01/02/2017
சில நேரங்களில் உங்கள் சூழ்நிலைகள் உங்களையும் தாண்டி வளர்ந்து விடுகின்றன.அதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.அல்லது அந்த சூழ்நிலையை கடந்து போக தைரியமில்லாமல் இருப்பீர்கள்.அந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை உங்களை கடந்து போய்க்கொண்டிருக்கும். உங்கள் நிறுவனம் ஒரு தவறான போக்கில் போய்க்கொண்டிருக்கிறது.இவ்வாறு நடக்கும் என்று நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தும்,உங்களை அதற்கேற்ற விதமாய் நீங்கள் தயார் செய்துகொள்ளவில்லை. பெரிய தவறு செய்துவிட்டதாக உங்கள் மேலேயே உங்களுக்கு கோபம் வருகிறது. ஆனாலும் இந்த சூழ்நிலையை நீங்கள் கடந்தாக வேண்டும்.
பல ஆண்டுகளாக உங்களோடிருந்த ஒரு உறவு முறிந்து போயிருக்கலாம், இதனால் நீங்கள் உடைந்து போய் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கலாம். வலியும்,ஏமாற்றமும்,விரக்தியும் உங்களை ஆட்கொண்டிருக்கலாம்.
எவ்வாறாயினும், இவை எல்லாவற்றையும் கடந்தாக வேண்டிய நேரம் இதுதான்.
உங்கள் இதயத்தை பிளந்தெடுத்து உங்கள் கையில் கொடுத்தது போலிருக்கலாம்.ஆனால் எல்லாவற்றையும் களைந்தெறிந்துவிட்டு கடந்து செல்லுங்கள். கடந்து செல்வதென்றால் விட்டுக்கொடுப்பதென்று அர்த்தமல்ல, இந்த தொழிலோ,உறவோ அது எதுவானாலும், அது உங்கள் தரத்திற்கு ஏற்றதல்ல என்று அர்த்தம்.இழ்ந்தவற்றில் உங்கள் கவனத்தை வைக்காதீர்கள், அவை பல மடங்காக மீண்டும் உங்களை வந்து சேரும். உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். நிலையாய் நிறுத்துங்கள். உங்களுக்குள்ளே சென்று உங்கள் பேராற்றலை தட்டி எழுப்புங்கள்..
BY :- LES BROWN