நீதியின் குரல் - வடக்கு கிழக்கு மாகாணங்கள்

  • Home
  • Sri Lanka
  • Jaffna Town
  • நீதியின் குரல் - வடக்கு கிழக்கு மாகாணங்கள்

நீதியின் குரல் - வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதியின் குரல் - வடக்கு கிழக்கு மாகாணங்கள்

🚨விழிப்புணர்வுக்காக🚨 கல்வியில் தனியார் கல்லூரிகள் மிக அவசியமானது என்பது உண்மையானது ஆனால் இலங்கையில் இயங்கும் பல  தனியார்...
17/02/2024

🚨விழிப்புணர்வுக்காக🚨
கல்வியில் தனியார் கல்லூரிகள் மிக அவசியமானது என்பது உண்மையானது

ஆனால் இலங்கையில் இயங்கும் பல தனியார் கல்வி நிலையங்களின் முதல் நோக்கமும், கடைசி இலக்கும் பணம் ஒன்று தான்.

நீங்கள் எந்த கல்லூரியில் கற்றாலும் பிரச்சினை இல்லை அந்தவகையில் மாணவனொருவர் தனது கல்விக்காக தனியார் கல்லூரியை தெரிவு செய்யும் போது பல்வேறு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் அந்த வகையில் கீழ் உள்ள விடயங்களை அவதானியுங்கள்👇

அதே போல இந்த கல்லூரி இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்ட கல்லூரியா? அப்போது தான் தரப்படும் Certificates Value ஆக இருக்கும்

அதாவது குறித்த தனியார் கல்லூரி அரசாங்கத்தால் மட்டுமின்றி சர்வதேச ரீதியான முன்னணி உயர் கல்வி நிறுவனங்களால்/கல்வி அமைப்புகளால் அங்கீகரிக்கபட்டு இருக்க வேண்டும்

அதே போல CERTIFICATE கற்கைகளை DIPLOMA என கூறி பகல் கொள்ளையில் ஈடுபடாமல் உண்மையாக sri lanka certificate qualification framework சான்றிதழ்களை வழங்குகின்றதா எனவும்

அதே போல மாணவர் குறித்த பல்கலைக்கழகமொன்றில் தான் தெரிவு செய்யும் பாட நெறிகளுக்கு சர்வதேச ரீதியான Accreditation இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானது

அதே போல குறித்த பாட நெறியின் Syllabus-Contents, பரீட்சை முறைகள் குறித்தும் கவனிக்க வேண்டும்

அதாவது துறை சார் Knowledge, Skill மற்றும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பாட நெறி-பரீட்சை முறை உருவாக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

முக்கியக்கமாக New Normal சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி,Critical Thinking Cognitive Skill, Soft skill போன்றவற்றின் விருத்திக்கு தெரிவு செய்த பாட நெறிகளில் வழங்கப்பட்டுள்ள இடம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்

அதாவது Placement, Internship வாய்ப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். விசேடமாக Career Guidance பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

குறித்த கல்லூரி பணியாற்றும் விரிவுரையாளர்களின் Expertise யும் அவதானிக்க வேண்டும்

இவ்வாறன அடிப்படை விடயங்கள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி பணம் கொடுத்து சான்றிதழ்களை பெற்று கொள்ள முயற்சித்தால் அதனால் எந்த பலனுமில்லை

அவை போலி சான்றிதழ்களுக்கு நிகரானதாகும் .உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ள மேற்படி சான்றிதழ்கள் எந்த வகையிலும் உதவாது

அதே போல வெளிநாடுகள் நோக்கிய Skill Migration க்கும் உதவாது. உயர் கல்விக்கும் உதவாது

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தனியார் கல்வி நிலையங்களை முன்னிறுத்தி சமூக தளங்களில் முதலீடு , பொருளாதார அபிவிருத்தி, கல்வி வாய்ப்புகள் என பல கதைகள் எழுதப்படுகின்றன

சமூக தள கதைகளை தவிர்த்து ஆழமாக சிந்தித்து கல்விக்கான முதலீடுகளை செய்து முன் நோக்கி நகர்வதே ஆரோக்கியமானது

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்-10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு துடிதுடிக்க கொலை.மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 1...
17/02/2024

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்-10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு துடிதுடிக்க கொலை.

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார் .
இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.
இந்த நிலையில் அருகில் இருந்த CCTV கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப்பின் புதிய விதிகள் பற்றிய முக்கிய தகவல்கள்... கீழ் உள்ள குறியீடுகளை கவனியுங்கள்..!1. செய்தி அனுப்பப்பட்டது.2.✓✓...
17/02/2024

வாட்ஸ்அப்பின் புதிய விதிகள் பற்றிய முக்கிய தகவல்கள்... கீழ் உள்ள குறியீடுகளை கவனியுங்கள்..!

1. செய்தி அனுப்பப்பட்டது.

2.✓✓ = செய்தி அடைந்தது.

3. இரண்டு நீலம் ✓✓ = செய்தி வாசிக்கப்பட்டது.

மூன்று நீலம் ✓✓✓ = செய்தியை அரசாங்கம் கவனத்தில் கொண்டது.

5. நீலம் ✓ ✓ மற்றும் இரண்டு சிவப்பு = அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

6. ஒரு நீலம் மற்றும் இரண்டு சிவப்பு✓✓ = உங்கள் தகவலை அரசாங்கம் சரிபார்க்கிறது.

7. மூன்று சிவப்புகள் ✓✓✓ = அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது, விரைவில் நீங்கள் நீதிமன்ற அழைப்பைப் பெறுவீர்கள்.

பொறுப்புள்ள குடிமகனாக இருங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள்சீரழியும் இளம் சமுதாயம்தந்தை இரவு பகலாக பிள்ளைகளுக்காக உழைக்கிறார் பிள்ளை நல்ல பிள்ளைய...
17/02/2024

பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள்
சீரழியும் இளம் சமுதாயம்

தந்தை இரவு பகலாக பிள்ளைகளுக்காக உழைக்கிறார் பிள்ளை நல்ல பிள்ளையாக எதிர்காலத்தில் திகழ வேண்டும் என்பதற்காக
ஆனால் பிள்ளையோ தந்தையின் கஷ்டம் புரியாது காதலர் தினம் என்ற போர்வையில் முகதெரியாத ஆண்னுடன் காமத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறது

பாடசாலையில் பணத்தை மற்றும் எதிர் பார்த்து கற்பிக்கும் ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு

உங்களுக்கும் பிள்ளைகள் உள்ளது நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
பாடசாலையில் உங்களிடம் கல்வி கற்க வரும் ஒவ்வொரு பிள்ளைகளும் உங்களுக்கு அமானிதம்
அவர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடும்போது அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்கள் செய்யும் பாவத்தில் ஒரு பங்கு உங்களையும் வந்து சேரும் எனவே நாளை கடவுளுக்கு பதில் சொல்ல தயாராகுங்கள்

நான் இந்த பதிவில் எல்லா ஆசிரியரகளை குறை சொல்லவில்லை ஓர்சில மாணவர்களின் செயற்பட்டால் நமது பாடசாலைக்கும் கெட்ட பெயர் என்பதை மறந்திட வேண்டாம்.

 #இப்ப_புரிகிறதா?youtubeகாரனுகள் சிலருக்கு இதுதான் உழைப்பு !🫣🫣🫣
17/02/2024

#இப்ப_புரிகிறதா?
youtubeகாரனுகள் சிலருக்கு இதுதான் உழைப்பு !
🫣🫣🫣

அவசரம்
11/02/2024

அவசரம்

நாம இங்க முற்றவெளியை பற்றி பேசிட்டு இருப்போம்.. அவங்க அங்க மறுபடியும் வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குக...
11/02/2024

நாம இங்க முற்றவெளியை பற்றி பேசிட்டு இருப்போம்.. அவங்க அங்க மறுபடியும் வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நிற்க்கின்றார்கள்.
இதை பற்றி கதைக்கவோ இதுக்காக ஒன்றுகூடவோ யாரும் இல்லை.
ஒரு நடிகை நடிகனுக்காக கூடும் மந்தை கூட்டங்கள் இது போன்ற பிரச்சனைகளில் எங்கே?

” பிணக் குவியலின் மேல் மானாடி மயிலாடியவளே...இறந்த பெருச்சாளி கட்டுமரத்தின் கைக்கூலியே... ”யாழில் கலா மாஸ்டருக்கு எதிர்ப்...
11/02/2024

” பிணக் குவியலின் மேல் மானாடி மயிலாடியவளே...
இறந்த பெருச்சாளி கட்டுமரத்தின் கைக்கூலியே... ”

யாழில் கலா மாஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்!

2009 தமிழர்களிற்கெதிரான இனப்படுகொலை தீவிரமடைந்திருந்த நிலையில் தமிழக மக்கள் எழுச்சியடைவதை தடுப்பதற்காக கருணாநிதியுடன் இணைந்து மானாட மயிலாட நிகழ்வு நடத்திய கலா மாஸ்டர் மீது கடும் விமர்சனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

11/02/2024

இதுக்கு தானா இவ்வளவும்?

அன்று யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- இலங்கநாதன் குகநாதன்.23/04/1990. யாழ். முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியி...
11/02/2024

அன்று யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- இலங்கநாதன் குகநாதன்.

23/04/1990. யாழ். முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது, இசையினையும் நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது.

அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம்' எனச் செய்தி வெளியிட்டது. (நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்).

இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது, சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர, மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது.

நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால், மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை. நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும், நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.

தடுப்பரண்கள் எதுவுமில்லை. வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டு இருந்தது. கூடியிருந்த இலக்கக் கணக்கான (இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை. அப்படிக் கட்டுக் கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று. இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா.

இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது.

புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் (SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி, மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும், வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர். அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது. அதனால், முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து, ஊர்திகளுக்கு உள்ளேயும், மறைவான இடங்களிலும் மட்டுமே, இருந்தனர்.

படையினரும் முதலில் ஆயுதங்கள் எதுவும் இன்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மக்கள் கூடக், கூட, படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது, சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றிவந்து வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர்.

இரு தரப்பினரும் சில மீற்றர் இடை வெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு, நேர் நீட்டியபடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியது. மக்கள் எதனையும் பொருட் படுத்தவில்லை, இசையில் மூழ்கிக் கிடந்தனர் இதே, யாழ் மக்கள் தான்.

நிகழ்வின் நோக்கமும், கருப்பொருளும், அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான். முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசை செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்".

ஆம், அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது, அதனால், ஒழுங்கும் இருந்தது, நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளும் இல்லை. இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.

நன்றி..
இலங்கநாதன் குகநாதன்.

லாடம் இல்லாத குதிரைகளாக யாழ் இளைஞர்கள்........!நேற்று நடந்த இசை நிகழ்ச்சியை காண குறிப்பாக ஹரிகரனை நேரில் காணும் ஆவலில் ந...
10/02/2024

லாடம் இல்லாத குதிரைகளாக யாழ் இளைஞர்கள்........!

நேற்று நடந்த இசை நிகழ்ச்சியை காண குறிப்பாக ஹரிகரனை நேரில் காணும் ஆவலில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.
அங்கு காணக்கிடைத்த காட்சிகள் பெரிதும் மனதை வருத்தியது. கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் எடுத்த மண்ணில் தறிகெட்டு தறுதலையாக போதையில் ஒழுக்கம் கெட்டு நிகழ்ச்சியை காண வந்த இருபது வீதமான இளைஞர்கள்.....!

இவர்களால் நிகழ்சியை காண வந்த எண்பது வீதமான மக்களில் கணிசமான மக்கள் மன வெறுப்புடன் அங்கிருந்து விலகி சென்றதை அவதானிக்க முடிந்தது. காடையர்களாக அவர்களின் முக லட்சனங்கள்.... !

தமக்குள் சல்மானகான் சாருக்கான் என்ற நினைப்பில் குருவி கூடு கட்டிவிடும் அளவுக்கு கொண்டை வளர்ந்து கத்தரிக்கோல் சவரக்கத்தியே மாதக்கணக்கில் காணாத தறுதலைகள் நிறைவெறியுடன் நிகழ்வுகளை காண வந்திருந்தனர். அவர்கள் வரும் போதே தாய் தங்கைகளின் பிறப்பு உறுப்பையும் காவி வந்தவர்கள் போல் வாயை திறந்தால் தூசண ( கெட்ட) வார்த்தைகள் கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தனர்.

அங்கு குடும்பசகிதம் வந்தவர்கள் இதனால் நிகழ்ச்சியை காணாமல் விட்டு அகன்றதை கண்டேன். அதோடு முன்னால் காட்சியை ஒளிப்பதிவை மேற்கொகொள்ள அமைத்த தற்காலிக வலுவில்லாத மேடையில் நிகழ்ச்சி ஒருகினைப்பாளர்களின் தயவான வேண்டுதலையும் புறம்தள்ளி அதன்மேல் ஏறி தம்மை பெற்றவர்கள் மனிதர் அல்ல கருங்குரங்குகள் தான் என பறைசாற்றி கொண்டிருந்த பலரை காணமுடிந்தது.

இதிலிருந்து நான் அவதானித்த விடயம் என்னவெனில் இலங்கை காவல்துறையால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. மாகாணத்துக்கான காவல்துறை அதிகாரமும் மென் போக்கான சர்வதிகார சட்டமும் இருந்தால் தான் இந்த காடையர்களை நல்வழிப்படுத்த முடியும்.

யாழ்நகரத்தில் காணும் இடமெல்லாம் நிறை போதையில் இருபதுக்கும் இருபத்தி முன்று வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதோடு கஞ்சா பாவித்து வாய்கள் பிதற்றியபடி பலரை காணமுடிந்தது. இவ்வாறானவர்கள் சமூக விரோதிகளாக வகைப்படுத்தி சிறையிலடைத்து புனர்வாழ்வு அளித்தல் அவசியம்.

இந்த அவலட்சணத்தையுடைய சமூகத்தை நாம் வைத்துகொண்டு தென்னிந்திய கூத்தாடிகளால் எமது இளைஞர்கள் கெட போகிறார்கள் என வசைபாடுவது தமிழ்த்தேசியவாதிகள் மல்லாக்க படுத்திருந்து துப்புவதை போல் உள்ளது.

விரைவாக ஒரு தீர்வை காண வேண்டிய அவசியத்தை சமூக சீரழிவு எம்மை சுட்டிக்காட்டுகிறது. இல்லையேல் படுகேவலமான சமூக கட்டமைப்பை கொண்ட சமூகமாக வடமாகாணம் உருவாகும். இதற்கான அடித்தளத்தை உருவாக்க அரசியல்வாதிகள் சமூக பற்றாளார்கள் நிலைமையின் வீரியத்தை அறிந்து விரைவாக செயல்படுதல் அவசியம்.

05/02/2024

யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் நடக்கும் அலங்கோலம்...

CERTIFICATE கற்கைகளை DIPLOMA என கூறி பகல் கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிலையங்கள் தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்களின்🚨விழிப்பு...
01/02/2024

CERTIFICATE கற்கைகளை DIPLOMA என கூறி பகல் கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிலையங்கள் தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்களின்
🚨விழிப்புணர்வுக்காக🚨

BMICH என்பது வைபவங்களுக்கு வாடகைக்கு விடப்படும் பல தொகுதிகளைக் கொண்ட ஒரு கட்டிடம். அதை யாருக்கும் பதிவு செய்து பணம் கட்டினால் பெற்றுக்கொள்ளலாம். இதில் நடக்கும் வைபவங்களில் யாரும் என்ன சான்றிதழும் யாருக்கும் கொடுக்கலாம். அதற்கு BMICH பொறுப்பாகாது மேலும் BMICH ல் கொடுத்ததால் போலிச் சான்றிதழ் உண்மையாகாது. போலிப் பட்டங்கள் கொடுத்து அதற்கு இருந்த மரியாதையையே கெடுத்துவிட்டாங்க.

BMICHல கொடுத்தால் அது உண்மையான சான்றிதழ்/பட்டம் தான் எண்ணத்தை விட்டுவிடுங்கள்

நீங்கள் எந்த கல்லூரியில் கற்றாலும் பிரச்சினை இல்லை கற்கும் முன் கீழ் உள்ள விடயங்களை அவதானியுங்கள்👇

👉 இந்த கல்லூரி இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்ட கல்லூரியா? அப்போது தான் தரப்படும் Certificates Value ஆக இருக்கும்

👉இதற்கு முதல் நடைபெற்ற வகுப்புகளின் விபரம் / Old Batch Details

👉மாணவர்களின் Feedbacks

👉கற்றுத்தரும் ஆசிரியரின் தகுதி

போன்ற விடயங்களை கேட்டு அறிந்து கொண்ட பின் அந்த Institute இல் இணைந்து பயணிப்பது சால சிறந்தது

அதனை விட்டுவிட்டு BMICH இல் Certificate தரப்படும் பெரிய Hotel இல் Program நடக்கும் என்பதற்காக அந்த Campus பற்றி எந்த வித Details உம் தெரியாமல் கண்மூடித்தனமாக இணைவது உங்கள் முட்டாள் தனம் ஆகும்

எனவே, வரும் முன் காப்போம்

விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பதிவு செய்கிறோம்

மேலும் இது போன்று ஏமாற்று வேலைகளை செய்யும் நபர்கள், நிறுவனங்கள் தொடர்பாக ஆதாரத்துடன் தகவல் கிடைக்கும் போது எமது பக்கத்தில் பதிவிடுவோம்

நன்றி

இருவரும் பெண்கள்இருவரும் ஈழத் தமிழர்கள்ஒருவர் இந்திய தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர்.இ...
08/01/2024

இருவரும் பெண்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள்

ஒருவர் இந்திய தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர்.

இன்னொருவர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி பதக்கம் பெற்றவர்.

இருவரும் சாதனையாளர்கள்தான். ஆனால் பாட்டுப் போட்டியில் பெற்ற பரிசைவிட வயதானவர்களுக்கான ஓட்டப்போட்டியில் நாட்டுக்காக பெற்ற பதக்கம் மதிப்பு மிக்கது.

ஆனால் ஜனாதிபதியோ பாட்டுப்போட்டியில் பரிசு பெற்றவரை பாராட்டியதுபோன்று நாட்டுக்காக ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவரை பாராட்டவில்லை.

ஏனெனில் இதுதான் மீடியா பவர்.

ஒருவேளை ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவர் மீடியாக்களால் புகழப்பட்டிருந்தால் ஜனாதிபதி அவருடன் சேர்ந்து போட்டோ பிடித்திருப்பாரோ?

வரிக்கு பதிவு செய்வது அவசியம்  தண்டம்  அறவிடுவது சட்டவிரோதம் .. ஊடகப் பேச்சாளர் சுரேன் தெரிவிப்பு.18 வயசுக்கு மேற்பட்ட வ...
04/01/2024

வரிக்கு பதிவு செய்வது அவசியம் தண்டம் அறவிடுவது சட்டவிரோதம் .. ஊடகப் பேச்சாளர் சுரேன் தெரிவிப்பு.

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.

ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 18 வயசுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.

வறுமைக்கோட்டுக்கு உற்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமாணம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.

அதுமட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யாவிட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.

ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடையம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்

04/01/2024

எனக்கு தெரியாமல் எப்படி பாதையை மூட முடியும் ரணில் ஜனாதிபதியானது எவ்வாறு வகுப்பெடுத்த மத போதகர் ..தெரியும் என்ற பொலிசார்.

03/01/2024

கோப்பாய் பொலிஸார் பிரிவில் சந்தேகத்துக்குரிய வீடு முற்றுகை கரோயின் போதை மாத்திரைகள் ஊசி மீட்பு.

03/01/2024
02/01/2024

யாழில் எம்ஜிஆர் ஆன தியாகி.. நடனமாடி அள்ளி வீசினார்

வேலணையில் அவலம் .புத்தாண்டு நன் நாளான இன்றைய தினம்....சில கயவர்களால்.....ஈவிரக்கம் அற்ற முறையில் மாடு ஒன்று இறைச்சி ஆக்க...
01/01/2024

வேலணையில் அவலம் .

புத்தாண்டு நன் நாளான இன்றைய தினம்....
சில கயவர்களால்.....
ஈவிரக்கம் அற்ற முறையில் மாடு ஒன்று இறைச்சி ஆக்கப்பட்டுள்ளது....
வேலணை இளைஞர்களால்....
கயவர்கள் பிடிக்கப்பட்டு....
பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.......

இலங்கையில் இன்று முதல்.எரிபொருட்கள் விலை 12 %  ஆல் அதிகரிக்கின்றது.குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின...
01/01/2024

இலங்கையில் இன்று முதல்.

எரிபொருட்கள் விலை 12 % ஆல் அதிகரிக்கின்றது.

குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது.

95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றது.

டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது.

சமையல் எரிவாயு விலை 16% வால் அதிகரிக்கின்றது.

அதாவது 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 வால் அதிகரிக்கின்றது.

கட்டணம் 15% ஆல் அதிகரிக்கின்றது.

அதாவது குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூபா 35 ஆக உயருகின்றது.

முச்சக்கர வண்டி கட்டணம் இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் ரூபா 100 வால் அதிகரிக்கின்றது.

PickMe-Uber கட்டணங்கள் 20 % ஆல் அதிகரிக்கின்றது.

மின்சார கட்டணத்தில் மாற்றம் ஏற்படாத போதும் Solar Panels 20 % ஆல் அதிகரிக்கின்றது .

நீர் கட்டணம் குறைந்தது 3% அதிகரிக்கின்றது.

தபால் கட்டணம் குறைந்தது 7 % ஆல் அதிகரிக்கின்றது.

அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றத.

மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ரூபா ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கின்றது.

மொபைல் போன் விலைகள் 35 % வீதம் அதிகரிக்கின்றது.

அதாவது ரூபா100,000 மதிப்புள்ள மொபைல் போன் நாளை முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது.

நகை மற்றும் தங்க விலைகள் 20 % ஆல் அதிகரிக்கின்றது.

சிற்றுண்டிகளின் விலை ரூபா 10 வால் அதிகரிக்கின்றது.

பால் தேநீர் விலை ரூபா 10 வாலும் சாதாரண தேநீர் விலை ரூபா 5 வாலும் அதிகரிக்கின்றது.

சோறு மற்றும் கொத்துரொட்டி பார்சல் விலை ரூபா 25 வால் அதிகரிக்கின்றது.

பேக்கரி பொருட்களின் விலைகள் ரூபா 5 முதல் ரூபா 15 வரை அதிகரிக்கின்றது.

இது போதாதென்று மரக்கறி விலைகள் உச்சத்தை தொட்டு இருக்கின்றன.

குறிப்பாக பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 2,400 ஆக உயர்ந்து இருக்கின்றது.

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ ரூபா 600 ஆக உயர்ந்து இருக்கின்றது .

முட்டை ரூபா 50 ஆக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் KBC உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை. கடைக்கார்ர்களிடம் அதுபற்றி முறையிட்டதும் “ஆ சர...
31/12/2023

யாழ்ப்பாணத்தில் இயங்கும் KBC உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை. கடைக்கார்ர்களிடம் அதுபற்றி முறையிட்டதும் “ஆ சரி” என்ற பதில் மட்டுமே சாதாரனமாக கடந்து சென்றுவிட்டனர்.

பொறுப்பற்ற உணவகம்
Copied from - பிரபாகரன் டிலக்சன்

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தகவல்!!தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான...
30/12/2023

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தகவல்!!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான இளையதளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அதோடு லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து நடிகர் , விஜய் ‘தளபதி 68 ‘ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.

இலங்கையில் ‘தளபதி 68 ‘ படப்பிடிப்பு
‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை இளயதளபதி விஜய் மனைவி சங்கீதா யாழ்ப்பாணம் இருபாலையைச் சேர்ந்த லண்டன் வாழ் புலம்பெயர் தமிழிச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவி கிருஷா தவறான முடிவு எடுத்து மரணம்!புங்குடுதீவு இறும்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட, வேலணை...
30/12/2023

யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவி கிருஷா தவறான முடிவு எடுத்து மரணம்!

புங்குடுதீவு இறும்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட, வேலணை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 19 வயதான உயர்தர வகுப்பு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி வசந்தராஜா கிருஷா தவறான முடிவு எடுத்து பலியாகியுள்ளார். இதற்கான காரணம் இனும் தெரியவரவில்லை. நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

30/12/2023

😭 இணையத்தில் வேகமாக பரவி வரும் விஜயகாந்த் பேசிய வீடியோ

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரி...
30/12/2023

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்குத் செல்ல முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர்

இந்த விடுமுறையை பெற்றுக் கொள்வதற்காக வதிவிட கிராம அதிகாரியின் சிபாரிசுடன் கோரிக்கையை முன்வைக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகும...
30/12/2023

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.

ஏனையவர்களும் பயன் பெற அதிகம் பகிருவோம்.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும்.எதிர்வரும் ...
30/12/2023

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும்.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும். அவ்வாறு பதிவு செய்யாது இருப்பது 50,000/- ரூபாயை விஞ்சாத அபராதத்தை விதிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேவேளை வருடாந்தம் 12 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும்.

30/12/2023

கனடா இஞ்சினியர் என கூறி கொழும்பு யுவதியிடம் திருவிளையாடல்!

கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர் தன்னை ஒரு மென்பொருள் பொறியியலாளர் என்றும் கனடாவில் வசிப்பவர் என்றும் அறிமுகப்படுத்தியதால், தனது தாயார் தான் வாங்கிய இரண்டு மாடி வீட்டில் குறித்த நபரை தங்க அனுமதித்துள்ளார் என்றும்
குறித்த நபரின் வங்கி பரிவர்த்தனைகளுக்காக யுவதி வங்கி கணக்கை தொடங்கியதாகவும் , அவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த பெண்ணிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பொய்யான காரணங்களின் கீழ் கடனாக பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது மனைவியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதாகவும் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க தலையில் போலி முடி அணிந்திருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லண்டனில் தமிழர்களின் 40 கோடி ரூபாக்களை கொள்ளையடித்த நல்லுாரடி அபிராமியும் ரகுவும்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோா!!லண்டன் ஹர...
30/12/2023

லண்டனில் தமிழர்களின் 40 கோடி ரூபாக்களை கொள்ளையடித்த நல்லுாரடி அபிராமியும் ரகுவும்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோா!!

லண்டன் ஹரோ தமிழ் தம்பதிகளின் ஒரு மில்லியன் பவுண் – 40 கோடி ரூபாய் மோசடி!! தம்பதிகள் தலைமறைவு!!!
வீட்டுக்கடன் மோசடியில் ஒரு மில்லியன் பவுண்கள் வரை ஏமாற்றி அபி – ரகு தம்பதிகள் தலைமறைவாகி உள்ளனர்.
அபி – ரகு தம்பதிகளிடம் சில நூறாயிரம் பவுண்களை இழந்ததாக பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் ஊடகத்திடம் தொடர்புகொண்டு அவர்களது முகவரியை அறிந்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மையில் அபி – ரகு தம்பதிகளினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட இரு முகவரிகளுக்கு கடன் மற்றும் கட்டண வசூலிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விஜயத்தில் அக்குடும்பத்தினர் அங்கு இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

ரகு என்று அறியப்படும் ராகுலன் லோகநாதன் கொழும்பைச் சேர்ந்தவர். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1985 இல் பிறந்த அபி என்று அறியப்பட்ட அபிராமி கணேசலிங்கம் யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

காட்டிய ஆர்வத்தை வீடு வாங்கியத்தில் காட்டவில்லை என்று தெரிவிக்கும் சிவரூபன் வீடு வாங்குவதை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடித்து வந்ததாகத் தெரிவித்தார்.
என்ஐ நம்பர் எடுக்க வேண்டும் லண்டனில் முகவரி வேண்டும் அது வேண்டும் இதுவேண்டும் என்று நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி ஒரு வருடமானதன் பின் அபியில் இருந்த நம்பிக்கை கரைந்துவிட்டதால் தான் பணத்தைத் திருப்பிக் கேட்டதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அப்போது தான் அபி அப்பணத்தை தான் வேறொரு வங்கியில் வைப்பிட்டதாகவும் அது ஒரு வருடத்திற்குப் பின்னரே எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ‘நான் இதனை வைப்பிடச் சொல்லவில்லையே?’ என்று கேள்வி எழுப்பிய சிவரூபன் பிரான்ஸில் உள்ள அபி குடும்பத்தின் இரத்த உறவுகளையும் தொடர்புகொண்டுள்ளார். அவர்களோ சிவரூபனின் தொடர்புகளை புளொக் செய்து விட்டனர். இறுதியில் சிவரூபன் கிழக்கு லண்டனில் உள்ள சதா சொலிசிற்றேஸின் சட்ட உதவியைப் பெற்று தனக்கு இழைக்கப்பட்டது அநீதியானது என்பதை சட்டப்படி நிரூபித்தார். நீதிமன்றத்திற்கு ஒரு தடவை வந்திருந்த அபிராமி கணேசலிங்கம் தெரிவித்த கதைகளை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.
2021இல் அபிராமி கணேசலிங்கம் சிவரூபன் சிவராஜாவிடம் பெற்றுக்கொண்ட 100 000 பவுண் பணத்தையும் 2018 முதல் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்கிடையே ஊடகம் மற்றுமொரு வயோதிபத் தம்பதிகளுக்கு அபி – ரகு தம்பதிகள் செய்த மோசடியை 2022 ஜனவரியிலும் மார்ச்சிலும் அம்பலப்படுத்தியது. லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (8 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limitted அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (45) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

பலர். பணம் படைத்தவர்களில் அபி – ரகு போன்ற மிகச்சிலரே அவர்களுடைய அதீத பேராசையால் அம்பலப்பட்டுள்ளனர். மிகப் பலர் ‘ஓம் சரவணபவ’ உட்பட தங்களுடைய பணப் பலம் அரசியல் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்து விடுகின்றனர். தவறணை நடத்துவது அங்கு போதைப் பொருளும் விற்பது கோயில் நடத்துவது கோல்மால் செய்வது குழந்தைகளை பாலியல் சுரண்டல் செய்பவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அடியாள் வைத்து ஆளை மிரட்டுவது என்று பணக்கொழுப்பு செய்கின்ற காடைத்தனங்கள் எல்லை மீறிவருகின்றது. இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் பணப்பலத்தைக் கொண்டு சட்டதை வைத்து மிரட்டுவது அடியாட்களை வைத்து மிரட்டுவது சமூக வலைத்தளங்களில் ஊடகவிளலாளர்களைத் தூற்றுவது என்று கடந்த கால்நூற்றாண்டுகளாக பல இடைவிடாத முயற்சிகள் நடைபெறுகின்றது. தமிழ் ஊடகங்களில் கூடுதலான சட்ட மிரட்டல்களை எதிர்கொண்ட ஊடகமாக இது உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக குரலற்றவர்களின் குரலாக இது தொடர்ந்தும் இயங்கும்.

Address

No. 202/2 Hospital Road, Jaffna
Jaffna Town
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when நீதியின் குரல் - வடக்கு கிழக்கு மாகாணங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share