Kandy Muslim Media - கண்டி முஸ்லிம் மீடியா

  • Home
  • Sri Lanka
  • Kandy
  • Kandy Muslim Media - கண்டி முஸ்லிம் மீடியா

Kandy Muslim Media - கண்டி முஸ்லிம் மீடியா Share Your Best Ideas and Guidelines for the Community

*ஜனாஸா நலன்புரி வாகனமொன்றை, ஊருக்காக தனி ஒருவனாய் வழங்கிய இளம் தொழிலதிபர்!*கடந்த  நான்கு மாதத்துக்கு முன்பாக எமது வாட்ஸ்...
06/04/2024

*ஜனாஸா நலன்புரி வாகனமொன்றை, ஊருக்காக தனி ஒருவனாய் வழங்கிய இளம் தொழிலதிபர்!*

கடந்த நான்கு மாதத்துக்கு முன்பாக எமது வாட்ஸ்அப் செய்திக்குழுமத்தில் பதிவிட ஒரு செய்தி வருகிறது...
ஊருக்கான ஜனாஸா வாகனத்தின் தேவை குறித்தும் அதனை பெற்றுக்கொள்வதற்காக வாரி வழங்குமாறும். பதிவிடப்பட்ட அடுத்தநாளே அடுத்த செய்தி வருகிறது; ஜனாஸா வாகனம் கிடைத்துவிட்டது.*
அல்ஹம்துலில்லாஹ்!

ஒரு நாளிலேயே எப்படி?
ஒருவர் பொறுப்பெடுத்துவிட்டார்!
ஒருவரா?
ஆம்! தனி ஒருவர்!
மாஷா அல்லாஹ்! யாரது?
sorry! இப்போதைக்கு சொல்ல முடியாது.
ஓகே! ஒகே! அல்லாஹ் அவருக்கு இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கொடுக்கட்டும் என்று துஆ செய்தவனாக தொலைபேசியை வைத்துவிட்டேன்.

ம்ம்ம்... யாராக இருக்கும்....

*****
தற்போது வாகனம் கிடைத்தாயிற்று.
எப்போதும் வழங்குபவர்,
எண்ணாது வழங்கிக்கொண்டிருப்பவர்,
வழங்கியிருக்கிறார்!

ஆம்! Group of Companies உரிமையாளர் அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்கள் தனது தகப்பனார் மர்ஹூம் அல்ஹாஜ் O.L.M இப்றாஹீம் அவர்கள், மற்றும் தனது மாமனார் மர்ஹூம் அல்ஹாஜ் இமாமுத்தீன் ஆகியோரது பெயரில் அல்லாஹ்வுக்காக அண்மையில் (13.03.2024) தெஹியங்கை ஜும்ஆ மஸ்ஜிதில் வைத்து மக்கள் முன்னிலையில், மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M.N.M பைஸர் அவர்களிடம் மக்கள் நலனுக்காக வக்ப் செய்தார்கள்.

தெஹியங்க, தெஹிகம ஜனாஸா நலன்புரி அமைப்புக்கள் தமக்கான வாகனமொன்றை கொள்வனவு செய்ய எடுத்துவந்த முயற்சி இறைவன் கிருபையால் அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்களைக்கொண்டு மிக இலகுவாக இடம்பெற்றிருக்கிறது. அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்களது இத் தியாக நோக்கத்திற்கான பரிபூரண கூலியை அல்லாஹ் வழங்கிவைப்பானாக. மேலும் அவ்வாகனத்திற்கான வருடாந்த அரச செலவீனங்களையும் அவரே பொறுப்பேற்றுள்ளமை அவரின் மிகைத்த பெருந்தன்மையைக் காட்டுகிறது.

மத்திய பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் M.N.M பைசல் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்ட வாகனத்தை மக்களுக்கு முழுமையான சேவையை வழங்கும் நன்நோக்கில் அன்றையதினமே; தெஹியங்கை ஜானஸா நலன்புரி சங்கத் தலைவர் ஜனாப் A.C.M நளீம் அவர்களிடம் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சிறப்புமிக்க அந்த அழகிய தருணத்தில் அல்ஹாஜ் M.I.M அரூஸ் அவர்களுக்கு ஊர் நிர்வாகசபையினால்; ஜமாஅத்தினர் சார்பாக நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

***
இவ்வாகனத்தை யடினுவர உடுநுவர மற்றும் அண்மித்த பிரதேச மக்கள் தமது ஜனாஸா மற்றும் அதிமுக்கிய சுகாதாரத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெஹியங்க ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜனாப் A.C.M நளீம் அவர்களைத் தொடர்புகொண்டபொழுது குறிப்பிட்டார். மேலதிக தொடர்புகளுக்கு 076 826 3070
****

அன்பாளன்,
அருளாளன்,
அல்லாஹ்!
அல்ஹாஜ் அரூஸ் அவர்களின்
அறிவிலும்,
ஆரோக்கியத்திலும்,
ஆயுளிலும்,
ஆதாயத்திலும்,
அபிவிருத்தியை
அளவில்லாமல்
அதிகரிப்பானாக!

அவரது குடும்பம் மற்றும் அனைத்துத்துறைகளிலும் பரக்கத்தை உண்டுபண்ணுவானாக!

அத்தோடு இவ்விடயத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!

***
தலைவர்,
DESDA சமூகநல அமைப்பு,
தெஹியங்க

.புதுப்பொழிவுடன் வீறுநடை போட்டுவரும் தெஹியங்க ரவாஹிய்யா அரபுக் கலாசாலையில் இணைந்துகொள்ள இதோ உங்களுக்கோர் சந்தர்ப்பம்! ஆற...
16/02/2024

.
புதுப்பொழிவுடன் வீறுநடை போட்டுவரும் தெஹியங்க ரவாஹிய்யா அரபுக் கலாசாலையில் இணைந்துகொள்ள இதோ உங்களுக்கோர் சந்தர்ப்பம்!

ஆறு வருடங்களில் நீங்களும் ஒரு திறமைமிக்க ஒரு ஆலிமாகலாம்!
இன்றே இணைந்துகொள்ளுங்கள்!

04/01/2024

ஜனவரி,
பெப்ரவரி,
(உயிர் போனாலும் கட்டணுமாமோ) மார்ச்சுவரி

17/08/2023
17/05/2023

ஐவேளை ‘ #அதான்’ (Bபாங்கின்) பெயரில் அரங்கேறும் அவலங்கள் ®

#மஸ்ஜித் நிருவாகிகளே இது உங்கள் கவனத்திற்கு....!

#இஸ்லாத்தில் நேரமுகாமைத்துவம் மிகமிக இன்றியமையாதது. அமல்கள் அனைத்தும் *நேரம் குறிக்கப்பட்டே நடைபெற்று வருகின்றது* என்பதை மறுக்க முடியாது!

உலகம் முழுக்க வல்லவன் அல்லாஹ்வின் ‘அல்லாஹு அக்பர்’ ‘அல்லாஹு அக்பர்’ எனும் அழகிய திருநாமம் புனித ‘அதான்’ வடிவில் ஒவ்வொரு நொடியும் விடுபடாமல் தொடர்ச்சியாக சொல்லப்பட்டுக்கொண்டே வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

நமது நாட்டிலும்கூட குறிப்பாக நகரங்கள் கிராமங்கள் அனைத்திலும் நெடுங்காலமாக ஒலிபெருக்கி வாயிலாக ‘அதான்’ சொல்லப்பட்டு வருகிறது. அதான் சொல்வதெற்கெதிராக அவ்வப்போது ஒருசில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கபட்டு வருகின்றது.®

இக்குற்றச்சாட்டுகளுக்கான காரணங்கள்ல் எமது செயற்பாடுகளிலிருந்தே வெளிப்படுவது கவலைக்குரிய விடயமாகும். உதாரணமாக அதானை..

• இனிமையற்ற தொனியில் ‘அதான்’ சொல்வது,
• உச்சரிப்புத் தெளிவற்ற முறையில் சொல்வது,
• உற்சாகமின்றி அல்லது எதற்காகவோ, யாருக்காகவோ எனச்சொல்வது,
• ஏன் சொல்கிறோம் எதற்குச் சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்வது
• ராகம் என்ற பெயரில் ஒரே அதானில் பல இராகங்களை எடுப்பது,
• அவசியமற்ற விதத்தில் ‘அதானை’ நீட்டிச்சொல்வது,
• மிகப்பெரும் தஉவா - அழைப்புப் பணி என்று தெரியாமல் சொல்வது
• சிறப்பான அமலென்று அறியாமல் சொல்வது,
• சரியான நேரத்துக்கு ஆரம்பிக்காமை போன்றவைகளைக் குறிப்பிடலாம்

இதில் முக்கியமாக *குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்காமை* பெருந்தவறாக அனைவராலும் உணரப்படுகிறது.®

• ஒரு மஸ்ஜிதில் ஆரம்பிக்கப்பட்டு ஒருசில நிமிடங்களின் பின்னர் பிறிதொரு மஸ்ஜிதில் அதானை ஆரம்பிப்பது...
• பிறிதொரு மஸ்ஜிதில் ஆரம்பிக்கும் வரை சந்தேகத்தின்பேரில் காத்திருப்பது,
• தனது அதான் சத்தம்தான் ஊரில் முதலில் கேட்கப்படவேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக ஆரம்பிப்பது.
• ஒருவர் பிறிதொருவரை அதான் சொல்லவிடாமல் அவசரத்தில் ஆரம்பிப்பது
• எமது மஸ்ஜித் கடிகாரம் மட்டும்தான் சரியாக ஓடுகிறது எனும் நிலைப்பாட்டில் பிடிவாதமாயிருப்பது.
போன்ற பல காரணிகளைக் குறிப்பிடலாம்

*இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஒரு மஸ்ஜிதில் இரண்டு கடிகாரம் இருந்தால் இரண்டும் இரண்டு விதமான மாறுபட்ட நேரங்களைக் காட்டுவதுதான்!*

மற்றும் ஒருவருக்கு தொடர்ச்சியாக 10 நிமிடங்கள்வரை நான்கைந்து அதான்கள் கேட்குமாயின் பதில் சொல்வது உட்பட அதானுக்குரிய கண்ணியக் குறைபாடுகள் ஏற்படுகிறது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர்.

*தீர்வாக*®
தற்போதைய நிலைமையில் அனைவரும் அதிகமாக அரச வானொலி *இ.ஒ கூ முஸ்லிம் சேவை* கேட்பவர்களாக இருக்கிறோம். இதனை செவியுறும் மஸ்ஜித்களின் இமாம்கள், முஅஸ்ஸின்கள், நிருவாகிகள் என அனைவரும் தமது தொலைபேசி மற்றும் கைக்கடிகாரத்தில் *வானொலியில் சொல்லப்படும் நேரத்தை சரியாகப் பதிவுசெய்து பள்ளிவாசல் கடிகாரத்தை சரிசெய்யவேண்டும்.

அல்லது பிரதான *மஸ்ஜிததின் பிரதிநிதியொருவர் தமது நிருவாக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மஸ்ஜித்களுக்கும் விஜயம் செய்து அங்கிருக்கும் கடிகாரங்களினது நேரங்களை சரிசெய்து உதவவேண்டும். அவ்வாறு நடைபெறுமாயின் அனைத்து மஸ்ஜித்களிலும் ஒரே நேரத்தில் அதான் ஒலிக்கக் கேட்கலாம் இன்ஷாஅல்லாஹ்!.

மறுபுறம் அதான் சொல்வதிலிருந்து இமாம்களும் பின்வாங்கும் நிலைமைகள் பொதுவாகவே உள்ளது. இந்நிலைமை மாறி இமாம்களும் அதான் சொல்ல முன்வரவேண்டும்
முக்கியமாக அதான் சொல்வோருக்கு பயிற்சிகளை அளிக்கவேண்டும். உலகில் அழகாக அதான் சொல்வோரின் அதான்களை கேட்டு அம்முறையில் அதானை சொல்லவைக்க நிருவாகங்கள், இமாம்கள் முயற்சிக்கவேண்டும்.

*அண்மையில் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் கட்டார் நாடு அனைத்து மஸ்ஜித்களிலும் அழகாக அதான் சொல்வோரை ஏன் ஏற்பாடு செய்திருந்தது என்பதனை ஒருநிமிடம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்*.

*முஸ்லிம்களுக்காக மட்டும்தான் அதான் என்ற மந்தகரமான மனநிலைப்பாட்டிலிருந்தும் நாம் வெளியேறவேண்டும்*

அதான் சொல்லமுன் வுளுவுடன்,
யா அல்லாஹ்! இந்த அதான் மூலம் முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜிதுக்குள் வரவேண்டும், அனைத்து மக்களுக்கும் ஹிதாயத் கிடைக்கவேண்டும், எனக்கும் இதன் மூலம் ஈருலகிலும் ஈடேற்றம் கிடைக்கவேண்டும் என்று துஆக் கேட்டவராக, உற்சாகமாக அழகிய தொனியில் அதான் சொல்லும் நிலைமை உருவாகவேண்டும்...

*எனவே நேரம் பார்த்து*
*சரியான நேரத்துக்கு*
*பெரும் அமலாகக் கருதி*
*‘அதானை’ அழகாகச் சொல்வோம்*.!

இது உங்களுக்கு உண்மையெனப்பட்டால் உங்கள் குரூப்களில் ஷேர் செய்யுங்கள்!

*அபூ தைபா*
Muslim சமூக மாற்றம்!
தமிழ் பேசும் முஸ்லிம்களின் ஊடகம்!

https://chat.whatsapp.com/GBL5Yz9Kcb389hM68360aO

ஆண்கள் பெண்கள் என அடையாளம் காணமுடியாத வாட்ஸ்அப் குழுமம் இது. அனைவரும் இணைந்துகொள்ளுங்கள்.

23/04/2022

#கடுகன்னாவயில் இடைநடுவில் நின்ற புகையிரதம் - பிக்குகள் உள்ளிட்ட மக்களுக்கு, உணவு தயாரித்து உபசரித்த முஸ்லிம்கள்.
பதுளையிலிருந்து புறப்பட்ட புகையிரதம் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. அல்லலுறும் பிரயாணிகளை அவதானித்த
கடுகன்னாவையை சேர்ந்த உள்ளுர் முஸ்லீம் மக்கள் பயணிகளிற்கு உணவு தயாரித்து வழங்கினார்கள்...!

புனித ரமலான் மாதம்!ஒவ்வொரு ரமழானிலும் புனித அல்குர்ஆனை ஓத நினைத்தும் முடியவில்லை; இம்முறை எப்படியாவது ஓதிவிட வேண்டும் என...
02/04/2022

புனித ரமலான் மாதம்!

ஒவ்வொரு ரமழானிலும் புனித அல்குர்ஆனை ஓத நினைத்தும் முடியவில்லை; இம்முறை எப்படியாவது ஓதிவிட வேண்டும் என வருத்தப்படுபவரா நீங்கள்?
அப்படியானால் இம் முறை இம் மாதத்தில் முழுக் குர்ஆனையும் உங்களால் ஓதி முடிக்கலாம்.

புனித அல்குர்ஆன் கிட்டத்தட்ட 600 பக்கங்களைக் கொண்டது. எனவே
ஓரு நாளைக்கு ஒரு நேரத்தில் 20 பக்கங்களை ஓதினால்; அல்லது
ஒவ்வொரு பர்ளுத் தொழுகைக்கும் முன்பு அல்லது பின்பு 4 பக்கங்களை ஓதினால்; அல்லது

காலையில் 10 பக்கங்கள் மாலையில் 10 பக்கங்கள் என ஓதினால்; அல்லது
ஒரு நாளைக்கு *சுமாராக* 225 ஆயத்துக்களை ஓதினால் ரமழானில் முழுமையாக ஒரு குர்ஆனை ஒதிவிடலாம்.
மாறாக
நான் சிறுவயதில் ஓதியது...
எனக்கு தஜ்வீத் அறவே தெரியாது....
ஓதும் முறைகளை மறந்துவிட்டேன்....
என புனித குர்ஆனை ஓதுவதற்கு ஆசையிருந்தும் ஓதாமல் விடுபவரா நீங்கள்! அப்படியாயின்.....,

உங்கள் ‘மொபைல் போனை’ எடுங்கள் அல்லது கம்ப்யூட்டரை ஒன் செய்யுங்கள்! விரும்பிய ஒரு இமாமின் அழகிய கிராத்தை பிளே பண்ணுங்கள்! புனித குர்ஆனை எடுத்து எழுத்தின் மேலே கைவைத்து ஒலிக்கும் கிராத்துடன் சேர்ந்து ஓதுங்கள்.

நிச்சயமாக மனதுக்குள் ஒரு திருப்தியை உணர்வீர்கள்!
புனித ரமலான் மாதம்!!
இறைவேதம் இறங்கிய மாதம்!

01/04/2022

#முஸ்லிம்களைப் பற்றி பெரும்பான்மையினருக்கு இப்போதாவது புரியத்தொடங்கியிருக்கிறதே! மகிழ்ச்சி!

*பலர்-பான்களும் பலவின்-பான்களும்!*(நாட்டு நிலையும் நம்மவர் கலையும்) சஜித் அதே கதையை அளப்பான்....அனுரவோ அதீத கனவில் மிதப்...
15/03/2022

*பலர்-பான்களும் பலவின்-பான்களும்!*
(நாட்டு நிலையும் நம்மவர் கலையும்)

சஜித் அதே கதையை அளப்பான்....
அனுரவோ அதீத கனவில் மிதப்பான்....
ரணில் மீண்டும் வர யோசிப்பான்....

அரசன் எப்படியோ காலத்தைக் கழிப்பான்....
மகாரஜா மறையும்வரை ஆட்சியிலே செழிப்பான்....
கபுடாஸ் தொடர்ந்தும் நாட்டை சீரழிப்பான்....
குடும்பமாய் முழு வயிற்றையும் வளர்ப்பான்....

சிக்கல் தொண்டைக்குள் வந்தால் சிரிப்பான்....
அடிமாடுகளில் எவனோ ஒருவன் எங்கோ வெடிப்பான்....
ஹிருதெரண மக்களை விடாது கடிப்பான்....
பிரிந்தவன் சேர்ந்து எம்மை மறுபடியும் அடிப்பான்....

தேர்தலென்றால் சிங்கமென்று கூடிக் கொடுப்பான்....
முஸ்லிம் தலைமையோ கூடவே இருந்து நடிப்பான்....
நம்மவனோ நாணமின்றி நாப்பிரண்டு இருப்பான்....
உள்ளாரே நாவரண்டு ஒன்றுமின்றிக் கிடப்பான்....

என்னதான் நாட்டில் நடந்தாலும்,
பட்டினியாய் பலரும் வீட்டில் இருந்தாலும்,
நம் சமூகமோ நாளை வரும் ரமளானில்.....!

தராவீஹ் எட்டா இருபதா என சண்டையாய்ப் பிடிப்பான்! ....
மார்கத்துக்காய் பிறை பிழையென்று பெருநாள் எடுப்பான்! ....
அடுத்தநாள் சுபஹ் தொழாமலே புரண்டு படுப்பான்!! ....
சுத்தமாய் சமூக ஒற்றுமையை சுமூகமாய் அழிப்பான்!!! ....

03/02/2022

சண்முகா கல்லூரி விவகாரம்!
சம்பந்தப்பட்டோரே சற்றுக் கற்றுக்கொள்ளுங்கள்!
நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்களின் அழகிய அறிவுரைகள்!

இது பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் காலம்!உங்கள் பிள்ளைகளும் கற்கத் தயாராகி வருகிறார்களா...? அப்போ இந்த அன்பான நினைவூட்டல்...
11/01/2022

இது பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் காலம்!
உங்கள் பிள்ளைகளும் கற்கத் தயாராகி வருகிறார்களா...?
அப்போ இந்த அன்பான நினைவூட்டல் உங்களுக்குத்தான்!

முதல் கல்வியை கற்க பிள்ளைகளை அழைத்துச்செல்லும்போது....!

 நிய்யத் வைத்தல்!
 சதகா செய்தல்!
 தொழல்!
 துஆக் கேட்டல்!
 அழைத்துச்செல்லல்!
வல்லவன் அல்லாஹ்வும், எமது அன்பு நபி முஹம்மத் ﷺ அவர்களும் வலியுறுத்திக் கற்கச் சொன்ன கல்வியை ‘யா அல்லாஹ் உனக்காகக் கற்க வைக்கிறேன், கற்க அழைத்துச் செல்கிறேன்’ என நிய்யத் வைத்தவர்களாக
பிள்ளையின் நலவுக்காக ஒரு சிறு சதகாவை செய்து இரண்டு ரக்கஅத்துகள் தொழுது ‘இக்கல்வியை பிள்ளையின் இம்மை, மறுமையின் பாரிய நலவுகளுக்கு பிரயோசனமளிக்கக்கூடியசிறந்த கல்வியாக அமைய துஆ’ செய்தவர்களாக உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழகாக அழைத்துச்செல்லுங்கள்
எந்த ஒரு நல் அமலுக்கும் நிய்யத் மிக முக்கியமானது!
அந்த அமலுக்காக நீங்கள் செலவிடும் நேரம், காலம், பணம் அனைத்திற்கும் நன்மைகள் கட்டாயம் காத்திருக்கிறது
பொதுவாக நிய்யத் வைக்காமல் ஆரம்பிக்கும் அல்லது பயணிக்கும் ஒரு நீண்ட அமலாக கல்விப் பயணம் இருக்கிறது... இன்ஷா அல்லாஹ் இனிமேல் நிய்யத்துடன் பயணிப்போம்! இதனை பலருக்கும் எத்திவைப்போம்!

Dehianga DESDA அமைப்பு

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandy Muslim Media - கண்டி முஸ்லிம் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share