Tamil Database

  • Home
  • Tamil Database

Tamil Database அகரத்தில் தொடங்கி உலகின் சிகரத்தில் வாழும் மொழி எமது “தமிழ் மொழி”

28/11/2023

ஐயாவின் குரலுக்கு என்றுமே மூப்பில்லை!

28/11/2023
ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது. ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன?...
26/11/2023

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது.
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் இருக்கின்றன?
கோபால்.👨
முருகன். 👨
பழனிச்சாமி 👨
மாயாண்டி 👨
முருகேசன். 👨
ஆனால் நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள்.

அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு பல பெயர்கள் உள்ளன.
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்
சில்லி சிக்கன்
சிக்கன் வறுவல்
சிக்கன் தந்தூரி
கார்லிக் சிக்கன்
ஜிஞ்சேர் சிக்கன்
பெப்பேர் சிக்கன்....

🥙பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்..👍

வலிகளை முழுமையாக கேள். அதன் பின் காரணத்தினை ஆராயலாம். அநேக வலிகளுக்கு தேவை உடனடி தீர்வல்ல, முழுமையாக கேட்கும் இரு காது.
25/11/2023

வலிகளை முழுமையாக கேள். அதன் பின் காரணத்தினை ஆராயலாம்.

அநேக வலிகளுக்கு தேவை உடனடி தீர்வல்ல, முழுமையாக கேட்கும் இரு காது.

ஆசை 👇கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு ...
23/11/2023

ஆசை 👇

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.

அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.
தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.

அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே?

இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.

வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.

கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.

இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?

அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.

பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.

ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.

நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

 #முப்பது_வருஷத்துக்கு முன்னால ஒரு  #கல்யாணவீட்டுக்கு போனோம்னா... #ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட...
21/11/2023

#முப்பது_வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா...

#ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.😊

#சின்ன சின்ன பசங்க எல்லாம்🏃 ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.

#பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.😊

#மண்டபத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

#சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.

#விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.

வழ வழப்பான #சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.

#விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.😃

#சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும்.

எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.😔

#இப்போல்லாம்....
பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.

#காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

#விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏

தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு கொடுக்கத் தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...ஒரு ...
21/11/2023

தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு கொடுக்கத் தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...
ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்- தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக் கொள்வார்கள்...
அதன் பிறகு அவர்கள் பங்காளிகள் மட்டுமே இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும் அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துக் கொள்வதோடு சரி மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும் பின்பு வசூலிக்கப்படும் சமயங்களில் வட்டியுடன்...
ஆனால் பெண்களுக்குப் பாகம் எதுவும் கொடுப்பது இல்லை...
மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள் நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல்களும் நீளும்...
பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக தான் இருக்கும்... அதோடு விடுவது இல்லை...
சீமந்தம், பிள்ளைப்பேறு, பெயர் சூட்டுதல் தொடங்கி அந்தப் பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...
எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்குப் போயிருக்கும்...
இதை எந்த ஆணும் கணக்குப் பண்ணி பார்த்து இல்லை...
நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்குக் கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடனை வாங்கியோ.. தமக்கு கிடைத்தச் சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வான்...
நியாயமாக வரதட்சணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தைப் பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தைக் கொடுத்து விட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்...
கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்...
அப்படியே இருந்தாலும் அதைக் கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக் கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்...
ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை...
வேறு வீட்டில் வாழப் போகும் பெண்ணுக்கு கடைசிவரைப் பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழி தான் சீர் செனத்தி எல்லாம்...
அப்படி பாகமாய் சொத்தைப் பிரித்து கொடுத்து விட்டு விட்டால் அந்தப் பெண் ஆதரவற்றுப் போவாள்... இவனும் எனக்குத் தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழிக் கொடுக்காமல் அந்த உறவைப் பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களைப் பாகமாய் பிரித்துக் கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டு விட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்...
பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டு வந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராடக் கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு உடன்பிறந்த சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களைச் சொல்லவில்லை...)
நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையா னு உசுப்பி விடுற அரசோ- போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்...
ஏன்னா அவன் தான் சக உதிரன் ...

இன்று கவியரசின் நினைவு தினம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹கலங்காதிரு மனமே ...என நம்பிக்கையுடன்தன் கலைப் பயணத்தில் கால் பதித்தார்.எட...
17/10/2023

இன்று கவியரசின் நினைவு தினம் 🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கலங்காதிரு மனமே ...என நம்பிக்கையுடன்
தன் கலைப் பயணத்தில் கால் பதித்தார்.
எட்டாவதாதாக பிறந்தவர், எட்டாவது வரை பயின்றவர்
யாரும் எட்டாத அளவிற்கு சாதனை புரிந்தவர்,
இலக்கண, இலக்கியங்களெல்லாம் கவியரசரிடம்
இலகுவாகவே கைகோர்த்தது,
காப்பியங்கள் கவியரசரால் காவியமடைந்தது,
எண்ணங்கள் கலை வண்ணங்களாகியது,
அரங்கங்கள் எல்லாம் கவியரசரின்
பாடல்களால் ஆராவாரமடைந்தன..
உன்னதமான படைப்புகளால்
உலகை திரும்பி பார்க்க வைத்தவர்,
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ...
ஆமாம் சரீரம் சாய்ந்தாலும் அவரது புகழ்
என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

வாழ்க தமிழ் வளர்க கவியரசரின் புகழ்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பொருந்தாத இடத்தில் உங்களை பொருத்தி பார்க்க ஆசைப்படாதீர்கள் உங்களின் தனித்தன்மை பறிபோகும்.
15/10/2023

பொருந்தாத இடத்தில் உங்களை பொருத்தி பார்க்க ஆசைப்படாதீர்கள் உங்களின் தனித்தன்மை பறிபோகும்.

நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லதுதிட்டுவதோ கிடையாது  என்பதை ந...
15/10/2023

நீங்கள் Google Map உதவியுடன்
செல்லும் போது வழி தவறினால்,
Google Map உங்களை கண்டிக்கவோ
அல்லதுதிட்டுவதோ கிடையாது
என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை.

அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.

நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.

இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது.

தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.

அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்

உங்கள் குழந்தைகள், மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்...

75% கண்களை மூடி பார்த்தால் தலைவர் தெரிவார்.தெரிந்தால் நம்ம பக்கத்தை Like செய்யவும்
01/10/2023

75% கண்களை மூடி பார்த்தால் தலைவர் தெரிவார்.

தெரிந்தால் நம்ம பக்கத்தை Like செய்யவும்

😍❤️ மாருவேடம் போட்டியில்  ராமர் சீதா வேடம் அணிந்து கலந்துகொண்ட இஸ்லாம் சகோதரின் மகள்கள் 💞💞💞எம்மதமும் சம்மதம்....இதுதான் ...
30/09/2023

😍❤️ மாருவேடம் போட்டியில்
ராமர் சீதா வேடம் அணிந்து கலந்துகொண்ட இஸ்லாம் சகோதரின் மகள்கள் 💞💞💞
எம்மதமும் சம்மதம்....
இதுதான் நம் நாட்டின் 🇮🇳🇮🇳🇮🇳
ஒற்றுமை.மனம் இருந்தால் இவர்களை பாராட்டுகள் நண்பர்களே. ❤️😍


26/09/2023

Alleppey boat lake PART-2 views கேரளாவில் படகு வீடுகளுக்கு மிகவும் பிரபலமான இடங்கள் ஆலப்புழா மற்றும் குமரகம். இதில் ஆலப்புழாவில் படகு வீடு

https://fb.watch/nidvDqNU5U/

உன் வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு ன்னு ...இன்னைக்கு யாரும் நம்மள கேட்க முடியாது...!!!😜😜😜😂😂
18/09/2023

உன் வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு ன்னு ...

இன்னைக்கு யாரும் நம்மள கேட்க முடியாது...!!!😜😜😜😂😂

14/09/2023

அருமையான பேச்சு, தயவுசெய்து இறுதி வரை இந்த காணொளியை இறுதி வரை கட்டாயமாக பார்க்கவும். 🎞️👇 #தமிழும்_தமிழரும் #இதில் #தமிழன்டா #வானொலி #வானலை #வரி

13/07/2023

பாம்பு தவளையை உட்கொள்ளும் காட்சி

🍅 தக்காளி விலை ஏறிவிட்டது ,வெங்காயம் விலை ஏறிவிட்டது, பாகற்காய் விலை ஏறிவிட்டது சுரைக்காய் விலை ஏறிவிட்டது பருப்பு விலை ...
09/07/2023

🍅 தக்காளி விலை ஏறிவிட்டது ,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பாகற்காய் விலை ஏறிவிட்டது
சுரைக்காய் விலை ஏறிவிட்டது
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது,
இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்😩..

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்!!

என் மகனை ஆசிரியர் ஆக்குவேன் என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என் மகனை தொழிலதிபராக்குவேன் என்று கூறும் பெற்றோர்கள்

தங்கள் பிள்ளைகளை
விவசாயி ஆக்குவேன் என்று கூறுவதில்லை😌..

COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,

எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள்..🤔

6 மாதம்
1 வருடம் ,
தண்ணீர் இல்லாமல்
எத்தனையோ செலவு செய்து, வெயிலில் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல்
ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..

விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா? இல்லை JAVA, C++, PHP PROGRAM ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..

சிந்தியுங்கள் மக்களே

🌾🌾விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்.. 👍

இல்லையேல்
, கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் விஷமேறி.,
கடைசி மீனும் பிடிபடும்
போதுதான் உரைக்கும்,

பணத்தை சாப்பிட முடியாதென்று..!

அப்போது உரைத்து ஒரு பயனும் இல்லை...☹️...

விழித்திடுங்கள்🌱🌴🌳🌾

மறந்துவிட்ட  #பிரிமனை யாது??🍒ஒரு காலத்தில் அதிகமாக புழங்கும் வார்த்தை " #பிரிமனை" இப்போது காலப்போக்கில் வழக்கொழிந்து போய...
03/06/2023

மறந்துவிட்ட #பிரிமனை யாது??🍒

ஒரு காலத்தில் அதிகமாக புழங்கும் வார்த்தை " #பிரிமனை" இப்போது காலப்போக்கில் வழக்கொழிந்து போய்விட்டது.

அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியில் இருக்கும் கரி தரையில் ஒட்டி அசிங்கமாகிவிடும்.

பானை, சட்டி அசையாமல் இருக்கவும் இது பயன்படும். வட்ட வடிவத்தில் தேங்காய் நாரில் வேயப்பட்ட தாங்கு பொருளில் இறக்கி வைப்பார்கள். அதுதான் பிரிமனை.
அப்படியே அடுப்புல கொதிக்கிற குழம்பை இறக்கி பிரிமனையில் வை என்பார்கள்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் மாற மாற எத்தனையோ அழகான தமிழ் வார்த்தைகளையும், நினைவுகளையும் இழந்து கொண்டு இருக்கிறோம்.

29/04/2023

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!

ஆராய வேண்டிய பதிவுகுரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்ததை நீங்கள் யாராவது  பார்த்ததுண்டா.....??நாய், பூனை, எலி, ம...
22/04/2023

ஆராய வேண்டிய பதிவு

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்ததை நீங்கள் யாராவது பார்த்ததுண்டா.....??

நாய், பூனை, எலி, மாடு, போன்ற விலங்கினங்கள் போன்று இறந்த கிடக்கும் குரங்கை பார்த்ததுண்டா?

டிஸ்கவரி சேனலிலாவது பார்த்ததுண்டா?

இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் இறப்பு நாள் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக்குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம். இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பதுதான் பேரதிசயம்…
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா…!!

இறக்கும் தருவாயில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் இறக்கும் தருவாயில் கரையாண் புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.

சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து அதன் உடல் மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்.

ஆஞ்சநேயர் இராமரிடம் கேட்டு பெற்ற வரங்களில் ஒன்று இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லையின்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பதாகும்.
#தெரிந்து_கொள்ளுங்கள் #

👉எல்லாம் அவன் செயல்👈

மறக்க முடியாத பொக்கிஷம்.💖 மீண்டும் கிடைக்காத அழகிய நாட்கள்..🥰👌
22/04/2023

மறக்க முடியாத பொக்கிஷம்.💖 மீண்டும் கிடைக்காத அழகிய நாட்கள்..🥰👌

உங்களின் நல் ஆதரவோடு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தயாராக உள்ளோம். https://youtube.com/
14/04/2023

உங்களின் நல் ஆதரவோடு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தயாராக உள்ளோம். https://youtube.com/

எமது தளத்தில் தமிழ்,தமிழர்,தேசியம்,பொழுதுபோக்கு,கலை,கலாச்சாரம் என பலதரப்பட்ட நிகழ் கால தகவல்களை எளிமையாக தமிழ....

காகம் சுயநலம் சிறிதும் இல்லாத பறவை 🙏காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்...
31/03/2023

காகம் சுயநலம் சிறிதும் இல்லாத பறவை 🙏

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.

காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.

கூச்ச சுபாவம் கொண்டது காகம். மனிதன் கூட விலங்குகள் போல பொது இடத்தில் காதல் என்கின்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வான். அந்தரங்கத்தை படம் பிடித்து வியாபாரம் செய்வான்.

பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம்.

உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

சிறந்த தாய் காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும். "உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய் காகம் தான் என்பதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான், ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை.

ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடு தான்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா…கா….கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களை சுவைக்கும். அப்படி சுவைக்கும் போது அந்த காக்கைகள் கா... கா... என்ரு கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம் பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா கா என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

தமிழர்களுக்கும் காகத்துக்கும் உள்ள தொடர்பு..

ஒவ்வொரு நாளும் பழந்தமிழர் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காகம் கரைதல் வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில் இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது.

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் மேலே சொன்ன பாடலில் அழகாகச் சொல்லுகின்றனர்:

காலை எழுந்திரு. மாலையிலும் குளி.
கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை).
எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

தமிழ் வேதமாகிய திருக்குறளில்

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள” (குறள் 527)

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

காக்கையை பற்றி வேறு ஒரு இடத்தில் “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள் 481)

பொருள்:-
பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், மஹாபாரதத்தில் அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு காக்கைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் குறிப்பு உள்ளது.

குடமுழுக்கு முடிந்த இன்று இராஜ அலங்காரத்தில் பழநி பாலதண்டாயுதபாணி மூலவர் தரிசனம் 🙏🙇
27/01/2023

குடமுழுக்கு முடிந்த இன்று இராஜ அலங்காரத்தில் பழநி பாலதண்டாயுதபாணி மூலவர் தரிசனம் 🙏🙇

ஒரு குட்டி நகைச்சுவை கதை!!!! உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்த...
24/01/2023

ஒரு குட்டி நகைச்சுவை கதை!!!!

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!

அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!

இந்தியா பூனை
பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை

இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

அமெரிக்கா பூனையல்லவா
பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!

கடைசி இறுதி சுற்று....
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் தமிழ் நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!

பார்வையாளர்களுக்கு வியப்பு!
தமிழ் நாட்டு பூனை
நோஞ்சானாக மெலிந்து
நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி
முக்கி முணங்கி மேடையேறியது!

இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!

பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!

போட்டித்துவங்கியது!
அமெரிக்கா பூனை அலட்சியமாக
தமிழ் நாட்டு பூனையின் அருகில் நெருங்கியது!

தமிழ் நாட்டு பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!
அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள்
ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.
பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்!

சற்று நேரம் சென்றபின்,
மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு
ஒன்றுமே புரியவில்லை!

தமிழ் நாட்டு பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!

போட்டியில்
வென்றதற்காக தமிழன் பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!

மெதுவாக எழுந்து
தமிழன் பூனையின்அருகில் சென்று
இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது
எப்படி?
என்று கேட்டது அமெரிக்க பூனை!

அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக தமிழன் பூனை சொன்னது!
நான் பூனையே இல்லை.!

புலி...டா...! தமிழன்...டா...!

என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!

பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!
பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!

இதில் உங்களுடைய முதல் சிம் எது ?
20/01/2023

இதில் உங்களுடைய முதல் சிம் எது ?

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உர...
20/01/2023

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.

கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும்.

இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.

கழுகு என்ன செய்யும் தெரியுமா? இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.

புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.

இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அதற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறிவிடலாம்.

 #தந்தைக்கு நிகர் தந்தையே!1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..*2....
18/01/2023

#தந்தைக்கு நிகர் தந்தையே!

1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
*
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
*
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
*
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
*
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
*
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..

* தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...

* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

* அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்...

* அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்

அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது அவர் உடைய
அருமை உனக்கு தெறியபோவதுமில்லை

 #பொங்கல் வரிசை...... #நம்ம வீட்ல இருந்து  வேறொரு வீட்டுக்கு வாக்கப்பட்டு போன  #அக்கா/ #தங்கச்சிங்களுக்கு , அத்தைகளுக்கு...
16/01/2023

#பொங்கல் வரிசை......

#நம்ம வீட்ல இருந்து வேறொரு வீட்டுக்கு வாக்கப்பட்டு போன #அக்கா/ #தங்கச்சிங்களுக்கு , அத்தைகளுக்கு பொங்கல் வரிசை கொடுத்துவிடறது டெல்டா பக்கம் வழக்கம்.. மொதல்ல பொங்கல் வரிசைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாம்..

#இந்த வரிசைன்றது, பொங்கல் வைக்க பானை, பச்சரிசி, வெல்லம், சீனி, ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய், வாழைப்பழம், காய்கறிகள், கரும்பு, அரிசி, பூ, சோப்பு, சீப்பு, கண்ணாடி வகையறாக்கள் ன்னு பல பொருட்கள் , பொங்கலன்னிக்கு ​மொத நாள்.. அதாவது மார்கழி கடைசி நாள் சகோதரன் வீட்ல இருந்து சகோதரி வீட்டுக்கு வண்டில ஏத்தி அனுப்பி விடுவாங்க....

#சகோதரன் வீட்ல இருந்து வரிசை கொண்டு வருவாங்கன்னு ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீனு, முட்டை, வடை , பாயாசம்னு தடபுடலா சமைச்சு வச்சுட்டு பொறந்த வீட்டு வ(ரிசை)ருகைக்காக வழிமேல் விழி வச்சு காத்திருப்பாங்க.... வழக்கமா மதிய சாப்பாட்டுக்கு வர மாதிரிதான் பிளான் பண்ணுவாங்க... அப்படி இப்படி லேட்டாகி 2-3 மணி ஆச்சுன்னா வீட்டுக்கும்-வாசலுக்குமா நடந்து நடந்து, தூறியடிய ( நமது வீட்டிற்கு வருவதற்கான நுழைவாயில்) பார்த்து பார்த்து கண்ணே பூத்து போகும்.. வாசப்படி தேஞ்சு போகும்... ஒரே பதப்பா (படபடப்பா) கெடந்து தவிப்பாங்க .. அந்த தவிப்புதான் இரத்த பந்தம் கொடுக்கிற பிணைப்பு... நெருக்கம்... உரிமை... எல்லாமே....

இந்த பண்பும் பழக்கவழக்கங்களும் #தமிழ்நாடு முழுவதும் பரவவேண்டும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன். Krv Raja

கழிவறைக்குள் சிறுத்தையும் நாயும் ஒன்றாக இருந்தும், சிறுத்தை நாயை ஒன்றும் செய்யவில்லை🧐😲இதிலிருந்து மனிதர்கள் அறியவேண்டி இ...
09/01/2023

கழிவறைக்குள் சிறுத்தையும் நாயும்
ஒன்றாக இருந்தும், சிறுத்தை நாயை ஒன்றும் செய்யவில்லை🧐😲இதிலிருந்து மனிதர்கள் அறியவேண்டி இருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நாயைத் துரத்தி ஓடியபோது, அங்கே வெளியே கதவு மூடப்பட்டிருந்த கழிவறையின் ஜன்னல் வழியாக நாயும், அதைத் துரத்திவந்த சிறுத்தையும் கழிவறைக்குள் நுழைந்து, வெளியே வரமுடியாமல் நாயும் சிறுத்தையும் சிக்கிக் கொண்டது.

சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாய், கழிவறையின் ஒரு மூலையில் குரைக்காமல் செய்வதறியாமல் அமைதியாக அமர்ந்தது.

பசியால் நாயைத் துரத்தி வந்த சிறுத்தை நாயை ஒன்றும் செய்யாமல், கழிவறையின் மறு மூலையில் அமர்ந்துகொண்டது.

எதிரெதிர் குணம் கொண்ட சிறுத்தையும் நாயும் ஒன்றை ஒன்று எதையும் செய்யாமல், ஏறக்குறைய பன்னிரண்டு மணிநேரம் இருவேறு மூலைகளில் அமைதியாக இருந்து, பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தகவலறிந்த வனத்துறையினர், கழிவறையின் ஜன்னல் வழியாக சிறுத்தை மீது மயக்க ஊசியைச் செலுத்தி, மயக்கமடைந்த சிறுத்தையை வெளியே பூட்டப்பட்டிருந்த கழிவறைக் கதவைத் திறந்து பிடித்துள்ளனர்.

நாயைக் கொன்று திண்ண சிறுத்தைக்கு போதிய சந்தர்ப்பம் கிடைத்தும் அதை செய்யாமல், சிறுத்தை அமைதி காத்தது எதனால் என்ற ஆச்சர்யக் கேள்விக்கு, வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கீழுள்ளவாறு பதிலளிக்கின்றனர்,

வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மேலதிகமாக உணரும் திறன் கொண்டது. அது அதன் சுதந்திரம் பறிக்கப்பட்டதை உணர்ந்தவுடன், அது தனது பசியை மறந்து ஆழ்ந்த துக்கமாகி, தனக்கான சுதந்திரத்தை மட்டுமே எதிர்பார்க்கத் துவங்கிவிடுமாம்.

இப்படியாகதான் மனிதனும்.
தனது சுதந்திரம் பறிபோய்விட்டால்,
தனக்கான வேறு எந்த தேவையைப் பற்றியும் சிந்திக்க மாட்டான். அது அவனுக்கு தேவையும் படாது.

எனவே,
ஒருவரின் நியாயமான சுதந்திரத்தை மற்றவர் நியாயமற்று பறிப்பது, கொடூரத்தின் உச்சம் என்பதறிவோம்.

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் ...
05/01/2023

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?
பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;
பரதனுக்கு – பூசம்;
லட்சுமணனுக்கு -ஆயில்யம்;
சத்ருக்னனுக்கு- மகம்;
கிருஷ்ணனுக்கு – ரோகிணி;
முருகனுக்கு – விசாகம்.
இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.
ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஆருத்ரா தரிசனம்:
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்
ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்
இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன்.
எல்லாம் வல்ல நடராஜனின் அருள் ஆருத்ரா தினத்தில் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tamil Database posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Database:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share