06/05/2024
தனி பெரும்பான்மை இல்லை என்றாலும், பாஜக தனியாக வென்ற ஆசனங்கள் (240), இந்தியா கூட்டணியின் ஆசனங்களை விட (234) அதிகம். காங்கிரஸ் 99.
Magazine in Canada
தனி பெரும்பான்மை இல்லை என்றாலும், பாஜக தனியாக வென்ற ஆசனங்கள் (240), இந்தியா கூட்டணியின் ஆசனங்களை விட (234) அதிகம். காங்கிரஸ் 99.
1976 -அன்னக்கிளி -முதல்படம்
1979- மூடுபனி -100வது படம்
1982-பயணங்கள் முடிவதில்லை -200வதுபடம்
1984-உதயகீதம்-300வதுபடம்
1987-நாயகன்-400வது படம்
1990-அஞ்சலி-500வது படம்
1988முதல் 1992 வரை ஒவ்வொரு வருடமும் 55படம் இசையமைத்துள்ளார் பின்னணி இசையையும் சேர்த்து.இதுவும் உலக அதிசயம்தான்.. இந்த அதிசயத்தை நிகழ்த்திய
இசைஞானி இளையராஜா பிறந்தநாள் இன்று...!
முள்ளிவாய்க்கால் கஞ்சி கிடைக்காத தாகம், வெசாக் தன்சலுக்கு வரிசையில் நின்று தணிக்கப்படுகிறது.
இனிய வணக்கம்.....
Cartoon by Uvindu Rajapakshe.
ஊர் ஒன்றின் பெயரில் உள்ள சமூக வலைதள பக்கமொன்றில் கீழ்க்கண்ட பதிவு காணக்கிடைத்தது. சிலர் சொல்லியிருக்கலாம், சிலர் சொன்னதற்கு காரணம் இருக்கலாம். ஆனால், ஏனையோர் வெளிநாடுகளுக்கு வரக்கூடாது என்று ஏற்கனவே சென்ற தமிழர்கள் அனைவரும் நினைத்திருந்தால், இவ்வளவு பெரிய புலம்பெயர் தமிழர் தொகை வந்திருக்காது. கீழ்க்கண்ட பதிவு, புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தும் இன்னுமொரு பதிவே. இலங்கையில் இருந்து Visitor Visaவில் போனவர்கள் சிலரும், கனடா வரவேண்டாம் என்று வீடியோக்களில் கதறுகின்றார்கள். அது எவ்வாறு சரியானது? கனடா வருவது அங்குள்ள தமிழர்களுக்கு விருப்பமில்லை என்றால், எவ்வாறு ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது Visitor Visaவில் இலங்கையிலிருந்து அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்? யார் உதவியுடன் நிரந்தரமாக தங்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்? வீண் வெறுப்புணர்வை பரப்பும் அந்த பதிவு இதோ.....
"நாங்க தமிழர்!
நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.
நாங்க தமிழர்!
கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம்.
நாங்க தமிழர்!
கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம்.
நாங்க தமிழர்!
குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம்.
நாங்க தமிழர்!
என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம்.
நாங்க தமிழர்!
எங்கட பிள்ளை கனடாவில் நல்லாய் படித்து நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லுவம். மற்றவன் பிள்ளை வந்தா இங்கே பாடசாலை கூட சேர முடியாது சொல்லுவம்.
நாங்க தமிழர்!
Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் .
நாங்க தமிழர்!
கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம்.
நாங்க தமிழர்!
கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம்.
நாங்க தமிழர்!
நாங்கள் அகதியாய் வந்து ஐயா சாமி என்று கெஞ்சி மண்டாடி காட் எடுத்து படம் காட்டுவம். அதை கூட மற்ற தமிழன் செய்ய விட மாட்டம்.
நாங்க தமிழர்!
நாட்டுக்கு வந்து வெளிநாடு என்று படம் காட்டுவம். ஆனால் எவனாவது வெளிநாடு வருவதை விரும்பவே மாட்டம்.
நாங்க தமிழர்... எங்கள் கதை சொல்லி கொண்டே போகலாம் பாக்கிற உங்களுக்கு bour அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்துறன்."
யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தியதோ கொண்டாடியதோ விமர்சிக்கப்படவில்லை. அந்நிகழ்வில் பங்கேற்ற பலர் மோசமாக நடந்துகொண்டமையும், கலவரத்துக்கு வழி வகுத்தமையும், நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருந்த குழப்பங்களும் தான் விமர்சிக்கப்படுகின்றன. அதைக்கூட புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல், வெளிநாடுகளில் கொண்டாடலாம் யாழ்ப்பாணத்தில் கொண்டாட கூடாதா என சிலர் உளறிக்கொண்டிருக்கிறார்கள். வழமை போலவே, புலம்பெயர் தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்த, இந்த சம்பவத்தையும் சில தமிழ் சமூக வலைதள பக்கங்கள் பயன்படுத்துகின்றன. ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற குழப்பங்கள், இலங்கையில் தான் அதிகம் விமர்சிக்கப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது, வெளிநாடுகளில் விமர்சனங்கள் மிக குறைவுதான். ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் மாத்திரமே விமர்சிப்பது போலத்தான் பலரது பதிவுகள் உள்ளன. அத்துடன், புலம்பெயர் தமிழர்கள் மீது வெறுப்பை கக்குவோரில் அநேகமானவர்கள், கனடா போக விசா கிடைத்தால் மூடிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள் என்பதே உண்மை.
நில ஆக்கிரமிப்புக்கு பிடி குடை...
நினைவேந்தலென்றால் உடை...
கறுப்பு நிறத்தவர்கள் மீது இந்தியர்கள் கொண்டிருக்கும் நிறவெறி, கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்களின் நிறவெறியைவிட மோசமானது. நம்பவே முடியாதது. வெண்ணிற தோலின் மீது இந்தியர்களுக்கு எவ்வளவு பித்துப் பாருங்கள்! இந்திய திரைப்படங்களை பார்த்தால், இந்தியா என்பது வெண்ணிறம் கொண்டவர்களின் நாடு என நீங்கள் நினைக்கக்கூடும்.
- எழுத்தாளர் அருந்ததி ராய் -
லியோ திரைப்படத்தில் கற்பழிப்பு காட்சி இருந்திருக்கலாம் என்று மன்சூர் அலி கான் பேசியது பெண்களை கேவலப்படுத்தும் பேச்சு என்றால், இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இடம்பெற்ற கற்பழிப்பு காட்சிகளும், பணத்தை வாங்கி குவித்துக்கொண்டு த்ரிஷா, குஷ்பூ அடங்கலான நடிகைகள் நடித்த எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளும், பெண்ணியத்தை கெளரவப்படுத்தும் செயலா?
அப்போ எப்போ ஆண்டவரே..?
உச்சியிலிருந்து ஒரு பார்வை..!
தமிழ்நாட்டில் தமிழ் நடிகர்கள் கம்மி...
அந்த கம்மி பேரும் இருக்கிறாங்க பம்மி...
தமிழ்நாடு நடிகர் சங்கமே இல்லையாமே?
அது தென்னிந்திய நடிகர் சங்கமாமே?
அணிவகுப்பு!
அடேய்... முடிவே பண்ணிட்டீங்களாடா..!
இராணுவ பலத்தை ஒப்பிட்டு, இப்பிடியும் ஒரு வீடியோ உலவுது. இந்தியா பாகிஸ்தான் போய், இனி இந்தியா கனடா எண்டு ஆக்கிடுவாங்க போல!
பேசியே நாசமாக்கிறியே தலைவா!
அப்போது நீங்கள் தமிழர் என்பதை சிங்களவர்கள் மறக்கவில்லை என்பதால் தடைகள். இப்போது, நீங்கள் தமிழர் என்பதை நீங்களே மறந்து விட்டதை தமிழர்கள் நினைவில் வைத்திருப்பதால் தடைகள்.
இராவணனிடம் பறக்கக்கூடிய விமானம் ஒன்று இருந்தது என்பதில் எனக்கு முன்பு நம்பிக்கை இருக்கவில்லை.
ஆனால் இப்போது, அவனுடைய புஷ்பக விமானத்தின் பறப்பைப் பற்றி மட்டுமல்ல சிறப்பைப்பற்றியும் அறிந்து கொண்டேன்.
ஆமாம். இராவணனின் புஷ்பக விமானம் வெறும் பறக்கும் விமானம் மட்டுமல்ல. அது ஒரு காலயந்திரம்: டைம் மெஷின்.
இல்லையென்றால், இராவணன் எப்படி புத்தர் பிறப்பதற்கு முதலே பௌத்தனாகவும். விஜயன் வருவதற்கு அல்லது வராமல் விடுவதற்கு முதலே சிங்களவனாகவும், நபிகள் நாயகம் பிறப்பதற்கு முதலே முஸ்லிமாகவும் இருந்திருக்க முடியும்?
இராவணன் தனது புஷ்பக விமானமாகிய காலயந்திரத்தில் எதிர்காலத்திற்குப் பறந்து வந்து இப்படியெல்லாம் மாறிக்கொண்டு மறுபடி தனது காலத்துக்குப் பறந்து போயிருக்க வேண்டும்.
மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது ஒருநிலை, மெய்யுற!
- பிரவீணண் விழி மைந்தன் -
Canada Visa & Work Permit இலகுவானதா?
இலங்கையின் தமிழர் தாயகத்தில், சிங்கள பௌத்த அதிவேக ஆக்கிமிப்புக்கு காரணம் என்ன?
வடக்கு கிழக்கில் 13ஆவது திருத்தத்தையும் கடந்து ஒரு அரசியல் தீர்வு நடைமுறையாகும் எனும் கலக்கம் சிங்களர் மனதில் உருவாகிவிட்டதா?
சிங்களவர்களுக்கு இலங்கை ஒரு தனிச்சிங்கள பௌத்த நாடு எனும் மனோபாவம் நுர்றாண்டு காலமாக இருந்தாலும், 80 களில் இருந்து 2009 வரை அதில் நம்பிக்கை இழந்து. வடக்கு கிழக்கு மாகாணத்தின் சிங்கள எல்லைகளை பாதுகாத்தால் போதும் என்ற கையறு நிலையில் இருந்தார்கள்.
ஏனெனில் ஆயுத பலத்தினால் தமிழர்கள் மேலோங்கி இருந்தார்கள் என்பதைத்தவிர வேறு எக்காரணமும் இல்லை.
2009 பின்னரான ஐந்து வருடத்தில் முழு நாடும் நமதே எனும் மமதை இருந்ததால் இராணுவப் பிடியில் இருந்த நிலங்கள் போக பாரதூரமாக பௌத்த அடையாளத்தை நிறுவுவதில் அதிதீவீரம் காட்டவில்லை.
ஏனெனில் நாடு தமது கட்டுப்பாட்டில் இருப்பதால், எப்போது என்ன வேண்டுமானாலும், எதுவும் செய்துகொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
ஆனால் கடந்த 5 வருடத்தில் வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு பௌத்த அடையாளத்தை நிறுவுதல், பௌத்த விகாரைகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வழங்கல், தனித்தமிழ் பிரதேசத்திலும் விகாரைகளை அமைத்தல், வரலாற்றில் சிங்களவர்கள் வாழாத பகுதிகளில் அடாத்தாக சிங்களர்களைக் குடியமர்த்தல் என்பன கடந்து. கேவலம் அரச மரம் இருக்கும் ஒவ்வொரு இடத்தையும் பௌத்த சமயத்திற்கான அடையாளம் என தொல்லியல் கூறாகவும் ஆவணப்படுத்த விளைவதன் நோக்கம் என்பது ஒரு மேலாதிக்க சிந்தனை என்பதை விட ஒரு பயத்தின் வெளிப்பாடாகவு இருக்கும், அது என்னவாக இருக்கும்?
1. வடக்கு கிழக்கு ஒரு நிலத்தொடர்பு அற்ற மாகாணம் எனநிறுவுதற்கு சான்றுகளை உருவாக்குதல்.
2. இம்மாகாணங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தார்கள் எனும் அடையாளத்தை அழித்தல்.
3. தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகள் அனைத்தும் சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிதான் எனநிறுவுதல்.
4. வடக்கு கிழக்கில் சைவத்தமிழர்கள் பூர்வீக குடிகள் இல்லை என்பதை நிறுவுதல்.
இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி நிரல் அல்ல 1956 காலத்தில் இருந்து வந்ததுதான். ஆனால் 40 ஆண்டுகள் தடுக்கப்பட்டிருந்தது. தள்ளிப்போடப்பட்டிருந்தது.
இன்னொரு பக்கம் நோக்கின், அரசின் இந்த அவசரத்திற்குக்காரணம், வடக்கு கிழக்கில் 13 யும் கடந்து ஒரு அரசியல் தீர்வு நடைமுறையாகும் பயத்தில் இந்த விதைப்பாகவும் இருக்கலாம்.
ஆனால் ஏதோ பீதி அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் நம்பிக்கை இன்னும் அற்றுப்போகவில்லை.
- நன்றி : துஷ்யந்தன் கனா -
நடிகர்களுக்காக Social Mediaல
Full Time சண்டை போடும் Fans.....
லண்டன் நகரின் தெருவிளக்குகளை ஏற்றும் தொழிலாளி - 1935
திருகோணமலையிலுள்ள அரிசிமலை என்கிற தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் யுத்தம் முடிந்த நாள் முதல் பௌத்த மயமாக்கலை எதிர்கொண்டு வருகின்றது
இப்பகுதியில தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரைக்கான (Asiri Kanda Purana Rajamaha Viharaya) அடிக்கல் மஹிந்த ராஜபக்சே அதிகாரத்தில் நாட்டப்பட்டு இருந்தது
அதே போல 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது
நல்லாட்சி காலத்திலும் 25 ஏக்கர் காணி பௌத்த பிக்குகளின் தேவைக்கென வழங்கப்பட்டு இருந்தது
அதே போன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது (Archaeological Forest Reserve.)
பௌத்த பிக்குகள் தவிர சாதாரண மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு இருக்கின்றது
இப்பகுதி எங்கும் புத்த துறவிகளுக்கானது என்றும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது
இங்கு பிக்குகளுக்கான தியான மண்டபங்கள் , வாழ்விடங்கள் உட்பட பல அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அதே போன்று அரிசிமலை கடற்கரையின் தென்மேற்கே உள்ள காட்டு பகுதியில் கூட புத்த கோவில் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்
இதுமட்டுமல்லாது இப் பகுதியை சூழ பல இடங்களிலும் புத்தர் சிலைகளையும் சிறிய பௌத்த கோவில்களை நிறுவி இருக்கின்றார்கள்
இங்குள்ள பாணமுரே திலகவன்ச நாயக்க தேரர் (Panamure Thilakawansa Nayaka Thera) பௌத்தமயமாக்களின் பிரதான சூத்திரதாரியாக இருக்கின்றார்
இவர் வடக்கு கிழக்கு பௌத்த மகா சங்கத்தின் தலைவராகவும் அறியப்படுகின்றார்
அதே போன்று கோட்டாபய ராஜபக்சே நியமித்து இருந்த கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராகவும் கடமையாற்றி இருந்தார்
அண்மையில் பொன்மலைக்குடா பகுதியில் காணி அபகரிப்புக்காக தமிழ் முஸ்லீம் மக்களை அச்சுறுத்திய சிங்கள காடையர்க்ளுக்கு மேற்படி பிக்கு தான் தலைமை தாங்கி இருந்தார்
தற்போது மேற்படி பிக்கு தலைமையிலான குழுவினர் புல்மோட்டை, அரிசிமலை தென்னன்மரவாடி என குச்சவெளி பிரதேச செயலக பகுதிகளில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகளை நிறுவ முயற்சித்து வருகின்றனர்.
- நன்றி - இனமொன்றின் குரல் -
2801B, Eglinton Avenue East
Toronto, ON
M1J2E1
Be the first to know and let us send you an email when உயிரெழுத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to உயிரெழுத்து: