிநடத்தலில் எல்லோரும் அவருடன் சேர்ந்து பஞ்சபுராணம் பாடிய காட்சி சிவராத்திரி தினத்தில் கீரிமலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்றது.
சிவ சிவாய ❤️🔱

நல்லூரில் விபத்து.பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்...
07/03/2024

நல்லூரில் விபத்து.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.

லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

02/03/2024

சாந்தன் இறுதி அஞ்சலி நிகழ்வு விபரம்.

அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் நாளை தினம் தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து அமரர் சாந்தனிற்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய் மண்ணிற்கு எடுத்துவரப்படவுள்ளது.

நாளை காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

20/02/2024

நாங்க தமிழ். 🤣

18/02/2024

பாண்டியன் சுவையூற்று
2003 💛❤️

விபத்தில் புடவைக் கடை உரிமையாளர் உயிரிழப்பு.யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில்  சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற அன்புலன்ஸ்...
17/02/2024

விபத்தில் புடவைக் கடை உரிமையாளர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற அன்புலன்ஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்

யாழ்ப்பாணம் நியு ராகம்ஸ் புடவைக்கடை உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்தபோது எதிரே வந்த அன்புலன்ஸ் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்

சம்பவத்தில் படுகாயமடைந்த நீயுராகம் புடைக்கடை உரிமையாளர் சண்முகதாஸ் தர்மதாஸ் வயது 54 என்ற இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்ளைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

11/02/2024

நாற்பதாயிரம் பேர் கூட வேண்டிய இடத்தில் ஒருலட்சத்து இருபதாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கூடியதாலே இறுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
- கலா மாஸ்டர்

அன்று யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி..!  (23/04/1990)யாழ். முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது,  இசையினைய...
11/02/2024

அன்று யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி..! (23/04/1990)

யாழ். முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது, இசையினையும் நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது.

அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம்' எனச் செய்தி வெளியிட்டது. (நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்).

இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது, சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர, மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது.

நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால், மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை. நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும், நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.

தடுப்பரண்கள் எதுவுமில்லை. வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டு இருந்தது. கூடியிருந்த இலக்கக் கணக்கான (இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை. அப்படிக் கட்டுக் கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று. இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா.

இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது.

புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் (SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி, மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும், வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர். அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது. அதனால், முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து, ஊர்திகளுக்கு உள்ளேயும், மறைவான இடங்களிலும் மட்டுமே, இருந்தனர்.

படையினரும் முதலில் ஆயுதங்கள் எதுவும் இன்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மக்கள் கூடக், கூட, படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது, சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றிவந்து வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர்.

இரு தரப்பினரும் சில மீற்றர் இடை வெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு, நேர் நீட்டியபடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியது. மக்கள் எதனையும் பொருட் படுத்தவில்லை, இசையில் மூழ்கிக் கிடந்தனர் இதே, யாழ் மக்கள் தான்.

நிகழ்வின் நோக்கமும், கருப்பொருளும், அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான். முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசை செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்".

ஆம், அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது, அதனால், ஒழுங்கும் இருந்தது, நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளும் இல்லை. இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.

நன்றி..
இலங்கநாதன் குகநாதன்.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Vikatan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media in Jaffna

Show All