பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த தினம் இன்று.💐
🦉தான் படிக்காவிட்டாலும், தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த தினம் இன்று.💐
1903ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர், ஆறாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிப்படிப்பை தொடரவில்லை. அதனால் தான் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழகம் முழுவதும் பள்ளிக் கூடங்களை திறந்தார் காமராஜர்.
எந்த சொத்தும் இல்லாத ஏழை மக்களுக்கு கல்வி என்ற அழியாத சொத்தை இலவசமாக வழங்கியவர். இதனால் 1957 ஆம் ஆண்டு 15, 800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 29ஆயிரமாக உயர்ந்தது. கல்வி பயில்வதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்க கூடாது என்பதற்காக கல்வியை இலவசமாக வழங்கியதோடு, இன்று வரை உலகம் வியந்து போற்றும் திட்டமான மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனால் தான் பதவியேற்ற முதல் ஐந்தாண்டுகளிலேயே 7 விழுக்கா
மார்லன் பிராண்டோ காலமான தினமின்று🥲
🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
மார்லன் பிராண்டோ காலமான தினமின்று🥲
உலகம் முழுக்க எம்புட்டோ கேங்க்ஸ்டர் ஸ்டோரிஸ் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் படம்தான். அந்த படத்தில் நடிச்ச மார்லன் பிராண்டோவின் நிஜ வாழ்க்கை அம்புட்டு அற்புதமானது. பெரும்பாலான நடிகன் என்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் என்பதைப்போன்ற மனோபாவமே பெரும்பாலும் கொண்டிருக்கும் நமக்கு அவரின் வாழ்க்கை இன்னிக்கும் ஆச்சரியங்களை அள்ளி வழங்குது.
இதோ பத்தே துளிகளில் அந்த பெருங்கடல் உங்களுக்காக :
துன்பங்கள் செதுக்கும் உன்னை !:
மா. பி-யின் அம்மா நடிகை, அப்பா பல ஊர்களுக்கு சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் ரெப். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு அம்மா குடியிலேயே மூழ்கிப்போக அன்பு என்பது என்ன என்றே தெரியாமல் தான் வளர்ந்தார் மார்லான் பிராண்
கார்த்திக் ராஜா பர்த் டே டுடே!💐
கார்த்திக் ராஜா பர்த் டே டுடே!💐
இளையராஜா – இந்த மாபெரும் இசை கலைஞரின் வாரிசுகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, அவரது வீட்டு இசைச் செல்வ்ஃஅங்கள் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு வெற்றியும் கண்டுள்ளனர்.
அதில், ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படாத இசையமைப்பாளர்தான் கார்த்திக் ராஜா!
கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொ
பன்னாட்டு இசை தினம்!🎼
🦉பன்னாட்டு இசை தினம்!🎼
உலகின் பொது மொழி இசை. நாடு, மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி இசைக்கு உண்டு. எண்ணம், செயல், நினைவுகள் என அனைவரின் உணர்வுகளும் இசைக்கு கட்டுப்படும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இசை, இயற்கையின் படைப்புகள் எழுப்பிய ஒலிகள் மூலம் உருவானது. இது காலத்திற்கேற்ப பல பரிமாணங்களைக் கடந்து, நவீனப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
1982-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் கூடினர். அந்த நாளே 'உலக இசை தின'மாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக இத்தினம் இருக்கிறது. உலக மக்களின் கவலையை தீர்க்கும் மாமருந்தாக இசை உள்ளது. குறிப்பாக பெண்களின் மனநிலை மாற்றத்திற்கு இசை பெரும்பங்கு வகிக்கிறது.
சீரற்ற எண்ண
Yoga day
🦉ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் யோகாசனத்தை முறையாகக் கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கண்டு சேர்ப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்தர மோடி, ஐநா சபையில் இதற்காக ஒரு நாள் ஒதுக
எங்கிருந்தாலும் வாழ்க!’. குரலுக்குச் சொந்தக்காரர்... ஏ.எல்.ராகவன்.
🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
காதலுக்கும் காதல் தோல்விக்குமான இலக்கணங்கள், இன்றைக்கு எப்படியோ. ஆனால் அறுபதுகளில், அதுதான் காதல் கீதம். காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்தப் பாடல்தான் வேதம். வார்த்தைகளை நசுக்காமல், மென்மையாய் உச்சரிப்புகளைக் குழைந்து கொடுத்த குரல்தான் தெய்வாம்ச அசரீரிக்குரல். அந்தக் குரல், காதல் தோல்விக்கு மருந்துபோட்டது. ‘சரி சரி... நல்லா இரு’ என்று பிரிந்தவர்களை வாழ்த்தியது. அந்தப் பாட்டு... ‘எங்கிருந்தாலும் வாழ்க!’. குரலுக்குச் சொந்தக்காரர்... ஏ.எல்.ராகவன். இப்போது குரல் மட்டுமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது. அவர் இதே (ஜூன்19ம் தேதி).தினத்தில்தான் 2020ல் காலமானார்🥲
நடிகர் நாகேஷுக்கு இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்பதால், நாகேஷுக்குப் பல பாடல்களைப் பாடியுள்ளார். எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெ
பாடகர் மலேசியா வாசுதேவனின் 78ஆவது பிறந்தநாள் இன்று...💐
வசீகரக் குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவனின் 78ஆவது பிறந்தநாள் இன்று...💐
பாட்டு, யாருக்குத்தான் பிடிக்காது? குத்துப்பாட்டு, காதல் பாட்டு, மெல்லிசைப் பாட்டு, சோகப்பாட்டு, தத்துவப்பாட்டு என்று பாடலில் பல ரகங்கள். இவற்றில் இதுஇதுதான் பிடிக்கும் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். பாட்டு... அவ்ளோதான். அதுல இப்படியென்ன... அப்படியென்ன... எல்லாமே பிடிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எந்தப் பாட்டு வகையை, எவர் பாடினாலும் பிடிக்கும். அப்படி எல்லா வகைப் பாட்டுகளையும் பாடி, பட்டையைக் கிளப்பியவர்களில்... தனித்துவம் மிக்கவர் மலேசியா வாசுதேவன். மலேசியா வாசுதேவனின் குரல் தனி ரகம். சோகப்பாட்டுக்கு அழ வைப்பார். காதல் பாட்டில் குதூகலப்படச் செய்வார். வீரமான கோபமான பாடலைப் பாடினால், அதைக் கேட்டு நம்மைப் பொங்கியெ
கிரேசி மோகன் காலமான தினமின்று :
🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
கிரேசி மோகன் காலமான தினமின்று :
இதை ஒட்டி ஆந்தையாரின் அஞ்சலி ரிப்போர்ட்- மீள்!
நான் அப்போதைய விகடன் மற்ரும் இப்போதையை அப்பள கமெப்னி எடிட்டோரியலில் இருந்த போது எனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் இரா.வேலுச்சாமி மற்றும் பாலா என்னும் சினிமா ரிப்போர்ட்டர் ஆகியோர் இருந்தனர்.. நாங்கள் மூவருமே ஸ்மோக்கிங் ஹேபிட் உள்ளவர்கள் என்பதால் முதல் நாளே ரொம்ப நெருக்கமாகி விட்டோம். வேலுச்சாமியை விட பாலா ரொம்ப நகைச்சுவை ஏற்படுத்துபவர். இவர்தான் அந்த காலத்தில் நடிகர், நடிகைகளை எல்லாம் வீதிக்கு அழைத்து வந்து ஸ்பெஷல் ரிப்போர்ட் அளித்தவர்.
அவரவர் பணியை செய்தபடி அலப்பறை செய்து கொண்டிருந்த எங்கள் கேபினில் திடீரென்று மிகப் பெரிய டேபிள் மற்றும் பிரமாண்டமான சேர் எல்லாம் வந்தன. அதைப் பார்க்கும் போதே தெரிந்தது – வரப் போகிறவர் கொஞ்சம் ம
உலக உணவு பாதுகாப்பு தினம்
🦉உலக உணவு பாதுகாப்பு தினம்
ஜூன் 7 உலக உணவு பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது
உணவுப்பழக்க நோய்கள், அவற்றின் தடுப்பு, மேலாண்மை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு உறுதி செய்தல் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இத்தினத்தின் நோக்கம். உணவை வீணாக்காமல் இருக்க வலியுறுத்தவும் செய்கிறது
உலக தேனீக்கள் தினம் இன்று!
🦉உலக தேனீக்கள் தினம் இன்று!
நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்ரன் ஜான்ஸா (Anton Janša) பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது.
மனிதன் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் இந்த தேனீக்கள்தான். ஒரு கூட்டில் மூன்று வகையான தேனீக்களின் கூட்டணி இருக்கும்.
ஒரேயொரு இராணித் தேனீ
ஆயிரக்கணக்கான ஆண் தேனீக்கள்
பல்லாயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள்..
இனவிருத்தி வேலை இராணித் தேனீக்கு மட்டுமே!
உயிர்வாழுங் காலம் என்று பார்த்தால்
இராணித் தேனீ 3 வருடங்கள்.
வேலைக்காரத் தேனீ 35 நாட்கள்
ஆண் தேனீக்கள், இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் மடிந்து விடும.
இவை தேன் சேகரிக்கும் முறை உலகின் சிறந்த உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பமாகும்.
முதலில் பூக்களில் உறிஞ்சம் தேனை தன் உடலிலுள்ள தேன் பையில் சேகரித்துக் கொள்ளும்.. இந
In remembrance of Actor Murali
🎬From The Desk of கட்டிங் கண்ணையா
தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி. புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 59 வது பிறந்தநாள்.💐
1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் இவர். இவரது அப்பா சித்தலிங்கையா, பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க இந்த நடிகர் முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முர
உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸான நாள் இன்று!
🎬
உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸான நாள் இன்று!📽️
முன்னொரு காலத்தில் -அதாவது 49 வருஷங் களுக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ இப்படம் குறிச்சு நம்ம கட்டிங் கண்ணையா எப்பவோ பகிர்ந்த சுவையான தகவல்கள் மீள் பதிவாக இதோ:
இன்றைக்கும், தமிழகத்தில் அதிமுக கூட்டம் எங்கேனும் நடந்தால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சில பாடல்கள் ஒலி பரப்புவாய்ங்க. அந்தப் பாடல்களில், ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற பாடல் நிச்சயம் இடம்பெறும். இதுதான், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் டைட்டில் பாடல்.
இந்தத் திரைப்பட ஷூட்டிங்குகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்றன. அந்தப் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதித்த அன்னிய செலாவணியைக் காட்டிலும் கூடுதலாக செலவான விவரம் வருமானவரித்துறை
'"யல.. நான் சொல்லுதம்லா.."- நெல்லை சிவா காலமான தினமின்று
🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
'"யல.. நான் சொல்லுதம்லா.."- நெல்லை சிவா காலமான தினமின்று🥲
1985 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.பாண்டியராஜனால் 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நெல்லை சிவா என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி 16 ஜனவரி 1952 ல் பிறந்தவர்
திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர்.
இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. இவர் தனது வாழ்க்கையில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நெல்லை சிவா. வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் வடிவேலுவின் 'கிணற்றை காணும்' என்ற நகைச்சுவை காட்சியில் நடித்து பிரபலமானவர்.
அவர் பேசும் திருநெல்வேலி வட்டாரத் தமிழுக்காகவே அவருக்கு
வலம்புரி ஜான் காலமான தினமின்று!
🦉வலம்புரி ஜான் காலமான தினமின்று!
தமிழ் எழுத்தாளர், பேச்சாளர் , பத்திரிலை ஆசிரியர், மற்றும் நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பல பரிமாணங்களுக்கு சொந்தக்காரர் வலம்புரி ஜான்.
இவரை எதிர்காலத்தை கணிக்கும் வார்த்தைச் சித்தர் என்றும் கூறுவார்கள்..
வலம்புரியார் குறித்து மேலும் சில நினைவுக் குறிப்புகள்
.
மூன்று நாட்கள் ரிகர்சல் நடத்தி எடுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பேட்டியை பாருங்க/ கேளுங்க
🎬rom The Desk of கட்டிங் கண்ணையா! 🔥
இப்போதெல்லாம் பேட்டி எடுக்க போனால் ஏடாகூடமாக ஏதாவது கேட்டு ட்ரெண்டிங் ஆக்க முயல்வது வாடிக்கை..
ஆனால் அந்தக் காலத்தில் வீடியோ பேட்டி எடுக்கக் கூட ஓரிரு நாள் ரிகர்சல் எடுப்பார்களாம்..
அப்படி மூன்று நாட்கள் ரிகர்சல் நடத்தி எடுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பேட்டியை பாருங்க/ கேளுங்க
உலக வானொலி தினம் – பிப்=13📻
🦉உலக வானொலி தினம் – பிப்=13📻
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.இந்நிலையில்தான் ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.
🦉உலக புற்றுநோய் தினமின்று (World Cancer Day) 🦀
🦉உலக புற்றுநோய் தினமின்று (World Cancer Day) 🦀
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி -புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு நாளாக இது பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய முன்முயற்சியாகும். இது பல மில்லியன் கணக்கிலான உயிர்களை மரணத்திலிருந்து பாதுகாக்கின்றது. இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்த, நோய் பற்றிய கல்வியினை வழங்குதல் மற்றும் நாட்டு அரசாங்கங்களுக்கும் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நோய் தடுப்பு பற்றிய அழுத்தங்களை பிரயோகித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை இந்த தினம் குறிக்கிறது. இந்த உலகளாவிய அவசரநிலையை சமாளிக்கவும் நோ
முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை மறைந்த தினமின்று:🥲
🦉முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை மறைந்த தினமின்று:🥲
1969 ஜனவரி 31:- முதல்வர் அண்ணாதுரைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சற்று நேரத்தில், மூச்சு விட இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் இதயத்துடிப்பு நின்று விட்டது. உடனே, அவருக்கு செயற்கை முறையில் மூச்சு வரும்படி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் இதயத் துடிப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் மீண்டும் பழைய நிலையை அடைந்தன. எனினும் "உணர்வு" முழு அளவில் திரும்பவில்லை. கவர்னர் உஜ்ஜல்சிங், திராவிடர் கழகத்தலைவர் ஈ.வெ.ரா.பெரியார், காமராஜர், சி.சுப்பிரமணியம், முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று அண்ணாவைப் பார்த்தனர்.
பிப்ரவரி 1:-"அண்ணாவின் கழுத்துக்கு அருகே மூச்சுக்குழாயில் டாக்டர்கள் ஒரு துளை போட்டு, அதில் குழாய்
ஓஷோ மறைந்த தினமின்று:
🦉ஓஷோ மறைந்த தினமின்று:🥲
செயலும் அதைக்கடந்த நிலையும்!
**********************************
மிக மிக அழகான விஷயங்கள் இருக்கின்றன. அதில் பல்வேறு விதங்கள் உண்டு. இசையும் நடனமும் மிகவும் உடல் சார்ந்த விஷயங்கள். அவற்றோடு செல்லும்போது அவை அழகானவை, ஆனால் ஒருவர் அதோடு நின்று விடக் கூடாது, அவற்றால் தடை பட்டுவிடக் கூடாது. அவை மேலும் உயர்ந்த நிலை செல்லும் வாயிலை திறந்து விடும்.
உதாரணமாக, நீ இசையை நேசித்தால் விரைவில் இசை கரைந்து நீ மௌனத்தில் ஆழ்ந்து விடுவாய். நீ நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தால் விரைவில் நடனம் மறைய வேண்டும், அப்போதுதான் உன்னால் இருப்பு நிலையின் அசையாத தன்மையினுள் இருக்க முடியும்.
சைனாவில் ஒரு பழமையான கதை ஒன்று உண்டு. ஒருவன் தன்னைத் தானே மிகவும் சிறந்த வில்வீரனாக கூறிக் கொண்டான். அவன் அரசரிடம் சென்று, “நான் யாருடைய சவாலையும் ஏற்கத் தயார். நான் வில்வி
Remembering MGR
எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதி இருப்பதைப் படியுங்களேன்:
பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு! பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை. மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
ஆனால், சென்ற ஆண்டு வரையில்,