R TV

R TV R TV is an online page. You can get all the political-related news, politician speech, Tami
(1)

10/06/2024

இது எந்த ஊரு கோவில் தெரியுமா...?

08/06/2024
ஊதியூர் மலை..!!ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மல...
07/06/2024

ஊதியூர் மலை..!!

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது.

அந்த மலையை ஊதியூர் மலை என்று அழைக்கப்படுகிறது.

இம்மலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார்.

இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது.

இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது.

வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும்.

இந்தக் குகையிலிருந்து பழநி அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்தது.

கொங்கணர் தங்கம் பதுக்கி வைத்தருக்குன்றார் என்ற மக்களின் தேடுதலால் மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டு விட்டது.

கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனவர் என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது.

அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலையை காட்டுக்குள் வீசிவிட்டனர்.

முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போனது.

பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் அதே சிலையை காட்டில் இருந்து கொண்டு வந்து பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மலையில் சித்தரால் உபயோகிக்கப்பட்ட மண் குழல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாழ்பட்டன.

அதனால் சித்தர் உலாவிய அந்த இடங்கள் தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர் முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம்.

அதற்கும் சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது.

பொன்னுருக்கி சித்துகளைச் செய்த கொங்கணவர் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் தாமே சுயம்புவாக ஊதி மலையில் காட்சியளிக்கிறார்.

இம்மலையின் புராணபெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும்.

வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர்.

மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன.

இம்மலையிலேயே கொங்கண சித்தருக்கும் தனிக்கோயில் உள்ளது.

அருணகிரிநாதர் முருகபெருமானை தரிசித்த 120 வது தலம் ஊதிமலை.

முருகனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கோவையின் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

கோவிலின் முதலில் பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது,

அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம்.

156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது.

தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல்.

கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது.

உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர்.

அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர்.

ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர்.

அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார்.

புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும் கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும் அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.

இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது.

அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது.

இங்கு கொங்கண சித்தர் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார்.

சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என்றும் மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார்.

கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்றார்.

திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் கோவிலில் உள்ள வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை, கால்களில் வெட்டினான்.

இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே வெட்டுப்பட்டு இறப்பாய்.

எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்தார்கள்.

அதுபோலவே திப்புசுல்தான் இறந்தார். இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது.

முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார்...

#ஊதியூர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காங்கேயம் to தாராபுரம்,பழனி சாலையில் காங்கேயத்திலிருந்து 13 வது கி.மீட்டரில் ஊதியூர் மலை அமைந்துள்ளது...

06/06/2024

தண்ணீரை முதன்முதலில் விற்று காசாக்கிய
பெருமை #பால்காரனையும்...
காற்றை முதன் முதலில்விற்று காசாக்கிய
பெருமை #பலூன்காரனையே
சேரும்...

https://youtu.be/8jjOrJHDhXg #ராதிகா  வெற்றி பெற வேண்டி  #சரத்குமார் செய்த செயல்… வைரலாகும் வீடியோ! | viral video | RTV ...
03/06/2024

https://youtu.be/8jjOrJHDhXg

#ராதிகா வெற்றி பெற வேண்டி #சரத்குமார் செய்த செயல்… வைரலாகும் வீடியோ! | viral video | RTV |

தேர்தலில் வெற்றி வேண்டி ஆண்டாள் கோவிலில் ராதிகா வழிபாடு! விருதுநகரில் ராதிகா வெற்றி பெற வேண.....

https://youtu.be/8jjOrJHDhXg
03/06/2024

https://youtu.be/8jjOrJHDhXg

தேர்தலில் வெற்றி வேண்டி ஆண்டாள் கோவிலில் ராதிகா வழிபாடு! விருதுநகரில் ராதிகா வெற்றி பெற வேண.....

03/06/2024

இல்ல காதணிவிழா

இது போன்ற அழைப்பிதழ்கள் மிக குறைந்த கட்டணத்தில்05 மணிநேரத்தில் கிடைக்கும்தேவைக்கு...cell : 9787225612
03/06/2024

இது போன்ற அழைப்பிதழ்கள் மிக குறைந்த கட்டணத்தில்
05 மணிநேரத்தில் கிடைக்கும்
தேவைக்கு...
cell : 9787225612

இது போன்ற  #மல்டிகலர்_பிரிண்ட் அழைப்பிதழ்கள் மிக குறைந்த கட்டணத்தில்15 மணிநேரத்தில் கிடைக்கும்தேவைக்கு...cell : 97872256...
03/06/2024

இது போன்ற #மல்டிகலர்_பிரிண்ட் அழைப்பிதழ்கள் மிக குறைந்த கட்டணத்தில்
15 மணிநேரத்தில் கிடைக்கும்
தேவைக்கு...
cell : 9787225612

இவரை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க!
02/06/2024

இவரை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க!

நீதிக்கட்சியின்  #வைரத்தூன் என பெரியாரால் அழைக்கப்பட்டவர்..தமிழக மக்களே நினைவுக்கொள்ளுங்கள்...இவர் மட்டும் இல்லாமல் போயி...
31/05/2024

நீதிக்கட்சியின் #வைரத்தூன் என பெரியாரால் அழைக்கப்பட்டவர்..
தமிழக மக்களே நினைவுக்கொள்ளுங்கள்...
இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரை எவராலும் துடைத்திருக்க முடியாது.. .
#ராவ்பகதூர் ்னீர்செல்வம் #உடையார்
சூன் 01 பிறந்த நாளில் வணங்குகிறேன்



சிவாயநம. #ஏலாக்குறிச்சி  கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு  #பாலதண்டாயுத_சுவாமி,  அருள்மிகு  #கைலாசநாதர்_சுவாமி கோவிலில்,...
31/05/2024

சிவாயநம.

#ஏலாக்குறிச்சி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு #பாலதண்டாயுத_சுவாமி, அருள்மிகு #கைலாசநாதர்_சுவாமி கோவிலில்,

விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி

திருவையாறு வடகயிலை சிவனடியார் திருக்கூட்டத்தினரின் சார்பில் #திருவாசகம் _முற்றோதுதல், என்ற ஞான வேள்வி நடைபெறுகின்றது.

02-06-2024. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09 மணி முதல் 10 மணிவரை தேவாரம் பாராயணமும், 10.05 மணிமுதல் மாலை 05 மணி வரை திருவாசகம் முற்றோதுதல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை இவ்வூரின் கிராம நாட்டாண்மைகள் மற்றும் ஊர் பொதுமக்களும், கோவில் நிர்வாகத்தினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அனைவரும் இந்த ஞான வேள்வியில் பங்கு பெற்று பயன் அடைய அன்புடன் அழைக்கிறோம்.

ஏலாக்குறிச்சியில் பழமையான சிற்பங்களை தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை...
31/05/2024

ஏலாக்குறிச்சியில் பழமையான சிற்பங்களை தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை...

ராமராஜன் ❤️சாமானியன் படம் வருவதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு காண் தளங்களிலும் ராமராஜனின் பேட்டி ஓடுது. ஒவ்வொன்றாகத் தேடித் த...
30/05/2024

ராமராஜன் ❤️

சாமானியன் படம் வருவதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு காண் தளங்களிலும் ராமராஜனின் பேட்டி ஓடுது. ஒவ்வொன்றாகத் தேடித் தேடிக் கேட்டேன் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு புதுத்தகவலை அள்ளி விடுகிறார்.

மிக இயல்பான, வெள்ளாந்தித்தனமான பேச்சு.

“சாமானியன் இடைவேளை இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமையாக இருக்கும்” என்று ராமராஜன் சொல்ல,

பதிலுக்கு “இந்திய அளவிலா?” என்று நேர்காண்பவர் கிடுக்கி போட
“அதெல்லாம் எனக்குத் தெரியாது தமிழ்லதான் சொல்றேன்”
என்கிறார்.

“சூப்பர் ஸ்டார் ரஜினியை எல்லாம் மிஞ்சிட்டீங்களாமே?”
என்றால்
“அதெல்லாம் இல்லை 1989 தீபாவளிக்குத் தங்கமான ராசா, அன்புக்கட்டளை இரண்டும் ரிலீஸ் ஆச்சு, அதில் தங்கமான ராசா படம் ஒண்ணேகால் லட்சம் ஷேர் ரஜினி சாரின் மாப்பிள்ளை படம் ஒரு லட்சம், அவ்வளவு தான் அவர் எவ்வளவு பெரிய ஆளு”
என்று மீண்டும் பிடி கொடுக்காமல் பேசுகிறார்.

நாயகனாக 45 படங்கள் நடித்தவர், கதாநாயகனாக வருவதற்கு முன் துணை பாத்திரங்களிலும் தலை காட்டியிருக்கிறார்.
அப்படித்தான் அவர் இராம நாராயணின் உதவி இயக்குநராக இருந்த போது மோகனுடன் நடித்திருக்கிறார். அப்போது அவர் நிஜப்பெயர் ஏ.ஆர்.குமரேசன் என்றே வைத்திருக்கிறார்.

மருதாணி படத்தை இயக்கிய போது பாண்டியனுக்கும், சோலை புஷ்பங்களே இயக்கிய போது சந்திரசேகருக்கும் குடி, புகை எதுவும் இல்லாமல் நடிக்க வைத்தேன். நானே தொடமாட்டேன். நல்லவேளை (கங்கை அமரன் ) அண்ணன் மகன் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் நடிக்கலை என்கிறார். அந்தப் படத்தில் பாக்சர் என்ற பெயரை முன்னர் வைத்து இவரை குத்துச்சண்டை வீரராக நடிக்க வைக்க இருந்தாராம் வெங்கட் பிரபு, நானே அரை ட்ராயர் என்னை யார் குத்துச்சண்டை வீரரா ஏத்துப்பாங்க என்கிறார்.

“மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி” பாடல் எங்க ஊரு மாப்பிள்ளைக்காகப் போடப்பட்டதாம், ராமராஜன் வேண்டாமென்றதால் ராஜாதி ராஜாவுக்குப் போனது அவரின் துரதிஷ்டம்.

இவரை நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் நாயகனாக்கிய வேந்தப்பட்டி அழகப்பன் அடுத்து பூமழை பொழியுது படத்தில் நதியா ஜோடியாக நடிக்க வைக்க வந்தாராம். ஆனால் விஜயகாந்துடன் இரட்டை நாயகர் வேடம் என்பதால் மறுத்து விட்டாராம். ராமராஜன் மறுத்த பாத்திரம் சுரேஷுக்குப் போனது.
ஆனால் அந்தப் படத்தைப் பொறுத்தவரை சுரேஷ் பாத்திரம் ராமராஜனுக்கு செட் ஆகவே ஆகாது. விஜயகாந்த் பாத்திரத்தில் நடித்திருந்தால் ஊரு விட்டு ஊரு வந்து படத்துக்கு முன்பே ராமராஜன் சிங்கப்பூரில் நடித்திருப்பார். படமும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு. ஏனெனில் விஜயகாந்துக்கும் அந்தப் பாத்திரம் பொருந்தவில்லை.

பார்த்தால் பசு படத்தில் ராமராஜனுக்குப் பாடல்கள் இல்லை. ஆனால் அந்தப் படத்தில் பாடல்களே இல்லை என்று சொல்கிறார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய அந்தப் படத்தின் ஆரம்பக் காட்சி ஒரு கொலையோடு மிரட்டும். ஆனால் கே.எஸ்.ஜி தன் பாணியில் ஒரு குடும்பக் கதை கொடுத்திருந்தால் இன்னொரு வெற்றிப்படமாக ராமராஜன் & இளையராஜா கூட்டணிக்கும் அமைந்திருக்கும். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் எண்பதுகளில் ஒரு அடையாளப் படமாய் இருந்திருக்கும்.

சாமானியன் படத்தில் பாடலே இல்லையா? என்று இளையராஜா துணுக்குற்று, பின்னர் மூன்று பாட்டு. அதில் ஒன்று ராமராஜனுக்காக ராஜாவே பாடிக் கொடுத்தாராம்.
அடுத்த படத்துக்கு 5 பாட்டோட வா என்று ராஜா சொல்லவும், ஆறு பாட்டு குடுங்கண்ணே என்று ராமராஜன் கேட்டிருக்கிறார்.
இது தெரியாமல் இன்னும் சில பழம் பெருச்சாளிகள் ராஜாவுக்குப் பணத்து மேல ஆசை என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜா, கங்கை அமரனுக்கு அடுத்து உங்க கடைசித்தம்பி நாந்தான் என்று உரிமையெடுத்துப் பழகும் ராமராஜனின் தோளில் கை போட்டுப் படம் எடுத்த ராஜா சொன்னாராம், யாரோடும் இப்படித் தோளில் கைபோட்டு நான் எடுத்ததில்லை என்று.

படித்ததை பகிர்கிறேன் நண்பர்களே

30/05/2024

உலக செஸ் சாம்பியன் கார்லசனை மீண்டும் வீழ்த்தினார் திருநீறு தீரன் பிரக்ஞானந்தா. அதிலும் இம்முறை மிக கடினமான கிளாசிக்கல் ச...
30/05/2024

உலக செஸ் சாம்பியன் கார்லசனை மீண்டும் வீழ்த்தினார் திருநீறு தீரன் பிரக்ஞானந்தா. அதிலும் இம்முறை மிக கடினமான கிளாசிக்கல் செஸ் பிரிவு ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்லசனின் சொந்த நாடான நார்வேயிலேயே அவரை பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு புறம் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உலக பெண்கள் செஸ் போட்டிகளில் முன்னணி வகித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே குடும்பத்தில் முளைத்த இரு ரத்தினங்கள்.

மேலும் மேலும் இவர்கள் தேசத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

Ariyalur

எப்ப பார்த்தாலும்பிரியங்கா சோப்ரா.,கங்கனா ரனாவத் னுஇவளுக பின்னாடியே திரிஞ்சா.,"காந்தி"ய பத்திஎப்படி தெரியும்.?
30/05/2024

எப்ப பார்த்தாலும்
பிரியங்கா சோப்ரா.,
கங்கனா ரனாவத் னு
இவளுக பின்னாடியே திரிஞ்சா.,
"காந்தி"ய பத்தி
எப்படி தெரியும்.?

https://youtube.com/shorts/-uUKytQtldc
30/05/2024

https://youtube.com/shorts/-uUKytQtldc

video #இறுதி வரை பாருங்க #காமெடிக்கு நாங்க கேரண்டி | Tamil comedy videos

27/05/2024

ஜுன் 4ல் சாமானியனுக்கு மாற்றம் வருமா? உண்மையை உடைத்த ராமராஜன் | Ramarajan speech latest 2024 | RTV

https://youtu.be/7La83hrDkS8
27/05/2024

https://youtu.be/7La83hrDkS8

ஜுன் 4ல் சாமானியனுக்கு மாற்றம் வருமா? உண்மையை உடைத்த ராமராஜன் |Ramarajan speech latest 2024 | RTV ...

https://youtu.be/63O86bdHZnU?si=1OEcEGeoXvsbJnYg
26/05/2024

https://youtu.be/63O86bdHZnU?si=1OEcEGeoXvsbJnYg

Saamaniyan Movie Review | Samaniyan 3 day collection report | சாமானியன் விமர்சனம் | RTV | RAMARAJANSaamaniyan Movie Review , Ramarajan , Radharavi , MS Bask...

18/05/2024

எனது நீண்ட நாள் கனவான வீட்டுத்தோட்டம் அமைக்கும் பணி நிறைவுற்றது...
7 சென்ட்டில் அமைத்துள்ளேன்...
அதற்கு தேவைப்படும் நாட்டுவிதைகள் கிடைக்கவில்லை...
விதைகள் வைத்திருப்போர் உதவவும்.

வீட்டுத்தோட்டம் பராமரிப்பு பற்றி அறிவுரைகள் வழங்கவும்...

விவசாயம் காப்போம்...

எங்களது செல்லமகள்  ிழரசி அவர்கள்  #ஏலாக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்  தேர்ச்சி பெற்றார்...நெஞ்சம்நிறைந்ந  #வ...
10/05/2024

எங்களது செல்லமகள் ிழரசி அவர்கள் #ஏலாக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்றார்...

நெஞ்சம்நிறைந்ந #வாழ்த்துக்கள்

10/05/2024

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம். அரசு பள்ளிகளிலும் முதலிடம் அரியலூர் மாவட்டம்...

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.1. *தமிழர்கள்*2. *சீனர்கள்.*3. *ஆரியர்கள்.*4. *அ...
08/05/2024

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
1. *தமிழர்கள்*
2. *சீனர்கள்.*
3. *ஆரியர்கள்.*
4. *அரபியர்கள்.*
5. *ரோமர்கள்.*
6. *கிரேக்கர்கள்.*
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.
அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.
சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும் '
*யாதும் ஊரே யாவரும் கேளீர்* என்றனர்.
ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.
*இதுவே தமிழர் பண்பாடு...."

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when R TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R TV:

Videos

Share