10/12/2023
பச்சைப்பசேலனமாறி வரும் பாலைவன பூமி...!
சவூதியில் உள்ள "வாதி கனூகா" என்ற இந்த பகுதி முழுவதும் பசுமையாக வயல் சார்ந்த சுற்று வட்டாரம் போல் காணப்படுகிறது.
இந்த பகுதியில் ஓடக்கூடிய இந்த நீரோடை நூறு கிமீ தூரம் இவ்வாறு ஓடுகிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் தெரி? News
(27)
பச்சைப்பசேலனமாறி வரும் பாலைவன பூமி...!
சவூதியில் உள்ள "வாதி கனூகா" என்ற இந்த பகுதி முழுவதும் பசுமையாக வயல் சார்ந்த சுற்று வட்டாரம் போல் காணப்படுகிறது.
இந்த பகுதியில் ஓடக்கூடிய இந்த நீரோடை நூறு கிமீ தூரம் இவ்வாறு ஓடுகிறதாம்.
சம்மாந்துறையில் டேலண்ட் ப்ளஸ் ஊடக விருது : எமது பிராந்திய நிருபர்களுக்கும் கௌரவம்
சம்மாந்துறை டேலண்ட் ப்ளஸ் கலை, இலக்கிய, ஊடக வலையமைப்பினால் சாதனையாளர்கள், திறமையானவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வலையமைப்பின் ஸ்தாபகர் அல்ஹாபிழ் ரிஷான் முஹம்மட் சில்ஹான் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை டேலண்ட் ப்ளஸ் கலை, இலக்கிய, ஊடக வலையமைப்பினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், ஏனைய கல்விசார் சாதனையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை, இலக்கிய ஆளுமைகள் எனப்பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர் ஏ. மன்சூர், கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம். நஸீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான், சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். எச்.எம்.ஆஸாத், இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிர்வக பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா, இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிர்வக பிரதம கணக்காளர் எஸ்.ஏ. ஜிப்ரி உட்பட முக்கிய அரச உயரதிகாரிகள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், சம்மாந்துறை முச்சபை நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிராந்தியத்தின் முன்னணி ஊடகவியலாளர்களான நூருல் ஹுதா உமர், பாரூக் ஷிஹான், றியாத் ஏ மஜீத், ஐ.எல்.எம். நாஸிம், எம். பி.எம்.ரிம்ஸான், ஏ.கே. ஜௌபர் ஆகியோருக்கு ஊடகத்துறைக்கான கௌரவமும் தாருஸபா ஊடகவலையமைப்புக்கு ஊடக நிறுவன விருதும், பிரதேச அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளர் கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.
Bike For Sale
Location Addalaichanaai
Model = Abans ( 70 cc )
Number = ( Ep - BHM - ###X )
Good Condition
Tyre 90%
Battery 90%
Paint 90%
All Documents Clear.
Price {Negotiable}
075-062-11-22
077-18-38-123
காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய இராட்சத சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.
Batti Campus புதிய கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுனர் MLAM. Hizbullah அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட Batticaloa Campus புதிய பரினாமத்துடன் International Campus of Science and Technology (ICST) University Park, Punanai என்கின்ற பெயரில் எதிர்வரும் 2024ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
ADMISSION NOW OPEN 2024!
Bachelor of Applied Information Technology Degree Program is a unique three year UGC approved job-oriented degree program (Weekdays / Weekend) offered by the Sri Lanka Telecom (SLTC) Research University conducted by International Campus of Science and Technology (ICST) University Park, Punanai.
Fill the Google Form and submit.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScUJf3hMXqb_OsE34_9TIynCkSkt1rukn02qQTKvr5poB-1dw/viewform?mibextid=Zxz2cZ&fbclid=IwAR2XD_SOoyYwf_WdXL3qmK2PE0owYhiyrzqdF9bXH0fxM2RNZ6i-pYzUxps
ஊருக்காக போராடிய AC நியாஸ்
எப்போதும் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணிப்பவர் AC நியாஸ் என்பதை அவரது கடந்த கால சமூக சேவை செயற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டாகும்.
சமூகத்திற்காக நல்லெண்ணத்துடன் எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்த்து நின்று மக்களுக்காக போராட்டத்தை மேற்கொண்டவர்.
அண்மையில் இடம்பெற்ற வைத்தியசாலை போராட்டத்திலும் கூட தனது சக விசுவாசிகளுடன் சேர்ந்து வீதியில் இறங்கி மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவராவார்.
அட்டாளைச்சேனை ஊரில் உள்ள அரசியல் அதிகாரங்களுக்கு அப்பால் தனது சொந்த முயற்சியினால்
1) பாடசாலை விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்கு எப்பொழுது உதவுவார்.
2) விளையாட்டு மைதானத்திற்கான பிரச்சினையை தீர்த்து வைத்தவர்.
3) பல தண்ணீர் பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர்.
4) பேருந்து தரிப்பிட பிரச்சினைக்கு தீர்வு கண்டவர்.
5) மையவாடிக்கான புனர்நிர்மாணம்.
இன்னும் பல..
இவை அனைத்திலும் முயற்சி செய்து வெற்றி கண்டவர்.
இன்ஷா அல்லாஹ் அவரின் எதிர்காலம் சுபிட்சமாக அமைய வாழ்த்துக்களும் பிரார்தனைகளும்..
அக்கரைப்பற்று அமானா வங்கி முகாமையாளர் ஸாகிர் அகமட் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார்...
(றிஸ்வான் சாலிஹூ)
நிந்தவூரைச்சேர்ந்த மீராஷாகிப் ஸாகிர் அஹ்மட் இன்று (06) உயர்நீதிமன்றத்தில்
மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அக்கரைப்பற்று அமானா வங்கி கிளையின் முகாமையாளராக பணியாற்றும் இவர், தனது ஆரம்ப கல்வியைய நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும், உயர்தர கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றார்.
2006ஆம் ஆண்டு தனது பல்கலைக்கழக கல்வியை கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்திலும், 2015 ம் ஆண்டு வணிக நிர்வாகத்துறையில் தனது முதுமானிப் பட்டத்தை போராதனைப் பல்கலைக் கழகத்திலும் நிறைவு செய்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மீராஷாகிப் மற்றும் ஆசாறா ஆகியோரின் இரண்டாவது புதல்வரான இவர், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை ஆசிரியை றிப்கா அவர்களின் கணவரும், ஓய்வு பெற்ற அட்டாளைச்சோணை கல்விக் கல்லூரி பீடாதிபதி ரசூல் அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் உதவிக்கரம் ஓய்வடைந்தது.................................................................
(NM.முஹமட் ஸாலிஹ்)
(SLPS)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இது வரை பிரதி அதிபராக கடமை புரிந்து வந்த M.இக்பால் சேர் அவர்கள் கடந்த 2023/12/04 அன்று கல்வித்துறையில் தான் இத்தனை காலம் தொடர்ந்திருந்த பயணத்தில் இருந்து ஓய்வடைந்தார்.
1963/12/05 ஆம் திகதி கருங்கொடி மண்ணில் பிறந்து. கமு/அக்/ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்த இக்பால் சேர் அவர்கள் உயர்கல்வியினை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையில்) பூர்த்தி செய்தார்.
பொ/திம்பு/முத்துக்கள் தமிழ் வித்தியாலயத்தில் 1987/12/14 ஆம் திகதி கணித,விஞ்ஞான உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1990/01/16-1991/12/31 வரை அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தனது ஆசிரியர் பயிற்சியினை பூரணப்படுத்தியதன் மூலம் விஞ்ஞானப் பாடநெறி ஆசிரியராக உள்ளீர்ப்பு செய்யப்பட்டார். அதன் பின் 1992/01/01 முதல் பொலன்னறுவை சுங்காவில முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
அதன்பின் 1994/01/25 முதல் அக்/ஒலுவில் அல் ஹம்றா மகாவித்தியாலயத்தில் சுமார் பதினேழரை ஆண்டுகாலம் ஆசிரியராக பணிபுரிந்த M.இக்பால் சேர் அவர்கள்.2011/06/20 அன்று அக்கரைப்பற்று அல் முனவ்வரா கனிஷ்ட கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார்.அங்கே ஆசிரியராக கடமை புரிந்து வரும் நிலையில் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று 2012/10/05 ஆம் திகதி இலங்கை அதிபர் சேவை தரம்-2 இல் உள்ளீர்ப்பு செய்யப்பட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013/03/02 ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற M.இக்பால் சேர் அவர்கள் அங்கேயே தொடர்ந்தும் பிரதி அதிபராக கடமை புரிந்து 2023/12/04 ஆம் திகதி தனது 36 வருடகால கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
நேர்மனப்பான்மையும்,உதட்டில் புன்னகையும் கொண்ட M.இக்பால் சேர் அவர்கள் தான் பிரதி அதிபராக பணிபுரிந்த காலங்களில் ஆசிரியர்,மாணவர்களின் நலனுக்காக எந்நேரமும் உதவிக்கரம் நீட்டிக்கொண்டேயிருந்தார்.எவ்வேளையில் அழைப்பு விடுத்தாலும் பாடசாலைக்கு வருகைதந்து அனைவரின் வேலைகளையும் செவ்வனே முடித்துக்கொடுப்பார்.யாவருடனும் மென்மையாக உரையாடுவார்.இவரின் ஓய்வானது நிச்சயமாக கல்விச் சமூகத்தின் ஒரு மிகப்பெரிய இழப்பு எனக்கூறின் மிகையாகாது.
M.இக்பால் சேர் அவர்களின் ஓய்வினால் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதன் மிகச்சிறந்த மனித வளத்தினை இழந்து தவிக்கிறது.
இக்பால் சேர் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி வளமோடு வாழவைப்பானாக.
அல் ஹம்துலில்லாஹ்.
பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை, அதற்கான ஏற்பாடுகளை செய்துதாருங்கள் ..! - எம். எஸ் தௌபீக் எம்.பி பாராளுமற்றில் கோரிக்கை.
(எஸ். சினீஸ் கான்)
"2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பிற்பாடு பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதாருக்கள்" என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் 2024 வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் புதன்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே தௌபீக் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து நீண்டகாலமாகியும் காணிப்பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை. இது தொடர்ப்பில் பல சந்தப்பங்களில் பேசியும் உரிய அதிகாரிகளை சந்தித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் தெரித்தார்.
திருகோணமலை மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் என்பதால் அதற்கான
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கோள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உத்தியோகத்தர்தர் குறைபாடு காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்!
அபு அலா -
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட அறிவுறுத்தலுக்கமைவாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான
என்.மதிவண்ணனினால் இவருக்கான நியமனக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு பணிகளை மிக நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ்
மட்டுப்படுத்தப்பட்ட அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மிகப்பொறுத்தமானதாகும் என்று பல்வேறு அமைப்புக்களும், அட்டாளைச்சேனை பிரதேச மக்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருவதுடன் வாழ்த்துக்களையும்
தெரிவித்து வருகின்றனர்.
இந்த இடைக்கால புதிய பணிப்பாளர் சபைக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பீ.ரீ.ஆதம்பாவா மற்றும் ஐ.எம்.நியாஸ் ஆகியோரும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் அவரின் நியமனக் கடிதத்தை
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.எல்.முனவ்வரிடம் இன்று (04) கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தவிசாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.கியாஸ்தீன், ஆர்.கே.எஸ். ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாராளுமன்ற குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க M S LANKA விற்கு அரச அதிகாரிகள் படையெடுப்பு.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எஸ் எம் சபீஸ் அவர்களுக்கு சொந்தமான M S Lanka நிறுவனத்துக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ALM அதாவுல்லாஅவர்கள் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு MS Lanka விற்கு படையெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்..!
02,DEC 2023
நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.
குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.
மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பாடசாலை தவணையின் போது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர சுட்டிக்காட்டினார்.
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்ய உலகம் ஒன்றுபட வேண்டும்…!
02,DEC 2023
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும். அதற்காக தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவதற்கான தயார் நிலைமையை இவ்வருடத்திற்கான COP28 மாநாட்டில் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிரி கதவை அண்மித்து விட்டதால் ஒருபோதும் மேற்படி தீர்மானத்தை காலம் தாழ்த்த முடியாதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 உயர்மட்ட மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (01) டுபாய் எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கபாட்டுக்கு அமைவாக, 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்கவிருப்பதாகவும், அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
22 ஆவது நூற்றாண்டிர் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ள நிலையில், மீள்புதுப்பிக்கதக்க வலுசக்திக்கு, சுற்றால் பாதிப்பு கட்டுப்பாடு மற்றும் இயற்கை தீர்வுகளுக்கான பெருமளவான முதலீடுகள் அவசியப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இலங்கை உட்பட ஏனைய பங்குதாரர்கள் வெப்ப வலய தொடர்பான அறிக்கையிடலுக்காக நிபுணத்துவ சபையொன்றை கூட்டுவதற்கு எதிர்பாப்பதாகவும், அதனூடாக வெப்ப வலயத்திற்கு மாத்திரமின்றி முழு துறைசார் திட்டமிடலொன்றை பகிர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
COP28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை;
“COP28 ஒத்துழைப்பு வழங்கியமைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னருக்கும், அரசாங்கத்திற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
2023 ஆம் ஆண்டு ஐ.நா சுற்றாடல் வேலைத்திட்ட அறிக்கையில் குறித்த விடயம் “உடைக்கப்பட்ட வாக்குறுதிகள்” என்று எச்சரிக்கப்பட்டிருப்பதோடு, நூற்றாண்டின் இறுதியில் உலகின் வெப்பநிலை 3 செல்சியஸினால் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி, தொழில்நுட்பம் மற்றும் காலநிலைக்கான முதலீடுகள் தொடர்பிலான குறைந்தளவான செயற்பாடுகளின் விளைவாக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.
காலநிலை நிதியளித்த தொடர்பான உயர்மட்ட நிபுணத்துவ குழுவின் அறிக்கையில் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு வருடத்திற்கு குறைந்தபட்டசம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாவது அவசியப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதியளிப்பதற்கான நியதிகளை செயற்படுத்துவதற்கான குழுவின் 2023 நவம்பர் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சுயாதீன பங்களிப்புக்களை மாத்திரம் பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்த நிதியம் அல்லது நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் தரப்பு தொடர்பிலான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த அறிக்கையும் உலக கடன் சலுகை வழங்கல் தொடர்பிலான பிரச்சினையின் போது பதிலற்றதாக விளங்குகிறது.
எவ்வாறாயினும், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட உலகளாவிய மதிப்பீட்டு தொடர்பிலான முதலாவது தொழில்நுட்ப கலந்துரையாடலுக்கான அறிக்கையில் இதற்காக வருடத்திற்கு குறைந்தபட்டசம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டுவது இதற்கான தீர்வாக அமையாது. நாம் யாரை ஏமாற்ற போகிறோம்? காலநிலை நீதிகளை மறுக்கிறோம்.
ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கபாட்டுக்கு அமைவாக, 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்க இருக்கிறது. அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கூறியது போல், வரி செலுத்துவோரின் பணம் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சிக்கலைத் தீர்க்க, “உலகளாவிய தீப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது.”
எதிரி நம் வாசலில் இருக்கிறான். நாங்கள் இன்னும் தள்ளிப்போடுகிறோம். எதிர்த்துப் போரிட படைகளை தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
எனவே, அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானது. காலநிலை மாற்றத்தைத் தணிக்க தலைமைத்துவத்தை வழங்கும் திறன் நம்மிடம் உள்ளதா இல்லையா என்பதை அதன் மூலம் தீர்மானிக்க முடியும்.
புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸியினால் குறைப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.
பூமியின் 44% மேற்பரப்பில் 134 வெப்ப வலய நாடுகள் உள்ளன. 2030 களில் அந்த நாடுகளிலேயே உலகின் 50% மக்கள்தொகை காணப்படும்.
22 ஆம் நூற்றாண்டில் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை தீர்வுகளுக்கு பெருமளவான முதலீடுகள் தேவை.
எனவே, இலங்கை மற்றும் ஏனைய தரப்பினர் வெப்ப வலயம் தொடர்பான அறிக்கையிடலுக்கான நிபுணர் குழு ஒன்றை கூட்ட தீர்மானித்துள்ளனர். இது வெப்ப வலயத்திலும் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் பல துறைசார் திட்டத்தை பகிர்ந்தளிக்க உள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சுற்றியுள்ள நாடுகள் சங்கத்தின் (IORA) தற்போதைய தலைவர் என்ற வகையில், இலங்கை இந்து சமுத்திரத்திற்கும் மற்றும் காலநிலை மாற்றத்துக்கும் இடையில் நிலவும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருத்தல் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
ஒரு பாதுகாப்பான கடல் மூலம் ஒட்சிசன் உற்பத்தி செய்யப்படுவதோடு, புவி வெப்பமடைதலால் உற்பத்தி செய்யப்படும் கார்பன் மற்றும் வெப்பம் அதன் ஊடாக உறிஞ்சப்படுகிறது. நிலப்பரப்பு, காடுகளுடன் ஒப்பிடும்போது, சதுப்புநிலங்கள் மற்றும் கடற்புற்கள் மூலம் அதிக கார்பன் உறிஞ்சப்படுகின்றன.
இருப்பினும், விரைவான காலநிலை மாற்றம் காரணமாக கடல் சூழல் மாறி வருவதுடன், இதனால் கடல் மட்டம் மற்றும் வெப்பநிலை உயர்கிறது. கடல் அமிலமயமாக்கல், பவளப்பாறைகள் அழிவு, கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவு மற்றும் தீவிர வானிலை முறைகள் ஏற்படும்.
இந்த நிகழ்வுகள் மூலம் கடல் பல்லுயிர்தன்மை, கடல் சார்ந்த உணவு முறைகள் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதன் மூலம் நேரடியாக மனித உயிர்களை பாதிக்கிறது.
இந்து சமுத்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பதற்காக நிலைபேறான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பசுமை பொருளாதாரத்தை உறுதிசெய்வதற்காக இந்து சமுத்திரத்திரப் பிராந்திய நாடுகளின் சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் பங்காளிகள், அர்பணிப்புடன் செயற்படுவார்கள்.
வெப்ப வலய மற்றும் இந்து சமுத்திரத்தின் ஒன்றிணைவானது கார்பன் வரிசைப்படுத்தலின் மிகப்பெரிய உலகளாவிய ஒன்றிணைவாக மாற்றப்படும்.
எனவே, இது தொடர்பாக பட்டப்பின்படிப்பு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ, COP27 மாநாட்டில் நான் முன்மொழிந்தேன்.
புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கும் திறனை மேம்படுத்தல் மற்றும் ஆராய்ச்சியை முன்னெடுத்தல்.” போன்ற நோக்கங்களுக்காகவே காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் (ICCU) நிறுவப்படவுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கெஹெலிய ரம்புக்வெல்ல, கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தான ஆகியோருடன் எதிர்கட்சி உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, அஜித் மான்னப்பெரும உட்பட காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
க.பொ.த உயர் தரம் கற்பதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2022 (2023) ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதன் முறை தோற்றி, 2025 ஆம் ஆண்டில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிக் காணப்படும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
https://www.presidentsfund.gov.lk/index.php/scholarship/?lang=ta
#தேவை_கருதிய_மீள்_பதிவு..
பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும் பல சுற்றறிக்கைகள் திருத்தங்கள் உள்ளதால் தெளிவுக்காக சில தகவல்கள் :-
ஏதும் மாற்றங்கள் இருந்தால் நமது மாணவ செல்வங்களினை சரியான வழிப்படுத்தலின் கீழ் அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய உங்களது கருத்தினை எதிர்பார்த்தே இக்கட்டுரையினை வரைகின்றேன்
@ O/L pass என்பது 6 S ஆகும் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6 S பெற்றால் கணிதம் W எனில் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அம் மாணவன் O/L pass இம் மாணவர்கள் பாடசாலையில் Vocational stream இல் O/L எல்லாப்பாடங்களிலும் W என்றாலும் கற்க முடியும் மாறாக 6 S எடுத்தாலும் ஏனைய stream இல் கற்க முடியாது
@ பாடசாலைகளில் இணைந்து A/L
,.....................................................................
கற்பதற்கான நிபந்தனைகள் என்ன ......................................................................
1. எந்த stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3 C உம் 3 S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்
2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட 3 C உம் 3 S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்
3. Maths கற்பதாயின் 3 C 3 S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்
4. Commerce கற்பதாயின் 3 C 3 S உடன் அச் C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணித அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்
5. Arts கற்பதாயின் 3 C 3 S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் pass பண்ணி 2 C 4 S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும் எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை டாப்பில் பெயரினை எழுதி A/ L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்
3 C 3 S உடன் தமிழ் பாடம் W ஆயின் அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழ் பாடத்தில் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது அல்லது 3 C 3 S உடன் தமிழ் பாடத்தில் S எடுத்து கணிதப்பாடத்தில் W எடுத்தால் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது தமிழ் அல்லது கணிதம் W எடுத்த மாணவர்களின் பெயரினை Pending டாப்பில்தான் எழுதவேண்டும் மற்றய வழமையான டாப்பில் எழுத முடியாது இம் மாணவர்கள் அடுத்து வரும் O/ L பரீட்சையில் pass பண்ணி results இனை பாடசாலையில் காண்பித்த பிற்பாடே pending டாப்பில் உள்ள பெயரினை நீக்கிவிட்டு மற்றய டாப்பில் எழுத வேண்டும் இவ்வாறு பூர்த்தி செய்த மாணவர்கள் A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் பல்கலைக் கழகமும் தாராளமாகச் செல்ல முடியும் ஆனால் O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிற்பாடே வெளியாவதால் கணித பாட 2 வருட நிபந்தனையின் படி குறிப்பிட்ட மாணவர்களினை 2 வருடமும் பாடசாலையில் வைத்திருந்து பாடசாலையின் ஊடாக விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த பிற்பாடு குறித்த மாணவன் அடுத்த வருடம் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்காது அல்லது W சித்தி பெற்றால் இம் மாணவனுக்கு A/L பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க முடியாது அவ்வாறு அனுமதி அட்டையினை வழங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இம் மாணவன் கணித பாடத்தில் s எடுத்தால் பிரச்சினை எதுவும் இல்லை W எடுத்தால் பிரச்சினை ஆரம்பமாகிறது A/L விண்ணப்பம் செய்கின்ற போது கணித பாடம் W எடுத்த மாணவர்கள் கேட்குகின்ற கேள்வி ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கினதால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய முடியாது என மறுத்து அதனை உரிமை மீறலாகப் பார்க்கின்றனர் இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வுகாணலாம்
1. O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக வெளியாக வேண்டும் அல்லது
2. பாடசாலையில் கணிதபாடத்தில் W சித்தியில் இணைந்தோர் அடுத்து வரும் ஆண்டில் ( ஒரு வருடத்திற்குள்) S சித்தி பெற வேண்டும் அவ்வாறு பெறாவிட்டால் ஒரு வருடத்தால் அம்மாணவர்களினை பாடசாலையில் இருந்து நீக்கிவிட வேண்டும் இதுதான் தற்போது அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறையாக இருக்குமென நினைக்கின்றேன்.
அம்மாணவர்களினை நீக்கிவிடுகின்ற போது அவர்களிடம் கூறவேண்டும் ஒரு வருடம் தவறிவிட்டீர்கள் அடுத்து வரும் வருடம் O/L பரீட்சையில் S எடுத்தால் A/L பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாகத் தோற்றி பல்கலைக் கழகம் செல்ல முடியும் என்று கூறுங்கள் 2 வருடமும் தவறினால்தான் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.
என மாணவர்களினை சரியான முறையில் தகுதியானவர்களினைக் கொண்டு வழிப்படுதல் ஆலோசனை சேவையினை வழங்குங்கள் குறிப்பாக தமிழ் பாடத்தில் W பெற்றவர்கள் ஒரு வருடத்தால் மீண்டும் W பெற்றால் அம்மாணவர்கள் தாமாகவே பாடசாலையினை விட்டு விலகிக்கொள்வர் இம் மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினாலும் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.
# தொழில் நுட்ப்ப் பிரிவில்( Technical stream) பொறியியல் தொழில் நுட்பம்(E-Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 S உடன் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் S இருந்தால் போதுமானது கணித பாடத்தில் அல்லது விஞ்ஞான பாடத்தில் W இருந்தால் இத்துறையில் கற்க முடியாது உயிரியல் தொழில் நுட்பம் ( B- Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 உடன் கணித பாடத்தில் W என்றாலும் பிரச்சினை இல்லை ஆனால் விஞ்ஞான பாடத்தில் S சித்தி அவசியமாகும் கணித பாடத்தில் W ஆயின் நிபந்தனையின் பெயரில் இணைக்கப் பட்டு உரிய காலத்திற்குள் S பெறவேண்டும்
#இரு வருடங்களின் O/L பெறுபேற்றினைக்கொண்டு கலைத்துறையில் பாடசாலையில் மாணவர்களினை இணைப்பதாயின் முதல் வருடத்தில் 3 C 2 S பெற்று 5 பாடம் என இருந்தால் அடுத்து வரும் வருடம் O/L பெறுபேற்றினையும் இணைத்து இம் மாணவர்களினை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் குறித்த வருடம் 3 C 2 S இல்லாத மாணவர்களினை தவறான முறையில் இணைத்து விட்டு அடுத்து வருட O/L பெறுபேற்றோடு கற்க அனுமதி வழங்க முடியாது
Note:- ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் மாணவர்களினை பாடசாலையில் இணைக்க முடியாது அதாவது கணிதமும் தமிழும்W அல்லது கணிதம் அல்லது தமிழ் W இருந்தால் 6 பாட சித்தியுடன் 2 C தான் எனில் 3 வது C இற்காக SBA பார்க்க முடியாது.
# கலைப் பிரிவுக்கும் B- Tech இற்கும் நிபந்தனை அடிப்படையில் பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் அது தவிர Bio Maths Commerce E- Tech போன்ற பிரிவுகளில் முடியாது
# என் அன்புக்குரிய ஆசிரியர்களே பிரத்தியேக வகுப்பிற்கு(tution) அதிகமான மாணவர்களினை தன்வசம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் தவறான வழியில் மாணவர்களினை தயவு செய்து வழிப்படுத்த வேண்டாம் .
எரிபொருள் விலையில் மாற்றம்!
30/11/2023
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபா
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபா
ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபா
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபா
மண்ணெண்ணெய் 02 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபா
வீட்டில் தினமும் உபயோகிக்கும் எண்ணெய் பை, பால் பை, மளிகைப் பை, ஷாம்பு, சோப்பு, மேகி, மொறுமொறுப்பான திண்பண்டங்கள் அடைத்த பிளாஸ்டிக் பைகள் எனப் பலவிதமான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தப் பிளாஸ்டிக் பைகளை கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வாரத்திற்கு ஒரு முறை பாட்டிலை நிரப்பி, சரியான மூடியுடன் குப்பைத் தொட்டியில் வீசலாம். அவ்வாறு செய்வதால், விலங்குகள் சிதறிய பிளாஸ்டிக் கழிவை சாப்பிடாது.
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் முறையாக அகற்றப்படும்.
குப்பைகளை சேகரிக்கத் துப்புரவுத் துறைக்கும் எளிமையாக இருக்கும்.
தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், ஒவ்வொரு வீடும் இந்தத் தேவையை உணர்ந்து, இதைச் செய்யத் தொடங்குங்கள்.
அனைவரும் பின்பற்ற வேண்டிய செயல்..... நன்றி...
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பாக அறிவித்த அமைச்சர்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு எல்லாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
சற்று முன்னர் நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.இசடின் கோரிக்கை...!!!
(றியாஸ் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் இது வரைக்கும் விடுவிக்கப்படாத காணிகள் அரசினால் விடுவிக்கப்பட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.இசடின் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் " காணி, குடிநீர் மற்றும் மீனவர் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கு" எனும் தொனிப் பொருளில் நேற்று (27.11.2023) அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் அஷ்ரப் நகர் உட்பட வட்டைமடு, பள்ளியடி வட்டை உட்பட பல பிரதேசங்களில் உள்ள பல ஏக்கர் காணிகள் இதுவரையும் அரசினால் விடுவிக்கப்படவில்லை. தற்போதைய அரசு இக் காணிகளை விடுவித்து ஏழை விவசாயிகளின் வாழ்வுக்கு வித்திட வேண்டும். பொத்துவில் கனகர் கிராம மக்களின் காணிகளை அரசு விடுவித்தமைக்காக இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இம் மாவட்டத்தில் மீனவர்கள் மிகக் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து தனது தொழிலை செய்து வருகின்றனர். மீனவர்களைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு புதிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நவீன முறைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். தற்போது சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனா மற்றும் இயந்தியாவின் நலனுக்கு செயற்பட வேண்டாம். மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பில் பாதகமான சட்டங்களை கொண்டு வர வேண்டாம்.
இந்த நாட்டில் சகல மக்களும் இன நல்லிணக்கத்துடன் வாழ இந்த அரச வழியேற்படுத்த வேண்டும் என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பதவி வழி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
19 வயதின்கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் சாருஜன் சண்முகநாதன்
வாழ்த்துக்கள்..
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான அகிலா திருநாயகி அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அகிலா திருநாயகி 1500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இவர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவது இடத்தையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. சோதனைகளை சாதனைகளாக்க வயது ஒரு தடையல்ல, என்பதை நம் குல பெண்களுக்கு தன் வெற்றி மூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் அகிலா திருநாயகி அவர்களை வாழும் போதே வாழ்த்துவோம் வாங்க
ஆறாவது முறையாகவும் உலக கிரிக்கெட் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா…!
அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகவும் உலக கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று அவுஸ்திரேலிய அணி இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் KL Rahul 66 ஓட்டங்களையும், Virat Kohli 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் Mitchell Starc 3 விக்கெட்டுக்களையும், Pat Cummins, Josh Hazlewood தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Travis Head அதிகபட்சமாக 137 ஓட்டங்களை பெற்றதுடன், Marnus Labuschagne ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய சார்பில் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் Mohammed Shami, மற்றும் Mohammed Siraj ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த உலக கிண்ண தொடரில் இந்திய அணி இதற்கு முன்னர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்றிருந்தாலும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
182/3 2/3 Common Road Akkaraipattu/16
Akkaraipattu
32400
Be the first to know and let us send you an email when Rks தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Rks தமிழ்:
Divisional Secretariat - Akkaraipattu
Main Street