Pollachi 360

Pollachi 360 If you Love your pollachi give Like to the page and Stay connect with pollachi's update

நாளைய அரசு அதிகாரிகளுக்கு ஒரு அருமையான அறிவிப்பு: 2022 ஆம் ஆண்டிற்கான TNPSC அறிவிப்புகள் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே....
16/12/2021

நாளைய அரசு அதிகாரிகளுக்கு ஒரு அருமையான அறிவிப்பு:

2022 ஆம் ஆண்டிற்கான TNPSC அறிவிப்புகள் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

உங்களின் முயற்சியும், பயிற்சியும் இன்னும் 6 மாத காலங்கள் விரிவு படுத்துங்கள்.

👍 அந்த *11000+* காலி பணியிடங்களில் உங்களுக்கான ஒரு இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் முதலில் உணருங்கள்.

உங்கள் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கவே உங்களுக்கான ஒரு அறிவிப்பு...

நம் சபர்மதி குருகுலம் கடந்த முறை போன்று இந்த ஆண்டும் *நுழைவுத்தேர்வு* மூலம் மாணவ மாணவிகளை தேர்வு செய்து *இலவச பயிற்சி* அளிக்க உள்ளது.

"ஆனால் இம்முறை தமிழ்நாட்டில் *8 இடங்களில்* நுழைவுத் தேர்வு நடத்தப்படும்".

கூடுதல் சிறப்பாக *நுழைவுத்தேர்வில் முதல் 10 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம் பயிற்சி காலம் முடியும் வரை இலவசமாக* அளிக்கப்படும்.

கீழே உள்ள விபரங்களை பூர்த்தி செய்து நுழைவுத் தேர்வுக்கான உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உங்கள் வேலையை நாங்கள் உறுதி செய்கிறோம்.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்".

மேலும் தகவலுக்கு
7010836885
9787875268

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSewHuJmftkLAZUJY6mV50c8ODr_KZAk46-Cta__YPmIwgWTHg/viewform

வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைச்சிட்டா மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திடுமா ன்னு கேள்வி கேட்பவர்களுக்கு..ஊர...
05/11/2021

வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைச்சிட்டா மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திடுமா ன்னு கேள்வி கேட்பவர்களுக்கு..
ஊருக்கு அருகில் ஆறு இருந்தால், ஆற்றில் நீர் வரும்போது ஆழ்குழாய் கிணற்றில் ஊற்றெடுக்கும்.
அருகிலுள்ள குளத்தில் நீர் நிறைந்தால் ஊற்றெடுக்கும்.

ஆனால் ஆற்றில் நீர் வருவதே இல்லை.
போதிய மழையும் பொழிவதில்லை. பொழிந்தாலும் தூற்றி அனுப்பி வைப்பவர்களே மிகுதி.

எனவே அவரவர் வீட்டில் மழை நீரை பூமிக்குள் செலுத்துவதே சிறப்பு.

"இது ஏன் புதுசா இருக்கு. முன் காலத்திலெல்லாம் இப்படியா செஞ்சாங்க.. இப்போ மட்டும் ஏன் செய்யணும்..?"

முன் காலத்திலெல்லாம் ஆழ்குழாய் கிணறு கிடையாது. அதனால் தேவையை விட அதிகமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை.
அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தது. தெருவுக்கு நாலு கிணறும் இருந்தது. இவையெல்லாம் மழை நீரை பூமிக்குள் எளிதாக செலுத்தி வந்தன.. இப்போ திறந்த கிணறு எங்குமே இல்லை.
அப்பொழுதெல்லாம் வீட்டை சுற்றி ஏராளமாக இடம் விட்டு வீடு கட்டியிருப்பாங்க. அதனால் மழை நீரை உறிய ஏராளமான நிலப்பகுதி இருந்தது. இப்போ வெறும் ஒன்றரை அடி விட்டு கட்டிவிட்டு அதையும் சிமிண்ட் போட்டு மூடிவிடுகிறோம். எனில் மழைநீர் மண்ணுக்குள் எப்படி செல்லும்..?

சொட்டு நீரைக்கூட மண்ணுக்குள் விடமாட்டோம் ஆனால் வருடம் முழுதும் ஆழ்குழாயிலிருந்து நீர் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் கடலின் மீதுதான் வீடு கட்ட வேண்டும்.

"எங்க வீட்ல மூனுக்கு மூணு அடியில் தொட்டி கட்டி அதில்தான் மாடியிலிருந்து வரும் தண்ணீர் முழுவதையும் விடுறோம். ஆனாலும் மழை நாள் முடிஞ்சு மூணு மாசத்திலேயே ஆழ்குழாய் கிணறில் நீர்மட்டம் குறைஞ்சிடுதே..! அதெல்லாம் வேஸ்டுங்க.."

இப்படி செஞ்சா அது வேஸ்டுதான். ஏனெனில் நமது குறைந்த பட்ச தேவையே ஆண்டுக்கு 2 லட்சம் லிட்டர். நீங்க வைச்ச தொட்டி நூறு லிட்டர் நீரை பூமிக்குள் அனுப்பினால் பெரிய விஷயம்தான். பத்தடி விட்டமும் இருபத்தைந்து அடி ஆழமும் கொண்ட கிணறு வெட்டுங்க..

"இல்லைங்க.. அங்கதான் கார் நிறுத்தணும். ஷெட் கட்டணும்."

தாராளமா செய்யலாம். நீங்க வெட்டின கிணற்றில் பத்து அல்லது இருபது அடி ஆழத்திற்கு இரண்டு சிறிய ஆழ்குழாய் அமைங்க. அதில் துளையிட்ட 6" குழாய்களை செருகிடுங்க. அதற்கு பேக்கிங் ஆக வழக்கமான கூழாங்கற்களையே கொட்டுங்க. இப்போ இந்த கிணறு முழுவதும் சரளை கற்கள், இடிபாடுகளில் கிடைக்கும் சிமிண்ட் கட்டிகள், கருங்கல் சல்லி, போன்றவற்றை கொட்டி நிரப்புங்கள். பின்னர் கட்டிடம் கட்டும்போது வீணான மணலை கொட்டுங்கள். மாடியிலிருந்து வரும் தண்ணீரை சல்லடை கட்டி இதில் விழும்படி அமையுங்கள். மேற்பகுதியில் மணலை பரப்பி பேவர் பிளாக்ஸ் ஐ அமைத்து விடுங்கள். பின்னர் வழக்கம் போல உங்கள் தேவைக்கும் பயன்படுத்தலாம். மழை நீரையும் பூமிக்குள் செலுத்தலாம்.

கிணறு வெட்டி அதில் செய்ய முடியாதவர்கள் வெறுமனே 12" போர் வீட்டை சுற்றி பல இடங்களிலும் போட்டு அதன் தலைப்பை முறையாக குழாய்கள் மூலம் இணைத்து பயனடையலாம்.

அடுத்த வருடம் தொடர்ந்து குடிநீர் வேணும்னா இது போல எதையாவது ஒன்னை செஞ்சுதான் ஆகணும்.

05/11/2021

உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி😎
08/06/2021

உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி😎

06/06/2021

Life ❤️

06/06/2021

கிழியும் ஆன்மீக முகமூடி!
ஆதாரங்களுடன் சிக்கும் சிவசங்கர் பாபா!

05/06/2021

புதிய தளர்வுகள் 👍
05/06/2021

புதிய தளர்வுகள் 👍

😂😂
04/06/2021

😂😂

😂🤣
04/06/2021

😂🤣

02/06/2021

😂😂😂😂

02/06/2021

பொள்ளாச்சிக்கு அடுத்து உங்களுக்கு பிடித்த ஊர் ?

ஆனைமலை சாலை ❤️
31/05/2021

ஆனைமலை சாலை ❤️

30/05/2021

💉 பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களின் முக்கிய அறிவிப்பு:-


பொள்ளாச்சி வருவாய் கோட்டம், பொள்ளாச்சி நகரம், பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்த நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நாளைய(25.05.21) தினம் காலை 9:00 மணி முதல் Covid-19 💉 தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பின்வரும் இனங்களைச் சார்ந்த 18 முதல் 44 வயதுடைய நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அவை:-

1. அனைத்து நிறுவனங்களின் தொழிலாளர்கள்,
2. நிதி நிறுவனங்களில் பணிபுரியும்ஊழியர்கள்,
3. அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த துறை பணியாளர்கள்,
4. பஸ்/ ஆட்டோ/ கார் ஓட்டுனர்கள்,
5. இறைச்சி, மீன், உள்ளிட்ட அனைத்து வகை வியாபாரிகள்/ தொழிலாளர்கள்,
6.மளிகை/காய்கறி/ பழக்கடை வியாபாரிகள்,
7. ஹோட்டல் உரிமையாளர்கள்/ தொழிலாளர்கள்/ உணவு பார்சல் வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள்,
8. அனைத்து வகை தெருவோர வியாபாரிகள்,
9. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்/ தொழிலாளர்கள்,
10. சவரத் தொழிலாளர்கள்,
11.கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள்/ தொழிலாளர்கள்,
12. மெடிக்கல் கடை உரிமையாளர்கள்/ தொழிலாளர்கள்,
13. பூக்கடை மற்றும் நகைக் கடை உரிமையாளர்கள்/தொழிலாளர்கள்,
14. அனைத்து வகை தொழில் செய்பவர்கள்,
15. விவசாயத் தொழிலாளர்கள்,
16. பால் விற்பனை செய்பவர்கள்,
17. கட்டுமானத் தொழிலாளர்கள்,
18. டீக்கடை மற்றும் மரக்கடை வியாபாரிகள்,
19. சுமை தூக்கும்/ எந்த வகை தொழிலேனும் செய்யும் தொழிலாளர்கள்

உள்ளிட்ட அனைத்து சேவைத்துறை சார்ந்த நபர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

🎯 குறிப்பு: தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் நோய்த் தொற்றிலிறுந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை கவனத்தில் கொள்வீர்.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,*தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நி...
30/05/2021

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

😂🤣
30/05/2021

😂🤣

😂
30/05/2021

😂

29/05/2021
29/05/2021

#கொராணா_மன_உளைச்சல்

1. எனக்கு காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னைக்கு தான் Positive ன்னு வந்துச்சு. இன்னையில் இருந்து 14 நாள் தனிமையில் இருக்கணுமா ?

இல்லை. அதாவது உங்கள் உடலில் முதல் அறிகுறி என்று தோன்றியதோ அன்றிலிருந்து 14 நாட்கள் கணக்கு. கரோனா வைரஸ் உங்கள் உடலில் 10-12 நாட்கள் வரை மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது. எனவே தான் 14 நாட்கள் கணக்கில் ஒருவர் மீண்டும் RT PCR பரிசோதனை செய்தால் கூடுமான வரையில் 12 ம் நாள் க்கு பிறகு Negative என்று வருகிறது. அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலில் இல்லை என்று அர்த்தம்.

2. எனக்கு Negative ன்னு லாம் வந்துடிச்சி.. 14 நாளுக்கு பிறகும் இருமல் மட்டும் போகவே மாட்டேங்குது அப்ப என் உடலில் வைரஸ் இருக்கு ன்னு அக்கம் பக்கம் விஞ்ஞானிகள் சொல்கிறார்களே உண்மையா ?

இல்லை. கரோனா வைரஸ் பாதிக்கும் முக்கிய உறுப்பு நுரையீரல்.. அது ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். அதாவது உங்கள் நுரையீரல் கரோனா வைரசால் பாதிக்கபடுவதால் நுரையீரல் Allergic Reaction க்கு உள்ளாகிறது. அந்த Allergy யினால் உருவாகுவது தான் இந்த இருமல். வைரஸ் விட்டு சென்ற பாதிப்பு நுரையீரலை Irritate செய்து கொண்டே இருக்கும் வரை இந்த இருமல் தொடரும். அது எவ்ளோ பகுதியை பாதித்துள்ளது என்பதை அறிய CT Scan உதவுகிறது. 14 நாட்களுக்கு பிறகு இருக்கும் இந்த நீடித்த இருமல் என்பது சிலருக்கு ஒரு மாதமோ இரண்டு மாதங்கள் வரை தொடரலாம்.

3. நான் தனியறையில் 14 நாட்கள் இருந்தேன். அந்த அறையை எங்கள் வீட்டு உறவினர்கள் வீட்டில் உள்ளவர்கள் மருந்து அடிச்சு சுத்தம் செய்யணும் ன்னு சொல்றாங்க ?

அறிவியல் அறிவு கொண்டவர்களுக்கு தெரியும் வைரஸ் உயிர் வாழ ஓர் உயிருள்ள ஒம்புயிரி (Host) தேவை என்று. நம் உடலை விட்டு நீங்கிய பிறகு அது எங்கே போகும் ? அறையிலோ நாம் உடுத்திய உடையிலோ இருக்க அது என்ன முட்டை போடும் கொசு வா ? அறையை சுத்தம் செய்வதில் தப்பு இல்லை..ஆனா அங்க வைரஸ் இருக்கும் ன்னு நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.

4. CRP Test ன்னு ஒன்னு எடுக்கிறாங்களே தனியார் மருத்துவமனையில் ? அது எதுக்கு.. அது தேவையா ?

C-reactive Protein என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் ஒருவகைப் புரதம். உடலில் தொற்றோ, அழற்சியோ ஏற்படும்போது அதற்கு எதிர்வினையாற்றி கல்லீரல், சி.ஆர்.பி புரதத்தை வெளியேற்றி ரத்தத்துக்குள் அனுப்பும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படியும் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் கரோனா நோயாளிக்கு C-Reactive Protein பரிசோதனை செய்ய சொல்லி இது வரை சொல்லவில்லை. ஆனாலும் தனியார் மருத்துவமனைகள் இதை Discharge செய்யும் முன் ஏன் இதை செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லேசான மற்றும் மிதமான கரோனா நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை தேவையே இல்லை. இந்த பரிசோதனை எந்த அரசு மருத்துவமனையும் செய்வதில்லை. உங்கள் கையில் லட்சங்கள் இருந்தால் அல்லது மருத்துவமனைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற கரோனா க்கு தேவை இல்லாத பரிசோதனை (தீவிர தொற்றாளர்கள் தவிர) செய்து நேரத்தையும் பணத்தையும் கரைக்கலாம்.

5. நான் முதல் டோஸ் தடுப்புசி எடுத்து கொண்டேன். பிறகு எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. எப்போது இரண்டவது டோஸ் எடுக்க வேண்டும் ?

அரசின் வழிகாட்டுதல் படி மூன்று மாதங்களுக்கு பிறகு எடுத்துகொள்ளலாம்.

6. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு விட்டேன். எப்போது தடுப்புசி போட வேண்டும் ?

பொதுவாக கரோனா தொற்று ஏற்பட்டு 21 நாட்களுக்கு பிறகு உங்கள் உடலில் IgG எனப்படும் நோய் எதிர்ப்பான்கள் உருவாகி விடும். ஆனால் நாளடைவில் இது காணாமல் போகிறது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அந்த கால அளவு 6-9 மாதங்கள் வரை இருக்கிறதாம். எனவே மூன்று மாதங்களுக்கு பிறகு நீங்கள் எபோது வேண்டுமானாலும் தடுப்பூசி எடுத்து கொள்ளலாம்.

7. நான் இப்போது நெகட்டிவ். என்னால் இன்னொருவருக்கு இனிமேல் கரோனா வைரஸ் பரவுமா ?

நீங்கள் நெகட்டிவ் என்றாலே உங்கள் உடலில் கரோனா வைரஸ் உடலில் இல்லை என்று அர்த்தம். பிறகு எப்படி உங்கள் மூலம் பிறருக்கு பரவும் ??

8. நான் கரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் என்னை சமூகம் ஒதுக்கி வைத்தே பார்க்கிறது ?

இயல்பு தான். அறிவியல் பார்வை இல்லாத நபர்கள் அறிவியல் குருடு என்றே கருதப்படுவார்கள். அவர்களுக்கு சாக்கடையும் ஒன்றாகத் தான் தெரியும். ஓடும் சுத்தமான பால் போன்ற ஆறும் ஒன்றாகத் தான் தெரியும். “போவியா” என்று நகர்ந்து கொண்டே இருங்கள்

9. ஆவிபிடித்தல் கரோனவை ஒழிக்குமா ?

கரோனா வைரஸ் க்கு வாய் இருந்தால் கெக்க பிக்கே என்று சிரித்து உருண்டு விடும். ஆவி பிடித்தல் உங்கள் மூச்சு குழாயை சுத்தம் வேண்டுமானால் செய்யலாம். கரோனா ஒழிப்பிற்கு சல்லி பைசா க்கு தேறாது

10. எப்போது மருத்துவமனை நாட வேண்டும் ?

Pulse Oximeter ல் SpO2 94 or 92 க்கு கீழ் உங்கள் ஆக்சிஜன் லெவல் இருந்தால் மட்டுமே மருத்துவமனையை நாட வேண்டும். தேவை இல்லாமல் தீவிர பாதிப்பில் உள்ள ஒருவருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை நீங்கள் ஆக்கிரமித்து கொள்ளாதீர்கள்

11. D-Dimer Test லாம் கரோனா நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் எடுக்கிறார்களே அவசியமா ?

ரத்த உறைதலுக்கான பரிசோதனை இது. தீவிரமான நோய் தொற்று ஏற்பட்டால் மட்டுமே இது போன்ற பரிசோதனை உதவும். எல்லோருக்கும் இந்த பரிசோதனை அவசியமே இல்லை.

12. Procalcitonin, Ferritin, IL-6, HRCT இந்த பரிசோதனைகள் எல்லாம் அவசியமா ?

அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்ய சொல்லி WHO வோ அல்லது மத்திய அரசோ சொல்லவில்லை. தீவிர நோய் தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு மேலும் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க வேண்டுமானால் இந்த பரிசோதனைகள் ஆய்வு கை கொடுக்கலாம். ஆனால் இன்று தனியார் மருத்துவமனைகள் இதை எல்லாம் எடுத்து கரோனா நோயாளியை சக்கையாக பிழிஞ்சு தள்ளி செல்லும் போது ATM Card ல் பணத்துடன் சென்றால் திரும்ப வரும் போது ATM Card மட்டும் தான் மிஞ்சும். பணம் இருக்காது.. இந்த பரிசோதனையின் அறிவியல் பின்புலம் பற்றி நோயாளிக்கு தெரியாது. அந்த நோயாளிக்கு தேவையே இருக்காது அந்த பரிசோதனைகள். இருந்தும் Bill எகிற வைத்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.. அவசியம் என்றால் மட்டுமே இந்த பரிசோதனைக்கு நாம் ஒப்பு கொள்ள வேண்டும்

13. இது வரை உலக அளவில் கரோனாக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் என்ன ?

சில நூறு ரூபாய்களே செலவு வைக்க கூடிய Paracetamol ம் Antibiotics ம் மட்டுமே

14. அப்ப Dexamethosone/Remdesivir லாம் ?

Only Critical Patients. தீவிர நிலையில் உள்ளவர்கள் மட்டுமே இந்த மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசு வழிகாட்டி இருக்கிறது. அதுவும் இந்த மருந்து குணபடுத்தும் என்று எந்த உத்திரவாதமும் அளிக்கவில்லை. எனவே தேவை இல்லாமல் எல்லாரும் எடுத்து உள்ள உடலுக்கும் உலை வைத்து கொள்ளாதீர்கள்.

15. இறுதியாக ?

கரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கு தொடர்ந்து இருமல் இருக்கும். பயப்பட வேண்டாம். காரணம் நுரையீரல் அழற்ச்சி. (Lung Inflammation). ஒரு விபத்தில் கை கால் எலும்பு உடைவதும் கரோனாவால் நுரையீரல் பாதிகப்படுவதும் ஒன்று தான். ஒன்று சேர கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் அது வரை ஓடுவது, பளு தூக்குவது, மாடி படி ஏறுவது,AC யில் இருப்பது என நுரையீரலுக்கு அதிக பளு கொடுத்தால் சீக்கிரம் நுரையீரல் குணமடைய வாய்ப்பில்லை. நல்ல ஓய்வு தேவை. அதே நேரத்தில் இருமலை தவிர்க்க Chlorpheniramine, Dextromethorphan கொண்ட Syrup உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம் என மருத்துவ உலகம் பரிந்துரை செய்கிறது.

(பகிர்வு )

27/05/2021

❤️❤️❤️❤️❤️❤️❤️
#இசை

26/05/2021

தளபதி ❤️

காமெடில படிப்படியா உயர்ந்து தமிழ்சினிமாவோட காமெடி ராஜாவாக வாழ்ந்த கலைஞன்  ❣️
25/05/2021

காமெடில படிப்படியா உயர்ந்து தமிழ்சினிமாவோட காமெடி ராஜாவாக வாழ்ந்த கலைஞன்

❣️

13/05/2021

Stay safe and, please, wear a mask

 #இன்றைய நிலையில்  #கொரோணோ பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது.. இதுபோன்ற சூழலில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்பவர்கள்.. இந்த...
13/05/2021

#இன்றைய நிலையில் #கொரோணோ பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது.. இதுபோன்ற சூழலில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்பவர்கள்..
இந்த மருந்துகளுடன் ...

*கபசுரகுடிநீர்

*முட்டை

*சத்தான உணவுகள்

*மஞ்சள் பொடி பால்

*எலுமிச்சை +மிளகு+இஞ்சி+புதினா+மஞ்சள்தூள் போட்டு கொதிக்க வைத்த ஜூஸ்

*வெற்றிலை +1 கிராம்பு+2ஏலக்காய்+5 மிளகு..இவற்றை அடிக்கடி மென்று தின்று வரவும்

அத்துடன் அடிக்கடி... மஞ்சள் தூள்,வேப்பிலை,சூடம்,கிராம்பு போட்டு ஆவி பிடிக்கவும் .

குறிப்பு:1

#பச்சைக் கலர் மாத்திரை #ஆவி பிடிக்க மட்டுமே #உட்கொள்வதற்கு_அல்ல

#குறிப்பு 2

இந்த மாத்திரைகள் அனைத்தும் #கோவிட் வந்தால் மட்டுமே முன்பே எடுத்துக் கொள்ளக் கூடாது அவ்வாறு எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் அதிகம் இருக்கும் ஆகையால் கொரோணோ #நோயாளிகள் தவிர சாதாரணமானவர்கள் யாரும் எடுக்க வேண்டாம்

#குறிப்பு 3


இந்த மாத்திரைகள் பற்றிய மற்ற சந்தேகத் தகவல்கள் தங்கள் family doctors டமும் கேட்டு சரி பார்த்து கொள்ளுங்கள்.. காரணம் ஒருசில மாத்திரைகள் அனைவரது உடலுக்கும் ஏற்றதாக இருக்காது 🙏🙏🙏🙏

விரைவில் பூரண நலம்பெற வாழ்த்துகள்

ரெம்டெசிவிர் மருந்து என்றால் என்ன? முக்கியத்துவம் என்ன?நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிகள...
12/05/2021

ரெம்டெசிவிர் மருந்து என்றால் என்ன? முக்கியத்துவம் என்ன?

நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு போடப்பட்டு வருகின்றன. இதனுடன் சேர்ந்து 3-வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் இணைய உள்ளது. இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இப்படியான தட்டுப்பாடு ஏன்?

ரெம்டெசிவிர் என்பது ஆப்பிரிக்காவில் பேரழிவை உருவாக்கிய எபோலா வைரஸை அழிக்க கண்டுபிடிக்க ஒரு மருந்து. இந்த மருந்தை கொரோனா நோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என்பது பொதுவான கருத்து. அமெரிக்காவும் இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு தொற்று பரவல் தீவிரமாவதைத் தடுக்கும் தன்மை கொண்டது ரெம்டெசிவிர். இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொரோனா பாதித்தவர்கள் செல்வதை தவிர்க்க வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த போது ரெம்டெசிவிர் மருந்துகள் முக்கியப் பங்கு வகித்தன. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் கணிசமான உயிர்களைக் காப்பாற்றி உயிரிழப்புகளைத் தவிர்த்ததில் இந்த ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு முதன்மை பங்கு உண்டு.

பொதுவாக கொரோனா பாதித்த அனைவருக்கும் இந்த ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தேவையில்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ரெம்டெசிவிர் மருந்துகள் கொடுத்தால் பயன் தரக் கூடியதாக இருக்கும்.

12/05/2021

12/05/2021

Stay safe and, please, wear a mask

   |  #வாழும்தெரசாக்கள் செவிலியர்களை போற்றிடுவோம்!!
12/05/2021

| #வாழும்தெரசாக்கள் செவிலியர்களை போற்றிடுவோம்!!

 #கொங்கு_ஜமீன்  பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, பெரிய பஞ்சாயத்துகளில் முக்கியமானது புரவிபாளையம். ஜமீன் ஆளுகைக்கு உட...
10/05/2021

#கொங்கு_ஜமீன் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, பெரிய பஞ்சாயத்துகளில் முக்கியமானது புரவிபாளையம். ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட எட்டு கிராமங்களை கொண்ட பஞ்சாயத்து. இன்றும் 'ஜமீன்புரவிபாளையம்' என்றே அழைக்கப்படுகிறது.
கொங்கு சோழர்கள்,கொங்கு சேரர்கள், கொங்கு பாளையக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பலர் ஆட்சிக்கு பிறகும் கொங்கு வேளாளர் கவுண்டர் மற்றும் கொங்கு வேட்டுவர் (கண்ணப்பநாயனார்)இன மக்கள் அடையாளமாக கம்பீரமான அரண்மனை பொள்ளாச்சியில் அமைந்துள்ளது.

கோப்பண்ண மன்றாடியார் ஜமீன் வாரிசுகள் இங்குள்ள அரண்மனையில் வசிக்கிறார்.அரண்மனையில் தங்கியிருந்து மக்களை ஆசீர்வதித்த கோடிசாமியார், வாழ்ந்து மறைந்த கிராமம். இவரது நினைவாக கட்டப்பட்ட மண்டபத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இன்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.கிராமத்தை ஒட்டி சூலக்கல் ஆறு செல்கிறது. பாசனத்துக்காக ஆற்றின் குறுக்கே, 'புலிப்பாறை' அணை உள்பட, ஆறு தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர் நிரம்பி காணப்படுகிறது.
கரையெல்லாம் சென்பகபூ, சூரிய வம்சம், நாட்டாமை, போன்ற படங்கள் இந்த ஊரில் உள்ள அரண்மனையில் எடுக்கப்படது ஆகும்.

10/05/2021

தன்னம்பிக்கை கதை

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்..

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

10/05/2021

தொழிலாளர் கோரிக்கைகள் வெறும் கோரிக்கைகள் அல்ல. அவை "தொழிலாளர்களின் உரிமைகள்" என்பதை உணர்வோம். "தொழிலாளர் நலன் , உலகின் ந...
01/05/2021

தொழிலாளர் கோரிக்கைகள் வெறும் கோரிக்கைகள் அல்ல. அவை "தொழிலாளர்களின் உரிமைகள்" என்பதை உணர்வோம்.

"தொழிலாளர் நலன் , உலகின் நலன்"

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

உலகம் முழுவதும் இன்று மே தினக் கொண்டாட்டம்..!   |   |   |   |   |
01/05/2021

உலகம் முழுவதும் இன்று மே தினக் கொண்டாட்டம்..! | | | | |

வால்பாறை அழகு ❤️
01/05/2021

வால்பாறை அழகு ❤️

பொள்ளாச்சியில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஆழியார் "குரங்கு அருவி" என்ற மக்களுக்கு பரிட்சயமான பெயர் தற்போது சங்க இலக்கியங்...
30/04/2021

பொள்ளாச்சியில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஆழியார் "குரங்கு அருவி" என்ற மக்களுக்கு பரிட்சயமான பெயர் தற்போது சங்க இலக்கியங்களை குறிப்பிட்டு "கவி அருவி" என வனத்துறை பெயர் மாற்றம் செய்தது பொதுமக்களிடையே விவாதப்பொருளாகியுள்ளது..

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pollachi 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share