Nabi Salawath Guroup

  • Home
  • Nabi Salawath Guroup

Nabi Salawath Guroup Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabi Salawath Guroup, Media, .

19/11/2024
19/09/2024
19/09/2024
19/09/2024

15 பாவங்களும், அவற்றுக்கான பயங்கர தண்டனைகளும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اتُّخِذَ الفَيْءُ دُوَلاً، وَالأَمَانَةُ مَغْنَمًا، وَالزَّكَاةُ مَغْرَمًا، وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ، وَعَقَّ أُمَّهُ، وَأَدْنَى صَدِيقَهُ، وَأَقْصَى أَبَاهُ، وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ، وَسَادَ القَبِيلَةَ فَاسِقُهُمْ، وَكَانَ زَعِيمُ القَوْمِ أَرْذَلَهُمْ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ، وَظَهَرَتِ القَيْنَاتُ وَالمَعَازِفُ، وَشُرِبَتِ الخُمُورُ، وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ، وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ.
(سنن الترمذي 2110، والمعمجم الكبير للطبراني مع بعض الزيادة)
பதினைந்து பாவங்களும், அவற்றுக்கான தண்டனைகளும்.

(எனது “உம்மத்” - சமூகத்தில் பின்வரும் 15 விடயங்கள் - பாவங்கள் நடக்குமாயின் அவ்வேளை சிவந்த காற்றை - நெருப்புக் காற்றையும், நில நடுக்கத்தையும், பூகம்பத்தையும், உரு மாற்றத்தையும், கல் மழையையும், இன்னும் சில அடையாளங்களையும் எதிர்பாருங்கள். அவை பல மணிகள் கோர்க்கப்பட்ட ஒரு நூலை அறுத்துவிட்டால் - துண்டித்து விட்டால் அதிலுள்ள மணிகள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து சரிந்து வருமோ அவ்வாறு அவை வரும்) என்று கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: ஸுனனுத் துர்முதீ
பக்கம் 2110, முஃஜமுல் கபீர், தபறானீ

15 பாவங்களும் பின்வருமாறு.

01. “ஙனீமத்” என்பது ஒவ்வொருவரினதும் சொந்தப் பொருளாக ஆக்கப்படல்.
02. அமானிதம் ஒருவனின் அல்லது ஒரு குழுவின் சொந்தப் பொருளாக ஆக்கப்படுதல்.
03. “சகாத்” கடனாக ஆக்கப்படல்.
04. மார்க்கத்திற்காகவன்றி மார்க்க அறிவு கற்றுக் கொள்ளப்படல்.
05. கணவன் தனது மனைவிக்கு வழிப்படுதல்.
06. ஒருவன் தனது தாயை வேதனைப்படுத்தல்.
07. ஒருவன் தனது நண்பனை தனக்கு நெருக்கமுள்ளவனாக ஆக்கிக் கொள்தல்.
08. ஒருவன் தனது தந்தையை தன்னை விட்டும் தூரப்படுத்தல்.
09. பள்ளிவாயல்களில் சத்தங்கள் வெளியாதல்.
10. ஒரு கூட்டத்தை அவர்களில் கெட்டவன் தலைமை தாங்கி வழி நடத்துதல்.
11. ஒரு கூட்டத்தின் தலைவன் அவர்களில் தரம் குறைந்தவனாக இருத்தல்.
12. ஒருவனின் தீமையைப் பயந்து அவனை கண்ணியப்படுத்தல்.
13. பாடகிகளும், நாட்டியக் காரிகளும், இசைக் கருவிகளும் வெளியாதல்.
14. மதுபானம் அருந்ததல்.
15. முன்னோரைப் பின்னோர் சபித்தல்.

மேற்கண்ட 15 பாவங்களும் எனது “உம்மத்” சமூகத்தில் நிகழ்ந்தால் பின்வரும் விளைவுகளை எதிர்பாருங்கள்.

அவை - சிவப்புக் காற்று (நெருப்புக் காற்று), நில நடுக்கம், பூகம்பம், உரு மாற்றம், கல் மழை என்பனவாகும். அவற்றுடன் இன்னும் சில விளைவுகள்.

அதாவது பல மணிகள் கோர்க்கப்பட்ட ஒரு நூலை அறுத்துவிட்டால் அதிலுள்ள மணிகள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து சரிந்து விழுமோ அவ்வாறு தொடரான தண்டனைகள் இறங்கும்.

மேற்கண்ட 15 காரியங்கள் எனது “உம்மத்” சமுதாயத்தில் நிகழ்ந்தால் - எனது சமூகத்தவர்கள் அவற்றைச் செய்தால் மேற்கண்ட விளைவுகள் ஏற்படுமென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

அன்பிற்குரிய முஸ்லிம், முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகளே!

மேற்கண்ட தலைப்பில் நான் நூல் ஒன்று எழுதி பல வருடங்களுக்கு முன்னால் அதை அச்சிட்டு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன். பலருக்கு கிடைக்காமலிருக்கலாம். அவர்கள் எமது கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நான் வெளியிட்ட நூலில் 15 விடயங்களுக்கும் தனித்தனியே விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரையில் அதேபோல் விளக்கம் கொடுக்காமல் 15 விடயங்களில் 10ம், 11ம் விடயங்களுக்கும் மட்டும் சிறு விளக்கம் எழுதுகிறேன்.

10ம் விடயம்:
ஒரு கூட்டத்தை அவர்களில் கெட்டவன் தலைமை தாங்கி வழி நடத்தல்.

கூட்டம் என்ற சொல் ஒரு குழுவையும் உள்வாங்கிக் கொள்ளும்.

ஒரு கூட்டத்தை அவர்களில் கெட்டவன், அல்லது ஒரு சங்கத்தை அவர்களில் கெட்டவன் தலைவனாயிருந்து வழி நடத்துதல் மேலே சொல்லப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாகும்.

உதாரணமாக ஒரு பள்ளிவாயல் தலைவர் குடி காரனாயும், விபச்சாரியாயும், தொழாதவனாயும், தீக்குணம் உள்ளவனாயும், நீதி தெரியாதவனாயும், ஆளுக்கு ஒரு சட்டம் சொல்பவனாயும், பொதுச் சொத்தில் கையாள்பவனாயும் இருப்பது போன்று. இவன்தான் மார்க்க அடிப்படையில் கெட்டவனாவான்.

“தரீகா”வின் “ஷெய்கு” என்ற பெயரில் மேலே கூறப்பட்ட பாவங்கள் செய்பவன் இருப்பதும் அடங்கும்.

ஒரு பள்ளிவாயலின் தலைவராக, ஒரு பாடசாலையின் தலைவராக, ஏதோ ஒரு சபையின், அல்லது சங்கத்தின் தலைவராக இருப்பவரும் இதில் அடங்கிவிடுவார்.

குறிப்பாக ஒரு நாட்டின் மன்னராக, அல்லது ஜனாதிபதியாக இருப்பவரும் இதில் அடங்கிவிடுவார்.

இன்று நமது இலங்கைத் திரு நாட்டிலும் மற்றும் உலக நாடுகளில் அநேக நாடுகளிலும் மேற்கண்ட நடைமுறைகள் இருந்தே வருகின்றன. இது நபீ மொழியில் கூறப்பட்ட தண்டனைகளும், சோதனைகளும் எப்போது இறங்குமென்று என் போன்றவர்களால் சொல்ல முடியாது. இதை நபீமார். வலீமார் மட்டுமே அறிந்து கொள்வர்.

11ம் விடயம்:

ஒரு கூட்டத்தின் தலைவர் அவர்களில் குல வழி அடிப்படையிலும், தொழிலடிப்படையிலும் தரம், அந்தஸ்து குறைந்தவராயிருத்தல்.

பெருமானார் அவர்களின் குல வழி அந்தஸ்து “குறைஷ்” வமிசமாகும். குல வழி அடிப்படையில் “குறைஷ்” வமிசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

“குறைஷ்” வமிசம் தவிர ஏனைய வமிசங்களில் பலர் குலவழி அடிப்படையில் சிறந்தவர்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாகவும் இருக்கலாம்.

ஆயினும் சிலர் செய்கின்ற தொழிலைப் பொறுத்து அவர்கள் சமுக ரீதியில் தரம் குறைந்தவர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். பின்வருவோரும் சமூக ரீதியில் தரம் குறைந்தவர்களாக கணிக்கப்படுகிறார்கள். “கத்னா” செய்பவர்கள், முடி திருத்தும் வேலை செய்பவர்கள், பாதைகளைத் துப்பரவு செய்பவர்கள், கழிவறை சுத்தம் செய்பவர்கள், உயிரினங்களை அறுத்து வியாபாரம் செய்பவர்கள், வண்ணான்கள் போன்றவர்களாவர்.

முஸ்லிம்களில் சாதி வேற்றுமை கிடையாதென்றும், அது இந்துக்கள், பௌதர்களிடம்தான் உள்ளதென்றும் சிலர் சொல்கிறார்கள். இது சரியாயின் “ஸாதாத்”மார்களுக்கு தனிப்பட்ட கண்ணியம், கௌரவம் இருக்க முடியாது. முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஸெய்யித்மார்களை - நபீ குல வழி வந்தவர்களைக் கண்ணியம் செய்தே வருகின்றனர்.

சிலர் ஹஸனீ என்றும், சிலர் ஹுஸைனீ என்றும் சொல்கிறார்கள். இந்த விபரங்கள் மூலம் முஸ்லிம்களில் சாதி வேற்றுமை இருந்தாலும்கூட உயர் குல வழி வந்தவர்கள் கண்ணியம் செய்யப்படுவார்களேயன்றி இந்துக்களிடம் உள்ள சாதி வேற்றுமை போன்று உயர் குல வழி வராதவர்கள் ஒதுக்கப்படமாட்டார்கள். அவர்கள் கழித்தும், தூரப்படுத்தியும் வைக்கப்படமாட்டார்கள்.

விசுவாசிகளில் யாராவது குடித்து மிஞ்சிய நீரில் “ஷிபா” மருந்துண்டு என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். سُوْرُ الْمُؤْمِنِ شِفَاءٌ விசுவாசி குடித்து மிஞ்சிய நீரில் “ஷிபா” உண்டு என்றுதான் நபீ மொழி வந்துள்ளதே தவிர குலங்களை அடிப்படையாகக் கொண்டு நபீ மொழி வந்துள்ளதாக நான் அறியவில்லை.

நமது இலங்கைத் திரு நாட்டை ஆளப் போகின்ற ஜனாதிபதி யார் என்பது எதிர்வரும் 21ம் திகதிக்குப் பிறகுதான் தெரியவரும்.

நமது இலங்கைத் திரு நாடு செழிக்க வேண்டுமாயின், பஞ்சம் எதுவுமின்றி அது சிரிக்க வேண்டுமாயின், பொருளாதாரத்தில் மக்கள் உயர வேண்டுமாயின், சண்டை, “பித்னா”, யுத்தம் என்று மக்கள் பீதி அடையாமல் இருக்க வேண்டுமாயின் பாரபட்சமின்றி இலங்கை மக்கள் அனைவரையும் வழி நடாத்தக் கூடிய ஒருவர்தான் இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும்.

நான் அரசியல்வாதியுமல்ல. எந்த ஒரு அரசியல் கட்சி பற்றும், பிடிவாதமும் உள்ளவனுமல்ல. யார் எந்தக் கட்சியில் எத் தேர்தலில் வேட்பாளராக வந்தாலும் அவர் நேர்மையானவரா? இல்லையா? அவர் பாரபட்சம் காட்டி ஆள்பவரா? இல்லையா? அவர் நாட்டையும், நாட்டு மக்களையும் வளர்ப்பவரா? அல்லது தன்னையும், தனது குடும்பத்தையும் வளர்ப்பவரா? இல்லையா? இழி குலத்தவனா? அல்லது உயர் குலத்தவனா? என்ற அம்சங்களை மட்டும் கவனித்தே ஆதரிப்பேன்.

இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்ஹ ஐயா அவர்களை ஆதரிப்பதென்றுதான் நானும், எனது ஸூபிச சமூகத்தைச் சேர்ந்தவர்களும் முடிவு செய்துள்ளோம்.

இன்ஷா அல்லாஹ்! இலங்கையில் வாழும் மக்களில் எனது முரீதீன்களும், முரீதாத்துகளும் மற்றும் ஸூபிசத்தையும், இறைஞானத்தையும் நேசிக்கின்றவர்களும் என் வழியே அவர்களின் வழியாக இருக்குமென்று நான் நம்புகிறேன்.

முற்றும்.

13/09/2024

♣ கண்மணி நாயகம் ﷺ அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்



♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (அகழ்ப்போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி” என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம், “நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்” என்று முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்” என்று (பாடியபடி) கூறினார்கள்.

​​நூல்: புகாரி 2834



♦ ஜுன்தப் இப்னு சுப்ஹான (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் (கவி) போன்ற வடிவில்) கூறினார்கள்.



நூல்: புகாரி 2802



♦அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் "முஹம்மத்" (புகழபடுபவன்) , நான் "அஹ்மத்" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் "மாஹி" (குப்'ரை அழிப்பவன்). நான் "ஹாஷிர்" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் "ஆகிப்" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).

​​ஹழ்ரத் ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: புகாரி, முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்



♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (மௌலித்) பாடிய கவி வரிகளை பார்க்க.

​​புகாரி 3906, 4104, 4100, 2835, 2802, 6146 முஸ்லிம் 1803, 1805, 1796 மிஷ்காத் 4792, 4793, 4788

20/02/2024

❤️‍🩹💚💘🩶🤍🤎❤️‍🩹💚💘🩶🤍🤎
🤎🤍🩶💘💚❤️‍🩹🤎🤍🩶💘💚❤️‍🩹
❤️‍🩹💚💘🩶🤍🤎❤️‍🩹💚💘🩶🤍🤎

February 10, 2010   gowz e pak, jeelani, mihraj, taj salawatPrint Friendly, PDF & EmailDarood TajSalawats and Salaams up...
20/02/2024

February 10, 2010 gowz e pak, jeelani, mihraj, taj salawat
Print Friendly, PDF & Email
Darood Taj

Salawats and Salaams upon Allah's Last Messenger sallallahu alihi wa sallam We glorify Allah, and ask blessings and send salutations upon the Noble Messenger sallallahu alihi wa sallam , and praise and glorify Allah and believe in Him. All praise is due to Allah Whose Favours are the sole cause of the accomplishment of all good deeds and blessings upon the most exalted of His entire creation. He (The Last Messenger) sallallahu alihi wa sallam say: "I am the most exalted of all the children of Adam but I don't boast of it." May be the blessings upon his Descendents, upon his Companions, and upon his followers until the day of resurrection. AMEEN

தாஜுஸ் ஸலவாத்து

அல்லாஹும்ம ஸல்லி அலா செயிதினா வமௌhலானா முஹம்மதின் சாஹிபித்தாஜி வல் மிஃராஜி வல் புராக்கி வல் அலம். தாஃபிஇல் பலாஇ வல் வபாயி வல்கஹ்த்தி வல் மரளி வல் அலம். இஸ்முஹு மக்தூபுன் மர்ஃபூவுன் மஷ்ஃபூஉன் மன்கூஸுன் ஃபில் லவ்ஹி வல்கலம் செய்யிதில் அரபி வல் அஜமி ஜிஸ்முஹு முகத்தஸுன் முஅத்தருன் முதஹ்ஹருன் முனவ்வருன் ஃபில் பைத்தி வல்ஹரம்.

ஸம்ஸில்லுஹா பத்ரித்துஜா ஸத்ரில் உலா நூரில் ஹுதா கஹ்ஃபில் வரா மிஸ்பாஹிள்ளுளம் ஜமீலிஸ் ஸியம் ஸஃபீஇல் உமம் ஸாஹிபில் ஜூதி வல்கரமி வல்லாஹு ஆசிமுஹு வஜிப்ரீலு ஹா(H)திமுஹு வல் புராக்கு மர்கபுஹு வல்மிஃராஜு ஸஃபருஹு வஸித்ரத்துல் முன்தஹா மகாமுஹு வகாப கவ்ஸைனி மத்லூபுஹு வல் மத்லூபு மக்ஸுதுஹு வல் மக்ஸூது மவ்ஜூதுஹு ஸய்யிதில் முர்ஸலீன் ஹா(H)த்தமுன் னபிய்யீன் ஷஃபீஇல் முத்னிபீன் அனீஸில் ஙராயிபீன் ரஹ்மத்தன் லில்ஆலமீன் ராஹத்தில் ஆஸிக்கீன் முராதல் முஸ்தாக்கீன் ஷம்ஸில் ஆரிஃபீன் ஸிராஜிஸ்ஸாலிகீன் மிஸ்பாஹில் முகர்ரபீன் முஹிப்பில் ஃபுகராயி வல் மஷாகீன் ஸய்யிதி தக்கலைனி நபிய்யில் ஹரமைனி இமாமில் கிப்லதைனி வஸீலத்தினா ஃபித்தாரைனி ஸாஹிபி காப கவ்ஸைனி மஹ்பூபிரப்பில் மஸ்ரிகைனி வல் மஃரிபைனி ஜத்தில் ஹஸனி வல் ஹுஸைனி மவ்லானா வமவ்லா தக்கலைனி அபில்காஸிமி முஹம்மதிப்னி அப்தில்லாஹி நூரின் மின் நூரில்லாஹி யாஅய்யுஹல் முஸ்தாக்கூன பிநூரி ஜமாலிஹி ஸல்லூ அலைஹி வஆலிஹி வஅஸ்ஹாபிஹி வஸல்லிமூ தஸ்லீமா.

பயன்கள்.

இந்த ஸலவாத்தை ஸலவாத்துக்களின் மணிமகுடம் எனக் கூறப்படுகின்றது. இந்த ஸலவாத்தை ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகள், பயன்கள் எண்ணிலடங்கா. இதை மனனம் செய்து நிரந்தரமாக ஓதி வருபவர் எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயங் குளிர்ந்த அன்பினைப் பெறுவார்.

செய்வினை, சூனியம், ஜின், ஷைத்தான் போன்றவைகளிலிருந்தும் காலரா, வைசூரி போன் தொத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற இந்த ஸலவாத்தை 11 முறை ஓதித் தண்ணீல் ஊதிக் குடித்தால் அவர்கள் விரைவில் குணமடைவார். ஏழு நாட்கள் தொடர்ந்து இதனை 7 முறை ஓதி தண்ணீரில் ஊதிக் குடித்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரவசம் உண்டாகும்.

நாம் நாடிய நாட்டங்களனைத்தும் அவை ஹலாலானதாக இருந்தால் அவற்றை நிறைவேற்றித் தர வேண்டுமென்று இந்த ஸலவாத்தை ஒளுவோடு 40 முறை ஓதி துஆ கேட்டால் வல்ல அல்லாஹ் நமது நியாயமான நாட்டங்களை விரைவில் நிறைவேற்றித் தருவான்.இந்த ஸலவாத்தை ஒருவர் தொடர்ந்து ஓதி வந்தால் அவர் பிறரின் பகைமை, பொறாமை, தொல்லை, துன்பம் போன்றவற்றிலிருந்து விடுதலைப் பெறுவார்.



தாஜுஸ் ஸலவாத்து

(இசை: ஹஸ்பிரப்பீ என்ற மெட்டு)



இறைவா! எங்கள் பெருமானார்

ஏந்தல் முஹம்மது நபிமீது

குறையா தோங்கும் ஸலவாத்தைக்

குன்றா தென்றும் சொரிந்தருள்வாய்!



மாண்புகழ் கொண்ட மெய்ஞ்ஞான

மணிமுடி சூட்டப் பெற்றோராம்

வான்புகழ் மிஃராஜ் புராக்குடனே

வானோர் கொடியும் பூண்டோராம்.



துன்பம், பிணிகள், கொள்ளை நோய்,

துயரம், பஞ்சம், பெருங்கவலை

என்பவை போக்கி எல்லோர்க்கும்

ஏற்றம் சேர்க்கு மருந்தவராம்.



அண்ணல் நபியின் திருப்பெயரோ

அருமறை களிலே உறைந்துள்ளதாம்

எண்ணும் லௌஹிலும் கலத்தினிலும்

ஏற்றி எழுதப் பட்டுள்ளதாம்.



அரபிக் அஜமிகள் யாவர்க்கும்

அவரே தலைவர், அவருடலம்

மரபுடன் தூய்தாம் கஃபாவில்

மாண்பார் சூழலில் ஒளிவீசும்.



காலையில் தோன்றும் பரிதியவர்

கங்குல் மிளிரும் முழுமதியாம்

ஞால மீதில் உயர்தலைவர்

நேர்வழி காட்டும் ஒளியாவார்.



படைப்புக் கெல்லாம் அடைக்கலமாம்

பகரும் இருளில் விளக்கொளியாம்

நடைமுறை இயல்புகள் அனைத்திலுமே

நலமார் எழிலைக் கொண்டோராம்.



நேர்வழி யாளர்க் கிறையின்பால்

நேரும் ஷபாஅத் செய்பவராம்

சீர்பொருள் அள்ளிக் கொடுப்பதிலே

சிறந்த வண்மை பூண்டோராம்.



மன்னான் அவரின் காவலனாம்

வானவர் ஜிப்ரீல் ஊழியராம்

மின்னேர் புராக்கே வாகனமாம்

மிஃராஜ் புனிதப் பயணமுமாம்.



முன்தஹா மரத்தின் தானத்தே

மொழியும் காப கவ்சைனில்

அந்தே னிறையைக் காண்பதுவே

அவரின் நாட்டம் குறிக்கோளாம்.



இறைதூ தர்க்கவர் அதிபதியாம்

இயல்நபி மார்க்கவர் முத்திரையாம்

கறையார் பாவம் புரிந்தோர்க்காய்

காவலன் பால் மிக வேண்டிடுவார்.



எளியோர்க் குதவும் எந்தலவர்

எவ்வுலக குக்கும் அருட்கொடையாம்

அளியோ டன்பு பூண்டோரின்

அகத்தில் அமைதி பொழிவோராம்.



காணும் ஆவல் பூண்டோர்க்குக்

கனியும் நாட்டம் ஆனவராம்

பேணும் ஆத்ம ஞானியர்க்குப்

பெருஞ்சுட ரான பகலவனாம்.



வழிச்செல் வோர்க்கவர் சுடராவார்

வல்லோன் இறையின் அருகிருக்க

விழைவோர் தமக்கு விளக்காவார்

வறியோர் எளியோர்க் கருள்நேயர்.



பேரிறை பக்தர்க் கவர்தலைவர்

புனிதத் தலங்களின் நபியுமவாட

ஏரிரு கிப்லா இரண்டினிமாம்

ஈருல கில்நம் காப்பாளர்.



சீரிய காப கவ்ஸைனின்

சிறப்புக் குரிய தோழரவர்

பாரின் இருகீழ் மேற்குகளைப்

படைத்துக் காப்போன் நேயரவர்.



மன்னும் ஹஸனுசைன் திருப்பாட்டார்

மனுஜின் இறையின் ஒளியாவார்

முகமதில் இலங்கும் பேரொளியை

முனைந்து காண விழைவோரே!



அண்ணல் மீதும் அவர்கிளைஞர்

அருமைத் தோழர் மீதெல்லாம்

வண்ணம் செறியும் ஸலாத்துஸலாம்

வாயே கமழ மொழிந்திடுவோம்

11/02/2024

அன்புடன் அழைக்கின்றேன்!

நான் பேசியும், எழுதியும் வருகின்ற “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் தருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தில் மார்க்க அறிஞர்களுக்கோ, அல்லது பொது அறிஞர்களுக்கோ சந்தேகமிருந்தால் அல்லது மேலதிக விளக்கமும், ஆதாரங்களும் தேவையானால் அவர்கள் என்னுடன் விவாதிக்கும் நோக்கமின்றி எது சத்தியமோ அதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் மட்டும் என்னைச் சந்தித்து என் மூலம் கற்றுக் கொள்ளவும், தெளிவு பெற்றுக் கொள்ளவும் முடியும். கற்றுத் தருவதற்கும், தெளிவை ஏற்படுத்தி வைப்பதற்கும் நான் பெரும் ஆர்வமுள்ளவனாக உள்ளேன் என்பதை இலங்கை, மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்களுக்கு அறியத் தருகிறேன்.

கற்றுக் கொள்ள அல்லது தெளிவு காண விரும்பும் மார்க்க அறிஞர்களும், பொது அறிஞர்களும் முன் கூட்டியே என்னுடன் தொடர்பு கொண்டு நேர காலத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது இவ் அழைப்பை ஏற்றுச் செயல்பட விரும்புவோர் நூறு வீதமும் العقيدة الصوفية، العقيدة السنيّة இரண்டையும் விளங்காது போனாலும் ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.

வர விரும்புவோர் 50 பேர்களுக்கு மேற்படாத ஒரே குழுவாக வருவதும், என்னிடம் தொடராக மூன்று நாட்கள் தங்கியிருப்பதும் அவசியம்.

தங்குமிட வசதியும், மூன்று நாட்களுக்கான மூன்று வேளை உணவும், மற்றும் தேனீர், குடிபானங்களும் இலவசம்.

எதிர்வரும் ஷவ்வால் பிறை 15க்குப் பின் தொடர்பு கொள்ள வேண்டும். கடிதங்கள் பதிவுத் தபாலில் அனுப்புதல் அவசியம்.

எனது அழைப்பை ஏற்று வர விரும்பும் சகோதரர்களின் கவனத்திற்கு,

வஹ்ஹாபீகளும், “அகீததுஸ் ஸூபிய்யா” தெரியாத மார்க்க அறிஞர்களும் لا إله إلا الله எனும் திருக்கலிமாவின் பொருளை தலைகீழாய் புரட்டி முஸ்லிம்களை “ஷிர்க்” எனும் பீக்குழியில் தள்ளிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், மேலும் பொது மக்கள் மத்தியில் العقيدة الصوفيّة எனும் தத்துவத்தைப் போதித்து வருபவர்களையும், அதை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கி முஸ்லிம்களுக்கிடையில் பிளவையும், பிரச்சினைகளையும் உருவாக்கி வரும் இத்தருணத்தில் மேற்கண்ட அறிஞர்களின் ஒன்று கூடலொன்று அவசியம் என்று நான் கருதி இவ்வாறு முடிவு செய்துள்ளேன் என்பதை உங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

மேலதிக விபரங்களுக்குப் பின்வரும் கைபேசி எண்களுடன் “வட்ஸ் அப்” மூலம் தொடர்பு கொள்ளலாம்.

0094 729 988 456
0094 773 186 146

அன்புள்ள,
AJAR

நல்லோர்களை உணர்வோம்! ஒருமுறைநபிகள் நாயகம் அவர்களின் அன்பு மகளார் அன்னை பாத்திமா நாயகி  அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுடன் நப...
01/01/2024

நல்லோர்களை உணர்வோம்!

ஒருமுறைநபிகள் நாயகம் அவர்களின் அன்பு மகளார் அன்னை பாத்திமா நாயகி அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுடன் நபிகளார் அவர்களின் சமூகத்திற்கு வந்தார்கள். நபிகளார் அவர்கள் மகளிடம் 'இது என்ன' எனக் கேட்க, அதற்கு அன்னை பாத்திமா நாயகி அவர்கள், 'யாரஸுலல்லாஹ்! இன்று ரொட்டி சமைத்தேன். தாங்கள் சாப்பிடாது நான் மட்டும் இதைச் சாப்பிட என் மனம் ஏற்கவில்லை' எனக் கூறினார்கள். அப்போது நபிகளார் அவர்கள். 'மூன்று நாட்களுக்குப் பிறகு உனது தந்தையின் வாய்க்குள் செல்லும் முதல் உணவு இதுதான்" என்றார்கள். (அதாவது மூன்று நாட்களாக எவ்வித உணவும் உண்ணவில்லை).

ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹ் என்ற நபித்தோழர் கூறியுள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் யார் எந்தப்பொருளைக் கேட்டாலும், அவர்கள் 'இல்லை' என்ற வார்த்தையைக் கூறியதே இல்லை.

நபிகளார் அவர்களின் மனைவி ஹழ்ரத் ஆயிஷா நாயகி அவர்கள் ஒரே நாளில் (அன்பளிப்பாக வந்த) எழுபதாயிரம் திர்ஹம்களை (வெள்ளி நாணயம்) தர்மம் செய்தார்கள். அவர்களுடைய அன்றைய நிலைமையில் ஓட்டுப் போடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்கள்.

நபிகளார் அவர்களின் நெருங்கிய தோழரும், அமீருல் முஃமினீனும் ஜனாதிபதியுமான ஹழ்ரத்உமர் அவர்கள் பிரசங்கம்
நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, அன்னார் அணிந்திருந்த ஆடையில் பன்னிரண்டு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன.

அவற்றில் ஒன்று தோலினால்
இருந்தது.

பிரபல சூஃபி மஹான் இப்னு சீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி தம்முடைய தாயிடம் மிக பலவீனமான தொனியில் பணிவோடு பேசுவார்கள். அதாவது. ஒரு நோயாளியின் குரலைப் போன்று அவர்களின் குரல் இருக்கும் அந்தளவிற்குத் தம்முடைய தாயைக் கண்ணியப்படுத்துவார்கள்

ஹழ்ரத்
அப்துல்லாஹ்
இப்னு
முபாரக் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இறைநேசராவார்கள். ஒருமுறை அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு குஷ்டரோகி உணவு அள்ளிச் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அந்தப் பெருநோயாளி அருகே சென்று அவருக்கு உணவு ஊட்டிவிட்டார்கள் . மேலும் தண்ணீரை எடுத்துவந்து அந்த நோயாளியின் கையை, உடல் உறுப்புகளை
சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இக்காட்சியைப் பார்த்துக்
கொண்டிருந்த
ஒருவர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மதுல்லாஹ் அவர்களருகே வந்து, தங்களைப் போன்ற பெரியார், இத்தகைய வேலைகளில் ஈடுபடலாமா?' எனக் கேட்டார் அதற்கு அந்த ஸுஃபி பெரியார். ' உள்ளத்தாலும், செயல்களாலும் அசுத்தமடைந்த என்னை அந்த அல்லாஹ் வெறுத்து ஒதுக்காத போது நான் எவ்வாறு இவரை அசுத்தமானவர் என்று நினைப்பேன்'
என்று பதில்
கூறினார்கள்.
சுப்ஹானல்லாஹ் !

நமக்குமுன் வாழ்ந்தவர்களின் நற்செயல்கள் நமக்குப் படிப்பினைக்குரியவை .

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: •"ஒருவர் அதானின்போது என் பெயர் சொல்லக் கேட்டு தன் பெருவிரல்நகங்களை ...
20/12/2023

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

•"ஒருவர் அதானின்போது என் பெயர்

சொல்லக் கேட்டு தன் பெருவிரல்நகங்களை முத்தமிட்டு கண்களிலும் தடவிக் கொள்வாரேயானால் அவர் ஒரு போதும் குருடாகமாட்டார்." (நூல்: தஃப்ஸீர் ரூஹுல் பயான்)

•பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டு ஸலவாத் சொல்லும் போது குறிப்பாக "அஷ்ஹது அன்ன முஹம்மதுர் றஸுலுல்லாஹ்" என்று பாங்கில் கேட்டதும் இரு பெரு விரலைகளை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹப்பு – விரும்பத்தக்கதாகும். ​​இம்மை, மறுமை பயன்களை அளிக்கவல்லதாகும். 'முதல் அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸுலுல்லாஹ் என்று கேட்கும் போது 'ஸல்லல்லாஹு அலைக்க யா றஸுலல்லாஹ்' என்றும், இரண்டாவது 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸுலுல்லாஹ்' என்று கேட்கும் போது , 'குர்ரத்து ஐனீ பிக யா றஸூலல்லாஹ்' – உங்களைக் கொண்டே என் கண் குளிர்ச்சி என்று சொல்லி இருப் பெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும். ​​பின் 'அல்லாஹும்ம மத்தியினி பிஸ்ஸம்யி வல் பஸரி- கேள்வி, பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக! என்று சொல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அ(ப்படி செய்த)வனை சுவர்க்கத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.

(நூல்கள்: துர்ருல் முக்தார், கன்ஜுல் இபாத், பதாவா ஸூபிய்யா, கஹ்ஸதானி, பஹ்ருற்றாயிக், ஷரஹு விகாயா)

​நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

•"கியாமத் நீதி தீர்ப்பு நாளிலே, அதானின் போது என்பெயர் கேட்டவுடன் தன் பெருவிரல்களை தன் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டவரை நான் தேடுவேன். அவரை நான் சுவனத்திற்கு இட்டுச் செல்வேன்."

(​​நூல்: ஸலாத் அல் மஸ்'ஊதி, பாகம் 2, அத்தியாயம் 20)

•அதானில் (பாங்கில்) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் கேட்கும் போது இருபெரும் விரலை முத்துவதும், இரு கண்களில் வைப்பதும் ஆகுமாகும். இமாம்கள் நமது ஷெய்குமார்கள் முஸ்தஹப்பு என்று தெளிவாக கூறியுள்ளார்கள்.

(​​நூல்: பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கி)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

•''முஅத்தின் (பாங்கு சொல்பவர்) அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸுலுல்லாஹ் என்று சொல்வதை கேட்கும் போது மர்ஹபன் பி ஹபீபி வ குர்ரத்து ஐனீ– சோபனம் எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி – முஹம்மதிப்னி அப்தில்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்லி இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பானாகில் குருடாக மாட்டான், கண் வலி எக்காலமும் வராது.'

(​​நூல்: இஆனா பாகம் 1, பக்கம் 243)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

•''யாராயினும் ஒருவர் முஹம்மத் எனும் என் நாமத்தை தன் கரங்களால் தொட்டு அக்கரங்களை தன் உதடுகளால் முத்தமிட்டு கண்களிலும் தடவிக் கொள்வாரேயானால், அவர் அல்லாஹ்வை (நாளை மறுமை நாளில்) அவனுடைய நேர்வழிப்பெற்ற நல்லடியார்கள் காண்பது போல் காண்பார். அவர் பாவியாக இருந்தாலுங்கூட அவருக்காகப் பரிந்துரைப்பது எனக்கு நெருக்கமாகிவிடும்."

(​​நூல்: அந் நவாfபி'உல் அத்ரிய்யா)

•"மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கேட்கும் போது இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான். ஒருக்காலமும் கண்வலி வராது."

(​​நூல்: இமாம் மாலிக் மத்ஹப் கிதாப்: கிபாயத்துத் தாலிப்)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

•"ஒருவர் என்னுடைய பெயரை பாங்கு சொல்லப்படும் போது கேட்டதும் தன்னுடைய பெருவிரலின் நகங்கள் இரண்டையும் முத்திக்கொண்டு அவற்றை அவரது கண் இமைகளில் தடவிக் கொண்டால், ஒரு போதும் அவருக்குக் கொடிய துக்கம் ஏற்படாது, அவரது கண்ணொளி மங்காதிருக்கும், நாளை அவரை சுவனத்திற்கு அழைத்துச் செல்வேன்".

(நூல்: தஃப்ஸீர் ஜலாலைன், 357ம் பக்கம், ஹாஷியா என்ற குறிப்பு 13ம் நம்பர்)

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

•"பாங்கு சொல்லப்படும் போது பெருவிரல் நகங்களை முத்தமிடுவது ஸுன்னத்".

(நூல்: மஙானீ, 138வது பக்கம்)

• ஒருமுறை முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன்னபவியில் நுழையும் போது அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாங்கில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் பெயர் கேட்டதும் மனம் நெகிழ்ந்து தங்களுடைய பெருவிரல் நகங்களை உதட்டில் வைத்து முத்தி "குர்ரத் ஐனீ பிக யா றஸுலல்லாஹ்" என்று சொன்னார்கள். பாங்கு முடிந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி "தாங்கள் செய்தது போன்று யாராவது என் மீது அன்பின் மிகுதியால் செய்வீர்களாயின் அல்லாஹ் அவர்களுடைய குற்றங்களை மன்னிப்பான்" என்று கூறினார்கள்.

(நூல்: இமாம் தைலமியின் முஸ்னதுல் ஃபிர்தெளஸ்)

தொகுப்பு
அஸீம் லாஹிர்
கொழும்பு

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabi Salawath Guroup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share