Chendur Times

Chendur Times The Most Social Media Name in Powerful Thoothukudi District | Tiruchendur Local News.
(2)

மாநில அளவிலான கபாடி போட்டி: மெய்ஞ்ஞானபுரம் ஜாண்தாமஸ் அணி சாம்பியன்.மெய்ஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலயம் 178வது பிரதிஷ்டை மற்...
02/02/2025

மாநில அளவிலான கபாடி போட்டி: மெய்ஞ்ஞானபுரம் ஜாண்தாமஸ் அணி சாம்பியன்.

மெய்ஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலயம் 178வது பிரதிஷ்டை மற்றும் அசன விழாவை முன்னிட்டு கனம். ஜாண்தாமஸ் கபாடி கழகம் நடத்திய ஜா.ரவி சுந்தர் நினைவு ஆண்கள் மின்னொளி கபாடி போட்டியானது, மெய்ஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு நடைபெற்ற இந்த கபாடி போட்டியில், மெய்ஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் அணியினரும், அளத்தங்கரை அணியினரும் இறுதி போட்டியில் மோதினர். இதில் மெய்ஞ்ஞானபுரம் ஜாண்தாமஸ் அணியினர் வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டி சென்றனர்.

A to Z அளத்தங்கரை அணியினர் 2-வது பரிசும், நியூ காலேஜ் சென்னை அணியினர் 3-வது பரிசும், Customs மதுரை அணியினர் 4-வது பரிசையும் தட்டி சென்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளை ஏராளமானோர் கண்டு களித்தனர்.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!தூத்துக்குடி மாவட்டத்தி...
31/01/2025

தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரங்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாமில் இம்மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் 154400 டோஸ்கள் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், அரசினர்d கால்நடை மருத்துவ கிளை நிலையங்களில் தடுப்பூசி முகாமிற்கான கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டு கிராமங்களில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.

இவ்வரிய வாய்ப்பினை கோழி வளர்ப்போர் பயன்படுத்திக் கொண்டு கோழிகளை நோயின்றி காப்பாற்றிட தவறாமல் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகும்படி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், ...
30/01/2025

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.

ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமிநகர், சூசைநகர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்,

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை 31.01.25 காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

கப்பல் கட்டுமானப்பணி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள்சேர்க்கை : தூத்துக்குடியில் பிப்.10ல் வேலைவாய்ப்பு முகாம்!இது தொடர்பாக ...
30/01/2025

கப்பல் கட்டுமானப்பணி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள்சேர்க்கை : தூத்துக்குடியில் பிப்.10ல் வேலைவாய்ப்பு முகாம்!

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமானப்பணி வேலைக்கு ஆள்சேர்க்கை நடைபெறுகிறது. எனவே ஐடிஐ முடித்த பிட்டர், வெல்டர், எலெக்ட்ரீசியன், வயர்மேன் பிரிவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் 10.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

L&T Ship Building Limited நிறுவனமானது தொழிற்பயிற்சி நிலையங்களில் வெல்டர், பிட்டர், எலெக்ட்ரீசியன் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு Structural Welding, Structural Fitting, Electrical Work Grinding and Scaffolding போன்ற பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பு வழங்க உள்ளனர். எனவே, பயிற்சியிலுள்ள மற்றும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்.க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காவல்நிலையத்தில் நெஞ்சுவலியால் பணியின்போது உயிரிழப்பு.
29/01/2025

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காவல்நிலையத்தில் நெஞ்சுவலியால் பணியின்போது உயிரிழப்பு.

மெய்ஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலயம் 178வது பிரதிஷ்டை மற்றும் அசன விழாவை முன்னிட்டு ஆண்கள் மின்னொளி கபாடி போட்டி.
29/01/2025

மெய்ஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலயம் 178வது பிரதிஷ்டை மற்றும் அசன விழாவை முன்னிட்டு ஆண்கள் மின்னொளி கபாடி போட்டி.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ 1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு.குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயி...
28/01/2025

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ 1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது. அந்த வகையில் கோயில் அருகே சப்பரம் மண்டபத்தையொட்டிய சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கடை வைத்து நடத்தி வந்தனர். இந்த இடத்தை மீட்க கோயில் செயல் அலுவலர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கில் இணை ஆணையர் நீதிமன்றம், இந்த இடம் கோயிலுக்கு சொந்தம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி இன்று ஜன 28ம் தேதி தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் வள்ளிநாயகம், கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.

இந்நிகழ்வின் போது கோயில் ஆய்வர் முத்துமாரியம்மன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ்வரி, கணேசன், ஆர்.ஜ., முனீஸ்வரி, வி. ஏ.ஒ., வைரமுத்து, குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் முருகன், அந்தோணி துரைசிங்கம், கோயில் வழக்கறிஞர் கோபி, கோயில் கணக்கர் டிமிட்ரோ உட்பட பலர் உடனிருந்தனர்.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

காயல்பட்டினத்தில் பிப்.1 இல் அபூா்வ துஆ கூட்டுப் பிராா்த்தனை!காயல்பட்டினத்தில் மஜ்­லிஸுல் புகாரி ஷரீப்பின் 98ஆம் ஆண்டு வ...
28/01/2025

காயல்பட்டினத்தில் பிப்.1 இல் அபூா்வ துஆ கூட்டுப் பிராா்த்தனை!

காயல்பட்டினத்தில் மஜ்­லிஸுல் புகாரி ஷரீப்பின் 98ஆம் ஆண்டு வைபவம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், அபூா்வ துஆ கூட்டுப் பிராா்த்தனை வருகிற சனிக்கிழமை (பிப். 1) அன்று நடைபெறுகிறது. இஸ்லாமிய ஆண்டுக்கணக்கின்படி ஆண்டுதோறும் ரஜப் மாதம் முழுவதும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ஓதப்பட்டு, நிறைவு நாளில் அபூா்வ துஆ கூட்டுப் பிராா்த்தனை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு பிராா்த்தனை பிப். 1ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், காயல்பட்டினத்தைச் சோ்ந்தவரும் ஹாங்காங் நாட்டின் கவ்லூன் நகரிலுள்ள தஃவத்தே இஸ்லாமீ பள்ளிவாச­ல் இமாமுமான மெளலவி ஷுஐப் நூஹ் மஹ்ழரீ பங்கேற்று பிராா்த்தனை நடத்தவுள்ளாா்.

நாட்டு நலன், மத நல்லி­ணக்கம், மனிதநேய மலா்ச்சி, இயற்கை வளம், நோயற்ற வாழ்வு உள்ளிட்டவற்றுக்காக நடைபெறும் இப்பிராா்த்தனையில், உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கவுள்ளனா்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே T20 கிரிக்கெட்  போட்டி - பதிவு செய்ய அழைப்பு.CSK-TDCA Trophy 2025 தூத்துக்குடி மா...
28/01/2025

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே T20 கிரிக்கெட் போட்டி - பதிவு செய்ய அழைப்பு.

CSK-TDCA Trophy 2025 தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 15 வயது உட்பட வீரர்களுக்கான T20 கிரிக்கெட் போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தொடங்க இருக்கிறது (வீரர்கள் 01.09.2009 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்) விருப்பமுள்ள பள்ளிகள் தங்கள் அணியை பதிவு செய்வதற்கு,

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் 80156 21154 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவசமாக பதிவு செய்ய கடைசி தேதி பிப்ரவரி 02, 2025 எனவும், மேலும் முதலில் வரும் 16 அணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

யானைத்திருக்கை மீன் பிடித்த பெரியதாழை மீனவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.திருச்செந்தூர் வனச்சரகத்த...
26/01/2025

யானைத்திருக்கை மீன் பிடித்த பெரியதாழை மீனவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருச்செந்தூர் வனச்சரகத்திற்குட்பட்ட பெரியதாழை கடலில் கடந்த 21.01.2025 அன்று ஜோசப் (54) மீனவர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற போது வலையில் சிக்கிய 1.5 டன் யானை திருக்கை மீன் பிடிபட்டது. பிடிப்பட்ட மீனின் புகைப்படம் மற்றும் வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவலாக பரவியதை அடுத்து,

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் இ.வ.ப உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வணச்சரக அலுவலர் கவின் தலைமையில் திருச்செந்தூர் வனப்பணியாளர்கள் வனவர்கள் ஜெயசேகர், ரெகு, நாகராஜ் மற்றும் வனக்காப்பாளர்கள் பைசல் ராஜா, சக்திவேல், அபிஷேக் அனைவரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்து சம்பந்தபட்ட நபர்களான ஜோசப் மற்றும் அக்னல் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி. வருகின்றனர்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்.இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்ப...
26/01/2025

மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 28.01.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் 5.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் வைத்து நடைபெற உள்ளது.

இச்சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐ-யில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், தொழிற்பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மண்டல அளவிலான முகாம் மூலம் சுமார் 1200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7700/- முதல் ரூ.10,000/- வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன்படி, இந்நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் நல்வாய்ப்பு கிடைக்கும். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

🇮🇳 76வது குடியரசு தின விழா; மணப்பாடு கலங்கரை விளக்கத்தில் கொடியேற்றி கொண்டாட்டம்.
26/01/2025

🇮🇳 76வது குடியரசு தின விழா; மணப்பாடு கலங்கரை விளக்கத்தில் கொடியேற்றி கொண்டாட்டம்.

தூத்துக்குடியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம்: ஆட்சியர் இளம்பகவத் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
26/01/2025

தூத்துக்குடியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம்: ஆட்சியர் இளம்பகவத் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் 2026 ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடைமேடையை உயர்த்த உறுதி - இரயில்வே நிர்வாகம் தகவல்.இது தொடர...
25/01/2025

காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் 2026 ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடைமேடையை உயர்த்த உறுதி - இரயில்வே நிர்வாகம் தகவல்.

இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினா் கனிமொழி, தனது X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பாக இரயிலில் இருந்து ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக நடைமேடையை உயர்த்தியும், நீட்டியும் கட்டித் தர வேண்டுமென ரயில்வேத்துறையின் மேலாளருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வந்தேன். இந்நிலையில் அதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்துத் தெரிவிக்குமாறு மீண்டும் அவருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன் என்றும்,

இதற்குப் பதிலளித்துள்ள இரயில்வே நிர்வாகம், 31.01.2026ஆம் தேதிக்குள் நடைமேடையை உயர்த்தியும், 24 பெட்டிகளுக்கான மேடையாக மேம்படுத்தியும் தருவதாக உறுதி அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

👏 ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டி வெகுமதி வழங்கி தமிழக டிஜிபி.
25/01/2025

👏 ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டி வெகுமதி வழங்கி தமிழக டிஜிபி.

நாலுமாவடியில் மாநில கபடிப் போட்டி: கரூா், ஈரோடு கல்லூரி அணிகள் சாம்பியன்.நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் விளைய...
25/01/2025

நாலுமாவடியில் மாநில கபடிப் போட்டி: கரூா், ஈரோடு கல்லூரி அணிகள் சாம்பியன்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் விளையாட்டுத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தமிழர் திருநாள் 8 வது ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நாலுமாவடி காமராஜர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து 2 நாட்கள் நடந்தது.

முதல் நாள் போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து தொடங்கி வைக்தார். இப்போட்டியானது சர்வதேச தரத்தில் மேட் தளத்தில் நடந்தது‌. போட்டிகளில் தமிழகத்தின் தலைசிறந்த 14 ஆண்கள் கல்லூரி அணிகளும், 9 பெண்கள் கல்லூரி அணிகளும் பங்கேற்றன. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி அணியும், கடலூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரி அணியும் மோதின.

இதில் கரூர் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டிச்சென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஈரோடு _ கோபிச்செட்டிப்பாளையம் பி.கே.ஆர். கல்லூரி அணியும், சேலம் சக்தி கைலாச கல்லூரி அணியும் மோதின. இதில் ஈரோடு பி.கே.ஆர். கல்லூரி அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஆண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி அணிக்கு முதல் பரிசாக ரூ‌பாய் 50 ஆயிரம் மற்றும் ரெடீமர்ஸ் கோப்பையை வழங்கினார். 2 வது இடத்தை பிடித்த கடலூர் எம்ஜிஆர் அரசுகலை கல்லூரி அணிக்கு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3 வது இடத்தை பிடித்த சென்னை புது கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கினார்.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் பிகேஆர் கல்லூரி அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2 வது இடத்தை பிடித்த சேலம் சக்தி கைலாச கல்லூரி அணிக்கு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3 வது இடத்தை பிடித்த கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் 6 சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் போட்டியை காண வருகை தந்த பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் 35 அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கவுதமன், திருவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரியுஸ், காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமை ஆசிரியர் திருநீலகண்டன், நாசரேத் மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டிகுமார், உதவி மேலாளர் ஆனந்தபாலாஜி, ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய், குரும்பூர் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் மணத்தி கணேசன், எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெப குழுவினர் செய்திருந்தனர்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அறிவிப்பு..!அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனு...
23/01/2025

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அறிவிப்பு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் (PMLA - Prevention of Money Laundering Act of 2002) கீழ் அமலாக்கத் துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சார்பில் X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தின் மூலம் தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னையில் அமைந்துள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களைச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட விதிகளின்படி தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்குச் சொந்தமானது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணமோசடி தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டார் எனத் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz

23/01/2025

திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 4வது கல்வெட்டு. முருகப் பெருமானின் முக்கிய வரலாற்றை கூறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி.

Address

Mela Maada Veethi
Tiruchendur
628205

Alerts

Be the first to know and let us send you an email when Chendur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chendur Times:

Share