Uthayan Tv

Uthayan Tv Uthayan is a Tamil language Sri Lankan daily newspaper published by New Uthayan Publication (Private

📌 #ஆசிரியர்_தலையங்கம்மீண்டும் ராஜபக்ச பூச்சாண்டி!!!போரின் பின்னரான ஜனாதிபதித் தேர்தல்களின் போது தமிழ் மக்களின் பிரதான அர...
13/04/2024

📌 #ஆசிரியர்_தலையங்கம்

மீண்டும் ராஜபக்ச பூச்சாண்டி!!!

போரின் பின்னரான ஜனாதிபதித் தேர்தல்களின் போது தமிழ் மக்களின் பிரதான அரசியல் தரப்பாக விளங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானங்கள் கால ஓட்டத்தில் தவறானவையாகவே மாறியிருக்கின்றன. ராஜபக்சக்களை வீழ்த்துதல் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானங்கள் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தரவில்லை. மாறாக தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட நன்மைகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கூட இதே சாரப்பட ஒரு குற்றச்சாட்டை கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன் மீது சுமத்தியிருந்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதுமே ராஜபக்சக்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. அவர்களைத் தோற்கடிப்பதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். அதனால் தான் போரை நடத்திய இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கு கூட வாக்களித்திருந்தார்கள். அதன் பின்னரான தேர்தல்களிலும் ராஜபக்சக்களை எதிர்த்து களமிறங்கிய ஒருவரை ஆதரித்திருந்தார்கள். இந்தப் பின்னணியிலும், ஒவ்வொரு தேர்தல்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்குமாறு கோரும் போது 'அது ராஜபக்சக்களுக்கு ஆதரவான நகர்வு' என்ற பரப்புரையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் முன்வைத்திருந்தது. ஆனால் தாம் ஆதரவளித்த வேட்பாளர்கள் ஆட்சியில் அமர்ந்த பின்னர் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் மக்களுக்காக அவர்களிடம் எதனைப் பெற்றுக்கொடுத்தார்கள். நல்லாட்சி க்காலத்தில் மைத்திரி -ரணில் அரசாங்கத்தை தாங்கள் கொண்டு வந்ததாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலும் குறிப்பாக சம்பந்தன் - சுமந்திரன் இருவரும் பகிரங்கமாகக் கூறிவந்தனர். அந்த அரசாங்கத்தைப் பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் தமிழ் மக்கள் முன்னெடுக்கக்கூடாது என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் விந்தையானது. அதாவது தெற்கில் மீண்டும் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்களாம். இதைச் சொல்லியே நல்லாட்சிக் காலத்தில் முட்டுக்கொடுத்தார் சம்பந்தன். நல்லாட்சி அரசின் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கம் என்று சொல்லியே சம்பந்தன் - சுமந்திரன் இணை காலம் கடத்தியது. கடைசியில் புதிய அரசமைப்பும் வரவில்லை. ஒன்றும் நடக்கவில்லை. தமிழ் மக்கள் குழப்பாமலேயே ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.

இப்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னிலங்கையில் ஜே.வி.பி. சார்பில் அநுரவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித்தும், ஜனாதிபதி ரணிலும் களமிறங்குவது இதுவரை உறுதியாகியிருக்கின்றது. பொதுஜன பெரமுன சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படக்கூடும். இவர்களில் யாருக்காவது வாக்களிக்கக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. போரின் பின்னரான ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்சக்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடிய தென்னிலங்கைத் தலைவர்கள் அதன் பின்னர் தமிழ் மக்களை 'அம்போ' எனக் கைவிட்டமைதான் வரலாறு. அப்படியிருக்கையில் இப்போது களமிறங்குபவர்களில் எவரும் தமிழ் மக்கள் ஆதரிக்கக் கூடியவர்கள் இல்லை. இதனால், தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற இரண்டு தெரிவுகள் மாத்திரமே தமிழ் மக்களிடம் உண்டு. அந்தத் தெரிவுகளை நோக்கி தமிழ் மக்கள் செல்லும் போது மீண்டும் ராஜபக்ச எதிர்ப்பு என்ற அதரப்பழசான புராணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கையில் எடுத்திருக்கிறார். கடந்த காலங்களில் அவர் முன்வைத்த இந்த ராஜபக்ச எதிர்ப்புக்கோசத்தால் தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? அதைச்சீர்தூக்கிப் பார்த்த பின்னரே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் அணுகவேண்டும்.

(11. 04.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன்

📌(13/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்|            #ராசிபலன்கள்
13/04/2024

📌(13/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்| #ராசிபலன்கள்

📌இன்றைய நாள்(13/04/2024)|
13/04/2024

📌இன்றைய நாள்(13/04/2024)|

12/04/2024

🛑: கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கும் நம்மவர்கள்... நிகழ் காலத்தில் வாழ்வோம்!

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள் போன பஸ்ஸிற்கு கை காட்டி என்ன பயன் நிகழ் காலத்தில் வாழ்வோம் நண்பர்களே...

👉காணொலியை முழுமையாகப் பார்வையிட இந்த வலையொளித்தள முகவரியை அழுத்துங்கள்
https://youtu.be/Smd1xXnhiYA

📌News update               👇மேலதிக தகவல்களுக்கு முதலாவது கருத்துப்பெட்டியை பார்க்கவும்👇
12/04/2024

📌News update

👇மேலதிக தகவல்களுக்கு முதலாவது கருத்துப்பெட்டியை பார்க்கவும்👇

📌News update               👇மேலதிக தகவல்களுக்கு முதலாவது கருத்துப்பெட்டியை பார்க்கவும்👇
12/04/2024

📌News update


👇மேலதிக தகவல்களுக்கு முதலாவது கருத்துப்பெட்டியை பார்க்கவும்👇

12/04/2024

🔴ஹைதரபாத்தில் கலக்கப்போகும் ஈழத் தமிழன்!!|Todaynews|UTHAYANNEWS| #செய்தி_விமர்சனம்

📌 #புதினம் தெரியுமோ?முந்தி ஒவ்வொரு ஊரிலையும் மைனர்க் குஞ்சுகள் இருக்கிறவை. ஊரையே தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தமாதிரித்...
12/04/2024

📌 #புதினம் தெரியுமோ?

முந்தி ஒவ்வொரு ஊரிலையும் மைனர்க் குஞ்சுகள் இருக்கிறவை. ஊரையே தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்தமாதிரித்தான் அவையின்ர போக்கும் நடப்பும் இருக்கும். எல்லாப் பிரச்சினையளுக்கையும் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கொண்டு, வலியப் போய் தலையை இட்டி, எல்லாத்தையும் குழப்பியடிச்சு அதில ஏதும் ஆதாயம் தேடுறதும், தேடுவாரில்லாமல் கிடக்கிற சொத்துகளை ஆட்டையைப் போட்டு தங்கட சொத்தா மாத்துறதும் தான் அவையின்ர தொழில். இஞ்சையும் ஒரு மைனர் அமைச்சர் இருக்கிறார். கட்சியின்ர பேர்ல மட்டும் ஜனநாயகம் இருந்தாலும், 'நாங்கள் ஜனநாயக நீரோட்டத்துக்க நீந்திறம் தியேட்டர் கரண்ட் பில்லில சுழி ஓடுறம்' எண்டெல்லாம் கதைவிட்டாலும், அவருக்கு சண்டித்தனத்தில தான் நம்பிக்கை கூட கொரோனாக்கு பிறகு வடமராட்சியில மீனவர் போராட்டத்துக்குப் போய் வேட்டியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு சண்டித்தனம் காட்ட வெளிக் கிடேக்க, பதிலுக்கு மீனவரும் முறுக. கடைசியில அவரின்ர பாதுகாப்புக்கு நிக்கிறவைதான் அவரைப் பத்திரமா அங்கையிருந்து கொண்டந்தவை.

அதுக்குப் பிறகாவது. தன்ர வயசை நினைச்சு கொஞ்சம் ஆத்திரத்தை அடக்கி வைச்சிருக்க ஆள் பழகியிருக்கோணும். ஆனால் துவக்கைத் தூக்கி தன்ர சனத்தையே போட்டுத்தள்ளின கை துடிச்சுக் கொண்டுதான் இருக்கும் போல. அதுக்குப் பிறகும் வேற சில இடங்களில ஆள் உந்தச் சண்டிக்கட்டு வெருட்டலை விடேலை. எல்லா இடத்திலையும். சண்டிக்கட்டுச் சண்டித்தனம் வேகாது தானே. அதி லையும் வெயிலுக்க வெந்துகொண்டு, சுண்ணாம்புக்கல் அகழக்கூடாது எண்டு போராடின சனத்திட்ட எப்பிடி உந்தச் சண்டித்தனம் எடுபடும்? உப்பிடி சுண்ணக்கல்லை வெட்டி எடுத்து சிமெந்து பக்டரிக்கு குடுத்தால், ஊருக்குள்ள கடல்தண்ணி பூந்து, எல்லாத்தையும் நாசமாக்கிப்போடும் எண்டது தான் சனத்தின்ர பிரச்சினை. ஒரு பக்டரியைக் கட்டுறதெண்டால். சனத்துக்கு சிக்கல் வராமல் கட்டவேணும். சனத்தையும், ஊரையும் அழிச்சுப்போட்டு, ஊரையும் நிலத்தையும் தங்கட கொமிசனுக்காக வந்தான் வரத்தானுக்கெல்லாம் குடுத்தால் சனம் எதிர்க்கத்தான் செய்யும்.

பூநகரியில திறக்க இருக்கிற சிமெந்து பக்டரிக்கும் உள்ளால காசு மாறியிருக்காம். 'எல்லாம் நான் வெண்டுதருவன்' எண்டு சண்டித்தன அமைச்சர் சொன்னதைக் கேட்டு, கொம்பனிக்காரரும் 'பெரிசா'' கவனிச்சிருக்கினம் போல. அந்த விசுவாசத்துக்காக சனத்தை அடிச்சு மிதிச்சுப் போட்டு, பக்டரியை திறக்க வெளிக்கிட்டா என்ன நடக்கும் எண்டதை சனம் வடிவாக் காட்டிப்போட்டுது. அண்டைக்கும் சனம் எதிர்க்க ஆள் அவையை வெருட்டுறதுக்காக சண்டிக்கட்டை கட்டிக்கொண்டு சனம் நிக்கிற பக்கமா போயிருக்கிறார். உடன போராடின பொம்பிளையளில ஒராள் மைக்கை வாங்கி மீன்குஞ்சு காட்டி ஏமாற்றிய அமைச்சரே. இங்கே எதைக்காட்டி ஏமாற்ற வருகிறாய்? எண்டு கேட்டதும் தான் தாமதம், உடனேயே ஆள் சண்டிக்கட்டை அவிட்டு கால்மட்டும் மறைச்சவராம். அதுக்குப் பிறகுதான் சனத்தோட பிடுங்குப்பட்டு ஹெல்மெட்டும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில தப்பினம் பிழைச்சம் எண்டு அமைச்சர் ஓடியிருக்கிறார். சண்டிக்கட்டுக்காலமெல்லாம் மலையேறிட்டுது எண்டது இனியாவது மீன்குஞ்சு அமைச்சருக்கு விளங்கினால் சரி.

#புதினம்

📌 #ஆசிரியர்_தலையங்கம்மருத்துவத் தவறுகளுக்கும் நீதியில் பாகுபாடா?யாழ்ப்பாணத்தில் 'அக்குபஞ்சர்' சிகிச்சை மேற்கொண்ட நபரொருவ...
12/04/2024

📌 #ஆசிரியர்_தலையங்கம்

மருத்துவத் தவறுகளுக்கும் நீதியில் பாகுபாடா?

யாழ்ப்பாணத்தில் 'அக்குபஞ்சர்' சிகிச்சை மேற்கொண்ட நபரொருவர் உயிரிழந்ததையடுத்து, அந்த மருத்துவ நிலையத்தின் அனுமதியை ரத்துச்செய்வதாக அறிவித்துள்ளார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவத் தவறால் ஒருவர் உயிரிழப்பது என்பது பாரதூரமான விடயமே. அத்தகைய மருத்துவ நிலையங்கள் மீதும், சிகிச்சை நிலையங்கள் மீதும் தடைவிதிப்பதானது தக்க நடவடிக்கையே. இதில் பாரபட்சங்களுக்கும், பரிந்துரைப்புகளுக்கும் இம்மியும் இடமில்லை தான். ஆனால், அனைத்து மருத்துவத் தவறுகளுக்கும் நீதி சமானமாக நடைமுறைப்படுத்துகின்றதா? என்று கேட்டால் அதற்குரிய பதிலைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இருக்கவே செய்கின்றது.

மேற்படி அங்குபஞ்சர் நிலையத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சையால் ஏற்பட்ட கிருமித்தொற்றால்தான் அந்த நபர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த உயிரிழப்புக்கு முன்பாக சுமார் 20க்கும் மேற்பட்ட நாள்கள் அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். மூன்று அல்லது நான்கு நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி இறந்தால், அந்த இறப்பில் பொறுப்புச் சொல்ல வேண்டிய 'தார்மீகக் கடமை' அந்தந்த மருத் துவமனைகளுக்கு இருக்கவே செய்கின்றது. இவ்வாறிருக்கையில் 20க்கும் மேற்பட்ட நாள்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று அதன் பின்னர் இறந்துபோன நோயாளியின் இறப்புக்கு அக்குபஞ்சர் மருத்துவமே காரணம் என்று முற்றுமுழுதாக விரல் நீட்டிவிடமுடியாது. அவ்வாறு அக்குபஞ்சர் மருத்துவம்தான் காரணம் என்றால், அதற் குரிய மருத்துவக் காரணிகளை மருத்துவத் தவறுகளை முறைப்படி குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினர் எண்பித்திருக்க வேண்டும். அப்படி எந்தவொரு தகவல்களையும் 'முறைப்படி' ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் மக்களுக்குத் தெளிவுபடுத்தாமல், 'அக்குபஞ்சரில் ஏற்பட்ட மருத்துவத் தொற்றால்தான் இந்த இறப்பு சம்பவித்தது' என்று தெரிவித்துவிட்டுக் கடந்துபோகும் மனோநிலையால் வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ள 'மருத்துவப் பதற்றம் மருந்தில்லா மருத்துவத்துக்கு எதிரான சதி நடவடிக்கையா? என்ற ஐயப்பாட்டை மக்களிடம் எழுப்பவே செய்யும்.

எல்லாவற்றையும்விட, இதே யாழ்ப்பாணத்தில் மேற்கத்தேய மருத்துவமுறைத் தவறால் தனியார் ஆங்கில மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த உயிரிழப்புகளுக்கு குறித்த மருத்துவருக்கின்றன அந்த குறித்த மருத்துவமாக எண்பிக்கப்பட்ட பின்னரும் இன்னமும் அந்த மருத்துவமனைகள் பெரும் சனத்திரளுடன் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு ஏன் சுகாதாரத்திணைக்களம் தடைபோடவில்லை? ஆக, மருத்துவத் தவறால் இறப்புகள் சம்பவித்தாலும் அதில் ஆங்கில மருத்துவத்துக்கு ஒரு நீதியும், சுதேச மருத்துவத்துக்கு இன்னொரு நீதியும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுகின்றதல்லவா..? மருத்துவத் தவறுகளை பத்துடன் பதினொன்றாகக் கடந்துவிட முடியாதுதான். ஆனால், ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் சரி, சுதேச மருத்துவமாக இருந்தாலும் சரி நீதி இறுக்கமாக, ஒரேவகையில் நடை முறைப்படுத்தப்படவேண்டும். இல்லாவிடில் சுகாதாரத்துறையின் நீதி, சுதேச மருத்துவத்தை விழுங்குவதற்காக, ஒடுக்குவதற்காக மட்டுமே பிரயோகிக்கப்படுகிறதா என்ற ஐயத்தை உறுதிசெய்வதாக அமைந்துவிடும்.

இவ்வளவு ஏன்.. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரு பச்சிளம் பாலகி தன் கைகளை மணிக்கட்டுடன் இழந்திருந்தாளே. அதற்கு நீதி கேட்டு யாழ்ப்பாணமே கொதித்துப் போயிருந்ததே. அதற்கெதிராக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இதுவரை எடுத்த நடவடிக்கைதான் என்ன? ஆக, மருத்துவத் தவறுகளுக்கும் மறுபக்க நீதியொன்று உள்ளதா...?

(10. 04.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன்

📌(12/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்|            #ராசிபலன்கள்
12/04/2024

📌(12/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்| #ராசிபலன்கள்

📌இன்றைய நாள்(12/04/2024)|
12/04/2024

📌இன்றைய நாள்(12/04/2024)|

               👇மேலதிக தகவல்களுக்கு முதலாவது கருத்துப்பெட்டியை பார்க்கவும்👇
11/04/2024


👇மேலதிக தகவல்களுக்கு முதலாவது கருத்துப்பெட்டியை பார்க்கவும்👇

11/04/2024

🛑: நல்லவர்களைப் போல் வேடம் அணிந்து நடிப்பவர்களும் கூட நாளடைவில் நல்லவர்களாகவே மாறிவிடுவர். உண்மையிலேயே நாம் நல்லவர்களாக இருந்துவிட்டால் நமக்கு கூடுதல் மதிப்பு தானே.

👉காணொலியை முழுமையாகப் பார்வையிட இந்த வலையொளித்தள முகவரியை அழுத்துங்கள்...
https://youtu.be/Ns0IBAgRoug

11/04/2024

🛑: "பாடையில் நான் படுத்து உறங்கும் போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்"

நாங்கள் தமிழ்!

👉காணொலியை முழுமையாகப் பார்வையிட இந்த வலையொளித்தள முகவரியை அழுத்துங்கள்
https://youtu.be/GQgMKSkq9Hc?si=7XQD6dH3z36TgBz7

11/04/2024

சாக்கும் சட்டையாகும். new year ட்ரெண்டிங்காம்...👇😂🤣

11/04/2024

🔴வன்முறையாக மாறுகிறதா மாணவர்கள் மீதான தண்டனை!!| Uthayannews | #செய்தி_விமர்சனம்

📌 #புதினம்_தெரியுமோ?இண்டைக்கு உலகத்தை ஆட்டிப்படைக்கிறதே தொடர்பாடல் தான். இப்ப எல்லா அலுவலையும் இருந்த இடத்தில இருந்தே செ...
11/04/2024

📌 #புதினம்_தெரியுமோ?

இண்டைக்கு உலகத்தை ஆட்டிப்படைக்கிறதே தொடர்பாடல் தான். இப்ப எல்லா அலுவலையும் இருந்த இடத்தில இருந்தே செய்யமுடியுதெண்டால், தொடர்பாடலில ஒவ்வொருநாளும் முன்னேறிக்கொண்டு போறது. தான் காரணம். இப்ப போனிலையே காதலிச்சு, போனிலையே கலியாணமும் கட்டுற அளவுக்கு ரெக்னோலொஜி வளர்ந்திட்டது. ஆனால் சில பொதுவான விசயங்களுக்கு இன்னும் 'லாண்ட் லைன்' போன்தான் பாவனையில இருக்கு. முக்கியமா கவர்மெண்ட் ஒப்பீஸுகளுக்கு உத்தியோகபூர்வமா கோல் எடுக்கவேணும் எண்டால், அந்தந்த ஒப்பீஸுக்குரிய 'லாண்ட்லைன்' நம்பருக்குத்தான் சனங்கள் கோல் எடுத்துக் கதைக்க வேணும். சனங்கள் கோல் எடுத்தால் அதை ஆன்ஸர் பண்ணி, அவை எதுக்காகக் கோல் எடுத்தவை எண்டு ஒப்பீஸ்காரர் கேக்கவும் வேணும். ஆனால் இப்ப எல்லாரும் செல்போனுக்கு மாறிட்டதாலையோ என்னவோ, இந்த லாண்ட்போனில கோல் எடுத்தால் கதைக்கப் பஞ்சிப்படுகினம்.

உதயன் பேப்பருக்கு நேற்று ஒரு கடிதம். யாழ்ப்பாணம் முனிசிபல் ஆணையாளர்தான் அந்தக் கடிதம் போட்டிருந்தவர். குருநகரில வந்த டெங்குத்தாக்கம் பற்றி பேப்பரில வந்த செய்தி பற்றி தங்கடகருத்தை சொல்லி. இனிமேல் இப்பிடியான செய்தி போடுறதெண்டால் தன்னையோ இல்லாட்டி சுகாதார மருத்துவ அதிகாரியையோ கேட்டுப்போட்டு போடுங்கோ 'எண்டு அந்தக் கடிதத்தில எழுதியிருந்தார். இதைப்பற்றி ஒருக்கா அவரோட கதைப்பம் எண்டு, அவரின் 'லெட்டர்ஹெட்டில' இருந்த 'லாண்ட்போன்'நம்பருக்கு கோல் எடுத்தால் மணி அடிக்குது, அடிக்குது, அடிச்சுக் கொண்டே இருக்குது. ஒருத்தரும் எடுப்பார் இல்லை. சரி. அவர் ஏதோ பிஸியாக்கும் எண்டிட்டு செயலாளரின்ர 'லாண்ட் போன் நம்பருக்கு எடுத்தால் அது வேலையே செய்யேலை. அதுக்குப் பிறகு பொதுசன தொடர்பு அதிகாரி எண்டு போட்டிருந்த நம்பருக்கும் எடுத்தால் அதுவும் மணியடி விளை யாட்டுத்தான். ஒருத்தரும் ஏன், எதுக்கு எண்டு கேக்காமல் அந்தப் போனும் தன்ரபாட்டில அடிச்சுப் போட்டு நிண்டிட்டுது. ஒருக்கா ரண்டு தரமில்லை. நாலைஞ்சு தரம் இந்த மூண்டு நம்பருக்கும் கோல் எடுத்தால் இதே நிலைதான்.

ஒரு ஆத்திர அவசரமெண்டு, இவையின்ற 'லாண்ட்போனுக்கு' சனம் எடுத்தாலும் இது தானே நிலைமை. ஒருவேளை அந்த 'லாண்ட் போனை' பாவிக்கிறேலை எண்டால், அதை ஏன் லெட்டர்ஹெட்டில போடுறியள் ? பேசாமல் செல்போன் நம்பரையே போடலாமே? முதலே சொன்னமாதிரி 'லாண்ட்போன்' தான் உத்தி யோகபூர்வமாத் தொடர்புகொள்ளவேண்டிய நம்பர். அதில வாற கோலுக்குத்தான் அதிகாரிமார் முக்கியத்துவமும் குடுக்கோணும். ஆனால் அப்பிடியெல்லாம் இஞ்சத்தை அரசாங்க ஒப்பீஸ்களில நடக்கிறேலை. ஏதோ வேண்டாப் பெண்டாட்டி போலத்தான் உந்த லாண்ட் போனுகளை அவையள் பாக்கினம் போல...

(08.04.2024- உதயன் பத்திரிகை)
#புதினம்

📌 #ஆசிரியர்_தலையங்கம்ஆயிரம் ரூபா வேதனமும் ஆவணப்படுத்தலும்மலையக நடனக்கலையைப் பாதுகாத்து தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடி...
11/04/2024

📌 #ஆசிரியர்_தலையங்கம்

ஆயிரம் ரூபா வேதனமும் ஆவணப்படுத்தலும்

மலையக நடனக்கலையைப் பாதுகாத்து தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலனை செய்வதற்காக தனிக்குழுவொன்று அமைக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மாளிகையில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தைத் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில். கலைகள் நிச்சயம் ஆவணப்படுத்தப் பட வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இட மில்லை. ஆனால், அந்தக் கலைகளின் பிறப்பிடமான மலையக மக்களின் வாழ்வியலை வளப்படுத்த ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கத்தினரும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்? என்ற கேள்வி எழுவது இங்கு தவிர்க்கப்பட முடியாததாகின்றதல் லவா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை மக்களின் வாக்குகளில் அதீத நம்பிக்கை கொண்டவர். முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதியென்பதால் சிறுபான்மை மக்களுடைய வாக்குகளுக்கு இருக்கும் பலம் அவருக்குத் தெரியும். தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததால் தனது ஜனாதிபதிக் கனவு முன்னொரு காலத்தில் சுக்குநூறாகக் கலைந்துபோனபட்டனுபவமும் அவருக்கு உண்டு. மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி, மைத்திரியை ஆட்சியேற்றிய சிறுபான்மை மக்களின் வாக்குகளின் மிடுக்கையும் அவர் அருகிருந்து உணர்ந்தவரே. ஆதலால், சிறுபான்மை மக்களை நோக்கிய அவரின் ஓட்டத்தை திடீர்ப்பாசத்தை புரிந்து கொள்வ தொன்றும் அவ்வளவு சிரமத்துக்குரிய காரியமல்ல. ஆனால், அந்த மக்கள் கூட்டத்துக்காக, தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில், சதியாட்டங்களைத் தவிர வேறொன்றையும் ரணில் செய்யவில்லை என்பதே கசப்பான மெய்.

சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரைக்கும் இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்தான். ஈழத்தமிழர் களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலைகளைப் போன்று மலையக மக்களும் இந்தத் தீவில் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இனப்படுகொலைகளுக்குப் பதிலாக அவர்கள் மீது 'பொருளாதாரப் படுகொலைகள்' அரசாங்கத்தாலும், அரச ஆதரவுபெற்ற 'கொம்பனிகளாலும்' ஏவப்பட்டன ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவே. மற்றும்படி இரு இனக்குழுக்களும் ஆலைவாய்க் கரும்பாக நெரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது 'பொதுமைப்பாடே'. ஆயிரம் ரூபா ஊதியத்தை வழங்குமாறு நெடுங்காலமாக மலையக மக்கள் (தோட்டத் தொழிலாளர்கள்) போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை இன்னமும் செவிசாய்க்கப்படவில்லை. 2020களில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த பொருளாதார இயலுமையில் நாடு இப்போதில்லை. விலையேற்றங்கள் இடியாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. வற்வரியும் தன் பங்குக்கு வதைக்க ஆரம்பித் துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ரூபா ஊதியக்கோரிக்கைகூட முற்றுமுழுதாக இன்னமும் மெய்ப்பட்டபாடில்லை. இவ்வாறிருக்கையில் மலையக மக்களின் நடனத்தை ஆவணப்படுத்துவது ஒன்றுதான் மலையகத்தவர்களின் எதிர்பார்ப்பா? என்ற கேள்வியை பொதுப்புரிதலை- ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

மலையக மக்களின் குருதியை அட்டைகள் மட்டும் உறிஞ்சவில்லை. அட்டைகளுடன் போட்டிபோட்டு பெருந்தோட்டக் ' கொம்பனிகளும் 'காலாகாலம் மாறி மாறி ஆட்சிக்குவரும் பேரினவாத அரசுகளும்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. தம்மைத் 'தேசிய இனமாக' அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் வாழ்வுரிமையையும், தமக்கேற்ற ஊதியத்தையும்தான் மலையக ம மக்கள் ரணில் அரசிடம் எதிர்பார்க்கின்றார்கள். இவை நிறைவேற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொருவெளி ஆரவாரங்களும் மலையகத்தின் ம உள்ளத்தை வெல்லப்போவதில்லை.

(08. 04.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன்

📌(11/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்|            #ராசிபலன்கள்
11/04/2024

📌(11/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்| #ராசிபலன்கள்

📌இன்றைய நாள்(11/04/2024)|
11/04/2024

📌இன்றைய நாள்(11/04/2024)|

10/04/2024

🛑: ஒவ்வொரு உயிரினங்களின் படைப்பிலும் வியக்கவைக்கும் ஒவ்வொரு அதிசயங்கள் நிறைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறு நம்மை அதிசயிக்க வைக்கும் ஒரே வித்தில் இருந்து உருவான உலகின் மிகப் பெரிய தாவரம் தான் 'ரிப்பன் வீட்'

👉காணொலியை முழுமையாகப் பார்வையிட இந்த வலையொளித்தள முகவரியை அழுத்துங்கள்...
https://youtu.be/OVcvak867os

10/04/2024

சூரியனுக்கு வாய் இருந்தால் கதறி அழும்.... 👇👇👇

10/04/2024

🔴ஜனாதிபதி தேர்தல் - தமிழர் முன் உள்ள தெரிவு என்ன?| Today news | UTHAYAN NEWS | #செய்தி_விமர்சனம்

📌 #புதினம் தெரியுமோ?பள்ளிக்கூடங்கள் எண்டாலே பிரச்சினையளுக்குப் பஞ்சமில்லைப்போல. முந்தியெண்டா பள்ளிக் கூடத்துக்க ஏதும் நட...
10/04/2024

📌 #புதினம் தெரியுமோ?

பள்ளிக்கூடங்கள் எண்டாலே பிரச்சினையளுக்குப் பஞ்சமில்லைப்போல. முந்தியெண்டா பள்ளிக் கூடத்துக்க ஏதும் நடந்தால் அதை உள்ளுக்கையே வைச்சு சமாஎளிச்சுப்போடுவினம். கூடுதலா பிள்ளையளுக்கு அடிச்ச பிரச்சினைதான்வரும். அப்பிடி ஆரும் பிள்ளைக்கு அடிபட்டால், அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு 'வீட்டை அடிச்சவை எண்டு சொல்லக்கூடாது. அப்பிடியும் அவை கால்நொண்டேக்க. இல்லாட்டி காயத்தை கண் டிட்டு என்ன நடந்தது எண்டு கேட்டால் விளையாடேக்க விழுந்துபோனன் எண்டுதான் சொல்லோணும் எண்டு ஒரு மார்க்கமா வெருட்டித்தான் அனுப்புவினம். பிள்ளை யளும் பயத்தில வீட்டை சொல்லுறேலை. அதையும் மீறி பெற்றாருக்குத் தெரியவந்தால், அவையைக் கூப்பிட்டு உங்கடபிள்ளை படிக்கிற பள்ளிக்கூட மானத்தை கப்ப லேத்தினால் உங்கட பிள்ளைக்கும்தானே மரியாதை இல்லை' எண்டெல்லாம் மண்டையைக் கழுவி, அவை யின்ர வாயை அடைச்சுப் போடுவினம். அதோட அந்த விசயம் கிணத்துக்குப் போட்ட கல்லுமாதிரி அப்பிடியே தாண்டுபோடும். சில பெற்றோர் இதுகளுக்கெல்லாம் மசி யாமல் சட்டநடவடிக்கை எடுக்கப்போறம் எண்டு வெளிக்கிட்டால், 'என்ன ஆதாரம் இருக்கு?' எண்டு கேப் பினம். பள்ளிக்கூடத்தில பிள்ளையை ரீச்சர் அடிச்சதுக்கு எப்பிடி ஆதாரம் திரட்ட ஏலும்? அடிகாயத்தை மட்டும் வைச்சுக்கொண்டு அது ரீச்சர் அடிச்சுத்தான் வந்தது எண்டு எண்பிக்கேலாதே. அதால பள்ளிக்கூடக்காரரோட சண்டையைப் பிடிச்சுக்கொண்டு, தங்கட பிள்ளையை வேற பள்ளிக்கூடத்துக்கு மாத்துறதுதான் பெற்றார் செய்யிற ஆகப்பெரிய நடவடிக்கை.

ஆனால் இப்ப அப்பிடியெல்லாம் ஆதாரமில்லை எண்டு பள்ளிக்கூடக்காரர் மழுப்ப ஏலாது. எல்லாரின்ர கையிலையும் போன் இருக்கு. எல்லாரும் எப்பவும் வீடியோ எடுக்கலாம். போட்டோ எடுக்கலாம். கதைக் கிறதை ரெக்கோர்ட் பண்ணலாம். அதுதான் இப்ப ரீச்சர்மா ருக்குப் பெரும் தலையிடி. இப்பவெல்லாம் அடிக்கடி பள்ளிக்கூடங்களில் பிள்ளையளுக்கு ரீச்சர்மார் அடிச்ச செய்தியள் வாறதுக்கு காரணமும் உந்தப் போன்தான். பாதிக்கப்பட்ட பிள்ளையளின்ர பெற்றோர், அந்தப் பிள்ளைக்கு அடிச்ச ரீச்சரோடையோ இல்லாட்டி பிரின்சிப்பலோடையோ போன்ல கதைச்சு,அதை ஆதாரமா ரெக்கோர்ட் பண்ணிட்டு, பிறகு அதை எங்க குடுக்க வேணுமோ அங்க குடுத்து பிரச்சினையை வெளியில கொண்டந்திருகினம். இதால அடிச்சதை இல்லையெண்டு சொல்லவும் ஏலாமல், அடிச்ச ரீச்சரில அக்ஷனும் எடுக்க ஏலாமல் பள்ளிக்கூடக்காரர் தடுமாறுகினமாம். இதைத் தடுக்கிறதுக்கு இப்ப ஒரு வழியைக் கண்டுபிடிச்சு, அதை எல்லா ரீச்சர்மாருக்கும் அறிக்கையாகவும் அனுப்பியிருக்கு ஆசிரியர் சங்கம்.

'இனிமேல் ரீச்சர்மார் பெற்றாரோடையோ, தேவையில்லாத ஆக்களோடையோ, போனில கண்டபடி கதைக்கவேண்டாம். ஏலுமட்டும் அப்பிடியான கோலை கதைக்காமல் விடுறது இன்னும் நல்லது' எண்டமாதிரி ஒரு அட்வைஸ் அறிக்கை எல்லா ரீச்சர்மாருக்கும் அனுப்பப்பட்டிருக்கு. சீப்பை ஒளிச்சு வைச்சால் கலியா ணத்தை நிப்பாட்ட ஏலுமோ? இப்பிடி கோல் கதைக்கிறதை நிப்பாட்டுறதைவிட, பிள்ளைக்கு அடிக்காமல் இருங்கோ எண்டுதானே அந்தச் சங்கம் சொல்லியிருக்கோணும். குற்றத்தை தடுக்கிறதை விட்டிட்டு, குற்றம் செய்துபோட்டு எப்பிடித் தப்பலாம் எண்டு ஐடியா குடுக்கிறதுக்குதான் உந்தச் சங்கங்கள் இருக்கோ?

(08.04.2024- உதயன் பத்திரிகை)

#புதினம்

📌 #ஆசிரியர்_தலையங்கம்மறுவாழ்வு மட்டுமே தீர்வல்ல!யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய...
10/04/2024

📌 #ஆசிரியர்_தலையங்கம்

மறுவாழ்வு மட்டுமே தீர்வல்ல!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய மிகமுக்கியமான குழுவொன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வலைப்பின்னல் தொடர்பில் முற்றுமுழுதான விசாரணைகளை நடத்திவருவதுடன், மேற்படி போதைப் பொருள் கடத்தல்காரர்களின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் என்பவற்றை முடக்கி, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதற்கான செயற்பாட்டு நடவடிக்கைகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப் பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு ஆட்படுவது சாதாரணமான விடயமாக இன்று மாறி விட்டது. சிறுவர்கள், யுவதிகள், இளைஞர்கள் என எல்லா வயதுப் பிரிவினரையும் - சமூகப் பிரிவு களையும் போதை மிக இலாவகரமாக இரையாக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சமூகச் சீரழிவுகள், கலாசாரச் சீரழிவுகள் என போதையின் பிடியில் நின்று உழலும் இளைஞர்களையும், யுவதிகளையும் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புகின்றபோதி லும், எந்தவொரு காத்திரமான முன்னேற்றமும் ஏற்பட்டதாகவில்லை. போதையைத் தடுப்ப தற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களை விட வும், போதை இளைஞர்களிடத்தில் பரவும் வேகமே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மறுவாழ்வுக்குட்பட்டோர்கூட மீண்டும் மீண்டும் போதையின் பாதையில் பயணிக்கத் தலைப்படு வதையும் கண்முன்னே காணக்கூடியதாகவுள்ளது. ஏனெனில், மறுவாழ்வுக்கு ஒருவர் சென்று வந்தாலும், அவருக்கு மீண்டும் போதைப்பொருள் கிடைப்பதற்கு ஏதுவான அணுகல் நிலை சமூகத்தில் உயிர்ப்புடன் இருக்கும்போது எவ்வாறு மறு வாழ்வுத்திட்டம் வெற்றியளிக்கமுடியும்? போதைக்கு எதிரான நடவடிக்கைகள் எனப்படுபவை வேரில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டி யவை. கண்ணுக்குத் தெரியும் கிளைகளை அகற்றுவதால் எந்தமாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாற்றம்பெற்று, நெடுங்காலம் ஆகிவிட்ட நிலையில், எவ்வளவுக்கெவ்வளவு சட்டம் இறுக்கப்படுகின்றதோ, தண்டனைகள் கடுமையாக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு போதையின் பாதை சுருங்கிச் செல்லும். ஆதலால், இதுவிடயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியவர்களாக பொலிஸாரே இருக்கின்றனர். எனவே, வழமையான கைது, விளக்கமறியல், மறுவாழ்வு என்ற செயற்றிட்டங் களுக்கு அப்பால், போதைப்பொருள் மாபியாக் களின் சொத்துகளை முடக்குவது, வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை 'யுக்திய' சுற்றிவளைப்பின்கீழ் செயற்படுத்துவது வரவேற்கத்தக்கதே.
எந்தவொரு நாட்டில் போதைப்பொருள் தலை விரித்தாடுகின்றதோ அங்கு மருத்துவத்துறைக்கான நிதியொதுக்கீடுகள் அதிகரிக்கும், பணம் தண்ணீ ராகச் செலவாகும், இதுவே யதார்த்தம். ஆதலால், இலங்கையில் கட்டற்று ஊடறுத்துத் திரியும் போதைப்பொருள், மருத்துவத்துறையை ஆட்டம் காணச்செய்வதுடன், கஜானாவையும் காலி செய்யும். அவ்வாறான நிலைமைக்குள் நாடு வீழ்வதற்கு முன்னர், போதைப்பொருள் மாபியாக்களை கூண்டோடு இல்லாதொழிப்பதுதான் நாட்டின் இருப்பும் எதிர்காலமுமாகும்...!

(08.04.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன்

📌(10/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்|            #ராசிபலன்கள்
10/04/2024

📌(10/04/2024) இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்| #ராசிபலன்கள்

Address

361, Kasthuriyar Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Uthayan Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uthayan Tv:

Videos

Share

Category

Nearby media companies