Almashoora breaking news

Almashoora breaking news social service

(1)

லாப் நிறுவனத்தினால் மாற்றியமைக்கப்பட்டுள்ள "மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிட்...
30/08/2022

லாப் நிறுவனத்தினால் மாற்றியமைக்கப்பட்டுள்ள "மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிட்டார்.

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் சவூதி அரேபியாவின் நிவாரண நிலைய மேற்பார்வையாளர் நாயகம், டொக்டர் அப்துல்லா அல்ரபீஹ்...
30/08/2022

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் சவூதி அரேபியாவின் நிவாரண நிலைய மேற்பார்வையாளர் நாயகம், டொக்டர் அப்துல்லா அல்ரபீஹ் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் கலந்துரையாடினார்.

இலங்கைக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கல் மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மக்களுக்கு சவூதி அரேபியாவினால் அமைத்துக் கொடுக்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு கையளிக்கப்படாது சேதமடைந்து போன வீடுகளை புனர்நிர்மாணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மற்ற நாடுகளைப் போலவே ஜப்பானிலும் 🇯🇵வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவரின் பெயர் தகாசாவா...
26/08/2022

மற்ற நாடுகளைப் போலவே ஜப்பானிலும் 🇯🇵வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இவரின் பெயர் தகாசாவா

ஜப்பானில் மிகவும் பிரபலமான டாட்டூ கலைஞர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகர்கள்,பிரபலங்கள் மற்றும் ஜப்பானிய யாகுசா மாபியாவின் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த காலம் அது…

2006 ஆம் ஆண்டில், டோக்கியோவில் ஒரு தெருவில் நடந்து செல்லும் போது…

தகாசாவாவின் வாழ்வை மாற்றி அமைத்த உன்னதமான தருணம் என்றால் நிமாத்துல்லாஹ் கலீல் இப்ராஹிமைச் சந்தித்த அந்த நாளே…

அருள் நிறைந்த புனித தீனுல் இஸ்லாத்திற்கான தூதுக்கடிதம் அவரின் கரங்களில் ஷெய்கின் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றது.

காகிதத்தை எடுத்து அது ஒரு ரசிகரின் கடிதமாக இருக்கலாம் என்று நினைத்தார் தகாசா. ஆனால் அவர் அதைப் படித்ததும் அவர் அதைக் கண்டு நெகிழ்ந்தார், மனமகிழ்ந்தார் என்றுமே உணரப்படாத ஓர் ஆத்ம திருப்தியை அந்த கடிதத்தின் மூலம் பெற்றுக்கொண்டார் தகாசாவா.

எனவே அவர் கடிதத்தின் ஆசிரியரான நிஃமதுல்லாஹ் கலீல் இப்றாஹீமை தொடர்புகொண்டு இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறியத் தொடங்கினார்.

உயர்வுமிக்க மார்க்கத்தை ரப்புல் ஆலமீன் அவருக்கு பரிசளித்தான்.

தகாசாவா எனும் தன் பெயரை அப்துல்லா என்று சூட்டிக் கொண்டார் (அல்ஹம்துலில்லாஹ்)

அவருக்கு பெரும் லாபம் கிடைத்தபோதிலும் பச்சை குத்திக் கொள்ளும் தொழிலை அவர் விட்டுவிட்டார்.

அல்குர்ஆனின் சில அத்தியாயங்களை மனப்பாடம் செய்யும் பாக்கியத்தையும் வல்ல ரப்புல் ஆலமீன் அவருக்கு பரிசளித்தான்.

தற்போது ஒரு கடையில் தொழுகையாளர்களை வழி நடத்தி அதை மஸ்ஜிதாக மாற்றி தன் தஃவா பணியை மனமுவந்து ஏற்று வாழ்கின்றார்…

23/08/2022
14/08/2022

யார் இந்த ஹச்சி ஹாஜியார்?

மூன்று தசாப்தங்கள் முழு மூச்சான சேவை. அந்-நஹ்ஜா அரபுக்கல்லூரி அச்சி ஹாஜியாரின் கல்லூரியாய் ஆகிப்போனது. 06.06.1990 இருந்து இது நாள் வரை இயக்குனர் சபைத்தலைவராக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்த அந்-நஹ்ஜாவின் இஸ்தாபகர்களில் ஒருவரான அல்ஹாஜ் எம்.எல்.ஹச்சி முஹம்மது இன்று 14.08.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவ்வுலகுக்கு விடை கொடுத்தார். வல்ல இறைவன் அவரையும் அவரது சேவைகளையும் பொருந்திக்கொள்வானாக.

பிறப்பும் குடும்பப்பின்னணியும்

1949ஆம் ஆண்டு வாழைச்சேனைக் கிராமத்தில் சாதாரண குடும்பமொன்றில் முஸ்தபா லெப்பை - ஆசியா உம்மா தம்பதிகளின் இரு ஆண் பிள்ளைகள், நான்கு பெண் பிள்ளைகள் என அறுவர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகப் பிறக்கிறார். சாதாரண பெற்றோர், சாதாரண குடும்பம், பிள்ளைப்பருவம் ஆரவாரமின்றி கழிந்து முடிகிறது.

கல்வி

வாழைச்சேனை அரசினர் கலவன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும் தரம் 8 வரையான இடைநிலைக்கல்வியையும் பெற்றுள்ளார்.

அந்நாட்களில் தரம் 8 இப்போதைய உயர் தரத்திற்கு சமாந்தரமாக பார்க்கப்பட்டது என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். தனது ஆரம்ப குர்ஆன் கல்வியை ஆட்டுக்குட்டி ஆலிம் என அறியப்பட்ட லெப்பைத்தம்பி ஹஸ்ரத்திடம் கற்றுள்ளார்.

தொழில் வாழ்க்கை

தரம் எட்டோடு தனது பாடசாலைக்கல்வியை நிறுத்திக் கொண்ட எம்.எல்.அச்சி முஹம்மது ஹாஜியார் தொடர்ந்து சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

வாழைச்சேனை சந்தையில் சிறியளவில் ஒரு தேநீர்க்கடை ஒன்றினை சிறிது காலம் நடாத்தியுள்ளார். பின் அதனை கைவிட்டு வாழைச்சேனை கடதாசி ஆலையில் சுமார் மூன்று ஆண்டு காலம் பணி புரிந்துள்ளார்.

1978ம் ஆண்டின் சூறாவளி நிகழ்வே ஹாஜியாரின் தொழில் வாழ்க்கையின் திருப்பு முனை எனலாம். சூறாவளியுடன் கடதாசி ஆலை தொழிலினை கைவிட்டு மீண்டும் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வாழைச்சேனை கல்குடாவிற்குச்சென்று மீன்கள் மற்றும் கடலுணவுகளை மொத்தமாக கொள்வனவு செய்து வந்து வாழைச்சேனை சந்தையில் வியாபாரம் செய்துள்ளார்.

இதன் பிறகே ஹாஜியாரின் வாழ்வில் செல்வம் கொழிக்கத்தொடங்கியது. எண்பதுகளின் துவக்கத்தில் மீன்பிடிப் படகுகளை சொந்தமாக வைத்து தொழிலில் ஈடுபட்டு பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளார். அந்நேரம் வாழைச்சேனை கிராமத்தில் காணப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களுல் அச்சி ஹாஜியாரும் ஒருவராகும். தன் உழைப்பால் ஈட்டிய பெரும் செல்வத்தை அன்றிலிருந்து கணக்கின்றி இறை பாதையில் இறைக்கத் தொடங்கினார்.

திருமண வாழ்வு

1969 ஆம் ஆண்டு முகம்மது இஸ்மாயில் ஸீனத்தும்மா என்பவரை கரம் பற்றி சிறப்பான குடும்ப வாழ்வைத் தொடங்கினார். திருமண பந்தத்தின் மூலம் அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

2006 ஆம் ஆண்டு தனது பாசமிகு மனைவி ஸீனத்தும்மா இறையடி சேர்ந்த பிறகு 2007ம் ஆண்டு விதவையான நாகூர் உம்மாவை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொண்டார். இதிலும் ஒரு ஆண் பிள்ளை உண்டு. 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக புனித மக்கா சென்று ஹஜ் கடமையினையும் நிறைவேற்றியுள்ளார்.

சமூகப்பணி

90களில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் பொதுமக்களால் பல தடவைகள் ஏகமனதாக பிரதம தர்மகர்த்தாவாகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் மாளிகையை பரிபாலனம் செய்யும் பெரும் பேற்றினைப் பெற்றார்.

ஈழப்போர் உச்சத்தை தொட்டிருந்த இந்நாட்களில் இது போன்ற சமூகப்பணிகள் மிகவும் சவாலானதாகும்.

வாழைச்சேனை கடல் வளமிக்க பிரதேசமாகும். இப்பிரதேச மக்களின் ஜீவனோபாயமாக கடற்றொழிலே விளங்குகிறது. கடற்றொழில் மூலம் பெறப்படும் வருமானத்தினூடாக பொதுப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் இப்பிரதேச தனவந்தர்கள் சிலருக்கு ஏற்பட்டது.

அதன் பயனாக 1994ஆம் ஆண்டு உருவானதே வாழைச்சேனை ஹைராத் ட்ரஸ்ட் நிறுவனமாகும்.

வாழைச்சேனையிலிருந்து மீன்களை ஒரு பொதுப் போக்குவரத்து மூலம் கொழும்புக்கு ஏற்றி பெரும் வருமானத்தை ஈட்டுவதே இதன் இலக்காகும். இந்த நிதியினை வாழைச்சேனை ஹைராத் மஸ்ஜிதின் நிர்மானத்திற்கும் அந்-அநஹ்ஜா அரபுக்கல்லூரிக்கும் செலவழிப்பதே ஹைறாத் ட்ரஸ்டின் பிரதான இலக்குகளாகும்.

இதனைத்தாண்டி பல உப இலக்குகளையும் எய்த ஹைறாத் ட்ரஸ்டினால் முடிந்துள்ளமை நிதர்சனமாகும். இந்நிறுவனத்தை தாபிக்க தங்களது சொந்தப் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரும் சதக்கத்துன் ஜாரியா ஒன்றுக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தாக்களுள் ஹாஜியாரும் ஒருவராகும்.

அச்சி ஹாஜியாரின் அந்-நஹ்ஜா

06.06.1990 இல் அந்-நஹ்ஜா அரபுக்கல்லூரி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தினத்திலிருந்து கல்லூரியின் இயக்குனர் சபைத்தலைவராக செயற்பட்டு வருகிறார் அச்சி ஹாஜியார்.

மூன்று தசாப்தங்கள், ஒரே கல்வி நிறுவனத்தில் பல்வேறு பரிமாணங்களில் தொண்டாற்ற கிடைப்பது பெரும் பேறாகும் என்பதில் ஐயமேதுமில்லை.

அத்தகைய வரப்பிரசாதமொன்றை இறைவன் அன்னாருக்கு நல்கியுள்ளான். இருநூற்றுக்கும் மேற்பட்ட 'ஹபழதுல் குர்ஆன்' இறைமறையை தங்களது உள்ளங்களில் சுமந்தவர்கள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் உலகமெல்லாம் எடுத்தோதும் ஆலிம்கள் (மௌலவிமார்கள்) உருவாக்கத்தின் பின்னால் கருவியாய் தொழிற்பட கிடைத்த பாக்கியத்தை என்னவென்று சொல்வது?

இதற்குப்பின்னால் அன்னாரின் தூய எண்ணமும் அர்ப்பணிப்பும் இருக்குமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.

எண்பதுகளின் இறுதியில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை தன் மெல்லிய குரலில் குர்ஆனை ரமளான் கால இராத் தொழுகையில் ஓதி தொழுகை நடத்துகிறது.

இந்நிகழ்வே ஹாஜியாரின் உள்ளத்தில் மார்க்கக் கல்வியைப் போதிக்கும் ஒரு கலாசாலை ஒன்றினை துவங்க வேண்டும் என்றிருந்த எண்ணத்திற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என தூண்டிய காரணியாகும்.

அன்று ஊரிலிருந்த வெகு சில உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், தனவந்தர்கள் என சிறு குழுவினர் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஒன்றுகூடி ஆலோசித்து முடிவெடுத்ததன் பயனாக ஜாமிஅதுந் நஹஜதில் இஸ்லாமிய்யா எனும் பெயரில், அரபுக்கல்லூரி, இப்போது அமைந்திருக்கும் இடத்தில் சிறிளவில் 20 மாணவர்களைக் கொண்டு 06.06.1990 ஆம் ஆண்டு புதன்கிழமை காலை வேளையில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அலியார் (தேவ்பந்தி), காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் அலியார் (பலாஹி) ஹஸ்ரத் ஆகியோர்களைக் கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஹச்சி ஹாஜியார் அரபுக்கல்லூரியின் துவக்க காலத்தில், தனது உடல், பொருள், காலம் எல்லாவற்றையும் அர்ப்பணித்து, ஒப்பற்ற, தன்னலமற்ற சேவையொன்றை வழங்கினார்.

கல்லூரியின் இயக்குனர் சபைத்தலைவராக மட்டுமல்லாமல், தேவையின் நிமித்தம் அதிபராக, ஆசானாக, காவலாளியாக, சமையற்காரராக, ஏன் சுத்திகரிப்பு தொழிலாளியாகக்கூட பரிமாணம் எடுத்திருக்கிறார்.

வெளியூர் பயணங்கள் சென்று திரும்பும் போது, தன் சொந்தப் பிள்ளைகளுக்குப் போல மத்ரசாவில் பயின்ற மாணவர்கள் எல்லோருக்கும் தந்தையின் இடத்திலிருந்து பழமும் இனிப்புப்பண்டமும் வாங்கித் தந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நஹ்ஜா அரபுக்கல்லூரி இப்பிரதேசத்திலேயே சிறந்த ஓர் கலாசாலையாகவும், அங்கிருந்து பட்டம் பெற்று வெளியே வருவோர் இத்தேசத்திற்கே பயன்தரத்தக்க தலைசிறந்த உலமாக்களாக வேண்டுமென்ற கனவும் இலட்சியமும் அவருள் இருந்து கொண்டே இருந்தது.

கனவு நனவாகவும் இலட்சியம் ஈடேறவும் சதாவும் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளார். இதில் இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டுமென்ற யதார்த்தத்தையும் புரிந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். மொத்தத்தில் ஹச்சி ஹாஜியார் என்றால் அந்-நஹ்ஜா என்பதே அடையாளமாகிப்போனது.

அன்னாருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்கவும் தன்னிகரில்ல அவரது சேவையை வல்ல இறைவன் பொருந்திக் கொள்ளவும் பிரார்த்தனைகள்.

ஹாபிஸ் இஸ்ஸத் அஹ்மத் (நஹ்ஜீ) அவர்கள் ஹச்சி ஹாஜியாரின் மரணத்திற்கு முன்னர் எழுதிய பதிவு. சிறு மாற்றங்களுடன் பிரசுரமாகிறது.

14/08/2022
11/08/2022

தாய்லாந்து விமான நிலையத்தில் கோட்டாபய (Video)

பெற்றோர்களிடம் அதிகரித்துவரும் ‘புகழ்தேடல்’ மனநிலை - ஓர் உளவியல் பார்வைசென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறு வயதி...
10/08/2022

பெற்றோர்களிடம் அதிகரித்துவரும் ‘புகழ்தேடல்’ மனநிலை

- ஓர் உளவியல் பார்வை

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறு வயதிலேயே பிரபலமடைந்த இரண்டு பேர் மீது பலருடைய கவனமும் குவிந்திருந்தது. ஒருவர் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம், மற்றொருவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

அதிகரித்துவரும் மோகம்:

லட்சத்தில் ஒரு குழந்தை குறிப்பிட்ட துறையில் பரிமளிக்கவோ சாதனை புரியவோ முடியும் என்பது உண்மைதான். அதற்கு அந்தக் குழந்தையின் வாழ்க்கைச் சூழல், எதிர்கொண்ட நெருக்கடிகள், சாதகமான அம்சங்கள் என எத்தனையோ அம்சங்கள் பங்களித்திருக்கும். இதைப் பெற்றோர் உணர்ந்திருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி.

சமமற்ற போட்டி:

குழந்தைகளின் படைப்புகள், திறமைகளை மையமிட்டு செயற்கைப் பூச்சு கொண்ட விழாக்களும், போலிப் பாராட்டுகளும் இன்றைக்கு அதிகரித்து வருகின்றன. குழந்தைகளின் படைப்புகளை ‘ரொமான்டிசைஸ்’ செய்யும் தன்மையும் அதிகரித்திருக்கிறது.

ஏதாவது ஒரு துறையில் தங்கள் குழந்தையை சாதனையாளராக, மேதையாக ஆக்கிவிட வேண்டும் என்கிற பெற்றோரின் இந்தத் தீவிர ஆர்வம் காரணமாகச் சமமற்ற ஒரு போட்டி மற்ற குழந்தைகள் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இயல்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள குழந்தைகள், பெரியவர்கள் வரையறுத்து வைத்துள்ள சாதனைகளைப் புரியாத குழந்தைகள் தாழ்வாகப் பார்க்கப்படுகிறார்கள்.

அதிகரிக்கும் மனச்சிக்கல்கள்:

தங்கள் வாழ்க்கையின் அன்றாடச் சம்பவங்களைப் படமும் ரீல்ஸும் எடுத்துப்போட்டு பெயர் வாங்குவது அன்றாட நடைமுறையாகிவிட்டது. அதே நச்சுச் சுழலுக்குள் குழந்தைகளையும் இழுத்துவர பெற்றோர் நினைப்பதன் நீட்சிதான் குழந்தை மேதைகள் மீதான ஆர்வமும். தங்கள் குழந்தை இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறது, அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறது என்று பிரபலப்படுத்திக் குழந்தைகள் வழியாகப் பெற்றோர் சிலர் புகழ்தேடத் தலைப்படுகின்றனர்.

இதனால் குழந்தைகள் இயல்பாக வளர முடியாமல் போகிறது. அந்தந்த வயதில் அதற்குரிய மனநிலையோடு மகிழ்ச்சியாக வாழவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், தவறுகளைக் திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரவும் முடியாமல் போகிறது. இதன் காரணமாகக் குழந்தை மேதைகள் வளர்ந்த பிறகு பல்வேறு மனச்சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதும் பதிவாகியிருக்கிறது. உலகைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெறுவதற்கு முன்பே அவர்களுக்குக் கிடைத்துவிட்ட பிரபலம், பிற்காலத்தில் குறையும்போது / சிக்கலுக்கு உள்ளாகும்போது அவர்களால் அந்த நிலையை எதிர்கொள்ள முடிவதில்லை.

எல்லாரும் சாதனையாளராக முடியுமா?

- தற்போது குறிப்பிட்ட ஒரு துறையில் அடித்து விளாசும் ஒரு குழந்தை, இடையிலேயே அந்தத் துறை சார்ந்த தன் ஆர்வத்தை இழப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அல்லது அந்தக் குழந்தையின் படைப்பாற்றலோ திறமையோ குறிப்பிட்ட துறை சார்ந்து குறையலாம்; மாறுபடலாம். எதிர்காலத்தில் வேறொரு துறையில் அதே குழந்தை பரிமளிக்கலாம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஒரு குழந்தை இயல்பான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறதா, அந்த ஆர்வம் வளர்கிறதா, அது சார்ந்த கற்றலை முறைப்படுத்தும்போது குழந்தை இயல்பாக அதை உள்வாங்கித் திறன்களை மேம்படுத்திக்கொள்கிறதா, இல்லை குழந்தையின் ஆர்வம் குறைகிறதா என்பதையெல்லாம் பெற்றோர், ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கவனித்தறிய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட துறை பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்வதை அனுமதிக்க பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும் சாதனையைப் புரியாவிட்டால் வாழ்க்கை இல்லை என்பது போன்ற பிரமை உருவாக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள் மனதில் இயல்பு களவாடப்பட்டு நெருக்கடி திணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற தேவையற்ற நெருக்கடியே மற்றவர்களைப் போலத் தன்னால் உலகின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை என்கிற தாழ்வுமனப்பான்மை குழந்தைகள் மத்தியில் உருவாக முக்கியக் காரணமாகிறது.

இரு தங்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் தேசிய...
10/08/2022

இரு தங்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப்

தேசிய கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் 8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று கற்கும் பாடசாலைக்கும் வாழைச்சேனை பெருமை சேர்த்துள்ளார்.

இவர் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகரும் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர் யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வராவார்.

(பத்திரிகைச்செய்தி)

முஸ்லிம் கட்சிகள் மறைமுகமாக அமைச்சு பதவிகளைக் கேட்பதாக அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் சபையில் தெரிவிப்பு! ஹக்கீமும் நிசாம்...
10/08/2022

முஸ்லிம் கட்சிகள் மறைமுகமாக அமைச்சு பதவிகளைக் கேட்பதாக அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் சபையில் தெரிவிப்பு!

ஹக்கீமும் நிசாம் காரியப்பரும் ஜனாதிபதியை சந்திப்பதாக அறிந்தேன் என்றும் கூறுகிறார் https://metronews.lk/article/206604

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் க....

09/08/2022

த.தே.கூ வை போல், முஸ்லிம் தலைமைகளும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அமைச்சர் ஹாபிஸ் நஸீர் பாராளுமன்றில் கோரிக்கை!

விபரம்: https://www.shortnews.lk/2022/08/blog-post_191.html

WHATSAPP: https://chat.whatsapp.com/KdCmbVjofagFZuDeoHVJ91
FACEBOOK :- https://www.facebook.com/ShortNewsBreaking/
YOUTUBE :- www.youtube.com/c/ShortNewsTV

கல்குடா சமூகம் விழித்துக்கொள்ளுமா?போதையின் மத்திய நிலையமாக மாறி வரும் கல்குடா : ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது ஐ...
09/08/2022

கல்குடா சமூகம் விழித்துக்கொள்ளுமா?

போதையின் மத்திய நிலையமாக மாறி வரும் கல்குடா : ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

ஐந்து தினங்களில் போதைப்பொருளுடன் ஐவர் கைது : பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு

கல்குடா பிரதேசத்தில் கடந்த ஐந்து தினங்களில் சுமார் ஐவருக்கும் மேற்பட்டோர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2022.08.05ம் திகதி 2 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதை மாத்திரைகள்
44 ஆகியவற்றுடன் 58 வயதுடைய சந்தேக நபரொருவர் பிறைந்துரைச்சேனையிலும்,

2022.08.06ம் திகதி 5 கிராம் ஐஸ் போதைபொருளுடன் 45 வயதுடைய சந்தேக நபர் மாவடிச்சேனையிலும்,

2022.08.03ம் திகதி 6 கிரம் ஐஸ் போதைபொருளுடன்
46 வயதுடைய சந்தேக நபர் பிறைந்துரைச்சேனையிலும்,

2022.08.07ம் திகதி
7 கிரம் 360 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 7 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்
27 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் வாழைச்சேனையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகக்குறுகிய காலத்தினுள் ஒரே பிரதேசத்தினுள்
ஐந்து போதைப்பொருள், போதை மாத்திரை வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஐஸ்
ஹைரோயின் போன்ற போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதை வைத்து நோக்குமிடத்து எந்தளவு போதைப்பொருள், போதை மாத்திரை வியாபாரமும் விற்பனையும் எமது பிரதேசத்தில் வியாபித்துள்ளதென்பதை நினைத்துப் பார்க்க ஒவ்வொரும் தலைப்பட்டுள்ளோம்.

கடந்த ஒரு வருட காலத்தினுள் சுமார் 100 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
பெருந்தொகையான போதைப்பொருட்களும்
மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்தரப்பினரின் அர்ப்பணிப்பான தொடர் நடவடிக்கை காரணமாக போதை வியாபாரிகளும் பாவனையாளர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கட்டுக்கடங்காமல் போய் விட்டதனை உணர முடிகின்றது.

ஏன் இதனை எம்மால் நிறுத்த முடியவில்லை?

போதையொழிப்பு, போதைக்கெதிரான செயற்பாடுகளில் கல்குடா பிரதேச சமூக நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், இளைஞர்கள் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்களின் முன்னெடுப்புக்களும் செயற்பாடுகளும் மந்த நிலையில் உள்ளதாகவே
தெரிகிறது.

கல்குடா பிரதேசத்தில் போதைப்பாவனையை இல்லாதொழிக்கவும், போதைக்கு அடிமையான இளைஞர் சமூகத்தை மீட்டெடுக்கவும் கல்குடா பள்ளிவாயல்கள், சமூக அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்புத் தரப்பினரிடம் பிடிபட்டு தண்டனை அனுபவித்தும் சிறைவாசம் அனுபவித்தும் வருகின்றனர்.

இது கல்குடா சமூகத்துக்கு பெரும் சாபக்கேடாக மாறி வருகின்றது. போதைப்பாவனை இல்லாத இளைஞர்களைக் காண்பது அரிது என்ற துர்ப்பாக்கிய நிலையும் உருவாகியுள்ளது.

இது பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதுடன், அண்மைக்காலமாக அதிக போதைப்பாவனையாளர்கள் அடையாளங்காணப்படும் பிரதேசமாகவும் கல்குடா பிரதேசம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை எமது பிரதேசத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்பதுடன், குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வீட்டுக்கொரு போதையாளியை நாமே உருவாக்கி விடுவோமோ என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பில் எமது ஊடகத்தினூடாக பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்தாலும் அதனை கட்டுப்படுத்தி இல்லாதொழிப்பதில் நாம் எடுத்துக் கொண்ட அக்கரை என்பது போதுமானதாக இல்லை என்பதை சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அதே நேரம், இப்பிரதேசத்திலிருந்து போதையை ஒழிக்கும் நல்லெண்ணத்தோடு பலரது உழைப்பு இருந்துள்ளதையும் மறுதலிக்க முடியாது.

எமது பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பாவனை தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரிடம் வினவிய போது, மிகக்கவலையான செய்திகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அத்தோடு, போதைப்பாவனை கல்குடாவில் மாத்திரமல்ல, ஏனைய பிரதேசங்களிலும் வியாபித்து பரவியுள்ளதை மறுக்க முடியாது.

குறிப்பாக, கல்குடாப்பிரதேசம் போதைப்பொருள் வினியோக மையமாக இருப்பதாக எண்ணத்தோன்றுகின்றது எனத்தெரிவிக்கின்றனர்.

மிகச்சில சில நாட்களின் பின்னர் மீண்டும் போதையொழிப்பில் பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸார் தம்மாலியன்ற செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது.

இருப்பினும், இதனை முற்றாக இல்லாதொழிப்பதற்கான சமூக மட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படாதவரை இதிலிருந்து கல்குடா சமூகம் மீள முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதை மனதிற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.

கடந்த காலங்களில் போதையொழிப்புக்காக சமூக மட்ட அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் தம்மாலியன்ற முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் அதன் வேக அதிகரிப்பு இப்போது மிக மிக அவசியமாகின்றது.

அதே நேரம், போதையொழிப்பு தொடர்பில் அண்மைக்காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார், களத்தில் நின்று பணியாற்றும் படை வீரர்கள் எடுத்துக்கொண்ட செயற்பாடுகள், முயற்சிகள் பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர்கள் முயற்சிகள் தொடரும் நேரத்தில் சமூக மட்ட அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், இளைஞர் அமைப்புக்கள், பள்ளிவாயல்கள் முழு மூச்சுடன் இதனை முற்றாக ஒழித்து முன்மாதிரிமிக்க சமூகமாக மிளிர முன்வர வேண்டும்.

வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த அல் அக்‌ஷா, நியூ ஸ்டார் கழக வீரர்கள்கடந்த 04.08.2022ம் திகதியன்று மட்டக்களப்பு வெபர்...
09/08/2022

வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த அல் அக்‌ஷா, நியூ ஸ்டார் கழக வீரர்கள்

கடந்த 04.08.2022ம் திகதியன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட ரீதியிலான “SUPER PROVINCIAL CRICKET TOURNEMENT” தொடருக்கான தெரிவுப்போட்டிகளில் பங்குபற்றிய வாழைச்சேனை அல் அக்‌ஷா மற்றும் வாழைச்சேனை நியூ ஸ்டார் விலையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இரு வீரர்கள் மாவட்ட அணிகளுக்கு தேர்வாகி வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

20 வயதுக்குட்பட்ட SUPER PROVINCIAL CRICKET TOURNEMENT தொடருக்கான தெரிவுப்போட்டியில் கலந்து கொண்ட நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக இளம் வீரர் எம்.எம்.றிஸ்மியும், 17 வயதுக்குட்பட்டோருக்கான தெரிவுப்போட்டியில் கலந்து கொண்ட வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக்கழகத்தினுடைய இளம் வீரர் எம்.எஸ்.மலிக் ஆகியோரே இவ்வாறு மாவட்ட அணிகளுக்குத் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.

இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

07/08/2022
காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட.  ஆயிஷா ஷிஹாறா சட்டத்தரணியானார்காத்தான்குடியை பிறப்பிடமாகவும், கொழும்பு, கல்கிஸ்ஸையை வச...
07/08/2022

காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட. ஆயிஷா ஷிஹாறா சட்டத்தரணியானார்

காத்தான்குடியை பிறப்பிடமாகவும், கொழும்பு, கல்கிஸ்ஸையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆயிஷா ஷிஹாறா ஷபீக் கான் கடந்த 05.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசரின் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் துறைமுக அதிகார சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் முஹம்மது ஷபீக் கான், உம்முல் ரஸீனா தம்பதியின் சிரேஷ்ட புதல்வியும், காத்தான்குடி 01ஆம் குறிச்சி மர்ஹூம் ஹயாத் கான் ஆசிரியர், மற்றும் காத்தான்குடி 02ஆம் குறிச்சி மர்ஹூம் செய்யது அஹமது ஆலிம் அவர்களின் மூத்த மகளான மர்ஹூமா உம்முகுல்தூம் (வெள்ளிம்மா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

சட்ட இளமாணிப் பட்டம் (Bachelor of Laws (Hons)), சமூக விஞ்ஞான கலை இளமாணிப் பட்டம் (Bachelor of Arts in Social Sciences) மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிக் கற்கையை பூர்த்தி செய்துள்ள, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பணிபுரியும் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளரும், KHAN Translation நிறுவனத்தின் உரிமையாளருமான இவர், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயம், காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார்.

வாழ்த்துக்கள் சகோதரி

 #சனாகான்பெயர், புகழ், பணம் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருந்த நடிகை சனாகான் நிம்மதியைப் பெற்றது எப்படி?★"அன்று வ...
01/08/2022

#சனாகான்

பெயர், புகழ், பணம் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருந்த நடிகை சனாகான் நிம்மதியைப் பெற்றது எப்படி?

★"அன்று வந்த கனவு... நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான்!" - மனம் திறந்த நடிகை சனா கான்.
"எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை.

★அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்." - சனா கான்.

★இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்தவர் சனா கான். இவர் நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞராகத் திரையுலகில் பணியாற்றி வருபவர். தமிழில் இவர் நடிகர் சிம்புவின் 'சிலம்பாட்டம்', 'பயணம்' ஆகிய படங்களில் நடிகையாகவும் 'ஈ', 'அயோக்கியா' போன்ற படங்களின் பாடல் காட்சிகளில் சிறப்புத் தோற்றத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

★அதேபோல, கடந்த 2012-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தார்.

★சமீபகாலமாக சனா கான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதிலும் பணியாற்றுவதில்லை.

★கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்து திருமண வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.

★இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவு செய்த சனா, தனது வாழ்வின் கடுமையாக நாள்கள் குறித்தும் தான் ஹிஜாப் அணிந்ததற்கான காரணம் குறித்தும் பேசியிருந்தார்.

★"அன்று வந்த கனவு... நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான்!" - மனம் திறந்த நடிகை சனா கான்
இது பற்றிக் கூறிய அவர், “எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.

★அப்போது 2019-ல், ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்தக் கல்லறையில் நான் இருப்பதைப் பார்த்தேன்.

★அந்தக் கனவு, இதுதான் என் முடிவு என்று இறைவன் எனக்கு உணர்த்தியது போல் இருந்தது. இது எனக்குக் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

★அதன்பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன். குறிப்பாக அதிலிருந்த 'உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை' என்ற அழகிய வாசகம் ஒன்று என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது.

★மறுநாள் காலையில் நான் எழுந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது என் பிறந்தநாள். அன்று முதல் ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன். இனி இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

(நன்றி:விகடன்)

Address

Colombo
Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when Almashoora breaking news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Almashoora breaking news:

Videos

Share