Sky thulir

Sky thulir உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கத்தை like 👍 & follow ✅ செய்து கொள்ளுங்கள்.

உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது page ஐ like / follow செய்து கொள்ளுங்கள்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் சி.மு.கா. கட்சிக்கு வாக்களித்து தனித்துவமான பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் க...
10/11/2024

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் சி.மு.கா. கட்சிக்கு வாக்களித்து தனித்துவமான பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வேட்பாளர் உதுமாலெவ்வை.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தனித்துவமான பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சி.மு.கா. திகாமடுல்ல மாவட்ட 07ம் இலக்க வேட்பாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கேட்டுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை சறா மண்டபத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த வேட்பாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மேலும் கூறுகையில்,

14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளிலிருந்து நமக்கான முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் வாக்குகளினால் பெரும்பான்மையினப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் கடந்த காலத் தவறு இனிமேலும் இடம்பெறக் கூடாது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நான் சி.மு.காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் வேறு கட்சியொன்றில் தேர்தலில் போட்டியிட்டால் பெரும்பான்மையின மக்களின் 15 ஆயிரம் தெரிவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், நமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிலிருந்து பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதனாலயே இக்கட்சியில் போட்டியிடுகின்றேன்.

அட்டாளைச்சேனை பிராந்தியத்திலுள்ள உலமாக்கள். கல்வியியலாளர்கள், சமூகப் பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கூட்டாக என்னை தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கோரினர். மாத்திரமன்றி, 35850 வாக்காளர்கள் உள்ள இப்பிரதேசத்தில் 80 வீதமானவர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். .
அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் நான் அரசியல், பிரதேச, இன, மத, பேதம் பார்க்காது பல்வேறு சேவைகளைச் செய்தேன். அதனை எங்குசென்றாலும் காண்டுகொள்ள முடியும். தற்பொழுது அப்பிரதேசங்களுக்கு நாங்கள் சென்றபோது மக்கள் பேராதரவு வழங்கினர். தேர்தலில் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

எதிர்காலத்தில் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்குமானால் எமது பணிகள் பேதங்களின்றி தொடரும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு தொழிப்பட வேண்டும் என்பதை செயலுருப்படுத்திக் காட்டுவேன். அதற்கான சந்தர்ப்பத்தை தேர்தலில் மரச் சின்னத்திற்கும், 07ம் இலக்கத்திற்கும் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றார்.
சிறிலங்கா சி.மு.கா. பிரதித் தலைவர் சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், சி.மு.கா. அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.எம்.ஹலீம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Paid Post

🎈 எதிர்காலத்தை வெல்லப் போகும் அனைத்து சிறார்களுக்கும் எமது Sky thulir சார்பில் சந்தோஷமான சிறுவர் தின நல்வாழ்த்துக்களைத் ...
01/10/2024

🎈 எதிர்காலத்தை வெல்லப் போகும் அனைத்து சிறார்களுக்கும் எமது Sky thulir சார்பில் சந்தோஷமான சிறுவர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

30/09/2024
🔴 இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு...!இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்ட...
30/09/2024

🔴 இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு...!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 283 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 319 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 183 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

🔴 2023 G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
29/09/2024

🔴 2023 G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

🔴 இலங்கையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
27/09/2024

🔴 இலங்கையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

🔴 பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்...
27/09/2024

🔴 பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன.

இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் வீசா வழங்கலில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பழைய முறைமையின் அடிப்படையிலேயே வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

🔴 சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்...
26/09/2024

🔴 சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி விசேட கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதற்கு அந்தந்த கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பான பணிகளை விரைவில் முடித்து கடன் நிவாரணம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதற்கு இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதேவேளை ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள மோசமான விஷயங்கள் அகற்றப்படுகின்றன.”

“பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளேன்.”

“சட்டத்தை மதிக்கும் நாட்டையும் ஒழுக்கமான சமுதாயத்தையும் உருவாக்குதல்.”

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

“அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்குகிறது.”

“இளம் தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்.”

நாட்டின் நற்பெயரை உயர்த்தும் வகையில் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

மக்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.

“இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் உண்மையாக ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன.”

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதி அநுர குமார ...
25/09/2024

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. ஹனிப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
02. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
03. பந்துல ஹரிச்சந்திர – தென் மாகாண ஆளுநர்
04. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய – வடமேற்கு மாகாண ஆளுநர்
05. திரு.வசந்தகுமார விமலசிறி – வடமத்திய மாகாண ஆளுநர்
06. நாகலிங்கம் சேதநாயகன் – வடமாகாண ஆளுநர்
07. ஜெயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
08. சம்பா ஜானகி ராஜரத்ன – சப்ரகமுவ மாகாண ஆளுநர்
09. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

🔴 பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை, கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி அனுர குமார திசாயக்க நியமித்துள்ளார்.இவர் ஊவா வெல்லஸ்...
25/09/2024

🔴 பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை, கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி அனுர குமார திசாயக்க நியமித்துள்ளார்.

இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் என்பதுடன் ICST University இன் உபவேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர் அக்ரோபோதி வித்தியாலத்தில் தனது ஆரம்பக்கல்வியை கற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

🔴 பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்ற...
25/09/2024

🔴 பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும்.

🔴 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு ம...
25/09/2024

🔴 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் பிரிவுக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

22 தொகுதிகளிலும் உள்ள மாவட்ட செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் 10வது நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுகிறது.

இதேவேளை, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 11 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

🔴 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா - இறுதித் தீர்மானம் விரைவில்..!
24/09/2024

🔴 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா - இறுதித் தீர்மானம் விரைவில்..!

🔴 கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு...!நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னா...
24/09/2024

🔴 கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு...!

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.

அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை இட்டிருந்தார்..

இதன்படி, 123,888 மெற்றிக் டொன் டீசலும், 13,627 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளன.

நாட்டில் 90,972 மெட்ரிக் டொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோலும், 18,729 மெட்ரிக் டொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோலும் உள்ளன.

நாட்டில் 30,295 மெற்றிக் டொன் விமான எரிபொருள் இருப்பதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, தனது உத்தியோகபூர்வ காரையும் அமைச்சு அலுவலகத்தையும் நேற்று (22) கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம்.
23/09/2024

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டா...
23/09/2024

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவியேற்கிறார்.
23/09/2024

9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவியேற்கிறார்.

அட்டாளைச்சேனை மண்ணின் வரலாற்றில் முதல் தடவையாக 17கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்...
01/09/2024

அட்டாளைச்சேனை மண்ணின் வரலாற்றில் முதல் தடவையாக 17கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை கொண்டு அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி 30.08.2024 அட்டாளைச்சேனை அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற இடங்களின் பெயர்களை கொண்டு பங்குபற்றும் கழகங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் 06 அணிகள் பங்குபற்றியுள்ளன.இவ்வணிகளுள் ( ADDALAICHENAI PREMIER LEAGUE ) யின் Season 01 ற்கான முதல் வெற்றியை பதிவு செய்த அணிக்கு எமது Sky thulir சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🎉

Address

Addalaichenai
Ampara
32350

Alerts

Be the first to know and let us send you an email when Sky thulir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky thulir:

Videos

Share