17/02/2024
பரிமளாமணாளன் என்கிற தோழர் சி.ஆரோக்கியசாமி இன்று காலை இயற்கை எய்தினார். தன் ஓய்வு காலத்தில் விடியல் பதிப்பகத்துடன் இணைந்து பணியாற்றி விடியலின் ஒரு தூணாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
தொடக்க காலத்தில் ஈழ விடுதலை அரசியலில் பங்காற்றியவர். சமயம், தமிழர் தொன்மை, பண்பாடு, மொழி, சிறு தெய்வ வழிபாடு, திராவிட அரசியல் வரலாறு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
தான் ஏற்றுக் கொண்ட கொள்கையையும், பல வருட வாசிப்பின் மூலமும் அனுபவத்தின் மூலமும் அவர் பெற்ற அறிவையும் அனைவருக்கும் கடத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர். அதன் அடிப்படையிலேயே விடியலுடன் இணைந்து நூல்களை வெளியிட்டார்.
1. தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்
2. தமிழ்நாடு: தொன்மையும் தனித்தன்மையும்
3. கடவுளை கேள்விக்குள்ளாக்கும் மொழி
4. முல்லைத் திணையின் அந்திமக் காலம்
வள்ளுவரும் வள்ளலாரும் தமிழர் உள்ளம் தோறும் இல்லம் தோறும் குடியமர வேண்டும் என்று விரும்பினார்.
அவர் ஏற்றுக் கொண்ட சமுக மாற்றக் கொள்கைகளை அனைவருக்கும் எடுத்துச் செல்லவதன் மூலம் தோழரின் நினைவைப் போற்றுவோம்.