16/02/2023
கட்டுநாயக்கா விமாண நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இ.போ.சபை பேருந்து சேவைக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் வரவேற்பு..
தினசரி காலை 05 .00 மணி மற்றும் காலை 08.00 மணி க்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள பேருந்து சேவை வெளிநாடுகளில் இருந்து வரும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பயணிகளுக்கு இலகுவானதும் விரைவானதுமான சேவையாகும்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் போக்குவரத்து சேவை மீண்டும் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளதால் பேருந்து பஸ்களை தேடி சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. தற்பொழுது விமானநிலையத்தின் உள்ளயே இவ் பேருந்து சேவை தயாராக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, செங்கலடி,ஏறாவூர்,மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கல்முனை,அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பயணிகள் பணங்களை வீணாக்காமல் , உரிய நேரத்திற்க்கு வீடு செல்வதற்கும் இச் சேவை மிகப்பெரும் பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேருந்து தொடர்புகளுக்கு
ஏறாவூர் சாலை - 0652240274