BATTI TODAY

BATTI TODAY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BATTI TODAY, Media/News Company, Batticaloa.

Our coverage is comprehensive and insightful, encompassing a gamut of topics that include hard-hitting political interviews, news and human interest stories, issue-based investigations and analyses.

08/01/2025

கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தில் மோதி டிப்பர் விபத்து

கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தில் மோதி டிப்பர் விபத்து................................................
08/01/2025

கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தில் மோதி டிப்பர் விபத்து..............................................................................................................................................

ஏ9வீதி கரடிப்போக்கு சந்தியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதிய சம்பவம் நேற்றிரவு(08) இடம்பெற்றது.

வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

07/01/2025

குரங்கை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் முயற்சியில் கூடு ஒன்றை தயாரித்த கிளிநொச்சி விவசாயி

குரங்கை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் முயற்சியில் கூடு ஒன்றை தயாரித்த கிளிநொச்சி விவசாயி..............
07/01/2025

குரங்கை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் முயற்சியில் கூடு ஒன்றை தயாரித்த கிளிநொச்சி விவசாயி....................................................................................................................................

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியைச் சேர்ந்த ஐயாக்குட்டி புண்ணியமூர்த்தி என்ற விவசாயி தனது உற்பத்தியை அழிக்க வரும் குரங்குகளை பிடிப்பதற்கான கூண்டு அமைத்து அதனுள் குரங்குகளை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நோக்குடன் கூடு ஒன்றை தயாரித்து குறித்த கூட்டில் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் இன்று(07) பரீட்சாத்தமாக ஈடுபட்டார்.

குரங்குகளினால் பல விவசாயங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதனால் திரும்ப விவசாயம் செய்ய முடியாத நிலை.

இதனால் குரங்குகளை உயிரோடு பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நோக்குடன் இதை செய்திருந்தேன்.

ஜனாதிபதியும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

06/01/2025

படைப்பாளி நா. யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

படைப்பாளி நா. யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு.........................................................................
06/01/2025

படைப்பாளி நா. யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு........................................................................................................
.........................

மறைந்த பல்துறை ஆளுமை கொண்ட படைப்பாளி நா. யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

05/01/2025

கொக்கட்டிச்சோலை முனைக்காட்டில் குமார் பொன்னம்பலத்தின் 25வது வருட நினைவேந்தல்

கொக்கட்டிச்சோலை முனைக்காட்டில் குமார் பொன்னம்பலத்தின் 25வது வருட நினைவேந்தல்...............................................
05/01/2025

கொக்கட்டிச்சோலை முனைக்காட்டில் குமார் பொன்னம்பலத்தின் 25வது வருட நினைவேந்தல்....................................................................................................................................................

கொக்கட்டிச்சோலை முனைக்காட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 வருட நினைவேந்தல் இன்று(05) இடம்பெற்றது

இதன்போது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது புகைப்படத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

ஹக்கீமின் காலம் கடந்த சிந்தனை : எங்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன...
03/01/2025

ஹக்கீமின் காலம் கடந்த சிந்தனை : எங்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி - கலீலுர் ரஹ்மான்..............................................................................................................................................................

கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை (சடலங்களை) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த விடயமானது காலம் கடந்த சிந்தனையாக இருந்தாலும் பாராட்டத்தக்கது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், கடந்த வருடம் இறுதிப்பகுதியில் தகனம் தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் "பாராளுமன்றத் தெரிவுக்குழுவை" நியமிக்க வேண்டும்.

அநீதியான சம்பவத்தை செய்த குழுவிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகரிடம் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதற்கும், ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாகவும் வெளிகொண்டு வந்திருந்தேன்.

அந்த கோரிக்கையை ஏற்று காலம் தாமதித்தேனும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிகளை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் பிரஸ்தாப பிரேரணையில் குறிப்பிட்டுள்ள கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், மேற்படி சடலங்ளை நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கை அளவிலான தீர்மானத்தின்படி செயற்பட்டமையும், அந்த சடலங்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும் , பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல, தவறு என்று தெரிவித்து அரசாங்கமே உத்தியோகப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தமையும் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களை பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாமையும் இது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், குடும்ப உறவினர்கள் இறுதி கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படியான கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

ஓட்டமாவடி அரபா நகர், மஜ்மா நகர் பிரதேசங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள் - ஹிஸ்புல்லாஹ்..................
02/01/2025

ஓட்டமாவடி அரபா நகர், மஜ்மா நகர் பிரதேசங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள் - ஹிஸ்புல்லாஹ்.................................‌..........................................‌‌..........................................................

மட்டக்களப்பு அரபா நகர், மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு இதுவரை குடிநீர் வசதி கிடைக்கவில்லை.
நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சந்திவெளி திட்டம் முடிவடைந்தவுடன் குடிநீர் வழப்படும் என உறுதி வழங்கியிருந்தனர்.

ஆனால் தற்போது சந்திவெளி நீர்த் திட்டம் முடிவடைந்த நிலையிலும் அந்த கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை இவற்றை கருத்திற்கொண்டு உடனடியாக குடிநீர் வசதிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார்.

திங்கட்கிழமை(30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பிராந்திய பொறியியலாளர், தற்போது சந்திவெளி குடிநீர்த் திட்டம் முடிவடைந்தாலும் குடிநீர் பாசிக்குடா ஹோட்டல்களுக்கு வழங்கப்படுவதால் நீரின் அழுத்தம் போதாமையுள்ளது. இதனால் குடிநீரை இப்பிரதேச மக்களுக்கு வழங்க முடியாமல் இருக்கின்றது.

இதனைத்தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இக் கிராம மக்களுக்கு கிணற்றிலிருந்தும் கூட நீர் பெற முடியாத நிலை காணப்படுகிறது.

மக்களுக்கு நீர் வசதிகளை வழங்குவது உங்களது கடமை, உடனடியாக இந்த கிராமங்களுக்கு குடீநீர் வழங்குங்கள் என தெரிவித்ததையடுத்து மாவட்ட அபிவிருத்திகுழு இதனை ஏற்றுக்கொண்டு இக்கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வசதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பிராந்திய பொறியியலாளருக்கு பணிப்புரை வழங்கியது.

வறுமைக் கோட்டின் கீழ்  உள்ள சிறார்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு.....................................................
01/01/2025

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சிறார்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு.....................................................................................................................................................

வறுமை கோட்டின் கீழ் உள்ள சிறார்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வானது இன்று(01) கோறளைப்பற்று மத்தி பிரதேச சிறுவர் சபையினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச். எச். எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எம். ஏ. சி. ரமீசா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். எச். எம். ருவைத், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம். எச். எஸ் சபூஸ் பேகம், பிரதேச சிறுவர் சபையின் தலைவர் எம். அனுஸ்சன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர், பிரதேச சிறுவர் சபையின் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

01/01/2025

மட்டக்களப்பு மாநகரம் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றது

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா...................................................................
31/12/2024

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா.................................................................................................‌‌................................

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபிவிழா இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இம்முறை 40 ஆவது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

குறித்த மீலாது விழா அண்மையில் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டு சிறிய விழாவாக இடம்பெற்றது.

இரத்தினபுரி பள்ளிவாசல், இரத்தினபுரி ஜன்னத் பள்ளிவாசல், பலாங்கொடை பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களை நினைவுபடுத்தி இதன்போது தபால் தலை முத்திரையும் வெளியிடப்பட்டது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தலைமையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸின் வழிகாட்டலில் இரத்தினபுரி சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் கடந்த(26) இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டி. சுனில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சப்ரகமுவ மாகாண பிரதி பிரதம செயலாளர் திலினி தர்மதாச, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி, மாகாண கல்வி பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட சப்ரகமுவ மாகாணத்தின் பிரதி, உதவி செயலாளர், தகவல் தொழில்நுட்ப செயலாளர், திட்டமிடல் செயலாளர், கல்வி உதவிச் செயலாளர், இரத்தினபுரி மாவட்டத்தின் உதவிச் செயலாளர், பிரதேச செயலாளர், முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், இரத்தினபுரி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இரத்தினபுரி மாவட்டத் தலைவர், அதன் உறுப்பினர்கள், இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புத்தசாசன கலாசார அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் அசங்க ரத்னாயக்க, புத்தசாசன கலாசார செயலாளர், முஸ்லிம் சயம பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ், பிரதி, உதவிப் பணிப்பாளர்கள், மேலதிகப் பணிப்பாளர், திணைக்களத்தின் கலாசார, ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்ற மீலாது நபிவிழாவானது இம்முறை 40 ஆவது தேசிய மீலாது விழாவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இடம் பெற்றதோடு, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான கஸீதா, கிராஅத், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 425 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுத் தொகைகளும் இங்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாரம்பரிய இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மீலாது நபி விழா தொடர்பான விசேட உரையை அஷ்ஷெய்க் ரஸாத் ஸமானினால் நிகழ்த்தப்பட்டதுடன் நன்றியுரையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் வழங்கினார்.

இந்த 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபிவிழாவில், இரத்தினபுரி மாவட்டத்தில் இருபது முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக 100 இலட்சம் ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டது.

முஹம்மது நபியின் பிறந்த நாள் மற்றும் மறைவை நினைவுகூரும் வகையில் முஸ்லிம்கள் மீலாது நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

அது தொடர்பாக இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் மீலாது நபி தேசிய விழாவை நடாத்தி அரசாங்கம் செயற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

79,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது- இலங்கை சுங்கத் திணைக்களம்..........................................
31/12/2024

79,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது- இலங்கை சுங்கத் திணைக்களம்...............................................................................................................................................................................................................................................

இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு இன்று(31) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 79,000 மெட்ரிக் தொன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 மெட்ரிக் தொன் பச்சரிசியும் 48,000 தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

மேலும், இந்த கையிருப்பில் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 780 தொன் அரிசியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும்- பரீட்சை ஆணையாளர் நாயகம்................................
31/12/2024

ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும்- பரீட்சை ஆணையாளர் நாயகம்....................................................................................................................................................................................................................

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று(31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதகாலங்கள் தேவைப்படுகிறது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வௌியிட முடியும் என நினைகிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்................................................................................
31/12/2024

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்.......................................................................................................................................................................................................................

நாட்டை தூய்மைப்படுத்தும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் நாளை(01) ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான டொக்டர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று(31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில். இவ்வேலைத்திட்டம் சுற்றாடல் சார் மாத்திரமன்று சமூக ஒழுக்க விழுமியங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டை தூய்மைப்படுத்தி விருப்பத்திற்குறிய நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டமாக அமைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகாமைத்துவ  சேவை உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்புமட்டக்களப்பில் முகாமைத்துவ  சேவை உத்தியோகத்தர்களுக்கான ச...
31/12/2024

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனினால் வழங்கிவைக்கப்பட்டது.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து அரச முகாமைத்துவ சேவையின் 1 ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான 10 நாட்களைக் கொண்ட வினைத்திறன் தடைதாண்டல் பாடநெறிப்பயிற்சி வகுப்பானது பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இப் பயிற்சி நெறி வகுப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

31/12/2024

8 மணிநேர வீட்டு வேலைக்கு 2000 ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது - வீட்டு வேலை தொழிலாளர் சங்கம்

Address

Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BATTI TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share