கல்லாக்கோட்டை

  • Home
  • கல்லாக்கோட்டை

கல்லாக்கோட்டை இது சமூக அக்ககறை கொண்ட தளம் கல்லாக்கோட்டை பகுதிமக்களுக்கான தகவல் களம்
(2)

1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குள...
05/01/2024

1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும்.

மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.

இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .

அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.

இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.

அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,

இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.

1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும்.

ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.

இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.

எப்படி ஆயினும்.... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

10/12/2023
1940 வரையிலும் கூட ஹோட்டல் எனும் பெயரே அதிகம் புழங்கவில்லை. க்ளப்பு கடை (மெம்பர்களுக்கு மட்டுமான கடையாக இருந்து மெல்ல மற...
22/10/2023

1940 வரையிலும் கூட ஹோட்டல் எனும் பெயரே அதிகம் புழங்கவில்லை. க்ளப்பு கடை (மெம்பர்களுக்கு மட்டுமான கடையாக இருந்து மெல்ல மற்றவர்களுக்கும் விற்கத் தொடங்கியவை), காபி கடை (cafe என்பதின் மருவல்), பட்ஷணக் கடை (டிஃபனுக்கு தமிழ்ப் பெயர் பலகாரம்) என்றெல்லாம் தான் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு வாழ்வது என்பது சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று கருதிய காலம். தமிழ் பிரமணர்கள், கன்னட பிராமணர்கள், நெல்லை பிள்ளைமார்கள் போன்ற பிரிவினர் கையில் மட்டுமே இருந்த தொழில் அது.
பெரும்பாலான ஹோட்டல்களில், "பிராமணர்கள் மட்டும் சாப்பிடும் அறை" என்று தனியாக இருந்தது. 1941 ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி போன்ற பழைய திரைப்படங்களில் இவைகளை காணலாம்! மேலும் இதையெல்லாம் தி.ஜ, லாசரா காலத்துக் கதைகளில், அப்பம், வடை, தயிர்சாதம் நாவலில் கதைப் பின்னணியாக பாலக்குமாரன் விரிவாக எழுதி இருப்பதைப் படிக்கலாம்.

காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டுப் பந்தியில் பிராமணர், சூத்திரர் என தனி தனி பந்திகள் அமைக்கப்பட்டதை எதிர்த்ததுதான் தந்தை பெரியார் முதலில் காங்கிரஸில் கருத்து மாறுபாடு கொண்டார். பின்னாளில் அவர் மாநாடு நடத்தியபோது, "நாடார் சமைக்கும் உணவு பறிமாறப்படும்" என்று நோட்டீஸிலேயே போட்டார். நாடார்கள் என்பது அந்தக் காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். தொட்டாலே தீட்டு எனப் பார்க்கப்பட்டவர்கள். அவர்களை அழைத்து பொதுச் சமையல் செய்யச் சொல்லி சமத்துவப் புரட்சி நிகழ்த்தினார்.

உணவுக் கூடங்களில், தொழில்களில் இத்தகைய ஒரு சாராரின் ஆதிக்கம், அடக்குமுறைகள் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக எதிர்க்கப்பட்டது. பின்னாளில் மாற்றப்பட்டது.

அதை முதன்முதலில் எதிர்த்தவர் பெரியார். மாற்றியவர் பெரியார்.

இத்தனை ஆதாரங்கள், காட்சிப்படங்கள், காணொளிகள் இருக்கும்போதே முழுப் பூசணியை உப்புமாவில் மறைக்கப் பார்க்கின்றனரே!

இவர்கள் நமக்குக் காட்டும் அந்தக்காலச் சரித்திரம் எந்த லட்சணத்தில் இருக்கும்!!

வருடத்தின் நாட்கள் 365வருடத்திற்கு 365 நாட்கள், 5 மணி நேரம், 46 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள். இவ்வளவு துல்லியமாக பூமி...
18/10/2023

வருடத்தின் நாட்கள் 365

வருடத்திற்கு 365 நாட்கள், 5 மணி நேரம், 46 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள். இவ்வளவு துல்லியமாக பூமி சூரியனை சுற்றும் நாட்களை 1000 வருடங்களுக்கு முன்னாள் ஒருவா கணக்கிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?

அவர்தான் அல் பட்டாணி!

இவர் கணக்கிட்ட இந்த மதிப்பு சமீபத்திய மதிப்பீடுகளுக்கு 2 நிமிடங்கள் 22 வினாடிகள் மட்டுமே வேறுபட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு முன் இவர் எழுதிய, 'வானியல் ஆய்வுகளின்அட்டவணைகள்'' என்ற புத்தகம் 12 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் "டி சயின்டிகா ஸ்டெல்லரம் - டி நியூமரிஸ் ஸ்டெல்லரம்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.

அதே போல ஐரோப்பா, வானியலில் மறுமலர்ச்சி அடையும் வரை இப்புத்தகம் ஐரோப்பாவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மிகவும் செல்வாக்கு செலுத்தியது.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த வானியலாளர் தாலமிக்கும், கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியலாளர் கோப்பர்நிக்கஸிற்கும் இடைப்பட்ட காலத்தில் மிக முக்கியமான வானியல் படைப்புகளை உருவாக்கியவர் இவர்தான்.

இன்னும், அறிவியலாளர் கோப்பர்நிக்கஸ் தனது டி ரெவல்யூஷிபஸ் ஆர்பியம் கிளெஸ்டியம் என்ற புத்தகத்தில்
அல்-பட்டாணியின் படைப்புகளைப் பற்றி 23 முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் அல்-பட்டாணியின் படைப்புகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சூரியனின் இயக்கத்தைப் பற்றிய அளவீடுகளில் அல்-பட்டாணியின் குறிப்பு, கோப்பர்நிக்கஸை விடத் அல்லியமானதாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அல் பட்டாணி 489 நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவற்றை இந்த புத்தகத்தில் மேப்பிங் செய்து அதற்குப் பெயரும் இட்டுள்ளார்.

மேலும், இப்புத்தகம் 15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வானியலாளர்களின் ஜோஹன்னஸ் கெப்லர், டைகோ பிரஹே மற்றும் கலிலியோ ஆகியோரின் படைப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியும் உள்ளது.

வானியலுக்குக் கணிதத்தின் பங்கு இன்றியமையாத காரணத்தினால், அல் பட்டாணியின் வானியல் ஆராய்ச்சிகள் அவரைக் கணிதத்தின் பக்கம் கொண்டு சென்று, இறுதியாக, முக்கோணவியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழி வகுத்தது,

57 அத்தியாயங்கள் கொண்ட இப்புத்தகத்தில், வானியலுக்கு அடிப்படையான முக்கோணவியலில், புதிய சமன்பாடுகளை அதிகம் படைத்திருக்கிறார். கணிதத்தில் முக்கோணவியலில், நாம் அதிகம் பயன்படுத்தும் சைன் தீட்டா என்ற வார்த்தை இவர் உருவாக்கியதே. அவர் சைன் தீட்டாவிற்கான கணக்கீட்டை மேம்படுத்தி, காட் தீட்டா என்ற கருத்தை உருவாக்கி, அவற்றின் அட்டவணையை டிகிரிகளில் வழங்கினார் இவரின் கணிதத் திறமையே. அல் பட்டாணியை ஒரு வருடத்தின் நாட்களை துல்லியமாக கணக்கிட வைத்தது. ஆர்த்தோகிராஃபிக் திட்டத்தின் முறைகளைப் பயன்படுத்தி
கோள முக்கோணவியல் சில சிக்கல்களுக்கு அல்-பட்டாணி மிகவும் தனித்துவமான தீர்வுகளையும் வழங்கினார்.

அல்-பட்டானியின் கிதாப் அல்-ஜிஜிஸ், தாலமியின் ஆல்மாஜெஸ்ட்டில் இருந்து ஓரளவிற்கு விலகி, கிரக இயக்கங்கள் போன்ற ஏராளமான சிக்கலான வானியல் நிகழ்வுகளைப் பற்றி அதிகம் விவாதித்திருக்கிறது.

அதே நேரத்தில், கிரேக்க வானியலாளர்களின் வானியல் ஆராய்ச்சிகள், இஸ்லாமிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த காரணத்தால், சூரிய அபோஜீ அல்லது கிரகணத்தின் சாய்வைப் பற்றிய கிரேக்க வானியலாளரின் பிழைகளை, அல் பட்டாணி விமர்சிக்கத் தயங்கினார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வானியல் கருவிகளை உருவாக்குவதில் தனிச் சிறப்புடையவராக இருந்தார். இதனால், முந்தைய கண்டுபிடிப்புகளை விட மிகவும் துல்லியமான ஒரு ஆய்வுக் கோளத்தை அவர் உருவாக்கினார். பூமியுடனான சூரியனின் தொடர்பு குறித்து முக்கியமான வானியல் கணக்கீடுகளை செய்ய இது அவருக்கு உதவியது.

அல் பட்டாணி வானியல் கருவிகளை தயாரிப்பதில் திறமையாக இருந்ததற்கு காரணம், அக்காலகட்டத்தில் அவரது தந்தை ஜாபீர் இப்னு சினன், அறிவியல் உபகரணங்களை தயாரிப்பதில் பிரபலமானவராக இருந்ததே ஆகும்.

இவரின் கண்டுபிடிப்புகளை கவுரவப்படுத்தும் விதமாக சந்திரனின் ஒரு பள்ளத்தாக்கிற்கு அல் பட்டாணியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார் ட்ரெக் வாயேஜரில், அல் பட்டாணி நினைவுகூரப்பட்டார். அங்கு அவர்கள். தங்கள் விண்வெளி கப்பல்களில் ஒன்றை "யுஎஸ்எஸ் அல்-பட்டாணி" என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நவீன அறிவியலின் சிற்பிகள்.

சோழர் செங்கோல்!----------------------------ஆன்ட்டி- இந்தியன் (anti- Indian) என்பவர்கள் யார்? அவர்களுக்கு ஏதேனும் அடையாளம...
26/05/2023

சோழர் செங்கோல்!
----------------------------

ஆன்ட்டி- இந்தியன் (anti- Indian) என்பவர்கள் யார்? அவர்களுக்கு ஏதேனும் அடையாளம் இருக்கிறதா? ஆம், நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் இந்த அடையாளங்களை வைத்து அவர்களைக் கண்டுபிடித்து விடலாம்!

1. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா அல்லது பூமி பூஜைக்கு, அன்றைய குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. அதேபோல அந்தக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவரையும் அழைக்கவில்லை. அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலா என்று கேட்பார்கள்!

2. அரியணை, மகுடம், வெண்கொற்றக் குடை, செங்கோல் இவை எல்லாம் மன்னர் ஆட்சியின் குறியீடுகள்! இவற்றுள் ஒன்றான செங்கோல், மக்களாட்சியில் ஏன் வருகிறது என்று குதர்க்கம் பேசுவார்கள்.

3. செங்கோல் மாற்றம், அதிகாரம் மாற்றத்திற்கான அடையாளம் என்றால், இப்போது அதற்கு என்ன வேலை? நடக்கப் போவது அதிகார மாற்றமா, கட்டிட மாற்றமா என்ற கேள்வியையும் எழுப்புவார்கள்!

4. குடியரசு நாளிலோ, இந்தியா விடுதலை பெற்ற நாளிலோ அல்லாமல், சாவர்க்கர் பிறந்தநாளான மே 28 இல் எதற்காக இந்தக் கட்டிடத் திறப்பு விழா என்றும் வினவுவார்கள்!

5. ராஜாஜி தொடக்கி வைத்து, சங்கராச்சாரியார் எடுத்துச் சொல்லி, துக்ளக்கில் கட்டுரையாக வந்து, பத்மா சுப்ரமணியத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இன்று அரியணை ஏறும் செங்கோல், முற்றுமாக ஒரு "நூல்இழை"யில் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஒரு மடத்தின் ஆதீனம் அதைக் கொடுக்க இருக்கிறார். மதச்சார்பற்ற நாட்டில், ஏன் இப்படிக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் தொடர்புகள் ஆட்சி அதிகாரத்தோடு பிணைக்கப்படுகின்றன என்று நாத்திகம் பேசுவார்கள்!

இவையெல்லாம் தான் ஆன்ட்டி இந்தியன் என்பதற்கான அடையாளங்கள்! கவனம் வைத்துக் கொண்டு, அவர்களோடு பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்! இதனைத் தாண்டி இன்னும் இரண்டு கேள்விகள் இருக்கின்றன. அவை இவற்றை விட மோசமானவை!

1. சில ஆண்டுகளுக்கு முன்பு, தருண் விஜய் என்பவர் திருக்குறளைப் புகழ்ந்து பேசி, திருவள்ளுவர் சிலையைத் தில்லிக்கு எடுத்துச் சென்றாரே, அது என்னாயிற்று? அதே போலத்தான் இப்போது, பிரதமர் மோடி தமிழைப் புகழ்ந்து பேசுவதும், செங்கோல் தமிழர் மரபு, இது சோழர் செங்கோல் என்று கூறுவதும், தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்காகவா என்ற வினாவைத் தொடுப்பார்கள்.

2. சோழர் செங்கோல், சனாதனத்தை, சாதி அடுக்குகளை ஆதரித்த ஒன்றாயிற்றே, சமூக நீதிக்கு எதிராக வளைந்த செங்கோலும் அதுவன்றோ என்றும் கேட்பார்கள்!

இவர்கள் ஆன்ட்டி - இந்தியன் மட்டுமில்லை, தமிழ்த் தேசியப் பேராசான்கள் நடத்தும் பரிசோதனைக் கூடங்களில், ஆன்ட்டி தமிழர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டவர்கள்.

கவனம், தமிழர்களே கவனம்!

ஆன்ட்டி - இந்தியனாகவும், ஆண்ட்டி - தமிழனாகவும் ஆகிவிடாதீர்கள்! ஜெய் ஸ்ரீ ராம் என்று உரத்து முழங்கும் தேஷ பக்தர்களாகவும், தமிழ்த் தேசியம் பேசும் தம்பிகளாகவும் எப்போதும் இருந்திட முயற்சி செய்யவும்!

அன்புடன்
- சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

உதயநிதி சி.எம் கூட ஆகலாம், இல்லை, அடுத்த சி.எம் கேண்டிடெட் அவர் தான், இருக்கட்டும் இதில் என்ன தவறு உள்ளது?பாஜக அதிமுகவை ...
17/12/2022

உதயநிதி சி.எம் கூட ஆகலாம், இல்லை, அடுத்த சி.எம் கேண்டிடெட் அவர் தான், இருக்கட்டும் இதில் என்ன தவறு உள்ளது?

பாஜக அதிமுகவை சிதைக்க காரணமே ஒற்றை தலைமையில் அந்த அமைப்பு பயணித்த காரணத்தால் தான்,

அமைப்பின் மொத்த அதிகாரமும் ஜெயலலிதா அம்மாவிடம் குவிந்து இருந்த போது அடுத்த கட்ட தலைவர்களை அவர் உருவாக்கவில்லை,

உருவாக்கவில்லை என்பதை விட நம்பிக்கையற்ற அடிமை துரோகிகள் தான் அவருடன் ஒட்டுண்ணி போல் இருந்தார்கள்,

அதனால் அந்த ஜெயலலிதாவுக்கு பிறகு அந்த அமைப்பு சிதறுண்டு போனது,

திமுகவில் அப்படி யாரும் இல்லையா என்றால் இருக்கிறார்கள், ஆனால் நீங்களோ நானோ யாரையும் நம்பாத போது அவ்வளவு பெரிய கட்சி எப்படி எல்லோரையும் நம்பி பொறுப்புகளை கைமாற்றி விடும்?

உபி"னு வேனா சொல்லிக்கொள்ளங்கள் ஆனால் எதார்த்தம் ஒன்று என உள்ளது கலைஞர் குடும்பல் இல்லாவிட்டால், திமுகவை விழுங்கி அழிக்க பெரும் முதலைகள் காத்திருக்கு,

சோ அதை அவர்கள் காப்பாற்ற தான் நினைப்பார்கள்.

வாரிசு அரசியல் என சொல்லிக்கொள்ள வேண்டியது தான் அதில் தவறு ஒன்றும் இருப்பதாகவும் தெரியவில்லை,

பல அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கவில்லையா என கேள்வி வரலாம்,

உண்மை தான் அவர்கள் பின்னால் உள்ள அதிகாரம் வர்த்தகம் எல்லாம் வாரிசு அரசியலை விட அபாயகரமானது,

முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் உதயநிதியை பெரும் கார்பரேட் மான்ஸ்டராக உருவாக்கி இருக்க முடியும், ஆனால் அவ்வாறு செய்யாதவரை அது பிஸினஸை விட கட்சிக்கான முக்கியதுவம் கருதியதாகத்தான் இருக்கும்.

விமர்சிக்க வேண்டும் என்றால் செயல்பாடுகளை வைத்து விமர்சிக்கலாம்,

அது வரை காத்திருப்போம்.

வாழ்த்துகள்.

100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது.  *அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக...
10/12/2022

100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது.

*அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும்* என்று புகார் கூறி வந்தனர்.

ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

*மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.*

இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், *வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.*

இதன்படி *எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.*

*உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்*.

*மீதமுள்ள 80 பேர்* கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர்.

18 பேர் மசாலா தோசை
16 பேர் ஆலு பரோட்டா &
தாஹி
14 பேர் ரொட்டி & சப்ஜி
12 பேர் ரொட்டி &
வெண்ணெய்
10 பேர் நூடுல்ஸ்
10 பேர் இட்லி சாம்பார்

எனவே, *வாக்களிப்பு முடிவுகளின்படி, உப்புமா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது*, அதனால்,
*ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது.*

பாடம்: *மக்கள் தொகையில் 80% சுயநலவாதிகளாகவும், பிளவுபட்டவர்களாகவும், சிதறடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் வரை*,
*20% பேர் நம்மை ஆளுவார்கள்.

இது ஒரு மௌன செய்தி.

08/04/2022

அவர்களின் எதிரி ஆங்கிலமில்லை!
===================
-சுப. வீரபாண்டியன்

பெட்ரோல், டிசல் போன்ற எரிபொருள்கள் விலை ஏறிக் கொண்டே போகிறது. சமையல் எரிவாயுவின் விலையும் இதுவரை காணாத விலை உயர்வைக் கண்டிருக்கிறது.

நாடு முழுவதும் மக்களின் கோபமும் மெதுவாக ஏறுநிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்? ஆங்கிலம் வேண்டாம், இந்தி போதும் என்று சொல்லலாம். உடனே மக்கள் அதுபற்றிப் பேசுவார்கள். இந்தி எதிர்ப்பில் எரிபொருள் விலையேற்றம் அமிழ்ந்து போகும் என்று ஒன்றிய அரசு திட்டம் போட்டுச் செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இது ஒரு திசைதிருப்பும் முயற்சியாக இருக்கலாம். இருந்தபோதிலும், நாம் இரண்டிலும் கவனமாக இருப்போம்! இரண்டையும் எதிர்ப்போம்!!

"பிரதமர் மோடி முடிவெடுத்து விட்டார். இப்போதே 70 விழுக்காடு ஒன்றிய அரசின் கோப்புகள் இந்தியில்தான் தயாராகின்றன. இனி 100 விழுக்காடும் இந்தியே ஆட்சி செய்யும். ஆங்கிலத்திற்கு வேலையில்லை" என்று அறிவித்துள்ளார் அமித்ஷா. ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் இந்தியே தவிர, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லை என்று ஒரு சமாதானத்தையும் கூறியுள்ளார்.

இதே சமாதானம்தான் கடந்த 75 ஆண்டுகளாகச் சொல்லப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் மீது ஏன் இவ்வளவு கோபம் என்ற வினாவிற்கு ஒரே ஒரு விடைதான் உள்ளது. அது ஆங்கிலத்தின் மீதான கோபம் இல்லை. ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் ஆங்கிலம் அறிந்தவர்களாகவே இருக்கின்றனர். எங்களுக்கு மட்டும் ஆங்கிலம் இருக்கட்டும், உங்களுக்கெல்லாம் வேண்டாம் என்பதுதான் அதன் பொருள்!

ஆங்கிலம் ஒழிந்தால்தான்,இந்தியும், இந்தி வழி சமஸ்கிருதமும், சமஸ்கிருதத்தின் வழி பார்ப்பனியமும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இது வெறும் மொழிப்போர் அன்று. இது ஒரு பண்பாட்டுப் போர்!

இன்று ஆங்கிலம் வேண்டாம், உங்கள் தாய்மொழியும், இந்தியும் இருக்கட்டும் என்று சொல்பவர்கள், நாளை, தாய்மொழியும் வேண்டாம், இந்தி மட்டுமே போதும் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்றைய வடஇந்திய மாநிலங்கள் பலவே இதற்கான ஆதாரங்களாக உள்ளன!

வடஇந்தியாவில் பல மாநிலங்களில், அம்மாநிலத் தாய்மொழிகளைப் புறந்தள்ளி விட்டு, இந்தி ஆட்சிக்கட்டில் ஏறிவிட்டது என்பது வெளிப்படை! சில எடுத்துக்காட்டுகளை வேண்டுமானால் பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலமே, முழுக்க இந்தி பேசும் மாநிலமில்லை. அங்கு பல்வேறு தாய்மொழிகள் உள்ளன. வடமேற்கு உ.பி.யின் தாய்மொழி பிரஜ் பாஷா. தென்மேற்கு உ.பி.யின் தாய்மொழி புத்தேல்கண்டி. வடகிழக்கு உ.பி.யிலோ போஜ்பூரி தாய்மொழி. ஆனால் எல்லா மொழிகளையும் தின்றுவிட்டு, இந்தி அங்கு ஆட்சிமொழியாக இருக்கிறது.

உத்தர்காண்டில் இந்தியும், சமஸ்கிருதமும் ஆட்சிமொழிகள். ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி கடுவாலி.

ஹரியானா மாநில மக்கள் பெரும்பான்மையோரின் தாய்மொழி ஹரியானி என்றபோதும் அங்கும் இந்திதான் ஆட்சிமொழி.

மிகப்பெரிய கொடுமை ராஜஸ்தானில் நடக்கிறது. அங்கே 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ராஜஸ்தானி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் அம்மக்களின் மொழி அங்கு ஆட்சி மொழியாக இல்லை என்பது மட்டுமில்லை, எட்டாவது அட்டவணையில் கூட அந்த மொழி இடம்பெறவில்லை. இந்தியே ஆட்சிமொழியாக உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இந்தி பலருக்குத் தாய்மொழியாக உள்ளது என்ற போதிலும், அங்கு உருது, அவதி, மால்வி, பகேலி போன்ற பல மொழிகள் உள்ளன. அவைகளுக்கு அங்கு எந்த மதிப்பும் இல்லை.

சத்தீஸ்கரில், அவர்களின் சட்டிஸ்கரி மொழியை விட்டுவிட்டு இந்தியை ஆட்சிமொழி ஆக்கியுள்ளனர். ஜம்முவின் தாய்மொழி டோக்ரி. லடாக்கின் தாய்மொழி லடாக்கி. ஆனால் அங்கும் இந்தியே ஆட்சிமொழி என்று அண்மையில் அறிவித்துள்ளனர்.

எனவே இன்றைய அமித்ஷாவின் பேச்சு நாளை இந்தியா முழுவதும் உள்ள தாய்மொழிகளை அழிக்கும் முயற்சி! ஆங்கிலத்திற்கு மட்டும் எதிரானது என்று எண்ணி ஏமாந்துவிடக் கூடாது.

இவற்றையெல்லாம் தொலைநோக்கோடு முன்னுணர்ந்தே பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள், தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கையை விடாது வலியுறுத்தி வந்துள்ளனர். இன்றைய தலைவர் தளபதியும் அதில் உறுதியாக இருக்கிறார்.

நாம் ஒன்றும் ஆங்கில மோகம் உடையவர்களோ, ஆங்கில அடிமைகளோ இல்லை. இந்தியாவின் அராசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மட்டுமே கோருகின்றோம். நம் இந்த நிலைப்பாடு திடீரென்று தோன்றியதில்லை. 1963 ஆம் ஆண்டே அறிஞர் அண்ணா இந்தக் கோரிக்கையை, மாநிலங்களவையில் முன்வைத்தார். அதன்பிறகு, முரசொலி மாறன் 1982 அக்டோபரிலும், திருச்சி சிவா 2013 மார்ச்சிலும் முன்வைத்தனர். திமுகவை வலியுறுத்தலை ஏற்றுத்தான் 2004 ஆம் ஆண்டு, அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆராய, டாக்டர் சிட்டகாந்ட் மகோபாத்ரா குழுவை அமைத்தது. நாம் தெளிவாகவே உள்ளோம்.

அவர்களும் சிலவற்றில் தெளிவாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் திராவிடத்தை ஒழிக்காமல், ஆரியத்தை நுழைக்க முடியாது, ஆங்கிலத்தை ஒழிக்காமல் இந்தி, சம்ஸ்கிருத மொழிகளை நுழைக்க முடியாது என்று உணர்ந்துள்ளனர்.

அதனால்தான், திராவிட எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என இரண்டிலும், ஆரிய இந்துக்கள், தமிழ் இந்துக்கள் இருவரும் கைகோத்துச் செயல்படுகின்றனர்.

அந்தச் செயல்பாடுகளின் அடுத்தடுத்த முயற்சிகள்தான், அமித்ஷாவின் பேச்சுகள்!நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், மொழிப்போரை உருவாக்குவது நாட்டிற்கு நல்லதில்லை. இந்தியாவை இன்றைய இலங்கையாக ஒன்றிய அரசு ஆக்கிவிடக் கூடாது!

06/03/2022

நியாயமான கேள்வி........

இந்தியாவின் முன்னணி இதயநோய் நிபுணரும், பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி கேட்கிறார்:

"நம் நாட்டில் 55 மருத்துவக் கல்லூரிகள், அமெரிக்காவில் வேலை செய்யப் போகும் டாக்டர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியில் இயங்குகின்றன. ஒரு ஷாப்பிங் மாலின் ஐம்பதாயிரம் சதுர அடி வாடகை இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அக்கல்லூரிகளில் மிக அற்புதமான மருத்துவர்கள் அமெரிக்காவுக்காக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிகளுக்காக 400 கோடி ரூபாய் செலவு செய்து மாபெரும் கட்டடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இது மிகவும் அபத்தமானது. உலகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு இப்படியான கடினமானத் தேவைகளோ விதிகளோ இல்லை. அவற்றில் 100 மாணவர்களைப் பயிற்றுவிக்க 140 ஆசிரியர்கள் தேவையில்லை. 140 ஆசிரியர்கள் ஆயிரம் மாணவர்களை பயிற்றுவிக்கலாம். இவ்விஷயங்களில் உலகமே மாறி விட்டது, ஆனால் நாம் மாறவில்லை. மருத்துவக் கல்லூரிகளை ஓர் உயரடுக்கு விவகாரமாக மாற்றிவிட்டோம்.

நான் ஓர் இளம் மருத்துவ மாணவனாக இருந்தபோது என் சக மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இன்று ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கூட காண்பதில்லை. இது மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

தங்கள் விரல்களில் பெரும் மாயவித்தையை வைத்திருக்கும் மருத்துவத் துறையின் முதன்மையான பல மருத்துவர்களை கணக்கிலெடுத்துப் பார்த்தால் அவர்கள் அனைவரும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பிள்ளைகள் தான் மிகுந்த உறுதியுடனும் மாபெரும் லட்சியத்துடனும் 24 மணி நேரமும் உழைக்கக் கூடியவர்களாவும், இந்த ஆட்டத்தின் விதிகளையே மாற்றக்கூடியவர்களாவும் இருப்பார்கள்.

வசதியான குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்க வரும் பிள்ளைகள் பெரும்பாலும் கதிரியக்கவியல் (ரேடியாலஜி), தோல் மருத்துவம் (டெர்மட்டாலஜி) போன்ற துறைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள், ஏனெனில் மாலை 5 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிவிடலாம்.

மருத்துவ மேற்படிப்புகள் படிக்க ஏன் இத்தனை கோடிகள் விலை வைக்கப்படுகிறது? ஏன் ஒரு மருத்துவ நிபுணர் (ஸ்பெஷலிஸ்ட்) இரண்டிலிருந்து ஐந்து கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது? பத்து லட்ச ரூபாய்கூட ஏன் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது?
உலகம் முழுவதும் உயர்கல்வி என்பது கட்டணமில்லாமல் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

அடிப்படையில், பிரச்சினை என்னவென்றால் மருத்துவத் துறையில் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் அரசாங்கம் மட்டுமல்ல, வாய்ப்புகள் மறுக்கப்படாத உயரடுக்கு சமூகத்தினர் சரியான கேள்விகளை எழுப்புவதில்லை என்பதுவே..

ஒவ்வொரு 12 நிமிடமும் ஒரு கர்ப்பிணி தன் பிரசவத்தின்போது ஏன் இறக்க வேண்டியிருக்கிறது?

ஒவ்வொரு நாளும் 3 லட்சம் குழந்தைகள் தாங்கள் பிறந்த அன்றே ஏன் இறக்கிறார்கள்?

12 லட்சம் குழந்தைகள் தங்கள் முதல் பிறந்தநாளைக் காணும் முன்பே ஏன் இறக்கிறார்கள்?

இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. ஏன்? ஏன்?

ஏனெனில், நாம் சரியான கேள்விகளை எழுப்புவதில்லை.

புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிரசவத்திற்கு முன்பு இந்தக் கர்ப்பிணிகள் அனைவர்க்கும் ஒரு நல்ல முறையான கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், இவை நிகழ்ந்திருக்காது. இந்த கர்ப்பிணிப் பெண்களில் 15% பேருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அதாவது 52 லட்சம் சிசேரியன்கள் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை செய்ய 2 லட்சம் மகப்பேறு மருத்துவர்கள் (கைனக்காலஜிஸ்ட்) நமக்குத் தேவை. நம்மிடம் 50 ஆயிரத்துக்கும் குறைவான மகப்பேறு மருத்துவர்களே இருக்கிறார்கள். அதிலும் பலர் பின்பேறுகால மருத்துவத் (ஆப்ஸ்டெட்ரிக்ஸ்) தொழிலைச் செய்வதில்லை. ஏனெனில் பிரசவத்துக்காக நள்ளிரவுகளில் தாங்கள் தட்டியெழுப்பப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. மேலும் அவர்களெல்லாம் நகரங்களில் வசிக்கிறார்கள், ஆனால் 60% சதவிகிதக் குழந்தைகள் ஊரக/கிராமப்புற இந்தியாவில் தான் பிறக்கின்றன.

நமக்கு 2 லட்சம் மயக்க மருந்து நிபுணர்கள் தேவைப்படுகிறது, ஆனால் 50 ஆயிரத்துக்கும் குறைவான மயக்க மருந்து நிபுணர்களே இருக்கிறார்கள்.

நமக்கு 2 லட்சம் குழந்தை மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள், வெளிவரும் குழந்தைகளையெல்லாம் பார்த்துக் கொள்ள, ஆனால் 50 ஆயிரத்துக்கும் குறைவான குழந்தை மருத்துவர்களே இருக்கிறார்கள்.

நமக்கு 1.5 லட்சம் கதிரியக்கவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் நம்மிடம் பத்தாயிரத்துக்கும் குறைவான கதிரியக்கவியலாளர்களே இருக்கிறார்கள்.

பின் எப்படி தாய்-சேய் இறப்பு விகிதம் குறையும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இது பணம் தொடர்பான பிரச்சினையே அல்ல. இதற்கு எந்த விதமானக் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளும் அவசியமில்லை. இதற்குத் தேவையானதெல்லாம்: இந்த நாடு மருத்துவ, செவிலிய, துணை மருத்துவக் கல்வியை விடுவிக்க வேண்டும்.

---------------

*ஆப்ஸ்டெட்ரிசியன்களுக்கும் கைனகாலஜிஸ்ட்களுக்கும் உள்ள வேறுபாடு: கர்ப்பமான நாள் முதல் பிரசவத்திற்கு முன்பு வரை கர்ப்பிணி, கைனகாலஜிஸ்டகளின் பொறுப்பில் இருப்பார். பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு முதல் மற்றும் பிரசவம், பிரசவத்திற்குப் பின்பான தாய்-சேய் நலம் அனைத்தும் ஆப்ஸ்டெட்ரிசயன்கள் பொறுப்பு. கைனகாலஜிஸ்ட்கள் பிரசவம் பார்ப்பதில்லை. ஆப்ஸ்டெட்ரிசியன்களே பிரசவம் பார்ப்பார்கள்.

நன்றி: Anitha N Jayaram
தோழர் கொற்றவை.

மார்வாடி (  சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவ...
01/03/2022

மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.

இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.

சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.

மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.

இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.

மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.

வடநாட்டுக்காரனுடன் அதிகம்
உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை
சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா
போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி
வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின்
நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்
செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின்
செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க
வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும்
தற்போது பரவலாக தமிழகத்தில்
சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ்
வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக
மாறிடுவான்.
தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து
கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர்
அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள்
புதிதாக சொத்து வாங்குவதாக
இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள
தமிழ் மண்ணை வாங்குங்கள். வட
நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி
தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும்
நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.
உஷார்
பரப்புங்கள்
தமிழக மருத்துவ கல்லூரிகளில்
வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான்
நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவோம் சூழ்ச்சியை
வெல்வோம் மதியால்...
அன்னியர்களின் வருகை நாளுக்குநாள் பெருகுவது நாம் இன்னுமும் மதுவின் போதையுலும், மாதுவின் மயக்கத்திலும் உறங்கிகொண்டு இருக்கிறதா தமிழ்ச்சமூகம்... விழித்தெழுவோம் விழித்தெழுவோம் சமூகஒற்றுமையோடு!!(mi@55)

தமிழ் மக்களே
தமிழினமே
நம் தாய் மண்ணை
அபகரிக்கும்
வந்தேரிகள் கூட்டம்
ஒரு கோடியை தாண்டிவிட்டது
இனி தமிழ் மண்ணில்
தமிழ் மக்கள் அகதிகளாக
வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது
விழித்துக் கொள்ளுங்கள்
தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள்

அருமையான தகவல்👌👌👌

விழிப்புணர்வு அவசியம் எத்தனையோ கண்ட கண்ட செய்திய முகநூல் மூலமும் பகிரியின் மூலமும் பதிவு செய்கிறோம்

இந்த பதிவை தயவு செய்து எம் தமிழ் இனமீட்புக்காக
விழிப்புணர்வு செய்ய"
அனைவரையும்
எம் சிரம் தாழ்த்தி வேண்டி கொள்கிறேன்
தயவு செய்து பகிருங்கள்

நானும் உங்களுடன் சேர்ந்து இந்த பதிவை பகிர்ந்துகொள்கிறேன்

நன்றி🙏

பெரிய பதிவுதான். ஆனால் ரஷ்யா, உக்ரைன் மீது எதனால் போர் தொடுக்கிறது, என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழுகிறது அல்லவா. அத...
27/02/2022

பெரிய பதிவுதான். ஆனால் ரஷ்யா, உக்ரைன் மீது எதனால் போர் தொடுக்கிறது, என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழுகிறது அல்லவா. அதற்காக இந்த பதிவு உக்ரைன் மீது ரஷ்யா
ஏன் போர் தொடுத்தது?
போர் தொடுக்கும் நிர்ப்பந்தம் எதனால்?

வரலாற்றுப் பின்னணியை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீதும் ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர வேண்டும்.

இதற்கு மாற்றாக அன்றைய சோவியத் யூனியன்
1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது.
அதில் இடம்பெற்ற அன்றைய கம்யூனிஸ்ட் நாடுகள் போலந்து, செக்கோஸ்லோவேகியா,யூகோஸ்லோவோக்கியா, ருமேனியா, கங்கேரி,கிழக்கு ஜெர்மனி
போன்ற முக்கிய நாடுகளாகும்.

12 நாடுகளாக இருந்த நேட்டோ கூட்டமைப்பு சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பின்பு
வார்சா ஒப்பந்தத்தின் கீழ் இருந்த ருமேனியா ஹங்கேரி, போலந்து, ஆகிய நாடுகளை நேட்டோவுடன் இணைத்துக்கொண்டது.
இறுதியாக ஒன்றுபட்ட ஜெர்மனியையும் இணைத்துக்கொண்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலினால் சோவியத் யூனியன் ஆதரவான நாடுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நேட்டாவோடு நினைத்து
ரஷ்யாவை தனிமைப் படுத்தியது.

ஜெர்மனியை நேட்டாவோடு இணைத்ததற்கு பின்பு
பிற நாடுகளை நேட்டாவோடு இணைப்பதிலை என்ற உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு சோவியத் யூனியனுக்கு அருகில் உள்ள நாடுகளையும் நேட்டாவோடு இணைத்தது. இணைத்தது மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய யூனியனும் தனது படைகளையும் ஆயுதங்களையும் ரஷ்ய நாட்டின் எல்லைக் அருகில் நிறுத்தியது.இது ரஷ்ய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இது ரஷ்யாவின் இறையாண்மைக்கு எதிரானசெயல் என ரஷ்யா கருதுகிறது

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது போல் இன்றைய சூழலில்
ரஷ்யாவுக்கு எதிராக உக்கிரனை ஏகாதிபத்திய நாடுகள் பயன்படுத்துகின்றன அதற்குக் உக்ரைன் இறை யாகிவிட்டது

வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின. இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.

நேட்டோ மற்றும் யுக்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்னை என்ன?

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

எனினும், நேட்டோவுடன் யுக்ரேன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன.

தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கூறி வருகின்றன.ஆனால் அவை ரஷ்யாவுக்கு எதிராக இருக்கும் என்பதை மறுக்கின்றனர்.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் உக்ரைன் உறுதியாக இருப்பது. ரஷ்யாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து அங்க நாடுகளையும் நேட்டோவில் இணைப்பதன் மூலம்.
ரஷ்யாவை தனிமைபடுத்தி
பலவீனமாக்கி அதனை ஒழிப்பதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் வஞ்சக நோக்கமாகும்.

மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்.

இப்போது நேட்டோவில் 30 நாடுகள் உள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவையும் நேட்டோவில் இணைந்தன. போதாக்குறைக்கு உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவில் சேர விரும்பின. அவையும் இணைந்தால், ரஷ்யாவைச் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளிலும் அமெரிக்கா தடம் பதித்தது போல ஆகிவிடும். இதை ரஷ்யா ரசிக்கவில்லை.

நெட்டோவின் விரிவாக்க முயற்சிகள் பெரும்பாலும் மாஸ்கோ தலைவர்களால் ரஷ்யாவை சுற்றி வளைத்து தனிமைப்படுத்தும் பனிப்போர் முயற்சியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது,

போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவின் நிபந்தனைகள்

1997-க்குப் பிறகு நேட்டோவில் இணைந்த எல்லா நாடுகளிலிருந்தும் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் படைகள் வெளியேற வேண்டும்.

* உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை நேட்டோவில் சேர்க்கக்கூடாது.

* கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ எங்கும் படைகளை நிறுத்தி வைக்கக்கூடாது.

* ஐரோப்பாவிலிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா விலக்கிக்கொள்ள வேண்டும்.

தனது நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதற்கு
ரஷ்யாவுக்கு முழு உரிமை உண்டு அதை பிற நாடுகள் உணர வேண்டும்.

போரில்லா உலகம் என்பதே
இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் முழக்கமாகும்.

Address


Telephone

+966569487895

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்லாக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கல்லாக்கோட்டை:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share