Kowsalya Tamizhachi

Kowsalya Tamizhachi அரசியல்,சினிமா,விளையாட்டு மற்றும் ஆன்மீக தகவல்கள்

எம்.ஜி.ஆர் முடிசூடா மகுடனின் களம்!! அரசியல் மீது அவர் கொண்ட பற்று!!
17/01/2025

எம்.ஜி.ஆர் முடிசூடா மகுடனின் களம்!! அரசியல் மீது அவர் கொண்ட பற்று!!

News4 Tamil provides Latest Tamil News in Online.Local News,Political News,Sports News and Cinema News in Tamil

நரம்பு தளர்ச்சியை வீட்டிலிருந்து குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்
14/01/2025

நரம்பு தளர்ச்சியை வீட்டிலிருந்து குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்

நரம்பு தளர்ச்சியை வீட்டிலிருந்தே குணப்படுத்தும் டிப்ஸ்

விருமாண்டி படத்துல நடிச்சும்.. சினிமா வேண்டாம் என முடிவெடுத்த பசுபதி.. காரணம் கேட்டு கமல் செஞ்ச மேஜிக்..தமிழ் சினிமாவில்...
13/01/2025

விருமாண்டி படத்துல நடிச்சும்.. சினிமா வேண்டாம் என முடிவெடுத்த பசுபதி.. காரணம் கேட்டு கமல் செஞ்ச மேஜிக்..

தமிழ் சினிமாவில் மற்ற எந்த ஒரு கலைஞருக்கும் இல்லாத திறமை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும் ஒருவர் தான் உலக நாயகன் கமலஹாசன். தான் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய திரைப்படங்களிலேயே நிறைய புதுமைகளை புகுத்தியதுடன்…

தமிழ் சினிமாவில் மற்ற எந்த ஒரு கலைஞருக்கும் இல்லாத திறமை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும் ஒருவர் தான் உலக நாயகன் கமலஹாசன். தான் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய திரைப்படங்களிலேயே நிறைய புதுமைகளை புகுத்தியதுடன் மட்டுமில்லாமல் பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்குவது, வெளிநாட்டு திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவில் பயன்படுத்தி பார்ப்பது என எப்போதும் ஏதாவது ஒன்றை புதிதாக செய்து கொண்டே இருப்பார்.

இது போக நடிகனாக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் இயக்கிய சில திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஹேராம் திரைப்படம் இன்று வரையிலும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படமாக இருக்க அவரது இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படமான விருமாண்டியையும் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது.

நடிக்குறத நிறுத்திடலாம்

விருமாண்டி படத்தின் திரைக்கதையில் ஒரு புதிதான ரூட்டை பயன்படுத்தி இருந்த கமலஹாசன் அதில் நடித்த அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரங்களை கொடுத்திருந்தார். அந்த வகையில் கமலுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள பசுபதியின் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அவரது வில்லத்தனம், விருமாண்டி படத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டிருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னரும் பசுபதி திரைப்படங்களிலேயே நடிப்பதை நிறுத்தி விடலாம் என்றும் முடிவு செய்தது ஏன் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

இது பற்றி ஒரு நேர்காணலில் பசுபதி பேசுகையில், “விருமாண்டிக்கு பின்னர் நான் நடித்த படங்களில் அதே வேஷ்டி, சட்டை தான். ஹிட்டான கதாபாத்திரத்திலேயே தொடர்ந்து 5 படங்கள் வரை நடித்ததும் எனக்கு போரடித்து விட்டது. அப்போது கமல் சாரை சந்தித்த சமயத்தில், ‘எப்படி வெள்ளை வேஷ்டி சட்டையில் நிறைய வேரியேஷன்களை கொடுக்க முடியும். எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைக்கிறேன்‘ என்று புலம்பினேன்.

கமல் கொடுத்த வாய்ப்பு

அப்போது தனக்கும் அப்படி நிறைய முறை தோன்றியதாக கூறிய கமல், அதை தாண்டி வர வேண்டும் என்றும் சில அறிவுரைகளை கூறினார். இந்த சம்பவம் நடந்து 20 நாட்கள் கழித்து கமல் சார் நிறுவனத்தில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்காக, அதுவும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் செய்ய அழைப்பு வந்தது” என பசுபதி கூறினார்.

அதன் பின்னர் கமலுடன் மட்டுமில்லாமல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் கதாபாத்திரங்களில் நிறைய வித்தியாசத்தை காட்டுவதையும் பசுபதி தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீனாவிடம் சில்மிஷம்; மண்டையை உடைத்த விஜயகாந்த்! தயாரிப்பாளர் கூறிய தகவல்!பிரபல தயாரிப்பாளர் டி சிவா, நடிகர் விஜயகாந்த் ந...
03/01/2025

மீனாவிடம் சில்மிஷம்; மண்டையை உடைத்த விஜயகாந்த்! தயாரிப்பாளர் கூறிய தகவல்!

பிரபல தயாரிப்பாளர் டி சிவா, நடிகர் விஜயகாந்த் நடிகை மீனாவை காப்பாற்றிய சம்பவம் குறித்து அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்களாலும், கேப்டன் என அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இந்த பெயருக்கு ஏற்ற போல், ஆளுமை மிக்க மனிதராகவும் இருந்தவர். நடிப்பை தவிர்த்து வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். அதேபோல் மிகவும் மனிதாபிமானமிக்க மனிதராகவும் பார்க்கப்படுகிறார். தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவி செய்துள்ள விஜயகாந்த், ஏராளமான ஏழைகளின் பசியாற்றிய புண்ணியவானாக உள்ளார்.

அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில், சமபந்தி விருந்து என்கிற முறையை அறிமுகம் செய்தவரும் இவரே. தினமும் தான் சாப்பிடும் உணவைப் போல் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என நினைத்து அனைவருக்கும் கறிசோறு போட்டார். இதன் காரணமாகவே மற்ற படப்பிடிப்புகளுக்கு செல்லாமல், விஜயகாந்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்ற பலர் ஆசை படுவார்கள்.

இவருடைய உயர்ந்த எண்ணங்களினாலும், செயலாலும் தான் இன்று பல ரசிகர்களால் ஒரு கடவுள் போன்றே பார்க்கப்படுகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெற்றது. அங்கு விஜயகாந்துக்கு நினைவிடம் நிறுவி ஒரு கோவில் போல, ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

ஏராளமான ரசிகர்கள் தினமும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று வணங்கி விட்டு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு நாளும், மதியம் ஒருவேளை மட்டும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் டி சிவா பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில், நட்சத்திர கலைவிழா நடைபெறும் போது விஜயகாந்த் ஒரு அசம்பாவிதத்தில் இருந்து நடிகை மீனாவை காப்பாற்றிய தகவலை கூறியுள்ளார். நட்சத்திர கலைவிழாவை விஜயகாந்த் தனி ஆளாக நின்று அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாராம். அப்போது மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும்போது, அவர்கள் தங்கி இருந்த ஓட்டல் முன்பு பிரபலங்களை பார்ப்பதற்காக சுமார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி விட்டார்களாம். சரியான போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார், ஆகியோர் நடிகைகளின் லக்கேஜ்களை பேருந்தில் ஏற்றுக் கொண்டிருந்தார்களாம். ஹெல்மெட் போட்டு கொண்டு அங்கு வந்த நபர் ஒருவர் நடிகை மீனா அருகே வந்து நின்று, அவரிடம் மிகவும் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். அந்த விஷயத்தை விஜயகாந்த் கவனித்துவிட்ட நிலையில், வேகமாக அந்த நபர் பக்கத்தில் வந்த விஜயகாந்த் ஹெல்மெட்டை அப்படியே தூக்கி விட்டு, மண்டையில் ஓங்கி ஒரு அடி அடிக்க... அந்த நபருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டி உள்ளது. பின்னர் அங்கு தள்ளு முள்ளில் ஈடுபட்ட பலர் பயந்து பின்வாங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகைகளும் பத்திரமாக பேருந்தில் அழைத்து செல்ல பட்டார்களாம்.

பாசமுள்ள பாண்டியரே... கேப்டன் பிரபாகரன் ஹிட் பாடல்: விஜயகாந்துக்காக எழுதப்பட்டது இல்லையா?கேப்டன் விஜயகாந்தின் 100-வது பட...
30/12/2024

பாசமுள்ள பாண்டியரே... கேப்டன் பிரபாகரன் ஹிட் பாடல்: விஜயகாந்துக்காக எழுதப்பட்டது இல்லையா?

கேப்டன் விஜயகாந்தின் 100-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து கேப்டன் என்ற அடைமொழியை பிரபலமாக்கியது.

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், பல ஹிட் படங்கள் வெளியாகி இன்றும் அவர் பெயர் சொல்லும் படங்களாக இருந்தாலும கேப்டன் பிரபாகரன் என்ற படம் அவருக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம்.

சினிமாத்துறையை பொருத்தவரை ஒவ்வொரு நடிகருக்கும் 50- மற்றும் 100-வது படம் மிகவும் முக்கியமான படமாக அமைய வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக முன்னணி நடிகர்கள் என்றால் அவர்களை விட அவர்களது ரசிகர்கள் தான் பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பார். ஆனால், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஆகியோருக்கு 100-வது படம் சிறப்பான வெற்றியை கொடுக்கவில்லை.

இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்தின் 100-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து கேப்டன் என்ற அடைமொழியை பிரபலமாக்கியது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய இந்த படத்தில், ரூபினி, சரத்குமார், லிவிங்ஸ்டன், காந்திமதி, ரம்யா கிருஷ்ணன், ஆகியோருடன் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லமல், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் வரும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ரம்யாகிருஷ்ணன் ஆடிய, ஆட்டமா தேரோட்டமா பாடல், மற்றும் பாசமுள்ள பாண்டியரே ஆகிய இரு பாடல்களும் இன்றும் காலம் கடந்து நிலைத்திருக்கிறது. ஆனால் பாசமுள்ள பாண்டியரே பாடல் விஜயகாந்த் படத்திற்காக எழுதப்பட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும. இளையராஜா இசையில கங்கை அமரன் எழுதிய இந்த பாடல்,

அதே சமயம் இந்த படத்தில் நடித்த விஜயகாந்த்க்கும் இந்த பாடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த படத்தில் விஜயகாந்த் தான் ஹீரோ என்றாலும், இந்த பாடலில் மன்சூர் அலிகான், லிவிங்ஷ்டன் ஆகியோர் தான் இருப்பார்கள் பாடலுக்கு இடையில், விஜயகாந்த் காட்சிகள் வரும். அப்படியென்றால் இந்த பாடல் யாருக்கான எழுதப்பட்டது என்பது தெரியுமா?

அந்த காலத்தில் கங்கை அமரன் பாடல்கள் எழுதினால், தனது அண்ணன் பாவலர் வரதராஜனை ஒரு இடத்திலாவது இடம்பெறும் வகையில், எழுதிவிடுவார். அந்த வகையில் எழுதியது தான் இந்த பாடல். அவர் தனது அண்ணன், பாவலர் வரதராஜனை மனதில் வைத்து, பாசமுள்ள பாண்டியரே, பாட்டு கட்டும் பாவலரே என்று எழுதியிருந்தாலும், இது விஜயகாந்துக்கான எழுதப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் மதுரைக்காரர் என்பது தான்.

ரஜினி வெறியாட்டம்.. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. மூன்று முடிச்சு ஒரு பார்வை!தமிழ் சினிமாவை தவிர்க்க முடியாத உச்ச நட்ச...
29/12/2024

ரஜினி வெறியாட்டம்.. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. மூன்று முடிச்சு ஒரு பார்வை!

தமிழ் சினிமாவை தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா கலைஞர்களின் கலைக்கூடம் என்பதை நிரூபிப்பதற்காக கமல்ஹாசன் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

தமிழ் நடிகையாக உருவெடுத்து இந்தியா முழுவதும் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ஸ்ரீதேவி. இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இருந்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் அதுதான் மூன்று முடிச்சு.

இயக்கத்தில் சிகரத்தை தொட்ட அசைக்க முடியாத இயக்குனராக கே.பாலச்சந்தர் இருந்து வந்த காலம் அது. ஸ்டைலிங் அடையாளமாக இன்று வரை ரஜினி இருந்து வருகிறார் ஆனால் ரஜினியை முழுமையாக பயன்படுத்திய திரைப்படங்கள் குறைவுதான்.

மூன்று முடிச்சு திரைப்படத்தை பொருத்தவரை திரைக்கதையை முழுமையாக தன்வசமாக்கியவர்கள் இருவர் ஒருவர் ரஜினிகாந்த் மற்றொருவர் ஸ்ரீதேவி. கமல்ஹாசன் ஸ்ரீதேவி இருவரும் காதலிப்பார்கள் ரஜினி ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிப்பார். கமல்ஹாசன் இறந்து போக ரஜினியின் வில்லத்தனம் ஸ்ரீதேவியின் மீது வெளிப்பட ஆரம்பிக்கும்.

ரஜினிக்கு முட்டுக்கட்டை போடும் அளவிற்கு ஸ்ரீதேவி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். முக்கோண காதல் கதையாக திரைக்கதை ஓடிக் கொண்டிருக்க திடீரென ஸ்ரீதேவி ரஜினிக்கு தாயாக மாறிவிடுவார். ரஜினியின் தந்தைக்கு இரண்டாவது மனைவியாக ஸ்ரீதேவி திருமணம் செய்து கொள்ள ரஜினி உச்ச கட்டத்திற்கு சென்று விடுவார்.

ரஜினியின் ஒவ்வொரு அசைவுகளிலும் மிகப்பெரிய வில்லத்தனம் ஒளிந்திருக்கும் அந்த அளவிற்கு ரஜினி தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கட்டாயம் ரஜினி கதாநாயகனாக மாறாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய வில்லனாக மாறி இருப்பார்.

இந்த மொத்த திரைப்படமும் வசந்த கால நதியினிலே என்ற பாடலின் மூலம் தொடங்குகிறது. இதுவரை நாம் பார்த்த ரஜினியை இந்த திரைப்படத்தில் பார்க்க முடியாது ஒட்டுமொத்தமாக வேறு கதாபாத்திரமாக இயங்கி இருப்பார் இந்த மொத்த புகழும் பாலச்சந்தருக்கே சேரும்.

முழுமையான வில்லனாக இந்த திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தாலும் ஸ்ரீதேவி அவரை ஒட்டுமொத்தமாக சாப்பிட்டு இருப்பார். மனசாட்சிக்கு பயந்த வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

மொத்தமாக இந்த திரைப்படம் முழுமையான காவியத்திற்கு ஒரு முழு சான்றாகும். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு 2000 தான் சம்பளம் கொடுக்கப்பட்டது வரும் காலத்தில் நான் கமல் அளவிற்கு மிகப்பெரிய சம்பளம் வாங்குவது என ஸ்ரீதேவியிடம், ரஜினிகாந்த் தெரிவித்ததாக ஸ்ரீதேவி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.

கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி இவர்கள் மூவரும் தான் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய மூன்று முடிச்சு. அதை அவிழ்வது யார் என்பதுதான் இந்த திரைப்படத்தில் இறுதி கட்டமாகும். ரஜினிகாந்த் எப்படி நடிப்பார் என்பதை தெரிந்து கொள்ள இந்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் ஒருமுறை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர் ஒரு ஆகச் சிறந்த கலைஞன் என கட்டாயம் அறிந்து கொள்வீர்கள்.

அட்லி இயக்கத்தில் கடந்த 2016ல் வெளிவந்த திரைப்படம் தெறி. விஜய் சமந்தா முதலானோர் நடித்திருந்த இப்படம் வெற்றிப்படம். இயக்க...
27/12/2024

அட்லி இயக்கத்தில் கடந்த 2016ல் வெளிவந்த திரைப்படம் தெறி. விஜய் சமந்தா முதலானோர் நடித்திருந்த இப்படம் வெற்றிப்படம். இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு அட்லி இயக்கத்தில் தயாரிப்பில், வருண் தவான் நடிப்பில் ஹிந்தியில் நாளை கிறிஸ்துமஸை ஒட்டி வெளியாகிறது.

ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் ஹிந்தியில் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்து விட்ட அட்லி, மெட்ராஸ் பக்கம் வண்டியேறாமல் வட நாட்டு பக்கமே சுற்றி கொண்டிருக்கிறார். இந்த படம் வெற்றியடைந்தால் ஒரு தயாரிப்பாளராகவும் ஹிந்தி சினிமாவில் மிகப்பெரும் நபராகவும் அட்லி மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள கோவிலில் பட வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வருண் தவான், அட்லி, ப்ரியா அட்லி முதலானோர் கலந்து கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா? தமிழ்சினிமாவில் 'கேப்டன்' என்று அழைக்கப்பட்ட...
27/12/2024

கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

தமிழ்சினிமாவில் 'கேப்டன்' என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த். 150க்கு மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர்னு பன்முகத்திறன் கொண்டவர். இவர் தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன்ல நடித்ததில் இருந்து 'கேப்டன்'னு செல்லமாக அழைக்கப்பட்டார். புரட்சிகரமான பல கதாபாத்திரங்களில் நடித்ததால் 'புரட்சிக்கலைஞர்'னு தாணு இவருக்குப் பட்டம் வழங்கினார்.

ஏழை எளிய மக்களுக்கும், கலைஞர்களுக்கும் உதவிகளை இவர் வாரி வழங்கியதால் கருப்பு எம்ஜிஆர்னு அழைக்கப்பட்டார். இவர் தவறவிட்ட பிளாக்பஸ்டர் படங்கள் என்னென்ன தெரியுமா?

முரட்டுக்காளை

எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் 1980ல் வெளியானது. ரஜினி, ரதி, ஜெய்சங்கர் நடித்த படம். இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்துக்கு முதலில் விஜயகாந்துக்குத் தான் கதை சொல்லப்பட்டது. அப்போது அவர் பிசியாக படங்கள் நடித்ததால நோ சொல்லி விட்டாராம். இந்தப் படத்தில் கேப்டனை வில்லனாக நடிக்க அழைத்ததால் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

புதிய பாதை

பார்த்திபன் இயக்கத்தில் 1989ல் வெளியானது. பார்த்திபன், சீதா நடித்த இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் விஜயகாந்துக்குத் தான் பார்த்திபன் கதை சொன்னாராம். அவர் இந்தப் படத்தை மறுக்கவே அதுல பார்த்திபனே நடித்தார். படமும் சூப்பர்ஹிட் ஆனது. தேசிய விருது பெற்ற படம்.

இணைந்த கைகள்

என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் 1990ல் வெளியான படம் இணைந்த கைகள். ராம்கி, அருண்பாண்டியன், சிந்து மற்றும் பலர் நடித்துள்ளனர். முதலில் இந்தப் படத்தை இயக்குனர் கேப்டனிடம் தான் கொண்டு போனாராம். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் 'நோ' சொல்லிவிட்டாராம். படம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

தளபதி

மணிரத்னம் இயக்கத்தில் 1991ல் வெளியான படம் தளபதி. ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படமானது முதலில் விஜயகாந்திடம் தான் போனதாம். அப்போது அவர் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.

மறுமலர்ச்சி

பாரதி இயக்கத்தில் 1998ல் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படம். மம்முட்டி, தேவயானி, மனோரமா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையை டைரக்டர் பாரதி கேப்டனிடம் தான் சொன்னாராம். ஆனால் ஏன் மிஸ் பண்ணினார்னு தெரியல.

ஆனந்தம்

லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா உள்பட பலர் நடித்த குடும்பப்பாங்கான படம் ஆனந்தம். எஸ்ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் கேப்டனிடம்தான் லிங்குசாமி கதை சொன்னாராம். அவர் 'நோ' சொல்லிவிட்டாராம்.

ஐயா

ஹரி இயக்கத்தில் 2005ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சரத்குமார், நெப்போலியன், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையும் முதலில் கேப்டனிடம் சொல்ல அவர் நோ சொல்லி மிஸ் பண்ணிவிட்டாராம்.

ஜமா முதல் தீபாவளி போனஸ் வரை: 2024-ல் கவனிக்க தவறிய தரமான தமிழ் படங்கள்!2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பை ...
27/12/2024

ஜமா முதல் தீபாவளி போனஸ் வரை: 2024-ல் கவனிக்க தவறிய தரமான தமிழ் படங்கள்!

2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பை பெறாமல் போன சிறு பட்ஜெட் படங்கள் குறித்து பார்ப்போம்.
இன்றைய காலக்கட்டத்தில் சினிமா ஒரு தொழில் என்றாலும், அது ஒரு கலை, பேரார்வம் மற்றும் படைப்பாற்றல் தொடர்படையது என்பது அவ்வப்போது வெளியாகும் சில படங்கள் மூலம் நிரூபனம் மாகிறது. அதே சயம் சினிமா இப்போது வணிகமயமாகிவிட்டதால், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பை பெறாமல் போன சிறு பட்ஜெட் படங்கள் குறித்து பார்ப்போம்.

ஜமா

அங்கீகாரம் மற்றும் மரியாதை எல்லாம் இருக்கும் ஒரு துறையில் பாராட்டுக்கள், சமூக ஒடுக்குமுறை மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் ஆகியவற்றின் இதயத்துடிப்பை கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்மை என்ற மேலோட்டமான கருத்தை எடுத்துக்கொண்டு, படத்தில் கதாநாயகனாக படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பாரி இளவழகன், வலுக்கட்டாயமாக மூடிய கதவுகளில் இருந்து வெளியே வளரும் ஒரு செடியைப் போல திறமை எப்படி வெளிவரும் என்பதை சிறப்பாக கொடுத்திருந்தார். இளையராஜாவின் சிறந்த இசையில் ஒரு திடமான படமாக இந்த வருடத்தின் சிறந்ததாக இருந்திருக்க வேண்டிய படம்.

சட்டம் என் கையில்

ஒரு வெடிக்குண்டு போல் கதையம்சம் கொண்ட இந்த படம், தொடக்கத்தில விறுவிறுப்பாக சென்றாலும், திரைக்கதை எதை நோக்கி நகர்கிறது என்று புரியாமல், ஒரு மோசமான விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் எந்த படத்திலும் ஹீரோ தோற்கமாட்டார் என்பது நிச்சயமாக அனைவருக்கும் தெரியும். அதை இந்த படத்தின் டைட்டிலும் பிரதிபலிக்கிறது. யார் மெயின் வில்லன் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்திய விதம், காமெடியனாக இருந்த சதீஷ் மெல்ல மெல்ல தனது ஹீாரோ அந்தஸ்தை சத்தம் இல்லாமல் உயர்த்தி வருகிறார்.

குரங்கு பெடல்

ஏக்கம் என்பது ஒரு அழகான விஷயம். பெரும்பாலும், இது அதிகப்படியான நிகழ்வுகளுடன் ஏனென்றால் நாம் கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே எப்போதும் கனிவாக இருப்போம். இருந்த காலங்களுக்கு ரோஜா நிற அணுகுமுறை உள்ளது. மேலும் சில வழிகளில், குரங்கு பெடலும் கடந்த காலத்தின் கவர்ச்சியை இழுக்கும் ஒரு திரைப்படமாகும். நீண்ட காலத்திற்கு மனதில் நிற்கும் ஒரு வகையிலான திரைப்படம் தான் இது. மேலும் நமது பழைய ஞாபகங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் வகையிலான இந்த படத்தில் சில சமயங்களில் சரத்தின் மீதான பிடியை இழந்தாலும், சைக்கிள் ஓட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது பற்றிய படம்.

நீல நிற சூரியன்

ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளைப் பற்றிப் பேசும்போது, அமைப்பு ரீதியான அநீதியை எதிர்கொண்டவர்கள்தான் அதைப் பற்றிப் பேசும்போது அதிக நம்பகத்தன்மை இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. நீல நிற சூரியன் படத்தில்,ஒரு இயற்பியல் ஆசிரியர் பெண்ணாக மாற முடிவு செய்யும் போது அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் அறிமுக இயக்குனர் சம்யுக்தா விஜயன், அதை ஒரு விஷயமாக சொல்ல முடிவுசெய்து, அத்தகைய படங்களிலிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்து காட்சிகளையுமு் அமைத்து படத்தை இயக்கியுள்ளார். நீல நிற சூரியன் நேரடியான முன்னோக்கிய கதை, இது வெளிப்படையான பிரச்சாரத்தை தவிர்த்து, அதை படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் குறித்து ரசிகர்களை தங்கள் முடிவை தீர்மானிக்க அனுமதிக்கிறது.

ராக்கெட் டிரைவர்

தமிழ்த் திரைப்படங்கள் அறிவியல் புனைகதை வகையை எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றன, ஆனால் கதையைச் சொல்ல மிகவும் எளிமையான கோணத்தை எடுத்துக்கொள்வது சுவாரஸ்யமானது. உதாரணமாக, ராக்கெட் டிரைவர் ஒரு அதிருப்தி கொண்ட ஆட்டோ ஓட்டுநரை மையமாகக் கொண்ட திரைப்படம். அவர் ஒரு அறிவியல் வித்வான், ஆனால் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்தான் அவருக்கு முன்மாதிரி. ஒரு நல்ல நாள், 2024 இல், அப்துல் கலாம் அவரது பயணியாக, 1948 ஆம் ஆண்டிலிருந்து 2024-ம் ஆண்டுக்கு பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த யோசனை நிச்சயமாக விசித்திரமானது. இது ஒரு எளிமையான படம், அது உண்மையில் முக்கியமானது என்ன என்பதைப் பற்றி பேசுகிறது.

ஃபேமிலி படம்

வெற்றியை விட தோல்விகளையே அதிகம் கொண்ட தொழில் சினிமா. நிச்சயமாக, இதை வைத்து புகழ் மயக்கம் அடையும் மக்கள் உள்ளன, ஆனால் கீழே பல மக்கள் தங்கள் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. அத்தகைய சூழ்நிலையில், அறிமுக இயக்குனர் செல்வா, எந்தவொரு திரைப்படத் தயாரிப்பிலும் ஆர்வமுள்ள ஒரு திடமான ஆதரவு அமைப்பின் முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொடுப்பதற்கான ஒரு கதையை உருவாக்குகிறார். இது நம்பிக்கையின் பாய்ச்சலின் நியாயமான பங்கை விட அதிகமாக எடுக்கும் ஒரு சூடான கதையாகும், ஆனால் எல்லாவற்றின் மையத்திலும் போதுமான இதயம் இருப்பதை உறுதி செய்கிறது.

போகுமிடம் வெகுதூரமில்லை

இந்த வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நபர் உண்மையில் தனியாக இருக்க முடியுமா? இறுதிச் சடங்குகளுக்காக ஒரு இறந்த உடலை அவரது குடும்பத்தில் வழங்குவதற்கான மிகவும் கடுமையான பயணத்தில், விமல் ஒரு நபரை சந்திக்கிறார். எப்படியும் தன்னைப் புரிந்து கொள்ளாத உலகத்திற்காக தன் மனதில் இருப்பதை கலப்படம் செய்யாமல் சொல்லும் தெரு நாடகக் கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். குடும்பச் சண்டைகள், சாதி அடிப்படையிலான அடக்குமுறை, காதல், பதற்றம், வெடித்தால் பெரும் வன்முறையில் விளையும் டைம் பாம் போன்ற சவால்களை இந்த ஜோடி எப்படி கையாள்கிறது என்பது தான் கதை. சரியான அளவு பதற்றத்தை உருவாக்கி, ஒரு புயலுக்குப் பிறகு வரும் அமைதியான அமைதியை விட்டுவிட்டு, போகுமிடம் வெகுதூரமில்லை, இந்த உலகத்தை சுழற்றுவது மனிதநேயம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது இந்த படம்.

பைரி

புறா பந்தையத்தை பற்றி சொல்லும் படம் தான் பைரி. அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில், மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பில் சொல்ல இயலான கதையை விவரிக்கிறது. ஒரு செட்டில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்கிறது. திட்டவட்டமான சில காட்சிகள், குறிப்பாக காதல் பகுதிகள் படத்திற்கு தடையாக இருப்பதாக நினைத்தாலும், உண்மைக்கு நிகரான காட்சிகள் நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சியூட்டும் மாற்றமாக வருகின்றன.

ஹிட் லிஸ்ட்

அகிம்சை வாழ்க்கை வாழ்பவர், சைவ உணவுகளை பின்பற்றி, எந்த உயிரினமும் கொல்லப்படக்கூடாது என்ற நம்பிக்கையை வைத்திருக்கும் ஒருவர், கொலைவெறியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது என்பது தான் இந்த படம். ஒருவரைக் கொல்லுங்கள், இன்னொருவரை ஊனப்படுத்துங்கள், ஓடி ஒளிந்து கொள்ள இடம் இல்லாமல், காதுகளில் ஒரு சோகக் குரல் கேட்கும்போது, ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே கதை. மிகவும் சுவாரசியமான ஆனால் ஊக்கமளிக்கும் முன்மாதிரியில், ஹிட் லிஸ்ட், கண்ணியமான துல்லியத்துடன் ட்விஸ்ட் அவிழ்க்கும் ஒரு கதையை நெசவு செய்கிறது, இது இயக்குனர் விக்ரமன் மகன், விஜய் கனிஷ்காவின் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி போனஸ்

திருமணமானது ஒரு நாள் கூத்து அல்லது ஒரு நாள் விழாக்கள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு அழகாக இருக்கிறது, அது ஒரு சிறப்பு நாள் மட்டுமல்ல, நம் வாழ்வில் ஒரு நாள் மட்டுமே. இதுபோன்ற பல நிகழ்வுகளால் நிரம்பியிருக்கும் நம் வாழ்வில் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்வது வீண் என்பதை நினைவூட்டுகிறது, அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் மீண்டும் நிகழும். ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை உண்டு. ஆண்டுதோறும் தீபாவளி வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஒரே உற்சாகத்துடன் கொண்டாடும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்தையும் நடத்தும் மக்கள் மீது விழுகிறது. தீபாவளி போனஸ் படம், அத்தகைய ஒரு குடும்பத்தைப் பற்றியது, அங்கு ஒருவருக்கொருவர் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது துன்பங்கள், தடைகள் மற்றும் முடிவில்லாத துயரங்களைத் தடுக்கிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையில், பொருளாதாரத்தின் தடை எப்பொழுதும் ஒரு சுமையாக இருக்கிறது, ஆனால் ஒரு நம்பிக்கையில் பல குடும்பங்கள் அதை எப்படிச் செயல்படுத்துகின்றன என்பதற்கான இதயத்தைத் தூண்டும் கதை இது. இயக்குனர் ஜெயபால், விக்ராந்த் மற்றும் ரித்விகாவின் திறமையான நடிப்புடன், ஆசைகள்,லட்சியங்கள், நம்பிக்கைகள் மற்றும் அவை அனைத்தும் யதார்த்தத்தின் யோசனையால் எவ்வாறு அடித்தளமாக உள்ளன என்பதை எளிய கதையாகக் கூறுகிறார்.

15 பாடல்கள் இடம்பெற்ற சிகரம் திரைப்படம்சிகரம் திரைப்படம் கடந்த 1991ல் வெளியான படமாகும். எஸ்.பி.பி, ராதா , ஆனந்த்பாபு ஆகி...
26/12/2024

15 பாடல்கள் இடம்பெற்ற சிகரம் திரைப்படம்

சிகரம் திரைப்படம் கடந்த 1991ல் வெளியான படமாகும். எஸ்.பி.பி, ராதா , ஆனந்த்பாபு ஆகியோர் நடிக்க , பாலச்சந்தருடனும், கமல்ஹாசனுடனும், வசந்த் உடனும், தனித்தும் பல படங்களுக்கு கதை திரைக்கதை செய்த மறைந்த அனந்து இயக்கிய படம் இது.

1968ல் இருந்து நடித்தும், திரைக்கதை வசனம் பல புகழ்பெற்ற படங்களுக்கு எழுதியும், திரைப்படங்களில் பணி செய்த அனந்து இயக்கிய ஒரே படம் இதுதான்.

இப்படத்துக்கு எஸ்.பி.பி நடித்து இசையமைத்திருந்தார். அகரம் இப்போ சிகரம் ஆச்சு, இதோ இதோ என் பல்லவி, உட்பட இப்படத்தில் மொத்தம் 15 பாட்டுங்க, அந்தக்கால படங்களில் கூட இவ்வளவு பாடல்கள் இருந்திருக்காது.

புத்தாண்டு முதல் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்சனி நமது வாழ்க்கையில் சில முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த...
25/12/2024

புத்தாண்டு முதல் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

சனி நமது வாழ்க்கையில் சில முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஒரு கிரகம் ஆகும். 2025 ஆம் ஆண்டில் சனி கிரகம் தனது இடத்தை மாற்ற உள்ளது. இது ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி கிரகம் தனது இடத்தை மாற்றுகிறது. 2025ல் சனியின் மாற்றம் பலருக்கு நல்ல காலமாக இருக்கும். ஆனால் சிலருக்கு சவால்களைக் கொண்டு வரலாம்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி கும்ப ராசியில் இருப்பார். அதன்பின், மார்ச் 29-ம் தேதி சனி கிரகம் மீன ராசிக்கு இடம்பெயரும்.

இதனால் மகர ராசியில் இருந்து சனியின் தாக்கம் முடிவுக்கு வரும். மேலும், கடகம் மற்றும் விருச்சிகம் ஆகிய இரண்டு ராசிகளின் தாக்கமும் முடிவுக்கு வரும்.

மார்ச் 29 வரை மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு சனியின் தாக்கம் இருக்கும். அதன் பிறகு சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்வதால், மகர ராசியில் சனியின் தாக்கம் முடிவுக்கு வரும்.

விருச்சிகம், கடக ராசிகளுக்கு மார்ச் 29 வரை சனியின் தாக்கம் இருக்கும். அதன் பிறகு சனி கும்பத்தில் இருந்து மீனத்திற்கு மாறும் போது சிம்மம் மற்றும் தனுசு ராசியில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்.

பிரதமர் ஆவாஸ் யோஜனா 2025 : 3 கோடி வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளுக்...
24/12/2024

பிரதமர் ஆவாஸ் யோஜனா 2025 : 3 கோடி வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிராமப்புற அல்லது நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியாவின் நிதி ரீதியாக நிலையற்ற அனைத்து குடிமக்களுக்கும் வீட்டு வசதிகளை வழங்கும் திட்டம் தான் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம்.. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இந்திய மத்திய அரசு ஏற்கனவே 10 ஆண்டுகளில் மொத்தம் 4.21 கோடி வீடுகளை கட்டியுள்ளது. சொந்த வீடு அல்லது வீட்டு வாடகை இல்லாத இந்திய குடிமக்கள் அனைவரும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2024 இன் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்.

தகுதிக்கான அளவுகோல்கள்

விண்ணப்பதாரர் இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
நிரந்தர வீட்டில் இருக்கக்கூடாது.
அதிக வருமான ஈட்டுபவராக இருக்கக்கூடாது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் பலன்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்திய மத்திய அரசிடமிருந்து வீட்டு வசதிகளைப் பெறுவார்கள்.
தங்கள் வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும்.
இந்தத் திட்டம் இந்தியாவில் வீடற்ற குடிமக்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இந்திய மத்திய அரசு 10 ஆண்டுகளில் மொத்தம் 4.21 கோடி வீடுகளை ஏற்கனவே கட்டியுள்ளது. இந்த சூழலில் தான் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை
மின்னஞ்சல் ஐடி
மொபைல் எண்
மின் கட்டணம்
முகவரி ஆதாரம்
பான் கார்டு
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2025 : எப்படி விண்ணப்பிப்பது?

படி 1: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2025 க்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ pmay இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.

படி 2: விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை அடைந்தவுடன் விண்ணப்பதாரர் கிளிக் செய்ய வேண்டும். குடியுரிமை திருத்தம் என்ற விருப்பத்தை கிளிக் செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

படி 3: உங்கள் டெஸ்க்டாப் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும், விண்ணப்பதாரர் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

படி 4: விண்ணப்பப் படிவம் உங்கள் திரையில் தோன்றும். விண்ணப்பதாரர் கோரப்பட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

படி 5: அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, விண்ணப்பதாரர் அதை விரைவாக மதிப்பாய்வு செய்து, அவர்களின் செயல்முறையை முடிக்க சமர்ப்பிக்கும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பயனாளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி தேடுவது?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2025 இன் பயனாளியை ஆன்லைனில் தேட, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தை அடைந்ததும், option search beneficiary.என்ற விருப்பத்தைகிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் டெஸ்க்டாப் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும், விண்ணப்பதாரர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
எண்ணை உள்ளிட்ட பிறகு, விண்ணப்பதாரர் அனுப்பும் OTP விருப்பத்தை கிளிக் செய்து அவர்கள் பெற்ற OTP ஐ உள்ளிட வேண்டும்.
அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, விண்ணப்பதாரர் அதை விரைவாக மதிப்பாய்வு செய்து, அவர்களின் செயல்முறையை முடிக்க submit விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

உலகமே கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி திரைப்படம் பாட்ஷா. பாட்ஷா படத்திற்கு முன்னரும் சுரேஷ் கிருஷ்ணா இயக்க...
23/12/2024

உலகமே கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி திரைப்படம் பாட்ஷா. பாட்ஷா படத்திற்கு முன்னரும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய வீரா படத்தில் நடித்தார் ரஜினி.

பாட்ஷா படம் 1995ல் வந்திருந்தாலும், அதற்கான புள்ளி அண்ணாமலை படத்தின் ஷூட்டிங்கின் போது உருவாகியுள்ளது.

ஹிந்தியில் வெளியான ஹம் படத்தின் ஒரு காட்சியை மையப்படுத்தி தான் பாட்ஷா படத்தை இயக்கியுள்ளனர். அது பற்றி அண்ணாமலை ஷூட்டிங்கின் போதே விவாதித்துள்ளனர்.

1994 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 5 மாதங்களில் முடிக்கப்பட்டு , சரியாக 1995 ஜனவரி மாதம் பொங்கல் நாளில் படம் ரிலீஸ் ஆனது.

பெங்காலி, ஹிந்தி, கன்னடத்தில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டாலும், அதில் பல நடிகர்கள் நடித்தாலும், ரஜினி நடித்தது போல் இந்த படத்தை யாரும் நடிக்கவில்லை, இனிமேல் இந்த படத்தை யாரும் பாட்ஷா 2வாக புது நடிகர்களை வைத்து எடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க முடியாது என்பதே உண்மை.

22/12/2024
ஜிவி பிரகாஷிற்காக மனம் உருகும் சைந்தவி!! அடுத்தடுத்து செய்த விஷயங்கள்!!
22/12/2024

ஜிவி பிரகாஷிற்காக மனம் உருகும் சைந்தவி!! அடுத்தடுத்து செய்த விஷயங்கள்!!

News4 Tamil provides Latest Tamil News in Online.Local News,Political News,Sports News and Cinema News in Tamil

வீட்டுக் கடனுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசு!இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமத...
21/12/2024

வீட்டுக் கடனுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசு!

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் உதவியுடன் சில நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது.

மோடி அரசு தனது முதல் பதவிக் காலத்திலேயே இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டாம் கட்டமாக தற்போது அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி வழங்கப்படும்.

ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. பயனாளிகள் மூன்று பிரிவுகளாகவும், திட்டம் நான்கு பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பயனாளிகள் பிரிவுகள்:

1) ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் (EWS)

2) ஆண்டு வருமானம் ரூ.3-6 லட்சம் உள்ளவர்கள் (LIG)

3) ஆண்டு வருமானம் ரூ.6-9 லட்சம் உள்ளவர்கள் (MIG)

திட்டப் பிரிவுகள்:

1) PMAY2.0 - பயனாளி அடிப்படையிலான கட்டுமானம் (BLC)

2) கூட்டுறவு மலிவு விலை வீடுகள் (AHP)

3) மலிவு வாடகை வீடுகள் (ARH)

4) வட்டி மானியத் திட்டம் (ISS)

BLC மாதிரியில் EWS பிரிவினர் தங்கள் நிலத்தில் வீடு கட்ட உதவி பெறலாம். AHP மாதிரியில் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும். EWS பிரிவினருக்கு நிதி உதவி வழங்கப்படும்.

PMAY-U 2.0 Eligibility

வட்டி மானியத் திட்டத்தின் (ISS) கீழ் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடுகளுக்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படும். மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்தியாவில் இந்த 3 பிசினஸுக்கு அதிக தேவை உள்ளது; ஒருநாளும் நஷ்டமே ஏற்படாது!நம்மில் பலருக்கு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண...
21/12/2024

இந்தியாவில் இந்த 3 பிசினஸுக்கு அதிக தேவை உள்ளது; ஒருநாளும் நஷ்டமே ஏற்படாது!

நம்மில் பலருக்கு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளைப் பெற்றாலும் அதில் திருப்தி அடைவதில்லை. தனக்கென ஒரு அடையாளம் இருக்க வேண்டும், அதற்காக சிறியதாக இருந்தாலும் தனக்கென ஒரு தொழில் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் தொடங்குவதற்கு சிறு வணிகங்களைத் தேடும் நபர்களுக்கு மூன்று சிறந்த விருப்பங்கள் உள்ளன. முதலில், ஜெராக்ஸ் கடை வைப்பது. இப்போதெல்லாம் ஜெராக்ஸ் கடைக்கு நல்ல தேவை இருக்கிறது. இருப்பினும், ஒரு கடையைத் தொடங்குவதை விட நாம் எங்கு தொடங்குகிறோம் என்பது முக்கியம்.

இவற்றை பெரும்பாலும் கலை கல்லூரிகள் அல்லது பொறியியல் கல்லூரிகளுக்கு அருகில் அமைப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். திட்டப்பணிகள் முதல் தினசரி தேவைகள், பொருட்கள், குறிப்புகள் வரை, மாணவர்கள் தொடர்ந்து நிறைய நகல்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு கடை அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது.

இப்போது, ​​ஒரு நல்ல வியாபாரத்தைத் தேடுபவர்களுக்கு இரண்டாவது விருப்பம் முட்டைக் கடை. கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். பலர் தங்கள் தினசரி மெனுவில் வலுவூட்டப்பட்ட மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கு இடம் தருகிறார்கள். இந்த வரிசையில் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவு முட்டை. மக்கள் அதிகம் வசிக்கும் காலனிகளுக்கு அருகில் இவற்றை அமைப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

தேநீர் கடைகளும் மிகவும் பிரபலமான வணிகங்களில் ஒன்றாகும். கார்ப்பரேட் அலுவலகங்கள், அலுவலகங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், டீ பங்க் சிகரெட் விற்கும் சிறிய கடையில் கூட மாதம் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். சென்னைபோன்ற பெருநகரங்களில் இவற்றுக்கு தேவை அதிகம். நெரிசல் மிகுந்த கார்ப்பரேட் ஏரியாக்களில் ஒரு சிறிய இடத்துக்குக் கூட மாதம் ஆயிரமும், சில சமயங்களில் லட்சமும் கொடுத்து கடை உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர்.

பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் சுவையான தேநீர் வழங்கும் கடைகளுக்கு அதிக தேவையும் தேவையும் உள்ளது. எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொழில்களை நல்ல வருமானம் ஈட்டுவதற்கான வழிகளாகக் கருதலாம்.

Address

Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kowsalya Tamizhachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share