Youths TV தமிழ்

Youths TV தமிழ் எமது முகநூல் பக்கத்தை LIKE SHARE செய்யுங்க?

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைப்பு அஸ்ஹர் ஆதம்நாளை 29 ஆம் திகதி திங்க...
28/12/2025

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைப்பு

அஸ்ஹர் ஆதம்

நாளை 29 ஆம் திகதி திங்கட் கிழமை நடைபெறவிருந்த அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி மக்களை அச்சுறுத்தி வந்த 18 அடி நீளமான இராட்சசன் இறந்தான்மனிதர்களையும்,விலங்குகளையும் விழங்கி நீண்ட நாட்களாக...
27/12/2025

காத்தான்குடி மக்களை அச்சுறுத்தி வந்த 18 அடி நீளமான இராட்சசன் இறந்தான்

மனிதர்களையும்,விலங்குகளையும் விழங்கி நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டிய இராட்சதமுதலை இறந்த நிலையில் கரையொதுங்கியது

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு காதாதான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.

கடந்த மாதம் ஆண்டுவரை இழுத்துச் சென்றதுடன், மேலும் இருநபர்களையும் கொன்று உணவகக்கியுள்ளது. பல மாடுகள்,ஆடுகள்,நாய்கள்,பூனை,குழிகளை இழுத்துச் சென்றுள்ளது.

குறித்த இராட்சத முதலையைப் பிடிக்க மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம் ,காத்தான்குடி நகர சபை உன்ன வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சிசெய்த போதிலும் முடியாமல்போன நிலையில் இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது

சுமார் 18 அடி நீளமுள்ள இம்முதலையினால் வாவியொரத்தை அண்டி வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

26/12/2025

யாரிடமும் உதவி என்று போய் நிற்காதீர்கள்...!!

உங்களை மட்டும் நம்புங்கள் வாழ்வில் உயருங்கள்...!!

சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது !
26/12/2025

சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது !

விசேட வானிலை அறிக்கை:வளிமண்டலவியல் திணைக்களத்தின்  இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால்  2025 டிசம்பர...
26/12/2025

விசேட வானிலை அறிக்கை:
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் 2025 டிசம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 03.00 மணியில் வெளியிடப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வித் துறையின் முன்னோடி-மர்ஹூம் காதர் முகைதீன் சேர் – ஒரு வரலாற்றுச் சேவையாளர்…வடக்கு – கிழக்...
26/12/2025

வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வித் துறையின் முன்னோடி-மர்ஹூம் காதர் முகைதீன் சேர் – ஒரு வரலாற்றுச் சேவையாளர்…

வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர், இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக மூத்த அதிகாரி, மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் சேர் அவர்கள் கடந்த 20/12/2025 (சனிக்கிழமை) அன்று வபாத்தானார்கள் என்ற செய்தி எம்மனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டு, சாய்ந்தமருதுவை வசிப்பிடமாகக் கொண்ட அன்னார்,
கல்வித்துறையில் பல தசாப்தங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓர் அரிய மனிதர்.

அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதம கல்வி அதிகாரியாகவும், மன்னார் மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும், வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி செயலராகவும் கடமையாற்றியதுடன்,
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் அதிபராகக் கடமையாற்றி பாடசாலைக்கு மிகப் பெரிய பங்காற்றியவர்.

குறிப்பாக, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக மாற்றப்படுவதற்கு
அவரது பங்கு மிக முக்கியமானது என்பதை
வரலாறு அறிந்தவர்கள் இன்று பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள். அந்த மகத்தான சேவையை நினைவுகூரும் வகையில், இன்று பாடசாலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு
உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

இந்த நிகழ்வை பாடசாலை நிருவாகமும் SDEC யும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு, பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
அதில் பாடசாலை அதிபர் அவர்கள், -மர்ஹூம் காதர் முகைதீன் சேர் கல்விக்காக செய்த தியாகங்களையும்,
அவர் விட்டுச் சென்ற தடங்களையும்
மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
அத்துடன்,
பாடசாலை SDEC செயலாளராக நான் கூறிய கருத்து:
“ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை
அவர் செய்து விட்டுப் போகும் பணிகளே பேசும்.
இன்று நாம் ஒரு சேவையாளருக்காக
இறைவனிடம் பிரார்த்திக்கும் நிகழ்வில்
ஒன்றுகூடியிருப்பதே
அவர் இந்த உலகில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கான
மிகச் சிறந்த சாட்சி.”

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட
ஆசிரியர்கள், மாணவர்கள், SDEC உறுப்பினர்கள் அனைவரிடமும், “நாம் மறைந்த பிறகு இந்த சமூகம் எமக்காக பிரார்த்திக்கும் அளவுக்கு நாம் வாழ வேண்டும்” என்ற ஓர் எடுத்துக்காட்டாக மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் வாழ்க்கை எப்போதும் நினைவில் நிற்கும் என வலியுறுத்தினேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்,
மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவருடைய கல்விச் சேவைகளை சதகா ஜாரியாக ஏற்று,
உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!
ஆமீன்!!

ஓட்டமாவடியில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனைக் கர...
26/12/2025

ஓட்டமாவடியில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, ஓட்டமாவடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

​கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீன் தலைமையில், நேற்று (25) பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

​முஸ்லிம் ஹெல்பன் ஜெர்மனி நிறுவனத்தின் நிதி உதவியுடன், அஸீஸா பவுண்டேஷன் இந்த மனிதாபிமானப் பணியினை முன்னெடுத்திருந்தது. மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

​இந்நிகழ்வில் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் அஷ்ஷேஹ் சாதிக் ஹசன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உபகரணங்களை கையளித்தனர்.

​மேலும், இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

​கல்வித் துறையை ஊக்குவிக்க மனிதாபிமான அமைப்புகள் முன்னெடுக்கும் இவ்வாறான முயற்சிக்கு சமூக மட்டத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

26/12/2025

சுனாமி பேரலை தொடர்பான உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்✍️

இன்றும் காதுகளில் ஒலிக்கிறது அந்த மரண ஓலம்... 'கடல் வருது ஓடுங்க!' என்ற கூச்சலோடு சிதறிய எம் மக்களின் வாழ்வு. 🌊💔2004 டிச...
26/12/2025

இன்றும் காதுகளில் ஒலிக்கிறது அந்த மரண ஓலம்... 'கடல் வருது ஓடுங்க!' என்ற கூச்சலோடு சிதறிய எம் மக்களின் வாழ்வு. 🌊💔
2004 டிசம்பர் 26 - இலங்கை வரலாற்றின் மறக்க முடியாத கருப்பு தினம். ஆழிப்பேரலையில் காவு கொள்ளப்பட்ட எம் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள். 🕯️🇱🇰

 #ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்...
25/12/2025

#ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்கள ஊழியர்களின் துரிதப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

25/12/2025

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்காதீர்கள்...
❤❤
உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுங்கள் வாழ்க்கை அழகாகும் ..

Combo Offer CHILL CAFE AKKARAIPATTU    Hot Line - 0779901980📲 WhatsApp  - 0752866675📌 Address: 2/B,Main street , Akkarai...
25/12/2025

Combo Offer
CHILL CAFE AKKARAIPATTU



Hot Line - 0779901980
📲 WhatsApp - 0752866675
📌 Address: 2/B,Main street , Akkaraipattu.

Chill Cafe
077 990 1980
https://maps.app.goo.gl/FyrB2zi4y7vuj8dE6

#பாணிப்பூரி #ஜஸ்கிரீம் #அக்கரைப்பற்று #அதிகம்_பகிருங்கள்

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Youths TV தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Youths TV தமிழ்:

Share