Puttalam News-புத்தளம் செய்திகள்

  • Home
  • Puttalam News-புத்தளம் செய்திகள்

Puttalam News-புத்தளம் செய்திகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puttalam News-புத்தளம் செய்திகள், Media/News Company, ibunu baduda Road puttalam, .

சகோதரர் Faizal MP,புத்தளம் Base Hospital மேம்பாடு குறித்து நீங்கள் கூறிய தகவலைமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள சில அடிப்பட...
20/11/2025

சகோதரர் Faizal MP,
புத்தளம் Base Hospital மேம்பாடு குறித்து நீங்கள் கூறிய தகவலை
மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள சில அடிப்படை கேள்விகள் இருக்கின்றன.”

1️⃣ இந்த hospital upgrade-க்கு சம்பந்தமான
அதிகாரப்பூர்வ ஆவணம் / budget copy / press release
எங்காவது வெளியிடப்பட்டிருக்கிறதா?

2️⃣ Health Minister உடன் நடந்தது என கூறப்படும் meeting-ன்
அதிகாரப்பூர்வ minutes அல்லது reference number
மக்களுக்கு காட்ட முடியுமா?

3️⃣ இந்த மேம்பாடு எந்த வகை?
Equipment-aa?
Building-aa?
Staff increase-aa?
என்று ஒன்று தெளிவாக சொல்ல முடியுமா?

4️⃣ Aruvakkadu waste project பற்றி
உங்களுடைய அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?
இதுவரை அதை public-ஆ நீங்கள் ஏன் விளக்கவில்லை?

5️⃣ புத்தளம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில்
உங்கள் தெளிவான பதிலும், ஆவணங்களும்
மக்களுக்கு மிக அவசியம்.”





ாப்போம் #புத்தளம்_மருத்துவமனை #மக்கள்குரல்

🟥 இன்று Faizal MP அவர்கள் கூறிய விஷயங்களுக்கு மக்கள் அறிய வேண்டிய தெளிவு1️⃣ அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தேர்தலுக்கு முன...
20/11/2025

🟥 இன்று Faizal MP அவர்கள் கூறிய விஷயங்களுக்கு மக்கள் அறிய வேண்டிய தெளிவு

1️⃣ அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தேர்தலுக்கு முன்னால்
“புத்தளம் தள வைத்தியசாலையை தரம் உயர்த்துவோம்” என வாக்குறுதி கூறினார்.

பின்னர்
“2026 Budget allocation-ல puttalam Hospital-க்கு நிதி கொடுப்போம்” எனவும் கூறினார்.
👉 இவை இரண்டு பேரும் தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகள்.



2️⃣ தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
Faizal MP அவர்களது அணியிடமே உள்ளது.
அதனால், budget allocation & development அவர்களின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது.



3️⃣ இப்போது Faizal MP அவர்கள் private-ஆ பேசும்போது
“நான் நிதி ஒதுக்கினேன்” என்று கூறுகிறார்.
👉 ஆனால் இதற்கான எந்த சான்று மக்களுக்கு வழங்கப்படவில்லை.
👉 ஒரு MP சொல்றதாலே நம்பணுமா?
👉 பொது மக்களுக்கான official documents எங்கே?

மக்களை மடையர்களாக பார்ப்பது ஏன்?
இந்த கேள்வி மக்கள் உரிமை.



4️⃣ அதைவிட கவலைக்கிடமான பகுதி —
கடந்த காலத்தில் புத்தளம் தொகுதியில் இருந்த MPs-ஐ
இன அடிப்படையில் விமர்சித்தது.
👉 K.A. Baiz
👉 Ali Sabri Raheem
👉 Navavi Haji

இவர்கள் யாராக இருந்தாலும்—
“இனவாத வார்த்தைகளால் குறை சொல்லுவது”
மக்கள் மத்தியில் மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

புத்தளம் மக்கள் இதை வன்மையாக கண்டிக்கிறார்கள்.



5️⃣ கேள்வி: இதற்கான காரணம் என்ன?
ஒரு MP-வாக பேசும் ஒருவர்
கடந்த காலத் தலைவர்களை இன அடிப்படையில் தாக்குவது
எதற்காக?
இதன் நோக்கம் என்ன?
இதற்கு மக்கள் முன்னர் விளக்கம் சொல்ல வேண்டியது அவர்களின் கடமை.



🟥 **6️⃣ மிக முக்கியமான கேள்வி—

ஏன் Aruvakkadu தின்மக் கழிவு திட்டத்தில்
Faizal MP அவர்கள் குரல் கொடுக்கவில்லை?**

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள MPs கூட
புத்தளத்துக்காக போராடுறாங்க…
ஆனா
புத்தளத்தின் MP மட்டும் மௌனமா இருக்குறது ஏன்?

👉 இந்த project-ஆல் பாதிக்கப்படுறது நம்ம மக்கள், நம்ம நிலம், நம்ம தண்ணி.
👉 இது புத்தளத்தின் மிக பெரிய environmental crisis.

அப்படியானால் —
நம்ம MP அவர்களின் நிலைப்பாடு என்ன?
ஏன் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை?
மக்கள் முன்னால் இதை தெளிவாக சொல்ல வேண்டியது ஏன் நடக்கவில்லை?”



🔥 புத்தளம் மக்களின் உண்மை குரல்

“மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது தான் ஜனநாயகம்.”

“அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்கள் என்றால்
மக்களை துன்பப்படுத்தும் விஷயத்தில் மவுனமாய் இருக்க முடியாது.”

“மௌனம் என்பது ஒரு அமானிதம்.”



“புத்தளம் மக்கள் கேட்கும் கேள்வி ஒன்று—
நம்ம ஊரின் குரல் எங்கே?”







#புத்தலத்தை_காப்போம் #மக்கள்குரல்

19/11/2025

புத்தளத்தின் அவலக்குரல்:
எமது இறுதி வேண்டுகோள்
இது ஒரு அரசியல் பதிவும் அல்ல,
இது அரசாங்கத்திற்கு எதிரானதும் அல்ல,
அரசாங்கத்தை ஆதரிப்பதும் அல்ல.
இது அறுவக்காட்டில் குப்பை கொட்டுவதுக்கு எதிரான புத்தளம் மக்களின் நசுக்கப்பட்ட குரல் மட்டுமே.

யார் இதைத் தொடங்கினார்கள்!?!
யார் தொடர்ந்தார்கள்!?!
யார் நிறுத்தினார்கள்!?!
யார் மீண்டும் ஆரம்பித்தார்கள்!?! என்பதையெல்லாம் நாங்கள் கேட்க விரும்பவில்லை.
போதும். நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். புத்தளம் மக்கள் என்ற வகையில், மீண்டும் மீண்டும் எங்களை ஏமாற்றிய இந்தக் கதைகளில் எங்களுக்கு இனி ஆர்வமில்லை.

நாங்கள் ஏற்கனவே மூன்று முறை பெரும் துன்பத்தை அனுபவித்துவிட்டோம்:
1- நுரைச்சோலை அனல் மின் நிலையம் (Norochcholai Coal Power Plant): எமது ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது .
2- சீமெந்து தொழிற்சாலை (Cement Factory): தூசி, மாசுபாடு மற்றும் தொடர்ச்சியான சுவாசக்கோளாறு நோக்காய்களால் துயரத்தை எதிர்கொள்கிறோம் .
3- காற்றாலைகள் (Windmills): மேலும் நிலப் பிரச்சினைகள்,கடல் தொழில் சிக்கல்கள்,

ஆனால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
உடல் ரீதியாகவும் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.
மன ரீதியாகவும் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.
உணர்ச்சி ரீதியாகவும் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.
இத்தனை துன்பங்களுக்குப் பிறகும், எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை: எந்த வளர்ச்சியும் இல்லை, எந்தப் பயனும் இல்லை, வலி மற்றும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இப்போது, இந்தக் குப்பை கொட்டும் திட்டத்தின் மூலம், அரசியல் தலைவர்கள் பெயர் தேடவும், தங்கள் அதிகார விளையாட்டுகளை நடத்தவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள், கூச்சலிடுகிறார்கள், கை நீட்டுகிறார்கள் - ஆனால் எங்களைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தப் பிரச்சினையில், இருவரும் ஒன்றே. இருவருமே எமது உயிர்களை அல்ல, தங்கள் பிம்பத்தைப் பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் – இது அரசியல் விளையாட்டுக்கான நேரம் அல்ல. இது உங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான இடம் அல்ல.
கயிறு இழுப்பது போல் உங்கள் ஆதரவாளர்கள் சண்டையிடுவது எங்களை இனிமேல் ஏமாற்றாது.
புத்தளம் மக்களாகிய நாங்கள், என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்கிறோம்.
எமது செய்தி எளிமையானது, வலிமையானது, மற்றும் இறுதியானது:

🚫 புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்துங்கள்.

🫩எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்.
🫩எங்களுக்கு வாக்குறுதிகள் வேண்டாம்.
🫩எங்களுக்கு உணர்ச்சி பூர்வமான உரைகள் வேண்டாம்.
இந்தத் தீங்கு விளைவிக்கும் திட்டம் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் ஒரே கோரிக்கை.
எமது நிலம் துன்பப்படுகிறது.
எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.
எமது எதிர்காலம் துன்பப்படுகிறது.
தயவுசெய்து, புத்தளத்தின் குரலைக் கேளுங்கள்— இறைவன் சாட்சியாக வைத்து கேட்கின்றோம்
எமது நகரத்தையும் சூழலையும் பாதுகாத்து தாருங்கள் , எமது சமூகத்தைப் பாதுகாத்து தாருங்கள் , எமது சந்ததிகளின் எதிர்காலத்தை,உயிர்களைப் பாதுகாத்து தாருங்கள்.
புத்தளத்தின் கழுத்தில் சுறுக்குக்கயிறு இறுக்கிக்கொண்டு வருகிறது,

குரல்வளை நசுக்கப்பட்டு இறுதி மூச்சில் வரும் புத்தளத்தானின் வார்த்தைகள் இவை .
-அன்சாத் புத்தளம்-

🗑️ Aruvakkadu திண்மக் கழிவு திட்டத்துக்கு எதிராக⬆️வடக்கும் 🌅 கிழக்கும் உள்ள MPs கூட📢 புத்தளத்துக்காக குரல் கொடுத்து போரா...
19/11/2025

🗑️ Aruvakkadu திண்மக் கழிவு திட்டத்துக்கு எதிராக
⬆️வடக்கும் 🌅 கிழக்கும் உள்ள MPs கூட
📢 புத்தளத்துக்காக குரல் கொடுத்து போராடுகிறார்கள்.

ஆனால்…

🤷‍♂️ நம்ம புத்தளம் MP மட்டும்
🤐 மவுனமா இருக்குறது ஏன்?
❓ இந்த மௌனத்திற்கான உண்மையான காரணம் என்ன?



🟥 நீங்கள் சொல்வது நல்ல ஜனநாயக ஆட்சி எனில்…

⚖️ மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு
🗣️ பதில் கொடுப்பது தான் ஜனநாயகம்.

🏛️ மக்களின் நலனுக்காக இயங்கும் ஆட்சியெனில்
📌 புத்தளம் எதிர்கொள்ளும் அபாயத்திற்கு
📝 தெளிவான விளக்கம் சொல்ல வேண்டும்.



🌐அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்கள் என்றால்…

🤲 மக்கள் கவலைப்படுற விஷயத்துக்கு
📣 நேர்மையான பதில் சொல்லும் தைரியம் இருக்க வேண்டும்.



⚠️ மவுனமா இருப்பது…

இது புத்தளம் மக்களுக்கு ஒரு அமானுஷியமான அநீதி போல தெரிகிறது.



🔥 மக்கள் கேட்ட கேள்வி ஒன்று:

📢 “நம்ம ஊரின் குரல் எங்கே?”



🟥 Aruvakkadu Waste Project – புத்தளம் மக்களின் உண்மை குரல்Aruvakkadu Waste Management Project முதலில்Sri Lanka Governmen...
18/11/2025

🟥 Aruvakkadu Waste Project – புத்தளம் மக்களின் உண்மை குரல்

Aruvakkadu Waste Management Project முதலில்
Sri Lanka Government + Urban Development Authority (UDA)
மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பெரிய Garbage Disposal திட்டம்.

இந்த திட்டத்தின் நோக்கம் —
Colombo நகரின் குப்பை பிரச்சனையை தீர்க்குவது.
உள்ளடக்கமாக:
• UDA – திட்டத்தை மீண்டும் ஆரம்பித்த முக்கிய அமைப்பு
• USD 130 Million முதலீடு
• Ministry of Urban Development & Housing இணைப்பு
• Colombo Municipal Council (CMC) – Colombo waste disposalக்கு பயன்படுத்தப்படும் இடம்

ஆனால் இந்த திட்டம் ஆரம்பத்திலிருந்து
சுற்றுச்சூழல் குழுக்கள் + புத்தளம் மக்கள்
இருவராலும் எதிர்க்கப்பட்டது.
ஏன் தெரியுமா?
Wilpattu பக்கத்து இயற்கை, நிலம், நீர், wildlife
இவை எல்லாம் பாதிக்கப்படும் என்ற பயம்.



🟥 புத்தளத்தில் மக்கள் போராட்டம் – 8 / 9 வருடங்கள்

கடந்த 8–9 ஆண்டுகளாக புத்தளம் மக்கள்
“நம் நிலத்தில் வெளியூர் குப்பையை வரவேற்கமாட்டோம்”
என்று போராடி
இந்த project-ஐ முன்பு நிறுத்த வைத்தார்கள்.



🟥 இப்போது திட்டம் மீண்டும் தொடங்கப் படுகிறது

தற்போதைய அரசு
2.4 மில்லியன் ஒதுக்கி
அதே நிறுத்தப்பட்ட திட்டத்தை
மீண்டும் செயல்படுத்த முயற்சி செய்கிறது.

இதற்கு புத்தளம் மக்கள்
முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



🟥 ஊர் தலைவர் கூறியது — “இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திட்டம்”

ஆனால் புத்தளம் மக்கள் கேட்டது மிகவும் தெளிவான ஒன்று:

⭐ **“Scientificன்னு சொன்னாலே

அது நமக்கு நன்மையாகிடாது.
நமக்கு வரும் தீங்குகள் உண்மையாகத்தான் இருக்கும்.”**



🟧 இந்த திட்டத்தால் புத்தளம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகள்

• காற்று மாசுபாடு

Ashtma, allergy, குழந்தைகளில் சுவாச நோய்

• நீர் நச்சாக்கம்

கிணறு மற்றும் நீர்நிலைகள் பாதிப்பு

• ஆரோக்கிய அபாயங்கள்

Skin disease, stomach illness, kidney-liver risks

• Wild animals & Birds

Wilpattu சுற்றுப்பகுதி பாதிப்பு, food chain disturbance

• குழந்தைகள் மிக மோசமான தாக்கத்தில்

Resp. infections, immune system issues

• விவசாய நிலங்கள் சேதம்

மண் நச்சு, பயிர்தர குறைவு

இதெல்லாம் paper-ல தெரியாது…
ஆனா நிஜ வாழ்க்கையில் 100% தாக்கும்.



🟥 பசுமையான புத்தளம் → நச்சு மண்டலமாக மாறும் அபாயம்

இது தான் மக்கள் சொல்ல வேண்டிய உண்மை.



🟦 மக்களின் இறுதி குரல்

“விஞ்ஞான certificate வைத்து
மக்களை மடமையாக்க முடியாது.
நமக்கு certificate வேண்டாம் —
நமக்கு ஆரோக்கியம் & பாதுகாப்பு தான் முக்கியம்.”

“புத்தளம் மக்கள் இந்த திட்டத்தை
ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.”



#️⃣

ாப்போம்

சூழல் அநீதியின் பிடியில் புத்தளம்: மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள்.இலங்கையின் கரையோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள புத்த...
17/11/2025

சூழல் அநீதியின் பிடியில் புத்தளம்: மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள்.

இலங்கையின் கரையோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம், இன்று தனது வரலாற்றில் கண்டிராத ஒரு பாரிய சுற்றாடல் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுகளால் பல தசாப்தங்களாக அவதியுற்று வரும் நிலையில் அதன் மக்களுக்கு, தற்போது மிக அபாயகரமான கட்டம் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே நீடித்த சுற்றுச்சூழல் அழுத்தத்தால் (Chronic Environmental Stress) பாதிக்கப்பட்டிருக்கும் அருவைக்காட்டு பகுதியில் கொழும்பின் கழிவுகளை கொட்டும் திட்டத்தை செயல்படுத்துவதானது அவ்வாறான ஒன்றாகும். இங்கு நிகழ்வது ஒரு சாதாரண கழிவு முகாமைத்துவத் திட்டம் மட்டுமல்ல, மாறாக, "தனது தவறுகளிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளுமா?" என்பதைச் சோதிக்கும் ஒரு அரசியல் மற்றும் சுற்றாடல் பரிசோதனையாகும்.

முடிவின்றி குவியும் சுற்றாடல் சுமை…...!

புத்தளத்தின் சுற்றுச்சூழல் சார் வரலாற்றிலிருந்து அருவக்காடு திட்டத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அனல்மின் நிலையம் ஆயிரக்கணக்கான தொன் நுண்துகள்களையும் (Particulated Matter) கந்தகவீரொக்சைட்டையும் (Sulphur Dioxide) வெளியிடுகிறது, இது மக்களிடையே சுவாச மற்றும் இதய நோய்களின் விகிதத்தை அதிகரித்துள்ளது. மறுபுறம், சீமெந்து தொழிற்சாலைகள் பார உலோகங்கள் (Heavy Metals) கலந்த தூசைப் பரப்புகின்றன, இது காற்றை நச்சுப்படுத்துவதோடு மண் மற்றும் நிலத்தடி நீரிலும் கலக்கின்றது. இவையனைத்தும் ஒருங்கிணைந்து, புத்தளத்தை இலங்கையின் மிகவும் மாசடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.

இவ்வாறாக நஞ்சூட்டப்பட்ட நிலத்தின் மீது, ஒரு பாரிய கழிவு மேட்டைக் கூட்டுவது என்பது, சுற்றுச்சசூழல் சுமையை அபாயகரமான மட்டத்திற்கு உயர்த்துவதாகும். கழிவுகளிலிருந்து உருவாகும் "கழிவு நீர்" (Leachate) காப்பு முறைகள் (Insulation systems) எவ்வளவு மேம்பட்டதாக இருப்பினும், நுண்துளைகள் கொண்ட சுண்ணாம்புக் கல் (Porous Limestone) ஊடாக அது நிலத்தடி நீரைச் சென்றடையும். இது குடிநீர் மற்றும் விவசாய வளங்களின் தவிர்க்க முடியாத அழிவையும், புத்தளம் களப்பு மற்றும் கல் ஓயா ஈரநிலப்பகுதியின் பல்வகைமை கொண்ட வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். இங்குள்ள கண்ணுக்குத் தெரியாத விஞ்ஞான அபாயம் மற்றும் பிரதான சவால் கழிவுகளின் துர்நாற்றமோ அல்லது தோற்றமோ அல்ல, மாறாகக் கசிவின் பின்னணியில் உள்ள மறைமுக இரசாயனவியல் (Hidden Chemistry) ஆகும். இந்தக் கழிவு நீரில் ஈயம் (Lead), இரசம் (Mercury) மற்றும் அமோனியா (Ammonia) போன்ற சேர்வைகள் உள்ளன. இவை சுண்ணாம்புக் கற்களின் நுண்துளைகள் வழியாக விரைவாக ஊடுருவி, நிலத்தின் ஆழத்திற்குச் சென்று, பல தசாப்தங்களுக்கு நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. கழிவு மேட்டின் அடிப்பாகத்தில் (Liner) ஏற்படும் ஒரு சிறிய தவறு கூட, நிலத்தடி நீர் வளத்தை ஒரு நச்சுக் களஞ்சியமாக மாற்றி, ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் விவசாய நிலங்களையும் அச்சுறுத்தும். இது கண்களுக்குப் புலப்படாத, ஆனால் தலைமுறைகளுக்கு நீடிக்கும் ஒரு மாசடைவாகும்.

ஆட்சி மற்றும் நீதியின் நெருக்கடி:
புத்தளத்தின் சுற்றுச்சூழல் துயரமானது, சுருக்கமாக, ஒரு ஆட்சி நிர்வாக நெருக்கடியின் (Governance Crisis) பிரதிபலிப்பாகும். தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தை நிறுத்துவதாக அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் உறுதியளித்தனர், ஆனால் அதனைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதன் மூலம், அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான சமூக ஒப்பந்தத்தின் (Social Contract) பலவீனத்தை வெளிப்படுத்தினர். கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே (Waste at Source) முகாமைத்துவம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக எளிதானதும், சுற்றாடல் ரீதியாக மிகவும் அபாயகரமானதுமான ஒரு தீர்வை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது: அதாவது, பிரச்சினையை தலைநகரிலிருந்து விளிம்பு நிலப் பகுதிக்கு மாற்றுவது.
இந்த முடிவை, "மையத்திற்கும்" "விளிம்பிற்கும்" இடையிலான அதிகாரம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் சமநிலையற்ற பகிர்விலிருந்து பிரிக்க முடியாதுள்ளது. தலைநகரம் (மையம்) தனது கழிவுகளை அகற்றி விடுகிறது, அதே நேரத்தில் புத்தளம் (விளிம்பு) நிதி மற்றும் நிர்வாகத் திறமையின்மையின் விலையைக் கொடுக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட சுற்றாடல் அநீதி (Environmental Injustice) என்பதன் தெளிவான வடிவமாகும், இதில் பொருளாதார நலன்களும், ஒன்றுபட்ட உள்ளூர் குரலின்மையும் குறுக்கிடுகின்றன.

அறிவியல் மற்றும் அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் இதன் தாக்கத்தை எதிர்கொள்வது இன்னமும் சாத்தியமே – ஆனால், அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, இத்திட்டத்தின் விலையானது பில்லியன் ரூபாய்களில் அல்ல, மாறாக மக்களின் உயிர்களிலும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திலுமே அளவிடப்படும் என்பதை முடிவெடுப்பவர்கள் உணர வேண்டும்.

பின்வருவன உடனடியாகத் தேவைப்படுகின்றன:

• திட்ட அமுலாக்கத்தைக் கண்காணிக்கவும், நீர் மற்றும் மண்ணின் தரத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்யவும் ஒரு சுயாதீனமான விஞ்ஞானக் குழுவை (Independent Scientific Committee) அமைத்தல்.

• கண்காணிப்பின் முடிவுகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவித்தல்.

• அனல்மின் நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளின் வருவாயில் ஒரு பகுதியை, புத்தளம் மக்களுக்கான நிரந்தர சுற்றாடல் சுகாதார நிதிக்கு (Environmental Health Fund) ஒதுக்குதல்.

• கழிவு உற்பத்தியைக் குறைத்தல் (Reduction), மீள்சுழற்சி (Recycling) மற்றும் கழிவுகளை அவை உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகிலேயே சக்தியாக மாற்றுதல் (Waste-to-Energy) ஆகியவற்றின் மூலம், கொழும்பு நகருக்குள்ளேயே கழிவுகளை மூலத்தில் முகாமைத்துவம் செய்வதற்கான ஒரு துணிச்சலான தேசியத் திட்டத்தை ஆரம்பித்தல்.

அபிவிருத்தி என்பது இருப்புக்கான அச்சுறுத்தலாக மாறும் போது, புத்தளத்திற்குத் தேவை புதிய வாக்குறுதிகள் அல்ல, மாறாக அபிவிருத்தி என்பதன் அர்த்தத்தை மறுவரையறை செய்யும் ஒரு அரசியல் உறுதிப்பாடு (Political Will) ஆகும். இந்த நிலை தொடர்ந்தால், இன்று நடப்பது இலங்கையின் வரலாற்றில் ஒரு "அபிவிருத்தித் திட்டம்" என்று பதியப்படாது, மாறாக, இந்நாட்டின் சுற்றாடல் நீதியின் (Environmental Justice) சரிவிற்கான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே பதியப்படும்.

என் புத்தள சமூகம் மற்றுமல்ல, எந்த சமூகமும் உத்தியோகப் பூர்வமாக பாதிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் எழுதுகிறேன்.

Ash-Sheikh Ahsan Muhajiri
Master Research Student in Education, جامعة الملك خالد_King Khalid University (KSA)

எதிர்கால புத்தளம்Future puttalam
17/11/2025

எதிர்கால புத்தளம்
Future puttalam

ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளி புத்தளம்புத்தளம் தொகுதியின் வாக்குகள் விரையமாகிவிட்டதாக தோன்றுகின்றது. இம்முறை பாராளுமன்ற பிரதிநி...
16/11/2025

ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளி புத்தளம்

புத்தளம் தொகுதியின் வாக்குகள் விரையமாகிவிட்டதாக தோன்றுகின்றது. இம்முறை பாராளுமன்ற பிரதிநிதி வாக்குகளால் அனுப்பப் பட்டவர். அவரது முதல் இரண்டு பா.ம உரைகளைக் கேட்டேன். உப்பு சப்பில்லை. சும்மா....சும்மா

பிரதேச பிரதிநிதிகளின் பா.ம உரைகள் கட்சி தலைமையகத்தின் அனுமதி பெற்ற பின்னர் தான் பா.ம பேசப்படனும் அதுவும் மக்களின் நலனை தவிர்த்து கட்சியின் நலனை நோக்காக கொண்டே பேசப்படனும் என்று ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்துவார்களாயின் கடந்த கால அரசியல் மாற்றங்களை புறம் தள்ளுகிறார்கள். மக்களின் தேர்வுரிமை நிராகரிக்கப்படுகின்றது. மூன்றில் இரண்டென்ற இருமாப்பு நாங்கள் தந்தது. ஒன்றை நினைவிலிருத்துங்கள்

"அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்"

ஒன்றை இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். மக்கள் உங்களை தெரிவு செய்தது உங்களின் மீதுள்ள மோகத்தினால் அல்ல. கடந்த கால ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளை அகற்றுவதற்கு மாற்று சக்தி இல்லாமையே உங்களை தெரிவுசெய்ய மூலகாரணம்.

ஊரானுக்கு சுரணையில்லாட்டி அடுத்தவன் பேசத்தான் செய்வான். புத்தளத்தின் சார்பில் கருத்து தெரிவித்த இரண்டு பா.ம உறுப்பினர்களையும் பாரட்டியே ஆக வேண்டும்.

புத்தளத்தில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களுக்கு அசடுகளாக தோன்றுகிறார்கள். நம்பி நாசம் போயிட்டோம்னு நாங்க கோசம் எழுப்ப முன்னே நீங்க கொடுத்த வாக்க காப்பத்துங்க கொம்ரேட். உரைவீச்சு நிகழ்த்திவிட்டு வார்த்தைகளின் சூடார முன்னரே உங்களின் கயமையையும் கீழ்மையையும் 2026 பாதீட்டில் காட்டிவிட்டீர்களே. வெளியூர் குப்பைகளை அந்த ஊரிலேயே Green Sri Lanka திட்டத்துக்குள் மீள் சுழற்றுங்கள். புத்தளத்துக்கு கொண்டு வராதீர்கள். பட்ஜட்டில் ஒதுக்கிய தொகையை பயன்படுத்தி தேசிய மட்டத்திலான recycle plant பற்றி யோசிங்க. அப்படியே நீங்க தந்த வாக்குறுதிகளை re-wind செய்து கேளுங்க. உங்களை துரத்துவதா இல்லையானு எங்கள யோசிக்க வச்சிடாதீங்க.

இன்னும் நாங்கள் எங்கள் தீர்ப்புகளை திறந்தே வைத்திருக்கிறோம்! அதை மூடிவிடாதீர்கள் தோழர்காள்!

- இம்தாத் பசர் -

Address

Ibunu Baduda Road Puttalam

Telephone

+94763117288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puttalam News-புத்தளம் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share