18/04/2020
Help for the humanity!
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Welfare Media Network, Media/News Company, .
Help for the humanity!
தற்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கு தமிழக அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது என்ற செய்தியோடு ஊரடங்கு காலகட்டத்திலே சிரமப்படக்கூடிய மக்களுக்குஅரசியல் இயக்கங்களோ தன்னார்வ அமைப்புகளோ தனி மனிதர்களோ எந்த உதவியும் செய்யக்கூடாது என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
மகிழ்ச்சிக்குரிய செய்தி. மக்களுக்கு உதவி கொண்டிருக்கக்கூடிய, மக்களோடு மக்களாக கலந்து செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய சுய பாதுகாப்பைக் குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் மக்களுடைய பிரச்சினையை தங்கள் பிரச்சினையாக முன்னெடுத்துக் கொண்டு செல்லக்கூடிய சமூக போராளிகளுக்கு ஓய்வு தரக்கூடிய ஒரு அறிவிப்பை மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கும் அதில் ஓய்வு கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ஆனால் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த கடந்த 23ம் தேதியிலிருந்து இன்றைய நேரம் வரைக்கும் தமிழக அரசு செய்ததென்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஊரெங்கும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தது,
கொரோனோவிற்கு மதச்சாயம் பூசி சிலரை மருத்துவமனையில் சேர்த்தது என்பதைத்தவிர மக்களுடைய பசியைப் போக்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அரசு வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும்.
அரசியல் இயக்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இல்லை என்று சொன்னால் கொரோனோ மரணத்தை விட பட்டினி மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து இருக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பொதுமக்களுடைய பசியைப் போக்குவதற்கு அரசியல் இயக்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளால் செலவிடப்பட்டு வருகிறது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு தன்னார்வ அமைப்புக்கள் செய்யக்கூடிய சேவைகளை அரசு தன் கணக்கில் வைத்துக் கொள்கிறது என்ற கேவலம் கூட நடைபெறுகிறது.
ஆனால் இவற்றைத் தாண்டி மக்களுடைய பசி போக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அரசு உடைய செயல்களை விட நமக்கு திருப்தி அளிக்கக் கூடிய செயல். அரசியல் இயக்கங்களை தன்னார்வ அமைப்புகளை இந்த களப்பணியில் இருந்து அரசு தடுப்பது என்பது வெற்று ஈகோவை தவிர வேறொன்றும் இல்லை. இதனுடைய பலனை அரசு மிக விரைவாக அனுபவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்திய மாநில அரசுகளிடத்திலே மக்களுடைய இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன திட்டங்கள் இருப்பது இருக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. திட்டமிடுவதற்கு இவர்களுக்கு திராணி இருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். 23ம் தேதியிலிருந்து இதுநாள் வரைக்கும் அரசு மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்திருக்கிறது என்பதற்கு எந்த பதிலும் இல்லை.
குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாத காலத்தை எதிர்கொள்ள முடியுமா? இதுவரை அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவிட்டதா? புலம் பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசு இதுவரை செய்ததென்ன? இந்தக்கேள்விகளுக்கு அரசிடம் எந்த பதிலும் இல்லை.
தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைப்பதற்கு அரசியல் இயக்கங்களின் தன்னார்வ அமைப்புகளின் சேவைகளை தடை செய்கிறது. இதன் மூலமாக அரசு என்ன சாதிக்க நினைக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முயலவில்லை
இனிமேல் தமிழகத்தில் ஏற்படக் கூடிய பட்டினிச் சாவுகளுக்கு அரசுதான் பொறுப்பு என்பதோடு மட்டுமன்றி, அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று சொன்னால் தமிழகத்தின் சாலைகளை கொரோனோ அச்சத்தையும் மீறி அரசை தெருக்களில் எதிர் கொள்ள வெல்ஃபேர் கட்சி தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்திலே அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
V அதீகுர் ரஹ்மான்,
மாநிலத் தலைவர்,
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு
நாடாளுமன்ற உறுப்பினகளின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதால் தொகுதி வளர்ச்சிப் பணிகள் தடைபடும். - வெல்ஃபேர் கட்சி.
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வது தொகுதிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தடையாக இருக்கும் என வெல்ஃபேர் கட்சியின் தமிழகத் தலைவர் V அதீகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களின் மிக முக்கியமான முதன்மை வளர்ச்சித் தேவைகளுக்கு எம்.பி நிதி பயன்படுத்தப்படுகிறது. கோவிட் -19 இன் போது, தமிழகம் உட்பட பெரும்பாலான எம்.பி.க்கள் வென்டிலேட்டர்களை வாங்க எம்.பி நிதியைப் பயன்படுத்தினர். எம்பி தொகுதி நிதியை ரத்து செய்வதால் தொகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் தடைபடும். பல நேரங்களில் மத்திய மாநில அரசுகளின் செயல் திட்டங்களில் இடம்பெறாத விஷயங்கள்தான் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எம்பிக்களின் அனுமதியோடு அந்த நிதியைத் தேவையானத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவார்கள். இந்த நிதியை தடை செய்வது சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும்.
எம்.பி நிதியை தடை செய்யாமல் மத்திய அரசு மற்ற பல வழிகளில் செலவுகளை குறைக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பெரிய சலுகைகளை குறைப்பதன் மூலமும் அரசாங்கம் செலவுகளை குறைக்க முடியும். தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க உருப்படியான திட்டங்கள் எதைக் குறித்தும் சிந்திக்க இயலாத மத்திய அரசு, எல்லாவற்றையும் மக்கள் தலையில் கட்டுகிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் மக்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உடனே மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசே..! காவல்துறையே..!
மதுரையில் அப்துர் ரஹீம் என்பவரைத் தாக்கியக் காவல்துறையினர் மீதுக் கொலை வழக்குப் பதிவு செய்.
படுகொலைக்கு உள்ளான அப்துர் ரஹீம் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் கொடு.
பேராசிரியரான அவரின் மகனுக்கு அரசுக் கல்லூரியில் பணி வழங்கு.
காவல்துறையின் வரம்புமீறலை கட்டுப்படுத்து.
கொரோன இன்று அல்லது நாளை அழித்துவிடலாம். ஆனால் மதவெறி வைரசை விட ஆபத்தானது.
- திரு. சுப்பிரமணி ஆறுமுகம், தேசிய பொதுச் செயலாளர், வெல்ஃபேர் கட்சி
உரிய திட்டமிடல் இல்லாமல் ஊர் அடங்கு உத்தரவை பிறப்பித்துவிட்டு இப்போது என்னை மன்னித்துவிடுங்கள் என நாடகம் ஆடுகிறார் பிரதமர் மோடி. வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் K.S.அப்துல் ரஹ்மான் காட்டம்
Modi
COVID19 க்கு எதிராக மோடி அரசு ஏன் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைப்பு சார தொழிலாளர்கள் படும் இன்னலுக்கு யார் பொறுப்பு.
இந்திய தொழில்சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் திரு.சுப்பிரமணி ஆறுமுகம் கேள்வி.
@ Narendra Modi
Please do follow!
The Lockdown is appreciated! But the Govt should take the proper step to protect them!
Modi
Be the first to know and let us send you an email when Welfare Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Want your business to be the top-listed Media Company?