30/01/2024
வணக்கம்... 🙏🙏🙏...
30.01.2024...இன்று...
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் அலுவலக செய்தி குறிப்பு.....
அன்புடையீர் வணக்கம்,
புதுச்சேரி காவல்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை போக்கும் விதமாக தாங்கள் எடுத்த முயற்சியின் பலனாக ஊர்க்காவல் படைக்கு ஆண், பெண் இருபாலர்கள் பயன்பெறும் விதமாக 500 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருப்பது வரவேற்கதக்கது. இதில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெற கூடியது மகிழ்ச்சியளிக்கிறது....
ஆனால் 18வயது முதல் 50வயது வரை உள்ளவர்கள் உடல்தகுதி ஒரே சீராக இருப்பதற்கு சாத்தியமற்றது. குறிப்பாக பெண்கள் திருமணம் முடித்து குழந்தை பெற்ற நிலையில் சற்று உடல்நிலையில் மாற்றம் அடைந்த நிலையில் இருப்பார்கள். அதேபோல ஆண்களில் 40 வயதை கடந்தவர்களுக்கும் இளைஞர்களுக்கான உடல்தகுதியிலிருந்து மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
ஆகையால மேற்கண்ட நிலைமையை கவனத்தில் கொண்டு உடல்தகுதி தேர்வை 2பிரிவுகளாக பிரித்து பெண்களின் வயது வரம்பில் 18வயது முதல் 30வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு பிரிவாகவும், 30வயதுக்கு மேல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மற்றொரு பிரிவாகவும், அதேபோல் ஆண்களுக்கு 18 வயது முதல் 35வயது வரை ஒரு பிரிவாகவும், 35வயது முதல் 50வயது வரை மற்றொரு பிரிவாகவும் பிரித்து அவரவர் வயதிற்கேற்ப உடல்தகுதி தேர்வில் தளர்வுகளை செய்து அதன்படி உடல்தகுதி தேர்வுகளை நடத்த ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட கோரிக்கையை பற்றி மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு புதுச்சேரி உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனுவாக அளிக்கப்பட்டுள்ளது...
மேற்கண்ட செய்தியினை தங்கள் செய்தி பிரிவு வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்....
நன்றி... 🙏🙏🙏......என்றும் மக்கள் சேவையில்....
G.நேரு(எ)குப்புசாமி MLA
உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி,
நிறுவனர்: மனிதநேய மக்கள் சேவை இயக்கம்,
புதுச்சேரி.1