Home Maruthuvam "Sam"

  • Home
  • Home Maruthuvam "Sam"
04/12/2023
*வெற்றிலை ஆண்ணா? பெண்ணா? காண்பது எப்படி* 🌿வெற்றிலையின் பின் புற நரம்புகளின் அமைப்பில் வித்யாசம் உண்டு. 🌿வெற்றிலையின் காம...
16/11/2023

*வெற்றிலை ஆண்ணா? பெண்ணா? காண்பது எப்படி*

🌿வெற்றிலையின் பின் புற நரம்புகளின் அமைப்பில் வித்யாசம் உண்டு.

🌿வெற்றிலையின் காம்பின் பகுதியிலிருந்து சீரான நடு நரம்பும், அந்த நடு நரம்பிலிருந்து பிரியும் கிளை நரம்புகள் தொடங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெற்றிலையின் வால் பக்கம் சேரும் இடம் வரையில் சீராக, அமைந்து முடியுமிடத்தில் இரண்டு நரம்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால் அது பெண் வெற்றிலை.

🌿அப்படி இல்லாமல் தொடக்கத்திலிருந்து நரம்புகள் சீராக இல்லாமல் வெற்றிலையின் வால் பக்கத்தில் அந்த நரம்புகள் மேலும் கீழுமாய் சந்தித்தால் அவை ஆண் வெற்றிலை என்றும் சொல்வார்கள்.

25/10/2023
*பொன்னாங்கண்ணி – போலி எது ? உண்மை எது ??* பொன்னாங்கண்ணி என்று நீங்கள் பயன்படுத்தி வருவது உண்மை பொன்னாங்கண்ணி இல்லை . கண்...
25/10/2023

*பொன்னாங்கண்ணி – போலி எது ? உண்மை எது ??*

பொன்னாங்கண்ணி என்று நீங்கள் பயன்படுத்தி வருவது உண்மை பொன்னாங்கண்ணி இல்லை . கண்ணுக்கு நல்லது ,தோலுக்கு நல்லது என்று ஆண்டு முழுவதும் நாம் இப்போது கிடைக்கிற பொன்னாங்கண்ணி உண்டு வந்தாலும் அதனால் பயனில்லை என்பது ஒரு நம்ப முடியாத உண்மை .

Alternanthera sessilis என்கிற தாவர பெயர் உடைய கீரையே உண்மையான பொன்னாங்கண்ணி . இதன் படம் இங்கே கொடுக்கபட்டுள்ளது .

கொடுப்பை ,சீதை என்று வேறு பெயரில் அழைக்கப்படும் இந்த கீரைகளின் அரசனை போல் உள்ள பொன்னாங்கண்ணி நமக்கு கிடைப்பது உண்மை இல்லை என்பது தான் அதிர்ச்சி தகவல்

சென்னை கிருஸ்துவ கல்லூரியின் தாவரவியல் , தாவர உயிரித் தொழில்நுட்பத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் .நரசிம்மன் தனது ஆராய்ச்சியில் இப்போது கிடைக்கிற சீமை பொன்னாங் கண்ணி என்கிற Alternanthera philoxeroides , Alligator w**d - என்கிற வகை வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து நமது நீர் நிலைகளின் கரைகளில் தானாக வளரக்கூடிய இந்த அழகு செடி.

இது நமது கீரை சந்தையை கிட்டத்தட்ட முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது என்கிறார் .கழிவு நீர் ஓடை அருகில் ,தொழிற்சாலை கழிவு அருகில் எளிதாக வளர கூடிய இந்த சீமை பொன்னாங்கண்ணியில் காரீயம் ,பாதரசம் ,அம்மோனியா போன்ற மோசமான விஷ சத்துக்களும் புதைந்து இருக்கும் . இவை நமக்கு நல்லதை செய்யாமல் மிக பெரிய கெடுதலை உருவாக்க வாய்ப்புள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர் .

சிவப்பு பொன்னாங்கண்ணி என்கிற Alternanthera bettzickiana தாவரியல் பெயர் உடைய இந்த செடி வெளிநாட்டில் இருந்து வந்தது , அலங்கார செடி தான் இது . இது உண்ண தகுந்ததல்ல என்கிறது அறிவியல் .

நம்மிடையே இப்போது அதிகம் கிடைப்பது இந்த சிவப்பு வகை தான் .. உண்மையை சொல்லப்போனால் சித்த மருத்துவ பண்டைய நூல்களில் பொன்னாங்கண்ணியில் வகைகள் இல்லை . பச்சையான ஒரு வகையை மட்டும் விளக்குகிறது சித்த மருத்துவ குணபாட நூல் .

கல்ப மருந்தாக பொன்னாங்கண்ணியை உண்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்க இயலும் என்று சித்தர்களின் கூற்று .

இன்று தங்க பஸ்பம் என்பது கோடீஸ்வரர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகி விட்டது. ஆனாலும், அதை ஏழைகளும் பலன் பெறும் விதத்தில் இறைவன் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்று. இது இயற்கை தங்க பஸ்பம்

பொன்னாங் கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஒரு துணை மருந்து ஆகிறது.

*_🫁தங்கள் நலங்கருதி.._*

23/10/2023
22/10/2023
22/10/2023
22/10/2023

*சித்த மருத்துவத்தில் பத்தியம்*

பத்தியம் வைப்பதும் - நீக்குவதும் பண்டிதற்கு அழகு. பத்தியம் என்பது நோயை அதிகப்படுத்தும் உணவுகளை உண்ணாமல் தவிர்த்தலாகும்.

ஆங்கில மருத்துவத்திலும் இது உண்டு. முறையாகக் கடைபிடிக்கா விட்டால் நோய் குணமாவது போன்று தோன்றி சில நாட்களில் வேறு நோயாக மாறும்.

பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு - உருளைக்கிழங்கு , வாழைக்காய் , மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப் பொருட்களை நீக்க வேண்டும் .

குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான , உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும் .

சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் - செம்மறியாட்டுக் கறி - சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் .

சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் .

மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும் முறையே நீக்க வேண்டும் .

பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை - அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும் .

*கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை*

கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு , புளி நீக்கி உண்ணல் வேண்டும் . மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வறுத்த உப்பும், சுட்ட புளியும் கூட்டி நெய், சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் . .

மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும் . இதில் முறை தவறினால் கை , கால் முதலியன வீங்கும் .

*பத்தியத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்*

கட்டிய உப்பு , புளியாரை , சீயக்கொளுந்து , நெல்லி , அரு நெல்லி , வெள்ளாடு , முயல் , ஊர்க்குருவி , காடை , மான் , மரை , சுறாமீன் , மயரை , குரவை , வரால் , தேளி , மிளகு , சர்க்கரை , தேன் , சிறுகீரை , ஆவின் பால் , நெய் , சிறுபயறு , பொன்னாங்கண்ணி , துவரை , அவரை பிஞ்சு , புடலம் பிஞ்சு , கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு , முருங்கை பிஞ்சு , பரட்டை கீரை , முள்ளி பிஞ்சு , தூதுளை சமூலம் , கண்டங்கத்திரி பிஞ்சு , ஆகியனவாகும்,

*🫁தங்கள் நலங்கருதி..*

21/10/2023

*எல்லா விதமான வலிகளை போக்கும் சித்தாமுட்டி அரிஷ்டம்*

இது வாதத்தால் வரும் அனைத்து வலிகளையும் நுக்கக்கூடிய அற்புதமான மருந்து.

*தேவையான சரக்குகள்*

1. சித்தாமுட்டிவேர் – 5 கிலோ
2. அக்கராக்கிழங்கு – 5 கிலோ
3. தண்ணீர் – 51.200 லி
4. வெல்லம் - 15 கிலோ
5. கீரைப்பாலை – 100 கி
6. ஆமணக்கு வேர் – 100 கி
7. சித்தரத்தை – 50 கி
8. ஏலக்காய் – 50 கி
9. முதியார் கூந்தல் – 50 கி
10. இலவங்கம் – 50 கி
11. விளாமிச்சைவேர் – 50 கி
12. நெருஞ்சில் – 50 கி
13. காட்டாத்திப்பூ – 800 கி

*செய்முறை*

முதல் மூன்றையும் கொதிக்க வைத்து 12.800 லி ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். மற்றவற்றை இடித்து முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

*அளவும் அனுபானமும்*

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இருவேளைகள்.

*தீரும் நோய்கள்:*

பலவீனம், நரம்புத் தளர்ச்சி, கீல்வாயு, ஆம வாதம், வாத நோய்கள்.

*🫁தங்கள் நலங்கருதி..*

21/10/2023

*இயற்கை அழகு மருத்துவம்*

முகம் பளபளப்பாக

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தடவ முகம் வழுவழுப்பாக மாறும்

காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாறை முகத்தில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளித்து வர முகம் பளபளக்கும்.

செம்பருத்தி பூவை நீரில்போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் அரைத்துச் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.

ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழைத்து எடுத்து கிண்ணத்தில் போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் உரைய வைத்து எடுத்துக்கணும். இந்த ஜில் தக்காளியை லேசாக முகத்தில் தேய்த்துத் தடவி, சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ,
முகத்தில் கட்டிகள் வராது.

தலைமுடி கருப்பாக

250 கிராம் மருதாணி பொடியுடன், நெல்லிப் பொடி -100 கிராம், வெந்தயப் பொடி-50 கிராம், முட்டை-1, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி, தயிர்-½ கப், டீ டிகாஷன்-4 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு-8லிருந்து 10 சொட்டுக்கள் சேர்த்து சிறிது தண்ணீரும் கலந்து முதல் நாள் இரவே ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.

தலை முடியில் லேசாக எண்ணெய் தடவிய பின்னர், கலந்து வைத்த இந்த கலவையை தலை முடியில் முழுவதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும்.

முடியில் நிறம் வந்த பின்னர் கழுவலாம் .

முடியில் நிறம் வராவிட்டால் மேலும் அரை மணி நேரம் விட்டு நிறம் வந்த பின்னர் முடியைக் கழுவலாம்.

இப்படிச் செய்து வந்தால் முடி மென்மையாக அழகாக இருக்கும்.

*🫁தங்கள் நலங்கருதி..*

Address


Alerts

Be the first to know and let us send you an email when Home Maruthuvam "Sam" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share