ERODE - The green city

ERODE - The green city ERODE - The Green City page
(2)

14/07/2024
16/09/2019

Don't miss it🚩
23/05/2019

Don't miss it🚩

Indian grows nearly 50 type of turmericSo what makes Erode's variety so unique?
31/03/2019

Indian grows nearly 50 type of turmeric
So what makes Erode's variety so unique?

Erode’s unique slender turmeric gets a GI tag for its distinctive fragrance and colour

கோவையைச் சேர்ந்த நர்மதா மூர்த்தி எனும் இளம்பெண் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு, அதன் முக்கியத்துவம் கருதி ச...
12/03/2019

கோவையைச் சேர்ந்த நர்மதா மூர்த்தி எனும் இளம்பெண் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு, அதன் முக்கியத்துவம் கருதி சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இப்பதிவு இடப்பட்ட 16 மணி நேரங்களுக்குள்ளாகவே ஃபேஸ்புக்கில் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களால் பகிரப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பயங்கரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில், தனது தாயார் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசியதை நர்மதா மூர்த்தி, உரையாடல் வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“இந்த மோசமான நிகழ்வு தொடர்பான செய்தி வெளியானபோது, பாரம்பரியமான ‘கோயம்புத்தூர் குடும்பத்தைச்’ சேர்ந்த பெண்ணான எனக்கு என் குடும்பத்தாரிடம் இருந்து, “ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லாதே, அது பாதுகாப்பானது அல்ல” என்பது போன்ற வழக்கமான அறிவுரைகள் அடங்கிய போன் கால்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக என்னிடம் பேசிய என் அம்மா இப்படி கூறினார் ! :

“நீ வெளியில் தங்கி இருக்கிறாய். உன்னை ஒரு வலிமையான, உறுதியான பெண்ணாக வளர்த்துள்ளதாகவே நம்புகிறேன்! எந்த நிலையிலும், உன் தந்தையும், நானும் உனக்கு பக்கபலமாய் இருப்போம்! யாரேனும் உனது படங்களையோ, வீடியோவையோ வைத்து மிரட்டல் விடுத்தால், எதற்கும் கவலைப்படாமல் ‘உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என கூறிவிடு. ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை!

ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் பிரச்னையை வருமெனில் அதை எதிர்கொள்ள ஒரு பெற்றோராக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்!

உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!”

என் அம்மா என்னிடம் இப்படி பேசிய போது, எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது! இத்தகைய நம்பிக்கையும், பாதுகாப்புமே ஒரு குடும்பம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய விலைமதிப்பில்லாத ஒன்று.

எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை தைரியமான பெண்ணாக இருங்கள். பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களின் ஆதரவைவிட அவர்களுக்கு வேறெதும் வலிமையாக இருந்துவிட முடியாது.”

இவ்வாறு நர்மதா மூர்த்தி தனது ஃபேஸ்புக் பதிவினை நிறைவு செய்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பயங்கரம் தொடர்பான செய்திகள் பூதாகரமாகியுள்ள சூழலில், பெற்றோராக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக நாம் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளோடு தோள் நிற்பதுதான் என்பது நர்மதா மூர்த்தி போன்ற இளம்பெண்களின் பதிவுகள் வாயிலாவது இச்சமூகம் உணரட்டும்.

Finally happened 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💥💥💥💥💣💣🌿
07/03/2019

Finally happened 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💥💥💥💥💣💣🌿

23/01/2019
கனவுகள் மெய்ப்பட 💪💪💪🎉🎉
21/01/2019

கனவுகள் மெய்ப்பட 💪💪💪🎉🎉

🔥 Close Enough 🔥 🐂

30/07/2018

11/07/2018

  to     91.1
06/07/2018

to 91.1

On Thursday, Sun Network’s venture Suryan FM has launched three new stations in Vellore, Erode, and Salem. The new radio station in Vellore is aired on the frequency of 93.9. In Erode, it is aired with the frequency 91.9 and in Salem of 93.9. Suryan FM is proud and happy to embark on this new …

Enjoy the raid😀🚁🚁🚁
03/04/2018

Enjoy the raid😀🚁🚁🚁

Job Fair at Erode 🎉👩‍🎓 register your resume
20/01/2018

Job Fair at Erode 🎉👩‍🎓 register your resume

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெ....

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
20/01/2018

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோடு: ஈரோட்டில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும், 22 முதல், 29 வரை மேட்டூர் ரோட்டில், திருச்சி கபே அருகில், ஜெ....

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோட்டை சேர்த்து மத்திய அரசு 🤗
19/01/2018

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோட்டை சேர்த்து மத்திய அரசு 🤗

“ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோட்டை சேர்த்தது மத்திய அரசு! ”

ஈரோடு, சிவகிரியில் சண்டைச்சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்.பொங்கல் என்றால் நம்நினைவுக்கு வருவது தமிழர்களின் வீரவிளையாட...
10/01/2018

ஈரோடு, சிவகிரியில் சண்டைச்சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்.
பொங்கல் என்றால் நம்நினைவுக்கு வருவது தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. ஆனால், அதிக பேருக்கு நினைவுக்கு வராத ஒரு விளையாட்டு சேவல்கட்டு. குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம், கரூர், திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு காலத்தில் சேவல்சண்டை விளையாட்டு பிரபலம். தற்போது தமிழ்நாட்டில் சேவல்சண்டைக்கு அனுமதி இல்லை. பண்டிகை நாள்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று, விதிமுறைகளுடன் சேவல்சண்டை நடத்தப்படுகிறது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் அதற்கு அனுமதி உண்டு. பாரம்பர்யம் மிக்க தமிழ்நாட்டு சேவல்களுக்கு கர்நாடகத்தில் வரவேற்பு அதிகம் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் சேவல்பண்ணை வைத்து சண்டைக்கோழிகளை வளர்த்து கர்நாடக வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவருகிறார்கள். அப்படியான சேவல்பண்ணையாளர்களில் ஒருவர்தான் சிவகிரி சீனு. ‘ஈரோடு, சிவகிரியில் சண்டைச்சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். ‘ஓர் அதிகாலை நேரம் நண்பர் உதவியுடன் களத்துமேட்டில் இரண்டு சேவல்களை மோதவிட்டு, சண்டைப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவருடன் பேசினோம்.

''ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம்போல சேவல்கட்டும் தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டில் ஒன்று. அதுவும் குறிப்பாக ஆடி, தை மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சேவல்சண்டை நடப்பது வழக்கம். என்னதான் காவல்துறை கட்டுப்பாடு விதித்தாலும் கண்டும்காணாமலும் தமிழ்நாட்டில் சேவல் சண்டை நடந்துகொண்டுதான் உள்ளது. பண்டிகை நாள்களில் நீதிமன்ற அனுமதியுடன் சிலவிதிமுறைகளைக்கொண்டு சேவல் சண்டை நடக்கும். எனது பண்ணையில் 200 சேவல்கள் உள்ளன. ரூ.5000 முதல் 50,000 ரூபாய் வரை சேவல்கள் விலைபோகும். கர்நாடக மாநிலத்தில் சேவல்கட்டுக்குத் தடையில்லை. அதனால், எனது பண்ணையில் உள்ள சேவல்களைக் கர்நாடக மாநிலத்தில் உள்ள சேவல்சண்டை பிரியர்கள் வந்து வாங்கிப்போகிறார்கள்.

ஆடுகளத்தில் அஞ்சி ஓடமால் எதிர்த்து நின்று வெற்றி பெற சேவல்களுக்குப் பயிற்சி அவசியம். குஞ்சுப் பருவத்திலிருந்தே தினந்தோறும் சேவல்களுக்குப் பயிற்சிகொடுத்து வருகிறோம். சேவல்களுக்கு மட்டுமல்ல சேவல்களை ஆடுகளத்தில் மோதவிடும் ஜாக்கிகளுக்கும் பயிற்சி முக்கியம். கத்தி கட்டிய சேவல்களை லாவகமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். பட்சி சாஸ்திரம் என்கிற ஆரூடம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த சாஸ்திரம் தெரிந்தவர்களை அழைத்துவந்துதான் கட்டுச்சேவல்களைப் பலரும் தேர்வு செய்வார்கள். நிறம், உடல்கட்டு, உயரம் என்று அங்கலட்சணம் பல உண்டு. நிறைய சேவல்களை அடித்து வெற்றிபெறும் சேவல்கள் ‘ஹீரோ' அந்தஸ்தில் பார்க்கப்படும். நான் நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து அந்த வெற்றிச் சேவலை வாங்கிப்போவார்கள். 50,000 ரூபாய்க்கு மேல் விலைபோகும் ஹீரோ சேவல்கள் இங்கு நிறைய உண்டு.

இதில் இனக்கலப்பு சேவல்கள் பல இருந்தாலும், சுத்தமான நாட்டுரக சேவல்களைத்தான் சண்டையில்விட விரும்புவார்கள். காகம், மயில், வல்லூறு, கீரி, நூலான், செம்பை, கறுப்பு, பூதை, சுள்ளி, ஆந்தை, கோழி என்று நிறங்களை வைத்து பிரிக்கப்பட்ட பல நாட்டுரகங்கள் சண்டைக்கோழியில் உண்டு. ஆடுகளத்தில் அசராமல் நின்று எதிர்சேவலிடம் மோதி, தொடர்வெற்றிபெற்ற சேவல்களின் காலில் தங்க வளையம் போட்டு கௌரவம் செய்யும் வழக்கம் இங்கு இருந்துள்ளது. பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீன்தார் கோப்பண்ண மன்றாடியார் சேவல் சண்டையில் ஆர்வம் கொண்டவர். 1,000 சேவல்கள் கொண்ட சேவல்பண்ணை ஒன்றை தனது ஜமீன் அரண்மனையில் வைத்திருந்தார். அரண்மனை வளாகத்தில் திருவிழாபோல் சேவல்சண்டை நடத்தி வந்துள்ளார். இவ்வளவு பாரம்பர்யமிக்க சேவல்சண்டை தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்று. எனவே, விதிமுறைகளுக்கு உள்பட்டு இங்கு சேவல்சண்டைக்கு நிரந்தர அனுமதி வழங்கினால், ஜல்லிக்கட்டு மாதிரி சேவல்கட்டும் பேசப்படும்'' என்றார் சீனு. Via vigatan tamilmagazine

Any guess about this place?
03/01/2018

Any guess about this place?

Address

Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ERODE - The green city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share