உங்கள் தோழி சுஜா

உங்கள் தோழி சுஜா helping is a good job for us Nice song
(1)

அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விபத்து, வெளிநாட்டவர் பலி!அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளத...
26/01/2024

அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விபத்து, வெளிநாட்டவர் பலி!

அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் ராமர் கோவிலை பற்றி அவர் சிலாகித்து பேசும் போதே அவரது மகளின் உடல் நிலை பற்றி அவருக்கு தெரியும்...
26/01/2024

நான்கு நாட்களுக்கு முன்னர் ராமர் கோவிலை பற்றி அவர் சிலாகித்து பேசும் போதே அவரது மகளின் உடல் நிலை பற்றி அவருக்கு தெரியும்.

நம்மை எல்லாம் இசையால் தேற்றிய அந்த இசை தெய்வம் தன் வலியை மறைத்து அன்று மேடையில் நம்மை உத்வேகப்படுத்தி இருக்கிறது...

நாம் என்ன சொல்லி அந்த தெய்வத்தை தேற்றிவிட முடியும் 😢😢😢😢😢

அவரது காலில் விழக்கூட நமக்கெல்லாம் தகுதி போதாது 🙏🙏🙏🙏🙏

புதுக்குடியிருப்பு பகுதியில் கோர விபத்து; 28 வயது இளைஞன் பரிதாப மரணம்.!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் வ...
26/01/2024

புதுக்குடியிருப்பு பகுதியில் கோர விபத்து; 28 வயது இளைஞன் பரிதாப மரணம்.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டாவாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 28 அகவை உடைய க.நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியினை கைதுசெய்துள்ளதுடன் விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களையும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த இளைஞனின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிளிநொச்சியில் கோரவிபத்து : ஒருவர் மரணம்!கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்து...
24/01/2024

கிளிநொச்சியில் கோரவிபத்து : ஒருவர் மரணம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இன்று (2024.01.24) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்ட நிலையில் எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்ட நிலையில் எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Feel good movies நாலே அதுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.. அப்படி பட்ட ரசிகர்களுக்கான ஒரு படம் தான் இந்த ஜோ.. அதிகமா இந்த...
23/01/2024

Feel good movies நாலே அதுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.. அப்படி பட்ட ரசிகர்களுக்கான ஒரு படம் தான் இந்த ஜோ.. அதிகமா இந்த மாதிரி படம்லாம் மலையாளம் industry ல தான் அதிகமா வரும்.. ஆனா இப்போ நம்ம தமிழ் சினிமாவுலயும் நெறய படம் வர ஆரம்பிச்சுருச்சு..1st half full ah காலேஜ், love னு cringe பண்ணாம அழகா கொண்டு போனாங்க.. நம்ம காலேஜ் life ல connect ஆகுற மாதிரி நெறய scenes இருக்கும்.. Love ஓட reality ah காமிச்சுருப்பாங்க.. Love failure க்கு அப்பறோம் அவன் life ல என்ன நடக்குது, life ல எப்படி move on ஆகுறான்னு தான் மீதி கதை.. Second half ல இன்னோரு பொண்ணு வந்தோன lite ah ராஜா ராணி படம் வாட அடிக்குற மாதிரி இருந்துச்சு ஆனா அத அழகா வேற track ல கொண்டு போயி climax ல செம twist ஓட முடிச்சுருப்பாங்க..suicide எதுக்குமே தீர்வு இல்ல, life after love failure தான் படத்தோட concept.. இந்த மாதிரி நெறய படம் வந்திருந்தாலும், இவங்க மேக்கிங் ல தான் ரொம்ப அழகா தனித்துவமாக்கிருக்காங்க.. கண்டிப்பா பாருங்க நல்ல feel கிடைக்கும்..

யாழ் சாவகச்சேரியில் அதிக அளவான ஹேரோயின் போதைப் பொருளை பாவித்த இளைஞன் மரணம்!!அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் ...
23/01/2024

யாழ் சாவகச்சேரியில் அதிக அளவான ஹேரோயின் போதைப் பொருளை பாவித்த இளைஞன் மரணம்!!

அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (19) விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர், அவர் நீர்வேலியில் உள்ள உறவினரது வீட்டில் 19ஆம் திகதி தங்கிவிட்டு, நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார்.

அதனையடுத்து, நேற்றிரவு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

பிறகு, அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பின்னரே இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவர் அதிகளவில் ஹெரோயின் பாவித்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர் மரணம் தொடர்பில் உண்மைகளை கண்டறிய உடற்கூற்று பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையையே அதிர வைத்த துப்பாக்கி சூடு-ஐவர் பலி..!தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உ...
23/01/2024

இலங்கையையே அதிர வைத்த துப்பாக்கி சூடு-ஐவர் பலி..!

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழு ஒன்று வெள்ளை டிஃபென்டர் காரில் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

20/01/2024
தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்த...
20/01/2024

தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

(பாறுக் ஷிஹான்)

குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் சந்தேக நபரான உத்தியோகத்தர் தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு நபர் ஒருவரிடம் ரூபா 10 ஆயிரம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது கொழும்பில் இருந்த வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை(18) அன்று உணவகம் ஒன்றில் வைத்து மாறுவேடத்தில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மருதமுனை 5 பிரிவு காரியப்பர் வீதியை சேர்ந்த இப்ராஹிம் லெப்பை அப்துல் நஷார்( வயது-54) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு வழங்கியதை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் வழிகாட்டலில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைதான சந்தேக நபர் ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றிற்காக அரச சேவையில் இடைநிறுத்தப்பட்டு பின்னர் அரச சேவையில் இணைக்கப்பட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. !கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்ட...
20/01/2024

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகள் மற்றும் குற்றதடுப்பு பொலிசாரின் விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில்   குடும்பத்துடன்  சென்ற ஒரு பிள்ளையின் தந்தைவிபத்தில் பலி ; சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் துயரம் !! ...
19/01/2024

முச்சக்கரவண்டியில் குடும்பத்துடன் சென்ற ஒரு பிள்ளையின் தந்தை
விபத்தில் பலி ; சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் துயரம் !!

நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பம் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துள்ளார்

மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர் இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்தார்

சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் வயது 35 என்ற இரண்டு வயது பிள்ளையின் தந்தை உயிரிழந்தவர் ஆவார் திருமணம் செய்து மூன்று வருடங்களில் இவ் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது

கணவர் கைவிட்டு சென்ற நிலையில் வறுமையில் வாழும் பெண் துவிச்சக்கர வண்டி கோரல்   பருத்தித்துறை பகுதியில்   கணவர் கைவிட்டு ச...
19/01/2024

கணவர் கைவிட்டு சென்ற நிலையில் வறுமையில் வாழும் பெண் துவிச்சக்கர வண்டி கோரல்

பருத்தித்துறை பகுதியில் கணவர் கைவிட்டு சென்ற நிலையில் ஒரு பெண் பிள்ளையுடன் வறுமையில் வாழ்ந்து வரும் பெண் துவிச்சக்கர வண்டி கோரியுள்ளார் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்

மகளை பாடசாலை கொண்டு சென்று வர வீட்டில் வீட்டில் துவிச்சக்கர வண்டியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர் தமக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை பெற்று தருமாறு கோரியுள்ளனர் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள்

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து நேற்று பிற...
19/01/2024

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு ;  அரியாலை பகுதியில்  துயரம் .!        டெங்கு நோயினால் பாதிக்கப்பட...
19/01/2024

இரண்டு பிள்ளைகளின் தந்தை டெங்கு நோயினால் உயிரிழப்பு ; அரியாலை பகுதியில் துயரம் .!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற சமயம் மயங்கமடைந்து விழ்ந்து உயிரிழந்துள்ளார்

யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் தனது தேவைக்காக வங்கியொற்றுக்கு
பணம் பெற சென்றபோது இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் அரியாலை இராசதோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிந்துஜன் வயது 31என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

வீட்டிககு நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரல்வடமராட்சி பகுதியில்  வீட்டில்   நீர் வசதியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங...
19/01/2024

வீட்டிககு நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரல்

வடமராட்சி பகுதியில் வீட்டில் நீர் வசதியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வரும் மூன்று பிள்ளைகளின் தாய் தமக்கு நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளார்

நீண்டகாலமாக வீட்டில் உரிய நீர் வசதியின்றி உள்ளனர் தமக்கு முதல் கட்டமாக குழாக்கிணறு வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளனர் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள்

பளையில் 15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஐயருக்கு 12 வருட கடூழிய சிறை!!கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலையில் தனக்கு உறவு மு...
19/01/2024

பளையில் 15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஐயருக்கு 12 வருட கடூழிய சிறை!!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலையில் தனக்கு உறவு முறையான பதினாறு வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றஞ்சாட்டில் பூசகர் கைது செய்யப்பட்டார்.

சந்தேநபரான பூசகருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்ட நிலையில் 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எதிரியின் சார்பாக சட்டத்தரணி பி. அருச்சுனா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி என். என். அர்ஜுனகுமார் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கின் எதிரி, சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர். தனது மனைவியின் பாதுகாப்புக்காக சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் சிறுமியை தனது வீட்டில் வைத்திருந்தபோதே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார்.

வட மாகாணத்திலே பதினாறு வயதிற்கு குறைவான சிறுவர்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் ஒரு சில சம்பவங்களுக்கு மாத்திரமே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வாறு மேல் நீதிமன்றம் வரைக்கும் கொண்டுவரப்படுகின்றது.

ஆகையால், மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்டு குற்றவாளிக்கு தகுந்த தீர்ப்பளிக்குமாறு அரச சட்டவாதி என். என். அர்ஜுனகுமார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளளார். அத்துடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

தந்தை தாய் உயிரிழந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகள் உதவி கோரல்   முல்லைத்தீவு பகுதியில்  தந்தை தாய் உயிரிழந்த நிலையில் வ...
17/01/2024

தந்தை தாய் உயிரிழந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகள் உதவி கோரல்

முல்லைத்தீவு பகுதியில் தந்தை தாய் உயிரிழந்த நிலையில் வயதான அப்பப்பாவுடன் வறுமையில் கல்வி கற்று வரும் மூன்று பெண் பிள்ளைகள் உதவி கோரியுள்ளனர் அப்பப்பா அப்பம்மாவின் அரவணைப்பில்மூன்று பிள்ளைகளும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர் தமக்கு பாடசாலை சென்று வர துவிச்சக்கர வண்டி ஒன்றை பெற்று தருமாறு கோரியுள்ளனர் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள்

மற்றுமொரு பல்கலைகழக மாணவியும் பலி..!டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய ...
17/01/2024

மற்றுமொரு பல்கலைகழக மாணவியும் பலி..!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.

புதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த யுவதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி இன்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டு குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.மண்டூர் அரசடி வீதியை...
17/01/2024

மட்டு குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.

மண்டூர் அரசடி வீதியை சேர்ந்தவர் அனோஜன் என காப்புறுதி பத்திரத்தில் உள்ளது ( ஒருவர் மரணம் இருவர் படுகாயம்)

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்றுமுன் முச்சக்கரவண்டி ஒன்றும் DSI ரயர் நிறுவனத்தின் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலௌ பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டு கல்முனை பிரதான வீதி வழியே களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த DSI ரயர் கம்பனிக்கு சொந்தமான லொறியும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வளைவில் நேருக்கு நேர் மோதியுள்ளது இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

பிரித்தானியாவில்  அச்சுவேலியைச் சேர்ந்த  இரண்டு   பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு .! புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில...
17/01/2024

பிரித்தானியாவில் அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு .!

புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்



யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார் இந்நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சுகிர்தராஜ் வானிகி வயது 42 என்ற இளம் தாயாரே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி சங்கரி பலி!!டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் நல்லுார் அரசடி பிள்ளைய...
17/01/2024

யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி சங்கரி பலி!!

டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியான ஒரு பிள்ளையின் தாயான சங்கரி மகாலிங்கசிவக்குருக்கள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகு தீவர நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறித்த காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று ...
14/01/2024

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த வேளை இரவு 10.00 மணியளவில் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன்  விமானத்தில் செல்லும் போது பலி!!சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்ன...
12/01/2024

யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன் விமானத்தில் செல்லும் போது பலி!!

சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது. அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக குரோம்பேட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் ராசி பலன்கள்
12/01/2024

இன்றைய நாள் ராசி பலன்கள்

11/01/2024

வீட்டில் நீண்டகாலமாக நீர் தொட்டியின்றி கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வரும் குடும்பங்கள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிகின்றோம் சிறுவர்கள் உள்ள குடும்பங்களுக்கு மிக விரைவாக நீர் தொட்டி அமைத்து வழங்கப்படும்.

யாழ்  காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞர்  படுகொலை ; லண்டனில் துயரம் .!லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹா...
11/01/2024

யாழ் காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞர் படுகொலை ; லண்டனில் துயரம் .!

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கணவர் உயிரிழந்த நிலையில்  நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண் உதவி கோரல் கிளிநொச்சி பகுதியில் கணவர் ஒரு  வருடங்களு...
11/01/2024

கணவர் உயிரிழந்த நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண் உதவி கோரல்

கிளிநொச்சி பகுதியில் கணவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண் வாழ்வாதார உதவி கோரியுள்ளார்

கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்

தமக்கு வாழ்வாதார உதவியாக மாடு வளர்ப்புக்கு உதவி செய்யுமாறு கோரியுள்ளனர் கருணையுள்ளம் கொண்டவரகள் உதவ முன்வாருங்கள்

சற்று திருகோணமலை மாநகர சபைக்கு முன்னாள் கன்னியா வீதியில் பிக்குமார்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து பள்ளத்தில் வ...
11/01/2024

சற்று திருகோணமலை மாநகர சபைக்கு முன்னாள் கன்னியா வீதியில் பிக்குமார்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்துள்ளது

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when உங்கள் தோழி சுஜா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உங்கள் தோழி சுஜா:

Share


Other Nelliady media companies

Show All