தமிழ் மீடியா சிற்றி - Tamil Media City

தமிழ் மீடியா சிற்றி - Tamil Media City News & media website

மீனவர் வலையில் சிக்கிய 2 தங்க மீன்கள்!இந்தியாவின் ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், புடி மடக மீனவர்கள் கடலில் மீன் பிட...
15/01/2025

மீனவர் வலையில் சிக்கிய 2 தங்க மீன்கள்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், புடி மடக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் 2 தங்க நிறத்திலான மீன்கள் வலையில் சிக்கியது.

2 மீன்களை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். ஆண் கச்சடி எனும் வகையை சேர்ந்த இந்த மீன்கள் தங்க நிறத்தில் இருப்பதால் இதை தங்க மீன்கள் என மீனவர்கள் அழைக்கின்றனர்.

மிகவும் சுவை மிகுந்த, மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர்.

புடி மடகாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் 2 மீன்களையும் ரூ.1.40 லட்சத்திற்கு (இந்திய ரூபாய்) ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் எடுத்த மீன்களை கொல்கத்தாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரி ஏற்பாடு செய்தார்.

சங்கராந்தி பண்டிகையையொட்டி மீனவர் வலையில் தங்க மீன் சிக்கி ரூ.1.40 லட்சத்திற்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸார் தீர்மானம்...
15/01/2025

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸார் தீர்மானம்...

கர்நாடகாவில் உள்ள ஒரு போட்டோகிராபர் கட்டிய வீடு!
15/01/2025

கர்நாடகாவில் உள்ள ஒரு போட்டோகிராபர் கட்டிய வீடு!

தென் கொரிய விமானம் விபத்தில் புதிய தகவல்!தென் கொரிய பயணிகள் விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் கொல்லப்பட்...
15/01/2025

தென் கொரிய விமானம் விபத்தில் புதிய தகவல்!

தென் கொரிய பயணிகள் விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானத் தரவு மற்றும் காக்பிட் குரல் பதிவுகள் பேரழிவிற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்வதை நிறுத்தியதாக நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஜெஜு ஏர் விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர், இது கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக மாறியது. விமானத்தின் "கருப்புப் பெட்டிகள்" முதலில் தென் கொரியாவில் ஆய்வு செய்யப்பட்டன என்று அமைச்சகம் கூறியது.

தரவு காணாமல் போனது கண்டறியப்பட்டபோது, ​​அவை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

டிசம்பர் 29 ஆம் அன்று பாங்கொக்கிலிருந்து பயணித்த விமானம், முவான் சர்வதேச விமான நிலையத்தில் மோதி தரையிறங்கி ஓடுபாதையின் முனையிலிருந்து ஒரு சுவரில் சரிந்து தீப்பிடித்தது.

போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னாள் விபத்து புலனாய்வாளர் சிம் ஜெய்-டோங், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், முக்கியமான இறுதி நிமிடங்களிலிருந்து தரவு இழப்பு ஆச்சரியமளிப்பதாகவும், காப்புப்பிரதி உட்பட அனைத்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

அதேசமயம் விமான விபத்தில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. பறவை மோதியதாலோ அல்லது வானிலை நிலைமைகளாலோ ஏற்பட்ட பங்கை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதோடு போயிங் 737-800 விமானம் ஓடுபாதையில் மோதியபோது அதன் தரையிறங்கும் கியரை ஏன் கீழே வைக்கவில்லை என்பது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

வல்வெட்டித்துறை பட்டப்போட்டித்திருவிழா 2025..
15/01/2025

வல்வெட்டித்துறை பட்டப்போட்டித்திருவிழா 2025..

மாட்டு  சாணி ஒரு பேக் 100 ரூபா.நகரமயமாக்கல் விளைவுகளை அனுபவிக்கும் யாழ்ப்பாணிகள்
15/01/2025

மாட்டு சாணி ஒரு பேக் 100 ரூபா.நகரமயமாக்கல் விளைவுகளை அனுபவிக்கும் யாழ்ப்பாணிகள்

15/01/2025
🔺ஜனாதிபதி சீனா  சென்றடைந்தார்சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ...
14/01/2025

🔺ஜனாதிபதி சீனா சென்றடைந்தார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

இந்தப் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹொன்ங், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

நீங்கள்தான் உலகில் பெரிய துரதிர்ஷ்டசாலி என நீங்கள் நினைத்துக் கொண்டால் இவர் கதை கேட்டு உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ளுங்க...
12/01/2025

நீங்கள்தான் உலகில் பெரிய துரதிர்ஷ்டசாலி என நீங்கள் நினைத்துக் கொண்டால் இவர் கதை கேட்டு உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ளுங்கள்!!!

ஆயுள் கைதியான இவர், சிறையிலிருந்து தப்பிக்க ஐந்து வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக சுரங்கம் தோண்டி தப்பிக்க வழி தேடியுள்ளார்.

முடிவில் சுரங்கத்துக்கு வெளியே வந்து பார்த்த போது அது சிறை தலைமை அதிகாரியின் காரியாளயமாக இருந்துள்ளது.

🤔😃😀

🛑பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு.!!கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை ஆரம்பம...
12/01/2025

🛑பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு.!!
கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை ஆரம்பம்.!!

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

உடனடியாக பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், இந்நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தல் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. குறித்த நபரே வாகனத்தை வாடகைக்கு பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

🛑தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ... லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்? 🛑லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தொடர்ந்து பர...
12/01/2025

🛑தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ... லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்?

🛑லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் முறையாக திரும்பிய மக்கள் தங்களின் வீடுகள் கருகிப் போய் கிடப்பதை பார்த்து கடும் வேதனை அடைந்தனர்.

இந்த பேரழிவை தடுக்கத் தவறியதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ஆம் திகதி காட்டுத்தீ பரவத் தொடங்கியது.

கடந்த 8 மாதங்களாக மழை பெய்யாத இப்பகுதியில், அதிவேக உஷ்ண காற்றின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீ, மலைப்பகுதிகளில் மட்டுமின்றி பசிபிக் பலிசடீஸ், அல்டடேனா உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வேகமாக பரவியது. இதனால் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 4 நாட்களுக்கு பிறகு தற்போது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால் காட்டுத் தீ சில பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அல்டடேனா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் முறையாக மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது பலரது வீடுகள் முற்றிலும் எரிந்து புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்து கடும் வேதனை அடைந்தனர். 20, 30 ஆண்டாக வாழ்ந்த வீடு கருகி கிடப்பதைப் பார்த்து பலர் குடும்பத்துடன் செய்வதறியாது நின்றனர். பசிபிக் பலிசடீஸ் பகுதியில் காட்டுத் தீ மேலும் பரவி வருவதால் அதை ஒட்டிய இன்டர்ஸ்டேட் 405, கெட்டி மியூசியம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளனர். 12,000 கட்டிடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. வரலாறு காணாத இந்த காட்டுத்தீயால் 60,000 வீடுகள், வணிக கட்டிடங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி உள்ளன. தீயை அணைக்க தீயணைப்பு துறை தொடர்ந்து போராடி வரும் நிலையில், தீயை அணைக்க முடியாததற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென மக்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகத்தில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் படலமும் தொடங்கி உள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தரையில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பான்களில் 4 கோடி லீற்றர் தண்ணீர் மாயமானது குறித்து தனிப்பட்ட விசாரணைக்கு கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார்.

தீயணைப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்ததுதான் நகரை பாதுகாக்க போதிய ஏற்பாடுகளை செய்ய முடியாததற்கு காரணம் என லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை தலைவர் கிறிஸ்டின் க்ரோவ்லி கூறி உள்ளார். தீ பரவி வரும் பகுதிகளில் ஹெலிகொப்டர் மூலம் தீத்தடுப்பு இரசாயனங்கள் தூவப்பட்டு வரும் நிலையில், கனடாவிலிருந்து தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் 200 தீயணைப்பு வீரர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர...

12/01/2025

கெலிஓய அம்பரப்பொல பகுதியில் 11.01.2025அன்று நடந்த கடத்தல் சம்பவம்...

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு - வௌியான வர்த்தமானிஇறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு - வௌியான வர்த...
11/01/2025

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு - வௌியான வர்த்தமானி
இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு - வௌியான வர்த்தமானி

பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது.

அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்க குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

11/01/2025

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ..,

11/01/2025

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்த தீயை கட்டுப்படுத்தும் விமானங்கள்..

பேருந்து விபத்து - 12 பேர் காயம் !கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்...
11/01/2025

பேருந்து விபத்து - 12 பேர் காயம் !

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

✍️அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 இலட்சம் பொதுமக்கள் ...
10/01/2025

✍️அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 இலட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Address

Vavuniya
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மீடியா சிற்றி - Tamil Media City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share