“You will begin to touch heaven, Jonathan, in the moment that you touch perfect speed. And that isn’t flying a thousand miles an hour, or a million, or flying at the speed of light. Because any number is a limit, and perfection doesn’t have limits. Perfect speed, my son, is being there.”
-Richard Bach
உளவியலாளர் கார்ல் யுங் அவர்கள் ஆசிரியர்களைப்பற்றி குறிப்பிடுகையில், "வாழ்வின் பின்னாளில் அறிவுக்கூர்மையான சில ஆசிரியர்கள் நம் நினைவுக்கு வரலாம். ஆனால், எந்த ஆசிரியர் நம் மனதின் ஆழத்து உணர்வுகளைத் தீண்டினாரோ அவரைத்தான் நாம் நன்றியுடன் நினைவுகூர்வோம். ஆசிரியரால் மட்டுமே ஆறக்கூடிய காயங்கள் மனிதருக்கு உண்டு. குழந்தைகளின் கல்விக்கு பாடத்திட்டம் என்பது முக்கியமானதுதான்; ஆனால், வளரும் தாவரத்திற்கும் குழந்தைக்கும் அரவணைப்பு என்பது மிகமிக முக்கியம்" என்றுரைக்கிறார்.
இசையும் நடனமும் ஆப்ரிக்க நிலத்தின் இரட்டை ஆன்மாக்கள். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் தன் வகுப்புக்கு வரும் குழந்தைகளை உற்சாகமிகு உடலசைவுகளால் வரவேற்கிறார் இந்த ஆசிரியர். குழந்தையும் ஆசிரியரும் சேர்ந்து எதிரெதிரே நின்று ஒரே அசைவுகளில் நடனமாடி, கைகளைத் த
தும்பி இதழ் குறித்து தோழமை கரு.பழனியப்பன் அவர்கள் பேசிய அறிமுகச் சொற்கள். சிறாரிதழாகத் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து தொடர்வதற்குத் துணைநிற்கும் எல்லா பரிந்துரைகளையும் கரங்கூப்பி பணிகிறோம். உங்கள் பகிர்தலால் உயிரசைகிறது தும்பி.
---
தும்பி சிறார் மாத இதழ்
நூலரங்கு எண் : 392
சென்னைப் புத்தகத் திருவிழா
---
(குறிப்பு: இரு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத் திருவிழாவில் கரு.பழனியப்பன் பேசிய உரையின் சிறுபகுதி)
“அதிநவீனத் தொழில்நுட்பமுடைய பொம்மைகள் நம் குழந்தைகளுக்கு அதிக மகிழ்வைத் தரக்கூடும். ஆனால் குழந்தைகள் அந்த பொம்மைகளில் மட்டுமே தங்கள் மனதை முழுமையாகச் செலுத்தினால் அது பரிதாபம். பழைய பொம்மைகள் உலகம் முழுவதும் வழக்கொழிந்து போவதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நவீன குழந்தைகள் பழைய பொம்மைகளைப் புறக்கணிப்பதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். அவர்கள் புதிய மற்றும் பழைய பொம்மைகளுடன் தொடர்ந்து விளையாடுவதையே நான் விரும்புகிறேன். வாங்குபவர்கள் விளையாடிச் சிரிக்கும்படி எனது பொம்மைகள் இருக்க வேண்டும். எனது பொம்மைகளை பெரியவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்க விரும்புகிறேன். சாதாரண மனிதர்களும் நாட்டுப்புறக் கதைகளுமே என் பொம்மைகளுக்கானத் தூண்டுகோல்”
~ மாசாகி ஹிரோய் (மரப்பொம்மைகளை உர
நினைவுகளின் மீள்கை
நினைவுகளின் மீள்கை
குழந்தைமைக்கும் முதுமைக்கும் இடையில் நிகழ்கிற அன்புறவின் உயிர்ப்பைச் சொல்கிற மிக அழகிய அனிமேசன் குறும்படம் ‘Napo’. கடந்தகால மற்றும் நிகழ்கால நினைவுகளை மறந்துவிட்ட தனது தாத்தாவின் ‘மறதி’ நோயைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு சிறுவனின் மனநிலையைக் காட்சிப்படுத்தியுள்ள இப்படத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை. முழுக்க முழுக்க பின்னணி இசையிலேயே முழுப்படமும் நகர்கிறது. முதுமையும் குழந்தைமையும் இணைகிற புள்ளியில்தான் இவ்வாழ்க்கை அதன் முழுமையின் இரகசியத்தை பொதிந்து வைத்திருக்கிறது.
புகைப்படங்கள் நிறைந்த பழைய ஆல்பத்தில் உள்ள படங்களைக்கூட நினைவுகொள்ள இயலாத தன்னுடைய தாத்தாவின் பழைய நினைவுகளை அச்சிறுவனின் ஓவிய வரைகோடுகள் சிறுகச்சிறுக மீட்கும் காட்சியில் நம் அகத்தில் உண்டாகும் உணர்வெழுகையை வார்த்தைப்படுத
மாடு பற்றிய கேள்விக்கு, மாட்டைக் கட்டிவைத்திருந்த தென்னை மரத்தைப் பற்றி பதில் எழுதிய ஒரு குழந்தையின் கதையை நாம் கேட்டிருக்கிறோம். விடை தெரியாத போது, விடைத்தாளில் தனது சாமர்த்தியத்தை காட்டியது அக்குழந்தை. ஆனால் இங்கே ஒரு கேரளக் குழந்தை அதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று தன் மழலையை வெளிப்படுத்துகிறான்.
மழலைமொழி பேசும் இந்தச் சிறுவனின் பெயர் டேனியல் மேத்யூ. செல்லமாக ‘மாத்துக்குட்டி’. திருப்புண்ணித்துராவில் உள்ள ஒரு பள்ளியில் மாத்துக்குட்டி படித்து வருகிறான். மாத்துக்குட்டியின் ஆசிரியர் கேரளாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசச் சொல்லியிருக்கிறார். ‘கேரளா நம் நாடு’ என்று குழந்தை துவக்கத்தில் சாதாரணமாகவே பேசத் தொடங்குகிறான். ‘கேரளாவில் கடல் இருக்கிறது’ என்று உரத்த குரலில் சொன்னபிறகு, இவன் தன்னுடைய மனதுக்குத் தோன்றுவதைச் ச
முதல் வெளிச்சம்
பிறவியிலேயே பார்வையற்ற இரு குழந்தைகள், கண்பார்வை பெற்று இந்த உலகத்தை முதன்முதலாகப் பார்க்கும் தருணம் எவ்வளவு மகத்தானது! இக்காணொளி அத்தகையதொரு கருணைத்தருணத்தை அகத்துக்குத் தருகிறது. ‘இரக்கம்’ என்ற ஒற்றைக்கரு போதும், இவ்வுலகம் இழந்த அத்தனையையும் மீட்க!
குழந்தைகளான சோனியாவும் அனிதாவும் இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் பிறக்கும்போதே பார்வையற்றவர்களாகப் பிறந்தவர்கள். வறுமையில் வாழ்ந்த அக்குழந்தைகள் அக்குறைபாட்டுடன் வளர்ந்துவந்த சூழலில் ஒருநாள் அந்த அதிசயம் நிகழ்கிறது. அந்த அதிசயம் என்பது ‘15 நிமிட அறுவை சிகிச்சை’ ஆகும். அது இரு குழந்தைகளின் பார்வையையும் மீட்டெடுக்கிறது. “அம்மா என்னால பாக்க முடியுது! அம்மா என்னால பாக்க முடியுது!” என்ற வார்த்தைகள்... அக்குழந்தைகளின் தாயைக் கண்ணீர்விட்டு அழவைத்து கடவுளைத் தொழவைக்கிறது.
கண் அறு
எரியும் ஒரு மரத்துண்டை அணைப்பதற்கு எவ்வளவு நீர் தேவையோ அதைவிட அதிக நீர் ஓர் இலைத்தளிருக்குத் தேவை அல்லவா? அதற்குள் எரியும் தீ அல்லவா அந்த நீரை உண்கிறது?
~ நித்ய சைதன்ய யதி
தும்பி இதழின் 49வது கதையான ‘ரோசியின் தொப்பி’ கதைகுறித்து நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் ‘பிரித்திவிராஜ் சேகர்’ பகிர்ந்த கதைசொல்லல் காணொளி இது. இந்த நோயச்சத் தனிமைக்காலத்தில் புத்தகங்கள் படித்து, அதன் வாசிப்பு அனுபவத்தைக் காணொளிகளாக பொதுத்தளத்தில் பகிர்ந்து நிறைவுகொள்ளும் சமகாலப் பெருவிசையில் தும்பிக்கும் வாய்ப்பமைந்ததில் நிறைமகிழ்வு. ஒரு சிறுமி தொலைக்கும் தொப்பியின் பயணத்தை அழகுற எடுத்துரைக்கும் ஓவியக்கதை இது. அந்தத் தொப்பி சந்திக்கும் விதவிதமான சூழ்நிலைகள் குறித்து பிரித்திவிராஜ் சொல்கிற மழலைமொழி ரசிக்கவைக்கிறது. கதையுலகத்தின் விரிநிலம் எல்லா குழந்தைகளையும் தனைநோக்கி ஈர்க்கிறது. தும்பிக்காக காணொளியை அனுப்பித்தந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு எங்கள் நெஞ்சத்து நன்றிகள்!
இதழ் பெற: http://thumbigal.com/howtoget/
காலத்தின் நல்லூழ்
தமிழ்ச்சூழலில் ஏராளமான குழந்தைகளின் அகவுலகத்தில் நல்லதிர்வு தருகிற கதைகளை, தேடித்திரட்டி கொண்டுவந்து சேர்த்த மூத்த ஆசிரியரும் படைப்பாளியுமான யூமா வாசுகி அவர்களிடமிருந்து, தும்பி சிறார் இதழுக்கான ஆசிச்சொற்கள் கிடைத்திருப்பது காலத்தின் நல்லூழ் என்றே கருதுகிறோம்.
ஏதோவொருவகையில் தும்பியின் இதுவரையிலான பயணத்தில், வாண்டுமாமாவுக்குப் பிறகு கிடைத்திட்ட ஒரு ஆசிரியக்கரம் என்றே யூமா அவர்களை மனதுள் கொண்டாடித் தீர்க்கிறோம் நாங்கள்.
'கதைகள் வழியே விரியும் ஓர் உலகவானம் எல்லா குழந்தைக்கும் பொதுவானது; பிரிவினைக்கோடுகள் அங்கு இல்லாமலாகிறது' என்பதை தீர்க்கமாக நம்புகிற தும்பியின் சிறகசைப்பு யூமாவின் நல்வாழ்த்தால் இன்னும் உயிர்பெறுகிறது.
Thumbi @Chennai Book fair 2021
A tiny glimpse into our stall at the Chennai book fair happening now at YMCA grounds. Do drop in at the stall and experience an euphoria while immersing yourself and your kids amidst a world of children's magazines.
<3