Punnaikkayal Voice

Punnaikkayal Voice A place where all Punnaikkayalans can be together here

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் தி...
09/09/2021

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்.

தாமிரபரணி | தூத்துக்குடி | திருநெல்வேலி | ஆதிச்சநல்லூர் | கொற்கை | சிவகளை

#பொருநை_ஆற்றங்கரை_நாகரீகம்

மின்னொளியில்... ⛩️
03/09/2021

மின்னொளியில்... ⛩️

சுரண்டப்படும் புன்னை மண்ணின் இயற்கை வடிகால்புன்னைக்காயல் கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற கடற்கரை ஊர்களை போன்ற மணற...
01/09/2021

சுரண்டப்படும் புன்னை மண்ணின் இயற்கை வடிகால்

புன்னைக்காயல் கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற கடற்கரை ஊர்களை போன்ற மணற்பகுதியான நில அமைப்பைக் கொண்டதில்லை (கடற்கரை பகுதியை தவிர). இதற்கு காரணம் தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆறு பல கிளைகளாகப் பிரிந்து இங்கு கடலுடன் கலப்பதால் தீவுப் போன்ற பல கழிமுகப் பகுதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு பகுதியில் தான் நமது கிராமமும் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஊருக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுவது காலம் காலமாக தொடர்ந்து வருவது தான். தாமிரபரணியின் கடைமடைப் பகுதியாக இருப்பதால் வெள்ளப்பெருக்கு என்பது நாம் வழக்கமாக எதிர்கொள்ளும் ஒன்று தான். ஆனால் எந்த நதியால் வெள்ளப்பெருக்கை நாம் எதிர்கொண்டேமோ அதே நதி அந்த வெள்ளப்பெருக்கை வடிய வைக்கும் வடிகால்களையும் நமக்கு தந்து உதவியதுதான் அதன் சிறப்பு. ஆனால் அது இன்று அறியாமையாலும், ஒரு சிலரின் பேராசையாலும் ஆக்கிரமிக்கப்பட்டும் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டும் கொண்டிருக்கிறது. அதுதான் சவேரியார் கோயில் பகுதி வழியாக ஓடும் ஆறு.

இக்கிளை ஆறானது நூறு வீடு தெற்கு பகுதி வழியாக ஓடும் கிளை ஆறில் இருந்து பிரிந்து பவுலா நகர், இருதயபுரம், சவேரியார் ஆலயம், தெற்குத் தெரு வழியாக கடற்கரை பகுதியை அடைகிறது. ஒருகாலத்தில் எப்போதும் தண்ணீர் நின்று கொண்டிருந்த (backwaters) இந்நதியில் மீன், இறால், நண்டு எப்போதும் கிடைத்து கொண்டிருந்தது. ஆனால் எப்போது இந்த கிளை தண்ணீர் (backwaters) இன்றி வறண்டுப்போனதோ அப்போதிருந்து ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த இந்த கிளை ஆறு தான் இவ்வளவு காலம் புன்னையில் பெய்த பெருமழையையும், தாமிரபரணியால் ஊருக்குள் வந்த வெள்ளப்பெருக்கையும் கடலுக்குள் கொண்டு செல்லும் வடிகாலாக பயன்பட்டு வந்திருக்கிறது. (இனி இந்த கிளை ஆறை பின்வரும் பத்திகளில் புரிதலுக்காக சவேரியார் வடிகால் என்று குறிப்பிட்டுள்ளேன்)

சவேரியார் வடிகாலின் ஓரத்தில் தெற்குப்பகுதியில் உள்ள 60 வீடு, நூறு வீடு பகுதியில் பெய்யும் மழை நீரும், வடக்குப் பகுதியில் உள்ள பவுலா நகர், இருதயபுரம் பகுதியில் பெய்யும் மழை நீரும் இயற்கையாகவே இவ்வடிகால் வழியாக வழிந்து கடலுக்கு சென்று விடும். மேலும் தெற்குத் தெருவின் பள்ளமான பகுதியான அந்தோணியார் கோவில் பகுதியில் தேங்கும் வெள்ள நீரும் சவேரியார் வடிகாலின் வழியாகவே வடிந்து கடலுக்கு செல்லும். இந்தப் பகுதிகள் மட்டுமில்லாமல் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் வேளாங்கண்ணி மாதா கோவில் பகுதியிலிருந்தும், மறக்குடி தெரு பகுதியிலிருந்தும் வெள்ளமானது வடக்குப் பகுதியில் உள்ள ஆறின் மூலமாக வெளியேறாமல் ஆத்தூர் மெயின் ரோட்டைக் கடந்து இருதயபுரம் மற்றும் பவுலா நகர் பகுதிகளில் நுழைந்து சவேரியார் வடிகாலின் மூலமாகவே வெளியேறும். இதற்கு கடந்த வருட வெள்ளமே உதாரணம் எப்படி மெயின் ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது, வேளாங்கண்ணி மாதா கோவில் பகுதிகள் மற்றும் மறக்குடித் தெரு பகுதிகளில் உள்ள மழை நீரானது எங்கெல்லாம் ரோட்டை கடந்து புனித ஜெபஸ்தியார் கெபி, தெருக்கள் வழியாக சவேரியார் வடிகாலை சென்றடைந்தது என்று.

இப்படி ஊரில் தேங்கும் 70 சதவீத வெள்ளநீரை வெளியேற்றும் இவ்வடிகாலின் முக்கியத்துவம் அறியாமல் அதனை நில ஆக்கிரமிப்புக்கும், குப்பை கொட்டுவதற்குமான இடமாகவும் மாற்றி வைத்திருக்கிறோம். வடிகாலின் கரையோரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு உள்ளது (இடுகாடு உட்பட). வடிகாலுக்குள் நீர் வழிந்து செல்ல வழியில்லாமல் வீடுகள் குறுக்கும் நெடுக்குமாக தமக்கு ஏற்றார் போல் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் இப்பகுதிகளில் மக்களிடையே சண்டை வேறு, எங்கள் வீடு வழியாக தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோமென்று. இந்த பிரச்சினை போதாதென்று புதிது புதிதாக வீடுகள் வடிகாலுக்குள் உருவாகி கொண்டிருக்கிறது. ஆற்றில் ஆங்காங்கே வீட்டிற்கான அஸ்திவாரங்கள் தென்படுகின்றன. இதுதான் மிகப்பெரிய ஐயமாக இருக்கிறது, காலப்போக்கில் வடிகால் முழுவதுமே வீடுகளால் நிரம்பி விடுமோ என்று. ஆற்றுக்குள் வீடுகள் கட்ட ஊர் நிர்வாகமும், பஞ்சாயத்து அமைப்பும் எப்படி அனுமதிக்கிறது? இயற்கை நீர் வழிப்பாதையை மூடி எதன் வழியாக வடிகால்கள் அமைக்கப் போகிறோம்? பெருநகரங்களில் செய்யும் குளங்களையும் நீர் வழிப்பாதையும் மூடி அதில் பிளாட் போட்டு விற்கும் அற்பத்தனமான புத்தியால் அவை எவ்வளவு துன்பப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே. கடும் மழைக்காலங்களில் ஊரில் பெய்யும் மழை நீரும் வெளியேற வடிகால் அவசியம் என்பதை புரிந்து கொள்ள மறுப்பதேன்? தண்ணீர் வெறியேறாமல் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவ காரணமாகவும் அமைகிறது.

ஒரு சிலர் தடுப்பணை கட்டப்படுகிறது, இனி ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்படாது என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர். கடந்த வெள்ளப்பெருக்கின் போது தாமிரபரணியில் 70000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இவ்வளவு தண்ணீரையும் கடைமடைப் பகுதியில் உள்ள இரண்டு அடி உயரமுள்ள தடுப்பணை கட்டுப்படுத்தி விடும் என்று எண்ணுவது எவ்வளவு மடத்தனமானது. கடைமடை தடுப்பணை கட்டுவது நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும் கடற்கரையில் இருந்து உவர் நீர் ஊடுருவி நிலத்தை உப்பாக்கி விவசாய நிலங்களை பாழ்படுத்த கூடாது என்பதற்காகவும் தான். அது புன்னையின் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வல்ல. தீர்வென்பது வடிகால் பகுதிகளை தூர்வாரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி மழை நீரானது ஒவ்வொரு தெருவிலிருந்தும் எந்த ஒரு தடங்கலுமின்றி வடிகால்களை அடைய நீர்வழிப்பாதையை உருவாக்குவது தான். மேலும் அந்த சவேரியார் வடிகாலில் நூறு வீடு பகுதிக்கு செல்ல கட்டப்பட்ட பாலமும் ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அப்பாலம் குழாய் அமைப்பில் கட்டப்பட்டுள்ளதால் கடுமையான வெள்ள நேரங்களில் விரைவாக தண்ணீர் வெளியேற அனுமதிப்பதில்லை. வெள்ள நீர் வடிவதற்கு காலம் எடுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஆதலால் போனது போகட்டும் இனியாவது ஊர் நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும் அனைத்து வடிகால் பகுதிகளையும் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தாமல் தூர்வாரி, தூய்மைப்படுத்தி, கரையோரம் உள்ள வீடுகளை ஒழுங்குபடுத்தி நீர் வழிப்பாதையை அமைக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஊரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தகுந்த நபர்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வடிகால்கள் பகுதிகளை ஆக்கிரமித்து விட்டு வரப்போகும் காலங்களில் இன்னும் கடுமையான வெள்ளங்களை எதிர்கொள்ள புன்னை மக்கள் தயார் படுத்திக்கொள்வோம்.

நன்றி

Admin -

இன்று சட்டசபையில் வெளியிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கான மீன்வளத்துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள்.
28/08/2021

இன்று சட்டசபையில் வெளியிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கான மீன்வளத்துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள்.

26/08/2021
இன்று ஊரின் நலன்விரும்பி, கொடை நாயகர் அமரர். டாக்டர் அ ராஜா பிஞ்ஞேயிரா அவர்கள் ஊருக்கு செய்த நலத்திட்டங்களின் நினைவாக அவ...
15/08/2021

இன்று ஊரின் நலன்விரும்பி, கொடை நாயகர் அமரர். டாக்டர் அ ராஜா பிஞ்ஞேயிரா அவர்கள் ஊருக்கு செய்த நலத்திட்டங்களின் நினைவாக அவரை சிறப்பிக்கும் பொருட்டு, பேருந்து நிலையத்தில் அவரின் முழு உருவச்சிலையை உருவாக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் பங்குத்தந்தை, ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்று 75 வது சுதந்திர தினத்தையொட்டி புனித வளன் கலையரங்க திடலில் மூன்று பள்ளிகளின் சார்பாக தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி...
15/08/2021

இன்று 75 வது சுதந்திர தினத்தையொட்டி புனித வளன் கலையரங்க திடலில் மூன்று பள்ளிகளின் சார்பாக தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தைகள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் தலைவர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கப்பல் மாலுமிகள் சங்கத்தின் சார்பாக இரண்டு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் நமது ஊர் மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட் 2021-ல் தூத்துக்குடிக்கான திட்டங்கள்➡️ சென்னையில் அமைக்கப்பட்டதை போன்று தூத்துக்குடியிலும் டைடல் பார்க...
14/08/2021

தமிழ்நாடு பட்ஜெட் 2021-ல் தூத்துக்குடிக்கான திட்டங்கள்

➡️ சென்னையில் அமைக்கப்பட்டதை போன்று தூத்துக்குடியிலும் டைடல் பார்க் அமைக்கப்படும்.

➡️ தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

➡️ தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.

➡️ தூத்துக்குடி எம்.பி திருமதி. கனிமொழி இரயில்வே அமைச்சரை சந்தித்து தூத்துக்குடிக்கு தேவையான புதிய மற்றும் நீட்டிப்பு இர...
11/08/2021

➡️ தூத்துக்குடி எம்.பி திருமதி. கனிமொழி இரயில்வே அமைச்சரை சந்தித்து தூத்துக்குடிக்கு தேவையான புதிய மற்றும் நீட்டிப்பு இரயில் சேவைகள் வழங்குவது பற்றி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

➡️ கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இதே போன்று இரயில்வே அமைச்சரை சந்தித்து தூத்துக்குடிக்கு இரயில் சேவைகள் வழங்குவது குறித்து வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் மீண்டும் சந்திப்பு

திருமதி. காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) ஒன்றிய அரசின் புதிய மீன்வளக் கொள்கையை எதிர்த்து, மீனவர்களின் பிரச்சினையை பேசும்...
10/08/2021

திருமதி. காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) ஒன்றிய அரசின் புதிய மீன்வளக் கொள்கையை எதிர்த்து, மீனவர்களின் பிரச்சினையை பேசும் நேர்காணல்.

கண்டிப்பாக பார்க்க

Kaliammal NTK Interview | Draft Indian Marine Fisheries Bill |BJP Govt | MK Stalin | DMK | TN Govt | IBC Tamilnadu ...

மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மீனவர்கள் முற்றுகை - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!மீனவர்களின் வாழ்வாதாரத்தை ...
09/08/2021

மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மீனவர்கள் முற்றுகை - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 -ஐ கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக என்று கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக் கணக்கான மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீனவர்கள் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் எஸ்பி ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மீனவர் சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில், "மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் மீனவர்கள் தர்மம் எடுக்கும் நிலைக்குதான் தள்ளப்படுவார்கள். தூத்துக்குடி மீன்பிடி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல்முறை அபராதமும், இரண்டு முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும், மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடிக்கும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கிறது. இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை. எனவே மத்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என மீனவர்கள் வலியுறுத்தினர்.

Source - Tutyonline

09/08/2021
நாளை (09.08.2021)  தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய மீன்வள மசோதாவை கண்டித்து ஒருநாள் அடையா...
08/08/2021

நாளை (09.08.2021) தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய மீன்வள மசோதாவை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவலர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் செல்வி. சிமோன்பா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று ஞாயிறு திருப்பலி முடிந்ததும் க...
08/08/2021

காவலர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் செல்வி. சிமோன்பா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று ஞாயிறு திருப்பலி முடிந்ததும் கோவில் மண்டபத்தில் பாராட்டு விழா புன்னை சிறகுகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் புன்னை பங்கு தந்தைகள், மீனவர் சமூக கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சகேஷ் சிந்தியா, மூன்று பள்ளி ஆசிரியர்கள், ஊர் தலைவர், பஞ். தலைவர், ஊர் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு செல்வி சிமோன்பாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சவேரியார்_கோவில்_கொடுமைகள்
08/08/2021

சவேரியார்_கோவில்_கொடுமைகள்

Manappad got fully vaccinated 👏
07/08/2021

Manappad got fully vaccinated 👏

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு இன்று திருச்செந்தூரில் பூஜையுடன் த...
06/08/2021

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு இன்று திருச்செந்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு தேரிக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மற்றும் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் 'அருவா' படத்தின் படப்படிப்பும் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நடந்து வருகிறது.

தூத்துக்குடி: தூய பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நிறுத...
05/08/2021

தூத்துக்குடி: தூய பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.

1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவர்தான் என்று கூறப்படுகிறது.

பனிமயமாதா

மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறார் பனிமய மாதா. இந்த ஆலயத்திற்கு தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். போன்றவர்கள் வருகை தந்து பெருமை சேர்த்துள்ளனர். கி.பி. 1582ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713ஆம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நானூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம்.

மக்களுக்கு ஆசி

சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் ஏசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேராலய திருவிழா

இங்கு ஆண்டு தோறும் இங்கு ஜூலை இறுதியில் திருவிழா தொடங்கி 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பனிமயமாதாஅன்னையை வழிபடுவார்கள்.

தங்க தேரோட்டம்

இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் ஏசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.

கொரோனா பரவல்

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி பனிமய மாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், தூத்துக்குடி துாய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைனில் தரிசனம்

பனிமயமாதா கோவிலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது எனவும், கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழச்சிகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூடியூப் சேனல்கள் மூலமும் ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தத்தம் வீடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை கண்டுகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடு மக்கள்

பனிமயமாதா ஆலய திருவிழா பத்து நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆண்டு தோறும் பனிமயமாதா திருவிழாவைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.

அமைதியான முறையில் திருவிழா

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக அமைதியான முறையில் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளான இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் 7ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. பேராலயம் சுற்றிலும் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source : One india tamil

ஏழு கடற்துறையின் ஏக அடைக்கலத் தாய் தூய பனிமய அன்னையின் திருவிழா வாழ்த்துக்கள்
05/08/2021

ஏழு கடற்துறையின் ஏக அடைக்கலத் தாய் தூய பனிமய அன்னையின் திருவிழா வாழ்த்துக்கள்

04/08/2021
04/08/2021

எங்கே என்று தெரிகிறதா?
01/08/2021

எங்கே என்று தெரிகிறதா?

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது - கனிமொழி எம்.பி➡️ கொரோனா பரவல் 2-ம் அலை அத...
01/08/2021

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது - கனிமொழி எம்.பி

➡️ கொரோனா பரவல் 2-ம் அலை அதிகரித்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

➡️ தற்போது ஆக்சிஜன் தேவை இல்லாத நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு உற்பத்தி செய்து வைத்துள்ள ஆக்சிஜனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக குறைந்தளவு மின்சாரம் வழங்கப்படுகிறது.

➡️ உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை முழுமையாக வெளியே கொண்டு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நிறுத்தப்படும் என தூத்துக்குடியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

ஆண்டுக்கு 10 மில்லியன் டன் -க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றதாம். அதில் ஏதோ நம்மால் முடிந்த பங்கு......
31/07/2021

ஆண்டுக்கு 10 மில்லியன் டன் -க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றதாம்.
அதில் ஏதோ நம்மால் முடிந்த பங்கு...🤦‍♀️

புதிதாக கட்டப்பட்ட படகுத்துறைக்கு மேற்குப்பகுதி



தாமிரபரணி கடைமடை தடுப்பணை கட்டும் திட்டத்தில் புன்னைக்காயல் DCW குடியிருப்பு தாமிரபரணி பாலம் அருகே  முதற்கட்ட பணிகள் ஆம்...
30/07/2021

தாமிரபரணி கடைமடை தடுப்பணை கட்டும் திட்டத்தில் புன்னைக்காயல் DCW குடியிருப்பு தாமிரபரணி பாலம் அருகே முதற்கட்ட பணிகள் ஆம்பிக்கப்பட்டு தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாலை வேளையில் புன்னை தாமிரபரணி கழிமுகம்
30/07/2021

மாலை வேளையில் புன்னை தாமிரபரணி கழிமுகம்

வரும் வியாழன்(29.07.21) மாதாந்திர பராமரிப்பு காரணமாக  ஆத்தூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ந...
27/07/2021

வரும் வியாழன்(29.07.21) மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஆத்தூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நமது ஊரில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

26/07/2021

இனி முகப்புத்த பக்கமாய் புன்னைக்காயல் வாய்ஸ்

Like | Follow | Get updates of our place

இணைந்திருப்போம் 🤝

Address

Tuticorin

Website

Alerts

Be the first to know and let us send you an email when Punnaikkayal Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Punnaikkayal Voice:

Share


Other Tuticorin media companies

Show All