East1st

East1st செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது Page ஐ like செய்யுங்கள்
(6)

அமானிதம் பேணிய இரு குடும்பங்களின்  ஈமானியப் பிள்ளைகளும்,  தாய்மார்களும்.===========================அட்டாளைச்சேனை கடற்கரை...
16/01/2025

அமானிதம் பேணிய இரு குடும்பங்களின் ஈமானியப் பிள்ளைகளும், தாய்மார்களும்.
===========================

அட்டாளைச்சேனை கடற்கரையில் அமைந்துள்ள " ஸாறா " திருமண மண்டபத்தில் 2025.01.12 ம் திகதி வலீமா நிகழ்வு நடைபெறுகிறது

நெருங்கிய உறவினர்கள் பலரும் குடும்பமாக பிள்ளைகளோடு கலந்து கொள்கிரார்கள்.

அன்றய தினம் அன்நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு குடும்பத்தினரின்
12.63 கிராம் நிறைகொண்ட
ஒன்னரைப் பவுன் அதாவது
337,000.00 ரூபா சந்தைப் பெறுமதி மதிக்கத்தக்க தங்கக் கைவளையல் ஒன்று தொலைந்து போகிறது.

சற்று தாமதமாக வருகைதந்த இரண்டு இளைஞர்கள் வாகனத் தரிப்பிடத்தில் கடற்கரை ஒரமாக அதனைக் கண்டு எடு்த்துக் கொள்கிரார்கள்.

மாலை 3.00 மணிவரை யாராவது தேடுகிறார்களா என சுமார் இரண்டு மணித்தியாலங்களாக அவ்விடத்திலே அவ்விளைஞர்கள் எதிர்பார்த்து காத்து நிற்கிரார்கள்.

யாருமே அதனை அப்போது தேடிவரவில்லை என்பதனால் விடயத்தை தங்கள் தாயிடம் தெரியப்படுத்துகிரார்கள்.

அட்டாளைச்சேனை சேர்ந்த அந்தத் தாய் அன்று வலீமா சாப்பாடு ஏற்பாடு செய்த மாப்பிள்ளை வீட்டாரிடம் விபரங்களை கூறிவைக்கிறார்.

மாப்பிள்ளை வீட்டார் மண்டப உரிமையாளரிடம் 3ம் நாள் (14) காலை விடயத்தை எத்திவைத்து யாராவது காப்பு தொலைந்துவிட்டதாக தெரிவித்தால் அறியத்தரவும் என்ற செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

காப்பு உரிமையாளர்கள் அன்றயதினம் இரவு ( 12 ), மறுநாள் காலை (13) கார் நிறுத்திய இடங்கள் , மண்டபவம், சென்ற வழிகளில் தேடியபோது மண்டப உரிமையாளர் இதனை
2 ம் நாள் (13) காலை அவதானித்துக் கொள்கிறார்.

உரிமையாளர்களிடம் விடயத்ததை கேட்டறிந்து கொண்ட அவர் ஏதாவது செய்தி கிடைத்தால் அறியத்தருவதாக கூறுகிறார்.

செவ்வாய் (14) காலை மண்டப உரிமையாளர் காப்பைத் தொலைத்த உரிமையாளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து காப்பை வைத்துள்ளவர்களை சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

உரிமையாளர்கள் (14) காலை மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று வினவிய போது அவர்களின் எதிர்வீட்டுத் தாயை அழைத்து விடயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அத்தாய் அவரது ஒலுவிலில் திருமணம் முடித்துள்ள தனது மகனின் மருதமுனை நண்பனே அதனை பொறக்கி வைத்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

எனவே அந்தத் தாய் தனது மகன் திருமணம் முடித்துள்ள ஒலுவில் வீட்டை காட்டுவதற்காக தனது சிறிய மகனை அவர்கள் கூடவே அனுப்பிவைக்கிறாள்.

ஒலுவிலுக்கு சென்ற பாேது அச்சகோதரர் உரிய காப்பு அதனை பொறக்கிய மருதமுனை இளைஞரிடம் இருப்பதாக கூறி , உரிமையாளர்களை மருதமுனைக்கு அழைத்துச் செல்கிறார்.

இரண்டு நாட்களாக யாரும் அதனை தேடி வராததன் காரணமாக இது போலித் தங்கமாக இருக்குமாே ? என்ற சந்தேகத்தில் அதனை உறுதி செய்துகொள்ள நகைக்கடையில் காட்டி வினவியபோது அது சவூதி அரேபியாவில் செய்யப்பட்ட தங்கக் காப்பு என்பதனை உறுதி செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள் அந்த மருதமுனை இளைஞனும் தாயும்.

அங்கு சென்று மருதமுனையில் உரியவரை சந்தித்து விபரமாக குறிப்பிட்டபோது அவரது தாய் பொருளாதார நெருக்கடியுடன் இருந்தபோதும் பிறர் சொத்தை பாதுகாத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததனை அவாதானிக்க முடிந்ததாக உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

இரு பிள்ளைகளின் தாய்மார்களும், அவர்களது பிள்ளைகளும் தங்களது பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையிலையும் , 337,000 ரூபா பெறுமதியான தங்கக் காப்பாக இருந்த போதும் அமானிதம் பேணலின் வகிபாகத்தை சரியாக புரிந்தவர்களாகவும்
நம்பிக்கை
நாணயம்
நேர்மை
பிறர் சொத்தில் ஆசையின்மை
போன்ற இஸ்லாமிய விழுமியங்களின் சொந்தக்காரர்களாக இரு குடும்பங்களினதும் தாய் உட்பட பிள்ளைகள் அனைவரும் இருந்தமை சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிடுகிறார்கள்.

மேற்சொன்ன இஸ்லாமிய பண்புகள் சமூகத்தின் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் , நாளாந்த வாழ்க்கைச் சுமைகளோடு வாழும் அதிகமான குடும்பங்களில் பரவலாக அவதானிகாக முடிகிறது , அல்ஹம்துலில்லாஹ்.

இது இறைவன் தனது அருள் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கு செய்திருக்கின்ற மிகப் பெரிய நிஃமத்தும் , ரஹ்மத்துமாகும்.

முன்மாதரியான பிள்ளை வளர்ப்பின் வெளிப்பாடுகளே அவை.

உரிமையாளர்கள் தங்கள் பொருளை கண்டெடுத்து பாதுகாத்து ஒப்படைத்தமைக்காக , சந்தேசமாக பூரண மனத்திருப்தியுடன் வழங்க முற்பட்ட நன்கொடைப் பொதியை இரு குடும்பங்களின் தாய்மார்களும், பிள்ளைகளும் தங்களுக்கு பணத்தேவைகள் இருந்த போதும் அதனை மிகக் கடுமையாக மறுத்தமை உரிமையாளர்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டனர்.

தங்களது பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டிக் கொண்ட அவர்கள் அமானிதப் பொருளை உரியவர்களிடமே ஒப்படைத்த உச்ச திருப்த்தியில் முழுக்குடும்பமும் இருந்ததாக குறிப்பிட்ட உரிமையாளர்கள் , தங்களை சிறந்தமுறையில் சிற்றூண்டிகள் பரிமாறி வழியனுப்பி வைத்ததுடன் தங்களுக்கும், பிள்ளைகளுக்கும் பிராத்திக்குமாறு வேண்டிக் கொண்டது அந்த ஈமானியக் குடும்பம் எனவும் பகிர்ந்து கொண்டார்கள்.
புகழுக்குரியவன் வல்ல இறைவனே
அல்ஹம்துலில்லாஹ்.

இரு குடும்பங்களும் ஈமானிய உறுதியோடு அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று ஈருலகிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக வாழ வல்ல இறைவன் துணைபுரிவானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

எம்.ஜே.எம்.நிஃமத்துல்லா
பாலமுனை
15.01.2025.

🔵 காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹம...
16/01/2025

🔵 காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், வருகிற 20ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதங்களாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 #அக்கரைப்பற்று மீராவோடையில் குழந்தை வீழ்ந்து மரணம்...அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரைப்பற்று மீராவோடை குளத...
15/01/2025

#அக்கரைப்பற்று மீராவோடையில் குழந்தை வீழ்ந்து மரணம்...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரைப்பற்று மீராவோடை குளத்தில், அக்கரைப்பற்று TD/5 மன்சூர் (மீன் மார்கட்) சியானா ஆகியோரின் பேரக் குழந்தை வீழ்ந்து மரணமாகியுள்ளது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தற்போது ஜனாஸா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் இன்று (15) புதன்கிழமை நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை கிட்டங்கி பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பயணிகள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
15/01/2025

கல்முனை கிட்டங்கி பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பயணிகள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🔴 டின் மீன்கள் குறித்து விழிப்பாக இருங்கள்இலங்கை யில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள்...
15/01/2025

🔴 டின் மீன்கள் குறித்து விழிப்பாக இருங்கள்

இலங்கை யில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது.

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் 15 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளன.

அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் எதுவித தரச்சான்றுகளும் வழங்கப்படாத நிலையிலேயே அவற்றின் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுவதாக தேசிய கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

🔴 அநுர அரசை விரட்டியடிக்க மக்கள் தயார்! மகிந்தவின் நம்பிக்கை!போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்ட...
15/01/2025

🔴 அநுர அரசை விரட்டியடிக்க மக்கள் தயார்! மகிந்தவின் நம்பிக்கை!

போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இனிவரும் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும். நாம் மீண்டெழுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

🔴 பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக...
15/01/2025

🔴 பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற பணிக்குழாமின் அதிகாரிகள் சிலர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Source: adaderana.lk

🔴 அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர அறிவிப்பு! மக்களே அவதானம்!மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த அறிக்கை கிரான் பிரதேச செயலக பி...
15/01/2025

🔴 அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர அறிவிப்பு! மக்களே அவதானம்!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த அறிக்கை

கிரான் பிரதேச செயலக பிரிவின் புலிபாஞ்சகல் பாதையில் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதனால் அந்த பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் போக்குவரத்துக்காக இயந்திர படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தின் சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் ஆற்றினை அன்டியபிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மாவட்ட ஏ.எஸ்.எம்.சியாத் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

🌎 தென் கொரிய ஜனாதிபதி கைது.பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று  -15- அந்ந...
15/01/2025

🌎 தென் கொரிய ஜனாதிபதி கைது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று -15- அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரிய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது பிடியாணையை நீட்டிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்வதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் கூடியிருந்த மக்களால் உருவாக்கப்பட்ட தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. R

கிண்ணியா கொழும்பு பஸ் சேவை.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  கந்தளாய் பேருந்து சால...
14/01/2025

கிண்ணியா கொழும்பு பஸ் சேவை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கந்தளாய் பேருந்து சாலை பஸ்.
கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கி நல்லிரவு 02:00am மணியளவில்
கிண்ணியாவில் இருந்து வான்எல ஊடாக
கந்தளாய்,கபரன,தம்புள்ள,குருணாகல்,ஊடாக கொழும்பு நோக்கி புரப்படும்.

கொழும்பிலிருந்து மாலை நேரம் 03:30pm மணியளவில் தம்புள்ள,கபரன,கந்தளாய்,திருகோணமலை ஊடாக இரவு 10.30pm மணியளவில் கிண்ணியா வந்தடையும்.

 #சற்றுமுன்: வயோதிப பெண் மீது வேன் மோதல்! பலத்த காயத்துடன் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதி கோட்டைக் கல்லாற்றில் வீதி...
14/01/2025

#சற்றுமுன்: வயோதிப பெண் மீது வேன் மோதல்! பலத்த காயத்துடன் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதி

கோட்டைக் கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். ஆபத்தான நிலையில் வயதான பெண் இருப்பதாக தெரிக்கப்படுகின்றது. வேன்
சாரதி தப்பியோட்டம்.

இச்சம்பவம் சற்று நேரத்திற்கு முன்பு நடைபெறவுள்ளது.

மட்டு கல்முனை பிரதான வீதி வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக் கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக் கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித் தள்ளியுள்ளது . இதனால் அப் பெண்மணி படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வேனைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோட்டைக் கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.

10/01/2025

இன்று நள்ளிரவு முதல் அதி விசேங்களுக்கு வரி அதிகரிப்பு!

 #ரூ.97 மில். கொக்கைனுடன் கைதான 66 வயது நபர்; பொஸ்னியா கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது!சட்டவிரோதமான முறையில் இன்று ...
08/01/2025

#ரூ.97 மில். கொக்கைனுடன் கைதான 66 வயது நபர்; பொஸ்னியா கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது!

சட்டவிரோதமான முறையில் இன்று (08) இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ. 97 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (08) கைது செய்துள்ளனர்.

66 வயதான குறித்த பொஸ்னியா பிரஜை கொலம்பியாவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கட்டாரின் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்பின், அங்கிருந்து இன்று அதிகாலை 2.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

குறித்த நபரை சோதனை செய்த போது, அவரது பயணப் பொதிக்குள் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 பிரஷ்களுக்குள் 2 கிலோ 759 கிராம் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொஸ்னியா பிரஜை மற்றும் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது பைலட் ஆக வேண்டும் என்ற மரியம் ஜுமானாவின் கனவு கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது.இந்தியா -...
08/01/2025

பத்தாம் வகுப்பு படிக்கும் போது பைலட் ஆக வேண்டும் என்ற மரியம் ஜுமானாவின் கனவு கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது.

இந்தியா - மலப்புறம் மாவட்டத்தில் புல்பற்ற கிராமத்தை சேர்ந்த உம்மர் ஃபைஸி - உமையா பானு தம்பதியர் மகள் மரியம் ஜுமைனா.

வானில் பறக்கும் விமானங்களை பார்த்து தாமும் ஒருநாள் இதுபோல் விமானங்களை இயக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே தனக்குள் ஆசையை வளர்த்தவர்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது தாயிடம் தனது எண்ணத்தை சொன்ன போது அவர் முதலில் அதை காரியமாக எடுக்கவில்லை.

புல்பற்ற கிராமத்தில் இப்போதும் பெண் பிள்ளைகள் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கும் வழக்கம் கிடையாது என்பதால் தாய் உமையா மவுனமாக இருந்தார்.

பைலட் ஆக வேண்டும் எனும் நோக்கில் மரியம் ஜுமானா தனது ஆசையை தந்தையிடம் சென்று கூறிய போதும், மலப்புறம் அருகில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் தந்தையும் விமானி பயிற்சிபெற வெளியூருக்கு அனுப்ப வேண்டும் என்பதால் முதலில் மறுத்தாலும் மகள் தனது நிலையில் உறுதியாக இருந்ததால் பெற்றோர் +2விற்கு பிறகு பார்க்கலாம் என்று சமாதானம் செய்தனர்.

அடுத்த இரண்டு வருடமும் +1, +2 படிப்பு கூடவே அவளுள் விமானி ஆகப்போகும் எண்ணமும் வளர்ந்தது.

+2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மரியம் ஜுமானா மீண்டும் பைலட் விஷயத்தை சொல்ல வேறு வழியின்றி பெற்றோர் அதற்கான முயற்சியில் இறங்கினர்.

டெல்லியில் Fly Ola Aviation Academy நிறுவனத்தில் அட்மிஷன் கிடைத்தது.

தந்தையின் குறைந்த வருவாயில் மகளை விமானி பயிற்சிபெற வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க இயலாத நிலையில் தனது நகைகள் முழுவதும் விற்பனை செய்து ஃபீஸ் கட்ட தாய் முன்வந்தார்.

ஒரு மதரஸா ஆசிரியராக மகளை வெளியூருக்கு அனுப்புவதை உறவினர்கள் விமர்சனம் செய்ததையும் பொருட்படுத்தாது உமர் ஃபைஸி மகளுக்கு ஆதரவாக இருந்தார்..

ஓராண்டு கடின உழைப்பும் விடா முயற்சியும் பெற்றோரின் ஒத்துழைப்பும் மரியம் ஜுமானா 19வயதில் Student Pilot லைசென்ஸ் பெற்றதோடு தொடர்ந்து ஏழுமணி நேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்..

அடுத்து தொடர் பயிற்சி மூலம் 200மணி நேரம் விமானத்தை இயக்கும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெறுவதற்கான அவரின் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்.

-Colachel Azheem -

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும்முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கோரிக்கைகுட...
08/01/2025

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சபையில் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதாகவும் ஆனால், கிழக்கு மாகாணத்தில் அந்த அலுவலகம் கிடையாது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றுஇ ல்லாதமையினால், அங்குள்ள மக்கள் இரண்டு மூன்று தினங்கள் கொழும்புக்கு அலைய வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதிகளவு உல்லாசப்பிரயாணிகள் வருகைத் தரும் கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

🔴 இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் மத ஸ்தலங்களை நிர்மாணிக்க, எந்தவொரு அரச நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை: பிரதமர்
08/01/2025

🔴 இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் மத ஸ்தலங்களை நிர்மாணிக்க, எந்தவொரு அரச நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை: பிரதமர்

🔴 Airport Service SLTB Buses Only 🔴 2025—————————————————————————————🔴අක්කරෛපත්තුව , කල්මුණේ සහ කාත්තන්කුඩි සිට ගුවන්තොට...
02/01/2025

🔴 Airport Service SLTB Buses Only 🔴 2025
—————————————————————————————
🔴අක්කරෛපත්තුව , කල්මුණේ සහ කාත්තන්කුඩි සිට ගුවන්තොටුපළ සහ ගුවන්තොටුපළ හරහා කොළඹ යන බස් විස්තර🔴
—————————————————————————————
🔴அக்கரைப்பற்று , கல்முனை மற்றும் காத்தான்குடியிருந்தது விமான நிலையம் & விமான நிலையம் ஊடக கொழும்பு செல்லும் பேருந்து விபரம்🔴—————————————————————————————
• • Last Updated : 01 - 01 - 2025 • •—————————————————————————————
✈️ කොළඹ සිට ගුවන්තොටුපළ හරහා සහ ගුවන්තොටුපළ සිට කල්මුණේ සහ අක්කරෛපත්තුව එන බස් විස්තර 🔴—————————————————————————————
✈️ விமான நிலையம் & கொழும்பிலிருந்து விமான நிலையம் ஊடக கல்முனை அக்கரைப்பற்று வரும் பேருந்து விபரம்🔴
—————————————————————————————
╰┈➤┃ Eastern Bus Kingdom ┃ Eastern Buses ┃𝟸𝟶𝟸𝟻┃

🔴பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது, கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்..!இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்...
02/01/2025

🔴பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது, கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்..!

இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார்.

குடும்பமாக உழைக்கும் போது குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காக எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், குடும்ப நலமே தங்கள் நலம் என்பதை குழந்தைகள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

அவ்வாறே நாட்டின் நலன் கருதி எடுக்கும் தீர்மானங்கள் சில நேரம் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அதனை பழகிக் கொள்ள வேண்டி வரும், தப்பாக நினைக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

தனது அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Address

Main Street Addalaichenai 05
Addalachenai
32350

Alerts

Be the first to know and let us send you an email when East1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to East1st:

Videos

Share

Category