FlashNews madurai

FlashNews madurai மதுரையின் முகவரி
FlashNews at Madurai"©2020
First news port in madurai from 2015

 #அவசியம்
15/01/2025

#அவசியம்

14/01/2025

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் பிடிக்க முடியாதபடி மாடுகள் மீது பவுடர் தூவி அழைத்து வந்த சிறுவனை கைது செய்ய உத்தரவுஅடுத்த ஆண்டு பங்கேற்க டோக்கனும் வழங்கப்படாது எனவும்,
பவுடர் தூவி அழைத்து வரப்படும் காளைகளுக்கு பரிசு கிடையாது.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை

14/01/2025

ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தகவல்.போட்டி முறைப்படுத்தப்பட்டு பல்வேறு மாற்றம் வளர்ச்சிகள் செய்யப்பட்டுள்ள என தெரிவித்துள்ளார் நூறு சதவீதம் போட்டியை முறையாக நடத்த காளைகளுக்கு ஆன்லைன் பதிவு டோக்கன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

14/01/2025

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆவேசம் அடைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவுகளை தள்ளி உள்ளே நுழைந்தனர் .

14/01/2025

ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட சிவகங்கை பாண்டி துறையின் 351 ஆம் எண் கொண்ட காளை பிடிமாடானது.
_

14/01/2025

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சிறந்த காளைக்கு டாக்டர் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ள நிலையில் ஏழு சுற்றுகளில் 26 பேர் காயமடைந்துள்ளனர் .

மாடுபிடி வீரர்கள் 13 பேர் மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர்

பார்வையாளர் மூன்று பேர் மொத்தம் 26 பேர் காயமடைந்துள்ளனர் .

மருத்துவ பரிசோதனையில்
25 காளைகள் தகுதி இழந்தது அவனியாபுரத்தில் 659 காலைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 25 காளைகள் தகுதி இழந்தது .

ஜல்லிக்கட்டு வாடி வாசலுக்கு 634 காளைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.

திருப்பரங்குன்றம் கார்த்திக் 11 காளைகளை அடக்கி முதலிடம் திருப்புவனம் முரளிதரன் 10 காளைகள்
அவனியாபுரம் கார்த்திக் 8 காளைகளை அடக்கி உள்ளனர்

தற்போது ஏழு சுற்று வரை போட்டிகள் நடைபெற்று உள்ளன

 #பேஜ்_வொர்க்
14/01/2025

#பேஜ்_வொர்க்

13/01/2025

அவனியாபுரம் ஜல்லிக் கட்டு போட்டியில் 1100 காளைகள் அவிழ்த்து விடப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை யையொட்டி

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு இன்று நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிர மடைந்துள்ளன வாடிவாசல் ஏற்பாடு செய் யப்பட்டுள்ள.
மதுரை மாநகர அவனியாபுரத்தில் நடை பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள காளைகளை அழைத்து வரும் உரிமையாளருடன் ஒரு நபரும் சரியாக காலை 05.00 மணிக்கு திருப்பர ங்குன் றம் ரோடு முல்லை நகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில்தங்களதுகாளை களை வரிசைப்படுத்தி முறையாக கொண்டு வர வேண்டும்.

100 வரையிலான டோக் கள் பெற்றவர்கள் காலை 05.00 மணி முதல் 06:00 மணிக்குள் அனுமதிக்கப் படுவர்.

101 முதல் 200 வரை டோக்கன் உள்ளவர்கள்காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும்,

201 முதல் 300 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் காலை 07.00 முதல் 08.00 மணி வரையிலும்

301 முதல் 400 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் தங்க ளது காளைகளை 08.00
வரையிலும்

401 முதல் 500 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் தங்க ளது காளைகளை 09.00 மணி முதல் 10.00 மணி வரையிலும்

501 முதல் 600 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் தங்க ளது காளைகளை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும்

601 முதல் 700 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் தங்க னது காளைகளை 11.00 மணிமுதல் 12.00 மணி வரையிலும்

701 முதல் 800 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் தங்க ளது காளைகளை மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரையிலும்

801 முதல் 900 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை மதி யம் 01.00 மணி முதல் 02.00 மணி வரையிலும்

901 முதல் 1000 வரையி லான டோக்கன் பெற்றவர் கள் தங்களது காளைகளை 02.00 ( 03.00 மணிவரையிலும்,

1001 முதல் 1100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 03.00 மணி முதல் 04.00 மணி வரையிலும் அனும திக்கப்படுவர்
அவனியாபுரம் ஜல்லிக் கட்டுக்கு தங்களது காளை களை கொண்டு வருபவர் கள்மாவட்டநிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி
டோக்கன்கள் மற்றும் காளை உரிமையாளர்க ளின் ஆதார் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அதை காவல்துறை மற்றும் கால்நடைதுறையும் இணைந்து கியூ ஆர் கோடு மூலம் ஆய்வு செய்த பின் னரே அனுமதிக்கப்படுவர் போலியான டோக்கன் களை பயன்படுத்தி நுழைய முற்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நட வடிக்கை மேற்கொள்ளப் படும்

காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது மது அருந்தி வருபவர்கள் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட டார்கள். மாட்

வெளியூரிலிருந்து அவ னியாபுரம் ஜல்லிக்கட்டு
காளைகளை அழைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காளைகளை வரிசைப்ப டுத்தி நிறுத்த வேண்டும். அதுவரை தாங்கள் அழைத்து வரும் காளை களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓர மாக கட்டி வைத்து பாது காக்க வேண்டும்.

வாடிவாசல் வழியே முறையாக அவிழ்த்து விடப்படும் காளைகளை செம்பூரணி ரோடு தண்ணீர் தொட்டி அருகே அமைக் கப்பட்டுள்ள காளைகளை பிடிப்பதற்கென ஒதுக்கப் பட்ட இடத்தில் வைத்து தங்களது காளைகளை பாதுகாப்பாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் பிடித்து செல்ல வேண்டும். மேலும் பொது மக்கள் யாரும் எவ்வித மான அசட்டையான செயல்களிலும் ஈடுபடக்கூ டாது என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

10/01/2025

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருகிற 14.01.2025-ம் தேதியன்றும் மற்றும் பாலமேட்டில் 15ஆம் தேதியும் , உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

08/01/2025

மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 அன்று மதுரையிலிருந்து மாலை 05.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 அன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.

ஒரு காளை, ஒரு மாடுபிடிவீரர் ஒரேயொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்.மதுரை...
29/12/2024

ஒரு காளை, ஒரு மாடுபிடிவீரர் ஒரேயொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஒரு காளை, ஒரு மாடுபிடிவீரர் ஒரேயொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். அந்தக் கிராமங்களுக்கு என தனித்தனியாக டோக்கன் பெற வேண்டும். ஒரே டோக்கன் பெற்று அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் அந்தவகையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அந்தந்த கிராம விழாக்குழுக்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையர் லோகநாதன், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பொதுமக்கள் அமரும் இடம், காளைகள் செல்லும் வழியில் அமைக்க வேண்டிய தடுப்புகள், மற்ற கட்டமைப்புப் பணிகளுக்கு உடனடியாக டெண்டர் விடப்பட்டு பணிகளைத் தொடங்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர் “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் மற்றும் வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடிவீரர்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பித்துப் போட்டிகளில் பங்கேற்க முடியும். ஆன்லைனில் காளைகளின் உண்மையான புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான இடங்களில் கேமரா பொருத்தப்படும். ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு பங்கேற்பாளர் மட்டுமே செல்ல முடியும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதிப் பெயர் சொல்லி காளைகளை அவிழ்க்கக்கூடாது. உரிமையாளர் பெயரை மட்டுமே சொல்ல வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஒரு காளை, ஒரு மாடுபிடிவீரர் ஒரேயொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். அந்தக் கிராமங்களுக்கு என தனித்தனியாக டோக்கன் பெற வேண்டும். ஒரே டோக்கன் பெற்று அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு தாவி விடாமல் 8 அடிக்கு இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மாடுபிடி வீரர்கள் ஊக்கமருந்து மது அருந்தி இருக்கக்கூடாது. காளைகளுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். காளையின் கொம்பில் ரப்பர் புஸ் வைக்க வேண்டும் என மனுக்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசு செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கொம்புகளில் ரப்பர் புஸ் வைப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க அரசுத்துறைகள் கால்நடைத்துறைக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது” என ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ”காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு நடைபெறும். அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு பரிசுகளும் வழங்குவதில்லை. ஒவ்வொரு ஊரிலும் நன்கொடையாளர்கள் வழங்கக்கூடிய பரிசுகள் காளை உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இல்லைஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் -ஆட்சியர் மதுரை மாவட்டத...
29/12/2024

மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இல்லை
ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் -ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் முறை இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் வரும் 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்ராம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஓர் வழக்கில் 2023-ஆம் ஆண்டு அக். 20- ஆம் தேதியன்றும், கடந்த 11- ஆம் தேதியன்றும் நீதி மன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி,மதுரை மாவட் டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் கைளால் அகற்றும் முறை நடைமுறையில் உள்ளதா? என்பதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் எவரும் வில்லை. ஈடுபட்டிருப்பதாகக் கண்டறியப்பட

இந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர் யாரேனும் ஊரகப் பகுதிகளில் இருந்தால், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு, மறுவாழ்வு சட்டம்- 2013, பிரிவு எண்.11-இன் படி தங்களது ஆட்சேபங்களை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வரும் 15 நாள்களுக்குள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

24/12/2024

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை துன்புறுத்தக் கூடாது.

மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.

-அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம்.

 #வந்தவை பேங்க் மேனேஜர் : வாங்குன கடனை எப்ப சார் கட்டுவீங்க...கட்ட முடியாது சார் கடன் பத்திரம் திருப்போரூர் முருகன் கோவி...
24/12/2024

#வந்தவை

பேங்க் மேனேஜர் : வாங்குன கடனை எப்ப சார் கட்டுவீங்க...

கட்ட முடியாது சார் கடன் பத்திரம் திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் லே போட்டுட்டேன்...
இனிமே நீங்க முருகன் கிட்ட தான் வசூல் பண்ணிக்கணும்....😂😂😂

நெட்டில் உலா வந்தவைஉண்டியல்ல விழுந்த iphone கோயிலுக்கு தான் சொந்தம்னு நியூஸ் பார்த்தேன். அதான் என்னோட Bank loan document...
24/12/2024

நெட்டில் உலா வந்தவை

உண்டியல்ல விழுந்த iphone கோயிலுக்கு தான் சொந்தம்னு நியூஸ் பார்த்தேன். அதான் என்னோட Bank loan documentsலாம் அந்த உண்டியல்ல போட்டுட்டு வந்துடலாம்னு இருக்கேன்

நீங்க அத பாத்தீங்களா...?
23/12/2024

நீங்க அத பாத்தீங்களா...?

22/12/2024

நாளை 23 மின்தடை

மதுரை பழங்காநத்தம் துணை மின்நிலையம் உயரழுத்த மின் பாதை யில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவள் ளுவர் நகர் முழுவதும், ஆர்.சி. தெரு ஒரு பகுதி, டி.பி.கே.ரோடு, சர வணா ஸ்டோர் முதல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வரை, யோகியார் நகர் பகுதி, தண்டல்காரன்பட்டி ஒருபகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்

21/12/2024

மதுரை விமான நிலையத்தில் இருந்து முதன்முறையாக சென்னைக்கு இரவுநேர விமான சேவை தொடங்கியது...

பயணிகளிடையே வரவேற்பு

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when FlashNews madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlashNews madurai:

Videos

Share

FlashnEwsமதுரை

online news 24 *7

அனைத்து செய்திகளும் தகவலும் ஒரே இடத்தில்....இணையத்தின் மூலம் இணைந்திருங்கள்