Uthangarai Clique

Uthangarai Clique Uthangarai is a Taluk, Town Panchayat in Krishnagiri district in the Tamil Nadu state of India

Exciting Opportunity Alert!🚀 Join the Learnova VR & AR Academy franchise family today!🌟 Dive into the world of cutting-e...
22/09/2023

Exciting Opportunity Alert!

🚀 Join the Learnova VR & AR Academy franchise family today!

🌟 Dive into the world of cutting-edge technology education with our immersive VR & AR courses. Be a part of the future.

𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 :
𝐏𝐡𝐨𝐧𝐞 : 083000 87772 | +919486386763
𝐌𝐚𝐢𝐥 : [email protected]
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : www.learnova.in

"Unlock the door to infinite possibilities with Learnova's VR & AR Academy. Embrace technology, embrace the future!" 🚀🌟🚀...
10/08/2023

"Unlock the door to infinite possibilities with Learnova's VR & AR Academy. Embrace technology, embrace the future!" 🚀🌟
🚀𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 :
: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑
𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

🌟 Calling all young adventurers to the Learnova VR & AR Academy! 🎮👦👧🎉 Introducing our exclusive "Junior Learnovators" pr...
26/07/2023

🌟 Calling all young adventurers to the Learnova VR & AR Academy! 🎮👦👧
🎉 Introducing our exclusive "Junior Learnovators" program, specially designed for bright minds aged 6 to 10! 🚀📚
🚀 Step into a world of immersive learning, where creativity knows no bounds and curiosity is the key! 🌈🤩 Our VR & AR Academy offers a fun-filled educational experience like never before.
🌐 From mind-boggling virtual adventures to interactive storytelling, our young learners will explore, create, and grow their tech skills with expert guidance. 👩‍🏫👨‍🏫
👉 Join our Junior Learnovators today and embark on a journey of endless possibilities in the realms of virtual reality and augmented reality! 🚀🔍
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 : 📱: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑 📧 𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

நீட் தேர்வு முடிவுகள் 2022 | 4 மாணவர்கள் முதலிடம்; தமிழக தேர்ச்சி விகிதம் 51.3%புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான நீ...
08/09/2022

நீட் தேர்வு முடிவுகள் 2022 | 4 மாணவர்கள் முதலிடம்; தமிழக தேர்ச்சி விகிதம் 51.3%

புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நேற்று (செப். 7) காலையே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் நேற்றிரவு வெளியானது. இந்தத் தேர்வில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in/ , ntaresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

நீட் 2022 இளங்கலை தேர்வு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 4.47 லட்சம் பேர் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். 1.31 லட்சம் பேர் பட்டியலினத்தையும், 47,295 பேர் பழங்குடியின வகுப்பையும் 84,070 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர் பிரிவையும், 2.82 லட்சம் பேர் பொதுப் பிரிவையும் சேர்ந்தவர்களாவர்.

தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்: தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.இவர்களில் மொத்தம் 51.3% பேர் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு. கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். அதேபோல் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 50 இடங்களில் அதிகபட்சமாக கர்நாடகாவில் இருந்து 9 பேர் இடம்பெற்றுள்ளனர். அடுத்தபடியாக டெல்லி, தெலங்கானாவில் தலா 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இத் தேர்வில் நாடு முழுவதும் 4 பேர் 99% பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் தனிஷிகா, (ராஜஸ்தானில் தேர்வெழுதிய தனிஷிகாவின் சொந்த ஊர் ஹரியாணா) டெல்லியின் வட்ஸ் ஆசிஷ் பத்ரா, ஹ்ரிஷிகேஷின் என்.கங்குலி மற்றும் ருச்சா பவாஷேஎ 720க்கு 715 மதிப்பெண் பெற்று 99.99% உடன் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாமதமான முடிவுகள்: நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாததால் முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும்இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவது தள்ளிப்போனது. தமிழகத்தில் நடத்தப்படவிருந்த இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும் தள்ளிவைக்கப்பட்டது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், நேற்று (செப். 7-ம் தேதி) இரவில் வெளியானது. நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் கடந்த ஆக. 31-ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.









ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்கடலாடி அருகே ஏ.புனவாசல் கிர...
07/09/2022

ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்

கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லியும், ரூ.3-க்கு தோசையும் விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம், கரி மூட்டத் தொழில் செய்கின்றனர். இக்கிராமத்தில் 5-க்கும்மேற்பட்ட இட்லிக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் ஒரு இட்லி ரூ.2 முதல் ரூ.5-க்கும், தோசை ரூ.3-க்கும் சட்னி, சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.

காலையில் மட்டும் விற்பனை செய்யப்படும் இக்கடைகளில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். அதேபோல் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் தோசை ரூ.4 முதல் ரூ.5-க்கும்,ஊத்தப்பம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு தேங்காய் சட்னி, காரச் சட்னி,சாம்பார் வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.10 முதல் ரூ.25-க்குள் காலை உணவை நிறைவு செய்யலாம்.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இட்லி ரூ.10-க்கும், தோசை ரூ.40 முதல் ரூ.60-க்கும் விற்பனை செய்யும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமங்களில் குறைந்த விலையில் இட்லி, தோசை விற்பனை செய்யப்படுவது வெளியூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தாலும் இப்பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் ஏ.புனவாசல், மாரியூர், எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1-க்கு ஒரு போண்டா அல்லது ஒரு வடை விற்கப்படுகிறது. இதுவே நகரங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.

ஏ.புனவாசலில் வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் இட்லிக் கடை நடத்தி வரும் முருகவள்ளி(38) என்ற பெண் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் லாப நோக்கம் இன்றி ஒரு இட்லி ரூ.2.50-க்கு விற்பனை செய்கிறேன். காலையில் மட்டும் இந்த வியாபாரம் செய்கிறேன். வியாபாரம் முடிந்ததும் விவசாய வேலை அல்லது நூறு நாள் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

எந்த வியாபாரம் செய்தாலும் மனசாட்சிக்குப் பயந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் பால் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு உதவியாக உள்ளது என்றனர்.








மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்திருந...
03/09/2022

மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருநெல்வேலி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களது பதவி பறிக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 13 கடற்கரை கிராமங்களுக்கு, ரூ.25 கோடி மதிப்பில் பொன்னன்குறிச்சி தனி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இதனால், இதற்கு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கான அரியநாயகபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். திருநெல்வேலி மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து, புதிய திட்டம்தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம்விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்களை புற ஆதார அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ரூ.983 கோடியில்..

சென்னையில் ரூ.983 கோடியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகள்ரூ.84 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.











திருச்சி மலைக்கோட்டையில் விநாயகருக்கு 75 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் ஸ்...
02/09/2022

திருச்சி மலைக்கோட்டையில் விநாயகருக்கு 75 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் ஸ்ரீமட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இங்கு விநாயகர், மலையின் மேல் உச்சிப்பிள்ளையாராகவும், மலையின் கீழ் மாணிக்க விநாயகராகவும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில் மடப்பள்ளியில் தலா 75 கிலோ எடை கொண்ட 2 கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டன. இதில் ஒரு கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது.

மற்றொரு கொழுக்கட்டையை வெள்ளைத் துணியில் வைத்து மூங்கில் கம்பில் கட்டி படிகள் வழியாக சுமந்து சென்று மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு படையல் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

முன்னதாக விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர் ஆர்.ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.













தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுமதுரை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒ...
01/09/2022

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு

மதுரை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டுகளையும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘புழுதிப்பட்டி சத்திரம் பீரான்பட்டி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விநாயகர் ஊர்வலத்தின் செல்பவர்கள் யாரும் ஆபாசமாக நடனமாடவோ, பேசவோ கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி , மதம், சமூகம், சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்க க்கூடாது. எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது.

மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் ஊர்வலம் நடத்தக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் செல்பவர்கள் மதுபானம் உட்பட எந்த போதை பொருட்களையும் பயன்படுத்திருக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பாவார்கள். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊர்வலத்தை நிறுத்த காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.











பதிவு தபால், பார்சலுக்கு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தலாம்: அஞ்சல் துறையில் புதிய வசதி அறிமுகம்சென்னை: ஷாப்பிங் மால் முதல் ...
31/08/2022

பதிவு தபால், பார்சலுக்கு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தலாம்: அஞ்சல் துறையில் புதிய வசதி அறிமுகம்

சென்னை: ஷாப்பிங் மால் முதல் தெருவோர தள்ளுவண்டி கடை வரை தற்போது ‘க்யூஆர் கோடு’ அட்டையை ஸ்கேன் செய்து, ஃபோன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்த முடிகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு உருவானது ‘யுபிஐ’.

நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான, மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ. இது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. ஸ்மார்ட்போன் செயலி வழியாக ஒரு வங்கியில் இருந்து எந்தவங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.

கடந்த 2016 ஏப்ரல் மாதம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ மூலமாக, முதல் ஆண்டிலேயே ரூ.707 கோடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2016-ல் யுபிஐயின் கீழ் 35 வங்கிகள் இருந்தன. தற்போது 282 வங்கிகள் உள்ளன. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

இந்நிலையில், யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது:

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணுசேவையை அறிமுகம் செய்து வருகிறது. மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு பணிச் சுமையை குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், அஞ்சல் துறையில் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக யுபிஐக்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சலகங்களிலும்இந்த சேவை கடந்த ஏப்ரலில் அறிமுகமானது.

முதல்கட்டமாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள், விரைவு தபால்கள், பார்சல்களுக்கு யுபிஐ க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம்.

இதன்மூலமாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 19-ம்தேதி வரை 12,208 பரிவர்த்தனைகள், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 5,341 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளை அஞ்சலகங்களில் இது சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை முடிந்ததும் விரைவில் அங்கும் அமல்படுத்தப்படும். சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு,மணியார்டர் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யுபிஐ மூலம் பணம்செலுத்தும் வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்றார்.











விண்ணப்பித்த 15,000 முதியோருக்கும் அடுத்தமாதம் முதல் உதவித் தொகை; 100 வயது கடந்தோருக்கு ரூ.7000: முதல்வர் ரங்கசாமிபுதுச்...
29/08/2022

விண்ணப்பித்த 15,000 முதியோருக்கும் அடுத்தமாதம் முதல் உதவித் தொகை; 100 வயது கடந்தோருக்கு ரூ.7000: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள 15 ஆயிரம் பேருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை தரப்படும், 100 வயதை கடந்தோருக்கு இனி ரூ. 7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: "எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில்: "ஏழைப் பெண்கள், விதவைப் பெண்கள் திருமண உதவித்தொகை பெற காலக்கெடு 30 நாட்கள் கொடுத்திருப்பதை 90 நாட்களாக மாற்றிக்கொடுக்க அரசு முன்வருமா? முதியோர் உதவித்தொகை பெற பிறந்த பதிவு இல்லாதவர்கள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றில் ஏதாவது இரண்டை மட்டும் ஆதாரமாக வைத்துப் பெற அரசு ஆவண செய்யுமா?

ஈமச்சட ங்கு காலக்கெடு 90 நாட்கள் என இருப்பதால் பயனாளிகள் சிரமத்தை உணர்ந்து காலக்கெடுவை 6 மாதங்களாக நீட்டிக்க அரசு முன்வருமா? விடுபட்ட முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி, திருநங்கைகள் உதவித்தொகை எப்போது வழங்கப்படும்? இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறுகையில்: "ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவி பெற 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். ஆனாலும் திருமணம் முடிந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்பிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அவகாசம் அளிக்கிறது. திட்ட வழிகாட்டுதலின்படி முதியோர் உதவித்தொகை பெற பிறப்புச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

இறந்த முதியோர் ஈமச்சடங்கு நிதியுதவி பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். திருமண உதவித்தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. 2 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும்.

உதவித்தொகை கோரி முதியோர் விண்ணப்பங்கள் 15 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை தரப்படும். 100 வயது முதிர்ந்த முதியோருக்கு ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 90 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்." என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.








திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புதூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சு...
27/08/2022

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம்பிடித்தனர்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆவணித் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 6.15 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. திருக்கோயில் இணை ஆணையர் (பொ) அன்புமணி வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

நேற்று காலை 6.15 மணிக்குப் புறப்பட்ட விநாயகர் தேர் நான்கு ரதவீதிகள் வழியாக காலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து, காலை 6.50 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேர் வீதி உலா வந்து, காலை 7.35 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர், காலை 7.50 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து, 8.20 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நேற்று இரவு சுவாமி, அம்மன்பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்துதிருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






திருப்பதி உண்டியல் காணிக்கை 22 நாட்களில் ரூ.100 கோடி தாண்டியதுதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 6-வது மாத...
25/08/2022

திருப்பதி உண்டியல் காணிக்கை 22 நாட்களில் ரூ.100 கோடி தாண்டியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 6-வது மாதமாக உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை தாண்டியது. இந்த மாதத்தில் 22-ம் தேதியே ரூ.100 கோடியை கடந்ததால், இம்மாத உண்டியல் வருவாய் ரூ.140 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததும் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித் தது. தற்போது தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் முதல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை கடந்தது. அதேபோன்று பல நாட்கள் ரூ.5 கோடிக்கு மேல் உண்டியல் வரு வாய் வந்தது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 5 தடவை ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக இம்மாதத்தில் வெறும் 22 நாட்களிலேயே உண்டி யல் வருவாய் ரூ.100 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத உண்டியல் வருவாய் ரூ.140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளிப் பொருட்களும் காணிக் கையாக வருகின்றன. இதனால் கோயிலின் வருவாய் அதிகரித் துள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் வரையிலான 12 மாதங் களில் திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.














20 ஆண்டுகளுக்குப் பின்னர் நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனைசென்னை: நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டு...
23/08/2022

20 ஆண்டுகளுக்குப் பின்னர் நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை

சென்னை: நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் பயிர்க்கடன், காப்பீட்டு வசதி, உரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழலில், இந்த ஆண்டு முன்னதாகவே முதல்வர் ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்தார். மேலும், போதிய மழையும் பெய்துவருவதால், கடந்த 2 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால், சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சாகுபடிப் பரப்பும், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் பெருமளவில் உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-01-ல் சாகுபடிப் பரப்பு அதிகபட்சமாக 20.80 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.11 லட்சம் டன்னாகவும் இருந்தது. கடந்த 2021-22-ல் சாகுபடிப் பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.22 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2020-21ல் சாகுபடிப் பரப்பு 20.36 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.04 லட்சம் டன்னாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.உரிய காலத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறப்பு, ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட காரணங்களே இந்த சாதனைக்குக் காரணம் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.















சென்னைக்கும் ‘மஞ்சள் தமிழன்’ தோனிக்கும் இடையேயான உன்னத உறவு | Chennai Dayசென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் கிரிக...
22/08/2022

சென்னைக்கும் ‘மஞ்சள் தமிழன்’ தோனிக்கும் இடையேயான உன்னத உறவு | Chennai Day

சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் ரசிகர்களால் ‘மஞ்சள் தமிழன்’ என்று அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனிக்கும், சென்னைக்கும் இடையே உள்ள உன்னதமான உறவு குறித்து பார்ப்போம். சென்னையை தனது இரண்டாவது தாய்வீடு என தோனியே சொல்லியுள்ளார். அவரை ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைப்பது வழக்கம். அந்த செல்லப் பெயருக்கு அவர் பொருத்தமானவரும் கூட. ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தின் வெளிப்பாடுதான் அந்தப் பெயருக்கான காரணம்.

மகிழ்மதிக்கும் பாகுபலிக்கும் இடையே உள்ள கனக்ட்டிவிட்டியை நிஜ வாழ்க்கையில் சென்னை - தோனி பந்தத்தை விவரிப்பாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் காம்போ இது. அவர் நிஜ வாழ்க்கையிலும், விளையாட்டு கெரியரிலும் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்: தோனிக்கும், சென்னைக்கும் இடையிலான பந்தம் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே தொடங்கியது. அவரது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் சென்னை மண்ணில் அரங்கேறியது. அந்தப் போட்டி சமனில் முடிந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்ததன் மூலம் வெண்ணிற ஆடை அணிந்து தேசத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பெருமையை பெற்றார் தோனி. 54 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்களை தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் ஸ்கோர் செய்திருந்தார்.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4876 ரன்களை சேர்த்துள்ளார். சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 4 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். நான்கும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக நடைபெற்றவை. அனைத்தும் முதல் இன்னிங்ஸ் தான். அதன் மூலம் 323 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 224 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்னாகவும் இது உள்ளது. சென்னையில் 6 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் தோனி விளையாடி உள்ளார்.

உறவுக்கு வலு சேர்த்த சிஎஸ்கே: ஐபிஎல் குறித்த அறிவிப்பு வெளியானது. 2008-இல் நடைபெற்ற முதல் ஏலத்தில் பங்கேற்ற அணிகள் சில அஜெண்டாவை கடைப்பிடித்தன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் நகரை சார்ந்துள்ள மண்ணின் மைந்தர்களை பிக் செய்வதில் ஆர்வம் காட்டின. மும்பைக்கு சச்சின், டெல்லிக்கு சேவாக், பஞ்சாப் அணிக்கு யுவராஜ், கொல்கத்தாவிற்கு சவுரப் கங்குலி, பெங்களூருவுக்கு அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையை சார்ந்த வீரர்கள் யாரும் அப்போது இல்லாத நேரம் அது. அதனால் 2007 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. அதற்கு முதல் மற்றும் முழு காரணம் மறைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர். “தோனியை வாங்குவதில் நான் உறுதியாக இருந்தேன். அது குறித்து எனது கருத்தை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனிடம் சொல்லி இருந்தேன். முதலில் அவருக்கு அதில் மாற்றுக் கருத்து இருந்தது. ஆனால் தோனியை வாங்கிவிடலாம் என அவரும் ஒரு கட்டத்தில் தெரிவித்தார். தோனிக்கான விலை 1.5 மில்லியன் டாலர்களை கடந்தால் அவரை வாங்க முடியாத சூழல் இருந்தது. ஏனெனில் அணியை நாங்கள் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே கொண்டு உருவாக்க வேண்டியிருந்தது. நல்வாய்ப்பாக அவர் அதற்கு மேல் ஏலம் கேட்கப்படவில்லை. அதனால் சென்னை அணிக்கு அவர் கிடைத்தார். கேப்டன், விக்கெட் கீப்பர், ஃபினிஷர் என பன்முக திறன் கொண்ட இன்ஸ்பிரேஷனல் வீரர் தோனி” என அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

அவர் சொன்னதை போலவே தோனி, களத்தில் விளையாடினால் தன் அணியினர், ரசிகர்கள் என பலரையும் ஒருங்கிணைத்த வகையில் இருக்கும். அந்த அளவிற்கு ஈர்ப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் வீரர் அவர்.

சென்னை அணி ஏலத்தில் வாங்கிய முதல் வீரர் தோனிதான். இன்று வரை அணியின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீரர்களில் தோனி உள்ளார். அப்போது தொடங்கிய அந்த பயணம் 15 சீசன்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

சென்னை மாநகரை சுற்றி பைக்கில் வலம் வந்த ‘தல’ - தோனி வாகன பிரியர் என்பது அனைவரும் அறிந்தது. அவரது இல்லமான ‘கைலாஷ்பதி’-இல் உள்ள கராஜில் விலை உயர்ந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு கார்கள் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார். அனைத்திற்கும் முறையாக வரி செலுத்தியுள்ளார்.

தோனி சென்னை நகரின் மீது மோகம் கொள்ள காரணம் ஒரு பைக் பயணம் என சொல்லப்படுகிறது. அந்த சம்பவத்தை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் அண்மையில் நினைவுகூர்ந்தார்.

“தோனி சென்னை அணியில் இணைந்ததும் அவருக்கு பைக் பிடிக்கும் என்ற காரணத்தால் பைக் ஒன்றை பரிசளித்தோம். அடுத்த நொடியே அதை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார். சென்னை நகரின் பரபரக்கும் சாலைகளில் பைக்கில் பயணம் செய்துள்ளார் தோனி. அதுதான் இந்த நகரத்தின் மீதான அவரது மோகத்தை பலப்படுத்தியது. அவர் சென்னை நகரில் பைக்கில் பயணிக்க தீராக் காதலை கொண்டிருப்பவர்” என சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை - தோனி சில துளிகள்

தோனிக்கு சென்னையில் பிரியாணி மிகவும் பிடிக்கும் என அவரே எம்.எஸ்.தோனி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.
ஃபில்டர் காஃபி பிடிக்கும் எனவும் அப்போது சொல்லி இருந்தார்.
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு தோனி சென்னை அணிக்காக விளையாட திரும்பிய போது ‘தாய் மண்ணுக்கு திரும்பிய தானைத் தலைவன்’ என போற்றப்பட்டர். அவரது கம்பேக்கை பார்க்க ரசிகர்கள் பேர் ஆர்வம் கொண்டிருந்தனர்.
அவர் விளையாடும் போது மட்டுமல்ல சென்னை அணியில் பயிற்சி மேற்கொள்வதை பார்க்கவே கோடான கோடி ரசிகர்கள் திரள்வது வழக்கம். அந்த அளவிற்கு ஆத்மார்த்தமான அன்பை சம்பாதித்தவர் அவர்.
41 வயதான அவர் இப்போதும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் சொல்லி வருவதே அதற்கு ஒரு உதாரணம்.
மைதானத்தில் அவர் பேட் செய்ய களம் இறங்கும் போது ‘தோனி… தோனி’ என ஒருமித்த குரலில் ஒலிக்கும் ரசிகர்களின் ஆரவாரம் ஒருவித ஹைப்பை ஏற்படுத்தும். அது சென்னை - சேப்பாக்கம் மைதானம் என்றால் சொல்லவே வேண்டாம். அது இன்னும் ஸ்பெஷலானதாக இருக்கும்.
அவரது கோடான கோடி ரசிகர்களில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மண்ணில் கடைசி போட்டி: “இந்த மண்ணில் (சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்) தான் எனது கடைசி கிரிக்கெட் போட்டியின் அரங்கேற்றம் அமையும்” என தோனி சொல்லியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஆகஸ்ட்டில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்ததும் சென்னை அணியின் முகாமில் இருந்த போதுதான்.

"நிச்சயம் நான் அடுத்த சீசனில் விளையாடுவேன். ஏனெனில் சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருந்தால், அது நியாயமானதாக இருக்காது. இதற்கான காரணம் ரொம்பவே சிம்பிள். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது" என கடந்த சீசனிலும் தோனி சொல்லியுள்ளார். எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசன் சென்னை மண்ணில் நடைபெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


























கோகுலாஷ்டமி பண்டிகைக்கு வீடுகளில் படையலிட்டு மக்கள் வழிபாடு: ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைசென்னை: கோகுலாஷ்டமி எ...
20/08/2022

கோகுலாஷ்டமி பண்டிகைக்கு வீடுகளில் படையலிட்டு மக்கள் வழிபாடு: ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜை

சென்னை: கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தியை பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், வீடுகளில் படையலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். நேற்று பகல் முழுவதும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள், தங்கள் குடும்பத்தாருடன் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் கிருஷ்ணரின் வாழ்வை விளக்கும் அரங்குகள் அமைப்பட்டிருந்தன. மேலும், கிருஷ்ணர் சிலைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன

வீடுகளில் குழந்தைகளுக்கு ராதா அல்லது கிருஷ்ணர் போல உடைகளை அணிவித்தும், ரங்கோலி வரைந்தும், பலகாரங்களை படைத்தும் வழிபட்டனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

















மதுராவில் இன்று கோகுலாஷ்டமி கோலாகல விழா - கிருஷ்ணர் உடைகள் ரூ.500 கோடிக்கு விற்பனைபுதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடவுள் ...
19/08/2022

மதுராவில் இன்று கோகுலாஷ்டமி கோலாகல விழா - கிருஷ்ணர் உடைகள் ரூ.500 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன.

இந்த உடைகளில் அதன் விலைக்கு ஏற்ற வகையில் ஜரிகை வேலைப்பாடுகளுடன் பிரகாசமான கற்களும் பதிக்கப்படுகின்றன. இதனால், இந்த உடைகள் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, போலந்து, துபாய் உள்ளிட்ட 18 வெளிநாடுகளில் இருந்து மதுரா தையல் கலைஞர்கள் ஆர்டர் பெற்று வருகின்றனர். கிருஷ்ணரின் ஆடைகள் கடந்த 2 ஆண்டுகளாக விற்காமல் இருந்தன. தற்போது, கோகுலாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால், மதுரா தையல் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மீண்டும் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வியாபாரி சோமேஷ் வர் அகர்வால் கூறும்போது, “இந்த ஆண்டு சுமார் ரூ.500 கோடிக்கு கிருஷ்ணர் ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி உள்ளன. உலகிலேயே கிருஷ்ணருக்கு மட்டும்தான் அதிக வகைகளிலான ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இதன் பலன் கிருஷ்ண ஜென்ம பூமி வாசிகளான எங்களுக்கு கிடைத்து வருகிறது” என்றார்.

கிருஷ்ணர் ஆடை தயாரிப்பு மதுராவில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகவே உள்ளது. இந்த தொழிலில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் நுட்பமான வேலைப்பாடுகளைப் புகுத்தி தனித்துவமான வகையில் கிருஷ்ணர் ஆடைகளை முஸ்லிம்கள் தயாரிக்கின்றனர். மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி, பாங்கே பிஹாரி, ஹரே கிருஷ்ணா ஆகிய கோயில்களில் உள்ள கிருஷ்ணர் சிலைகளுக்கு விலை மதிப்புள்ள ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

அந்த ஆடைகளை பூஜைக்குப் பின்னர் பூஜாரிகள் விற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலில் ஜீன்ஸ், டிஷர்ட் அணிய வைத்து கையில் ஒரு மொபைல் போனை கொடுத்து நவீன கிருஷ்ணராக மாற்றி ரகசிய பூஜையும் செய்யப்பட்டது. ஜீன்ஸ், டி ஷர்ட் அலங்காரத்தில் இருந்த கிருஷ்ணர் சிலையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அந்த ஆடைகளையும் வெளி நாட்டவருக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்றது பெரும் சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.















Address

Main Street
Uthangarai
635207

Alerts

Be the first to know and let us send you an email when Uthangarai Clique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uthangarai Clique:

Share


Other News & Media Websites in Uthangarai

Show All