𝙂𝙤𝙙 𝙜𝙧𝙖𝙘𝙚 𝙨𝙚𝙚𝙠 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝

  • Home
  • India
  • Mumbai
  • 𝙂𝙤𝙙 𝙜𝙧𝙖𝙘𝙚 𝙨𝙚𝙚𝙠 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝

𝙂𝙤𝙙 𝙜𝙧𝙖𝙘𝙚 𝙨𝙚𝙚𝙠 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝 Only God is always with me and protects me and guides me and loves me���

29/05/2024
❄❄💞💥🌸☺என் சகோதர சகோதரிகளுக்கு  வணக்கம், உங்கள் நாள் எப்படி இருந்தது? இன்றிரவு நடக்கும் கூட்டுறவில் அனைவரையும் சேர வரவேற்...
16/04/2024

❄❄💞💥🌸☺என் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், உங்கள் நாள் எப்படி இருந்தது? இன்றிரவு நடக்கும் கூட்டுறவில் அனைவரையும் சேர வரவேற்கிறோம்😍😍

🔔🔔🔔பெலோஷிப் அறிவிப்பு:💥💥

40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
லூக்கா 12:40 💖

சமீபகாலமாக பேரழிவுகள் மோசமாகி வருகின்றன😱. கோவிட் உலக மக்கள் தொகையில் 1/70 பேரை பாதித்துள்ளது. தேவனின் நாள் நெருங்கி வருவதைப் போல் பலர் உணர்கின்றனர்⏳. "தேவன் எப்படி திரும்பி வருவார்" என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?❓❓

‼️‼️வெளிப்படுத்தின விசேஷம்: 3:3 …… *திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.”

எல்லாவிதமான பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்; எல்லா நாடுகளும், எல்லா இடங்களும் பேரிடர்களை அனுபவிக்கும்: கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் நடப்பதில்லை, அவை ஓரிரு நாட்களுக்குள் முடிவடைவதுமில்லை; மாறாக அவை இன்னும் அதிகதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்து, மேலும் மேலும் கடுமையானதாகிவிடும். இந்த நேரத்தில் எல்லா விதமான பூச்சிகளால் உண்டாகும் கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பும், நரமாமிசத்தை உண்ணும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நிகழும். இதுவே எல்லா தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும். அத்தியாயம் 65💥

☘️☘️☘️ தேவன் திரும்பும் வழிகள் ☘️☘️☘️
கூட்டுறவு நேரம்:
💖🌞 இரவு 8:30 to 10 pm 🕣


https://chat.whatsapp.com/FWpQO4PlHoY9JbUkdXZ81d

Thank god 🩷🩵
19/10/2023

Thank god 🩷🩵

Almighty God says         ✨✨My final work is not only to punish man, but also to prepare a destination for man. And thus...
24/06/2023

Almighty God says

✨✨My final work is not only to punish man, but also to prepare a destination for man. And thus people may accept my principles and actions. I want every man to see that all that I have done is right, and that all that I have done is an expression of my state of mind. It is not the work of man, nor of nature that brought forth mankind, but it is My work that nourishes all living beings in creation. If it were not for me mankind would suffer the scourge of destruction and disaster. No man can see again the beauty of the moon, the sun, or the green world. Mankind faces only cold nights and pitiless valleys of deathly darkness. I am the only salvation of mankind. I am the sole hope of mankind and above all the entire existence of mankind depends on Me. Without Me the entire human race would immediately fall into a state of immobility. Without Me mankind would suffer great destruction, trampled underfoot by all kinds of devils, yet no one pays attention to Me. I have done a deed that no one else can do, and I hope that man will repay me with some good deeds. Although only a few can match me, I will complete my journey in the human world and begin the next phase of my expansion. For all these years among men the speed of my transit has been fruitful, and I am very happy. For me the number of people is not important but their good deeds. In any case, I hope you have prepared enough good deeds for your goal. Then I will be satisfied, otherwise not one of you will escape the calamity that is about to fall upon you. That disaster will begin with me, and it will certainly be planned by me. If you are not found perfect in my eyes, you cannot escape suffering in that disaster. Because your love and faith were lacking in depth during the tribulation, your actions then cannot be considered entirely appropriate, and you will either have shown yourself to be cowardly or harsh. I will only give a judgment as to whether it is good or bad. All I care about is how you walk and how you express yourself, and I will judge your decision based on that. However, I must make it clear that I will certainly not have more mercy on those who do not show the least bit of faith during the Tribulation, as My mercy extends to that. I do not set my will on anyone who betrays or betrays me. I also don't want to associate with people who sell their friends' favors. Whoever that person is, this is my position. I must tell you that none of those who break my heart can receive a second mercy from me. And those who are true to me will always remain in my heart.

From "Judgment Begins at the House of God."

20/06/2023

3, சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார், "இந்தப் பரந்த உலகில், மீண்டும் மீண்டும் பெருங்கடல்கள் நிலங்களுக்குள் பாய்கின்றன. நிலங்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சர்வத்தையும் ஆளுகிறவராகிய அவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்யவோ ஆயத்தங்களைச் செய்யவோ வலிமைமிக்க ஒருவரும் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியுள்ள சென்றுசேருமிடத்திற்கு வழிநடத்தக்கூடிய மற்றும் பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒருவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேடுகிற அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாரும் சிந்தித்ததில்லை. இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணர்வதில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடுவதில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிப்பதில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் பராமரிப்பையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்தப் பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் ஆகும். தேவனுடைய திட்டம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களும் அறிவுரைகளும் திருப்பி செலுத்தப்படவில்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னெப்போதும் நிழ்ந்திராததாகும். அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. ஏனென்றால் தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே சிருஷ்டிப்பதும் ஒரு முறை மட்டுமே இரட்சிப்பதும் ஆகும். இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

"மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை" என்பதிலிருந்து

𝘼𝙢𝙚𝙣
20/06/2023

𝘼𝙢𝙚𝙣

20/06/2023

🙏🏻🙏🏻வணக்கம் சகோதர சகோதரிகளே உங்களை தேவனுடைய குழுவிற்கு அன்புடன் வரவேற்கிறேன் ❄️🌻இன்று இரவு ஒரு முக்கியமான தலைப்பில் பிரச...
21/04/2023

🙏🏻🙏🏻வணக்கம் சகோதர சகோதரிகளே உங்களை தேவனுடைய குழுவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்

❄️🌻இன்று இரவு ஒரு முக்கியமான தலைப்பில் பிரசங்கம் நடைபெற போகிறது அதில் நீங்கள் அதிகப்படியான சத்தியங்களை தெரிந்து கொள்வீர்கள் உங்களுக்கு விருப்பமா?😊

⌚Time :8:30.to 10:pm

https://chat.whatsapp.com/KK3cJtIubJ8DR7ab3nl7z3

குழுவின் வாட்ஸ்அப் லிங்க்🪻👆🏻

*உங்களுக்காக சில பகுதிகள்*

🌻மனிதன் எப்போதுமே தனது சீர்கேடான சாத்தானின் மனநிலைக்கு நடுவில்தான் வாழ்கிறான், மேலும் அவனால் தேவனை உண்மையாக நேசிக்க முடிவதில்லை என்று சொல்லலாம். இது இப்படியிருக்க, மனிதன் தேவனை நேசிக்க விரும்பினால், அவனது சுய-நீதி, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆணவம், தற்பெருமை, மற்றும் சாத்தானின் மனநிலையிலுள்ள அனைத்தும் அவனிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லை என்றால், அவனது அன்பு தூய்மையற்ற அன்பாக, சாத்தானின் அன்பாக, தேவனின் அங்கீகாரத்தை முற்றிலும் பெற முடியாததாகவே இருக்கும். பரிசுத்த ஆவியினால் நேரடியாகப் பரிபூரணப்படுத்தப்படாமல், கையாளப்படாமல், நொறுக்கப்படாமல், கிளைநறுக்கப்படாமல், தண்டித்துத் திருத்தப்படாமல், சிட்சிக்கப்படாமல் மற்றும் சுத்திகரிக்கப்படாமல், ஒருவராலும் தேவனை உண்மையாக நேசிக்க முடியாது. உனது மனநிலையின் ஒரு பகுதி தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதனால் உன்னால் தேவனை உண்மையாக நேசிக்க முடிகிறது என்று நீ சொன்னால், உனது வார்த்தைகளில் கர்வம் நிறைந்துள்ளது, நீ விபரீதமானவன். அதுபோன்றவர்கள்தான் பிரதான தேவதூதர்கள்! மனிதனின் சுபாவங்கள் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியானவை அல்ல; அவன் தேவனின் பரிபூரணத்தின் மூலமாக தனது சுபாவங்களைக் கைவிட வேண்டும், அப்போதுதான் தேவனின் சித்தத்தில் அக்கறை காட்டுவதன் மூலம், தேவனின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம், மற்றும் பரிசுத்த ஆவியின் செயலுக்கு உட்படுத்துவதன் மூலமும், அவன் வாழ்கின்ற வாழ்க்கை தேவனின் அங்கீகாரத்தைப் பெறும். பரிசுத்த ஆவியினால் ஒரு மனிதன் பயன்படுத்தப்பட்டாலே தவிர, மாம்சத்தால் ஆன உடலில் வாழ்கின்ற எவர் ஒருவராலும் நேரடியாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. எனினும், இதுபோன்ற ஒரு நபருக்குக் கூட, அவனது மனநிலை மற்றும் அவன் வாழும் விதம் முழுமையாக தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று சொல்ல முடியாது; அவன் வாழ்கின்ற வாழ்க்கை பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும். அத்தகைய ஒரு மனிதனின் மனநிலை தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தாது.
மனிதனின் மனநிலை தேவனால் நியமிக்கப்பட்டது என்பதை கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு நேர்மறையான விஷயமாகக் கருதினாலும் கூட, அது சாத்தானால் செயல்படுத்தப்பட்டுள்ளத

"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது" என்பதிலிருந்து

26/03/2023

நீ இளமையாக இருப்பதால் உன்னைக் குறைத்து மதிப்பிடாதே. நீ உன்னையே எனக்குக் காணிக்கையாக்க வேண்டும். மேலோட்டமாக ஜனங்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை, அவர்கள் எவ்வளவு வயதானவர்கள் என்பதையும் நான் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் என்னை உண்மையாக நேசிக்கிறார்களா, அவர்கள் என் வழியைப் பின்பற்றுகிறார்களா, மற்றும் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து சத்தியத்தைப் பின்பற்றுகிறார்களா என்பதை மட்டுமே நான் கருத்தில்கொள்கிறேன். நாளையதினம் எப்படி இருக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு நீ என்னையே நம்பியிருக்கும் வரை, நான் நிச்சயமாக உன்னை வழிநடத்துவேன். சாத்தானால் அனுப்பப்பட்ட எண்ணமாகிய, “என் வாழ்க்கை மிகவும் குறுகியது, எனக்கு எதுவும் புரியவில்லை” என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்காதே. நீ எல்லா நேரங்களிலும் எனக்கு அருகில் வருவதற்கும், சாலையின் இறுதிவரை என் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் மட்டுமே நீ உன் இருதயத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ என் நிந்தனை மற்றும் எச்சரிக்கை வார்த்தைகளைக் கேட்கும்போது, உடனடியாக எழுந்திருந்து முன்னோக்கி ஓடு; நிற்காமல் என் அருகில் வா, மந்தையின் வேகத்திற்கு ஈடுகொடு, உன் கண்களால் நேராக நோக்கிப் பார். என் சமுகத்தில், நீ உன் தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அன்புகூர வேண்டும். ஊழியப் பாதையில், என் வார்த்தைகளை அடிக்கடி கருத்தில்கொள். சத்தியத்தைக் கைக்கொள்வதில், பலவீனமான இருதயத்தோடு இருக்காதே—ஒரு ஆண் மகனுக்கான மனவுறுதி மற்றும் தீர்மானத்துடன் பலமுள்ள இருதயத்தைப் பெற்றிரு; ஒரு வலிமையான இருதயத்தை உடையவனாய் இரு. நீ என்னை நேசிக்க விரும்பினால், நான் உன்னில் சாதிக்க விரும்பும் எல்லாவற்றிலும் நீ என்னைத் திருப்திப்படுத்த வேண்டும். நீ என்னைப் பின்பற்ற விரும்பினால், உன்னிடம் உள்ள அனைத்தையும், நீ விரும்பும் அனைத்தையும் நீ கைவிட வேண்டும்; ஒரு எளிமையான மனதுடன், நீ எனக்கு முன் பணிவுடன் கீழ்ப்படிய வேண்டும். மனம்போனபோக்கில் ஆராயவோ சிந்திக்கவோ வேண்டாம், மாறாக பரிசுத்த ஆவியானவருடைய கிரியையுடன் இணைந்து செல்.
இங்கே, நான் உனக்கு ஆலோசனை கூறுகிறேன்: நான் உனக்குள் போதித்திருக்கிற எல்லாவற்றையும் உறுதியாய்ப் பிடித்துக் கொள்ளும்படி கவனமாயிரு, மேலும் அதை கடைப்பிடிப்பதிலும் உறுதியாயிரு.

"மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை" என்பதிலிருந்து

Address

Mumbai

Alerts

Be the first to know and let us send you an email when 𝙂𝙤𝙙 𝙜𝙧𝙖𝙘𝙚 𝙨𝙚𝙚𝙠 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝙂𝙤𝙙 𝙜𝙧𝙖𝙘𝙚 𝙨𝙚𝙚𝙠 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝:

Videos

Share


Other Digital creator in Mumbai

Show All