Qaima Tv Qatar-Sri Lanka

Qaima Tv Qatar-Sri Lanka Public News Media Channel

சிறுமி மீது பாலியல் சேட்டை:-69 வயது லொத்தர் வியாபாரி கைது!வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை ச...
15/01/2025

சிறுமி மீது பாலியல் சேட்டை:-
69 வயது லொத்தர் வியாபாரி கைது!

வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (13) 9 வயதுடைய சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியைத்தேடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீரமுனைப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் அம்பாறை பிரதேசத்தைச்சேர்ந்த (வயது 69) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து பொலிஸாருக்கு அதி நவீன 'SPEED GUN'அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிய இலங்கை போக்குவரத்து பொலிஸாருக்கு...
15/01/2025

போக்குவரத்து பொலிஸாருக்கு அதி
நவீன 'SPEED GUN'

அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிய இலங்கை போக்குவரத்து பொலிஸாருக்கு அதி நவீன 'Speed Gun' கள் வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்த வேகமானி கருவிகள் நீர்கொழும்பு, களனி மற்றும் கம்பஹா பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரிவு அதிகாரிகளுக்கும் மேற்கு மாகாண போக்குவரத்து தெற்குப் பிரிவின் பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இந்த வேகமானியை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் போக்குவரத்து தலைமையகம் வழங்க திட்டமிட்டுள்ளது.

அஷ்ஷைஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் ஜனாஸா, ஆலிம்கள் உலமாக்கள், புத்திஜீவிகள் பொதுமக்கள், மாணவர்கள் என நாட்டின் ப...
15/01/2025

அஷ்ஷைஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் ஜனாஸா, ஆலிம்கள் உலமாக்கள், புத்திஜீவிகள் பொதுமக்கள், மாணவர்கள் என நாட்டின் பல பாகங்களிருந்தும் வந்த பல நூற்றுக்கணக்கானவர்களின் துஆ பிராத்தனையோடு புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் இன்று நல்லடக்கம் செய்யபட்டது.

*தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை*நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் பய...
15/01/2025

*தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை*

நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 300 தொகுதி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட நிலையில், அவை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த மருந்தை கொள்முதல் செய்யும் செயல்பாட்டில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது.

சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ அளித்த புகாரைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையைக் கோரியுள்ளது.

இந்த 300 மருந்துகளில், நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, மாநில மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்ட மருந்துகளும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📌பசுவுடன் உடலுறவு கொள்ள முயன்ற இளைஞர்.. மாடு உதைத்ததில் சம்பவ இடத்திலேயே பலி! சரியான தண்டனை தான்!இந்த உலகில் பெண்களுக்கு...
15/01/2025

📌பசுவுடன் உடலுறவு கொள்ள முயன்ற இளைஞர்.. மாடு உதைத்ததில் சம்பவ இடத்திலேயே பலி!

சரியான தண்டனை தான்!

இந்த உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது பெண்கள் மட்டுமின்றி விலங்குகள் மீதான வன்முறையும் கூட அதிகரித்துவிட்டது. குறிப்பாக விலங்குகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது.

அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது இது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இப்போது பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. வாயில்லாத பிராணியான பசுவிடம் ஒருவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்துள்ளது.

அதாவது இந்தச் சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் தான் இது நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பண்ணையில் இருந்து போலீாருக்கு அழைப்பு வந்துள்ளது.

பண்ணையில் வேலை செய்து வந்த நபர் பசுக்கள் உள்ள இடத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவர்களும், போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பண்ணையில் வேலை செய்யும் மற்றொரு நபரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

தினசரி காலையில் பாலை கறந்து முதலில் பண்ணை உரிமையாளர்களுக்கு இவர்கள் தருவார்களாம். ஆனால், உயிரிழந்த நபர் அதைச் செய்யவில்லை. என்னாச்சு என்று பார்க்கச் சென்ற போது தான் அவரது உடலைப் பார்த்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போதுதான் அவர் ஆணுறை அணிந்து இருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்தே அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பண்ணை தொழிலாளி: அந்த நபர் மேலும் கூறுகையில், "அவர் எப்போதும் என்னுடன் தான் மது அருந்துவார். அன்றிரவும் அதேபோலத் தான் இருவரும் மது அருந்தினோம். காலையில் எப்போதும் நாங்கள் முதலில் பாலை கறந்த ஓனரிடம் கொடுப்போம்.

அதன் பிறகே மீண்டும் வந்த மற்ற மாடுகளில் இருந்து பாலை கறப்போம். ஆனால், அவர் காலை ஓனருக்கு எடுத்துச் சென்று அளிக்கவில்லை. இதன் காரணமாகவே என்ன நடந்தது என்பதை பார்க்க நான் வந்தேன்" என்றார்.

என்ன நடந்தது: போலீசார் விசாரணையில், அந்த தொழிலாளி வேலை செய்து வந்த பண்ணையில் இருந்த மாட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார். அப்போது அந்த பசு உதைத்ததில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.

மாடு உதைத்ததில் மாரடைப்பு ஏற்பட்டு, 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.

பசுவிடம் அத்துமீற முயன்ற அந்த நபருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உளவியல் சிக்கல் அதேநேரம் விலங்குகளிடம் இதுபோல மனிதர்கள் அத்துமீற முயல்வது இது முதல்முறை இல்லை. நமது நாட்டிலேயே இதுபோல நாய், ஆடு உள்ளிட்ட விலங்குகளிடம் சிலர் அத்துமீற முயன்றதாக நாம் செய்திகளில் பார்த்து இருப்போம்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு மன ரீதியான பாதிப்பு. இதற்கு உரியச் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மகளுக்கும் கடத்திவருக்கும் - எந்தத்தொடர்புகளும் இல்லைபணம் பறிக்க முயற்சி - தப்பிக்க பொய் கூறுகிறார்!இளைஞன் அர்சாதுக்கும்...
15/01/2025

மகளுக்கும் கடத்திவருக்கும் - எந்தத்தொடர்புகளும் இல்லை
பணம் பறிக்க முயற்சி - தப்பிக்க பொய் கூறுகிறார்!

இளைஞன் அர்சாதுக்கும் நன்றி - கடத்தல்காரன் சகோதரியின் மகன்
-கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுமியின் தந்தை ஊடகங்களுக்கு தகவல்.

(12/01) இடம்பெற்ற 18 வயது பாடசாலை மாணவியின் கடத்தல் விவகார தொடர்பில் அவரது தந்தை எம்.எம்.ஹில்மி ஊடகங்களுக்கு (14/01) தகவல் வழங்கியுள்ளார்.

தன்னிடம் பணம் பறிப்பதற்காக மேற்கொண்ட கிரிமினல் நடவடிக்கையை மறைப்பதற்காக
தனது சகோதரியின் மகன் பொய்யான தகவல்களை சமூக மயப்படுத்தி வருகிறார்.

இக்கடத்தல் முயற்சியை முறியடித்த ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், மகளை கடத்திச்செல்லும் போது, மகளைக்காப்பாற்றுவதற்காக முயற்சித்த அர்ஷாத் என்ற இளைஞனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

500,0000 ரூபா கப்பம் கேட்ட போது அதை வழங்குவதை நம்ப வைப்பதற்காக முதலில் 50,000 பணத்தை அவருக்கு இணைய வழி பணப்பரிமாற்றம் மூலம் வழங்கினோம்.

அதன் பின் பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பில் CID
காரியாலயத்துக்கு அறிவித்து மகளை மீட்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் முழுப் பணத்தையும் Online மூலம் வழங்குவது கஷ்டமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் போடுவதாகவும் அந்தளவு பணம் கையிருப்பில் இல்லாததால் வங்கியில் இருந்தே பணத்தைப் பெற வேண்டுமென்றும் பணத்தைத் தருவதற்கு கால அவகாசம் கொஞ்சம் தருமாறும் கூறி அவரை கைது செய்யும் வரை கால தாமதத்தை ஏற்படுத்தினோம்.

அத்துடன், மகளுக்கும் அவனுக்கும் எந்த விதமான காதல் உறவுகளோ, அவருக்கும் எங்களுக்கும் எந்தவித கொடுக்கல் வாங்கல்களோ இல்லை.

2025ம் ஆண்டு மகள் உயர்தரப்பரீட்சை எழுதுகிறார். கப்பம் பெறும் முயற்சியும் கடத்தல் முயற்சியும் தோல்வியடைந்ததால் பொய்களைக்கூறித் தப்பிக்க முயற்சிக்கின்றார்.

எனவே, அவரின் இக்கேவலமான செயலுக்கு சட்டம் மிக உச்ச தண்டனையை வழங்க வேண்டுமென பாதுகாப்புத்தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உண்மையில் பாடசாலை மாணவிகளின் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பதிவுகள் இடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

உண்மையில் இச்சிறுமியின் தைரியமான தந்தை குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற உறுதிப்பாட்டில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

உள்ளக விவகாரங்கள் எவ்வாறு இருந்தாலும் ஒரு படிக்கின்ற பிள்ளை இவ்வாறு கடத்தப்படுவதை மகள்களைப்பெற்ற எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.

(சமூக விழிப்புக்காக)
ஊடகவியலாளர் பாரிஸ்.

குமார் சங்கக்காரா இலங்கையின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும், உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய துடுப்...
13/01/2025

குமார் சங்கக்காரா இலங்கையின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும், உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து சில முக்கிய தகவல்கள்:

தொகுப்பான வாழ்க்கை குறிப்பு:

முழுப்பெயர்: குமார் சந்திர சங்கக்காரா

பிறந்த தேதி: 27 அக்டோபர் 1977

பிறந்த இடம்: மாதலே, இலங்கை

படிப்பு: கிராஃப்டன் கல்லூரி மற்றும் திரினிட்டி கல்லூரி, கண்டி

கிரிக்கெட் வாழ்க்கை:

பிரதான பங்கு: வலதுகை துடுப்பாளர் மற்றும் விக்கெட் கீப்பர்

அறிமுகம்:

டெஸ்ட்: 2000 (தென் ஆப்பிரிக்கா எதிராக)

ஒருநாள் போட்டி (ODI): 2000

டி20: 2006

சாதனைகள்:

1. டெஸ்ட் மற்றும் ஒருநாள் சாதனைகள்:

டெஸ்ட் ரன்கள்: 12,400+ ரன்கள் 57.40 சராசரியுடன்.

ODI ரன்கள்: 14,000+ ரன்கள் 41.98 சராசரியுடன்.

அவர் 38 டெஸ்ட் சதங்கள் மற்றும் 25 ODI சதங்கள் அடித்துள்ளார்.

2. சிறந்த துணைதலமையாளர்:

கிரிக்கெட் உலகக்கோப்பையில் 2014 மற்றும் 2015 ஆகிய இரண்டிலும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்தார்.

2014 ICC T20 உலகக்கோப்பை: இலங்கை அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

3. விக்கெட் கீப்பிங்:

500க்கும் மேற்பட்ட கேட்ச்கள் மற்றும் ஸ்டம்பிங்களுடன், சங்கக்காரா கிரிக்கெட்டின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்கிறார்.

4. உலக அளவிலான அங்கீகாரம்:

2012-ல், ICC கிரிக்கெட் கற்றல் கமிட்டி தலைவராக பணியாற்றினார்.

MCC (Marylebone Cricket Club) தலைவர் பொறுப்பையும் ஏற்றார் (2019).

வெற்றிகள் மற்றும் விருதுகள்:

ICC கிரிக்கெட் ஆண்டின் வீரர் (2012): அவரது கிரிக்கெட் சாதனைகளை அங்கீகரித்து வழங்கப்பட்டது.

Wisden Cricketers of the Year (2012): உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர்.

கணிசமான சாதனைகள்: 2015 உலகக்கோப்பையில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்தார்.

கிரிக்கெட்டிற்கு பிந்தைய வாழ்க்கை:

கிரிக்கெட் முடிவுக்குப் பிறகு, சங்கக்காரா விளையாட்டு விசேஷகராகவும், MCC தலைவர் மற்றும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இலங்கையின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு பல நல்லதோரமான பணிகளைச் செய்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை:

மனைவி: யேஹலி

குழந்தைகள்: இரண்டு

சிறப்பம்சம்: சங்கக்காரா விளையாட்டின் நம்பிக்கையையும், நேர்மையையும் பிரதிபலிக்கிறார். அவர் ஒரு விளையாட்டாளரின் சாம்ராஜ்யத்தை மட்டுமல்ல, ஒரு மகிழ்ச்சி தரும் மனிதனின் பண்பையும் உலகிற்கு காட்டியவர்.

Janaza News**ஜனாஸா அறிவித்தல்* புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா...
13/01/2025

Janaza News*
*ஜனாஸா அறிவித்தல்*

புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் சற்று முன்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமானார்.
إنا لله و انا اليه راجعون.....

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه....
கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று (13) மாலை காலமான புத்தளம், *மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்* அவர்களது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக *கொழும்பு குப்பியாவத்தை* பள்ளிவாசலில் இன்று இரவு 9.00 - 10.00 மணிவரை வைக்கப்படும்.

பின்னர் புத்தளத்தில் அன்னாரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்ஷா அல்லாஹ்"நாளை (14) பகல் 2.00 - 3.30 வரை *மத்ரஸதுல் காசிமிய்யாவில்* பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, மஸ்ஜிதில் பகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.

இரக்கமுள்ள ரஹ்மானே!
இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து,
அருள் புரிந்தும் விடுவாயாக.

‎. .انا لله واناالیه راجعون

‎اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر

இறைவா!
இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
(ஹதீஸ் : முஸ்லிம்)

QaimaTv Janaza News!!!

தொலைபேசி விளையாட கொடுக்க மறுத்ததால்! நான்காம் ஆண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை ....!!! #கண்டி மாவனல்லை] பொலிஸ் பிரிவுக்கு...
13/01/2025

தொலைபேசி விளையாட கொடுக்க மறுத்ததால்! நான்காம் ஆண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை ....!!!

#கண்டி மாவனல்லை] பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
வலவ்வத்தையை பகுதியைச் சேர்ந்த
M.I. ஹாமித் அஹ்மத் என்ற மாணவரே இவ்வாறு
தூக்கிட்டு #தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

#ஸாஹிரா கல்லூரி தரம் 04 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு மாணவன் தனது பெற்றோர் தனக்கு #
மொபைல் போன் #விளையாட கொடுக்க மறுத்ததால்
#மனமுடைந்து தூக்குப்போட்டு #தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் #அதிர்ச்சியடைந்துள்ளனர்.

#மொபைல் போன் அடிமையாதல்: இன்றைய குழந்தைகள் மொபைல் போன், வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பெற்றோரின் கவனக்குறைவு: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது இதுபோன்ற #சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம்: சமூக ஊடகங்களில் காணப்படும் பொருட்கள் #குழந்தைகளின் மனதில் தவறான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

இரக்கமுள்ள ரஹ்மானே!
இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து,
அருள் புரிந்தும் விடுவாயாக.

‎. .انا لله واناالیه راجعون

‎اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر

இறைவா!
இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
(ஹதீஸ் : முஸ்லிம்)

QaimaTv Janaza News!!!

*பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் சேவையிலிருந்து இடைநீக்கம்*பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று பாராளுமன்ற ...
13/01/2025

*பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் சேவையிலிருந்து இடைநீக்கம்*

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற ஊழியர்களில் பாராளுமன்றத்தின் சமையல் மற்றும் சிற்றூழிய துறையின் உதவி வீட்டுப் பணியாளரும் அடங்குவர்.

சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநீக்கம் செயல்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஒகஸ்ட் 2023 இல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழுவால் உள் விசாரணை நடத்தப்பட்டது.

குழுவின் விசாரணை புகார்களின் தன்மை மற்றும் சம்பவத்தைச் சுற்றியுள்ள ஆதாரங்களில் கவனம் செலுத்தியது, இறுதி பரிந்துரைகள் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை இடைநீக்கம் செய்ய வழிவகுத்தன.

மாணவி கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்த மைத்துனர்.பாடசாலை மாணவியை கடத்திய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இ...
13/01/2025

மாணவி கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்த மைத்துனர்.

பாடசாலை மாணவியை கடத்திய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்து அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

பணம் தமக்கு திருப்பிக் கிடைக்காத காரணத்தினால் இவ்வாறான செயலைச் செய்யத் தூண்டியதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தவுலகல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில் கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேக நபரை கைது செய்ய 05 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபரின் கையடக்க தொலைபேசி தரவுகளை ஆராய்ந்ததில், சந்தேகநபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேகநபரும் மாணவியும் இன்று (13) காலை அம்பாறை பஸ் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் தங்கியிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியை வைத்தியரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சவூதி அரேபியா நாட்டில் காலை எழுந்தவுடன் ரியாத்தில் உள்ள டிரேட் சென்டர் கட்டிடத்தை பார்க்க முடியவில்லையாம்...!சூரியன் உதய...
12/01/2025

சவூதி அரேபியா நாட்டில் காலை எழுந்தவுடன் ரியாத்தில் உள்ள டிரேட் சென்டர் கட்டிடத்தை பார்க்க முடியவில்லையாம்...!

சூரியன் உதயமாகி கொஞ்சம் கொஞ்சமாக வெயில் வரும் போது தான் கொஞ்சம் தெளிவாக தெரிகிறதாம்.

ஐரோப்பிய நாடுகளில் காணப்படுவது போல சவூதியின் புறநகர் பகுதிகளில் பனிப்பொழிவை காணமுடிகிறதாம்.

12/01/2025
மாணவி கடத்தல் விவகாரம்!வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்!கம்பளை கெலிஒயா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 19 வயது மகள் கடத்த...
12/01/2025

மாணவி கடத்தல் விவகாரம்!
வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்!

கம்பளை கெலிஒயா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 19 வயது மகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

உயர்தர தனியார் வகுப்பில் பங்கேற்பதற்காக தவுலகல நகருக்கு நண்பியுடன் சென்று கொண்டிருந்தபோது, ​​நேற்று (11) காலை கறுப்பு வேனில் வந்த சிலரால் கடத்தப்பட்டுள்ளார்.

மாணவியை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ள இளைஞன் முதலில் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.

ஆனால், பின்னர் அதை 30 இலட்சமாகக் குறைத்துள்ளார்.

பின்னர் மாணவியின் தந்தைக்கு சொந்தமான வேனை தருமாறும் 2 இலட்சம் ரூபா பணத்தை கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை பின்னர் உரிய கணக்கில் 50,000 ரூபாயை வரவு வைத்துள்ளார்.

கடத்தலை நடத்தியவர் மாணவியின் மைத்துனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி பாடசாலை சீருடை அணிந்து நண்பியுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​வழியில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் இருந்து அவரது உறவினர் ஒருவர் இறங்கி வலுக்கட்டாயமாக மாணவியை வேனில் ஏற்றியுள்ளார்.

அப்போது, ​​இளைஞர் ஒருவர் வேனில் தொங்கிக் கொண்டு சுமார் 500 மீட்டர் தூரம் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றார்.

மேலும், பாடசாலை ஆசிரியர் ஒருவர் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் வேனை 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றார்.

எனினும், கடுகஸ்தோட்டை நகரில் அவர் வேனை தவறவிட்டார்.

பின்னர், பொலன்னறுவை நகருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று (11) பிற்பகல் குறித்த வேனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்தப்பட்ட வேன் வாடகைக்கு பெறப்பட்டதாகவும், அதில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வேனைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி கடத்தப்பட்டபோது வேனை செலுத்திய நபர் தவுலகல பிரதேசவாசி என்றும் பொலன்னறுவை பிரதேசத்தில் வேனை கைவிட்டு வீடு திரும்பும்போது தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்கார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

19 வயதுடைய குறித்த மாணவி சந்தேக நபரின் தாயின் சகோதரரின் மகள் எனவும், கடத்தப்பட்ட மாணவியை சந்தேக நபர் திருமணம் செய்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜப்பானில் சில காலம் பணியாற்றிய சந்தேக நபர் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மாணவியின் தரப்பு தெரிவிக்கிறது.

சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் 09 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிறைச்சோலை வீட்...
12/01/2025

சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில்
09 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிறைச்சோலை வீட்டு திட்டத்தினை,விரைவாக மக்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை!

சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளை சார்ந்த 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் 500 சவூதி வீட்டுத்திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்குமாறு,

இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத்தை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்குறிப்பிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சவூதி வீட்டுத்திட்டம் குறித்து பேசப்பட்டது.

சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு சவூதி அரசாங்கம் ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து, அதன் முதல் கட்டமாக 500 வீடுகளும் பாடசாலை, பஸ் தரிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் என பூரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ளன.

ஆனால், இதுவரையில் அந்த வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வில்லை.

இறுதியில் நீதிமன்றம் குறித்த வீடுகளை இன விகிதாசார அடிப்படையில் வழங்குமாறும் அதன் பிரகாரம் 70 வீதம் முஸ்லிம்களுக்கும் ஏனையவர்களுக்கு 30 வீதமும் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது.

எனவே இந்த வீடுகளை கால தாமதமின்றி மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, துறைசார் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை சவூதிக்கு உள்வாங்குதல் மற்றும் இருதரப்பு தொழில்துறை வளர்ச்சி போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன் அடிப்படையில் சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

*QaimaTv News🌍🇱🇰*

*⭕பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️*

*🪀இது போன்ற நம்பகமான செய்திகளை உடனுக்குடன் அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 👇*

https://chat.whatsapp.com/FhLHkxa9YLSDeQf3pAKyep

*பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு..*கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட...
12/01/2025

*பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு..*

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

உடனடியாக பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், இந்நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

*QaimaTv News🌍🇱🇰*

*⭕பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️*

*🪀இது போன்ற நம்பகமான செய்திகளை உடனுக்குடன் அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 👇*

https://chat.whatsapp.com/FhLHkxa9YLSDeQf3pAKyep

புத்தளம் பகுதி பொதுமக்களை ஆசை காட்டி மோசம் செய்த 6 பேர் பொலிஸாரால் கைது..!புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம...
12/01/2025

புத்தளம் பகுதி பொதுமக்களை ஆசை காட்டி மோசம் செய்த 6 பேர் பொலிஸாரால் கைது..!

புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளைக் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி,

வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப் பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் நேற்று (11) சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுளளனர்.

இவ்வாறு பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஆறு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் புத்தளம், பாலாவி மற்றும் கரம்பை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 25,000 ரூபா பணம் 6 கையடக்கத் தொலைபேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

*QaimaTv News🌍🇱🇰*

*⭕பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️*

*🪀இது போன்ற நம்பகமான செய்திகளை உடனுக்குடன் அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 👇*

https://chat.whatsapp.com/FhLHkxa9YLSDeQf3pAKyep

*2025 IPL தொடர் மார்ச் 23 ஆரம்பம்*இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆர...
12/01/2025

*2025 IPL தொடர் மார்ச் 23 ஆரம்பம்*

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

*QaimaTv News🌍🇱🇰*

*⭕பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️*

*🪀இது போன்ற நம்பகமான செய்திகளை உடனுக்குடன் அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 👇*

https://chat.whatsapp.com/FhLHkxa9YLSDeQf3pAKyep

Address

Vavuniya Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaima Tv Qatar-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qaima Tv Qatar-Sri Lanka:

Share