Prathap Reports

Prathap Reports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prathap Reports, Digital creator, Bogawantalawa.

பொகவந்தலாவை 🍃💚கொட்டியாகலை
13/12/2023

பொகவந்தலாவை 🍃💚
கொட்டியாகலை

அப்பா♥
13/12/2023

அப்பா♥

அந்த நேரத்தில் பெண்ணின் அதிகபட்ச எதிர்பார்ப்பு இவ்வளவாகதான் இருக்கமுடியும் 💯
12/12/2023

அந்த நேரத்தில் பெண்ணின்
அதிகபட்ச எதிர்பார்ப்பு
இவ்வளவாகதான் இருக்கமுடியும் 💯

மற்றுமொன்று 👍
12/12/2023

மற்றுமொன்று 👍

12/12/2023
வடசென்னையில் கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு வெள்ளம் காரணமாக உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலையில்குழ...
11/12/2023

வடசென்னையில் கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு வெள்ளம் காரணமாக உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலையில்

குழந்தை இறந்த விட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் உடலை வெறும் அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்திருக்கிறது மருத்துவத்துறை😥

இலங்கையின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என தோன்றுகிறது!

பேரூந்தின் உரிமையாளர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் 👏அதிக சத்தத்துடன்  பாடல்களை ஒலிக்கவிட்டு  வண்ண விளக்குகள் வித்திய...
11/12/2023

பேரூந்தின் உரிமையாளர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர் 👏

அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு வண்ண விளக்குகள் வித்தியாசமான தேவையற்ற அலங்காரங்கள் என வேண்டாததை செய்வோருக்கு மத்தியில் இப்படி மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்பு செய்வது வியக்க வைக்கின்றது 💯👍

Prathap Thiyagaraja

கொழும்பு இந்து கல்லூரிக்கான உயர்தர  மாணவர் அனுமதி
11/12/2023

கொழும்பு இந்து கல்லூரிக்கான உயர்தர மாணவர் அனுமதி

ஹட்டன் பள்ளிவாசலில் காவலாளி கொலை மற்றும் உண்டியல் கொள்ளையுடன் தொடர்புபட்ட இந்த நபரை பொலிஸ் தேடுகிறது
10/12/2023

ஹட்டன் பள்ளிவாசலில் காவலாளி கொலை மற்றும் உண்டியல் கொள்ளையுடன் தொடர்புபட்ட இந்த நபரை பொலிஸ் தேடுகிறது

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைபரிசில் தொடர்பான அறிவிப்புபகிர்ந்து தேவையானவர்களுக்கு உதவு...
10/12/2023

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைபரிசில் தொடர்பான அறிவிப்பு

பகிர்ந்து தேவையானவர்களுக்கு உதவுங்கள் 🙏

Master of Education (MEd) Programme - 2023/2024 @ Eastern University (EUSL)கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோ...
10/12/2023

Master of Education (MEd) Programme - 2023/2024 @ Eastern University (EUSL)

கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல் - கிழக்குப் பல்கலைக்கழகம்

Details & Application: https://tamilguru.lk/master-of-education-med-23-2024-eastern-university/

Closing Date: 2024-01-05

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரைமூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்அதிர்ஸ்ட மூங்கிலத்த...
10/12/2023

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை
மூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்

அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாது இதனை விற்பனை செய்யத்தொடங்கி உள்ளார்கள். இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மூடநம்பிக்கை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்.

இயற்கை எந்த உயிரியையுமே தேவையற்றுப் படைப்பதில்லை. ஒவ்வொரு உயிரியும் முக்கியத்துவம் மிக்கவை. அவை பரிணாமிக்கும் சூழலின் சமநிலையில் இன்றியமையாத பங்களிப்பை நல்கி வருகின்றன. ஆனால், அவை இயற்கையாகத் தோன்றிய பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படும்போது அவற்றுள் சில இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகிவிடுகின்றன. புதிய சூழலின் சமநிலையைக் குழப்பிச் சரிசெய்யமுடியாத அளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகின் உயிர்ப்பல்வகைமையை அழித்துவரும் பிரதான காரணிகளில் ஒன்றாக இவ்வந்நிய ஊடுருவல் இனங்கள் உள்ளன. அத்தகைய ஒரு அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமே ஆகாயத்தாமரை ஆகும்.

ஆகாயத் தாமரை தென் அமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட ஒரு அசுர நீர்க்களை. நீரே தெரியாத அளவுக்கு விரைந்து மூடிவளரும் ஆற்றல் பெற்றவை. இதனால், நீர்ச்சூழற் தொகுதியில் ஏனைய உயிரினங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, நுளம்புகளின் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. குளங்களில் இருந்து தப்பிச்செல்லும் இக்களை வயல் நிலங்களில் பல்கிப்பெருகி நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இலங்கை அரசாங்கம் ஆகாயத் தாமரையை அந்நிய ஊடுருவல் ஆக்கிரமிப்பு இனமாகக் கருதி அழிக்கத் தலைப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆரியகுளத்திலிருந்து இதனை முற்றாக அகற்றுவதற்கு மிகப் பெருந்தொகைப் பணமும் பெருங்காலமும் எடுத்தது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

இன்னும் ஏராளமான குளங்கள் ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்புக்குள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அதிர்ஸ்ட தேவதை என்ற அந்தஸ்தை வழங்குவது அதற்கு அசுரப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும். வீடுகளிலிருந்து தவறுதலாக வெளியேறும் இதன் சிறு அரும்பே அதன் பல்கிப்பெருகும் ஆற்றலால் சூழலை அதன் ஆக்கிரமிப்பின்கீழ் விரைந்து கொண்டுவந்துவிடும். ஏற்கனவே பார்த்தீனியம், சீமைக்கருவேலம், இப்பில்இப்பில் போன்ற அந்நியன்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம் நிலம் ஆகாயத் தாமரையினாலும் வலிகளைச் சுமக்க நேரிடும். எமது விவசாயத் திணைக்களம் ஆகாயத் தாமரை தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஏற்படுத்த முன்வரவேண்டும் .
பொ. ஐங்கரநேசன்

மடுல்சீமையூர் 😍🍃
10/12/2023

மடுல்சீமையூர் 😍🍃

தெரிந்துக் கொள்வோம்.தமிழர் பரம்பரை.
10/12/2023

தெரிந்துக் கொள்வோம்.
தமிழர் பரம்பரை.

10/12/2023

கண்கள் குளமாகும் காட்சி 😥

அன்றும் இன்றும் உங்கள் கருத்து என்ன?
09/12/2023

அன்றும் இன்றும்
உங்கள் கருத்து என்ன?

09/12/2023

நாடு முழுவதும் மின் தடையா?
உங்கள் பிரதேச நிலைமை என்ன?

பகிருங்கள் யாராவது பயன்பெறுவார்கள் #யாழ்.மத்திய  #பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டம் செல்லும் பேருந்துகளின் நேர அட்...
09/12/2023

பகிருங்கள் யாராவது பயன்பெறுவார்கள்
#யாழ்.மத்திய #பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டம் செல்லும் பேருந்துகளின் நேர அட்டவணை.

1960 காலத்தில் எமது இலங்கை 😍🍃
08/12/2023

1960 காலத்தில் எமது இலங்கை 😍🍃

டைட்டானிக்கை விட 5மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆர...
08/12/2023

டைட்டானிக்கை விட 5மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் Royal Caribbean International நிறுவனத்தினால் இயக்கப்படவுள்ளது. டைட்டானிக் கப்பலானது "dream of the seas" என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கப்பல் 18 பயணிகள் தளங்கள், ஏழு நீச்சல் குளங்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பார்களுடன் 5,610 விருந்தினர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய வசதிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒல்லாந்தர் (நெதர்லாந்து) ஆட்சி காலத்தில்(1658-1796) இலங்கையில் கண்டி இராசதானியில் இருந்து கொள்ளையிட்டு செல்லப்பட்ட மிக ப...
08/12/2023

ஒல்லாந்தர் (நெதர்லாந்து) ஆட்சி காலத்தில்(1658-1796) இலங்கையில் கண்டி இராசதானியில் இருந்து கொள்ளையிட்டு செல்லப்பட்ட மிக பெறுமதியான தொல்பொருட்கள் மீளவும் இலங்கைக்கு நெதர்லாந்து அரசினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பெறுமதிமிக்க பொருட்கள் நம்ப முடியாத அளவு நேர்தியான கலைநயம் மிக்கதாக வியக்க வைக்கின்றது.

இந்த கலைப்பொருட்களில் தங்கம், வெள்ளியினால் ஆன ராஜசிங்க மன்னனின் வாள் மற்றும் வெண்கலத்தால் பொறிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பீரங்கியும் அடங்கும்,
இது Levke's Cannon என்று அழைக்கப்படுகிறது.

Prathap Thiyagaraja

அப்பா ♥தலைப்பு தேவையில்லை 💯
08/12/2023

அப்பா ♥
தலைப்பு தேவையில்லை 💯

தமிழ் மொழிக்கு மட்டும் இருக்கும் தனி சிறப்பு 😍
07/12/2023

தமிழ் மொழிக்கு மட்டும்
இருக்கும் தனி சிறப்பு 😍

இலங்கைக்கு பேரழகு சேர்க்கும் நீர்வீழ்ச்சிகள் 😍🍃
07/12/2023

இலங்கைக்கு பேரழகு சேர்க்கும் நீர்வீழ்ச்சிகள் 😍🍃

மலையக மாணவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்💯தவறவிடவேண்டாம் தேவையானவர்களுக்கு பகிரந்து தெரியப்படுத்துங்கள் 🙏
06/12/2023

மலையக மாணவர்களுக்கான
அரிய சந்தர்ப்பம்💯
தவறவிடவேண்டாம் தேவையானவர்களுக்கு பகிரந்து தெரியப்படுத்துங்கள் 🙏

*அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?**அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?*அஜினோமோட்டோ என்ன...
06/12/2023

*அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?*
*அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?*
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...

அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று...

ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?

அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..

உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்..

ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..

முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.

பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..

சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்...

அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

*உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-*

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது.

நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும், சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..

அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.

இலங்கையின் மிக அழகான புகையிரத நிலையம் 🚆Idalgashinna 😍
06/12/2023

இலங்கையின் மிக அழகான புகையிரத நிலையம் 🚆

Idalgashinna 😍

𝐋𝐢𝐩𝐭𝐨𝐧❜𝐬 𝐒𝐞𝐚𝐭, 𝐇𝐚𝐩𝐮𝐭𝐚𝐥𝐞 🇱🇰 🏕️ 🌎 💚👣🍃
05/12/2023

𝐋𝐢𝐩𝐭𝐨𝐧❜𝐬 𝐒𝐞𝐚𝐭, 𝐇𝐚𝐩𝐮𝐭𝐚𝐥𝐞 🇱🇰 🏕️ 🌎 💚👣🍃

கலையிழந்து போகும் தேயிலை தொழிற்சாலைகள் 👎Bogwana tea factory 🍃
05/12/2023

கலையிழந்து போகும் தேயிலை தொழிற்சாலைகள் 👎
Bogwana tea factory 🍃

2024 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்.
03/12/2023

2024 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்.

கல்வி முதுமாணி (M.Ed.) கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழகம் Application : https://grad.jfn....
03/12/2023

கல்வி முதுமாணி (M.Ed.) கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
Application : https://grad.jfn.ac.lk/

கொள்ளை அழகாக இருக்கின்றது!200 வருடங்களுக்கு முதல் நுளைய முடியாத பெருங்காடுகளாக கிடந்த மலையகத்தை  மண்வெட்டியை கொண்டு வெறு...
02/12/2023

கொள்ளை அழகாக இருக்கின்றது!
200 வருடங்களுக்கு முதல் நுளைய முடியாத பெருங்காடுகளாக கிடந்த மலையகத்தை மண்வெட்டியை கொண்டு வெறும் கைகளால் எத்தனை துயரங்களை கடந்து எம் பாட்டன் பூட்டன் வளப்படுத்தியிருப்பார்கள்?

ஆனால் ஒரு துண்டு நிலம் கூட சொந்தமில்லை எங்களுக்கு!

வெளிமாவட்ட மாணவர்கள் யாழ் இந்துகல்லூரியில் படிப்பதற்கான அரிய வாய்ப்பு 👍க.பொ.த உயர்தரம் 2025 இல் இணைவதற்காக மாணவர்களிடமிர...
01/12/2023

வெளிமாவட்ட மாணவர்கள் யாழ் இந்துகல்லூரியில் படிப்பதற்கான அரிய வாய்ப்பு 👍
க.பொ.த உயர்தரம் 2025 இல் இணைவதற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.
விஞ்ஞானபிரிவில் கல்வியை தொடர வசதிவாய்ப்பற்ற மலையக, வன்னிப்பிரதேச மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பின்வரும் இணைப்பினூடாக விண்ணப்பிக்கவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeGWpqJJ0V37vwGzZ-SwMD_5fw6RuJzta_mCAntJyu43DCn4w/viewform

உயர்தரத்தில் பாடங்களை தெரிவுசெய்யும் மாணவர்களுக்கான மிக அவசியமான பெறுமதியான பதிவு பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு...
01/12/2023

உயர்தரத்தில் பாடங்களை தெரிவுசெய்யும் மாணவர்களுக்கான மிக அவசியமான பெறுமதியான பதிவு

பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும் பல சுற்றறிக்கைகள் திருத்தங்கள் உள்ளதால் தெளிவுக்காக சில தகவல்கள் :-
ஏதும் மாற்றங்கள் இருந்தால் நமது மாணவ செல்வங்களினை சரியான வழிப்படுத்தலின் கீழ் அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய உங்களது கருத்தினை எதிர்பார்த்தே இக்கட்டுரையினை வரைகின்றேன்
@ O/L pass என்பது 6 S ஆகும் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6 S பெற்றால் கணிதம் W எனில் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அம் மாணவன் O/L pass இம் மாணவர்கள் பாடசாலையில் Vocational stream இல் O/L எல்லாப்பாடங்களிலும் W என்றாலும் கற்க முடியும் மாறாக 6 S எடுத்தாலும் ஏனைய stream இல் கற்க முடியாது
@ பாடசாலைகளில் இணைந்து A/L
,.....................................................................
கற்பதற்கான நிபந்தனைகள் என்ன ......................................................................
1. எந்த stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3 C உம் 3 S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்

2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட 3 C உம் 3 S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்

3. Maths கற்பதாயின் 3 C 3 S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்

4. Commerce கற்பதாயின் 3 C 3 S உடன் அச் C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணித அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்

5. Arts கற்பதாயின் 3 C 3 S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் pass பண்ணி 2 C 4 S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும் எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை டாப்பில் பெயரினை எழுதி A/ L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்

3 C 3 S உடன் தமிழ் பாடம் W ஆயின் அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழ் பாடத்தில் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது அல்லது 3 C 3 S உடன் தமிழ் பாடத்தில் S எடுத்து கணிதப்பாடத்தில் W எடுத்தால் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது தமிழ் அல்லது கணிதம் W எடுத்த மாணவர்களின் பெயரினை Pending டாப்பில்தான் எழுதவேண்டும் மற்றய வழமையான டாப்பில் எழுத முடியாது இம் மாணவர்கள் அடுத்து வரும் O/ L பரீட்சையில் pass பண்ணி results இனை பாடசாலையில் காண்பித்த பிற்பாடே pending டாப்பில் உள்ள பெயரினை நீக்கிவிட்டு மற்றய டாப்பில் எழுத வேண்டும் இவ்வாறு பூர்த்தி செய்த மாணவர்கள் A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் பல்கலைக் கழகமும் தாராளமாகச் செல்ல முடியும் ஆனால் O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிற்பாடே வெளியாவதால் கணித பாட 2 வருட நிபந்தனையின் படி குறிப்பிட்ட மாணவர்களினை 2 வருடமும் பாடசாலையில் வைத்திருந்து பாடசாலையின் ஊடாக விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த பிற்பாடு குறித்த மாணவன் அடுத்த வருடம் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்காது அல்லது W சித்தி பெற்றால் இம் மாணவனுக்கு A/L பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க முடியாது அவ்வாறு அனுமதி அட்டையினை வழங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இம் மாணவன் கணித பாடத்தில் s எடுத்தால் பிரச்சினை எதுவும் இல்லை W எடுத்தால் பிரச்சினை ஆரம்பமாகிறது A/L விண்ணப்பம் செய்கின்ற போது கணித பாடம் W எடுத்த மாணவர்கள் கேட்குகின்ற கேள்வி ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கினதால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய முடியாது என மறுத்து அதனை உரிமை மீறலாகப் பார்க்கின்றனர் இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வுகாணலாம்

1. O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக வெளியாக வேண்டும் அல்லது

2. பாடசாலையில் கணிதபாடத்தில் W சித்தியில் இணைந்தோர் அடுத்து வரும் ஆண்டில் ( ஒரு வருடத்திற்குள்) S சித்தி பெற வேண்டும் அவ்வாறு பெறாவிட்டால் ஒரு வருடத்தால் அம்மாணவர்களினை பாடசாலையில் இருந்து நீக்கிவிட வேண்டும் இதுதான் தற்போது அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறையாக இருக்குமென நினைக்கின்றேன்.

அம்மாணவர்களினை நீக்கிவிடுகின்ற போது அவர்களிடம் கூறவேண்டும் ஒரு வருடம் தவறிவிட்டீர்கள் அடுத்து வரும் வருடம் O/L பரீட்சையில் S எடுத்தால் A/L பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாகத் தோற்றி பல்கலைக் கழகம் செல்ல முடியும் என்று கூறுங்கள் 2 வருடமும் தவறினால்தான் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.

என மாணவர்களினை சரியான முறையில் தகுதியானவர்களினைக் கொண்டு வழிப்படுதல் ஆலோசனை சேவையினை வழங்குங்கள் குறிப்பாக தமிழ் பாடத்தில் W பெற்றவர்கள் ஒரு வருடத்தால் மீண்டும் W பெற்றால் அம்மாணவர்கள் தாமாகவே பாடசாலையினை விட்டு விலகிக்கொள்வர் இம் மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினாலும் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.

# தொழில் நுட்ப்ப் பிரிவில்( Technical stream) பொறியியல் தொழில் நுட்பம்(E-Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 S உடன் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் S இருந்தால் போதுமானது கணித பாடத்தில் அல்லது விஞ்ஞான பாடத்தில் W இருந்தால் இத்துறையில் கற்க முடியாது உயிரியல் தொழில் நுட்பம் ( B- Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 உடன் கணித பாடத்தில் W என்றாலும் பிரச்சினை இல்லை ஆனால் விஞ்ஞான பாடத்தில் S சித்தி அவசியமாகும் கணித பாடத்தில் W ஆயின் நிபந்தனையின் பெயரில் இணைக்கப் பட்டு உரிய காலத்திற்குள் S பெறவேண்டும்
#இரு வருடங்களின் O/L பெறுபேற்றினைக்கொண்டு கலைத்துறையில் பாடசாலையில் மாணவர்களினை இணைப்பதாயின் முதல் வருடத்தில் 3 C 2 S பெற்று 5 பாடம் என இருந்தால் அடுத்து வரும் வருடம் O/L பெறுபேற்றினையும் இணைத்து இம் மாணவர்களினை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் குறித்த வருடம் 3 C 2 S இல்லாத மாணவர்களினை தவறான முறையில் இணைத்து விட்டு அடுத்து வருட O/L பெறுபேற்றோடு கற்க அனுமதி வழங்க முடியாது

Note:- ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் மாணவர்களினை பாடசாலையில் இணைக்க முடியாது அதாவது கணிதமும் தமிழும்W அல்லது கணிதம் அல்லது தமிழ் W இருந்தால் 6 பாட சித்தியுடன் 2 C தான் எனில் 3 வது C இற்காக SBA பார்க்க முடியாது.
# கலைப் பிரிவுக்கும் B- Tech இற்கும் நிபந்தனை அடிப்படையில் பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் அது தவிர Bio Maths Commerce E- Tech போன்ற பிரிவுகளில் முடியாது
# என் அன்புக்குரிய ஆசிரியர்களே பிரத்தியேக வகுப்பிற்கு(tution) அதிகமான மாணவர்களினை தன்வசம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் தவறான வழியில் மாணவர்களினை தயவு செய்து வழிப்படுத்த வேண்டாம் .

எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது?
01/12/2023

எத்தனை பேருக்கு இந்த
அனுபவம் இருக்கிறது?

Address

Bogawantalawa
BOGAWANAESTATE

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prathap Reports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


You may also like