15/10/2022
பாணந்துறையில் இரு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி..
இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹசித லக்மால் விக்ரமசிங்க (28 வயது) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர் பாணந்துறை கைத்தொழில் பகுதியில் உள்ள தங்கும் அறை ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பகமூன ஒருபந்தி, சியம்பலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.