Cinema Patti

Cinema Patti Welcome to cinema Fans

நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு இதழுக்கு பழம்பெரும் நடிகையும், மறைந்த நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரனின் மனைவியுமான விஜ...
02/02/2025

நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு இதழுக்கு பழம்பெரும் நடிகையும், மறைந்த நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரனின் மனைவியுமான விஜயகுமாரி பேட்டி அளித்துள்ளார்.

குலதெய்வம் படத்தில்தான் அவருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு காதலித்து மணந்து கொண்டேன் என கூறியுள்ளார். எஸ்.எஸ் ஆரும் இவரும் நீண்ட வருடங்கள் முன்பே பிரிந்துவிட்டனர். எஸ்.எஸ் ஆர்க்கு மூத்தமனைவி ஒருவர் இருக்கிறார்.

எஸ்.எஸ் ஆர் மறைந்த பிறகு அவர் வீட்டுக்கு சென்று கதறி அழுதேன் என கூறி இருக்கிறார். மேலும் எஸ்.எஸ் ஆரின் மூத்த மனைவி மகன்கள் இன்னும் விஜயகுமாரி மேல் பாசமாக இருக்கிறார்களாம். சின்னம்மா சின்னம்மா என்றுதான் அழைப்பார்களாம்.

எஸ்.எஸ் ஆரும் ,விஜயகுமாரியும் சேர்ந்து நடிக்கும்போது தன் படங்களை தவிர மற்ற படங்களில் நடிக்க அனுமதிக்காத அளவு பொஸசிவ் ஆக இருப்பார், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நான் நடிக்க வேண்டியது, கணவர் தடுத்ததால் வேண்டாம் என்றேன். இது போல சிவாஜி அண்ணன் படங்கள் பலவற்றில் நான் நடிக்க வேண்டியது, கணவர்தான் வேண்டாம் என சொல்லி விடுவார்.

சிவாஜி அண்ணன் பொது இடங்களில் கேட்பார், ஏம்மா விஜயா நான் என்ன சிங்கமா , புலியா என்னை பார்த்து ஏன் பயந்து நடிக்க மாட்ற, நான் என்ன உன்னை கடிச்சா தின்று விடுவேன் என்பாராம். இவருக்கு அமைந்தது பெரும்பாலும் அழுகை ரோல்கள் தான், அப்படி யதார்த்தமாகவே அது போல் ரோல்கள் அமைந்தது என குறிப்பிடுகிறார். இப்போது இருக்கும் நடிகர்களில் கார்த்தியை பிடிக்கும் என கூறுகிறார் விஜயக்குமாரி.

இயக்குனர் பவித்ரன் ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ஏ.வெங்கடேஷ்.இவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான ...
02/02/2025

இயக்குனர் பவித்ரன் ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ஏ.வெங்கடேஷ்.

இவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம்தான் இந்த மகாபிரபு. இப்படத்துக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதி இருந்தார்.

வில்லனாக ராஜன் பி தேவ் நடித்திருந்தார். அமைதியாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வாழும் தாமுவாக சரத்குமார், அவரும் அவரது நண்பர் கவுண்டமணியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் கலகலக்கவைத்தன. கூடவே சரத்தின் அம்மாவாக வரும் மனோரமாவும் கலகலக்க வைத்தார். கோபம் நிறைந்த சரத் ப்ளாக் டிக்கெட் விற்கிறார், அதிக கோபப்படுவதால் அம்மா மனோரமாவிடம் இனிமேல் சண்டை வம்பு வழக்கிற்கு செல்ல மாட்டேன் என உறுதியளிக்கிறார்.

எதிர்வீட்டில் வசிக்கும் சுகன்யா ஒரு கல்லூரி பேராசிரியை அவரை சரத் விரும்புகிறார். அவரோ நீ ப்ளாக் டிக்கெட் விற்பது இது போல பொறுக்கித்தனனங்களை விட்டு வா என சொல்லுகிறார். அவர் எல்லாவற்றையும் விட்டு மெக்கானிக் செட் வைத்த உடன் சுகன்யா அவரை காதலிக்கிறார். இவர் காதலிக்க ஆரம்பித்ததை பார்த்த சரத்தின் முறைப்பெண் வினிதா அக்காதலில் இருந்து விலகி நிற்கிறார்.

கல்லூரி தேர்தலில் தான் தோற்பதற்கு காரணம் சுகன்யாதான் என நினைத்து அமைச்சரின் மகன் சுகன்யா வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறான். மானபங்கபடுத்துகிறான். இதில் சுகன்யா தீவைத்து தற்கொலை செய்ய, சரத் கோபத்தில் அமைச்சர் மகனை கொலை செய்கிறார். அமைச்சர் மகனை கொலை செய்ததால் அமைச்சர் ராஜன் பி தேவ் சரத்குமாரை கொலை செய்ய உத்தரவிடுகிறார். சரத்தை கொலை செய்ய விடாமல் , அமைச்சரால் ஏற்கனவே பழிவாங்கப்பட்ட போலீஸ் அதிகாரி சரத்பாபு, சரத்குமாரை பாதுகாக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பது கதை.

தேவா இசையில் ஒரு மூட்டை கடலை, மைனா மைனா மஞ்சள் மைனா, சொல்லவா சொல்லவா போன்ற பாடல்கள் புகழ்பெற்றது.

கடுமையான மசாலாத்தனம் கலந்து எடுக்கப்பட்ட இப்படம் ஏ.வெங்கடேஷை ஒரு கமர்சியல் இயக்குனராக நிலை நிறுத்தியது.

கவுண்டமணி, செந்தில் காமெடி இப்படத்திற்கு இன்னும் பலம் சேர்த்தது.. வில்லனாக வரும் ராஜன் பி.தேவ், ஒரு வெத்தலை எச்சில் துப்புற நேரத்துல ஒரு வம்சத்தையே அழிக்கிறவன் நான் என வசனம் அவரின் ஆழமான வில்லத்தனத்தை எடுத்துரைத்தது.

எஸ் ஏ சந்திரசேகர் புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பெயர் கூரன்.. கதாநாயகனாக இல்லாம  கதையின் நாயகனாக இப...
02/02/2025

எஸ் ஏ சந்திரசேகர் புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பெயர் கூரன்.. கதாநாயகனாக இல்லாம கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்து வருகிறார்.

வாயில்லா ஜீவனான ஒரு நாய்க்கும் இவருக்கும் ஏற்படும் அன்பு புரிதல் தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் இவர் நடித்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இப்படத்தில் நாயை வைத்து கோர்ட்டு காட்சிகள் அதிகம் இருக்கிறதாம் . கோர்ட் காட்சிகளுக்கு புகழ்பெற்ற இயக்குனர் என்பதால் இவரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் நித்தின்.

முதலில் நாயுடன் நடித்த ரொம்பவே பயந்தாராம் எஸ் ஏ சி. பின்பு நாயுடன் தொடர்ந்து நடித்ததில் அதுவும் அவரிடம் இணக்கமாகிவிட்டது அதனால் நடிப்பதில் பெரிய சிரமமாக இல்லையாம். நாயை பயிற்சி கொடுத்து சரியான முறையில் நடிக்க வைக்க இயக்குனர் நித்தின் மிகவும் சிரமப்பட்டு விட்டாராம்.

துள்ளாத மனமும் துள்ளும் இப்படத்தை எடுப்பதற்கு எழில் மிகுந்த சிரமப்பட்டுள்ளார். சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் என்ற...
02/02/2025

துள்ளாத மனமும் துள்ளும் இப்படத்தை எடுப்பதற்கு எழில் மிகுந்த சிரமப்பட்டுள்ளார். சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் என்ற படத்தின் கதையை கலந்து ஜனரஞ்சமாக இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் எழில்.

முதலில் பிரபு கார்த்திக் ஆகியோரிடம் சொல்லியும் இக்கதை எடுபடவில்லையாம். பின்பு சர்க்கரை தேவன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த காரணத்தால், விஜயகாந்தின் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தரையும் எழிலுக்கு தெரியுமாம்.

அதனால் விஜயகாந்த்திடம் முதலில் போய் சொல்லி இருக்கிறார். அவரும் ராவுத்தரிடமே சென்று கதையை சொல்ல சொல்லி இருக்கிறார். ஆனால் ராவுத்தரோ விஜிக்கு இந்த கதை செட்டாகாது இது யாராவது இளம் நடிகர் பண்ணினால் நன்றாக இருக்கும் விஜி ஆக்சன் படங்களில் தற்போது நடித்து வருகிறார் அதனால் யாராவது ஒரு இளம் நடிகரை வைத்து செய்தால் தான் இப்படம் சரியாக இருக்கும் என்று சரியாக கனித்து சொல்லி இருக்கிறார்.

அதன்பிறகு பாண்டியராஜன், மற்றும் குஷ்பூ அறிமுகத்தால் அவர்கள் சொல்லிய இரண்டு கம்பெனிகளில் கதையை சொல்லி இருக்கிறார.

அவர்களும் படத்தில் சிம்ரன் கேரக்டர் நெகட்டிவ் ஆக இருக்கிறது கண் தெரியாத கதாபாத்திரம் என்று கதையை நிராகரித்து விட்டார்கள். இவ்வளவு பேரிடம் டம் சொல்லியும் பலன் அளிக்கவில்லையே என்று நினைத்து. இனி இக்கதையில் வடிவேலுவை வைத்து எடுத்துவிடலாம் என நினைத்து வடிவேலிடம் சென்று கதை சொல்லி இருக்கிறார் வடிவேலும் கே டி குஞ்சுமோனிடம் கதை சொல்ல அனுப்பி இருக்கிறார் அங்கும் சரியான முறையில் கதை கேட்காமல் இப்படத்தினை நிராகரித்து இருக்கிறார்கள். இறுதியாக ஆர். பி செளத்ரியிடம் சென்று கதை சொல்ல சென்றிருக்கிறார்.அவரும் கதையை கேட்டுவிட்டு முதலில் முரளியிடம் சொல்ல சொல்லி இருக்கிறார். முரளி கதையை கேட்டுவிட்டு அவருக்கு பிடிக்கவில்லையாம் , இதனால் எரிச்சான Rb choudhry என்னய்யா ஒரு நல்ல கதையை யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது என நினைத்து விஜய்யிடம் சொல்ல சொல்லி அனுப்பி இருக்கிறார்.விஜய் மட்டும் கதை நன்றாக இருக்கிறது பார்க்கலாம் என்றும் நான் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.. அப்புறம் விஜய் எதுவும் சொல்லாமல் இருக்க ஆர் பி சவுத்ரியும் இயக்குனர் எழிழும் விஜயிடம் நேரில் சென்று, எஸ் ஏ சந்திரசேகரிடம் பேசிஅப்புறம் , விஜய் கண்டிப்பாக நடிக்கிறேன் என சொல்ல வைத்து இப்ப கதையை படமாக்கி இருக்கிறார்கள்.

பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளிவந்த படம் ராஜபார்ட் ரங்கதுரை. இப்படத்தை சொன்னாலே இப்படத்தில் இடம்பெற்ற சிஞ்சுனு...
02/02/2025

பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளிவந்த படம் ராஜபார்ட் ரங்கதுரை. இப்படத்தை சொன்னாலே இப்படத்தில் இடம்பெற்ற சிஞ்சுனுக்கான் சின்னக்கிளி என்ற பாடல் நியாபகத்திற்கு வந்து விடும்.

சிவாஜிகணேசன் , உஷா நந்தினி நடித்த இப்படத்தை விசி குகநாதன் தயாரித்து இருந்தார்.

நாடக கலைஞர் ரங்கதுரையாக சிவாஜி கணேசன் இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். ஒரு நாடக கலைஞர் வாழ்க்கையில் என்னென்ன சோகங்கள் எல்லாம் ஏற்படுகிறது என்பதை அழகான திரைக்கதையாக இயக்குனர் பி.மாதவன் இயக்கி இருப்பார்.

மதன மாளிகையில், அம்மம்மா தம்பி என்று நம்பி, சிஞ்சினுக்கா சின்னக்கிளி என அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது. எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். காலத்தால் மறக்க முடியாத கண்ணீர் காவியமான இப்படம் 1973ல் ரிலீஸ் ஆகி டிஜிட்டல் வெர்சனாக 2017ல் ரீ ரிலீஸ் ஆனது.

ஏவிஎம் புரொடக்சன்ஸ் உருவான விதம். இன்று ஏவிஎம் நிறுவனம் அதிக படங்கள் தயாரிக்கவில்லை என்றாலும், ஒரு காலத்தில் மிகப்பெரிய ...
02/02/2025

ஏவிஎம் புரொடக்சன்ஸ் உருவான விதம். இன்று ஏவிஎம் நிறுவனம் அதிக படங்கள் தயாரிக்கவில்லை என்றாலும், ஒரு காலத்தில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களை சூப்பர் நடிகர்களை வைத்து தயாரித்தது.

ஏவி மெய்யப்ப செட்டியார் தந்தை அந்தக்காலங்களில் காரைக்குடியில் அவிச்சி செட்டியார் ஏவி சன்ஸ் என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோரை காரைக்குடியில் நடத்தி வந்தவர்.

அதில் கிராமஃபோன் ரெக்கார்டுகளை விற்றார். இதை பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் , கிராமஃபோன் ரெக்கார்டுகளை நாமே தயாரித்தால் என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டது. சென்னைக்கு வந்த அவர் நண்பர்கள் நாராயண ஐயங்கார், சுப்பையா செட்டியார் ஆகியோர் உடன் சேர்ந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற கிராமஃபோன் ரெக்கார்டு கம்பெனியை விளம்பரப்படுத்தினார்கள். இப்படியாக ஏவி மெய்யப்பன் தான் வைத்திருந்த சின்ன சின்ன கதைகளை மற்ற கம்பெனிகளுடன் சேர்ந்து படமாக எடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் இரண்டாம் உலகப்போர் குழப்பங்களால் சென்னையில் இருக்காமல் காரைக்குடியில் தனது இருப்பிடத்தை மீண்டும் மாற்றினார் அங்கு ஆரம்பிக்கப்பட்டதுதான் ஏவிஎம் புரொடக்சன்ஸ். தேவகோட்டை ரஸ்தா அருகே ஆரம்பிக்கப்படது. பின்பு நல்ல நிலையை அடைந்த உடன் ஏவிஎம் ஸ்டுடியோ மீண்டும் சென்னைக்கே சென்றது. 1979ல் ஏவி மெய்யப்ப செட்டியார் மறைந்த பிறகு அவரது மகன் சரவணன் மிக நல்ல முறையில் ஏவிஎம் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கார்ப்பரேட்தனமான சினிமாக்காரர்களாலும், நடிகர்களாலும், தயாரிப்பாளர்களாலும், எதையும் பார்த்து பக்குவமாய் நிதானமாய் , செலவழிக்கும் ஏவிஎம் நிறுவனம் தற்போது திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி நிற்கிறது.இருந்தாலும் வெப் சீரிஸ்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி வருகிறது இந்த நிறுவனம்.

இசைஞானி இளையராஜா சமீபத்தில் இரு முக்கிய ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் முக்கியமாக இளையராஜ...
02/02/2025

இசைஞானி இளையராஜா சமீபத்தில் இரு முக்கிய ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் முக்கியமாக இளையராஜாவை பற்றி பொதுவாக வரும் செய்திகளில் கமெண்ட்டில் போய் பார்த்தால் பலர், அவரை திமிர் பிடித்தவர் என்றும், கர்வம் படைத்தவர் என்றும் வசை பாடி வருவர்.

இதை தைரியமாக எதிர்கொண்டு கெத்தாக பதில் சொல்லியுள்ள இளையராஜா, எனக்குத்தாண்டா வரணும் திமிர், உலகத்தில் யாரும் சாதிக்காத பல விசயங்களை இசையில் நான் சாதித்துள்ளேன், அப்போ அந்த திமிர் கர்வம் எனக்கு இருக்கத்தானே செய்யும் என சொல்லியுள்ளார்.

வித்யாகர்வம் என்பது சாதனையாளர்கள், ஞானிகள், எல்லோருக்கும் இருக்கும் விசயமே. நமக்கே சின்ன சின்ன விசயங்களில் சாதனை படைக்கும்போது கர்வம் லேசாக எட்டிப்பார்க்கும், அவர் சொல்கிறபடி இசையில் பல சாதனைகளை படைத்த அவருக்கு வராம யாருக்கு வரும் கர்வம்.

இந்த டாக்டர் திவாகரின் அலப்பறை அலட்டல்கள் ரொம்பவே இணையவாசிகளுக்கு எரிச்சலை தருகிறது. ஆனால் அவரோ அவர் நல்லா  நடிக்கலேன்னு...
02/02/2025

இந்த டாக்டர் திவாகரின் அலப்பறை அலட்டல்கள் ரொம்பவே இணையவாசிகளுக்கு எரிச்சலை தருகிறது. ஆனால் அவரோ அவர் நல்லா நடிக்கலேன்னு படைத்த கடவுளே வந்து சொன்னாலும் நம்ப மாட்டார் போல தெரிகிறது. என்னா மனுஷ்ன்யா என்று சொல்லுமளவுக்கு வீண் பெருமை பேசியே நிறைய வாய்ப்புகளை வாங்கி வருகிறார். நான் சிவாஜியை விட நல்லா நடிக்கிறேன் என்று சொன்னதெல்லாம் எந்த தஞ்சாவூர் கல்வெட்டு போய் எழுதுவது என தெரியவில்லை.

அங்க சுத்தி இங்க சுத்தி நடிகனாகவும் ஆயிட்டாப்ல. விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இவரும் முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனும் டாக்டர் திவாகரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

1964ல் வெளிவந்த கருப்பு பணம் திரைப்படம், கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ஒரு திரைப்படம் ஆகும். இப்படத்தில் டி.எஸ் பாலையா, சாரங...
01/02/2025

1964ல் வெளிவந்த கருப்பு பணம் திரைப்படம், கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ஒரு திரைப்படம் ஆகும். இப்படத்தில் டி.எஸ் பாலையா, சாரங்கபாணி ஆகியோர் நடித்திருந்தனர்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர். இப்படத்தை கவிஞர் கண்ணதாசன் தனது விசாலாட்சி பிலிம்ஸ் மூலமாக சொந்தமாக தயாரித்திருந்தார். அவரும் நடித்திருந்தார். ஜி.ஆர் நாதன் இயக்கி இருந்தார்.

இப்படம் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்க்கையை கிண்டல் செய்ததாக கருதப்பட்டது.

சிவசக்தி பாண்டியன் காதல் கோட்டைக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத காதல் கதைகளை தேடி தேடி தயாரித்து வந்தார். அப்படியொரு படம...
01/02/2025

சிவசக்தி பாண்டியன் காதல் கோட்டைக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத காதல் கதைகளை தேடி தேடி தயாரித்து வந்தார். அப்படியொரு படம்தான் காதலே நிம்மதி.

காதலித்தால் எதிர்ப்பு வருவதை பார்த்து இருப்பீர்கள், காதலிக்காமலே எதிர்ப்பு வருவதை பார்த்து இருக்கிங்களா, தற்செயலாக நாயகன் சூர்யாவுக்கும் நாயகி ஜீவிதா சர்மாவுக்கும் நடந்த சந்திப்பை வைத்து அவரது அண்ணன் தேவையில்லாமல் சந்தேகப்பட்டு சூர்யாவை அடி அடி என பார்க்கும் இடமெல்லாம் அடிக்க, அதற்கு ஏற்றது போல் சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அமைய என்ன நடக்கிறது என்பது கதை.

அப்பாவி சூர்யாவை காப்பாற்ற வக்கீலாய் முரளி நடித்திருப்பார். முரட்டு முட்டாள்தனமான முரடனாய் நாயகியின் அண்ணனாக நாசர் வித்யாசமான படம் இது.

இதில் இடம்பெற்ற ஒரு தேவதைக்கு ஒரு தேதி வச்சாச்சு, விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, கங்கை நதியே போன்ற தேவா இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

பசி நாராயணன் எண்ணற்ற படங்களில் கவுண்டமணி, வடிவேலு போன்ற அனைத்து முன்னணி நடிகர்களின் காமெடிகளில் இணைந்து நடித்துள்ளார்.சூ...
01/02/2025

பசி நாராயணன் எண்ணற்ற படங்களில் கவுண்டமணி, வடிவேலு போன்ற அனைத்து முன்னணி நடிகர்களின் காமெடிகளில் இணைந்து நடித்துள்ளார்.

சூரியனில் வரும் ஃபோன் வயர் பிஞ்சி , காமெடி இவரின் நடிப்பில் புகழ்பெற்றது. இது போல ஆண்பாவம் படத்தில் வரும் லட்டு ஆயிரம் துட்டு ஆயிரம் காமெடி, ரத்னா படத்தில் வடிவேலு கதை சொல்லியே காதில் ரத்தம் வரவைக்கும் காமெடி, காபி சாப்டிங்களா டிபன் சாப்டிங்களா என்ற நினைத்தேன் வந்தாய் காமெடி புகழ்பெற்றது.

மனோகரின் நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் , துரை இயக்கத்தில் வந்த பசி படம் மூலம் பிரபலமானார்.

இவருக்கு நடிப்பு தவிர நடனமும் ஆட வருமாம்.

இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை பூர்விகமாக கொண்டவர். கோவை உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து கடந்த 1998ல் மரணமடைந்தார். நினைத்தேன் வந்தாய் திரைப்படம் இவரின் கடைசி திரைப்படம்.

நடிகர் அருள்தாஸ் இயக்குனர் மிஷ்கினை சில வாரங்களுக்கு முன்பு அவர் ஆபாசமாக பேசியதற்காக வெளுத்து வாங்கி இருந்தார். இந்த நில...
01/02/2025

நடிகர் அருள்தாஸ் இயக்குனர் மிஷ்கினை சில வாரங்களுக்கு முன்பு அவர் ஆபாசமாக பேசியதற்காக வெளுத்து வாங்கி இருந்தார். இந்த நிலையில் நடிகர் அருள்தாஸிடம் ஒரு வார பத்திரிக்கை மீண்டும் அவரின் வாயை சீண்டி ஒரு பேட்டியை வாங்கியுள்ளது மிஷ்கின் ஆபாசமாக பேசியதற்காக கேள்வி எழுப்பி அந்த பேட்டியை வாங்கி உள்ளனர்.

அதில் அருள்தாஸ் குறிப்பிட்டதின் சுருக்கம். மிஷ்கின் எல்லா மேடைகளிலும் தான் ஒரு குடிகாரன் என்றும் அடுத்தவர்களையும் குடிகாரன் என சொல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இவர் இயக்குனர் ராஜேஷை ஒரு மேடையில் மோசமாக பேசினார் அவர் கொடுத்த அளவுக்கு ஹிட் கூட மிஸ்கின் கொடுக்கவில்லை. அதுபோல இயக்குனர் பாலாவை தேசிய விருது பெற்ற இயக்குனரை அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் குடிகாரன் என்று பேசினார்.சினிமாவில் இத்தனை சங்கங்கள் உள்ளது யாரும் இதைக் கேட்காதது வருத்தமாக உள்ளது. நடிகர் விஷாலுக்கும் அவருக்கும் தனிப்பட்ட பிரச்சனை அதை மேடையில் ஆபாசமாக பேசினார் மிஸ்கின்.

இவர் ஊட்டியில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் கூட ஒரு நாளைக்கு சில வரிகள் கூட வாசிக்காதவன் ஒரு ஆபாச சொல்லை சொல்லி இவரின் மகன் என்ற மிஸ்கின் குறிப்பிட்டு இருந்தார் இதற்கும் அவருக்கு அங்கேயே எதிர்ப்பு இருந்தது. instagram ஃபேஸ்புக் ரீல்ஸ்களில் எத்தனையோ தம்பி தங்கைகள் நன்றாக ஆடுகிறார்கள் பாடுகிறார்கள் அதையெல்லாம் பார்த்து பாராட்டாமல் ஆபாசமான விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டு அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்து ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆபாசமாக செய்கிறார் என்றால் இவரின் முதல் படமான சித்திரம் பேசுதடி வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற ஒரு பாடலை வைத்திருந்தார் அந்த பாடலில் இருந்து எத்தனையோ படங்கள் ஒரு இதுபோல ஒரு குத்துப் பாடல் ஒன்றை வைத்திருந்தார் அதற்கெல்லாம் என்ன செய்வது. பேசுகிறவர் சரியாக பேச வேண்டும் என்ற ரீதியில் அருள்தாஸ் பதில் சொல்லி இருக்கிறார்

ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் ஒன்று வரும் நாகேஷ் நடித்திருப்பார். உதாரணத்திற்காக இதை குறிப்ப...
01/02/2025

ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் ஒன்று வரும் நாகேஷ் நடித்திருப்பார். உதாரணத்திற்காக இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் இதுபோல எண்ணற்ற தமிழ் படங்களில் இஸ்லாமிய குடும்பம் ஏதாவது ஒன்று வரும். படத்தின் ஓரிருக் காட்சிக்காக அந்த இஸ்லாமிய குடும்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும் படம் முழுக்க வராது.

இதை முதன்முறையாக உடைத்து அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய இயக்குனர் மீரா கதிரவன் வித்தியாசமான முறையில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் படத்தின் பெயர் ஹபிபி.

இப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் அவர்களின் குடும்ப வாழ்வியலையும் பேசுகிறதாம். இதுபோல முழுக்க முழுக்க இஸ்லாமிய குடும்பங்கள் பின்னணியில் முழு கதையும் வருமாறு எந்த படம் வந்ததில்லை என இயக்குனர் மீரா கதிரவன் சொல்லுகிறார். கஸ்தூரிராஜா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இஸ்லாமிய சமூகம் பற்றி இருந்தாலும் மனிதர்களின் அன்பை பற்றி சொல்லக்கூடிய ஒரு அழகான படமாக இருக்கும் என மீரா கதிரவன் சொல்லுகிறார்.

விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கிய இடத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ளார். இந்த வேடம் பக்கத்து வீட்டு பெண் போல அவரை அவ்வளவு எ...
01/02/2025

விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கிய இடத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ளார். இந்த வேடம் பக்கத்து வீட்டு பெண் போல அவரை அவ்வளவு எளிமையாக காட்டுமாம். கதாபாத்திரத்தை பார்த்து அஜித்குமார் அவரை பாராட்டினாராம். அதைக் கேட்டவுடன் ரெஜினாவுக்கு தன்னுடைய வேலையை சரியா செய்திருக்கோம் என்ற நம்பிக்கை பிறந்ததாம். அஜித் சார் ரொம்ப அப்சர்வ்மென்ட் அவர் ரேஸ்ல இருந்ததால அவரோட பேச முடியல இப்பதான் அவரிடம் பேசினேன் அவர் ரேஸ்ல வெற்றி பெற்ற போது துபாய் சென்று அவரிடம் சியர் சொல்ல முடியவில்லை என்ற வருத்தப்பட்டேன்.

அஜித் சார் கூட நீங்க சேர்ந்து வேலை செஞ்சா அது உங்க வாழ்க்கைக்கு நிறைய அர்த்தத்தை தரும் என்ன அவர் அந்த மாதிரி மனிதர் என ரெஜினா வாய் திறந்து சொல்லியுள்ளார்

இளையராஜா இசையமைத்த மூடுபனி திரைப்படத்தில் இடம் பெற்ற என் இனிய பொன் நிலாவே பாடல் எவ்வளவு புகழ் பெற்ற பாடல் என அனைவருக்கும...
01/02/2025

இளையராஜா இசையமைத்த மூடுபனி திரைப்படத்தில் இடம் பெற்ற என் இனிய பொன் நிலாவே பாடல் எவ்வளவு புகழ் பெற்ற பாடல் என அனைவருக்கும் தெரியும்.

இப்பாடலை இளையராஜாவே பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அந்த அளவுக்கு காப்பிரைட்ஸ் சட்டங்கள் வலிமையாக இருக்கின்றன.

பா விஜய் இயக்கத்தில் ஒரு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இப்பாடலை பயன்படுத்தி உள்ளார். இதற்காக முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி கேட்டு அப்பாடலை பயன்படுத்தி உள்ளார்.

இருப்பினும் இப்பாடல் தனக்கு சொந்தமானது என சரிகமப நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இப்பாடலை இளையராஜா பயன்படுத்த முடியாது. இப்பாடலின் ஆசிரியர் இளையராஜாவும் கிடையாது, மேலும் சரிகம நிறுவனத்திற்கு விற்று விட்டதால் அவர்களின் அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இருந்தாலும் இப்பாடலுக்காக அதிகமாக செலவிட்டு விட்டதால் சரிகம நிறுவனத்துக்கு 30 லட்சம் கொடுத்து விட்டு இப்பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நடிகர் மோகன் நீண்ட வருடமாக நடித்தாலும் அவர் நடிப்பில் அழகாக தெரிந்ததற்கு காஸ்ட்யுமும் ஒரு காரணம். மோகனுக்கு இந்த உடை போட...
01/02/2025

நடிகர் மோகன் நீண்ட வருடமாக நடித்தாலும் அவர் நடிப்பில் அழகாக தெரிந்ததற்கு காஸ்ட்யுமும் ஒரு காரணம். மோகனுக்கு இந்த உடை போட்டால் அழகா இருப்பார் என பார்த்து பார்த்து மோகனுக்கு அழகான உடை வடிவமைப்பை செய்தவர் இராஜேந்திரன்.

40வருடத்திற்கும் மேலாக காஸ்ட்யும் டிசைனராக இருந்த ராஜேந்திரன், விஜயின்சில படங்களுக்கும் காஸ்ட்யும் டிசைனரா பணிபுரிந்தவர்.

இவர் உடல் நலகுறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு மோகன் அஞ்சலி செலுத்தினார்.

மலையாளத்தில் பிரபலமாக விளங்கிய ஷ்யாம் ஒரு லெஜெண்ட் இசையமைப்பாளர். தமிழில் வந்த பல படங்களில் இவரின் இசையில் பாடல்கள் நன்ற...
31/01/2025

மலையாளத்தில் பிரபலமாக விளங்கிய ஷ்யாம் ஒரு லெஜெண்ட் இசையமைப்பாளர். தமிழில் வந்த பல படங்களில் இவரின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கும்.

குறிப்பாக 80களில் வந்த மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் மழை தருமோ என் மேகம் என்ற பாடல் மிக பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

தமிழில் கருந்தேள் கண்ணாயிரம் தொடங்கி எண்பதுகளின் இறுதிவரை பல படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை இவர் கொடுத்துள்ளார்.

பூமழை பொழியுது என்ற விஜயகாந்த் படத்திற்கு ஆர்.டி பர்மன் பாடல்களை கொடுக்க ஷ்யாம் பின்னணி இசை அமைத்தார்.

இவரின் இயற்பெயர் சாமுவேல். இவர் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி மற்றும் சலில் செளத்ரியிடம் பணியாற்றியவர் அவர்கள் சேர்ந்துதான் இவருக்கு ஷ்யாம் என பெயர் வைத்துள்ளனர்.

மலையாள முன்னணி இசையமைப்பாளர் என்றாலும் இவர் தமிழ்நாட்டில் சென்னையில் கிண்டியில் பிறந்தவர்.

அருண்பாண்டியன் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ , ஐங்கரன் கம்பெனி பங்குதாரர் நடிகர், தயாரிப்பாளர் என பரிமாணங்களை கொண்டவர். இவர...
31/01/2025

அருண்பாண்டியன் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ , ஐங்கரன் கம்பெனி பங்குதாரர் நடிகர், தயாரிப்பாளர் என பரிமாணங்களை கொண்டவர். இவர் நடித்த பழைய படங்களை சொல்லும்போது உடனே நியாபகம் வருவது ஊமை விழிகள், இரண்டாவது நியாபகம் வரும் சிதம்பர ரகசியம்.

ராமநாராயணன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான இளஞ்ஜோடிகள் என்ற படத்தில் தான் அருண்பாண்டியன் முதன் முதலில் அறிமுகமானார்.

திருநெல்வேலியில் வசித்த ஓய்வுபெற்ற லெப்டினெண்ட் கர்னல் செல்லையா தான் அருண்பாண்டியனின் அப்பா.இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவரது சகோதரர் துரைப்பாண்டியன் ஒரு இயக்குனர், அவரின் இயக்கத்தில் அருண்பாண்டியன் ஊழியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Patti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinema Patti:

Videos

Share