Jaffna News(யாழ்ப்பாண செய்திகள்)

Jaffna News(யாழ்ப்பாண செய்திகள்) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna News(யாழ்ப்பாண செய்திகள்), News & Media Website, jaffna, Jaffna.

சயித்துக்கு தமிழரசுக்கட்சி ஆதரவு அளித்து சில நாட்களில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவையை அவரது வீட்டில் ரணில் சந்தித்த வேளை ...
08/09/2024

சயித்துக்கு தமிழரசுக்கட்சி ஆதரவு அளித்து சில நாட்களில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவையை அவரது வீட்டில் ரணில் சந்தித்த வேளை

ரணில் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த நன்மைகளுக்காக , தந்த தீர்வுகளுக்காக கௌரவித்த வேளை ...

தமிழ்மக்கள் எவ்வளவு ஏமாளிகள் ?

இனி தீர்மானிப்பது நீங்கள்

Copyright @ fb

ஜனாதிபதி வேட்பாளர்களில் எங்களுடைய  #தமிழ்_பொது_வேட்பாளர் நான்காவது இடத்தில் இருந்தாலும், எங்களுக்கென்று ஒரு வேட்பாளர் இர...
07/09/2024

ஜனாதிபதி வேட்பாளர்களில் எங்களுடைய #தமிழ்_பொது_வேட்பாளர் நான்காவது இடத்தில் இருந்தாலும், எங்களுக்கென்று ஒரு வேட்பாளர் இருக்கிறார் என்பதுதான் நம்பிக்கைக்குரிய செய்தி.

04/08/2024

குழந்தையை பிரசவித்து சில நாட்களேயான பெண் மன்னார் வைத்தியசாலையில் படுகொலை❓
விசாரிக்க சென்ற டொக்டர் அர்ச்சுனா சிறையில்❓

மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை என்ற கிராமத்துப் பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார்.
திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.

தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார்.
அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம்.

தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர்.

‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார்.

காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார்.
நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்.

காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர்.
தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம்.

அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார்.
அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம்.
ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? எனறு அழ மட்டுமே செய்யக் கூடியதாக இருந்ததாம்.

தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம்.

இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம்.

1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா?

2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்)

3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்?

4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா?

5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா?

மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன?

இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா?

இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா?

இவை பொதுமக்களிற்குத் தெரியாதா?

நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன?

சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ?
``````

Copied

Arun Ambalavanar (ஆரம்பத்தில் நட்சத்திர செவ்விந்தியன் என்று எழுதி வந்தவர் ) என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து முகநுால் ப...
11/07/2024

Arun Ambalavanar (ஆரம்பத்தில் நட்சத்திர செவ்விந்தியன் என்று எழுதி வந்தவர் ) என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து முகநுால் பேர்வழி ஒருவர் பல வருடங்களாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பற்றிய எழுந்தமானமான குற்றச்சாட்டுக்கள் , புலியெதிர்ப்பு பதிவுகள் , தமிழ்த்தேசிய எதிர்ப்பு பதிவுகள் ,பாலியல்சார் பதிவுகள் . இந்துமத எதிர்ப்பு பதிவுகள் என ஒரே விதமான பதிவுகளை தொடர்ச்சியாக செய்து வருபவர் . ஆறு திருமுருகன் தொடர்பிலும் சட்டத்தரணி குருபரன் தொடர்பிலும் அவதுாறு பரப்பும் கருத்துக்களை பதிவு செய்து பரப்பி வந்த நிலையில் , குறிப்பாக அவருடைய நோக்கத்தை சுட்டிக்காட்டி நீங்கள் பின்பற்றும் சமையத்தை கூற முடியுமா என கேட்டேன் என்னை புளக் செய்து விட்டு ஓடிவிட்டார்

அவருடைய பதிவுகளை எடுத்துப்பாருங்கள் முழுவதும் வக்கிரம். பெண்களை பாலிய ரீதியில் வர்ணிக்கும், பாலியல் சார்ந்த விமர்சனங்களை முறைகேடுகளை மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கும் பதிவுகளை செய்து வருவார் .அவருக்கு அதில் அலாதி பிரியம் . நேரம் கிடைக்கும் போதில் எல்லாம் இந்து சமயத்தை வளர்க்கும் நபர்களை இலக்கு வைப்பார் .

அவருக்கும் தேசம் மீடியாவுக்கும் நல்ல ஒட்டு தற்போது உதயனிடம் கூட்டு வைத்துள்ளததாக பதிவிட்டிருக்கிறார். கூலை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிப்பதற்காக முக்கினார். அதற்காகவே எப்பொழுதும் யாழ் பல்கலைக்கழகத்தை துாற்றுபவர்.

அண்மையில் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்ல விடயத்தில் சிவபுமியை கோர்த்து ஆறுதிருமுருகளை கேவலப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றார். ஆளுனரால் நியமிக்கபட்ட விசேட குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்து விட்டது குறிப்பிடத்தக்க பாரிய பிரச்சனைகள் எதுவும் கண்டறியப்படவில்லை. (ஆனால் இன்னும் ஆளுனர் தனது மறுப்பறிக்கை வெளியிடவில்லை) தற்போது அதை மீண்டும் மீண்டும் கிளறி பதிவு போட நான் போய் பதிலிட்டேன் புளக்பண்ணிட்டு ஓடிட்டார் கேள்வி கேட்காதவன் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறார் போலும்.

அருண் அம்பலவாணரின் பாலியல் வக்கிரத்துக்காக எமது சிறுமிகளின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடவேண்டாம் என் பதிலிட்டதும் புளக் பண்ணிட்டு ஓடிவிட்டார்.

தான் உத்தமராகவும் தன்னை மீட்பராகவும் காட்டிக்கொள்ளும் அவரின் உண்மையான நோக்கு தான் சார்ந்த சமயத்திற்கு எதிரான சமயங்களை இலக்கு வைப்பது தான் அத்துடன் பெண்களை கேவலப்படுத்தும் பதிவுகளை போட்டு தன்னைத்திருப்திப்படுத்துகின்றார். முடிந்தவரை எமது விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவது இங்கு பணி செய்பவர்களை துாற்றுவது அவ்வளவுதான்.அவரது நோக்கம்

அவரது பதிவுகளை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தால் உண்மை புரியும் . ஆமாம் போட சிலபேர் அவருக்கு இருக்கின்றனர்.

ஆளைப்பற்றி மேலதிக தகவல்களை எதிர்பார்க்கின்றேன்.

Copyright @ thavaruban

தர்ம சாசன சொத்தை கொள்ளையடிச்ச தமிழரசு கட்சி முக்கியஸ்தர் யார்?
10/07/2024

தர்ம சாசன சொத்தை கொள்ளையடிச்ச தமிழரசு கட்சி முக்கியஸ்தர் யார்?

மன்னிக்கவும் உண்மையில் 09.07.2024 அன்று குழந்தை வருண் அவர்களின் ஜென்ம நட்சத்திரம் பிறந்த நாள் அல்ல.Copyright @ babugi mi...
08/07/2024

மன்னிக்கவும் உண்மையில் 09.07.2024 அன்று குழந்தை வருண் அவர்களின் ஜென்ம நட்சத்திரம் பிறந்த நாள் அல்ல.

Copyright @ babugi mittulingam

08/07/2024

மக்களே இன்று உங்கள் பிரச்சனையை தீர்க்காமல் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஊழலுக்கு ஆதரவானவர்களே.. அடுத்த தேர்தலில் உங்கள் வீடு தேடி வரும்போது அவர்களை கவனியுங்கள்....

08/07/2024

சாவகச்சேரி சனத்தையும், அரசாங்கத்தையும் நல்லாய் பேக்காட்டி விட்டார்கள்...நாங்கள் போனால் வைத்தியர் இல்லை எண்டுவார்கள்....மற்றதை யோசிப்பதில்லை யாழ்ப்பாண ஆஸ்பத்திரி ஓட்டம்..... 23 வைத்தியர்கள் இருந்திருக்கிறார்களே......அதுவேற ஓவர் டைம் எடுத்திருக்கிறார்களோ.... பழுதான வைத்திய இயந்திரத்தை இயக்கியவர் 100மணித்தியாலம ஒவர்ரைம்....என்னடா நடக்குது...

07/07/2024

சாவகச்சேரி விடியத்தில் சின்ன பூனை தொடக்கம் பெரிய பூனை வரை நல்லா சாப்பிட்டு விட்டது மக்கள் சாப்பாட்டை. ஒரு பூனை காட்டிக் கொடுத்து விட்டது எல்லா கள்ள பூனைகளும் இரவு இரவாக ஓடி திரிகிறார்கள். அதுக்குள்ள நாளைக்கு எல்லா வடக்கு மாகாண பூனைகளும் புறக்கணிப்பாம். சாப்பிட்ட பூனைகளை காப்பாற்ற.... எம்மை பொறுத்த வரை நாளை பூனைகள் போராடுமாக இருந்தால் அது கள்ள பூனைகளை காப்பாற்ற எடுக்கும் போராட்டமே ஒழிய பூனைகளுக்குரிய போராட்டம் அல்ல......

07/07/2024

மக்களே வைத்தியர்கள் அர்ச்சுனாவுடைய போராட்டத்தில் தோற்றுவிடுவீர்களோயானால் இனி ஒரு காலமும் ஒருவன் துணிந்து குறைகளை சுட்டிக்காட்டி சரியான முறையில் எடுத்துச் செல்ல முன் வர மாட்டான் என்பதுதான் உண்மை எனவே அனைவரும் திரண்டு குறித்த பிரச்சனையை சரி செய்யுங்கள் . அல்லது அனைவரும் யாழ் போதனா வைத்தியாசாலையில் கட்டில் வசதி இல்லாமல் தரையில் உறங்கி வைத்தியம் வர வேண்டிய நிலை ஏற்படும்?

07/07/2024

சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனாக்கு எதிராக போராடும் வைத்தியர்கள் ஜெனரோற்றர் இல்லை என்று போராடி இருக்கலாமே? போராடி இருந்தால் மக்கள் இன்று அவர்கள் பக்கம் நின்று இருப்பார்கள்..

07/07/2024

இங்க 10 நாள் வேலை செய்திட்டு 20நாள் லீவு எடுக்கிற வசதி தென்னிலங்கை ஆட்களுக்கு வழங்கப்படுவது அமைச்சுக்கும் தெரியும் என அந்த துறைசார் நண்பர் ஒரு கூறினார் ஆனால் இந்த வசதி நம்மட ஆட்களுக்கு தென்னிலங்கையில் கிடைக்குமா என்று கேட்டேன் இல்லை என்றார் . அதிக கு காரணம் எங்கட ஆட்கள் இங்க வேலை செய்ய விருப்பமில்லையாம் அப்ப கொலசிப் முடிய நான் வைத்தியனாகி.... எண்டு.... ஏண்டா உருட்டுறியள்

கண்முன் தாபனக் கோவை மீறப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறதெனில் ஒருத்தன் நல்லதுக்காக தாபனக்கோவையை கொஞ்சம் மீறினா பணிப்புறப்பணிப்பு இடமாற்றம் இது எப்படி நியாயம் ?

திருப்பியும் சொல்லிறன் சேவை நலன் கொண்டவர்கள் நிறைய உள்ளனர் ஏன் அந்த சேவை நலன் இல்லாத ஒருசிலரைக்காப்பாற்ற நீங்கள் குத்தி முறியிறியள்

போதனா வைத்திய சாலையில் தரையில் போட்டு சிகிச்சையளிக்கிறார்கள் அதைத்தடுக்க ஆங்காங்கே உள்ள பிராந்திய வைத்திய சாலைகளை நல்ல நிலைக்கு இயங்கவைத்து மாற்றிவிடலாமே .

Copy

07/07/2024

நாங்க உங்களோடதான் நிற்கிறம் உறுதியாக இருங்க எண்டு பேஸ்புக்கில உசுப்பேத்திட்டு இருக்கிறாங்கள் அங்க அருச்சுனா நான் தனியாதான் இருக்கிறன் என்னை கைது செய்ய பொலிஸ் வந்து நிற்கிறது என்கிறார் Ramanathan Archchuna இற்கு இருக்கிற சாவகச்சேரி ஒருத்தனையும் காணலையே ஆதரவு கொடுக்கிறதெண்டா உண்மையா இருங்க உசுப்பேத்திட்டு ஒளிந்து விடாதீர்கள் . Code Word புரிஞ்சா சரி

Copyright

07/07/2024

மருத்துவர் அர்ச்சனா அவர்களை இன்று இரவு ஒன்று கட்டாக தூக்கி அகற்றுவதற்கு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளை போராட்டத்திற்கு இடையில் அவரை கைது செய்ய மாபியாக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் வைத்தியசாலைகளாகத்தில்

07/07/2024

சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பொறுப்பதிகாரி அர்ச்சுனா இன்றிரவு வைத்தியசாலையிலிருந்து அகற்றப்படுகின்றார்!!

07/07/2024
மாத்தறை முதல்   தொல்புரம்   கீரிமலை வரை ஆருதிருமுகனின்  பல்வேறு முகங்களில் சாதனைகள் தகப்பனார் ஆறுமுகம் தாயார் சரஸ்வதி கோ...
07/07/2024

மாத்தறை முதல் தொல்புரம் கீரிமலை வரை
ஆருதிருமுகனின் பல்வேறு முகங்களில் சாதனைகள்

தகப்பனார் ஆறுமுகம்
தாயார் சரஸ்வதி

கோப்பாய் வராம்பற்றை, இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த ஆசிரியர் கந்தையா ஆறுமுகம் – இணுவிற்பதி ஆசிரியை சரஸ்வதி ஆறுமுகம் ஆகியோரின் புதல்வராக 1961 மே மாதம் 28 ஆம் திகதியன்று பிறந்தவர். ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். 1989 இல் ஆசிரியராக நியமனம் பெற்று 2012 இல் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபராக சேவையில் இருந்து இளைப்பாறுகை பெற்றார்.
இலங்கையில் திருக்குறளுக்கு முதன்முதலாக உரைவகுத்து முப்பாநூற்சர்க்கம் என வெளியிட்ட பண்டிதர் வி.வேலுப்பிள்ளை இவரது குடும்ப மூதாதை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்குப் பின் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக 2008 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படுகின்றார். கோண்டாவில் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் செயற்படும் இவர், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம் என்பன தோற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்ததோடு அதன் தலைவராகவும் செயற்படுகின்றார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு சமய சமூக அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார்.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் வெளியிடுகின்ற ‘அருள் ஒளி’ என்ற ஆன்மீக சஞ்சிகையின் ஆசிரியர். இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் ஒன்று Thirumurugan’s Spritual Lecturers என்ற பெயருடன் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
கீரிமலை சிவபூமி மடம் மற்றும் சிவபூமி கலைக்களஞ்சியம் என்பவற்றின் ஸ்தாபகர், அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் என்பவற்றின் உபதலைவர், குப்பிளான் சிவபூமி ஆச்சிரமம். உடுவில் கேன் புற்றுநோயாளர் காப்பகம் என்பவற்றின் பணிப்பாளர், அகில இந்து மாமன்றத்தால் நடத்தப்படும் நல்லூர் இந்து ஆராய்ச்சி நிலையப்பணிப்பாளர் எனப் பல தளங்களில் சமய சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இவரது சமூகப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தின் இளைய மகனாக இவர் அலங்கரித்தார். இவர் இணுவை மண்ணுக்குப் பெருமை சேர்ப்பாரென அன்று எவரும் அறியவில்லை. பெற்றோரின் பண்பான வழி காட்டலில் இவருக்கு இராமநாதன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு கல்விக் கண்ணைத் திறந்தது. யாழ் இந்துக் கல்லூரி அறிவுப் பசிக்குத் தீனியிட்டது.
வித்தகக் குருவாயமைந்த சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும் யாவற்றையும் நெறிப்படுத்தும் இணையற்ற ஆசானுமாகிய இ.மகாதேவா திருமுருகனின் சிறப்பான முன்னேற்றத்துக்கு அடி எடுத்துக் கொடுத்தார். உயர் வகுப்பு மாணவர்களின் பேச்சுப் போட்டி, விவாதத்திறமை, கல்லூரி விழாக்களிற் பட்டி மன்றம் யாவற்றிலும் பங்குபற்றிய வேளை இவரின் சிந்தனாசக்தி, நாவன்மையுடன் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய அழகு தமிழ் எளிய நடையில் இனிய குரல் வளம் சிறக்க இறையருள் கைகொடுத்தது
கல்லூரியிற் பெற்ற கல்வித் தகைமையுடன் கலைமாணி (BA) பட்டப் படிப்பையும், மேல் படிப்பையும் நிறைவு செய்தார். இவருக்கு உடன் வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை. அக்காலத்தில் எம்மண்ணில் யுத்த நிலை ஏற்பட்டதால் எம்மவரிற் பலர் தமது பாதுகாப்புத் தேடி அலைந்தபோது குடும்பமும் சிதறி அலைந்தது.
பாதுகாப்புத் தேடியபோது திருமுருகனின் இருபத்தாறு வயதான கட்டுமஸ்தான தோற்றமும் அங்கப் பொலிவும் நாட்டில் அமைதியை நிலை நாட்டவந்த படையினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்க நேர்ந்தது. அப்பாவியான இவரின் உயிரைப் பிரிக்கவல்ல கொடூரமான தாக்குதலுக்கு இலக்கானார். குற்றுயிராய் அல்லலுறும்போது தமது சித்தத்தைச் சிவன்பால் வைத்து எல்லாம் உனக்கே அடைக்கலம் என்று கூறி இறைவனிடம் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும்இணுவில் காரைக்கால்சிவனிடம் ஒப்படைத்தார்.

திருமுருகனின் வேண்டுதலை ஏற்ற இறை மனித வடிவில் வந்து அரவணைத்தது இறைவனால் ஆட்க்கொள்ளப்பட திருமுருகன் இல்லறம் நாடாது நலிவுற்றோரை மனித நேயத்துடன் அரவணைக்கும் பாங்கில் சபதம் பூண்டு புதுயுக அருட்சிந்தனையுடன் வலம் வந்தார்.

அவரின் கல்வித்திறமைக்கேற்ப 1989இல் அரச ஆசிரியர் நியமனம் கிடைத்தது. சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியரான இவரிடம் கல்விப் பணிகளும் இதர பணிகளும் ஒப்படைக்கப்பட்டன. இறையருளையே சிந்தையாகக் கொண்டவர் பாடசாலையின் சுத்தம் பேணி அங்குள்ள சுற்றுச் சூழலையும் பேணியதுடன் குடிதண்ணீர்க் கிணறு கலக்கி இறைத்தும்மனமகிழ்வுகொண்டார்
பாடசாலையின் செலவைக்குறைத்து மாணவர்களினுதவியுடன் வகுப்பறைச் சுவர்களுக்கு வெள்ளையடித்துப் பிரகாசிக்க வைத்தார். ஒரு சமயம் பாடசாலைக்கு வருகை தந்த கல்விப் பகுதி உயர் அதிகாரிகள் இவரின் சேவையை மெச்சி இவருக்கு 1991 இல் நல்லாசிரியர் விருது வழங்கிக் கௌரவித்தனர் . தன் சேவையை மேலோங்கச் செய்த பாடசாலை வளர்ச்சிக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி உதவினார்.

இவ்வறப்பணி இவரின் எதிர்கால அறப்பணிகளின் முன்னோடியாகவே அமைந்த சிறப்பாகும். 1993 இல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு இட மாற்றாலானார். அறப்பணிகளின் தொடர்புகளும் பதவி உயர்வுகளும் சைவம் பேணிக் கல்வியால் உயர்ந்த நல்லாசிரியருக்குப் புதிய கல்லூரியில் உயர் வகுப்புகளில் சைவ சமயமும் தமிழும் போதிக்கும் பணி தரப்பட்டது. இவரின் தூய சேவையால் பல மாணவர்களின் கல்வியுயர்வும் பரீட்சையில் நற் பெறுபேறுகளும் கிடைத்தன.
இதனால் இக் கல்லூரிக்குப் பெருமையும் இவருக்குப் பல படியேற்றங்களும் கிடைத்தன. 16-03-2008 அன்று இக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். இக்கல்லூரியின் சேவையால் இவருக்கு வலிகாமம் வலயத்தில் நல்லாசிரியர் விருது இரண்டாவது தடவையாகவும் கிடைத்தது
இவர் ஆசிரியர் நியமனம் பெற்றது முதல் அண்மையிலுள்ள துர்க்காதேவி ஆலய தரிசனத்தையும் செய்து வந்தார்.

இவரின் தாயாரும் துர்க்காதேவி அறங்காவலர் சிவத்தமிழ்ச்செல்வியும் ஆசிரியர் பணி சார்பில் ஏற்கனவே பெரு நட்புப் பூண்டிருந்தனர்.
இவர்களின் உறவு மட்டுமன்றிக் குரு சீடர் முறையாகவும் எதிர்காலத்தில் திருமுருகனே சகல நிர்வாகப் பொறுப்புகளையும் ஏற்கும் கடமை இருந்ததை அன்னை துர்க்காதேவி தமது திரு விளையாடலில் ஏற்படுத்தினார் .திருமுருகனும் சிவத்தமிழ்ச்செல்வியை தாயாகவும் குருவாகவும் ஏற்று அன்னையிட்ட பணியை தூய சிந்தனையுடன் நிறைவேற்றி இவ்வாலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவராக அரும் பணியாற்றுகிறார்.

இணுவில் காரைக்கால் சிவாலயத்தில் 1992 இல் நடைபெற்ற வருடாந்தப் பெருவிழாக் காலத்தில் திருமுருகனின் சமயத் தொடர் சொற்பொழிவு ஏற்பாடானது. இவரின் பேச்சை முதன் முதலில் கேட்பதற்கென பெருந்தொகையான பொது மக்கள் வயது வேறுபாடின்றி வந்து கூடினர். கொடியேற்றத்தன்று பொன்மாலைப் பொழுதில் சொற்பொழிவு ஆரம்பமானது.
இயல்பாகவே அமைந்த புன்சிரிப்பும் அடக்கமும் சிவ சிந்தனையும் மேலிட கன்னித்தமிழை நல்விருந்தாக நல்க இச்சிவாலயத்தில் முதன்முதல் ஆரம்பித்தார். இவரின் சொற்பொழிவின் இனிமையும், சொற்சுவை, பொருட்சுவையும் இலக்கண வரம்பு மீறாத ஆன்மிக அருளுரை யாவரையும் வியக்க வைத்தது. இதனால் நாளுக்கு நாள் மேலும் பலர் வந்து கேட்டின்புற்றனர்.
இவரின் சொற்பொழிவின் சிறப்பை உணர்ந்த ஆலயச் சமூகத்தினர் தீர்த்த விழாவின் மறுநாள் மாலை இவருக்கான கௌரவிப்பு விழாவில் “செஞ்சொற் செல்வர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தனர். பொது மக்களும் பொன்னாடை, நறுமலர் மாலை, புகழ் மாலைகளாக நூற்றுக்கணக்கில் அணிவித்து வாழ்த்தினர். இவ் வைபவச்சிறப்பை இவரின் பெற்ற அன்னை தமது குடும்ப சகிதம் வந்து நேரிற் கண்டு மகிழ்ந்ததுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து ஆசீர்வதித்தார்.

செஞ்சொற்செல்வரின் புகழின் வித்தாக முதன்முதல் சிவாலயத்தில் வழங்கிய சொற்பொழிவின் பெருமை திக்கெட்டும் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் பரவியதால் பட்டி தொட்டி எங்கும் அரிய நிகழ்வாக சொற் பொழிவுகள் அமைந்தன.
பிற மாவட்டங்கள், வெளிநாடுகளிலிருந்தும் இவரின் சொற்பொழிவுக்கான அழைப்புகள் வந்தன. யாவும் இறைவனின் சித்தப்படி நிறைவேறின. இவ்வரிய நிகழ்வின் சிறப்பை அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தாம் ஏற்கனவே சென்று பேசிய வெளிநாடுகளுக்குச் சென்று பணி செய்ய ஆலோசனைகளும், ஆதரவும், ஆசியும் பெற்றுத் தந்தார்.

இவர் சென்ற இடங்களில் தமக்கென ஏதும் பெற விரும்பவில்லை.மாறாக இவர் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் வளர வாய்ப்பு ஏற்பட்டது.
திருமுருகனின் அரிய சொற்பொழிவு இலண்டனில் 1999 இல் அகில உலக சைவ மகாநாட்டில் ஒலிக்க உதவிய இணுவிலைச் சேர்ந்த சிவ நெறியாளரும் கல்விமானுமாகிய ந.சச்சிதானந்தன் எம் இலங்கை மண்ணுக்கும் இணுவிலுக்கும் பெருமை சேர வைத்தார்
இதனைத் தொடர்ந்து இலண்டன் சிவயோக அறக்கட்டளையின் சார்பில் இலண்டன் நகரின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கில் சொற்பொழிவுகள் நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து இவரின் கல்விப் பணியின் விடுமுறைக் காலங்கள் யாவும் வெளிநாடுகளில்புலம் பெயர் தமிழினம் வாழுமிடங்கள் எங்கணும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
2001 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் ஆசிரியர்களின் உலக மகாநாட்டில் இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.
2001 இல் பேரூர் ஆதீனத்தின் அழைப்பை ஏற்றுப் பெரிய முதுபெரும் அறிஞர்கள் மத்தியில் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் பேச்சுவன்மையால் யாவராலும் பாராட்டப் பெற்றார்.

இதே ஆண்டில் அவுஸ்திரேலிய சிட்னி வாழ் வைத்திலிங்கம் இளலிங்கம் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று பல இடங்களிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக உரைகள் ஆற்றினார்.
2002 இல் ஈவிங்கில் முத்தமிழ் விழாவிற்குச் சென்று உரையாற்றினார். இதே வருடம் சுவிஸில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் உரையாற்றி வையகத்தை வியக்க வைத்தார்.

குறிப்பு ./(இளலிங்கம் என்பவர் இணுவிலில் பிறந்து மன்னாரில் வாழ்ந்த மன்னார் chairman வைத்திலிங்கம் அவர்களின் மூத்த மகன் ,charted accountant ஆக தொழில் புரிந்து சிட்னி நகரில் ஒரு சமூகத் தொண்டனாக இருக்கிறார் )

2003 இல் சிங்கப்பூர் செண்பக விநாயகராலயத்தில் தொடர் சொற் பொழிவாற்றினார். இதே ஆண்டில் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் வாழும் எம்மவரின் அழைப்பை ஏற்றுப் பல இனிய சொற்பொழிவை ஏற்படுத்தி மகிழ்வித்தார்.

2004 இல் தாய்லாந்தில் ஆன்மிக தலைவர்களுக்கான உலக சுகாதார நிறுவனம் நடத்திய AID S தொடர்பான மகாநாட்டில் இலங்கையின் இந்துமதப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

2004 இல் ஏழாவது தடவையாக இலண்டன் சிவயோகம் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
2005 இல் அமெரிக்கா சென்று Texas மாநில மகாநாட்டில் கலந்து சொற்பொழி வாற்றினார். இவர் சொற்பொழிவாற்றிய காலத்தில் எம்மண்ணில் ஏற்பட்ட யுத்த கால நிலையால் ஏற்பட்ட அவலங்களை தமது உரையினிடையே தெரிவித்தார்.
இதனால் இவர் அன்பளிப்புக்களைப் பெற விரும்பாத போதும் எம்மண்ணில் ஏற்பட்ட சிதைவால் பாதிப்புற்ற அநாதைச் சிறுவர்கள், இளம் விதவைகள், கல்வி கற்க வசதியற்ற மாணவர்கள், நோயாளிகள், மருத்துவமனைகளில் பெற முடியாதிருந்த மருத்துவ உதவிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு அறப்பணிகளுக்குத் தாராளமாக உதவிககளை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தார்
யாழ் மக்களின் துயர நிலையைத் தமது வெளிநாட்டு பிரயாணங்களின் போது எடுத்துக் காட்டியதன் பேறாக எம்மக்களின் துயர் துடைக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்தார்கள்
அதன் பயனாக
புலம் பெயர் மக்கள் மூலம்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு பல உதவிகள் கிடைத்தன. சிவயோகம் அறக்கட்டளை மூலம் சத்திர சிகிச்சைக்கூடம் அமைத்துக் கொடுத்தமை.
இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை சுவீடனிலிருந்து இறக்குமதி செய்து யாழ் மருத்துவமனைக்கு உதவியது மேலும் பல அத்தியாவசியக் கருவிகளைப் பெற்றுக் கொடுத்தமை யாவும் மருத்துவமனையின் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தின.
யுத்த நெருக்கடியால் பாதுகாப்புத் தேடிய கண்பார்வையற்றவர்கள் நிலையான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். புற்றுநோயாளர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யவென ஒரு காப்பகம் நிறுவப்பட்டது. மன அபிவிருத்தி குன்றி வீட்டில் ஒதுக்கி வைக்கப்பட்ட இளஞ்சிறார்களை மேம்படுத்தும் சிவபூமிப் பாடசாலை நிறுவப் பட்டது. இதனால் சிவபூமி அறக்கட்டளை நிதியம் ஆரம்பிக்கப்பட்டதும் இவ்வறக் கட்டளை மூலம் தொல்புரத்தில் உறவினர்களால் கைவிடப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்களை அன்புடன் பேணும் முதியோர் இல்லம் அமைந்தது
கீரிமலையில் சைவ அன்பர்கள் தமது இறுதிக் கிரியைகளுக்காகச் செல்லும் போது இளைப்பாறவென சிவபூமிமடம் மற்றும் குப்பிளானில் போர்ச்சூழலாற் பாதிப்புற்ற பலரின் உளநல மேம்பாட்டுக்கான தியானம் அறநெறிக் கல்வி, வாரமொரு நாள் ஏழைகளுக்கான அன்னதானம் யாவும் வழங்கும் சிவபூமி மடம் யாவும் திருமுருகனின் அயராத பணியால் ஏற்பட்டன.
இவரின் வஞ்சகமில்லாத நெஞ்சிலிருந்து உதிக்கும் அன்பான, அமைதியான ஆன்மிக உரைகளும், கறைபடியாத கரங்களின் தூய்மையும், இல்லறம் நாடாது, இறையருளில் தஞ்சமடைந்ததால் தமக்கென ஏதும் தேடாது பொதுவான அறப் பணிக்கு அர்ப்பணித்த அன்பகலாத அரவணைப்பும் மூலதனமாக அமைந்தன.
ஏற்கனவே தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்தவர். சைவநெறியால் உலகமுய்யவென வழிகாட்ட முற்பட்டவரை நாடிய தொண்டு உள்ளங் கொண்ட அறப்பணியாளர்கள் பலர், காணியாகவும், கட்டட உதவிகளாகவும் பொருளாகவும், வாரி வழங்கி எம் மண்ணில் அறப்பணியை அலங்கரித்தனர்.
வெளிநாடுகளில் வாழும் சைவ நிறுவனங்கள் குறிப்பாக சிவயோக அறக்கட்டளை தொண்டுநாதசுவாமிகள் போன்ற பலரின் உற்சாகமூட்டும் உயர்ந்த பங்களிப்புகள் எம்மிணுவை மண்ணின் பெருமையை உலகறியச் செய்தன. உலகமெங்கும் பரந்து வாழும் எம்மவர் திருமுருகனின் உயர்வான பணி பரந்தளவில் சேர வேண்டிய இடங்களில் உரிய சேவை கிடைக்கப் பெற்று அவர்கள் துயர் நீங்கி உள்ளம் மலர்வதை நேரிற் கண்டதால் தாம் செய்யும் அறக் கொடையைத் தம்மாலியன்றதைச் செய்ய முன் வந்தனர்.
அவசிய தேவைக் கேற்பத் தாம் அன்றாடம் “உண்ணும்போது ஊருக்கும் ஒரு கைபிடி” என்னும் மகுட வாசகத்தை உணர்ந்து சிறுகச் சேர்த்து யாவரும் வழங்கும் போது பெரு நிதியாக வளர்கின்றது. இந்தநிதி குறிப்பிட்ட தேவைக்கு முறைப்படி பயன்படும் போது இதற்கு நிகரேதுமில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்பதை புலம் பெயர் தேசம் உணர்ந்ததால் தமது ஊர்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும்
புகழ் விரும்புவோரும் புகழ் விரும்பாதவரும் இன்று உதவி வருகிறார்கள்
இன்றைய இளம் சமுதாயம் இதனை உணர்ந்து புலம்பெயர் நாடுகளில் சசகல பொறுப்புகளையும் தூய சிந்தனைப்படி ஒருங்கிணைந்து செயற்படுவது கண்கூடு
கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலிய மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் சகல மக்களும் கைகொடுத்து . சமய, சமூகப் பணிகளுக்கும் மற்றும் பல பொதுப்பணிகளுக்கும் இன்று வரை தாராளமாக உதவி வருவது திருமுருகனைப் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது
சிவத்தமிழ்ச்செல்வியின் தொடர்பால் ஆலயத்தின் சகல பணிகளையும் நிர்வகிக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார். அம்மையாரின் உதவுகரமாக இருந்து சிறப்பித்ததுடன் அவரின் அறக்கட்டளைக்கும் தாராளமாக வைப்பு நிதியை ஏற்படுத்தவும் உதவினார். துர்க்காதேவி திருத்தலம், சிவத்தமிழ்ச்செல்வியின் அறக்கட்டளை நிதியம், சிவபூமி அறக்கட்டளை யாவற்றுக்கும் தனித்தனி கணக்குகளும் நிர்வாக அமைப்புகளும் வேறாக இருந்த போதும் திருமுருகனே யாவற்றுக்கும் தலைமை தாங்குகிறார்.
இதனால் தமக்குக் கிடைத்த கல்விப் பணியை ஓய்வுப் பணியாக்கி மேற்கூறிய கடமைகளுக்காக அயராது தம்மை அர்ப்பணித்துள்ளார். சைவத்துக்கும், தமிழுக்கும், அறப்பணிகளுக்கும் ஆணி வேராக அமைந்து வளர்ந்து வரும் திருமுருகனின் பணிச்சிறப்புக்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினரால் கலாநிதிப் பட்டமும் கிடைக்கப் பெற்றார்
இவரின் முயற்சியால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் சிவதட்சணாமூர்த்தி திருக்கோவிலுடன் திருவாசக அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
21 அடி உயரமான கருங்கல் இரதம் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்ட 658 திருவாசக பாடல்கள், பதினோரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிவபுராணங்கள், கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் என்பவை கொண்டு திருவாசக நூல் ஆராய்ச்சி நிலையம் திரு திருமதி மனமோகன் சிவகௌரி தம்பதிகளின் அன்பளிப்பால் நிறைவேற்றப்பட்டு 2018 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
எம் மண்ணை ஆண்ட 23 மன்னர்களின் உருவச்சிலைகள், புராதன பொருட்கள், அரிய புகைப்படங்கள் ஓவியங்கள், சூரிய குடும்ப கட்டுமானம், எம் மூதாதையர்களின் பயன்பாடு என்பவற்றை கொண்ட சிவபூமி அரும்பொருட் காட்சியகம் ஒன்றும் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவரின் சிவபூமி அறக்கட்டளையினால் கட்டாக்காலி நாய்களை பராமரிப்பதற்காக இயக்கச்சியில் 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிவபூமி நாய்கள் சரணாலயம், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வைத்திய சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காகவும் அபயம் மருத்துவ சேவை நிலையத்தையும் உருவாக்கி நிர்வகித்து வருகின்றார்.
இவற்றை எல்லாம் விட எதிர்கால சிவபூமியின் அறப்பணிக்கு உறுதுணையாக இருக்கவென சுழிபுரம் நாவற்குழி ஆகிய இடங்களில் வயல்கள் விவசாய பண்ணைகள் பஞ்சாமிர்த தோட்டங்களையும் அமைத்து பராமரித்து வருகின்றார்.
ஆறு திருமுருகன் அவர்கள் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் துர்க்காதேவி தேவஸ்தான தலைவராகவும் பணியாற்றினாலும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவராகவும் திருக்கேதீஸ்வர திருப்பணி சபை உறுப்பினராகவும், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் என்று பல சமூக மட்ட சங்கங்களிலும் கழகங்களிலும் உறுப்பினராகவும் போசகராகவும் உள்ளார்
மேலும் அன்று புத்திஜீவிகள் கலைஞர்கள் தென் இந்தியாவுடன் தொடர்பில் இருந்து அங்கு ம் இங்கும் கலைகள் வளர்ந்தன .கல்வி கற்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன .அதனால் தான் வீரமணி அய்யர் ஏரம்பு சுப்பையா போன்றும் தட்சணாமூர்த்தி ,இருத்திராதிபதி போன்றும் இன்னோரன்ன தலைகள் எமது நாட்டை அலங்கரித்தனர் .சிறப்பு பெற்றனர் பெருமை கொண்டனர் .எனவே திருமுருகனின் சிந்தனை இந்தத் திசையிலும் பயணிக்க வேண்டும் .ஊக்கமுள்ள மாணவர்களை கலைஞர்களாக் பேச்சாளர்களாக இந்தத் துறைகளிலும் இந்தியாவுக்கு அனுப்பி பயிற்றுவிக்க வேண்டும்
மேலும் சிறு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் பயிற்சிப் பட்டறைகளை உள் நாட்டில் எங்காவது அமைத்து
இளைஞர்களை சுய தொழில் சிந்தனைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும் .இன்று புலம் பெயர் தேசங்களில் உள்ள திறமைகளை இங்கு எமது தேசத்திலும் உருவாக்க வேண்டும் .
அதை விட முக்கியமான விடயம் என்ன வெ னில் புலம் பெயர் தேச மக்களின் அறக் கொடைகளால் மாத்தறை முதல் கீரிமலை வரை அறப்பணிகள் நடைபெறுகிறது
தற்செயலாக ஏதாவது நடந்து விட்டால் .இப்பணிகளை மேற்கொண்டு நடாத்துவதற்கு உண்மையான தொண்டர்களை பயிற்றுவித்து வந்தால் மட்டுமே இந்த அறப்பணிகள் தொடர முடியும் .இதை ஆறுதிருமுருகன் உணர்ந்து தனது களப்பணி கேற்ற சுய நலமற்ற வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது அவா ,
நன்றி
Copyright @ Manikkavasagar Vaitialingam

சாவகச்சேரி என்னதான் நடக்குது?சாவகச்சேரி வைத்திய சாலை பிரச்சினை தமிழருக்குக் கிடைச்சிருக்கும் இறுதி வாய்ப்பு.என்ன வாய்ப்ப...
07/07/2024

சாவகச்சேரி என்னதான் நடக்குது?

சாவகச்சேரி வைத்திய சாலை பிரச்சினை தமிழருக்குக் கிடைச்சிருக்கும் இறுதி வாய்ப்பு.

என்ன வாய்ப்பு? இறுதி வரை வாசியுங்கள் சொல்கிறேன்.

இந்த பிரச்சினை பற்றிய எனது கேள்விகள்.

1. இப்போதைய வைத்திய அத்தியகட்சரை சாவகச்சேரிக்கு நியமிக்க வேண்டாம் என பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் சுகாதார அமைச்சுக்கு அழைப்பெடுத்து சொன்னதாக வைத்திய அத்தியகட்சர் சொல்கிறார்.

ஆக, இந்தப் பிரச்சினை வைத்திய அத்தியகட்சர் நியமனத்திற்கு முன்பே ஆரம்பித்துள்ளது.

எதற்காக வைத்தியர் கேதீஸ்வரன் குறித்த வைத்திய அத்தியகட்சர் சாவகச்சேரிக்கு நியமிக்கப்படக்கூடாது எனத் தடுக்க முனைந்தார்?

2. வைத்தியர் கேதீஸ்வரன் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை கடத்தி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய உதவி செய்வதாக குறித்த வைத்திய அத்தியகட்சர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பாரிய கிரிமினல் குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டு மீது இதுவரை மாகாண சபை பணிப்பாளரோ, வடமாகாண சுகாதார சேவை செயலாளரோ அல்லது ஆளுனரோ வைத்தியர் கேதீஸ்வரன் மீது விசாரணையை கோராமல் இருப்பதற்கான காரணம் என்ன?
இப்படி ஒரு பாரிய கிரிமினல் குற்றத்தை ஒரு வைத்திய அத்தியகட்சர் பொதுவெளியில் துணிந்து முன்வைத்த பின்பும் , குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை எதுவும் இல்லாமல் ஒரு உயர் பதவியில் தெடர்வது மக்களுக்குப் பாதூகாப்பானதா?

3. பிரச்சினையின் ஆரம்பத்தில் மாகாண சபை பணிப்பாளர் , வைத்திய அத்தியகட்சரிடம் , " மத்திய சுகாதார அமைச்சு, வாய்வழி அறிவுறுத்தியதன் காரணமாக உங்களை இடமாற்றேகிறோம்" என்கிறார்.

அதற்கு வைத்திய அத்தியகட்சர் " சுகாதார அமைச்சின் வாய்வழி கோரிக்கையை ஏற்க மாட்டேன், கடிதம் தாருங்கள் என்கிறார்.

அந்தக் கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அன்றே கொடுத்திருந்தால் , இந்தளவு பிரச்சினை வந்திருக்காது. ஆனால் ஒரு மணி நேரத்தில் , பக்ஸ் பண்ணக்கூடிய கடிதத்தை மத்திய அமைச்சு ஏன் இதுவரை அனுப்பாமல் இழுத்தடிக்கிறது.
வைத்திய அத்தியகட்சர் மத்திய சுகாதார செயலாளர் தன்னை தொடர்ந்து வேலை செய்ய சொல்வதாக சொல்கிறார்.

மத்திய அமைச்சு இடமாற்ற சொன்னதாக மாகாண சேவை பணிப்பாளர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறாரா?

அல்லது மத்திய அமைச்சு மாகாண பணிப்பாளருக்கு ஒரு விடயத்தை சொல்லி, வைத்திய அத்தியகட்சருக்கு அதற்கு எதிர்மாறான விடயத்தைச் சொல்லி சாவகச்சேரியில் பிரச்சினையை உருவாக்க விரும்பியதா?

4. ஒரு மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்திய சாலை இரண்டு நாள் மூடப்பட்ட பின்பும் , வடமாகாண ஆட்சியாளராக இருக்கும் ஆளுனர் தனக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரம் இல்லை என அசண்டையீனமாக இருக்க காரணம் என்ன?

5. ஒரு வைத்தியசாலை இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாகாண அமைச்சு தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறது. அப்படியென்றால் இந்த பிரச்சினையை தீர்ககும் அதிகாரம் யாரிடமுள்ளது?

6. வைத்திய அத்தியகட்சர் , கட்டடம் கட்ட கிடைத்த 400 மில்லியன் பணத்தில் 200 மில்லியனே கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார். அந்தப் பணத்தை புலம்பெயர் அமைப்புக்களே கொடுத்துள்ளது என நினைக்கிறேன்.

அந்தப் பணம் கச்சேரி ஊடாக வந்ததா? அப்படியென்றால் 200 மில்லியன் கையாடல் நடந்ததிற்கும் GA மற்றும் கச்சேரி ஊழியர்களிற்கும் தொடர்பு உள்ளதா?
கச்சேரி ஊடாக வராமல் விட்டிருந்தால் எப்படி இந்தப் பணம் வந்து சேர்ந்தது. எந்தப் புள்ளியில் யார் யாரால் இந்த 200 மில்லியன் ரூபாயும் கையாடல் செய்யப்பட்டது.

7. வைத்திய அத்தியகட்சர் இந்தக் கட்டிடம் 3 தடவை திறக்கப்பட்ட போதும் கடந்த 12 வருடமாக இயங்காத நிலையில் மூடி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.
வைத்திய சாலைச் சமூகமோ இது 2015 கட்டப்பட தொடங்கி போன மாதமே திறப்பு விழா நடந்ததாக சொல்கிறது. இதில் எது உண்மை?

8. புதிய வைத்தியசாலை கட்டிடம் இயங்காமல் இருக்கக் காரணம் மின்பிறப்பாக்கி இல்லை என்று வைத்திய சாலை சமூகம் சொல்கிறது. ஆனால் வைத்திய அத்தியகட்சர் தான் மூன்று நாளில் புதிய கட்டிடத்தில் விடுதிகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளை தொடங்கியதாக சொல்கிறார்.
மின்பிறப்பாக்கி இல்லாத நிலையில் , மின்சாரம் தடைப்பட்டால் , மின்சாரத்தில் நம்பி இருக்கும் உயிர் காக்கும் கருவிகள், கண்காணிப்பு கருவிகள் போன்றவை இல்லாமல் நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்பதை ஒரு மருத்துவ நிர்வாகம் படித்தவர் அறியாமல் இருக்கமாட்டார். அதனால் அவர் அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்துதான் புதிய விடுதியைத் திறந்திருப்பார். அந்த மாற்று ஏற்பாட்டை ஏன் இதற்கு முன் இருந்தவர்கள் செய்து அந்த விடுதியைத் திறக்கவில்லை.

9. வைத்தியசாலை சமூகம் குறித்த மின்பிறப்பாக்கி அமைச்சுக்கு வந்து சேர்நதாலும் அதை வைக்க கட்டிடம் இல்லாததால் இன்னும் சாவகச்சேரிக்கு கொண்டு வரப்படவில்லை என்கிறது. ஆனாலும் இப்போது கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டுள்ளது அதனால் தாங்கள் ஒரு மாதமளவில் மின் பிறப்பாக்கியைக் கொண்டு வந்து புதிய கட்டிடத்தில் வைத்தியசாலையை பாதுகாப்பாக தொடங்க எண்ணி இருந்ததாக சொல்கிறது.

உண்மையில் மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டு விட்டதா? அதை வைக்க கட்டடம் கட்டப்படுகிறதா?

10. மின்பிறப்பாக்கி வைக்க இடமில்லாமல் 400 மில்லியன் ரூபாய் பட்ஜெட் செலவாகும் கட்டிடத்தை கட்டும் திட்ட வரைபுக்கும் , விலை மனுக்கோரலுக்கும் அனுமதி வழங்கியது யார்? விலைமனுக்கோரல் எப்போது எப்படி பெறப்பட்டது?
குறித்த கட்டுமான பணி செய்த ஒப்பந்தகாரருக்கும், அந்த அரைகுறை வரைபை அனுமதித்தவர்களுக்கும் , வைத்திய அத்தியகட்சர் முன் வைக்கும் 200 மில்லியன் கையாடலுக்கும் தொடர்பு உள்ளதா?

11. சட்ட மருத்துவ அதிகாரி தன் அலுவலகத்தை வைத்திய சாலையில் மறைவான இடத்தில் வைத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வைத்திய அத்தியகட்சர் மீது குற்றம் சாட்டுகிறார். இதுபற்றி என்ன விசாரணை கோரப்பட்டுள்ளது? குறித்த சட்ட மருத்துவ அதிகாரி இன்னும் கடமையில் உள்ளாரா?

12. ஆக சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியர் கேதீஸ்வரன் மீது இரண்டு பாரிய கிரிமினல் குற்றங்களை வைத்திய அத்தியகட்சர் வைத்துள்ளார். அது சம்பந்தமாக இருவரும் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளார்களா? அந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுத்தால் , அதற்கு என்ன விதமான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்? சட்ட நடவடிக்கை எடுக்காது விட்டால் , சட்ட நடவடிக்கையின் போது தங்கள் குற்றம் ஊர்ஜிதம் ஆகிவிடும் என்று அஞ்சுகிறார்களா?

13. வைத்திய அத்தியகட்சர், GMOA பொறுப்பாளர் மயூரன் தனக்கு அடித்து தன்னிடமிருந்து பெரும் தொகை பணத்தையும் , கைபேசியையும் பறித்து சென்றதாக சொல்கிறார்.

கைபேசி திரும்பக் கிடைத்தாகச் சொல்கிறார். ஆனால் பணம் கிடைக்கவில்லை என்கிறார். அதற்கு பொலிஸ் என்ன நடவடிக்கை எடுத்தது?

கிட்டத்தட்ட மூன்று லட்சம் பணத்தை கையில் அத்தியகட்சர் வைத்திருந்துள்ளார். அந்த பணம் எப்படி வந்தது என்ற ஆதாரம் கட்டாயம் அவரிடம் இருக்கும். அந்த ஆதாரத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வைத்திய அத்தியகட்சருக்கு மீண்டும் அந்தப் பணம் கிடைக்க பொலிஸ் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது?

14. இவ்வளவு காலமும் மரணமான உடல்களை யாழ்ப்பாணம் அனுப்புவது அல்லது விடுவிக்க காலதாமதமாக்கியதாக வைத்திய அத்தியகட்சர் குற்றம் சாட்டுகிறார். உடலை விடுவிக்க சட்ட மருத்துவ துறையினரும் , வைத்திய ஊழியர்களும் பணம் கோருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வைத்திய அத்தியகட்சர் தான் கடமை ஏற்ற உடனேயே இறந்தவர்களின் உடலை இரண்டு மணி நேரத்தில் விடுவிக்க ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்.
புதிதாக கடமை ஏற்ற ஒரு இளம் வைத்திய அத்தியகட்சரால் ஒரு இறந்த உடலை இருமணிநேரத்தில் விடுவிக்க கூடியதாக இருக்கும்போது, யாழ்மாவட்ட சட்ட மருத்துவ துறை பொறுப்பாளர்கள் இதுவரை ஏன் இந்த விடயத்தில் அசண்டையீனமாக இருந்தனர்?
.

சரி தலைப்பிலே இது தமிழர்களுக்கு இறுதி வாய்ப்பு என்றேன். ஆம் , மாகாண சபை சார்ந்த ஒரு பிரச்சினையை நம்மாள் கையாள முடியுமா, அதற்கான அடிப்படை தகுதியாவது நம் இனத்துக்கு உள்ளதா அல்லது இதற்கும் தீர்வு தாங்க என்று சிங்களவரிடம் போய் கை கட்டி நிற்கனுமா என்று பரீட்சிக்க கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பு இது.

அதுதவிர , வடமாகாண சுகாதார சேவையை திட்டமிட்டு அழிக்கவே வைத்திய அத்தியகட்சர் அரசியல்ரீதியாக அனுப்பி உள்ளதாக GMOA கூறுகிறது. இதையும் ஆராய்ந்து உண்மைத் தன்மையை அறிய வேண்டிய பொறுப்பு உள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆளுனர் உடனடியாக வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் சட்டமருத்துவ அதிகாரி மீது சொல்லப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பொலிஸை பணிக்க வேண்டும். வைத்திய அத்தியகட்சரிடமுள்ள ஆதாரங்களை ஆளுனர் பொலிசிடம் கொடுக்க வேண்டும் . இவற்றுக்குக்கொஞ்சம் காலம் எடுக்கலாம்.

ஆனால் கட்டட கட்டுமான கையாடலை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

கட்டடம் கட்ட பணம் எப்படி வந்தது, ஒப்பந்தாரர் எப்படி தெரிவு செய்யப்பட்டார், திட்டவரைபு மற்றும் ஒப்பந்த தொகை சரியானதா என்பதை ஆளுனர்.நினைத்தால் ஒரு நாளிலே கண்டு பிடிக்கலாம் . அந்த விபரங்களை பொதுமக்களுக்கும் அறிவிக்க வேண்டும். அந்த கணக்கு வழக்கில் கையாடல் நடந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸா விசாரணை கோரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த கட்டிடம் எப்போது கட்டப்பட்டது, வைத்திய அத்தியகட்சர் சொன்னது போல 3 முறை திறக்கப்பட்டது என்றால் எந்த எந்த திகதிகளில் யாரால் திறக்கப்படடது என்பதை ஆளுனர் ஒரு தொலை பேசி அழைப்பிலேயே அறிந்து வெளிப்படுத்தலாம். வைத்திய அத்தியகட்சர் சொன்னது போல் மூன்று முறை பணம் செலவழித்து விழா எடுத்து திறந்தும் 12 வருடமாக கட்டடம் மூடிவைக்கப்பட்டது உண்மை என்றால் அந்த 12 வருடகாலமும் வடமாகாண சுகாதார பணிப்பாளர்களாக இருந்த அனைவரிடமும் ஆளுனர் விளக்கம் கோர வேண்டும்.

வைத்திய சாலை சமூகம் சொல்வது போல் மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டு விட்டதா? அதற்கான கட்டடம் கட்டப்படுகிறதா என்பதை ஆளுனர் ஒரு தொலை பேசி அழைப்பிலேயே உறுதி செய்யலாம். அதன் பின் மின்பிறப்பாக்கி இல்லாத நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன மாற்று வழிமுறையூடாக குறுகிய காலத்தில் வைத்திய அத்தியகட்சர் அந்த கட்டடத்தை திறந்தார் எனவும் இலகுவாக அத்தியகட்சரக்கு அழைப்பொடுத்து அறியலாம்.
மின்பிறப்பாக்கி கதை உண்மையாக இருந்து, வைத்திய அட்சகர் மின்தடை ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாற்று ஏற்பாடு இல்லாமல் புதிய கட்டத்தில் வைத்திய சாலையை இயங்க வைத்திருந்தால், ஏன் அவர் இன்னுமொரு மாதம் காத்திருக்காமல் நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படும் இந்த முடிவை எடுத்தார் என ஆளுனர் வைத்திய அத்தியகட்சரிடமே கேட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கலாம்.

ஆரம்ப முறைப்பாட்டுக் கடிதத்தில் வைத்திய அத்தியகட்சருக்கு உள நோய் உள்ளது என்றும் அதற்காக அவர் பரிசோதிக்கப்பட வேண்டும் என ஏனைய வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பல வைத்தியர்கள் சேர்ந்து இன்னொரு வைத்தியர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு பொய்யாக வைத்திருந்தால் அது பாரிய தவறு.

அதனால் அதற்கும் ஆளுனர் விசாரணை அமைக்க வேண்டும். இலகுவாக யாழில் இருக்கும் உளவியல் நிபுணர்கள் இருவரை , குறித்த வைத்திய அத்தியகட்சரின் உளவியலை பரிசோதனை செய்து நாளைக்கே ரிப்போர்ட் தர சொல்லி கேட்பது ஆளுனருக்கு பெரிய கஷ்டமில்லை. அந்தப் பரிசோதனையில் வைத்திய அத்தியட்சரின் உளவியல் பிரச்சினைக்கும் இந்தப் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை என்று நிரூபணமானால் அந்த குற்றசாட்டுக்களை முன்வைத்த வைத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி ஆளுனர் ஒரே நாளில் விசாரித்து உண்மைத் தன்மையை அறியக்கூடிய பல குற்றச்சாடடுக்கள் உள்ளன. அவற்றை நாளைக்கே ஆளுனர் விசாரித்து பொது மக்களுக்கு தெளிவு படுத்தலாம்.

சில விசாரணைகளுக்கு கொஞ்ச காலம் எடூக்கலாம்.

அதுவரை இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

பொதுமக்களின் நலன் கருதி சாவகச்சேரி வைத்திய அத்தியகட்சரை பருத்திததுறை அல்லது தெல்லிப்பளை வைதியசாலைக்கு தற்காலிகமாக மாற்றி , அங்கே இருக்கும் அத்தியகட்சரை சாவகச்சேரி வைத்தியசாலையை ஒரு மாதத்திற்காவது கவனிக்கும் படி ஒரு கோரிக்கையை முன் வைக்கலாம். அல்லது வைத்திய அத்தியகட்சர் விரும்பும் இடத்திற்கு தற்காலிக மாற்றல்ஸவழங்கலாம்.

பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் , சாவகச்சேரியில் இப்போதைய வைத்திய அத்தியகட்சர் இருக்கத்தக்கதாகவே இன்னொரு shadow அத்தியகட்சரை நியமித்து அவரின் கீழ் தற்காலிகமாக கடமைகளை ஆரம்பிக்கும்படி வைத்தியர்களை கேட்கலாம்.

விசாரணைகள் முடிந்தபின் அந்த முடிவுகளின்படி மேலதிக அடுத்த கட்டத்தை தீர்மானிக்கலாம்.

பொதுநலம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை மட்டுமே இங்கு கேள்விக்கு உட்படுத்தி விளக்க முற்பட்டுள்ளேன்.

அது தவிர தனிநபர் சார்ந்த பிரச்சினைகள், தாபன விதி மீறல் போன்ற விடயங்கள் நிறைய இந்தப் பிரச்சினையில் உள்ளது அவற்றை அந்த அந்தத் திணைக்களங்களும் , தனி நபர்களும் பார்ததுக் கொள்ளட்டும்.

குறிப்பாக இந்த பிரச்சினையில் ஈடுபட்ட/ பெயர் அடிபட்ட அத்தனை வைத்தியர்களினதும் (மாகாண சபை பணிப்பாளர், RDHS உட்பட ) அனைவரது நடவடிக்கைகளும் மருத்துவ நியமங்களுக்கு உட்பட்டதா என்பதை இலங்கை மருத்துவ சபை விசாரிக்க வேண்டும்.

குறிப்பு: இதில் நான் யாருக்கு சார்பாகவோ அலலது எதிராகவோ எதையும் கூற வில்லை. ஒவ்வொருவரும் சொன்ன பிரச்சினைகளை எப்படி அனுகி தீர்வு காணலாம் என்ற ஒரு விளக்கத்தை மட்டும் கூறியுள்ளேன். சரி என நினைத்தால் ஆளுனர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் , பொதுமக்களும் இந்தப் பதிவை இந்த பிரச்சினையை அனுகுவதற்கான வழிகாட்டலாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Copyright @ Sivachandran Sivagnanam

Address

Jaffna
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna News(யாழ்ப்பாண செய்திகள்) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Jaffna

Show All

You may also like