Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்

Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ் தெரிவிப்பது நாங்கள் – தீர்மானிப்பது எம்மைப் பற்றி
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் காலத்தில்.இமாம் அபூஹனீபா (ரஹ் ) அவர்கள் காலத்தில் ஒருவன் தான் நபியென வாதிட்டான்.இமாமிடம் வந...
09/12/2023

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் காலத்தில்.

இமாம் அபூஹனீபா (ரஹ் ) அவர்கள் காலத்தில் ஒருவன் தான் நபியென வாதிட்டான்.

இமாமிடம் வந்த அவன் "இமாம் அவர்களே எனக்கொரு வாய்ப்பளியுங்கள்நா ன் நபி என நிரூபித்துக்காட்டுகிறேன்" என்றான்.

இதுதொடர்பாக இமாம் அவர்கள் கூறினார்கள்:

யாராவது ஒரு முஸ்லிம், அவனிடம் நீ நபியென்பதற்கான ஆதாரத்தைக் காட்டு எனக் கேட்டாலே, அவர் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிடுவார்.

ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்

எனக்குப்பின் வேறு நபி வரமாட்டார் என தெளிவாகச் சொல்லியிருக்க எங்கே ஆதாரம் காட்டு? எனக் கேட்பது நபி அவர்களி்ன் சொல்லை சந்தேகிப்பதற்கு ஒப்பாகும்.

எனவே அவனிடம் ஆதாரம் கேட்கவேண்டிய அவசியமில்லை. அவன் பொய்யன் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
http://muslimvoice.lk/?p=28161

மத்ரஸா மாணவன் மரணம் - மேலும் 4 பேர் கைதுசாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ச...
09/12/2023

மத்ரஸா மாணவன் மரணம் - மேலும் 4 பேர் கைது

சாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா தொடர்பாக மதராஷாவின் நிர்வாகியான மீரா சாய்வு முஹமட் ஜனாஸ் என்பவர் சாய்ந்தமருது பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசானையை மேற்கொண்டு வந்து நிலையில் ,நேற்று சாய்ந்தமருது பொலிஸார் மற்றும் அம்பாறை குற்றத்தடுப்பு போலீசார் மதிராஸாவில் வேலை செய்த ஊழியர்கள் மற்றும் சிசிடி கேமரா பொருத்துநர் என பலரும் விசாரணையில் ஈடுபடுத்தி உள்ளனர்

சிசிடி கேமராவில் பொருத்துநர் 4 இளைஞர்கள் கைது செய்துள்ளனர் இதேவேளை மதிராசாவில் நிர்வாகியை நேற்று சாய்ந்தமருது போலீசார் மேலதிக விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர் நீதிபதியான எம்.எஸ்.எம்.சம்சுதீன் எதிர்வரும் 21 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்
http://muslimvoice.lk/?p=28158

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணியின் பயணம்19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று (09) இடம்பெற்ற ...
09/12/2023

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணியின் பயணம்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று (09) இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணியால் 30.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஜப்பான் அணி சார்பில் Charles Hinze 36 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் Malsha Tharupathi 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 12.2 பந்துகளில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
http://muslimvoice.lk/?p=28155

பள்ளிவாசலில் திருட்டு - காவலாளி பலிஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில...
09/12/2023

பள்ளிவாசலில் திருட்டு - காவலாளி பலி

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் (வயது - 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
"அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்." ஹட்டன் பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.
நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
ஸ்தல பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.
கொலையாளியை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

http://muslimvoice.lk/?p=28152

இனவாதத்தை பாடசாலைகளில் இருந்து ஒழிக்க வேண்டும்!தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க...
09/12/2023

இனவாதத்தை பாடசாலைகளில் இருந்து ஒழிக்க வேண்டும்!

தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் 'தேசியப் பாடசாலைகளைக்குப்' பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்' என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பர்கர் என ஒவ்வொரு சமூகத்தினரும் இணைந்து கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வாறானதொரு மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படுத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் கதிர்காமம் சென்று கணதேவியையும்,கடவுளையும்,
விஷ்ணுவையும் வழிபட்டு விட்டு வடக்கே சென்று கோவில் கட்டுவது கூடாது எனக் கூறிக்கொண்டு இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும், இதற்கு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் கம் உதாவ நிகழ்ச்சியில் குறிப்பிட்டளவு பதில் வழங்கி ஒவ்வொரு கிராமத்திலும் விகாரை, கோவில், பள்ளிவாசல் என நிர்மானிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இனம், மதம் என பிளவுபட்டு நிற்பதை விட அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், அனைவரின் மதம், கலாச்சாரம் மற்றும் இனத்தை மதிக்கும் சர்வ மத, சர்வ இன தேசியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு முதுகெழும்பை நேராக வைத்துக் கொண்டு ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பேச வேண்டும் என்றும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வரும்போது இனவாதம், மதவாதம், தீவிரவாதம் போன்றவற்றை விட்டொழிய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக பிரபஞ்சம் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் 53 ஆவது கட்டமாக மத்திய கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சாதாரண தரம் வரை படித்திருந்தாலும் அவருக்கு நடைமுறை அறிவு இருந்ததால் ஒக்ஸ்போர்ட் போனவர் போல,நாட்டில் இரு பக்கங்களிலும் 2 யுத்தங்கள் நடந்த போதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்து வந்து 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மக்களை நினைத்தே அவரால் இது மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சிலர் பாடசாலைகளுக்கு பஸ்களை வழங்குவதற்கு பதிலாக நாடு முழுவதும் நூறு இரு நூறு என கூட்டங்களை நடத்தி மக்கள் அலை தம் பக்கம் இருப்பதாக போலியாக காட்டிக் கொள்ளவதாகவும்,இதன் மூலம் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும்,இதன் காரணமாகவே ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சக்தி வேறுபட்ட கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 53 அரச பாடசாலைகளுக்கு 497 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
http://muslimvoice.lk/?p=28149

ஜனாதிபதியின் கொள்கையினால் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்ததுஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள...
09/12/2023

ஜனாதிபதியின் கொள்கையினால் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தெரிவித்தார்.

ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின் கரங்களை நீட்டியதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,

“வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற வகையில், கடந்த ஆண்டு முதல் நாம் முக்கியப் பங்காற்ற வேண்டியிருந்தது. கடந்த காலங்களில் எற்பட்ட பல்வேறு விடயங்களால் வெளிநாடுகளுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளது. அதேபோன்று, எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு அனைத்து நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தி வருகிறோம்.

ஒரு தரப்பைச் சார்ந்திருக்காமல் அனைத்து தரப்பினருடனும் இணக்கமாக செயல்படுவதே எமது நோக்கம். அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். யாரையும் பகைத்துக்கொள்ளாமல் எந்த தரப்புக்கும் சாதகமாக இல்லாமல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இந்த நட்புறவின் மூலம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கடன் மறுசீரமைப்புக்கு பாரிஸ் சமூகத்தில் சில வழிமுறைகள் உள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மேல் உள்ள நாடு என்ற வகையில், கடனை மறுசீரமைப்பதற்கான பொறிமுறை நம்மிடம் இல்லை. எனவே நாங்கள் எமக்கே உரிய பொறிமுறையை தயார் செய்ய வேண்டியிருந்தது. இதன்போது, பாரிஸ் கிளப்பிற்கு வெளியே இந்தியா, சீனா மற்றும் ஜப்பானின் ஆதரவின் மூலம் பாரிஸ் கிளப்பிலிருந்து சில உதவிகளைப் பெற முடிந்தது.

கடந்த மாத நிலவரப்படி, நமது நாட்டின் கடனை மறுசீரமைக்க அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் கடன் மறுசீரமைப்பை விரைவுபடுத்தும் திறன் எம்மிடம் உள்ளது. அத்துடன், டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரண்டாவது தவணையைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக இலங்கை, சரியான பாதையில் செல்வதையே காட்டுகிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் சரியான தீர்மானங்கள் காரணமாக இந்தியா, சீனா, மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநர்களின் ஒப்புதலைப் பெற முடிந்துள்ளது.

கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, நம் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும். எமது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் இன்று நாட்டை அந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் படிப்படியாக செயல்பட்டு வருகிறது.

கடன் மறுசீரமைப்பு மூலம் நாம் செலுத்த வேண்டிய கடனின் அளவைக் குறைக்க முடிகிறது. மேலும், கடனைச் செலுத்தும் அளவைக் குறைத்து, வட்டியைக் குறைப்பதன் மூலம், நாம் செலுத்த வேண்டிய கடனில் இருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணத்தை எமது நாடு பெறும் திறன் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய முதலீட்டாளர்கள் தேவை. அதற்கான வேலைத்திட்டத்தை நாம் இப்போது தொடங்கியுள்ளோம். அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில், தற்போதுள்ள பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மேலும் மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
http://muslimvoice.lk/?p=28146

ஜனவரியில் மின் கட்டணத்தில் திருத்தம்எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிச...
09/12/2023

ஜனவரியில் மின் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே, எதிர்வரும் 12 ஆம் அல்லது 13 ஆம் திகதிகளில் உரிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
http://muslimvoice.lk/?p=28143

நாடு பூராகவும் மின்தடைநாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதான மின்சார  கட்டமைப்பில் ஏ...
09/12/2023

நாடு பூராகவும் மின்தடை

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
http://muslimvoice.lk/?p=28140

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்த...
08/12/2023

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, இவ்வருடம் ஜூலை 1ஆம் திகதி வரையான கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 268,920 ஆக குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 275,321 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2020 இல் 03 லட்சத்திற்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6,401 ஆக குறைந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,786 பிறப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் வருடாந்தப் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளது சுகாதார அமைச்சின் அறிக்கைகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு, நாடளாவிய ரீதியில் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

http://muslimvoice.lk/?p=28137

லன்ச் ஷீட்டை தடை செய்ய முன்மொழிவு!இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச்  செ...
08/12/2023

லன்ச் ஷீட்டை தடை செய்ய முன்மொழிவு!

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச் செயல்முறையை மேம்படுத்துதல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடியது.
சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம், கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் அன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, இந்நாட்டில் லன்ச் ஷீட்கள் (Lunch Sheet) பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், அவற்றில் காணப்படும் தலேட் எனும் புற்றுநோய்க் காரணி மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கமைய, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ச் ஷீட்கள் பயன்படுத்துவதை தடை செய்தல் மற்றும் மாற்றீடுகளை அறிமுகப்படுத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்குவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை வழங்கியது.
உலகில் எந்த நாட்டிலும் லன்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள், லன்ச் ஷீட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவில் சுட்டிக்காட்டினர்.
சுற்றாடல் சட்டத்தைத் திருத்துவதற்கு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குழுவில் கருத்திற் கொள்ளப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு விசேட விடயங்கள் முனவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக மீண்டும் சேகரிப்பது அவற்றை உற்பத்தி செய்து விநியோகிப்பவர்களுக்கே வழங்கவேண்டும் என இதன்போது குழு முன்மொழிந்தது.
அதற்கமைய, புதிய தொழிநுட்பம் மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்காக விநியோகிக்கும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் சேகரித்து மீள்சுழற்சி செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான முறைமையை தயாரிப்பது சட்டத்தைத் திருத்துவதன் நோக்கமாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதை வினைத்திறனான வகையில் மேற்கொள்வதற்கு வெற்று போத்தல்களுக்கு குறிப்பிட்ட அளவு பணம் வழங்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கைக்கு தற்பொழுது இறக்குமதி செய்யப்படும், ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றைப் பட்டியலிட்டு குழுவுக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

http://muslimvoice.lk/?p=28134

களனி பல்கலைக்கழகம் மீள திறப்புகளனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ...
08/12/2023

களனி பல்கலைக்கழகம் மீள திறப்பு

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது.
மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடம் டிசம்பர் 18 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது.

http://muslimvoice.lk/?p=28131

கொழும்பில் நாளை நீர்வெட்டு!அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு...
08/12/2023

கொழும்பில் நாளை நீர்வெட்டு!

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (10) காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
muslimvoice.lk/?p=28127

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியானதுபுதிய மின்சார  சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.மின்சார சபை மற...
08/12/2023

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியானது

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் உள்ளடங்கியுள்ளது.
http://muslimvoice.lk/?p=28124

இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்தொலைகாட்சி நிகழ்ச்சி பாடகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 50 ...
08/12/2023

இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்

தொலைகாட்சி நிகழ்ச்சி பாடகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 50 இலட்சம் ரூபாவை திருடிய சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களது தாயாரின் முறைகேடான கணவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர்

சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 19 வயதுடையவர்கள் என்பதுடன், பிரதான சந்தேகநபர் அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மூலம் பெறப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி இணையத்தின் ஊடாக குறித்த பாடகரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து இந்த பண மோசடியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 11 நோயாளர்களிடம் 03 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தையும் இந்த சந்தேக நபர்கள் மோசடி செய்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று தெரியவந்துள்ளது.

வங்கிக் கணக்குகள்

குறித்த பாடகரின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம் பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாவைச் செலவழித்து ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தகவல் சமர்ப்பித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் அத்துமீறல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என செய்தி வெளியாகியுள்ளது.
http://muslimvoice.lk/?p=28121

கரையொதுங்கிய பெரிய சுறாமீன்காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய பாரிய சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்...
08/12/2023

கரையொதுங்கிய பெரிய சுறாமீன்

காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய பாரிய சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.

காரைதீவு கடல்பரப்பில் பாரிய சுறா மீனொன்று கரையொதுங்கியது.

மீனவர்கள் காரைதீவு கடற்படை முகாமிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.
http://muslimvoice.lk/?p=28118

தெஹிவளையில் ஒட்டகச்சிவிங்கியார் உயிரிழப்புதெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் உள்ள இரண்டு ஒட்டகச் சிவிங்கிகளில் ஒன்று நே...
08/12/2023

தெஹிவளையில் ஒட்டகச்சிவிங்கியார் உயிரிழப்பு

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் உள்ள இரண்டு ஒட்டகச் சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது

ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக விலங்கு மயக்க மருந்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த விலங்கு உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://muslimvoice.lk/?p=28115

08/12/2023
சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற...
07/12/2023

சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 'CEWAS' என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீர்சார் துறைகளில் நிலவும் பிரச்சினைகள், புதுப்பிக்கத்தக்க சக்தியை நீர்வளத்துறைக்கு எவ்வாறு பயன்படுத்துவது, நீர்வழங்கலின்போது நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு கொள்கைகளை மாற்றியமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மழைநீர் மூலம் பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்கான பொறிமுறை பற்றியும் ஆராயப்படும் .
மாநாட்டில் பங்கேற்கும் துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் இது சம்பந்தமாக ஆலோசனைகள், கருத்துகள் பெறப்படும். மக்களுக்கு சுத்தமான - சுகாதார பாதுகாப்புடைய குடிநீரை வழங்குவதே எமது பிரதான நோக்கம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
நீர் வீண்விரயத்தை தடுப்பதற்கான - கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமான வழிகாட்டல்களும் முன்வைக்கப்படும்.
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையால் எமது நாட்டில் 48 சதவீதமானோருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கொரோனா நெருக்கடிக்கு பின்னரான பொருளாதார சூழ்நிலை மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.
எனது அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்திருந்தேன்.
" ஐ.நாவின் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் சுத்தமான குடிநீர் என்ற இலக்கும் உள்ளது. அந்த திட்டத்துக்கு 6 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றோம். இந்த இரு நாட்கள் மாநாட்டில் பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பார். உலக வங்கியின் பிரதானி சரோஜ் குமார் ஜா கலந்து கொள்கின்றார். உலக வங்கி மூலமாக நீர்வழங்கல் துறைக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். இதன்போது நுவரெலியா மற்றும் ஊவா மாகாணத்துக்கும் அவர் செல்வார்.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையிலும் மறுசீரமைப்புகள் இடம்பெறும். நீர்வழங்கல் துறைமூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கப்படும்." என குறிப்பிட்டிருந்தேன்.
http://muslimvoice.lk/?p=28112

வெளிநாட்டு சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்வெளிநாட்டு சேவைக்கு போதியளவு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பா...
07/12/2023

வெளிநாட்டு சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

வெளிநாட்டு சேவைக்கு போதியளவு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர், 55 நாடுகள் மற்றும் இந்த நாட்டின் 24 துறைகளில் 164 அதிகாரிகள் மாத்திரமே பணியாற்றுவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை 264 எனவும் தெரியவந்துள்ளது.
தேவையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டே வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
http://muslimvoice.lk/?p=28109

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிய சிக்கல்கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட...
07/12/2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிய சிக்கல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் வினவிய போது, ​​குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டாலும் வாயுக் கசிவு அப்படியே இருப்பதாக அதன் பராமரிப்பை மேற்கொள்ளும் சீன நிறுவனம், மருத்துவரிடம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குளிர்சாதன அமைப்பை மீட்டெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் தருமாறு சீன நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.
http://muslimvoice.lk/?p=28106

07/12/2023
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிசுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்த...
07/12/2023

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
http://muslimvoice.lk/?p=28103

மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்புஇந்த நாட்டில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும...
07/12/2023

மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு

இந்த நாட்டில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் மாணவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார்.
http://muslimvoice.lk/?p=28100

2024 இல் புதிய கல்வி சீர்திருத்தம்!அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத...
07/12/2023

2024 இல் புதிய கல்வி சீர்திருத்தம்!

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை தரம் 10 இலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தரம் 12 இலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர்,
“2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள 280 பில்லியன் ரூபா நிதியுடன் மொத்தமாக 517 பில்லியன் ரூபா இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்களையும் சாதாரண பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பறைகளில் இணைத்துக்கொள்ளக் கூடிய வகையில் inclusive education முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் STEAM கல்வியின் மூலம் கட்டமைக்கப்பட்ட மனித வளமாகும். அதேபோன்று, இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த, விஞ்ஞானம், தொழில்நுட்பம் பொறியியல், கலை, கணிதம் ஆகிய துறைகள் மூலம் பிள்ளைகளுக்கு முறையான வழிகாட்டல் வழங்கப்பட வேண்டியுள்ளதோடு, அவற்றை முன்னுரிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் முழுமையான கல்விக் கட்டமைப்பையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1-5 / 6-9 / 10-13 ஆம் தரங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்.
மேலும் மாணவர்கள் 21 வயதுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் வகையில் பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களை மீள்திருத்தம் செய்யவுள்ளதுடன், 10 ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சை மற்றும் 12 ஆம் தரத்தில் உயர்தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் வருடத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 2,535 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 03 முதல் 05 வரையான வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைப் பருவ வளர்ச்சிக்கான சிறப்பு வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட கல்வி சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் அடுத்த வருடம் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நிரப்புவதற்கு அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.” என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

http://muslimvoice.lk/?p=28097

கொழும்புக்கு வந்துள்ள நவீன, சொகுசுக் கப்பல்Marella Cruises இன் Marella Discovery 2 சொகுசு கப்பல் எம்.வி. 1,800 பயணிகள் ம...
07/12/2023

கொழும்புக்கு வந்துள்ள நவீன, சொகுசுக் கப்பல்

Marella Cruises இன் Marella Discovery 2 சொகுசு கப்பல் எம்.வி. 1,800 பயணிகள் மற்றும் 755 பணியாளர்களுடன் இன்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதில் 8 உணவகங்கள், 7 மதுபானசாலைகள், திரையரங்குகள், நீச்சல் தடாகங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், நூலகம், SPA, GYM, Casino எனப் பல சொகுசு வசதிகள் காணப்படுகின்றன.

இக்கப்பல் நாளை (08) கொழும்பிலிருந்து புறப்படவுள்ளது.
http://muslimvoice.lk/?p=28093

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr சக்கீலா இஸ்ஸதீன் நியமனம்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக ச...
07/12/2023

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr சக்கீலா இஸ்ஸதீன் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் சக்கீலா இஸ்ஸதீன் கடமையேற்க உள்ளார்.

இவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்க உள்ள முதலாவது பெண் அதிகாரியாவார். மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தருமாகும்.

சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், ஓய்வுபெற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஏ. இஸ்ஸதீன் அவர்களின் மனைவியும் ஆவார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மற்றும் மாகாணத்தில் பல வெற்றிகளைப் பெற்றவர் .

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த காலத்தில் சுகாதார துறையில் அதிகளவிலான விருதுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்த இவர் கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.
http://muslimvoice.lk/?p=28090

இலங்கையின் நகர்புறங்களில் யாசகம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்புஇலங்கையின் நகர்ப்புறங்களில் யாசகம் பெறுபவர்களில் அ...
06/12/2023

இலங்கையின் நகர்புறங்களில் யாசகம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையின் நகர்ப்புறங்களில் யாசகம் பெறுபவர்களில் அதிகமானோர் பெண்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மொத்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை 3,661 ஆக உள்ள நிலையில் அதில் 55 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அமைச்சர் ரணவக்க சுட்டக்காட்டியுள்ளார்
http://muslimvoice.lk/?p=28086

Sri Lanka’s development-driven economic programme to kick off on Jan 1President, Ranil Wickremesinghe, addressing the ce...
06/12/2023

Sri Lanka’s development-driven economic programme to kick off on Jan 1

President, Ranil Wickremesinghe, addressing the centenary celebration of the Government Valuation Department held at Solis Hotel in Pitakotte, declared the initiation of a ground-breaking economic program today (06 Dec.).
Set to kick off on January 1, this transformative initiative is designed to modernize various sectors and propel the nation towards progress.
The President underscored the imperative nature of adopting new economic reforms, emphasizing that the nation cannot afford to persist with out-dated systems. He highlighted that the hardships endured over the past years should not be passed down to the next generation, asserting that the only viable course of action is to embrace the proposed economic changes, urging collective participation.
Reflecting on the recent economic challenges, President Wickremesinghe acknowledged the concerted efforts that rescued the country from financial distress over the past 18 months and commended the heads of public institutions and the workforce for their dedication. He cautioned against complacency, warning that without prudent management of the current economic stability, the nation might face another crisis within the next decade. The President advocated for a shift towards a digital economy, citing the necessity of employing modern economic methodologies.
President Wickremesinghe additionally emphasized that global financial entities have acknowledged Sri Lanka’s remarkable and swift recovery from economic challenges, particularly in comparison to countries facing bankruptcy amid the global economic recession.
Expressing gratitude to the employees of the Government Valuation Department for their dedicated service, the President presented awards and issued a commemorative stamp worth Rs. 25 and a first day cover to mark the centenary celebration. He unveiled the song and flag of the department and introduced the “e Valuation” system to digitize its operations.
President Wickremesinghe, in his additional remarks, highlighted the historical evolution of the Valuation Department, tracing its origins back to the Portuguese period and noting significant developments during the British era, including the establishment of the Assessor position in 1923.
Underlining the continued evolution, the President pointed out that the role of the Valuation Department experienced further expansion with the introduction of the land policy in 1972, ushering in a new era.
The President stressed the critical importance of digitization in this context, emphasizing the necessity for a skilled workforce in assessment within the framework of the digital economy. To achieve this, he proposed an increase in university enrolment to nurture future Valuers.
Looking ahead, President Wickremesinghe advocated for a regular property valuation cycle, suggesting that assessments should be conducted every five years. He underscored the vital contribution of the assessment process to the tax collection system, expressing high regard for the initiation of digitalization within the Valuation Department starting from the current year.
Reflecting on the challenges of the past year, during which the nation confronted a significant economic crisis, it is essential to acknowledge the substantial sacrifices made by both government officials and the broader population in steering the country towards recovery. Gratitude is due to all those who played a part in this collective effort, he said.
In the upcoming weeks, the International Monetary Fund (IMF) is poised to issue a statement signalling the country’s exit from bankruptcy. However, President Ranil Wickremesinghe underscored that, for sustained economic stability, a departure from out-dated economic methods is imperative. He cautioned against the implementation of conventional economic strategies, emphasizing that without adopting innovative approaches, the risk of a recurrent economic crisis looms over the nation within the next decade.
Key measures have already been implemented to reinforce fiscal prudence. The Central Bank has ceased the practice of printing money and loans from state banks earmarked for development, have been halted. President Wickremesinghe emphasized that adherence to these conditions is indispensable for fostering economic growth.
The President emphasized the crucial need for financial discipline, asserting that effective management of the economy in alignment with disciplined financial practices will pave the way for providing greater relief to the citizens in the future.
The prevailing economic crisis in the country, stemming from the disparity between imports and exports coupled with a budget deficit, necessitates strategic interventions. To address these challenges, comprehensive plans have been formulated to augment export earnings, curtail government expenditure and enhance government income.
Recognizing the potential of the tourism industry to generate substantial foreign exchange, a targeted initiative has been set in motion with the aim of attracting 2.5 million tourists to Sri Lanka next year. The government is optimistic that by further doubling this figure to 5 million, a rapid alleviation of the country’s economic woes can be achieved.
As part of this year’s budget proposal, a significant allocation of 300,000 acres has been earmarked for cultivation, representing a key component of the economic revitalization strategy.
The Valuation Department is poised to play a pivotal role in realizing this agricultural objective. Acknowledging the importance of efficiency in this process, the digitization of the Valuation Department has been prioritized, foreseeing enhanced effectiveness in its operations.
In addressing the pressing needs of the energy sector, a paradigm shift towards renewable energy is imperative. The emphasis should be placed on harnessing wind and solar power resources, with the potential to generate 35GW and 200GW, respectively. Given that the national consumption requirement is less than 50GW, this surplus capacity positions the energy sector as a potential foreign exchange earner.
In addition to prioritizing renewable energy, due attention must be accorded to the integration of Artificial Intelligence (AI) into the energy sector and broader digital economy. The strategic deployment of AI has the potential to rapidly bolster the nation’s economic prowess.
The event was attended by, State Minister for Finance Ranjith Siyambalapitiya, State Minister for Mass Media Shanta Bandara, Chief Government Valuer Pushpa Muthukumarana, Post Master General Ruwan Satkumara and employees of the Government Valuation Department.
http://muslimvoice.lk/?p=28084

Address

Maradana
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்:

Videos

Share

Nearby media companies