"This is a trusted news exchange page."
● Political Information
● Election Details
● Sports N
07/02/2024
நீங்கள் தையல் கலையை பற்றி ஆரம்பத்தில் இருந்து அறிய ஆர்வமுள்ளவரா !
சுய தொழில் ஒன்றின் மூலம் வருமானம் பெற ஆர்வமுள்ளவரா
அப்படியானால் உங்களுக்கான வாய்ப்பு இதோ ..............
இலகு முறை தையல் கற்கைநெறி வகுப்பு(1 - 1/2 மாதங்கள் – 45 days)
February 12ஆம் திகதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகிறது.
புதிய பதிவுகளுக்கு இன்னும் இருப்பது 05 நாட்கள் மட்டுமே.
இந்த கற்கைநெறி மூலம் நீங்கள்
1.அடிப்படையிலிருந்து தையல் கலையை கற்று கொள்ள முடியும்.
2.Normal
baby frock & Adult frock - 4 types
Saree blouse - lining & normal
Anarkali gown - 4 pcs
Shalwar with Bottom - 02 types
இவ் அனைத்தையும் *நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் ஒரே கற்கைநெறியில் கற்று கொள்ள அரிய வாய்ப்பு!
3000.00 மட்டுமே.
3.வகுப்புக்கள் அனைத்து வகுப்புகளும் Telegram மூலமே தமிழ் மொழியில் நடாத்தப்படும் அத்துடன் notes, videos தரப்படும்.
4.ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பிறகு அது தொடர்பான சந்தேகங்களை group or தனிப்பட்ட முறையில் கேட்க முடியும்.
Contact No: 0743651730 (Telegram message ) or
Normal call (0743651730)
மட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளே உள்ளெடுக்கப்படும்.
February 12 ஆம் திகதி வரை மட்டுமே புதிய பதிவுகள் உள்ளெடுக்கப்படும். அதனால் இன்றே உங்கள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் .
நீங்கள் இந்த வகுப்பில் இணைய விரும்பினால்
உங்கள் பெயர்,
முகவரியை
இந்த 0743651730 இலக்கத்திற்கு Telegram message or Group இல் இணையவும்.
Telegram Group link👇👇
https://t.me/+sp8tcfgzY4kzNjll
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 0743651730 இந்த எண்ணிற்கு அழைக்கவும். (Normal call only* )
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.
இன்றே பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்
Limited seats only
Paid Advirtisment
03/01/2024
உயர்தர பரிட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்
உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
“இந்த முறை ஒரு புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சில வலைத்தளங்கள் பழைய அட்டவணையைக் காட்டக்கூடும். பரீட்சாத்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிச்சீட்டிலேயே காட்டியுள்ளோம். அதனால் வேறு எந்த தகவலுக்கும் செல்ல தேவையில்லை. உங்கள் அனுமதிச்சீட்டு கிடைக்கும் போது முன்பதிவு பிரிவு உள்ளது. அந்த பகுதியில் திகதி, பாட எண், மொழி, நீங்கள் விண்ணப்பித்த பாடங்கள் தொடர்பான பாடத்தின் நேரம். உள்ளது. அது போதும். அட்டவணையைப் பற்றி நீங்கள் வேறு எதையும் தேடத் தேவையில்லை…”
இதேவேளை, அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
“அனைத்து மாணவர்களும் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். தங்கள் மையத்திற்கு செல்வதற்கு ஏதேனும் இடையூறு இருக்கிறதா என்று கண்டறியவும். அப்படியானால், அருகிலுள்ள மண்டல அலுவலகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் அவசர எண்ணை அழைத்து, செல்ல தேவையான சூழலை தயார் செய்து கொள்ளுங்கள்..”
01/01/2024
Sri Lanka welcomed the New Year with several celebrations across the country.
Large crowds were also seen at an event organized by Sri Lanka Tourism at the Galle Face Green
23/12/2023
📰NEWS LINE📌Sri Lanka🇱🇰
முஸ்லிம் மாணவர்களுக்கு, இந்தமுறை A/L பரீட்சையிலாவது தீர்வு கிடைக்குமா..❓
- அஷ்ஷெய்க் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் பாடசாலை மட்டத்தில் நடைபெரும் பரீட்சைகளில் மிக முக்கியமான இறுதிப் பரீட்சையாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கின்றன. முதலில் அனைத்து பரீட்சாத்திகளுக்கும் நல்வாழ்த்துக்களையும், சிறந்த பெருபேருகளையும் பெற வேண்டுமெனவும் பிரார்த்தித்து எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரீட்சை என்ற பெயர் பொதுவாகவே ஓர் அச்சத்தை பரீட்சாத்திகளிடத்து ஏற்படுத்துவது இயல்பானது தான். இயல்பான இந்த அச்சத்தையும் தாண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு முஸ்லிம் மாணவ மாணவிகள் ஆளாக்கப்படுவதை கடந்த காலங்களில் அறிய முடிந்தது.
பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு மானசீக உளைச்சல்களைக் கொடுத்து அவர்கள் பரீட்சைக்கு சரியான முறையில் முகம்கொடுக்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் ஏராளம்.
பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலை சீருடையிலே தோற்ற வேண்டுமென்பது சட்டமாகும். பர்தா, கவுன், நீண்ட கால்சட்டை அணிவதற்கு அரசு முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த ஒழுங்கையே சகல பரீட்சைகளின் போதும் முஸ்லிம் மாணவிகள் பின்பற்றுகின்றனர்.
இதற்கு கல்வியமைச்சோ, பரீட்சைகள் திணைக்களமோ எந்த தடையையும், எந்த சந்தர்ப்பத்திலும் விதித்ததில்லை. எனினும் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் பரீட்சை மண்டபங்களிலும், பரீட்சைக்கு தோற்றிக் கொண்டிருக்கும் போதும் முஸ்லிம் மாணவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்பட்டு மாணவர்ளை சங்கடத்திற்குட்படுத்தி அவர்கள் உற்சாகத்தோடு பரீட்சை எழுத முடியாத நிலையினை தோற்றுவிக்கின்றனர்.
இவ்வாரான செயல்பாடுகள் பரீட்சை காலங்களில் பேசப்பட்டு, முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள உரிமைகள் மீளப்பெற்றுக் கொடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்து வருகின்ற காலங்களில் மீண்டும் மீண்டும் இதே விடயம் விஸ்வரூபம் எடுப்பதன் நோக்கம் தான் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை.
முஸ்லிம் மாணவன் ஒருவருக்கு தனது பல்கலைக்கழக பரீட்சையின் போது தாடியுடன் பரீட்சைக்கு தோற்ற முடியாதெனக்கூறி தடைவிதிக்கவே, சட்டத்தை நாடிய அந்த மாணவனுக்கு தாடியுடன் பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும், அவருக்கு விதிக்கப்பட்ட தடை அடிப்படை உரிமை மீரல் எனவும் இலங்கையின் சட்டத்துரை தீர்பளித்திருந்ததை அனைவரும் நன்கறிவோம்.
இவ்வாரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்பொன்றை வழங்கிய பேனாவின் மை காயும் முன்னரே கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஸஹ்றி தாடிவைத்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக தனது இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றமுடியாத நிலை ஏற்பட்டதையும், பின்னர் சட்டத்தை நாடியதையும் நாம் அறிவோம்.
இது சட்டத்தில் இருக்கிற பிரச்சினையா அல்லது குறித்த ஒரு சிலர் அதிகாரத்தில் இருக்கின்ற பிரச்சினையா என்பதை புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. சன்முகா வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியைக்கு ஹிஜாப் அணிந்து பாடசாலை வரமுடியாது என்ற தடையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு அதற்கெதிராகவும் நீதிமன்றம் சென்று உரிமையை வென்றெடுத்தாலும் எதிர்காலங்களில் இந்த பிரச்சினை வெவ்வேரு வடிவங்களில் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையே தென்படுகிறது.
⭕எதிர்வரும் உயர்தரப் பரீட்சை விடயத்தில் முஸ்லிம் தலமைகளின் பொறுப்பும் கடமையும்...
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இம்மாதம் கடைசி வாரம் முதல் ஆரம்பமாக உள்ளன. எனவே கடந்த காலங்களில் பரீட்சை மண்டபங்களிலும், பரீட்சை நடந்து கொண்டிருக்கும் போதும் நடந்த கசப்பான சம்பவங்கள் நடைபெறாதிருக்க தேவையான ஏற்பாடுகளும்;> அறிவுருத்தல்களும் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களுக்கும் பரீட்சாத்திகளுக்கும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பரீட்சைக்கு மாணவர்கள் சென்றதன் பின்னர் மாணவர்கள் உளரீதியாக பாதிக்ப்பட்டு பின்னர் அதுகுறித்து அறிக்கை விடுவதிலும், சட்டத்தை நாடுவதிலும் அர்த்தமேதுமில்லை. கல்வியமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் பரீட்சாத்திகள் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மாணவிகளது சீருடை விடயத்தில் வழங்கியுள்ள அனுமதியினை அனைத்து பரீட்சை நிலையங்களிலும் மும்மொழிகளிலும் பார்வைக்கு இடவேண்டும். இது குறித்து மாணவ சமூக அறிவூட்டப்படவும் வேண்டும்.
பரீட்சை மண்டப நுளைவாயிலில் வைத்து முஸ்லிம் மாணவிகளது பர்தா களையப்பட்ட சந்தர்பங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்னரும் இவ்வாரான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை அறிந்த சிலர் கைவசம் முந்தானைகளை எடுத்துவந்திருந்ததாகவும், பர்தாவிற்கு பகரமாக மாற்றுவழி இல்லாத மாணவிகள் பர்தா இன்றி குற்ற உணர்வோடும், கடுமையான கூச்ச உணர்வோடும் பரீட்சைக்கு தோற்றியதாகவும் தெரிவித்த சம்பங்களும் பதிவாகியுள்ளன.
முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியும் போது தங்களது காதுகள் வெளியில் தெரிகின்ற மாதிரி அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ஒரு சில சம்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகின. இது குறித்தும் தெளிவான வழிகாட்டல்கள் பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கும் வழங்கப்படுவதும் கட்டாயமாகும்.
மேலும் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சில இலெக்ரொனிக் கருவிகள் பாவிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. எனவே பரீட்சையின் போது ஏற்படும் அளெசகரிகங்களை தவிர்க்கும் பொருட்டு அவைகுறித்த தெளிவான வழிகாட்டல்களை மாணவர்கள் தங்களது பாடசாலையினூடகவோ அல்லது பிராந்திய கல்வியமைச்சினூடாக பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
அதேபோன்று இன்றைய காலம் ஸ்மார்ட் யுகமாக மாறியிருப்பதால், ஸ்மார்ட் கை;கடிகாரம், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் பேனா, ஸ்மார்ட் உபகரணங்கள் என ஏராளமான ஸ்மார்ட் பொருட்கள் பாவனையில் இருப்பதால் இவை நிச்சியமாக பரீட்சைகளின் போது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே மாணவர்கள் இவற்றை தவிர்ந்து கொள்வதற்கும் அறிவுருத்தப்பட வேண்டும்.
பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றிக் கொண்டிருக்கும் போது பரீட்சை மண்டபத்திற்குள் நுழைந்த சில அதிகாரிகள் அச்சுருத்தும் தொணியில் பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாது எனக் கூறியதோடு நிற்காமல் அம்மாணவிகளை தனது கையடக்க தொலைபேசில் படம்பிடித்துக் கொண்டதோடு அவர்களது பரீட்சை சுட்டெண்ணையும் குறித்த சென்றதாக பம்பலபிடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படட்ட சம்பவங்களும் இருக்கின்றன.
இங்கு முறைப்பாடு செய்வது, அல்லது சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகளுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பது என்பதையும் தாண்டி, பரீட்சாத்திகள் மானசீக ரீதியான தாக்கத்திற்குள்ளாகி சரியான முறையில் பரீட்சைக்கு தோற்றமுடியால் இருப்பதே மிக மிக அவதானம் கொடுத்து தீர்க்ப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
எனவே பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் வரை இருக்காமலும், பிரச்சினைகள் உருவெடுக்கும் வரையில் அமைதியாக இருக்காமலும் முஸ்லிம் தலமைகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியமைச்சர், மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
மாகான சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் இதுவிடயத்தில் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகான மற்றும் பிரதேச கல்வியமைச்சுக்களையும், பரீட்சைகள் தொடர்பான அரச இயந்திரங்களையும் தொடர்பு கொண்டு பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கும வழிகாட்டல்களை வழங்க காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் உங்களது கடமையாகும்.
⭕பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது கடமையும் பொறுப்பும்..
கடந்த காலங்களில் பரீட்சாத்திகளுக்கு ஏற்பட்ட அளெசகரிகங்களுக்கு மாணவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருகின்ற நிலையில் குறிப்புக்களை எடுத்து வந்து பார்த்து எழுதுவதாகவும், மேலும் சிலர் பர்தாவின் உட்புற பகுதியில் குறிப்புக்களை எழுதி வருவதாகவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கபட்டன.
மேலும் சில மாணவிகள் பர்தாவினால் தங்களது வாய் பகுதியை மறைத்துக் கொண்டு பரீட்சை மண்டபத்தினுள் கதைப்பதாகவும், தகவல்களை பரிமாரிக் கொள்வதாகவும் தெரிவித்தனர். இதனால் சக மாணவர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் சங்கடமான நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்ததும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத் தன்மை கொண்டதாகவோ, அடிப்படையற்றதாகவோ இருக்கலாம். ஆயினும் ஒருசிலரது இவ்வாரான செயல்பாடுகள் காரணமாக எல்லா பரீட்சாத்திகளும் தண்டிக்கப்படலாம். பரீட்சை திணைக்ளத்தினால் அறிவுருத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களை மாணவர்கள் மதித்து நடப்பதும், பரீட்சை மண்டப அதிகாரிகளுக்கு தங்களது பணிகளை செய்வதற்கு ஒத்துழைப்பாக இருப்பதும் அவர்கள் மீதுள்ள கடமையாகும்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தாங்கள் பரீட்சை நிலையத்தில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நாம் இழக்கின்ற ஒவ்வொரு உரிமையும், சலுகையும் எமது எதிர்கால சந்ததிகள் விடயத்தில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இம்முறை உயர்தர பரீட்சை நிலையங்களாக முஸ்லிம் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறன. எனவே முஸ்லிம் பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு செல்லும் போது இயற்கையாகவே ஒர் அச்ச உணர்வும், மனக்குழப்பமும் இருக்கலாம். எனவே மாணவர்கள் முன்கூட்டியே இவற்றை எதிர்கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
பரீட்சை மண்டபத்திலோ, மண்டபத்திற்கு வெளியிலோ தமக்கு அல்லது சக மாணவருக்கு ஏற்படும் அளெசகரிகங்களை துணிந்து தட்டிக் கேட்கவும், அவற்றுக்கான நீதியை பெற்றெடுக்கவும் தயங்கக் கூடாது. அவ்வாரான விடயங்களை உடனுக்குடன் சமூகமயப்படுத்தி சட்ட ரீதியான முன்னெடுப்புக்களையும் செய்தாக வேண்டும். அவ்வாரான அதிகாரிகளை இனம்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிருத்தவும் தயங்கக் கூடாது.
முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களில் எதிர்நோக்கும் அடுத்த மிகப்பெரிய பிரச்சினை சிங்கள மொழி புரியாமையே. இது எமது சமூகம் பொதுவாக எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளும் ஒரு பிரதான பிரச்சினையும் கூட. பொதுவாக தமிழ் மொழி தெரிந்த மேற்பார்வையாளர்களும் மண்டபத்தினுள் இருப்பார்கள். அவ்வாரு தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளோ, மேற்பார்வையாளர்களோ இல்லையாயின் அதுகுறித்தும் எமது சமூக தலமைகள் கவனமெடுக்கவும் வேண்டும்.
எனவே உங்களது பிரச்சினைகளை தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை அனுகி அல்லது உங்களுக்குள் இருக்கும் சிங்களம் தெரிந்த மாணவரின் உதவியைப் பெற்று அவற்றை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மாணவர்கள் அதனை எழுத்து வடிவில் சமர்பிக்க வேண்டியேற்பட்டால் தமக்கு நன்கு புலமையான பாஷையிலே அதனை சமர்பிக்க வேண்டும். மேலும் தமக்கு புலமை இல்லாத பாஷையில் எழுதப்பட்ட எந்த ஆவணத்திற்கும் கையொப்பம் இடுவதையோ, உடண்படுவதையோ தவிர்ந்து கொள்ளவும் வேண்டும்.
பரீட்சை மண்படத்தில் ஏற்படும் சிறு சிறுவிடயங்களுக்கு மாணவர்களை போட்டோ பிடிப்பதற்கோ, அல்லது அவர்களது சுட்டெண்களை குறித்து செல்வதற்கோ யாரக்கும் எந்த அதிகாரமும் வழங்கப்பட்டில்லை என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும். அவ்வாரான முறைகேடான விடயங்கள் நடப்பதற்கு யாரும் அனுமதியளிக்கக் கூடாது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட எந்தவொரு சிரு அசம்பாவிதமும் நடைபெறாதிருக்க சகலரும் இனம் மதம் கடந்து செயல்பட வேண்டும். இம்மாணவச் செல்வங்கள் தங்களது பரீட்சைக்கு சிறந்த முறையில் தோற்றி அவர்களது அறிவும் அடைவும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் தாண்டி இந்த நாட்டிற்கும் முழு உலகிற்கும் பயனுள்ளதாக அமைய பிரார்த்திக்கிறேன்.
https://chat.whatsapp.com/CKotjtzy2dWAUOPMJQU3BY
23/12/2023
🔥BREAKING NEWS 🔥
பெட்ரோல் விலை 10 வீதத்தால் உயர்வு
VAT திருத்தங்களின் கீழ் பெற்றோல் விலை 10% அதிகரிக்கும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பெற்றோலுக்கு விதிக்கப்பட்ட 7.5% வரியை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, VAT பதினெட்டு வீதத்தால் அதிகரிக்கப்பட்டாலும், பெற்றோல் விலை 10.5% மட்டுமே அதிகரிக்கும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
23/12/2023
தெரியாத இடங்களில் குளிக்க வேண்டாம் ; பயணிகளுக்கு அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை உள்ளதால் வெளி இடங்களுக்கு பயணிப்போர் அபாயகரமானதும் முன்னறியாத, அது பற்றி தெரியாத இடங்களிலும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக் காரணமாக பல நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20/12/2023
திஹாரி அல் அஸ்ஹர் வணிக கழகத்தின் ( Commerce Club) வணிக தின நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்..
WP/GM AL-Azhar National school இன் வணிக கழகத்தின் ( Commerce Club) வணிக தின நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வு 15.12.2023 அன்று பாடசாலையில் நடைபெற்றது.
எமது பாடசாலையில் இயங்குகின்ற வணிக கழகம் இந்நிகழ்வில், Innovative and New Business Idea என்ற போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவித்தது. பாடசாலையின் அதிபர் ஜனாப் A J M Furkan அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களனி பல்கலைக்கழகத்தின் முகாமைத்து பீடத்தின் பேராசிரியர் M J M Razi அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக Curve Up நிறுவனத்தின் பணிப்பாளர் M M M Fawaz அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வு வணிக கழக மாணவர்களாலயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மேலும் மாணவர்களுக்கு பெரிதும் தூண்டுதலாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
- Commerce Club-
-
-club coordinator S.I.F Riswana tr
WP/ Gm Al Azhar National School
Thihariya
20/12/2023
ஆபாசப் படங்களை பார்க்கும், பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் உதவி ; ஒருவர் கைது
12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல்
துஷ்பிரயோகம் செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் உறவு முறை சிறுமியே இந்த இளைஞனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து கூகுள் டிரைவில் பதிவேற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கூகுள் வழங்கிய தொடர்புடைய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும்
20/12/2023
A/ L 2023 (2024) பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் டிசெம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
பெயர் , விண்ணப்பித்த பாடங்கள், மொழி மூலம், பிறந்த திகதி உள்ளிட்டவற்றில் தவறுகள் இருந்தால் இதன்போது திருத்திக்கொள்ள முடியும்.
https://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணையதளம் ஊடாக திருத்தங்களை செய்துகொள்ள முடியும் என ஆணையாளர் கூறியுள்ளார்.
13/12/2023
25/11/2023
SPECIAL FOREX TRADING MENTORSHIP🏅🔥
🔹 2-Month Course
🔹 Zoom Live Classes
🔹 Live market trades
🔹 Practices will be provided
🔹 Revision Class
🔹 Certificate will be provided
🔹 Affordable Fee
📌 Additionally our personal sureshot signals will be share to our students 💰
👨🏫 Professional Guidance
🔍 Ask Doubts Anytime
💰 Money-Back Guarantee
🛡️ Conducted By Industry Experts
👨🎓 24×7 Students Support
மேலதிக தகவல்களுக்கு அட்மினை தொடர்பு கொள்ளவும். 👇
https://wa.me/94769697207
எமது WhatsApp குழுவில் இணைந்துகொள்ள கீழுள்ள Link யை Click செய்யவும் 👇👇
https://chat.whatsapp.com/FuAEe0Z9pDoHR6YBDANBgf
07/11/2023
📰NEWS LINE📌Sri Lanka🇱🇰
*விசேட கல்வி மாணவர்களுக்கான இனங்காணல் விசேட பாசறை அந்நூர் ஆரம்பப் பாடசாலையில்*
இன்று விசேட கல்வி மாணவர்களுக்கான இனங்காணல் விசேட பாசறை அந்நூர் ஆரம்பப் பாடசாலையில் இன்றைய தினம் ( 07.11.2023) நடைப்பெற்றது.
இதற்காக உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அஜந்தா வெலகெதர மற்றும் எமது வலயத்தில் உள்ள விசேட கல்வி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இப்பயிற்சி பாசறை ஹபுகஸ்தலாவை சூழ்ந்துள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் பங்குப்பற்றினர்.
இந்த மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முகமாக 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 அமைப்பு சார்பாக இவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு சில பெற்றோர்களினால் விளையாட்டுப் பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பாடசாலை நிர்வாகத்தின் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்வதோடு இத்தகைய சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 அமைப்பு தொடர்ந்து சேவைகளில் முன்னேறுவதற்காக எங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்நூர் பாடசாலை வரலாற்றில் இத்தகைய செயல்பாடு இடம் பெற்றது இதுவே முதல் தடவை இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் அதற்கு பொறுப்பாசிரியர் என்ற வகையில் என்னுடைய நன்றிகளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஆசிரியர் Sudharshini -
அந்நூர் ஆரம்பப் பாடசாலை
16/10/2023
🌟 4 வருட பூர்த்தி!-4 years completion
📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 என்ற எமது செய்தி தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 4 வருடங்கள் நிறைவு பெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகிறோம்.
ஆயிரக்கணக்கான வாசகர்களின் நம்பிக்கையை பெற்று அரச அங்கீகரத்துடன் கூடிய செய்தி சேவையாக இயங்கி வருகிறோம்.
சகல சமயங்களிலும் எம்மோடு இணைந்திருக்கும் வாசகர்களான உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
தொடர்ந்தும் இணைந்திருங்கள்-இது நம்பிக்கைக்கான தளம். 🙌
14/10/2023
*💥💥💥💥💥💥*16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான தஜ்வீத் பாடநெறி 2️⃣ம் குழுவினர் இணைத்துக்கொள்ளப் படுகின்றீர்கள். 💥💥💥💥💥💥💥💥💥*
*📍இது 5 மாதகாலப் பாடநெறியாகும்.*
✅அரபு எழுத்து உச்சரிப்புக்கள் மற்றும் தஜ்வீத் சட்டங்கள் கற்பிக்கப்படும்.
✅குர்ஆனைப் பிழையின்றி ஓதுவதற்குப் பயிற்சி அளிக்கப்படும்.
✅உங்களுடைய குர்ஆன் ஓதல் நேரடியாகத் திருத்தப்படும்.
✅Zoom மூலம் வகுப்புக்கள் நடத்தப்படும். Zoom மூலம் கற்க முடியாதவர்களுக்காக Whatsapp இல் பாடங்கள் அனுப்பி வைக்கப்படும்.
✅ செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய தினங்களில் வகுப்பு நடைபெறும்.(மாதம் 12 வகுப்புகள்.)
✅பெண் ஆசிரியையைக் கொண்டு கற்பிக்கப்படும்.
*Zoom இல் பாடங்கள் நடத்தப்படும் நேரம்👇*
*⏰மாலை 5.00 - 6.00*
*கட்டண விபரம் மாதாந்தம் 👇*
*💠இலங்கை ரூபா 1000/=*
*💠இந்திய ரூபா 300/=*
*⭕குறிப்பு :*_நவம்பர் மாதம் 01ம் திகதி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதால் பதிவுகளுக்கு இன்றே விரைந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட தொகையினர் மாத்திரமே இணைத்துக்கொள்ளப் படுவீர்கள்._
*இணைந்து கொள்வதற்காகத் தொடர்பு கொள்ளவும் 👇*
*0779339494*
*+94779339494*
*❗❗❗கீழ்வரும் link இனூடாகக் குழுவில் இணைந்து கொள்ளவும்👇❗❗❗*https://chat.whatsapp.com/DmcST85WHdc0Zs2SnkmPxD
Paid Advirtisment..
09/10/2023
*தேசிய மீலாத் தின நிகழ்வு ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது*
கல்வியமைச்சின் முஸ்லீம் பாடசாலை அபிவிருத்தி கிளை ஏற்பாடு செய்த தேசிய மீலாத் நிகழ்வு இன்று 09.10.2023 ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
இந்த விழாவில்
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்த குமார் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
அவருடனும், கல்வியமைச்சின் முஸ்லீம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பொருப்பாளர் மேஜர். M.T நஸ்முதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.
வீடியோ - https://youtu.be/O6AY3KI07Yk?si=dMiS0apJcnLWVkrZ
02/10/2023
🍂_SHERINZ_🍂
Hey lovelies ❤️
Looking for cool and comfy styles for your little girl? 🌸
Explore our kids’ fashion collection to find clothes for tiny tots and style-conscious teens from now.
Our collection of kids clothes offers stylish, comfortable and affordable 😎
Any customized baby girl designs are undertaken🤞
price depends on the age and material you choose.
Made in Sri Lanka 🇱🇰
100% hand made🖐️
Bank deposit only❗
Island wide delivery available🚚
we will customize your dream costume to your princess 💟
Thank you 💗
instagram id👉🏻the_sherinz
I'm on Instagram as . Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/contact/?i=onbh4asm9xs1&utm_content=qp8ogk7
Facebook. 👉🏻sherinz
Whatsapp. 👉🏻https://chat.whatsapp.com/KFrkLzvHyU3FDPXWtTVkjP
13/09/2023
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட முறைமையில் மாற்றுவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எ...
05/09/2023
2021ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதியோருக்கு பல்கலைக்கழக கற்கைகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச Z.score கீழே தரப்பட்டுள்ளது. 2022 பரீட்சை எழுதிய உங்களுடைய Z. Score உடன் ஒப்பிட்டு கிடைக்க கூடிய கற்கையினை ஓரளவு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். (குறிப்பு - மாற்றத்திற்குள்ளாகும்.) Pdf பெற...
2021ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதியோருக்கு பல்கலைக்கழக கற்கைகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச Z.score ....
05/09/2023
எதிர்வரும் 9 ஆம் திகதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்லைன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையின் சிறப்பு ஆணையர் எஸ்.எஸ்.யாதவ், கருத்துத் தெரிவிக்கையில் ”டெல்லி முழுவதும் தபால் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள், நோயியல் ஆய்வகங்களின் மாதிரி சேகரிப்புகள் தொடர்ந்து செயல்படும். மாநாடு நடக்கும் நாட்களில் மருந்துகள் தவிர ஒன்லைன் டெலிவரி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்லைன் மூலம் உணவுப் பொருட்க.....
04/09/2023
📰NEWS LINE📌Sri Lanka🇱🇰
*🔥Results released🔥*
*2022 GCE (A / L) பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டன*
2022 GCE (A / L) பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டன.
பரீட்சை முடிவுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றிலிருந்து அணுகலாம். உங்கள் தேர்வு எண்ணை உள்ளிட்டு மறுதொடக்கங்களை அணுகலாம்.
*Exams Results ஐ பார்வையிட👇🏻*
👉🏻 https://bit.ly/46bqggz
*Join Our WhatsApp Group 👇*
https://chat.whatsapp.com/BFj2rLk3TAg5hYOtlcZnOG
📢👩💼👨💼🌐🛅🛄💲👨💼👩🏻💼📢
*For All Business Advertisment Contact Us👇*
*20% Offer For Business Advertisment*
🤩 100+ WhatsApp Groups
🥳 6.1K Followers in Facebook
*More details And package details Contact Us*
+94 75 314 4838
🔴 Business Promotions
🔴 Online Classes
🔴 Online Cake Classes
🔴 Zoom Or physical Classes
🔴 Youtube promotions
🔴 WhatsApp Group Promotions
விளம்பர தொடர்புகளுக்கு
https://wa.me/message/GOZQUIOW7226A1
04/09/2023
The 2023 GCE Advanced Level Examinations will be held in November as scheduled, the Ministry of Education announced today. Issuing a statement, the Ministry said that 323,913 applications have been received so far for the examination scheduled to be held from November 27 to December 21.Providing reasons for the examination to be held in November, the Education Ministry pointed out that a key reason was the failure by teachers and lecturers to engage in paper marking on time which has resulted in a delay in issuing the results of the previous examination....
The 2023 GCE Advanced Level Examinations will be held in November as scheduled, the Ministry of Education announced today. Issuing a statement, the Ministry said that 323,913 applications have been…
04/09/2023
How to Check GCE A/L, O/L & Scholarship Results in Sri LankaThere are four Methods to Check GCE A/L, O/L & Scholarship Results in Sri Lanka, All Methods are listed below Method 01: By Online: You can check your results online through the Department of Examinations website. To do this, you will need your index number and date of birth....
How to Check GCE A/L, O/L & Scholarship Results in Sri LankaThere are four Methods to Check GCE A/L, O/L & Scholarship Results in Sri Lanka, All Methods are listed below Method 01: By Onlin…
03/09/2023
OFFER💯 OFFER💯 OFFER💯
*♨️RESELLERS ARE MOST WELCOME 🤝*
*நாட்டில் எப்பாத்தில் இருந்தாலும் free delivery மூலமாக மிக மலிவான விலைகளில் பொருட்களை பெற்று கொள்ள முடியும்...*
*தற்போது 1500/= தொடக்கம் 4000/= வரையிலான பொருட்களை வெறும் 850/= ரூபாய்க்கு FREE DELEVERY மூலமாக எம்மிடம் பெற்று கொள்ள முடியும்....*
*எம்மிடம்*
*👛அனைத்து FANCY* *பொருட்கள்*
*🏡வீட்டு அலங்கார பொருட்கள்*
*👜பெண்கள் ஆண்களுக்கான ஸ்மார்ட் bag*
*என்பன மிக மலிவான விலையில் பெற்று கொள்ள முடியும்....*
*மேலதிக விவரங்களுக்கு எமது குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்*
WhatsApp Group Invite
03/09/2023
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை 'க்யூஆர்' அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் அப்போது நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்து விநியோக திட்டமாக அமுல்படுத்துவதே என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டுகிறார். அப்போது நிலவி வந்த சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்....
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ‘க்யூஆர்’ அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவ....
01/09/2023
நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி பஸ் கட்டணம் 4.01 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.இந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. புதிய கட்டண விபரம் கீழே
நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்த....
31/08/2023
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலி ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவி....
29/08/2023
2023 ஆண்களுக்கான ODI ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பின்வரும் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
2023 ஆண்களுக்கான ODI ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பின்வரும் 15 பேர் கொண்ட அணியை.....
25/08/2023
எதிர்வரும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கான தங்குமிடங்கள் உட்பட தங்களுடைய சொத்துக்களை பட்டியலிடுவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கண்டி வாசிகளுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள SLTDA, கண்டியில் வசிப்பவர்கள் கிரிக்கெட் தொடருக்காக அப்பகுதிக்கு வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தங்குமிடமாக தங்களுடைய வீடுகளில் கூடுதல் அறைகளை வழங்க முடியும் என அறிவித்துள்ளது.ஆசியக் கிண்ணத் தொடரின் போது தங்குமிடத்திற்கான அதிக தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியில், தங்களுடைய கூடுதல் அறைகள், வீடுகள் அல்லது குடியிருப்புகளை பணத்திற்காக வாடகைக்கு விட விரும்பும் கண்டி சொத்து உரிமையாளர்களுக்கு SLTDA தற்காலிக பதிவு திட்டத்தை வழங்குகிறது....
எதிர்வரும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கான தங்குமிடங்கள் உட்பட தங்களுடைய சொத்துக்களை பட்டியலிடுவதற்கு இ.....
Address
Kandy
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when News line Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Videos
🔥🔥FIRE UPDATE 🔥🔥 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 *ஹோமாகம தீ பரவலை கட்டுப்படுத்த கடும் முயற்சி* ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டே நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், விசேட இராணுவக் குழுவும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளது. ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. *Join Our WhatsApp Group 👇* https://chat.whatsapp.com/IcX1FFLAIqT7UNkqp0ohGx
பெண்கள், யுவதிகளுக்கு எச்சரிக்கை பேருந்துகளில் நடக்கும் பாலியல் சேட்டை.. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் யுவதிகள், பெண்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகம் இடம்பெறுதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பேருந்துகளில் பயணிக்கும் போது சில இளைஞர்கள், முதியவர்கள் என அங்க சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர். நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தென்னிலங்கையில் பயணித்த பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர், யுவதியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைத்தளத்தில் குறித்த காணொளியை பதிவிட்டு பெண்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
🛑#BREAKING புகையிரத விபத்து - பலி எண்ணிகை 233 ஆக அதிகரிப்பு ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார். #india #indiatrain #accident #Odisha #today #Death ⭕Whatsapp https://chat.whatsapp.com/IjL2qOZrJuJ0Vted2DTEoA ⭕Facebook https://www.facebook.com/skyline123.lk?mibextid=ZbWKwL ⭕Web newslinesrilanka.com
ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முக்கிய உரை ⭕Whatsapp https://chat.whatsapp.com/IjL2qOZrJuJ0Vted2DTEoA ⭕Facebook https://www.facebook.com/skyline123.lk?mibextid=ZbWKwL ⭕Web newslinesrilanka.com
மருதானையில் கண்ணீர்ப்புகை தாக்குதல்! மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. Kandy railway station #kandy #kandyrailwaystation #nuwara
Hapugasthalawa football academy presents U16 7s Football Tournament 2022 Live from - St.Mary's College Ground, Nawalapitiya.
அஸ்ஸலாமு அலைக்கும். கண்டி , உடுநுவர பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். உங்களால் முடிந்த உதவிகளை இந்த சிறுமிக்கு செய்யுங்கள். இந்த வீடியோவை பார்த்து விட்டு share செய்யுங்கள். Bank Details : S. H. M. Siyam People 's bank, Daulagala. 206100150064433 Content on:0764090614 🎙️Ash sheikh ilham Nulaari ✅ACJU- udunuwara & Arafa Jumma Masjid, Arawwawala.
🎥🛑WATCH & COMMENT இலங்கையில் பெண் உரிமை மறுக்கப்படுகிறதா? உங்களுடைய விமர்சனம் என்ன? இன்று ரோஹிணி கவிரத்ன பாராளுமன்றத்தில் நிரகாரிக்கப்பட்டது ஏன்? உமது விமர்சனம் தெரிவிக்க மற்றும் முழுமையான தொகுப்பிற்கு 👇 https://youtu.be/LU1P2ZUQmXE
மே 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறுமா? இது ஒரு திட்டமிடப்பட்ட மக்களை திசை திருப்பும் செயலா? பாதுகாப்பு அமைச்சின் பதில் என்ன? இது ஆதாரமற்ற பொய் தகவல் என குமுறும் அரசியல்வாதிகள்.
🛑🎥WATCH 📰NEWS LINE📌Sri Lanka🇱🇰 📍ரம்புக்கனையில் நடந்தது என்ன? 📍திரும்பும் பக்கம் எல்லாம் எழும் கண்டங்கள் தொகுப்பாளர்:-🎙️MS Zaid (newslinesrilanka admin) 📍 Please subscribe the channel and support முழுமையான காணொளிக்கு👇 https://youtu.be/n2gyaDk0Tog