29/11/2023
4000 குழந்தைகளை கொலை செய்தது
போதாது, இன்னும் வேண்டும் என்ற
பாதுகாப்பு ஆலோசகருக்கு எதிராக
வலுக்கும் மக்கள் எதிர்பபு
காஸாவில் 4000 குழந்தைகளை கொலை செய்தது போதாது எனவும் மேலும் பலஸ்தீன் குழந்தைகளை கொலை செய்ய வேண்டும் எனவும் குரோதமாக பேசிய முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் ஹலால் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடாத்தி வரும் எகிப்தை சேர்ந்த ஒருவருடன் கருத்து மோதலில் ஈடுபட்ட செல்டோவிட்ஸ் எனப்படும் இவர் முஹம்மது நபியவர்களையும் தகாத முறையில் திட்டியுள்ளார்.
ஆங்கிலம் பேச தெரியாத எகிப்தை சேர்ந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் இவர் பேசும் போது அவற்றை வீடியோ செய்துள்ளது இப்போது உலகெங்கும் வைரல் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் வன்மமாக கருத்து தெரிவித்த இந்த நபர் நாம் இங்கே உங்கள் குர் ஆணை மலசல கூட துடைப்பானாக தான் பயன்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டுவதாக உள்ளதாக அமெரிக்கா பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்த அதிகாரி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் தன்னை இவ்வாறு பேச தூண்டும் விதமாக கருத்து தெரிவித்தார் என தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த காணொளியில் எகிப்தை சேர்ந்த நபர் ஆங்கிலம் தெரியாமல் இன்த அதிகாரியை Go Go என கூறுவது மட்டுமே பதிவாகியுள்ளது. இவரது இந்தக் கருத்ததை அமெரிக்காவின் சமூக ஆர்வளர்கள் மற்றும் அரசியல் பிரமுகள் பொதுமக்கள் என பலரும் கண்டித்து வருகின்றனர்