11/11/2023
Happy Diwali
Success Tamil News
(1)
Happy Diwali
மாணவி துஸ்பிரயோகம்
ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் கைது
காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி, பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.
யாழில் மனைவியுடன் தம்பி உறவு, அடித்து கொலை செய்ய காரணம் இதுவே.....!
தனது சகோதரருடன் மனைவி தவறான தொடர்பு வைத்திருந்ததால் அதனை அறிந்து
ஆத்திரமடைந்து இருவரையும் தாக்கியாதாக கைதான கணவர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம், சண்டையாக மாறியது.
பனம்மட்டையால் கணவன் அடித்ததில் மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த தன் மனைவியை கணவன் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதித்துள்ளார். குறித்த பெண் இன்று காலையிலேயே வைத்தியசாலையில் உயரிழந்துள்ளார். இது தான் நடந்த உண்மைச் சம்பவம்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை இன்று காலையில் பார்க்கச் சென்ற கணவர், சின்னக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை
பெறுபேறுகள் எப்போது வெளியாகும் ?
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை, பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எங்கே சென்றது மனிதநேயம்...?
சிலரின் குரோத எண்ணங்களுக்கு அப்பாவி மக்களின் உயிர்தான் பழியாகின்றது....💔
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானித்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றி.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (15) இடம்பெற்றது.
அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ரஹமனுல்லா அதிகபட்சமாக 80 ஓட்டங்களை பெற்றதுடன் இக்ரம் அகிலி 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ரசிக் 3 விக்கெட்டுக்களையும் மார்க் வூட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹாரி புரூக் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜுபர் ரகுமான் மற்றும் ரஷீத் கான் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் நபி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
நானுஓயாவில் மண்சரிவு
போக்குவரத்து பாதிப்பு.....
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது . இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
🕉️
∆🔯∆மேஷம்
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவார்கள்
வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும்.
பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
∆🔯∆ரிஷபம்
புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்படலாம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.
∆🔯∆மிதுனம்
மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் குறையும்.
எதிர்பார்த்த வரவுகள் இருக்காது.
பிறர் பகையால் உங்கள் முன்னேற்றம் கேள்விக் குறியாகும் சந்தர்ப்பம் உண்டு.
∆🔯∆கடகம்
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுகக் குறைவு ஏற்படலாம்.
தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
∆🔯∆சிம்மம்
எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான நாள். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
நல்ல பொருளாதார நிலையில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
∆🔯∆கன்னி
ஆரோக்கிய நிலை மேம்படும். ஆயினும், வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
∆🔯∆துலாம்
செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும்.
தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
∆🔯∆தனுசு
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும்.
எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
∆🔯∆விருச்சிகம்
வீட்டில் பொருட்கள் களவு போகும் வாய்ப்பு உள்ளதால் விழிப்புடன் இருப்பது நல்லது. சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம்.
கோபத்தால் அதிக குழப்பங்கள் ஏற்படும்.
∆🔯∆மகரம்
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள்.
தொழில், வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
மனைவி மூலம் நன்மை பல உண்டாகும்
∆🔯∆கும்பம்
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும்.
எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
∆🔯∆ மீனம்
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது.
அதிகாரிகள் கட்டளைகளை மதித்து நடப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
பந்த ஜனங்கள் பகைமை பாராட்டுவர்.
{2023 ஒக்டோபர் 16}
🔥 BREAKING NEWS🔥
∆வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை நகரம் ∆
மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா – பண்டாரவளை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
✍️நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாளை மீரியபெத்தயில் மூன்று பாடசாலைகளை மூட தீர்மானம்.
மீரியபெத்த, மகல்தெனிய, ஆர்னோல்ட் ஆகிய மூன்று பாடசாலைகளும் நாளை (16.10.2023) திங்கட்கிழமை மூடப்படுவதாக ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் நிலானி தம்மிக்க தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஹல்துமுல்ல கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பாடசாலைகளில் குறைவான மாணவர்கள் இருப்பதால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு பாடசாலைகளுக்கு வரவழைத்து நாளை (16.10.2023)கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாம்களில் இயங்கும் பாடசாலைகளில் இடையூறு இன்றி கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நவராத்திரி-
ஒன்பது நாட்களும் ஒன்பது முறைகளை பற்றி நீங்கள் அறிவீர்களா??
நவராத்திரி பூஜை
(15.10.2023 - 24.10.2023 )
நவராத்திரி பூஜை முறை..!!!
ஒன்பது நாட்களும் போட வேண்டிய கோலங்கள்:
• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர்களாலான கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)
ஒன்பது நாட்களும் பாட வேண்டிய ராகங்கள்:
• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா
ஒன்பது நாட்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:
• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து
ஒன்பது நாட்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – தோடம்பழம்
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்
ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்.
• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.
இஸ்ரேலில் ராக்கெட் வீச்சுக்கு நடுவே உயிர் பிழைத்தது எப்படி?
- தாயகம் திரும்பிய தமிழர்கள் விளக்கம்
சரியாக ஒரு வார காலத்திற்கு முன்னதாக திருவாரூரைச் சேர்ந்த நிவேதிதா, காலை நேரத்தில் எப்போதும் போல இஸ்ரேலில் உள்ள தனது மகள் ஆதித்யாவுடன் பேசுவதற்காக அழைத்திருக்கிறார். அவரது அழைப்புக்கு மறுபுறத்தில் யாரும் பதிலளிக்கவில்லை.
சுமார் எட்டு மணிநேரத்திற்குப் பின்னர் பேசிய ஆதித்யா, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்பதால் பதுங்கு குழியில் ஒளிந்திருந்ததாகச் சொன்னதும் தயார் நிவேதிதா நடுங்கிப்போனார்.
இஸ்ரேல் நாட்டின் பீர் ஷேவா பகுதியில் அமைந்துள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தில் கேன்சர் செல் குறித்த பி.எச்.டி. ஆய்வில் ஆதித்யா ஈடுபட்டுள்ளார். தனது சக மாணவர்கள் 20 பேருடன் பதுங்கு குழியில் ஒளிந்திருந்ததை அவர் சொன்ன தருணத்தில் இருந்து, கடந்த ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் தனது மகளின் பாதுகாப்பு குறித்த சிந்தனையால் பதற்றத்தில் இருந்தார் நிவேதிதா.
“இன்று என் மகள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்துவிட்டேன் என்று சொன்னபோதுதான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. என் மகளும் மருமகன் விமலும் ஒரே பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்கிறார் நிவேதிதா
நன்றி BBC Tamil
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய தொழில்கள் என்னென்ன தெரியுமா? உங்க நட்சத்திரத்திற்கு என்ன தொழில் செய்தால் அத...
கிண்ணியாவில் தற்போது பதற்றம்!
கிண்ணியா படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து கிண்ணியா மக்கள் வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கிண்ணியா,படகு பாதை கவிழ்ந்ததில் இதுவரை 6 பேர் பலி,பலரை காணவில்லை,தேடுதல் தீவிரம். பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டது. 23/11/2021
"குருபெயர்ச்சினால இனிமே உங்க காட்டுல மழைதான். உங்க கால் தரைலபடாது.. ரொம்ப உயரத்துக்கு போயிடுவீங்க. "
පුවක් පැල | Puwak Pela විකිණීමට ඇත.
பாக்கு கன்றுகள் விற்பனைக்கு
Per Plant Rs. 40/-
076 25 95 408
071 74 95 408
அப்பளம் சாப்பிட்டதற்காக சிறுமியின் வாயில் சூடு வைத்த தாயார் கைது
கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகர் குடியிருப்புப் பகுதியில் 5 வயது மகளுக்கு நெருப்பால் சுட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயார் பொரித்து வைத்த அப்பளத்தை குறித்த சிறுமி தாயாருக்குத் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுள்ளார். இதனால் தாயார் பெற்ற மகளுக்கு வாய்ப் பகுதியில் நெருப்பால் சுட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த தாயார் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை யில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை தொழிலுக் குச் சென்ற வேளை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
🔖வடமராட்சி பாடசாலை மாணவன் உயிரிழப்பு ‼
மண்டான் பகுதியில் சோகம்
👉பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11 ம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் சுகயீனம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கரணவாய் மண்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் கிருசிகன் வயது 16 என்ற மாணவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
இரண்டு சிறுநீராகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
ஊசி காட் 💉 😎 😁
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும்- ஞானசார தேரர்
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் புலிகளின் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து அழிப்பதற்கு எடுத்தது போன்ற துல்லியமான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கான சதிமுயற்சிகள் மற்றும் தீவிரவாதிகளின் செல்வாக்கு குறித்து தனது கடிதத்தில் தெரிவித்துள்ள தேரர் நாட்டில் தீவிரவாத கொள்கைகளை பரப்புபவர்களை அடையாளம் காண்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
அவர்களிற்கு எதிராக உடனடி சட்டநடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமிய மதத்தின் பெயரால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதல் தற்போது அரசியல் பந்தாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரசியல் தற்போது இதற்குள் ஊடுறுவுகின்றது எனவும் தெரிவித்துள்ள ஞானசார தேரர் இந்த தாக்குதலிற்கு வழிவகுத்த கொலைகார போதனைகள் கோட்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது மதத்தலைவர்கள் உட்பட சில சக்திகளை இதற்காக பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிய பாதுகாப்பு இடைவெளிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதலை நாடு எதிர்நோக்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு. 😢
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி #சாருகா இன்று அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி #உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான தொடர்ந்து இடம்பெற்று வரும் மருத்துவபீட மாணவர்களின் இறப்பில் சந்தேகம் உள்ளது 😢
Copied
தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் MK.சிவாஜிலிங்கம் ஐயா கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில் கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் அனுமதி! மிக விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
🚨அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதி்.
லாக் டவுன் முடிவில் பள்ளிகள் திறக்கும் பொழுது 🤣🤣 மாணவர்களின் நிலை 🤣🤣
யாரா இருக்கும்????
பிரபல சகோதர மொழிப்பாடகர் சுணில் பெரேரா காலமானார். இவர் கொவிட் தொற்றுறுதியின் காரணமாக கடந்த சில வாரங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
#இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல்ல.🤣🤣🤣
கொரோனா என்ற கொடிய நோயால் உயிர் நீத்த இளம் ஊடகவியலாளர் ஞா. பிரகாஷின் பூதவுடல்
ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பனே 💔
🔖இன்று மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக மருத்துவர் த.சத்தியமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
👉யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளராக மருத்துவர் த.சத்தியமூர்த்தி இன்று தனது பணிகளை மீளப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்திற் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்றார்.
பிரித்தானியாவில் மேற்படிப்புக்காக கடந்த மாசி மாதத்தில் சென்றிருந்த வேளை அவர் தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர் மருத்துவர் S.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.
எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக அவர் தனது மேற்படிப்பை சில காலம் ஒத்தி வைத்து அவர் இன்று காலை 8 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவர்களில் #அடுத்த #ஜனாதிபதி தேர்தலில் உங்கள் தெரிவு யாராக இருக்கும் ??? 👇 👇🥇😂😛😛
ஏற்றுக்கொள்ளமுடியாத பேரிழப்பு 😢
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு செய்திகளை எழுதிவந்த நண்பன்.
எழுத்துக்கள் கூட தடைப்படும் வேதனையோடு.
கச்சாய், கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடக நண்பன் ஞானப்பிரகாசம் பிரகாஷ்
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,சற்றுமுன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.ஆழ்ந்த இரங்கல் ...
அச்சுவேலி நாவற்காட்டு பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று (02) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவர் இ.போ.ச பஸ் 750/751 சாரதியாக கடமையாற்றியிருந்தார்.
இதெல்லாம் நடக்கும் எண்டு எப்பவோ எதிர் பார்த்த ஒண்டு தானே 🔥🔥🔥
🚨6 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சக்கிலா மடுவந்தி ராஜபக்ஷ என்பவர் புத்தளம் கிவுலாவைச் சேர்ந்த தாய் ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மூன்று குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Lankadeepa
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பின்னவள யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை யானை குட்டிகளை ஈன்றுள்ளது 😍❤️👍
படங்கள்: Pinnawala Elephant Orphanage, Srilanka
🔖🔖அந்த அம்மாவவிட உயரம்
அம்மாட மனசு 🙏 ❤
கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து பதுக்கி வைத்து வாழ்பவர்கள் மத்தியில் இந்த #தாய் இன்று #திவுலபிட்டிய மருத்துவமனைக்கு #ஆக்ஸிஜன் சிலிண்டரை வழங்கினார். தாய்க்கு ஆரோக்கியமான வாழ்க்கை அமையட்டும்👍👍🥰❤😍
55 Sivan Pannai Road
Jaffna
40000
Be the first to know and let us send you an email when Success Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
யாழ் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் "சுந்தர்பவன் தனராஜ்"கணிதப்பிரிவில் இலங்கை தேசிய மட்டத்தில் முதல் இடம்.
சினிமா பாணியில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லொறி சாரதியை தாக்கி விழுத்தி அவரின் மேல் பாய்ந்து அவரும் கீழே விழுவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் கொழும்பு பன்னிபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் எண்ணை சுத்தீகரிப்பு ஆலை ஒன்றில் இன்று(29.03.2021) அதிகாலை ஏற்பட்ட பாரிய வெடிப்பு மற்றும் தீ பரவல் காணொளியே இதுவாகும்.
பதுளை பசறை வீதியில் விபத்துக்குள்ளாகி பல உயிர்களை பலியெடுத்த UP ND 6448 இலக்க தகட்டினை உடைய NCG என அழைக்கப்படும் லுனுகலை கொழுப்பு பேருந்து கடந்த வாரம் பண்டாரவெல பகுதியில் பயணித்த விதம்.. விபத்துக்கான முழு பொறுப்பும் சாரதியையே சாரும்...
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிபிலை 13 ம் கட்டை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் மரணமடைந்துள்ளனர். 44 பேர்காயமடைந்துள்ளதோடு பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லுணுகலையிலிருந்து காலை 6.40 மணியளவில் கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று சுமார் 7.15 மணியளவில் 13 ம் கட்டை மெத்தைக்கடைப்பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இதுவரையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 57 பேர் பேருந்தில் பயணித்த தாகவும் 44 பேர் காயமடைந்துள்ளதாகவும் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் மீதும் கல் ஒன்று விழுந்தமையினால் காயமடைந்த நபரையும் வைத்
கொழும்பு நோக்கி சென்ற பஸ் பஸ்ஸர பகுதியில் விபத்தில் 7 பேர் பலி இதோ காணொளி மொனராகலை- பதுளை வீதியின் பஸ்ஸர 13 ஆம் தூண் பிரதேசத்தில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா ராகலை தோட்ட இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 குடியிருப்புகள் சேதமாகியதுடன், 54 பேர் நிர்கத்திக்குள்ளானதாக பொலிஸார் தெரிவின்றனர். தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே தீடிரென இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பரவலை பொதுக்களும் பொலிஸாரும் கடும் பிரயத்தனத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் 14 குடியிருப்புகளை கொண்ட குறித்த லயன் முற்றாக எரிந்து உடமைகளும் நாசமாகியுள்ளன. பேர் நிர்கத்தியான நிலையில் தோட்ட ஆலயத்தித்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காளிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணமும் சேத விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரைணைகளை முன்னெடுத்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ஏன் ஏன் நண்பனே ❤❤❤❤🧡🧡
நாரம்மல வாரியபொல பிரதான வீதி கிலிம்பொல பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். https://thamilnesan.com/srilanka/6148/
சங்கு தானாக மேலே செல்லும் ஆச்சர்யம்.!! ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அற்புத வீடியோ.!! https://thamilnesan.com/world/6144/
இந்தியாவில் கோவை ரயில் நிலையத்தில் நேற்று ஒடும் வண்டியில் ஏற முயற்சித்த பயணி தவறி கீழே விழுந்தார், வண்டியின் சக்கரத்தில் சிக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்து இரயில்வே போலிசார் பாதுகாப்பாக மீட்டார்.
திருகோணமலையில் பட்டப்பகலில் நடுவீதியில் பெண் மீது சரமாரியாக கத்திக்குத்து! வெளியான காணொளி https://thamilnesan.com/srilanka/5675/
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 73 வயதுடைய வயோதிபர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.