Karthik vishwakarma

Karthik vishwakarma KARTHIK VISHWAKARMA

09/11/2024
மூளை தான் முதலீடு... 🤔😀ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான்.இதை கவனித்த வங்கி ...
03/11/2024

மூளை தான் முதலீடு... 🤔😀

ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான்.

இதை கவனித்த வங்கி மேலாளர் அவனை என்ன சேதி என்று கேட்க அதற்கு அந்த சிறுவன் வாங்க உங்க உங்க அறைக்கு அங்க போய் பேசலாம்! என்றான்.

உள்ளே போனதும் சிறுவன் சொன்னான் சார்! தினம் நான் ஒருவரிடம் ஆயிரம் பந்தயம் கட்டுவேன்! ஜெயித்த காசை இங்கு வந்து டெபாசிட் செய்கிறேன் என்றான். சரி இன்று என்னுடன் பந்தயம் கட்டு ஜெயித்தால் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்! சொல்லு என்ன பந்தயம்.

சிறுவன் சொன்னான் என் கண்ணை என்னால் முத்தமிட முடியும்! சரி பந்தயம் தயார் எங்கே உன் கண்ணை நீ முத்தம் இடு பார்க்கலாம். என்றார் மேலாளர்.

அவனும் உடனே தன் செயற்கை கண்ணை முகத்தில் இருந்து கையில் எடுத்து முத்தம் கொடுத்தான்!

வங்கி மேலாளரும் தன் தோல்வியை ஒப்பு கொண்டார்.

ஆனால் அவர் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை, சிறுவனிடம் இன்னும் ஒரு தடவை பந்தயம் கட்டலாம், ஆனால் இந்த தடவை பந்தயம் என்னை வைத்து கட்ட வேண்டும். சரி என்றான் சிறுவன் மேலாளரை பார்த்து நீங்கள் இன்று பட்டா பட்டி டவுசர் தான் போட்டு இருக்கீங்க அதே ஆயிரம் ரூபாய் பந்தயம்! என்றான். இப்பொழுது மேலாளருக்கு சந்தோசம்! சரி என்று பந்தயதிற்கு ஒப்பு கொண்டார்.

ஆனால் சிறுவன் ஒரே ஒரு கண்டிசன் வங்கியில் வேலை செய்யும் பத்து பேர் முன்னிலையில் தான் நடக்கனும் என்று சொல்ல அவரும் சரி என்றான்.

பத்து பேர் முன்னிலையில் அவர் தன் கால் சட்டையை விளக்கி காட்ட, என்ன ஆச்சரியம் அவர் அன்று பட்டா பட்டி டவுசர் போடவே இல்லை! சிறவனை ஜெயித்து விட்டோம் திரும்பி ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அவர் தள்ளி குதிக்க!

வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள். என்று சொல்ல அவர் பதறி போய் என்ன ஆச்சு என்று கேட்க,

இந்த சிறுவன் எங்கள் எல்லாரிடமும் வந்து உங்கள் வங்கி மேலாளரை இன்று உங்கள் முன் டவுசரை கழட்டி நிற்க வைக்கிறேன் என்று ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினான். நாங்களும் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர் கட்டாயம் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று பத்து பேரும் தலைக்கு ஆயிரம் பந்தயம் கட்டினோம் என்றார்கள்.

சிறுவன் தோற்ற ஆயிரத்தை மேலாளரிடம் கொடுத்து விட்டு பத்து பேரிடம் பத்தாயிரம் வாங்கி கொண்டு வேற வங்கிக்கு செல்ல ஆரம்பித்தான்...

மூளை தான் முதலீடு... 🤔
நன்றி Damodharan Ramu 😀

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) அந்த கணக்கு தெரியுமா?இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும்  அல்...
16/10/2024

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) அந்த கணக்கு தெரியுமா?

இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும் அல்ல.

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ?

அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ?

அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ?

அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்
எப்படி என்கிறீர்களா...?

இதோ இப்படி,,,,

கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் 9+12+27=48

எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.

இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் (மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
இன்னும் சந்தேகமா ?

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! இந்த யோக அறிவியல் உண்மை விளங்கும்.

ஓம் குருவே சரணம் 🙇 🙏

பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?அனுபவத்துல சொல்றேன்கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்க...
16/10/2024

பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?

அனுபவத்துல சொல்றேன்

கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்கவே மாட்டாங்க.

அவங்க தேவைக்கு நம்மள பயன் படுத்திக்குவங்க.

அவங்க வீட்ல எந்த நல்லது கெட்டது நாலும் நமக்கு யாரோ சொல்லிதா தெரிய வரும்.

முக்கியமா நம்ம வீட்டுக்கு வரத கமி பண்ணிக்குவாங்க.

ரெண்டு வார்த்த அதையும் அளந்து அளவா பேசுவாங்க.

அறிவுரை அடை மழையா பொழிவாங்க.

பணமில்லாவிட்டால் ஒரு நாள் பொழுதை நீங்க கழிக்க முடியாது.

மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு, அன்றாடம் செலவு, போக்குவரத்து, டாக்டர் பில் முதற்கொண்டு எல்லாவற்றிக்கும் பணம் வேண்டும்.

பணம் இல்லை என்றால் உங்கள் தன்மானம் அழிந்து விடும். உங்கள் வாழ்க்கை துணை கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.

உயிரற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கூட! உயிருள்ள மனிதனுக்கு இருப்பதில்லை!

இயற்கைக்கும் மனிதனுக்கும்  இடையே நடக்கும் போரில் இயற்கையே வெல்லும் நீங்கள் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள், அதன் உரிமையாளர் ...
15/10/2024

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரில் இயற்கையே வெல்லும்

நீங்கள் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள், அதன் உரிமையாளர் நீங்கள் அதைக் கொடுப்பீர்களா அல்லது மற்றவர்களுக்குக் கொடுப்பீர்களா?

இயற்கையும் யாருக்காகவும் தன் பாதையை மாற்றாது, #சென்னையில் வாழும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு பாடம்🙂

144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள் 👏✈️
11/10/2024

144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள் 👏✈️

*மனம் கலங்காதிருக்க ரகசியம்...*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்!கடவுள் எப்பொழுதும் கூடவே இருக...
11/10/2024

*மனம் கலங்காதிருக்க ரகசியம்...*

தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்!

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*ஜபமாக இருக்கலாம்...*

*தொழுகையாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியையும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்.
ஹரி

 #விலை_வாசி 📢📣
04/10/2024

#விலை_வாசி 📢📣

குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு ஆணின் வலியை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி அவரையும் அவர் உழைப்பையும் மதித்து வாழ சொல்லி...
01/10/2024

குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு ஆணின் வலியை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி அவரையும் அவர் உழைப்பையும் மதித்து வாழ சொல்லி கொடுப்பது ஒவ்வொரு தாயின் கடமை

🙏🙏🙏
20/09/2024

🙏🙏🙏

🔥 *தீட்டு நாட்கள்  (அந்த மூன்று நாட்கள்)*🔥ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செ...
12/09/2024

🔥 *தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)*🔥

ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் அமர சொன்னார்கள் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில்...

அதாவது ஆரியர்கள் வருவதற்கு முன்...

*பெண்களின் இரத்தப் போக்கை கண்ட நம் முன்னோர்கள் அவர்களின் உடல் வலிகளை உணர்ந்து அந்த மூன்று நாட்கள் ஓய்வு அளித்தனர்.*

*அந்தக் காலங்களில் இன்று போல் துணி நாப்கின் போன்ற உபகரகணங்கள் பயன்படுத்தப் படவில்லை. மாறக வாழை மட்டைகளையும் மண் பாண்டங்களையும் பயன்படுத்தினர்.*

அது மட்டுமல்லாமல் இரத்தம் தரையெங்கு விழும் என்பதால் ஒரே இடத்தில் அமரச் செய்தனர். இதனால் கோவில்கள் செல்ல முடியவில்லை. விளக்கேற்றவோ வீட்டு வேலைகள் செய்தால், இரத்தப் போக்கு அதிகரிக்கும் இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் போன்ற விசயங்களினால் அவதிப்படுவர் என்பதினால் மட்டுமே.

இதற்குப்‌ பெயர் தீட்டு என்று அந்தணர் கூட்டம் பொய்யுரைத்தது.

ஆனால் இறைவனை எக்காலமும் வணங்கலாம். இறைவனை வணங்க சாஸ்த்திரம் தேவையில்லை.

கீழே ஒரு உண்மையான வரலாறு...

நமச்சிவாய வாழ்க!

🔥 *"மாதவிடாய் காலத்தில் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்த பெண்ணைப்பற்றி தெரியுமா???"*🔥

திருஞானசம்பந்தர் தனியாக சிவசோதியில் கலக்கவில்லை. சம்பந்தரின் திருமண விழாவில் சோதியாய் தோன்றிய சிவபெருமானுடன், திருமண விழாவுக்கு வந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு கூட்டமாக சோதியில் கலந்தவர்தான் சம்பந்தர் பெருமான்.

🔥 *ஈசன் சோதியாக எழுந்ததும், எல்லோரும் சிவனோடு சேர்ந்து பேரின்ப வீடான ஈசனின் திருவடி நிழலை அடைவோம் வாருங்கள் என்று சம்பந்தர் அழைத்ததும், அனைத்து மக்களும் சோதியோடு சேர்ந்தனர்.*🔥

*🔥ஆனால் ஒரு பெண் மட்டும் தயங்கி ஓரமாக நின்றால். அப்பெண்ணை பார்த்து சம்பந்தர், ஏனம்மா இங்கு நிற்கிறாய்!! ஈசனோடு சேர விருப்பமில்லையா?? என்று கேட்டார்.*🔥

🔥 *கண்கள் கலங்கிய நிலையில், "சுவாமி, நான் தீட்டுப் பட்டுவிட்டேன். மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன். நான் எப்படி!!!!!!!!" என்று சொல்லித் தன் இயலாமையையை கண்ணீரால் தெரியப்படுத்தினால்.*🔥

🔥 *இதைக் கேட்ட ஞானசம்பந்தர் என்ன கூறினார் தெரியுமா?????*
*"அம்மா...... நீ தீட்டு என்று கருதுவதால் இது தீட்டு ஆகிவிடாது. அப்படியே இது தீட்டு என்றால், உன் தீட்டு வெறும் தீப்பொறிப் போன்றதே. சிவபெருமான் சோதி ரூபமானவன். "இந்த சிறிய தீப்பொறி, அந்த சோதியை என்ன செய்துவிடும்" என்று சொல்லி, அப்பெண்ணை தேற்றி, அவளையும் சிவபெருமானோடு சேரச் செய்தார்.*🔥

🔥 *மாதவிடாய் என்பது உடலின் இயல்பு. அது ஒரு போதும் தீட்டாகாது. 365 நாளும் சிவபெருமானை வழிபடலாம். 365 நாளும் சிவச்சின்னங்களை அணியலாம்.*🔥

🔥 *மாதவிடாய் காலத்தைத் தீட்டு என்றும், தீட்டு நேரத்தில் ஈசனை பார்க்கக் கூடாது என்றும் சிவச்சின்னங்கள் அணியலாகாது என்றும், வீட்டின் பூசையறைக் கதவுகளை தாழிட வேண்டும் என்றும் சிவனடி சேர்ந்த நால்வர் பெருமக்களும் நாயன்மார்களும் எங்கும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன்...... சிவபெருமானே தம் கைப்பட எழுதிய திருவாசகத்திலும் அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.*🔥

*சிவனடியைச் சேராதவர்களும், சிவனடியை சேர விடாதவர்களாலும் உருவாக்கப்பட்ட நெறிதான், மாதவிடாய் காலத்தில் இறைவனைப் பார்க்கவே கூடாது என்ற நெறி.*

*சிவபெருமான் மீது மெய்யாகவே அன்பு கொண்டவர் தொழுநோயராக இருந்தாலும், மாட்டின் தோலை உறித்து பிழைப்பு நடத்தும் புலையராக இருந்தாலும், அவர்தான் நான் வணங்கும் கடவுள் என்று சிவனடி சேர்ந்த அப்பர் பெருமான் பாடியுள்ளார். தொழுநோயைவிட மோசமானதா மாதவிடாய் காலம்????*

*எங்கள் வீட்டில் இந்த பழக்கம் செல்லாது. யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அஞ்சவேண்டாம். ஈசனோடு நெருங்கிப் பழகப் பழக, உங்கள் வீட்டாரும் ஈசனை உணர பழகிக் கொள்வர். துணிவே சிவம்.*

*மறையும் முறையும் எமக்கில்லை!*

*மனமும் மொழியும் தடையில்லை!*

*சிவனை நினைப்போம்!*

*சிவனை உரைப்போம்!*

*சிவனடி சேரவே சீவித்திருப்போம்!*

திருச்சிற்றம்பலம்

*_ஆத்மா_* பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்.. இந்த கலியுகத்தில...
11/09/2024

*_ஆத்மா_*


பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்..

இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்....

அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்.....

நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன்.

அந்த இரண்டை கொண்டு,

*நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*.

*இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*..

*இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*.

*உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்*

*நீ என்னை அழைத்தால் ஒழிய*.

*இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*.

*ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை*
*உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*.

*இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்*

*ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்*..

*ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு*

*எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்.* .

*என்னை இனிமேல் பிறக்க வைக்காதே*. *எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்*.

*அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும்*

*ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்.*

*அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம்,*

*ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.*

சிசு குழந்தையாக பிறந்து இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும் விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் இருந்து பிறந்து விடுகிறோம்.

உங்களுக்கு தெரியுமா?

*வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட "சடாரி" என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள்*.

*அது ஏதற்கு என்றால் "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்*.

*மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக* *என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்*.

நீங்கள் நினைப்பது என் காதுகளில் விழுகிறது.

இறைவன் எவ்வளவு கொடியவன் என்று.

நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு.

இந்த உண்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை பிறக்கையிலே வாழக்கூடிய இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் இறைவன்.

ஒன்று ஆத்மா மற்றொன்று மனசு.. .

நீங்கள் ஆத்மாவை ஆதரமாக கொண்டு வாழ்ந்தால் இறைவனை சென்றடையலாம்..

உங்கள் மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தால் பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். முடிவு நம் கையில்.

ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்னும் ஜீவனுக்குண்டான சுதந்திரத்தை கொடுத்து தான் அனுப்புகிறான்.

ஆத்மா இறைவனுக்கும் நமக்கும் உண்டான பாலம்.

மனசு நமக்கும் இந்த பூலோகத்திற்கும் இருக்கும் பாலம்.

வாழும் வகை நம் கையில் தான் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேல் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறான்.

இதயத்தின் வலது பாகத்தில் ஒரு நெல்லின் நுனியை நூறு பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு சிறு பகுதி மிஞ்சுமே அந்த அளவில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருகிறான்.

இறைவனின் ஐந்து அவதாரங்களில் இந்த அந்தர்யாமி அவதாரமும் ஒன்று.

நாம் எல்லோருமே இறைவன் நமக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவித்து இருக்கலாம்.

நாம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும் தெரியுமா?.

அந்தக்குரலுக்கு சொந்தகாரர் இறைவனே..

இறைவன் ஒவ்வொரு பிறவியிலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்க இருக்க காரணம் என்ன தெரியுமா?

மனிதனுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எந்த நொடியிலும் வரலாம்..

ஏதாவது ஒரு பிறவியில் இவன் திருந்தி ஆத்மாவை ஆதாரமாக கொண்டு வாழ ஆரம்பித்து இறைவனை அழைத்தால் அந்த நொடியே இவனை ஆட்கொண்டு வழி நடத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ளத்தான்..

ஏன் தெரியுமா? நாம் அனைவருமே இறைவனின் சொத்து.

இறைவன் அவன் சொத்தை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையும் கையாண்டு நம்மை அடைய முயற்சிக்கிறான்.

ஆனால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம்.

திரும்பவும் நமக்கு ஞானம் வருவகற்கு அறுபது வருடமாகிறது. இது ஒரு தொடர்கதையாக ஆகி விட்டது.

Address

Chennai

Telephone

9445339883

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karthik vishwakarma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share