Tamilnewscut

Tamilnewscut Media

???? 🙄
03/04/2023

???? 🙄

🤔?
02/04/2023

🤔?

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் ...
28/02/2023

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

குறிப்பாக தெற்கில் தனக்கு மக்கள் பலம் இல்லை என்பதனையும், வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினையும் கண்டு அஞ்சியே ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றத்தேர்தலினை ஒத்திவைக்க முற்படுகின்றார் என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் அடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உருப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதே சிறந்தது எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

கான்ஸ்டபிளை தாக்கி தொலைபேசியை திருடிச் சென்ற பொலிஸ் அதிகாரி கைதுபயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து காயப்படுத்தி அ...
28/02/2023

கான்ஸ்டபிளை தாக்கி தொலைபேசியை திருடிச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து காயப்படுத்தி அவரது கைத்தொலைபேசியை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் மஹாபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மஹாபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்து, பின்னர் சாதாரண உடையில் எவருக்கும் தெரிவிக்காமல் கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இசை கச்சேரியை காண சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு கச்சேரி பாதுகாப்புக்காக பொலிஸ் சீருடையில் வந்த பியகம பொலிஸ் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காலால் உதைத்து காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல் பயிரிட்டு முழு ஆசியாவுக்கும் உணவளித்தோம் -முன்னாள் ஜனாதிபதிஇலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்...
28/02/2023

நெல் பயிரிட்டு முழு ஆசியாவுக்கும் உணவளித்தோம் -முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.

ஆனால் இன்றைய நிலவரப்படி உண்பதற்குக் கொஞ்சம் கூட சோறு இல்லாமல் மக்கள் மண்டியிடுகிறார்கள்.

களனியில் நடைபெற்ற புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை பாடசாலைகள் மூடப்படுமா ? - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை ...
28/02/2023

நாளை பாடசாலைகள் மூடப்படுமா ? - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கருப்பு நிற ஆடைகளை அணிந்து, கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு பிரசன்னமாகுமாறு, ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும்சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவி...
28/02/2023

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் – பொலிஸ் பரிசோதகர் கைதுபஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின...
28/02/2023

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் – பொலிஸ் பரிசோதகர் கைது

பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார்.

அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த பயிற்சி தாதி ஒருவருக்கு அருகில் நின்றிருந்த குறித்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள் ஆத்திரமடைந்து பரிசோதகரை தாக்கி பொலிஸில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைதுகட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று (28...
28/02/2023

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று (28) காலை யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் இன்று காலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கேய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு 04 கிலோ 600 கிராம் எடையுடையதுடன் அவற்றின் பெறுமதி 230 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு சென்றதற்காக 500 அமெரிக்க டொலர்களை அவர் பெற்றுக்கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பாடசாலைகள் நாளை மூடப்படுமா?மார்ச் 1 ஆம் திகதி கல்விச்சமூகம் கருப்புப் போராட்டம்!நாளை (01) கருப்பு போராட்டத்தை முன்னெடுக்...
28/02/2023

பாடசாலைகள் நாளை மூடப்படுமா?

மார்ச் 1 ஆம் திகதி கல்விச்சமூகம் கருப்புப் போராட்டம்!

நாளை (01) கருப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர்களின் முதன்மை தொழிற்சங்க கூட்டணியின் தொழிற்சங்கத் தலைவர்களின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, மார்ச் 01 வேலைநிறுத்தம் நடத்த முன்மொழியப்பட்டதோடு, கருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அன்று பாடசாலைகளில் கறுப்பு ஆடைகளை அணிந்து அல்லது கறுப்பு துணிகளை கட்டிக் கொண்டு அதிபர், ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

போக்குவரத்து கொடுப்பனவை வழங்க ஆசிரியர்கள்-அதிபர்களுக்கு அதிகாரம் வழங்குதல், வங்கி வட்டியை உயர்த்துவதற்கும் வரி விதிப்பதற்கும் எதிராக, தேர்தலை ஒத்திவைத்து அடக்குமுறைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்?நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்...
28/02/2023

நாளை வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்?

நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், ஏனைய வங்கிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முறையற்ற வரி வசூலிப்பிற்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, ஏனைய அனைத்து துறையினரும் ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

28/02/2023

වැඩ කරන්න පුළුවන් නායකයෙක් අපිට ඉන්නවා

இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க ஜனாதிபதி ஆலோசனைபுற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும்,...
28/02/2023

இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க ஜனாதிபதி ஆலோசனை

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும், நவீன வசதிகளுடனான சிறுவர்களுக்குரிய வைத்தியசாலை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குறித்த ஆலோசனையை ஜனாதிபதியின் செயலாளர் ஈ எம் எஸ் பி ஏக்கநாயக்கவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய்க்கான வைத்தியசாலைகளையும் பொருத்தமான இடத்தில் சிறுவர்களுக்கான வைத்தியசாலை ஒன்றையும் நிர்மாணிப்பதற்குரிய ஆலோசனையே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல்தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழ...
28/02/2023

எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல்

தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்...
28/02/2023

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.

கைதான சந்தேக நபர் வசமிருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

"..இலங்கை மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக கடமையும், பொறுப்பும்  இருக்கின்றன.."    பிரித்தானிய வெளிவிவக...
28/02/2023

"..இலங்கை மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக கடமையும், பொறுப்பும் இருக்கின்றன.."

பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மற்றும் தூதுவரிடம் தமுகூ தலைவர் மனோ கணேசன்> நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

28/02/2023
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்புமூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ம...
28/02/2023

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

யாழ் புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த 4 வயதான அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற சிறுமி கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

மரண விசாரணைகளின் பின்னா் சிறுமியின் சடலம் பெற்றோாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Address

Dehiwala

Telephone

+94778739420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnewscut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share