எழும் தமிழ் - Ezhum Thamizh - Elum Tamil

  • Home
  • எழும் தமிழ் - Ezhum Thamizh - Elum Tamil

எழும் தமிழ் - Ezhum Thamizh - Elum Tamil தமிழ் கவிதைகள், தமிழ் வரலாறு, தமிழ் வா

திராவிட ,இந்துத்துவா கட்சிகளின் பொய்க்கு எதிராக நாம்தமிழரின் மைக் முழங்கும் ! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
27/03/2024

திராவிட ,இந்துத்துவா கட்சிகளின் பொய்க்கு எதிராக
நாம்தமிழரின் மைக் முழங்கும் !

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

04/03/2024

TEst

   தமிழுக்குத் தடையுண்டோ | கவிஞர் ஜோ  #மல்லூரி கவிதை |  #தமிழ் கவிதைகள் | Joe   poetry in
04/11/2022


தமிழுக்குத் தடையுண்டோ | கவிஞர் ஜோ #மல்லூரி கவிதை | #தமிழ் கவிதைகள் | Joe poetry in

தமிழுக்குத் தடையுண்டோ!எம்நிலத்தில் எம்மொழியை நிலைநிறுத்தஎவரிங்கு தடைவிதிப்பார் எதிர்நின்று!எவர் வரினும் எத...

https://youtu.be/EMC4kyCl_QM
12/12/2021

https://youtu.be/EMC4kyCl_QM

தினம் ஒரு குறள்திருக்குறள் - பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம் 1 / Chapter 1: கடவுள் வாழ்த்து / The Praise of God / kadavul vazhthuக....

https://youtu.be/wPYWGU71EQQ
12/12/2021

https://youtu.be/wPYWGU71EQQ

தினம் ஒரு குறள்திருக்குறள் - பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம் 1 / Chapter 1: கடவுள் வாழ்த்து / The Praise of God / kadavul vazhthuக....

Kural 1-10, திருக்குறள் 1-10 | கடவுள் வாழ்த்து | Thirukkural | The Praise of God | kadavul vazhthuhttps://youtu.be/6lqpD...
17/11/2021

Kural 1-10, திருக்குறள் 1-10 | கடவுள் வாழ்த்து | Thirukkural | The Praise of God | kadavul vazhthu

https://youtu.be/6lqpDLy_viM

கடவுள் வாழ்த்து - திருக்குறள் அதிகாரம் 1 - அறத்துப்பால் - Kadavul Vazhththu Thirukkural Athikaram 1திருக்குறள் - திருவள்ளுவர்திருக்குறள் - ப...

25/10/2021
தமிழர்களை யார் படிக்க வைத்தார்? மாணவர்களே நல்ல ஆசிரியர்களை நீங்கள் எங்கே தேட வேண்டும்? பவா செல்லத்துரை    https://youtu....
14/10/2021

தமிழர்களை யார் படிக்க வைத்தார்? மாணவர்களே நல்ல ஆசிரியர்களை நீங்கள் எங்கே தேட வேண்டும்? பவா செல்லத்துரை

https://youtu.be/jeDXn_UUVJE

காமராசர் தமிழர்களுக்கு எவ்வாறு கல்வியை கொண்டு வந்தார். Writer . தற்போதைய கல்வி முறை மாணவர்களை எவ்வாறு உருவாக...

உலகின் முதல் மொழி தமிழ். இந்த தகுதி உலகின் எந்த மொழிக்கும் கிடையாது. தக்கார் ம சோ விக்டர் Thakkar Ma so Victor. சீமான், ...
25/09/2021

உலகின் முதல் மொழி தமிழ். இந்த தகுதி உலகின் எந்த மொழிக்கும் கிடையாது. தக்கார் ம சோ விக்டர் Thakkar Ma so Victor. சீமான், பெ. மணியரசன். https://youtu.be/Ihk2naMn58o

மொழி ஆய்வறிஞர் தக்கார் மசோ விக்டர் ஐயாவின் தமிழ் மொழி ஆய்வு நூல் வெளியீட்டு விழா. 25 ஆய்வு நூல்கள் கொண்ட தொகுப்ப.....

நிலமும் பொழுதும் தான் மனிதனை இயக்கும் அறிவியல் என்பதை கண்டறிந்த தமிழன் தொல்காப்பியன் |  #வைரமுத்து    https://youtu.be/b...
23/09/2021

நிலமும் பொழுதும் தான் மனிதனை இயக்கும் அறிவியல் என்பதை கண்டறிந்த தமிழன் தொல்காப்பியன் | #வைரமுத்து
https://youtu.be/bX1vBs7oRf4

தமிழாற்றுப்படை Thamizhatrupadai | வைரமுத்து ிலமும் பொழுதும் தான் ஒட்டுமொத்த மனிதனை இயக்கும் அறிவியல் என்பதை 3000 ஆண்டு...

 #தமிழ் எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது வெ இறையன்பு V  https://youtu.be/ajJxKdS08sM
22/09/2021

#தமிழ் எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது வெ இறையன்பு V

https://youtu.be/ajJxKdS08sM

Iraianbu IAS Motivational Speech | இறையன்பு பேச்சு | படிப்பு, வாசிப்பு அவசியம் குறித்து பேசும் இறையன்பு | படிப்பு தமிழ் | வாசிப்பின் அவ....

பிழைப்பதற்காக  எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படியுங்கள். வாழ்வதற்கு தாய் மொழி  #தமிழ் படியுங்கள். https://youtu.be/tE6cU...
20/09/2021

பிழைப்பதற்காக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படியுங்கள். வாழ்வதற்கு தாய் மொழி #தமிழ் படியுங்கள். https://youtu.be/tE6cUnB1URU via

தமிழின் சிறப்பு | Mr.A. IPS Speech | கலியமூர்த்தி ஐ.பி.எஸ். Education Motivational Speech inTamilதிராவிடம் வந்து தான் தமிழர்களை கல்வி கற்க சொல.....

உள்ள வரிசையில் தமிழை முதலாவதாக வைத்திருந்த பாரதியார் தமிழர் தம் வாழ்வு செழிக்க தெருவெல்லாம் தமிழ்  முழக்கம் வேண்டும் என்...
20/09/2021

உள்ள வரிசையில் தமிழை முதலாவதாக வைத்திருந்த பாரதியார் தமிழர் தம் வாழ்வு செழிக்க தெருவெல்லாம் தமிழ் முழக்கம் வேண்டும் என்றார். பாரதியின் தமிழ் மொழி பார்வை - ஜோ. மல்லூரி Joe Malloori

https://youtu.be/INR0hhlzZm8

உள்ள வரிசையில் தமிழை முதலாவதாக வைத்திருந்த பாரதியார் தமிழர் தம் வாழ்வு செழிக்க தெருவெல்லாம் தமிழ் முழக்கம் வ.....

தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை தமிழர் வாழ்வியல் முறையும் தமிழர் தமிழர் வாழ்வியல் மரபும் பண்புகளும்.https://youtu.be/aNJ...
17/09/2021

தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை தமிழர் வாழ்வியல் முறையும் தமிழர் தமிழர் வாழ்வியல் மரபும் பண்புகளும்.

https://youtu.be/aNJQNkVEKKI

சங்க காலத் தமிழர் வாழ்வியல் ஆசான் செந்தமிழன் உரை ஆசான் ம. செந்தமிழன் | M Senthamizhan | Tholkappiyam. பண்டைத் தமிழரின் வாழ்வியல் மு....

கதை சொல்லுங்கள் உங்கள் பார்வை மாறும்.  நிமிர்ந்து இருங்கள் உங்கள் வாழ்வு உயரும். பர்வீன் சுல்தானாபர்வீன் சுல்தானா பேச்சு...
13/09/2021

கதை சொல்லுங்கள் உங்கள் பார்வை மாறும். நிமிர்ந்து இருங்கள் உங்கள் வாழ்வு உயரும். பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா பேச்சு | Dr Parveen Sultana Best Motivational Speech in Tamil | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever

கதை சொல்லுங்கள் உங்கள் பார்வை மாறும். நிமிர்ந்து இருங்கள் உங்கள் வாழ்வு உயரும்.

https://youtu.be/6GvsPv6p9XU

பர்வீன் சுல்தானா பேச்சு | Dr Parveen Sultana Best Motivational Speech in Tamil | Prof. Parveen Sultana Best Motivational Speech Everகதை சொல்லுங்கள் உங்கள் பா...

https://www.youtube.com/watch?v=-f52hai3qt4
07/09/2021

https://www.youtube.com/watch?v=-f52hai3qt4

புத்தகம் தொட்டுத் தொட்டுப் பார்த்தால்அது வெறும் காகிதம்தொடர்ந்து படித்தால்அதுவே வெற்றியின் ஆயுதம்!புத்தகம்...

மூதுரை - அடக்கம் உடையார் அறிவிலர் - ஔவையார்  Adakkam Udaiyar Avvaiyar - Iyaltamil - Moodhuraiமூதுரை பாடல் ஐந்தாம் வகுப்ப...
04/09/2021

மூதுரை - அடக்கம் உடையார் அறிவிலர் - ஔவையார் Adakkam Udaiyar Avvaiyar - Iyaltamil - Moodhurai

மூதுரை பாடல் ஐந்தாம் வகுப்பு | மூதுரை | 5th Standard Tamil | Moothurai | தமிழ் நீதி நூல்
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணி – மூதுரை – இளம்பூரணன்

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

https://youtu.be/QbKQ5LU1bkw

மூதுரை பாடல் ஐந்தாம் வகுப்பு | மூதுரை | 5th Standard Tamil | Moothurai | தமிழ் நீதி நூல்அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணி – மூதுரை – ...

தமிழின் இனிமை | Tamilin Inimai Class 5 | 5th Std தமிழின் இனிமை | தமிழ் புரட்சிக் கவிதைகள்தமிழின் இனிமை பாடல் ( ஐந்தாம் வ...
04/09/2021

தமிழின் இனிமை | Tamilin Inimai Class 5 | 5th Std தமிழின் இனிமை | தமிழ் புரட்சிக் கவிதைகள்

தமிழின் இனிமை பாடல் ( ஐந்தாம் வகுப்பு பாடல்) | Thamizhin Inimai
ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன் | பாரதிதாசன் கவிதைகள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

https://youtu.be/r6Ibrihuvbg

தமிழின் இனிமை பாடல் ( ஐந்தாம் வகுப்பு பாடல்)ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன் | பாரதிதாசன் கவிதைகள்கனியிடை ஏறிய சுளைய...

தமிழ் மெய் எழுத்துக்கள் 18 Tamil Mei Ezhuthukkal | Varisai Sorkal | Learn Tamil Consonants & letterதமிழ் மெய் எழுத்துக்க...
02/09/2021

தமிழ் மெய் எழுத்துக்கள் 18 Tamil Mei Ezhuthukkal | Varisai Sorkal | Learn Tamil Consonants & letter

தமிழ் மெய் எழுத்துக்கள் 18 | Mei Ehuthukkal In Tamil
மெய் எழுத்துகள் - consonants (18)
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் - வரிசை சொற்கள்

க் வரிசை சொற்கள்
க் - காக்கை
க் - சக்கரம்
க் - தக்காளி

ங் வரிசை சொற்கள்
ங் - சிங்கம்
ங் - சங்கு
ங் - திமிங்கலம்

ச் வரிசை சொற்கள்
ச் - பூச்சி
ச் - தச்சர்
ச் - எலுமிச்சை

ஞ் வரிசை சொற்கள்
ஞ் - இஞ்சி
ஞ் - மஞ்சள்
ஞ் - மின்னஞ்சல்

ட் வரிசை சொற்கள்
ட் - பட்டம்
ட் - பட்டாணி
ட் - முட்டை

ண் வரிசை சொற்கள்
ண் - கண்
ண் - பூண்டு
ண் - வண்டு
ண் - உண்டியல்

த் வரிசை சொற்கள்
த் - வாத்து
த் - தாத்தா
த் - நத்தை

ந் வரிசை சொற்கள்
ந் - ஆந்தை
ந் - பந்து
ந் - முந்திரி

ப் வரிசை சொற்கள்
ப் - கப்பல்
ப் - பப்பாளி
ப் - தொப்பி

ம் வரிசை சொற்கள்
ம் - மரம்
ம் - வானம்
ம் - பொம்மை

ய் வரிசை சொற்கள்
ய் - நாய்
ய் - மாங்காய்
ய் - மிளகாய்

ர் வரிசை சொற்கள்
ர் - மருத்துவர்
ர் - தண்ணீர்
ர் - இளநீர்

ல் வரிசை சொற்கள்
ல் - சேவல்
ல் - பல்
ல் - மயில்

வ் வரிசை சொற்கள்
வ் - செவ்வந்தி
வ் - செவ்வாழை
வ் - சவ்வரிசி

ழ் வரிசை சொற்கள்
ழ் - யாழ்
ழ் - இதழ்
ழ் - தாழ்பாள்
ழ் - சிமிழ்

ள் வரிசை சொற்கள்
ள் - வாள்
ள் - வெள்ளாடு
ள் - முள்

ற் வரிசை சொற்கள்
ற் - சிற்பம்
ற் - நாற்காலி
ற் - கற்றாழை

ன் வரிசை சொற்கள்
ன் - மான்
ன் - மனிதன்
ன் - மீன்

https://youtu.be/DDVBvPHP3mc

தமிழ் மெய் எழுத்துக்கள் 18 | Mei Ehuthukkal In Tamilக் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் - வரிசை சொற்கள்க் வரிசை சொற்கள...

பூலித்தேவன் Puli Thevar (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுத...
01/09/2021

பூலித்தேவன் Puli Thevar (1715–1767)
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.

இறுதி மூச்சு வரை களத்தில் நின்று போராடி தம் இன்னுயிரையும் தாய் நாட்டுக்காக இழந்த அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றிடுவோம்!

https://youtu.be/JL4utY6k5Rk

சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும் சமஸ்தானங்கள், பாளையங்கள், சிறிய சிறிய நாடுகள், சீமைகளாக பிரித்து இருந்த கா.....

https://youtu.be/5L9ot-rV3XA
28/08/2021

https://youtu.be/5L9ot-rV3XA

தமிழ் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு (12) Agara Varisai Sorkalஅ வரிசை சொற்கள்அ - அம்மாஅ - அணில்ஆ வரிசை சொற்கள்ஆ - ஆடுஆ - ஆமைஇ வரிசை ....

https://youtu.be/1MxJEQFZO8k
23/08/2021

https://youtu.be/1MxJEQFZO8k

திருக்குறள் - பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம் 4 : அறன் வலியுறுத்தல் / Assertion of the Strength of Virtue / Aran Valiyuruthal குறள் 31 - 40கு...

பாரதியார் கவிதை - செந்தமிழ் நாடெனும் போதினிலேசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்த...
12/08/2021

பாரதியார் கவிதை - செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

பாரதியார் கவிதை - செந்தமிழ் நாடெனும் போதினிலேசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எ....

https://www.youtube.com/watch?v=6lqpDLy_viM&t=114s
11/08/2021

https://www.youtube.com/watch?v=6lqpDLy_viM&t=114s

கடவுள் வாழ்த்து - திருக்குறள் அதிகாரம் 1 - அறத்துப்பால் - Kadavul Vazhththu Thirukkural Athikaram 1திருக்குறள் - திருவள்ளுவர்திருக்குறள் - ப...

கெட்ரிக் வரைந்த ஓவியம்.காட்டு  வளம் காப்போம்  - Save Forest
11/11/2020

கெட்ரிக் வரைந்த ஓவியம்.
காட்டு வளம் காப்போம் - Save Forest

கெர்சினா வரைந்த ஓவியம்.நீர் இன்று அமையாது உலகு - Save Water
11/11/2020

கெர்சினா வரைந்த ஓவியம்.
நீர் இன்று அமையாது உலகு - Save Water

சுதந்திரப் போராட்டமும் தமிழர்களும் - பாகம் 2 | Freedom Fighters in Tamilnadu Part 2சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும்1857...
03/09/2020

சுதந்திரப் போராட்டமும் தமிழர்களும் - பாகம் 2 | Freedom Fighters in Tamilnadu Part 2

சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும்

1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்தியநிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. அதில் தமிழர்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.

விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர் தம் பங்களிப்பு தலையாயதும் தவிர்க்க முடியாததுமாக உள்ளது. விடுதலைக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளை இங்கே நாம் நினைவு கூர்வோம்.

விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழர்கள்

சுப்பிரமணிய பாரதி - Subramania Bharati
(டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சுப்பிரமணிய சிவா - Subramaniya Siva
(4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925)

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 'சிவா' என்று
அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்தமேடைப்பேச்சாளர், சிறந்த பத்திரிகையாளர் ஆவர். வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.

திருப்பூர் குமரன் - Tiruppur Kumaran
(அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932)

இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும்
அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் நடத்த போராட்டத்தில் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.

செண்பகராமன் பிள்ளை - Chempakaraman Pillai
(செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934)

தமிழகத்தைச் சார்ந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு
ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். ஹிட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். 'ஜெய் ஹிந்த்' எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார்.

வ. உ. சிதம்பரம்பிள்ளை - V. O. Chidambaram Pillai
(செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)

வ. உ. சி என்றழைக்கப்படும் சிதம்பரம்பிள்ளை தூத்துக்குடி மாவட்டம். ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பிரித்தானியக் கப்பல்களுக்கு போட்டியாக உள்நாட்டில் முதல் இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். பிரித்தானிய அரசால்
தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

திரு. வி. கலியாணசுந்தரனார் - Thiru. V. Kalyanasundaram
(ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும்
சிற்றூரில் பிறந்தார். தொழிற்சங்கத்தைத்
தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம் சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார். இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

ப. ஜீவானந்தம் - P. Jeevanandham
(ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963)

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார். வைக்கம் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் பங்கேற்றவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

முத்துராமலிங்கத் தேவர் - U. Muthuramalingam Thevar
(அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963)

தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் பிறந்தார். ஆன்மிகவாதியாகவும்,சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ்
சந்திரபோசின் தலைமையில் நடந்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர்.

முகம்மது இசுமாயில் - Muhammad Ismail
(சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972)

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் திருநெல்வேலியைச் சார்ந்த பேட்டையில் பிறந்தவர். தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா
காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத்
துவங்கினார்.

காமராசர் - K. Kamaraj
(சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975)

காமராசர் விருதுநகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின் நாளில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என புகழ்வர்.

பி. கக்கன் - P. Kakkan
(சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981)

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். கக்கன் தனது பள்ளி
மாணவப்பருவத்திலேயே விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். கோயில் நுழைவு போராட்டத்திலும் , ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

ம. பொ. சிவஞானம் - M. P. Sivagnanam (Ma.Po.Si)
(சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995)
சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழ் மேதையும் ஆவார். சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர் நிலப்பரப்பிற்க்காக பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். திருப்பதி, பீர் மேடு, தேவிக்குளம் போன்ற ஊர்களை தமிழர் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடினார்.

https://youtu.be/6c7YR0oqhZM

1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்...

சுதந்திரப் போராட்டமும் தமிழர்களும் - பாகம் 1 | Freedom Fighters in Tamilnadu Part 1சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும் சமஸ...
03/09/2020

சுதந்திரப் போராட்டமும் தமிழர்களும் - பாகம் 1 | Freedom Fighters in Tamilnadu Part 1

சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும்

சமஸ்தானங்கள், பாளையங்கள், சிறிய சிறிய நாடுகள், சீமைகளாக பிரித்து இருந்த காலத்திலேயே தமிழக மண்ணில் ஐரோப்பியர்களை, ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழர்கள் விடுதலை போராட்டத்தை நடத்த துவங்கி இருந்தார்கள்.

அதன் பின்பு வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்! வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை.

விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழர்கள்

அனந்த பத்மநாப நாடார் Ananthapadmanabha Nadar (1698 – 1750)
குமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். 1741-இல் குளச்சலில் நடைபெற்ற சண்டையில் மார்த்தாண்டவர்மா அரசுக்கும்
டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்தார் என்று கூறப்படுகிறது.

பூலித்தேவன் Puli Thevar (1715–1767)
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.

பெரிய காலாடி Periya Kaladi Venni kaladi (வெண்ணிக் காலாடி) (இறப்பு - 1760)
பூலித்தேவன் படையில் முக்கியத் தளபதியாக இருந்தவர் பெரிய காலாடி. பூலித்தேவர் தன் தளபதி பெரிய காலாடி எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த இடத்தில், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தார்.

மருதநாயகம் Marudhanayagam (1725–1764)
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார். மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார்.

அழகுமுத்துகோன் Maveeran Alagumuthu Kone (1728 - 1757)
கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார். இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் என்று கூறப்படுகிறது.

ஒண்டிவீரன் Ondiveeran (இறப்பு - 1771)
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் என்பவரின் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர்.

வேலுநாச்சியார் Velu Nachiyar (1730 – 1796)
இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தில் ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
இழந்த நிலத்தை வென்று 1780 - 1790 வரை சிவகங்கைச் சீமையையில் ஆட்சி புரிந்தார்.

குயிலி Kuyili (இறப்பு - 1780)
வீரமங்கை குயிலி பதினெட்டாம்
நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி ஆவர். வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் புகுந்து தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு அயுதக்கிடங்கை அழித்தாள்.

மருது சகோதரர்கள் Maruthu Sagotharargal - Periya Marudhu and Chinna Marudhu
(1748 - 1801) (1753 – 1801)
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

தீரன் சின்னமலை Dheeran Chinnamalai (1756 - 1805)
இவர் இன்றைய ஈரோடு மாவட்டத்தில், காங்கயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டையை
கட்டி ஆண்டவர். ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெருமளவில் வெற்றி பெற்றார்.

கருப்பசேர்வை Karuppa Servai (இறப்பு - 1805)
கொங்கு நாட்டு ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் தீரன் சின்னமலையிடம் சேர்ந்து பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர். சின்னமலையின்
மெய்க்காப்பாளராக கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலுத்தம்பி தளவாய் Velu Thampi Dalawa (1765 – 1809)
இன்றைய தமிழ்நாட்டின் குமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட தலக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படை தளபதியாக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் நாஞ்சில் நாட்டு களரி வீரன் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்.

https://youtu.be/JL4utY6k5Rk

சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும் சமஸ்தானங்கள், பாளையங்கள், சிறிய சிறிய நாடுகள், சீமைகளாக பிரித்து இருந்த கா.....

திருக்குறள் | இல்வாழ்க்கை / குறள் 41-50 | Domestic Life | அறத்துப்பால் https://youtu.be/i7RuxnxZ9Yc
02/09/2020

திருக்குறள் | இல்வாழ்க்கை / குறள் 41-50 | Domestic Life | அறத்துப்பால் https://youtu.be/i7RuxnxZ9Yc

Book 1 – Aram (அறம்) திருக்குறள் - பால்: அறத்துப்பால் / Arathuppal இயல்: இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal அதிகாரம் 5 / Chapter 5: இல்வாழ்க்கை / Dom...

திருக்குறள் | இல்வாழ்க்கை / குறள் 43 | Thirukkural | Domestic Life | iIllvalkai - தினம் ஒரு குறள்திருக்குறள்  - பால்: அற...
31/08/2020

திருக்குறள் | இல்வாழ்க்கை / குறள் 43 | Thirukkural | Domestic Life | iIllvalkai - தினம் ஒரு குறள்

திருக்குறள் - பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்/Chapter 5: இல்வாழ்க்கை / Domestic Life / iIllvalkai / Married Life of Virtue Thirukkural explanation by Thiruvalluvar

குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

Translation:
The manes, God, guests kindred, self, in due degree,
These five to cherish well is chiefest charity.

Thenpulaththaar theyvam virundhokkal thaanendraangu
impulaththaaaRu Ompal thlai.

விளக்கம்:
வாழ்ந்து மறைந்தோர், தெய்வம், விருந்தோம்பல், சுற்றம் பேணல், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு. ஐவகை அறநெறிகளையும் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் வேண்டும்.

Explanation:
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.

https://youtu.be/WwILbZq9f88

திருக்குறள் - பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்/Chapter 5: இல்வாழ்க்கை / Domestic Life / iIllvalkai / Married Life of Virtue Thirukkural explanati...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when எழும் தமிழ் - Ezhum Thamizh - Elum Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழும் தமிழ் - Ezhum Thamizh - Elum Tamil:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share